Author: நலன் விரும்பி
19ஆவது அரசியல் அமைப்பில் உள்ள சில விடயங்கள் நீக்கப்படும்
19ஆவது அரசியல் அமைப்பில் உள்ள சில விடயங்கள் நீக்கப்படும்
19ஆவது அரசியல் அமைப்பு சீர்திருத்தத்தில் உள்ள சில விடயங்கள் நீக்கப்படும் என்று தொழில் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.
ஊவா பரணகம தேர்தல் தொகுதியில் இன்று காலை இடம்பெறற்ற
பொது மக்கள் சந்திப்;பில் நாட்டு மக்களின் எதிர்பார்ப்புக்களை
நிறைவேற்றி, மகா சங்கத்தினரது கருத்துக்கள், யோசனைகளை
ஏற்று, 19ஆவது அரசியல் அமைப்பு சீர்திருத்தத்தில் உள்ள சில விடயங்கள் நீக்கப்படும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
அரசியல் அமைப்பை சீர்திருத்துவதற்காகவே மக்கள் அரசாங்கத்திற்கு
மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை அளித்தனர். நாட்டுக்கு அச்சுறுத்தலாக
உள்ள விடயங்கள் இல்லாமல் செய்வதற்காகவே அதில் திருத்தம்
மேற்கொள்ளப்படவுள்ளது என்றும் தொழில் அமைச்சர் சிறிபால டி சில்வா மேலும் தெரிவித்தார்
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று 12 ஆவது நபர் உயிரிழப்பு
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்று 12 ஆவது நபர் உயிரிழப்பு
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் 12 ஆவது நபர் இன்று உயிரிழந்துள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் சுதத் சதரவீர தெரிவித்தார்.
உயிரிழந்த இவர் 47 வயது பெண். இவர் கடந்த 20 ஆம் திகதி
இந்தியாவில் இருந்து நாடு திரும்பியிருந்த நிலையில் கொரோனா
தொற்று உறுதிப்படுத்தப்பட்டு கொழும்பு தேசிய தொற்று
நோயியல் வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்த நிலையில், இன்று காலை உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண், புற்றுநோய் மற்றும் இருதய நோயாலும் பீடிக்கப்பட்டிருந்தார்
என்றும் இவர் உயிரிழநதமைக்கான காரணம் இருதய பாதிப்பு என அரசாங்க
தகவல் திணைக்களம் இன்று காலை வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
COVID-19 பரம்பலின் தரவுகள்
புதுப்பிக்கப்பட்டது 2020-08-23 06:48:34
2947
உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகள்
137
சிகிச்சை பெறும் நோயாளிகள்
0
புதிதாக கண்டறியப்பட்ட நோயாளிகள்
2798
குணமடைந்த நோயாளிகளின் எண்ணிக்கை
12
இறப்பு எண்ணிக்கை
தமிழர் தீர்வை குழப்பும் விக்கி – பொங்கினார் டக்கிளஸ்
தமிழர் தீர்வை குழப்பும் விக்கி – பொங்கினார் டக்கிளஸ்
நாடாளுமன்ற உறுப்பினர் விக்னேஸ்வரனின் நாடாளுமன்றப் பேச்சுக்கள் தமிழ் மக்களுக்கு எந்த விதமான நன்மைகளையும்
பெற்றுத் தரப்போவதில்லை என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட நாடாளுமன்ற
உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் தன்னுடைய நாடாளுமன்ற
முதலாவது உரையில் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர், அவ்வாறான கருத்துக்கள் சில தமிழ்
ஊடகங்களாலும் சமூக ஊடகங்களாலும் பெரிதாக சிலாகிக்கப்பட்டாலும், எமது மக்கள் எதிர்கொள்ளுகின்ற
பிரச்சினைகளுக்கோ அலலது தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கோ
எந்தவிதமான தீர்வைப் பெற்றுத் தராது எனவும் பாதகங்களையே அதிகரிக்கும் எனவும் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், பலமான மத்திய அரசாங்கம் அமைந்துள்ள நிலையில்,
குறித்த அரசாங்கத்துடன் தனக்கு இருக்கும் தேசிய நல்லிணக்கத்தினைப் பயன்படுத்தி தமிழ் மக்கள் எதிர்கொள்கின்ற
பிரச்சினைகளை தீர்க்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்தார்.
மின்தடைக்கு அமைச்சே காரணமெனின் ‘பதவி விலகத் தயார்’- மின்சக்தி அமைச்சர்
மின்தடைக்கு அமைச்சே காரணமெனின் ‘பதவி விலகத் தயார்’- மின்சக்தி அமைச்சர்
நாடுபூராகவும் மின்தடை ஏற்பட்டமைக்கு, மின்சக்தி அமைச்சு பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டுமென , மின்தடை தொடர்பில்
ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கையில்
குறிப்பிடப்படுமாயின், தான் தனது அமைச்சுப் பதவியை துறக்க
தயாராகவுள்ளதாக மின்சக்தி அமைச்சர் டலஸ் அலகப்பெரும தெரிவித்துள்ளார்.
மாத்தறை- அக்குரஸ்ஸ பிரதேசத்தில் நேற்று (22) நடைபெற்ற மக்கள்
சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே, மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இந்த மாதம் 17ஆம் நாடுபூராகவும் 8 மணித்தியால திடீர் மின்தடை ஏற்பட்டது.
இந்த மின்தடை குறித்து ஆராய்வதற்காக, அமைச்சர் டலஸ் அலகப்பெருமவின்
ஆலோசனைக்கமைய, குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன், அந்த குழுவின்
அறிக்கை நாளைய தினம் தன்னிடம் கையளிக்கப்படவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்கா துறைமுகத்தில் வெடிப்பு இருவர் பலி – சிலரை காணவில்லை
அமெரிக்கா துறைமுகத்தில் வெடிப்பு இருவர் பலி – சிலரை காணவில்லை
அமெரிக்காவின் கார்பஸ் கிறிஸ்டி துறைமுகத்தில் கப்பல் ஒன்று வெடித்து சிதறியதில் இருவர் பலியாகியுள்ளனர் .மேலும் இருவர் காணாமல் போயுள்ளனர்
கடலோர அகழ்வாராய்ச்சில் ஈடுபடும் முக்கிய நபர்களே இந்த சம்பவத்தில் பலியாகியுள்ளனர்
காணாமல் போனவர்களை தாம் தொடர்ந்து தேடி வருவதாகவும்
அவர்கள் இறந்திருக்க கூடும் எனவே கடல் படையினர் தெரிவிக்கின்றனர்
கப்பலில் இருந்த எரிவாயு குழாய்கள் வெடித்து சிதறியதால் இந்த
இழப்பு ஏற்பட்டுள்ளதாக முதல் கட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது
இது திட்டமிடப்பட்ட சதியா அல்லது விபத்தா என்பது தொடர்பில் தெரியவரவில்லை

அமெரிக்கா காவல்துறையால் ஒருவர் சுட்டு கொலை
அமெரிக்கா காவல்துறையால் ஒருவர் சுட்டு கொலை
அமெரிக்கா Louisiana பகுதியில் கடை ஒன்றுக்குள் கத்தியுடன் நுழைய முயன்ற நபர் ஒருவரை காவல்துறையினர் சுட்டு கொன்றுள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது
கடைக்குள் கத்தியுடன் நுழைந்து பண கொள்ளையில் ஈடுபட இவர்
முயன்றதாகவும் அவ்வேளை மக்களை சக்தி முனையில் தாக்கிட
இவர் முயன்ற பொழுதே காவல்துறையினர் சூடு நடத்தி அவரை படுகொலை செய்துள்ளனர்
இவ்வாறு படுகொலை செய்ய பட்டவர் சடலம் மீட்க பட்டு மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது ,
அமெரிக்கா காவல்துறையினர் இன வெறியில் இவ்விதம் பலரை கொன்று
குவித்து வருகின்றமை நாள் தோறும் வெளியாகும் செய்திகள் மூலம் அவதானிக்க முடிகிறது
பாடசாலைகளில் சுகாதார வழிமுறைகள் கடுமையாக பின்பற்றப்படும்
பாடசாலைகளில் சுகாதார வழிமுறைகள் கடுமையாக பின்பற்றப்படும்
பாடசாலைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படும் போது கடைபிடிக்க வேண்டிய விடயங்கள் தொடர்பில் சுகாதார அமைச்சு
வெளியிட்டுள்ள வழிமுறைகள் கடுமையாக பின்பற்றப்பட வேண்டும் என்று கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இன்று முற்பகல் மல்வத்து மஹா விஹாரையின் மஹாநாயக்கரை சந்தித்து நல்லாசி பெற்றார்.
அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் பாடசாலை பரீட்சைகள் இடம்பெறும் போதும் இந்த நடைமுறைகள்
மிகக் கடுமையாக பின்பற்றப்பட வேண்டும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
கடந்த பொதுத் தேர்தலில் தற்போதைய சமகால அரசாங்கம் பாரிய வெற்றியை பெற்றது. இது நாட்டிற்கு நன்மையான ஒரு விடயமாக
அமையும். நாட்டுக்கு பொருத்தம் இல்லாத அரசியல் அமைப்பு சீர்திருத்தம் மறுசீரமைக்கப்படும் எனவும் விரைவில் புதிய அரசியல்
அமைப்பை உருவாக்குவதில் அரசாங்கம் கவனம் செலுத்துவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அரசியல் அமைப்பு சீர்திருத்தம் தொடர்பில் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் மல்வத்து மஹாநாயக்கர்களுக்கு விளக்கம் அளித்தார்.
இலங்கையில் சிறார் கற்பழிப்பு அதிகரிப்பு – தடுக்க தவறும் காவல்துறை
இலங்கையில் சிறார் கற்பழிப்பு அதிகரிப்பு – தடுக்க தவறும் காவல்துறை
இலங்கையில் என்றும் இலலாதவாறு கடந்த ஆண்டு சிறார் பாலியல் துஸ் பிரோயகம் அதிகரித்துள்ளது
குற்றங்களை தடுப்பதற்கு நாட்டில் பலவேறு பட்ட இறுக்கமான சட்டங்கள் ஏற்படுத்த பட்ட பொழுதிலும் இவ்வாறான குற்ற செயல்களை தடுத்திட முடியவில்லை
மனித உரிமை ஆணைக்குழு மற்றும் பெண்கள் அமைப்பினர் பெண்களுக்கு
எதிராக நடத்த படும் இந்த் வன் கொடுமை நிகழ்வை தடுத்து நிறுத்திட கோரி
வருகின்ற பொழுதும் இவை தொடர்ந்து ஆண்டு தோறும் அதிகரித்து செல்கின்றமை மனித குலத்தை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது
இந்த குற்றங்கள் எவ்வாறு இடம் பெறுகிறது அதற்குரிய காரணிகள் என்ன
என ஆராய்ந்த பொழுது வீட்டில் உள்ள தெரிந்தவர்கள் மற்றும் உறவினர்கள்
முறையால் அதிகம் இந்த சம்பவங்கள் இடம் பெறுவதாக குறிப்பிட பட்டுள்ளது

ஆசிரியருக்கு கொரனோ – மாணவர்கள் உள்ளிட்ட 152 பேர் தனிமை படுத்தல்
ஆசிரியருக்கு கொரனோ – மாணவர்கள் உள்ளிட்ட 152 பேர் தனிமை படுத்தல்
இலங்கை கம்பாக பகுதியில் ஆசிரியர் ஒருவருக்கு கொரனோ நோயானது
கண்டு பிடிக்க பட்ட நிலையில் தற்போது ஆசிரியர் தனிமை படுத்த பட்டுளளார்
இவர் கற்கை நெறி புரிந்த மாணவர்கள் மற்றும் ஏனையவர்கள் உள்ளிட்ட
நூற்றி ஐம்பத்தி இரண்டு பேர் தனிமை படுத்த பட்டுள்ளனர்
எதிர்வரும் இரண்டாம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்க
படவுள்ளதாக அரசு அறிவித்துள்ள நிலையில் இந்த சம்பவம்
நிகழ்ந்துள்ளது மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது
மேலும் 52 ஊழியர்கள் நூற்றுக்கு மேற்பட்ட மாணவர்களுக்கு கொரனோ சோதனை நடத்த பட்டுள்ளது குறிப்பிட தக்கது
கொரோனா வைரஸ் தடுக்க இரண்டு வருடங்கள் ஆகும் என அறிவிப்பு
கொரோனா வைரஸ் தடுக்க இரண்டு வருடங்கள் ஆகும் என அறிவிப்பு
கொரோனா வைரஸ் பரவலுக்கு முற்றுப்புள்ளி வைக்க இன்னும் இரு வருடங்கள்
செல்லுமென எதிர்பார்ப்தாக உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் டெட்ரோசு அதானோம் தெரிவித்துள்ளார்.
1918 காலப்பகுதியில் ஸ்பானிய வைரஸ் என்ற பேரில் உலக முழுவதுமாக
பரவிய வைரஸ் தொற்றுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு சுமார் 2 வருட காலம் தேவைப்பட்டதெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறாயினும் தற்போது உலக நாடுகளிலிடமிருக்கும் மருத்து
வசதிகளுக்கு மத்தியில் கொரோனா வைரஸ் அச்சுறுத்தலை 2
வருடங்களுக்கு முன்பாகவே கட்டுப்படுத்தும் இயலுமை உள்ளதெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
செப்டெம்பர் 2 முதல் பாடசாலைகள் நடைபெறும் நேரங்கள் அறிவிப்பு
செப்டெம்பர் 2 முதல் பாடசாலைகள் நடைபெறும் நேரங்கள் அறிவிப்பு
உலகில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இலங்கையில் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் பாடசாலைகள் தற்பொழுது மீண்டும் பகுதி அளவில்
ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் செப்டெம்பர் 2 ஆம் திகதி முதல் சில
வகுப்புகளுக்கான கால நேரம் வழமைக்கு கொண்டுவரப்படவுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி ஆண்டு 10,11,12 மற்றும் 13 மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள்
தினமும் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை இடம்பெறும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதுவரை 10,11,12 மற்றும் 13 மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் இதுவரை
காலை 7.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை இடம்பெற்று வந்தமை குறிப்பிடத்தக்கது.
கார் டிப்பர் ராக் மோதல் – ஐவர் உடல் சிதறி பலி
கார் டிப்பர் ராக் மோதல் – ஐவர் உடல் சிதறி பலி
இலங்கை Alawwa-குருநாகல் வீதியில் கார் மற்றும் டிப்பர் ராக் என்பன
திடீரென மோதி விபத்தில் சிக்கியதால் அதில் பயணித்த ஐவர் சம்பவ இடத்தில பலியாகினர்
மேலும் சிலர் படுகாயமடைந்த நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர்
மேற்படி விபத்து தொடர்பில் போலீசார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
இலங்கையில் வீதி விபத்துக்களை தடுத்திட புதிய சட்டங்கள் அமூல் படுத்த பட்டுள்ள போதிலும்
இவ்வாறான விபத்துக்களை ளி தடுக்க முடியவில்லை

திடீர் துப்பாக்கி சூடு – ஒருவர் பலி – போலீசார் குவிப்பு
திடீர் துப்பாக்கி சூடு – ஒருவர் பலி – போலீசார் குவிப்பு
ஹம்பலாங்கொடை, பெரட் சந்தியில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த நபர் ஒருவரே, இவ்வாறு பாதசாரி ஒருவர்
மீது துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதாகவும்
பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர் 48 வயதான நபர் ஒருவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் காயமடைந்த நபர் சிகிச்சைக்காக
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சிகிச்சை
பலனின்றி உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
நிராகரிக்கப்பட்ட பட்டதாரிகளுக்கு மேன்முறையீடு செய்ய சந்தர்ப்பம்
நிராகரிக்கப்பட்ட பட்டதாரிகளுக்கு மேன்முறையீடு செய்ய சந்தர்ப்பம்
பட்டதாரிகளுக்கு தொழில் வாய்ப்பு வழங்கும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் விண்ணப்பங்களை சமர்ப்பித்து நிராகரிக்கப்பட்ட தகுதியானவர்களை தொழிலில் ஈடுபடுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
தொழில் அற்ற பட்டதாரிகள் / டிப்ளோமாதாரிகளை தொழிலில் ஈடுபடுத்துவதற்கான வேலைத்திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டவர்கள் மேன்முறையீட்டுக்காக
விண்ணப்பிப்பதற்கு வசதிகள் செய்யப்பட்டிருப்பதாக அரச சேவை, மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர் நாயகம் நாலக கலுவௌ வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:
ஊடக அறிக்கை இலக்கம் : 244 / 2020
வெளியிடப்பட்ட நேரம் : 09.15
ஊடக அறிக்கை
தொழில் அற்ற பட்டதாரிகள் / டிப்ளோமாதாரிகளை தொழிலில் ஈடுபடுத்துவதற்கான வேலைத்திட்டம் – 2020
மேற்படி வேலைத்திட்டத்தின் கீழ் பயிற்சியாளர்கள் பயிற்சிக்காக அழைக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ள, இருப்பினும்
அனைத்து தகுதிகளையும் பூர்த்தி செய்து, நிராகரிக்கப்பட்டமைக்கான காரணம் ஊழியர் சேமலாப நிதியில் அங்கத்துவம் இருந்தமை (EPF) மற்றும் தொழிலில் (Jop)
ஈடுபட்டிருந்தமை என்ற ரீதியில் குறிப்பிடப்பட்ட விண்ணப்பதாரிகளுக்கு மேன்முறையீட்டை சமர்;ப்பிப்பதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவதற்கும் தகுதிகளைப் பெறுவார்களாயின்
பயிற்சிக்கு அழைப்பதற்கு எதிர்பாரப்பதாக அரச சேவை, மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி அவர்கள் தெரிவித்துள்ளார்.
இதற்கு அமைவாக இவ்வாறான விண்ணப்பதார்களுக்கு அரச சேவை, மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சின்
உத்தியோகபூர்வ இணையத்தளமான www.pubad.gov.lk இல் வெளியிடப்பட்ட அறிவித்தலுக்கு அமைவாக விண்ணப்பிக்குமாறும், 2020.09.15 ஆம் திகதிக்கு முன்னர் தமது மேன்முறையீட்டை பிரதேச
செயலகத்திற்கு சமர்ப்பிக்குமாறும் அரச சேவை, மாகாண சபை மற்றும் உள்ளுராட்சி மன்ற அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.
கொரோனாவுக்கு 8 இலட்சம் பேர் பலி
கொரோனாவுக்கு 8 இலட்சம் பேர் பலி
சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த
வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள், பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.
இந்த வைரஸூக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கம் பணி இறுதி கட்டத்தை
எட்டியுள்ளது. ஆனாலும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.
இந்நிலையில், உலகம் முழுவதும் கொரோனாவால்
உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 இலட்சத்தை கடந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி 23,098,181 பேருக்கு வைரஸ் தொற்று
உறுதி செய்யப்பட்டுள்ளது.
வைரஸ் பரவியவர்களில் 6,601,622 பேர் சிகிச்சை பெற்று
வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 61,849 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.
கொரோனாவில் இருந்து 15,701,892 அதிகமானோர் சிகிச்சைக்கு பின்
குணமடைந்துள்ளனர். ஆனாலும், உலகம் முழுவதும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 802,365 பேர் உயிரிழந்துள்ளனர்.
கொரோனாவுக்கு அதிக உயிரிழப்பை சந்தித்த நாடுகள்:-
அமெரிக்கா – 179,200
பிரேசில் – 113,454
மெக்சிகோ – 59,610
இந்தியா – 55,928
இங்கிலாந்து – 41,405
இத்தாலி – 35,427
பிரான்ஸ் – 30,503
ஸ்பெயின் – 28,838
பெரு – 27,034
ஈரான் – 20,376
கொலம்பியா – 16,568
ரஷ்யா – 16,189
தென்னாபிரிக்கா – 12,843
கொழும்பு வடக்கு புதிய முகத்துவார சுரங்கப்பாதை கட்டுமானப் பணிகள் நிறைவு
கொழும்பு வடக்கு புதிய முகத்துவார சுரங்கப்பாதை கட்டுமானப் பணிகள் நிறைவு
கொழும்பு வடக்கு பகுதியில் நீண்டகாலமாக நிலவிய வெள்ள அனர்த்த நிலைமையைக் கட்டுப்படுத்தும் வகையிலான நிரந்தர
தீர்வாக புதிய முகத்துவாரம் சுரங்கப்பாதை நிர்மாண பணி நேற்று (21.08.2020) பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வழிகாட்டுதல் மற்றும் மேற்பார்வையின் கீழ் நிறைவடைந்துள்ளது.
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கொழும்பு பெருநகரை அண்மித்த நகர அபிவிருத்தி திட்டமாக இலங்கை
காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனம் இந்த திட்டத்தை செயல்படுத்தியுள்ளது.
அலுத் மாவத்தை பிரதான கால்வாயுடன் இணைக்கப்பட்டு ஆரம்பமாகும் இந்த சுரங்கப்பாதை புதிய முகத்துவாரம் பகுதி
ஊடாக நிலத்தடி வழியாக சென்று முகத்துவாரம் மீன்பிடி துறைமுகத்திற்கு அருகில் கடலுக்கு திறக்கப்படுகிறது.
இன்று நிறைவுசெய்யப்பட்ட சுரங்கப்பாதையின் நீளம் 778 மீட்டராகும். 3 மீட்டர் விட்டம் கொண்ட சுரங்கப்பாதையின் உள்ளே
ஒரு திடமான கொன்கிரீட் புறணி அமைக்கப்பட்டுள்ளது. திட்டத்தின் நிறைவில், ஒரு நிலத்தடி சுரங்கப்பாதை என்ற வகையில் வினாடிக்கு 15,000 லீட்டர் நீர் கடலுக்குள் விடப்படும்.
புதிய முகத்துவாரம் சுரங்கப்பாதை கட்டுமானம் சைனா பெட்ரோலியம் பைப்லைன் என்ஜினியரிங் கம்பனி லிமிடெட்
மேற்கொண்டது. கட்டுமான மேற்பார்வை யூஷிங் என்ஜினியரிங் கார்ப்பரேஷன் லிமிடெட்டினால் மேற்கொள்ளப்பட்டது.
குறித்த நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் கலாநிதி நாலக கொடஹேவா, பாராளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த,
இலங்கைக்கான சீனத் தூதர் ஹூ-வே மற்றும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் சிறிநிமல் பெரேரா ஆகியோர் கலந்துக் கொண்டனர்.
கோமா நிலையில் ரஷிய எதிர்கட்சி தலைவரை – ஜெர்மனி கொண்டுசெல்ல புதின் அரசு அனுமதி
கோமா நிலையில் ரஷிய எதிர்கட்சி தலைவரை – ஜெர்மனி கொண்டுசெல்ல புதின் அரசு அனுமதி
விஷம் கலந்த டீ-யை குடித்ததால் கோமா நிலைக்கு சென்ற ரஷிய எதிர்க்கட்சி தலைவரை மேல் சிகிச்சைக்காக ஜெர்மனி கொண்டு செல்ல புதின் அரசு அனுமதி வழங்கியுள்ளது.
கோமா நிலையில் உள்ள ரஷிய எதிர்கட்சி தலைவரை மேல் சிகிச்சைக்காக ஜெர்மனி கொண்டுசெல்ல புதின் அரசு அனுமதி
அலெக்ஸி நவல்னி
மாஸ்கோ:
ரஷியாவின் எதிர்க்கட்சி தலைவராக செயல்பட்டு வருபவர் அலெக்ஸி நவல்னி. இவர் அதிபர் விளாடிமிர் புதினின் ஆட்சிக்கு எதிராக பல ஆண்டுகளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்த போட்டங்களில் போது இவர் கைது நடவடிக்கைகளையும் சந்தித்துள்ளார்.
நவல்னி நேற்று முன்தினம் ரஷியாவின் ஒம்சக் நகரில் இருந்து விமானம் மூலம் மாஸ்கோவிற்கு பயணம் மேற்கொண்டார். விமானம் புறப்பட்ட சிறிது
நேரத்தில் நவல்னிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதனால் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே விமானம் அவசர அவசரமாக ஒம்சக் நகரிலேயே மீண்டும் தரையிறக்கப்பட்டுள்ளது. விமான நிலைய ஓடுதளத்திலேயே ஆம்புலன்ஸ் கொண்டுவரப்பட்டு நவல்னி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.
ஒம்சக் நகரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நவல்னிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், அவர் கோமா நிலைக்கு
சென்றுவிட்டதாக மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
நவல்னி கட்சியின் செய்தித்தொடர்பாளர் கிரா யார்ம்ஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அந்த சந்திப்பின் போது, நவல்னிக்கு விஷம் கொடுக்கப்பட்டுள்ளது என அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
நவல்னி காலை முதல் எந்த உணவும் சாப்பிடவில்லை. விமான நிலையத்தில் வைத்து டீ (தேனீர்) மட்டுமே குடித்தார். அவர் குடித்த டீ-யில் தான் விஷம் கலந்து கொடுக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகம் எங்களுக்கு எழுந்துள்ளது என கிரா தெரிவித்தார்.
நவல்னி குடித்த டீ-யில் விஷம் கொடுக்கப்பட்டுள்ள சம்பவத்திற்கு அதிபர் விளாடிமிர் புதின் தான் காரணம் என ரஷிய எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.
இதற்கிடையில், நவல்னியின் உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்படாமல் இருந்தது. மேலும், அவரது உடல்நிலை தொடர்பான தகவல்களை தர மருத்துவமனை மறுப்பு தெரிவித்து வந்தது.
இந்த சம்பவங்கள் சர்வதேச அளவில் கவனம் பெற்றதையடுத்து நவல்னிக்கு மேல் சிகிச்சை அளிக்க ஜெர்மனியில் உள்ள ஒரு தொண்டு நிறுவனம் முன்வந்தது. இதற்காக கோமா சிகிச்சை அளிக்கும் அடங்கிய மருத்துவக்குழு ஒன்று தனி விமானம் மூலம் ரஷியா அனுப்பப்பட்டது.
இதையடுத்து, நவல்னியை வெளிநாட்டிற்கு கொண்டு சென்று மேல்சிகிச்சை அளிக்க மருத்துவமனையிடம் அனுமதி கோரப்பட்டது. ஆனால், நவல்னியின் உடல்நிலை மோசமாக உள்ளதாக கூறி வெளிநாட்டிற்கு மேல் சிகிச்சைக்கு அனுப்பு மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
இதனால், வெளிநாட்டிற்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்க அனுமதி தரும்படி அதிபர் விளாமிர் புதின் அரசு நிர்வாகத்திடம் நவல்னி குடும்பம் கோரிக்கை விடுத்தது. இந்த கோரிக்கைக்கு புதின் நிர்வாகம்
அனுமதி வழங்கியது.
இதையடுத்து, தற்போது நவல்னியின் உடல்நிலையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டதையடுத்து மேல் சிகிச்சைக்காக அவரை தனி விமானம் மூலம் ஜெர்மனிக்கு கொண்டு செல்ல மருத்துவமனை நிர்வாகமும் அனுமதி வழங்கியது.
இந்த அனுமதியையடுத்து விஷம் கலக்கப்பட்ட டீ-யை குடித்ததால் கோமா நிலைக்கு சென்றுள்ள ரஷிய எதிர்கட்சி தலைவர் நவல்னி கூடிய விரைவில் ஜெர்மனி கொண்டு செல்லப்பட்டு அங்கு அவருக்கு உரிய மேல்சிகிச்சை அளிக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ரஷியாவில் நவல்னியின் உயிருக்கு ஆபத்து இருப்பதால் மேல்சிகிச்சைக்காக அவரை ஜெர்மனிக்கு கொண்டு செல்வதாக நவல்னியின் குடும்பத்தினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் பயங்கர காட்டுத்தீ – 6 பேர் பலி
அமெரிக்காவில் பயங்கர காட்டுத்தீ – 6 பேர் பலி
கலிபோர்னியாவில் கடந்த சில நாட்களாக காட்டுத்தீ பரவி வருகிறது. இந்த காட்டுத்தீக்கு இதுவரை 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
கலிபோர்னியாவில் பயங்கர காட்டுத்தீ – 6 பேர் பலி
கலிபோர்னியா காட்டுத்தீ
கலிபோர்னியா:
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக காட்டுத்தீ பரவி வருகிறது.
மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் ஏற்பட்ட மின்னல் தாக்குதல்கள் காரணமாக 367 இடங்களில் காட்டுத்தீப்பற்றி எரிந்து வருகிறது.
காட்டுத்தீயால் வடக்கு கலிபோர்னியா மாகாணம் அதிக அளவில் பாதிப்பு அடைந்துள்ளது.
சான் பிரான்சிஸ்கோ பகுதியை சுற்றியுள்ள பாலோ, ஆல்டோ போன்ற இடங்களில் காட்டுத்தீ வேகமாக பரவி வருகிறது.
இந்த காட்டுத்தீயால் இதுவரை 2 லட்சத்து 20 ஆயிரம் ஏக்கர் அளவிலான காடுகள் உள்ளிட்ட நிலப்பரப்புகள் எரிந்து நாசமாகி உள்ளன.
காட்டுத்தீ காரணமாக 480 வீடுகள் தீக்கிரையாகியுள்ளன. மேலும், 6 பேர் உயிரிழந்துள்ளனர். தீயணைப்பு வீரர்கள் உள்பட 50-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்துள்ளனர்.
மேலும், 1 லட்சத்து 75 ஆயிரம் பேர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
காட்டுத்தீயினை கட்டுப்படுத்த 375-க்கும் அதிகமான தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. 10 ஆயிரத்திற்கும் அதிகமான தீயணைப்பு வீரர்கள் தீயினை கட்டுப்படுத்த போராடி வருகின்றனர்.
லண்டன் லூசியம் சிவன் ஆயலயா திருவிழா ஆரம்பம் – மக்கள் இன்றி வெறுமையான ஆலயம்
லண்டன் லூசியம் சிவன் ஆயலயா திருவிழா ஆரம்பம் – மக்கள் இன்றி வெறுமையான ஆலயம்
லண்டன் லூசியம் பகுதியில் உள்ள சிவன் ஆலயம் இன்று திருவிழா ஆரம்பமாகியுள்ளது
பல நூறு மக்கள் திரண்டு வந்து இந்த ஆலயத்தில் வழி பாடுகளை செய்வார் ,ஆனால் இம்முறை மக்கள் அதிக வரவின்றி ஆலயம் வெறிச்சு போயுள்ளது
கொரனோ நோயின் பாதிப்பும் ,குருக்கள் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட எதிரொலி காரணமாகவும் இந்த மக்கள் வரவு வீழ்ச்சியுற்றுள்ளது
லூசியம் பகுதியில் சில தினங்களுக்கு முன்னர் பத்துக்கு மேற்பட்டவர்கள் கொரனோ நோயினால் பாதிக்க பட்டுள்ளமை தெரிந்ததே
தொடர்ந்து மக்களை சமூக இடைவெளி விட்டு இருக்கும் படி அறிவுறுத்த பட்டு வருகின்றனர் ,
முக கவசம் அணியாமல் சென்றால் பிரிட்டனில் தண்டம் அறவிட படுகிறது ,
மக்கள் அதிகமாக ஒன்று கூடினால் அந்த நிறுவனம் சீல் வைக்க பட்டு இழுத்து மூடப்பட்டு வருகின்றமை இங்கே சுட்டி காட்ட தக்கது
அமெரிக்காவிடம் இருந்து 24 F-16 விமானங்களை வாங்கிய மொராக்கோ
அமெரிக்காவிடம் இருந்து 24 F-16 விமானங்களை வாங்கிய மொராக்கோ
மொராக்கோ நாட்டு விமான படை பயன்பாட்டிற்கு அமெரிக்கா இராணுவத்திடம் இருந்து F-16 fighter jets
போர் விமானங்கள் இருபத்தி நான்கு வாங்கி குவிக்க பட்டுள்ளது
கிட்டத்தட்ட ஐந்து பில்லியன் டொலர் பெறுமதியான இந்த விமான
கொள்வனவு திடீரென வாங்கியுள்ளது ஏன் என்ற சந்தேகத்தை
ஏற்படுத்தியுள்ளது
போரில்லாத பொழுதும் தமது இராணுவத்தை நவீன மயமாக்களுக்கு
உள்ளாக்கி வருகிறது மொராக்கோ
,குறித்த
நாட்டின் இந்த ஆயுத தளபாட கொள்வனவு பிராந்திய நாடுகளில்
சீரற்ற நிலையை உருவாக்கும் என அஞ்ச படுகிறது








