Author: நலன் விரும்பி
லண்டனில் பொலிசார் மீது அசிட் வீச்சு தாக்குதல் -11 பேர் காயம்
லண்டனில் பொலிசார் மீது அசிட் வீச்சு தாக்குதல் -11 பேர் காயம்
வடக்கு லண்டன் Dale Close, Barnet பகுதியில் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்த
காவல்துறையினர் மீது திடீரென போதைவஸ்து கடத்தல் கும்பல் அசீட் வீச்சு தாக்குதலை நடத்தினர்
இதில் பதினொரு காவல்துறை வீரர்கள் பலத்த எரிகாயங்களுக்கு உள்ளான
நிலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர் ,மேற்படி
தாக்குதலை நடத்தியவர்கள் என சந்தேகிக்க படும் சிலரை கைது செய்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்
தொடர்ச்சியாக போதைவஸ்து கும்பலை இலக்கு வைத்து கைது செய்து
வரும் வேளையில் இந்த தீவிரவாத தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது
மலசலகூடத்திற்குள் இருந்து பணம் மற்றும் $700,000 பெறுமதியான போதைவஸ்து மீட்பு
மலசலகூடத்திற்குள் இருந்து பணம் மற்றும் $700,000 பெறுமதியான போதைவஸ்து மீட்பு
சிங்கப்பூரில் போதைவஸ்து கடத்தல் கும்பல் ஒன்று விசித்திரமான
முறையில் நடத்தி வந்த விற்பனை கண்டு பிடிக்க்க பட்டுள்ளது
குறித்த குழுவினரை பின்தொடர்ந்த உளவுத்துறையினர் நடத்திய திடீர்
சுற்றிவளைப்பில் குறித்த வீட்டின்
மலசலக் குழியில் மறைத்து வைக்க பட்டிருந்த நிலையில் இருந்து
ஏழுலட்சம் அமரிக்கா
டொலர் பெறுமதியான போதைவஸ்து மற்றும் ,ஒரு லட்சத்து எழுபதாயிரம் டொலர் பணம் என்பன மீட்க பட்டுள்ளன
இந்த குற்றத்தை புரிந்து வந்த இரு பெண்கள் மூன்று ஆண்கள் கைது செய்ய
பட்டுள்ளனர்
தொடர்ந்து தீவிர விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

மலசலகூடத்திற்குள் இருந்து 
இந்தோனேசிய வெள்ளத்தில் 2 பேர் பலி -20 பேர் காயம்
இந்தோனேசிய வெள்ளத்தில் 2 பேர் பலி -20 பேர் காயம்
இந்தோனேசியா வெள்ளம் மற்றும் நில சரிவில் சிக்கி இருவர்
பலியாகியுள்ளனர் ,மேலும் இருபது பேர் படுகாயமடைந்துள்ளனர்
ஒருவர் காணமல் போயுள்ளார் ,
இந்த
அனர்த்தத்தில் சிக்கி நூற்றுக்கு மேற்பட்ட வீடுகள்
சேதமடைந்துள்ளன
,உடமைகள் நீரில் அடித்து செல்ல பட்டுள்ளது ,மீட்பு பணிகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது

லொறியில் இருந்து விழுந்து நபர் பலி – நடந்தது என்ன ..?
லொறியில் இருந்து விழுந்து நபர் பலி – நடந்தது என்ன ..?
ராகலை நோக்கிய பயணித்த மரக்கறிகளை ஏற்றிய வாகனத்தின்
பின்புற பகுதியில் பயணித்த ஒருவர், கீழே விழுந்து
உயிரிழந்துள்ளார்.
46 வயதுடைய ஒருவரே உயிரிழந்துள்ளார். கெப் வாகனத்தின் சாரதி
கைதுசெயயப்பட்டுள்ளார்.
17 வயது பெண் கற்பழித்து கொலை – அதிர்ச்சியில் கிராமம்
பாலங்கொடை ஒலுகன்தோட்ட கிராம சேவகர் பிரிவில் வெலிஹரனாவ பகுதியில், 17 வயது மாணவி ஒருவர் மர்மமான
முறையில் உயிரிழந்துள்ளார் என்றும் இவர் படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்றும் என்று, பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.
பலாங்கொடை இ/இந்து கல்லூரியில் கல்விகற்றுவந்த கே.லோசினி என்பவரே, இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
மேற்படி மாணவியை காணவில்லை என அவரது தாய் நேற்று (22) தேடிய
போது, வீட்டிலுள்ள கட்டிலுக்குக் கீழ், மாணவி சுயநினைவின்றி விழுந்து கிடந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் மாணவியின் உறவினர்கள் அவரை உடனடியாக வைத்தியசாலையில்
அனுமதித்தபோது, அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாக, வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
மாணவியின் முகம் மற்றும் கழுத்தில் காயங்கள் காணப்படுவதாகவும் கழுத்து நெறிக்கப்பட்டதற்கான அடையாளம்
காணப்படுவதாகவும் பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
எனவே, மாணவி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.
சடலம் பிரேதப் பரிசோதனைக்காக, பலாங்கொடை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
லண்டன் வீதிகளை காப்பி அடித்த இலங்கை – பஸ் பயணிக்க தனி பாதை
லண்டன் வீதிகளை காப்பி அடித்த இலங்கை – பஸ் பயணிக்க தனி பாதை
வீதி நிரல் சட்டத்தில் மற்றுமொரு நடைமுறை இன்று முதல் (23 ஆம் திகதி) பரீட்சார்த்தமாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய செனரத்
தெரிவிக்கையில் பஸ் முன்னுரிமை ஒழுங்கின் ஊடாக பயணம் செய்யக் கூடிய பயணிகள் போக்குவரத்து பஸ்கள், அலுவலக
சேவையில் ஈடுபடும் பஸ்கள் மற்றும் அதற்கான அனுமதி பெற்றுள்ள வான்கள், பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும்
வான் மற்றும் பஸ்களுக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக கூறினார்.
பஸ் முன்னுரிமை ஒழுங்கு மூலம் வேறு வாகனங்களுக்கு பயணிக்க முடியாது எனவும் பஸ் வண்டி ஒன்றை முந்திச் செல்வதற்காக
மாத்திரம் இரண்டாவது ஒழுங்கிற்கு பிரவேசிக்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஜனாதிபதி கிராமத்திற்கு விஜயம்
மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு ஜனாதிபதி கிராமத்திற்கு விஜயம்
மக்கள் மத்தியில் சென்று அவர்கள் முகங்கொடுத்து வருகின்ற பல்வேறு பிரச்சினைகளை நேரடியாக இனங்கண்டு தாமதிக்காமல்
தீர்வுகளை வழங்குவதற்காக கிராமங்களுக்குச் செல்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ திட்டமிட்டுள்ளார்.
மக்கள் முகங்கொடுத்து வருகின்ற பிரச்சினைகளை தான் நேரடியாகக் கண்டு அவர்களின் கவலைகளை கேட்டு சரியான
தெளிவொன்றை பெற்று நிவாரணங்களை வழங்குவது அவரின் எதிர்பார்ப்பாகும்.
முதல் விஜயமாக பதுளை மாவட்டத்தின் ஹல்துமுல்லை பிரதேச செயலகப் பிரிவு தெரிவு செய்யப்பட்டுள்ளது. மக்கள் சந்திப்பு
ஹப்புத்தளை 100 ஏக்கர் கிராமத்தில், குமாரதென்ன பாடசாலையில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (25) காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகும்.
கிராமிய மக்கள், நீண்டகாலமாக தீர்த்து வைக்கப்படாத பொருளாதார மற்றும் சமூக பிரச்சினைகளினால் அல்லல்பட்டு வருவதாக குறிப்பிட்ட ஜனாதிபதி, ஜனாதிபதி தேர்தல் மற்றும்
பொதுத் தேர்தல் காலத்தில் நாடு முழுவதும் மேற்கொண்ட விஜயங்களின்போது அது தெளிவாகியதாகவும் குறிப்பிட்டார்.
வாழ்வாதார பிரச்சினை, காணி மற்றும் வீடின்மை, காணிகளுக்கு உறுதிகள் இல்லாதிருத்தல், சுகாதார மற்றும் போக்குவரத்து சேவைகள் போதுமானதாக இல்லாமை, பிள்ளைகளின் கல்வி
பிரச்சினைகள் மற்றும் பாடசாலையின் குறைபாடுகள், விவசாய மற்றும் குடிநீருக்கான நீரை பெற்றுக்கொள்வதில் உள்ள பிரச்சினை,
காட்டு யானைகள் ஊருக்குள் வருதல், விவசாய உற்பத்திகளை விற்க முடியாமை அவ்வாறு இனங்காணப்பட்ட பிரச்சினைகளில் முதன்மையானவையாகும்.
கிராமிய மக்களுக்கு உள்ள கஷ்டங்களை புரிந்துகொண்டு, அவற்றை உடனடியாக தீர்ப்பதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டிய
அரச நிறுவனங்களின் ஊதாசீனம் மற்றும் செயற்திறனின்மை போன்றவை பிரிதொரு பிரச்சினையாகும்.
ஜனாதிபதி அவர்கள் மிக முக்கிய கிராமங்களில் கண்காணிப்பு விஜயங்களை மேற்கொள்ளும்போது மக்களுக்கே முன்னுரிமை வழங்கப்படும். செலவழிக்கப்படும் பணம்
குறைத்துக்கொள்ளப்படும். கொழும்பிலிருந்து அதிகாரிகள் குழு அழைத்துச் செல்லப்பட மாட்டார்கள். மக்கள் பிரச்சினைகளை
தீர்ப்பதற்கு பிரதேச அதிகாரிகள் மாத்திரம் பங்குபற்றுவர். மக்கள் சந்திப்புக்கு வருகை தந்து, தமக்குள்ள பிரச்சினைகளை அறியத்தருமாறு ஜனாதிபதி கேட்டுக் கொண்டார்.
முன்வைக்கப்படும் பிரச்சினைகளுக்கு முடியுமான வகையில் உடனடியாக தீர்வுகளை வழங்குவது ஜனாதிபதி அவர்களின்
எதிர்பார்ப்பாகும். தீர்ப்பதற்கு காலம் எடுக்கக்கூடிய பிரச்சினைகள் மாத்திரம் பின்னர் தீர்த்து வைப்பதற்காக குறித்துக்கொள்ளப்படும்.
வேள்ளிக்கிழமை கண்காணிப்பு விஜயத்திற்காக தெரிவு செய்யப்பட்டிருப்பது ஹல்துமுல்லை பிரதேச செயலக பிரிவின் இரண்டு கிராம சேவகர் பிரிவுகளாகும். அதில் 222 குடும்பங்கள்
வசிக்கின்றனர். அவர்களின் பிரதான வாழ்வாதாரமாக இருப்பது. நெல், மிளகு மற்றும் கறுவா பயிர்ச் செய்கையுடன்கூடிய கலப்பு
விவசாயம் ஆகும். மக்கள் சந்திப்பு இடம்பெறும் குமாரதென்ன பாடசாலையில் 17 மாணவர்கள் கல்வி கற்கின்றனர்.
60 ரூபாவிற்கு தேங்காய்- குஷியில் மக்கள்
60 ரூபாவிற்கு தேங்காய்- குஷியில் மக்கள்
கொழும்பு மற்றும் அதனை அண்டிய பிரதேசங்களில் பாவனையாளர்களுக்கு
60 ரூபா நிவாரண விலையில் தேங்காயை கொள்வனவு செய்வதற்கான சந்தர்ப்பம் கிட்டியுள்ளது.
பெருந்தோட்ட தொழிற்துறையுடன் தெங்குச் செய்கை சபை இணைந்து
இந்த வேலைத்திட்டத்தை மேற்கொண்டுள்ளன. இதன் கீழ் கொழும்பு
மற்றும் அதனை அண்மித்த பிரதேசங்களில் லொறி மூலம் தேங்காய் விநியோகிக்கும் வேலைத்திட்டம் நேற்று ஆரம்பிக்கப்பட்டது.
இந்த வேலைத்திட்டத்தின் கீழ் தேங்காய் ஒன்றை 60 ரூபாவிற்கு பெற்றுக்கொள்ள
முடியும். தேங்காயின் விலையைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான
சகல நடவடிக்கைகளையும் அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக ராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த தெரிவித்தார்
லண்டனில் கொரனோ எதிரொலி – பொருட்களை அள்ளி செல்லும் மக்கள்
லண்டனில் கொரனோ எதிரொலி – பொருட்களை அள்ளி செல்லும் மக்கள்
பிரிட்டன் நாடு தழுவிய ரீதியில் புதிய லாக் டவுன் ,அடித்து பூட்டும் விடயம் இரண்டாவது முறையாக அறிவிக்க பட்ட நிலையில்
தற்போது பீதியடைந்த மக்கள் மறுபடி பொருட்களை அள்ளி செல்கின்றனர்
எதிர் வரும் மே மாதம் வரை இந்த பேரிடர் அனர்த்தம் நீடிக்கலாம் எனப்தாக உள்ளது ,எதிர்வரும் நான்கு வாரங்களின் பின்னர்
தற்பொழுது அறிவிக்க பட்ட விதிகளில் மேலும் இறுக்கமான நடவடிக்கை ,அதாவது முழுமையான அடித்து பூட்டும் நிகழ்வை நோக்கி நகரும் வாய்ப்பு உள்ளது
ஒன்று ,இரண்டு ,மூன்று, என்ற நிலையில் திட்டம் உள்ளது ,அதில் ஒன்று
தற்போது அறிவிக்க பட்டுள்ளது ,அதனை அடுத்து எதிர்வரும் இரண்டு மூன்று பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும்
மக்கள் வேலையின்றி பெரும் நெருக்கடியை சந்திப்பர் ,தொழில் துறைநிபுணர்கள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ள பொழுதும்
,அதனை மீறி மக்களை காப்பாற்ற இவ்விதமான அதிரடி முடிவினை பிரதமர் ஜோன்சன் அறிவித்துள்ளார்
முக கவசம் அணியாது வெளியில் சென்றால் இருநூறு தண்டம் , பதின் ஐந்து பேருக்கு மேல் கூடினால் பத்தாயிரம் தண்டம்
அது தவிர கிரிமினல் குற்றம் என்ற வகையில் உள்ளது ,நகருக்கு மூன்று
கடைகள் விகிதம் திறக்கும் வாய்ப்பு உள்ளது ,இத்தாலியை போன்று பிரிட்டன் செல்ல கூடிய அபாயம் உள்ளது ,
அமெரிக்காவில் எதிர்வரும் மூன்று மாதத்தில் நான்கு லட்சம் பேர் பலியாவார்கள் என்ற திடுக்கிடும் தகவல் வெளியிட பட்டுள்ளது
மக்களே அபாயத்தை உணர்ந்து வெளியில் நடமாடுதலை தவிர்த்து உங்களை நீங்கள் குடும்பத்துடன் தனிமை படுத்தி கொள்ளுங்கள்
இந்த செய்தியினை நண்பர்களுக்கும் தெரிய படுத்தி அவர்களை காப்பற்றி கொள்ளுங்கள்
வரும் முன் தடுப்போம் ,உயிரை காப்போம்

உள்நாட்டு விவகாரங்களில் தலையிட கூடாது – மிரட்டும் கோட்டா -மிரளுமா ஐநா..?
உள்நாட்டு விவகாரங்களில் தலையிட கூடாது – மிரட்டும் கோட்டா -மிரளுமா ஐநா..?
ஏனைய நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாதிருப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபை உரிய
முக்கியத்துவம் கொடுக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
நேற்று (21) இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் 75 வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் உயர் மட்டக் கூட்டத்தில் வீடியோ
தொழிநுட்பத்தின் ஊடாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.
‘உலகம் ஒரு பொதுவானதும் நிகரற்றதுமான அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் ஒரு சந்தர்ப்பத்தில், ‘எமக்குத் தேவைப்படும் ஐக்கிய நாடுகள் சபை’, என்ற சுலோகம் நாடுகளின் இறையாண்மை
சமத்துவத்திற்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கும் என்றும் ஆள்புல ஒருமைப்பாட்டினை மதித்து அவர்களின் உள்நாட்டு
விவகாரங்களில் தலையிடாதிருக்கும் என்றும் தான் நம்புவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
ஒரு சிலரின் நலன்களுக்காக எந்த ஒரு நாட்டையும் பிணையாக வைத்திருக்காததன் மூலம் உறுப்பு நாடுகளுக்கும் ஐ.நா.வுக்கும்
இடையிலான கூட்டாண்மயை மிகச் சிறந்த முறையில் பேண முடியும் என்று தான் உறுதியாக நம்புவதாகவும் ஜனாதிபதி கூறினார்.
ஐ.நா. தனது 75 ஆவது ஆண்டு நிறைவை ஐ.நா. பொதுச் சபையின் ஒரு நாள் உயர்மட்டக் கூட்டத்துடன் 2020 ஆம் ஆண்டு செப்டெம்பர் 21 திங்கட்கிழமையன்று பன்முகத்தன்மைக்கான கூட்டு
உறுதிப்பாட்டை மீள் உறுதிப்படுத்தும் வகையில் ‘நாம் விரும்பும் எதிர்காலம்இ எமக்குத் தேவையான ஐக்கிய நாடுகள் சபை’ என்ற
கருப்பொருளின் கீழ் கொண்டாடுவதாக ஐ.நா. உறுப்பு நாடுகள் 2019 ஜூன் மாதம் இணக்கம் கண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பொதுச் சபையின் 75 வது அமர்வின் தலைவர் வோல்கன் போஸ்கிர் மற்றும் ஐ நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டேரஸ் ஆகியோர் இக்கூட்டத்தின் ஆரம்ப மற்றும் இரண்டாவது உரைகளை
நிகழ்த்தினர். 180 நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் வீடியோ தொழிநுட்பத்தின் ஊடாக மாநாட்டில் உரைகளை நிகழ்த்தினர்.
‘முன்னெப்போதுமில்லாத வகையில் கொவிட்-19 தொற்றுநோயால் உலகம் பாதிக்கப்பட்டுள்ளது, இது நமது பொருளாதாரங்கள்
, சுகாதார அமைப்புகள் மற்றும் உண்மையில் நமது சமூகங்களை ஒரு சில மாதங்களுக்குள் பெரிதும் பாதித்துள்ளது’ என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.
ஒரு செயற்திறமான தலையீட்டின் மூலம் கொவிட்-19 இன் சவாலை இலங்கைக்கு வெற்றிகரமாக எதிர்கொள்ள முடிந்தது. இலங்கையில் முதல் நோயாளி கண்டறியப்படுவதற்கு முன்பே கொவிட்-19 ஐ
தடுப்பதற்கான தேசிய நடவடிக்கைக் குழுவை நாங்கள் அமைத்தோம். இராணுவம், சுகாதாரத் துறை மற்றும் தேசிய மற்றும்
பிராந்திய மட்டங்களில் உள்ள சிவில் அதிகாரிகளை அக்குழு உள்ளடக்கியிருந்தது.
இலங்கையில் கொவிட்-19 நோயில் இருந்து மீளும் வீதம் உலகளாவிய மீட்பு வீதத்தை விட 90மூ அதிகமாக உள்ளது. எமது மிகப் பெரிய பலமாக இருந்த ‘தடமறிதல் மற்றும்
தனிமைப்படுத்தலை’ நாம் சார்ந்திருந்தமை எமது வெற்றிக்கு பெரிதும் உதவியது என்று ஜனாதிபதி அவர்கள் வலியுறுத்தினார். கடந்த ஒரு மாத காலப்பகுதியில் நாட்டில் கொவிட்
நோய்த்தொற்றுக்கு ஆளான எந்வொருவரும் கண்டறியப்படவில்லை என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
ஐக்கிய நாடுகள் சபையின் அங்கத்தவர்கள் என்ற வகையில் இந்த மாபெரும் நிறுவனத்தை வலுப்படுத்தும் முயற்சிகள் நாங்கள்
விரும்பும் எதிர்காலத்தை உறுதி செய்வதற்கு உதவும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் சபையின் 75 வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் அரச தலைவர்களின் உயர் மட்ட கூட்டத்தில் வீடியோ
தொழில்நுட்பத்தின் மூலம் பங்கேற்று இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆற்றிய முழுமையான உரை.
பொதுச் சபையின் 75 வது கூட்டத்தொடரின் தலைவர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள திரு. வோல்கன் பொஸ்கர் அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன். இந்த வரலாற்று
சிறப்புமிக்க தருணத்தில் இலங்கை மக்களை பிரதிநிதித்துவம் செய்வதற்கு கிடைத்தமை எனக்கு கிடைத்த மாபெரும் கௌரவமாகும்.
துரதிஷ்டவசமாக இ 75 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த கெளரவமான சபையை ஆரம்பித்தவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு முற்றிலும் மாற்றமானதாகவே இன்றைய உலகம் காணப்படுகின்றது.
ஒரு சில மாதங்களுக்குள் எமது பொருளாதாரம், சுகாதார கட்டமைப்பு மற்றும் முழுமையாக எமது சமூக செயற்பாடுகளை
இடை நிறுத்திய, முன்னர் எப்போதும் இருக்காத கொவிட் – 19 நோய்த்தொற்றினால் முழு உலகும் பாதிக்கப்பட்டுள்ளது.
அறிவார்ந்த செயற்பாடுகளின் மூலம் கொவிட் – 19 சவாலுக்கு வெற்றிகரமாக இலங்கை முகங்கொடுத்தது. இலங்கையில் முதலாவது நோயாளியை இனங்காண்பதற்கு முன்னராகவே நாம்
கொவிட் – 19 தேசிய நிவாரண செயற்பாட்டுக் குழுவை ஸ்தாபித்தோம். பாதுகாப்பு தரப்பினர், சுகாதார, தேசிய மற்றும்
பிரதேச மட்டத்தில் சிவில் அதிகாரிகள் அனைவரையும் உள்ளடக்கிய வகையிலேயே எமது முன்னெடுப்புகள் அமைந்திருந்தன.
இலங்கையில் கொவிட் – 19 நோயாளிகள் சுகம் அடையும் வீதம் நூற்றுக்கு 90 ஐ விடவும் அதிகமாக உள்ளதுடன் அது உலகின் சுகம் அடையும் வீதத்தின் உயர் நிலையாகும். எமது பலமான சக்தியாக
அமைந்த ‘தடமறிதல் மற்றும் தனிமைப்படுத்தல்’ என்பதே எமது வெற்றிக்கான காரணங்களாகும். கடந்த ஒரு மாத காலத்தில்
எந்தவொரு கொரோனா தொற்றுக்குள்ளானவரும் நாட்டினுள் இனங்காணப்படவில்லை.
கௌரவ அரச தலைவர்களே,
பேண்தகு அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலை 2030 இல் அடைந்துகொள்வதற்கு இலங்கை அர்ப்பணிப்புடன்
செயற்படுகின்றது. விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட உற்பத்தி பொருளாதாரத்தின் மூலம் வறுமையை ஒழிப்பது எனது அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாகும்.
நாம் வருடத்தின் ஆரம்பத்தில் உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்துவதற்காக எடுத்த பல்வேறு நடவடிக்கைகளான இறக்குமதியை கட்டுப்படுத்தல் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர
தொழிற்முயற்சியாளர்களுக்கு சலுகைகளை வழங்குவதன் மூலம் எதிர்பார்த்த பிரதிபலன்களை அடைந்துகொள்ள முடிந்துள்ளது.
இலங்கை ஐக்கிய நாடுகள் சபையில் அங்கத்துவம் பெற்று 65 ஆண்டுகளை கொண்டாடுகின்ற இச்சந்தர்ப்பத்தில், நாம் ஐக்கிய நாடுகள் நிகழ்ச்சி நிரலுக்கு பங்களிக்க கிடைத்தமையை ஒரு
பாக்கியமாக கருதுகின்றோம். இலங்கை ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படையினருடன் இணைந்து செயற்பட்டதோடு சபையின் பலவேறு விசேட நிறுவன திட்டங்களுக்கும் பங்களித்துள்ளது.
‘உலகம் ஒரு பொதுவானதும் நிகரற்றதுமான அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் ஒரு சந்தர்ப்பத்தில்இ ‘எமக்குத் தேவைப்படும் ஐக்கிய நாடுகள் சபை’, என்ற சுலோகம் நாடுகளின் இறையாண்மை
சமத்துவத்திற்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கும் என்றும் ஆள்புல ஒருமைப்பாட்டினை மதித்து அவர்களின் உள்நாட்டு
விவகாரங்களில் தலையிடாதிருப்பதற்கும் உரிய கவனம் செலுத்தும் என்று நான் நம்புகின்றேன்.
கௌரவ அதிதிகளே, ஒரு சிலரின் தேவைக்கு எந்தவொரு நாட்டையும் பணயக் கைதியாக்காமல் இருப்பதன் மூலமே அங்கத்துவ நாடுகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கு
இடையிலான பங்களிப்புக்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் மேலாண்மையையும் நிலைத்தன்மையையும் இயன்றளவு
அடைந்துகொள்ள முடியுமாக இருக்கும் என்பது எனது உறுதியான நம்பிக்கையாகும்.
ஐக்கிய நாடுகள் சபையின் அங்கத்துவ நாடான இலங்கை எமக்கு அவசியமான எதிர்காலத்தை உறுதி செய்வதற்காக இந்த
சிறப்புமிக்க அமைப்பை பலப்படுத்துவதற்கு எடுக்கப்படும் முயற்சிகள் வெற்றியளிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றது.
எமது மக்களுக்கும், எதிர்கால சந்ததியினருக்கும் அதன் பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்கு நாம் கடமைப்பட்டுள்ளோம்.
இலங்கையில் கொரனோ தொற்று புதிதாக 12 பேர் அடையாளம்
இலங்கையில் கொரனோ தொற்று புதிதாக 12 பேர் அடையாளம்
இலங்கையில் இன்று காலை வரையில் கொவிட் – 19 தொற்று நோயாளர்கள் 12 பேர் புதிதாக அடையாளங்காணப்பட்டுள்ளனர்.
இவர்கள் வெளிநாடுகளில் இருந்து இலங்கை வந்தவர்கள் என்று கொவிட் தொற்று தடுப்பு செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
துபாயில் இருந்து 290 பேர் இன்று காலை நாட்டுக்கு வருகை தந்தனர். இந்தியாவில் இருந்து மேலும் சிலர் இன்று நண்பகல்
இலங்கை வரவிருந்தனர். இவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தலுக்காக இராணுவ மத்திய நிலையங்களுக்கு அனுப்பப்படுவர்.
இந்த மத்திய நிலையங்களில் இருந்த 18 பேர் தனிமைப்படுத்தலை பூரத்தி செய்து இன்று வீடுகளுக்கு செல்லவிருந்தனர்.
இராணுவத்தினால் நிர்வகிக்கப்படும் 66 தனிமைப்படுத்தும் மத்திய நிலையங்களில் 6626 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இன்று காலை 6.00 மணியளவில் 12 பேர் முழுமையாக குணமடைந்து
வைத்தியசாலைகளில் இருந்து வீடுதிரும்பியுள்ளனர். கந்தக்காடு சிகிச்சை
மற்றும் புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் உள்ளவர்களின் எண்ணிக்கை 3 இனால் குறைவடைந்துள்ளது.
Covid -19 பரம்பலின் புதுப்பிக்கப்பட்ட தரவுகள் 2020-09-22 14:09:19
உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகள் – 3299
சிகிச்சை பெறும் நோயாளிகள் – 168
குணமடைந்த நோயாளிகளின் எண்ணிக்கை – 3118
சிறுவனை கடத்திய நபர் – மடக்கி பிடித்த மக்கள்
சிறுவனை கடத்திய நபர் – மடக்கி பிடித்த மக்கள்
அவுஸ்ரேலியா தலைநகர் மெல் போர்ன் பகுதியில் உள்ள Preston
Libraryமுன்பாக இரண்டு வயது சிறுவர் ஒருவரை நபர் ஒருவர் கடத்தி செல்ல முற்பட்டார் .
எனினும் பெற்றவர்கள் போட்ட கூக்குரல் சத்தத்தை அடுத்து குறித்த
நபர் மடக்கி பிடிக்க பட்டு தாக்க பட்டு சிசு காப்பற்ற பட்டது
நீதிமன்றில் இடம்பெற்று வந்த விசாரணைகளில் தற்போது குறித்த
நபருக்கு நான்கரை வருட கடூழிய சிறை தண்டனை வழங்க பட்டுள்ளது

இளம் பெண் மீது அல்டி முன் துப்பாக்கி சூடு
இளம் பெண் மீது அல்டி முன் துப்பாக்கி சூடு
அவுஸ்ரேலியா Booval, south of Brisbane பகுதியில் உள்ள அல்டி பல்
பொருள் வனிக வளாகத்தில் வைத்து இளம் பெண் ஒருவர் மீது துப்பாக்கி சூடு நடத்த பட்டுள்ளது
இந்த துப்பாக்கி சூட்டு தாக்குதலில் பலத்த காயமடைந்த இளம் பெண்
தற்போது ஆபத்தான நிலையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளார்
முகமூடி அணிந்த நபர் ஒருவரே இந்த கொலை வெறி தாக்குதலை நடாத்தியுள்ளார்
,போலீசார் மேற்கொண்ட துரித சுற்றிவளைப்பில் குற்ற செயலை புரிந்தவர் கைது செய்ய பட்டுள்ளார்
கைதானாவர் உரிய முறை விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார்
,இந்தக் கொலை செயலுக்குரிய காரணம் உடனடியாக தெரியவரவில்லை
அமெரிக்காவில் 3 மாதத்தில் 4 லட்சம் பேர் பலியாவர்கள் – அபாய எச்சரிக்கை
அமெரிக்காவில் 3 மாதத்தில் 4 லட்சம் பேர் பலியாவர்கள் – அபாய எச்சரிக்கை
அமெரிக்காவில் பரவி வரும் கொரனோ நோயாளர்களின்
எண்ணிக்கை நாள் தோறும் அதிகரித்து செல்கிறது
இவ்விதம் இதுவரை இடம் பெற்ற மரணம் இரண்டு லட்சத்தை கடந்துள்ளது
நாள் ஒன்றுக்கு 700 பேர் சரா சரியாக இறந்துள்ளனர் எனவும் எதிர்வரும்
மூன்று மாதங்களில்
நான்கு லட்சம் பேர் பலியாவர்கள் என எச்சரிக்க பட்டுள்ளது
இதை விட மேலும் அதிகரிக்க கூடும் என அச்சம் வெளியிட பட்டுள்ளது
வியாழன் முதல் 10 மணியுடன் உணவகங்கள் ,பார்கள் அடித்து பூட்டு – video 10 ஆயிரம் தண்டம்
வியாழன் முதல் 10 மணியுடன் உணவகங்கள் ,பார்கள் அடித்து பூட்டு – ஊரடங்கு அமூல்
பிரிட்டனில் பரவி வரும் கொரனோ நோயினை அடுத்து எதிர்வரும் வியாழக்கிழமை
முதல் ( நாளை மறுதினம் )உணவகங்கள் ,பார்கள்,என்பன அடித்து பூட்ட உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளது
இன்று முக்கிய பேச்சு ஒன்றினை ஆளும் அதிபர் போரிஸ் ஜோன்ஸன்பாராளுமன்றில் ஆற்றினார்
அதில் இந்த விடயங்கள் மக்களுக்கு நேரடியாக வழங்க பட்டுள்ளது
மேலும் பல இறுக்கமான சட்டங்கள் மக்களுக்கு வருகிறது ,முக்கிய கீ
வேலையாட்கள் , தவிர ஏனையவர்கள் வீட்டில் முடக்க படும் நிலை ஏற்படும் என்பதாக தெரிவிக்க பட்டுள்ளது
கடைகளில் வேலை செய்பவர்கள் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் ,மக்கள் உட்பட உணவாக வேலையாட்களும் முக கவசம் அணிதல் வேண்டும் ,டாக்சி உட்பட்டவை ,.
டேக்கவே வே மட்டும் அனுமதிக்க பட்டுள்ளது ,பத்து மணியுடன் உணவகங்கள் ,பார்கள் அடித்து பூட்ட பட வேண்டும்
,கல்யாணம் மரணம் மற்றும் நிகழ்வுகளில் 10 முதல் 15 பேர் மட்டுமே கலந்து கொள்ள முடியும்
இந்த சட்டத்தை மீறுபவர்கள் மீது நடவடிக்கை பாயும் ,பத்தாயிரம் தண்டம் அறவிட படும்
ஐப்பசி மாதம் முதல் நாள் ஒன்றுக்கு பத்தாயிரம் பேர் பாதிக்க படுவார்கள்
நாள் ஒன்றுக்கு நூறுக்கு மேற்பட்டவர்கள் பலியாவர்கள் ,அதுவே அதிகரித்து
செல்லும் பொழுது லெவல் ஐந்தை எட்டும் பொழுது முழு லாக் டவுனுக்கு பிரிட்டன் செல்லும் அது பங்குனி மாதம் நெருங்கும் வேளையில் இடம்பெற கூடும்
வீதிகளில் காவல்துறை ,இராணுவம் ரோந்து செல்வார்கள் என அறிவிக்க பட்டுள்ளது
விசாரிக்க படும் மைத்திரி – கைதாவாரா ..?
விசாரிக்க படும் மைத்திரி – கைதாவாரா ..?
இலங்கையி முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, ஏப்ரல்
21 தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்கும்
ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.
இவர் தனது சடடதரணியுடன் அங்கு பிரசன்னம் ஆகியுள்ளார்
கோட்டா அரசில் பழிவாங்கும் அரசியல் இடம்பெற்று வரும்
நிலையில் இவ்விதம் விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளமை குறிப்பிட தக்கது
முல்லையில் பெரும் புயல் எட்டு வீடுகள் சேதம்
முல்லையில் பெரும் புயல் எட்டு வீடுகள் சேதம்
இலங்கை வடக்கு முல்லைதீவில் பலமாக வீசிய காற்றின்
காரணமாக எட்டு வீடுகள் கடுமையாக சேதமாகியுள்ளன
பாதிக்க பட்ட மக்களுக்கு உதவிட அனர்த்த முகாமைத்துவ அமைச்சு துரித நடவடிக்கை எடுத்து வருகிறது
பலமான காற்றும் கரையை கடக்கும் பொழுது
இவ்விதமானநிகழ்வுகள் இடம்பெற கூடும் என முன்னர் எச்சரிக்கை
பட்டிருந்தமை இங்கே குறிப்பிட தக்கது
20 ஆவது திருத்தச் சட்டமூல பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு
20 ஆவது திருத்தச் சட்டமூல பிரேரணை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பு
அரசியல் யாப்பின் 20 ஆவது திருத்த சட்டமூலம் இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
நீதியமைச்சரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான மொஹம்மத் அலி சப்ரி இதனை சமர்ப்பித்தார்.
இதன்போது எதிர் தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன் பதாதைகளையும் சபையில் ஏந்தி நின்று எதிர்ப்பு கோஷம்
எழுப்பினர்.Capture Parliment Oppசட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டு 7 நாட்களுக்குள் எந்தவொரு பிரஜையும் அதற்கு எதிராக
நீதிமன்றத்தில் மனுவைத் தாக்கல் செய்யலாம். அவ்வாறு மனுவொன்று தொடுக்கப்படாத பட்சத்தில், மக்களவையில் 7
நாட்களின் பின்னர் 20 ஆவது திருத்தத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் ஆரம்பமாகும்.
இரண்டாவது வாசிப்பின் மீதான விவாதத்தின் முடிவில் திருத்தச் சட்டமூல பிரேரணை வாக்கெடுப்பிற்கு விடப்படும். இதன் போது மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் பிரேரணை
அங்கீகரிக்கப்பட வேண்டும். அதன் பின்னர் குழு நிலை விவாதத்தில் பிரேரணையின் சகல ஷரத்துக்களும்
பரிசீலிக்கப்படும். இந்தச் சமயத்தில் திருத்தங்களை பிரேரிக்கலாம். பின்னர் மூன்றாம் வாசிப்பின் மீதான விவாதத்தை அடுத்து பிரேரணை மீதான வாக்கெடுப்பு இடம்பெறும்.
அரசியல் யாப்பின் மீதான 20 ஆவது திருத்தத்திற்கு அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்தது. அதனைத் தொடர்ந்தும்
பரிசீலிப்பதற்காக பிரதம மந்திரி மஹிந்த ராஜபக்ஷவின் ஆலோசனைக்கு அமைய குழுவொன்று நியமிக்கப்பட்டது. இதற்கு
அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தலைமை தாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது
புதிய பதவியை பெற்று கொண்ட பிள்ளையான்
புதிய பதவியை பெற்று கொண்ட பிள்ளையான்
மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைத் தலைவராக மட்டக்களப்பு
மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜனாதபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கையொப்பமிட்ட இவருக்கான
நியமனக் கடிதம், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் இன்று (22) காலை வழங்கி வைக்கப்பட்டது.
இவருடன், கிழக்கு மாகாண ஆளுநர் திருமதி அநுராதா
யஹம்பத்தும் இணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சிறையில் இருந்து தப்பி ஓடிய கைதி – தேடும் போலீஸ்
சிறையில் இருந்து தப்பி ஓடிய கைதி – தேடும் போலீஸ்
நேற்று (21) இரவு 9.45 மணியளவில் மாதம்பே பொலிஸ் நிலையத்தில்
தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர்,அங்கிருந்து
தப்பியோடியுள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு
தப்பி ஓடியவரை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்









