உள்நாட்டு விவகாரங்களில் தலையிட கூடாது – மிரட்டும் கோட்டா -மிரளுமா ஐநா..?

Spread the love

உள்நாட்டு விவகாரங்களில் தலையிட கூடாது – மிரட்டும் கோட்டா -மிரளுமா ஐநா..?

ஏனைய நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாதிருப்பதற்கு ஐக்கிய நாடுகள் சபை உரிய

முக்கியத்துவம் கொடுக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

நேற்று (21) இடம்பெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் 75 வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் உயர் மட்டக் கூட்டத்தில் வீடியோ

தொழிநுட்பத்தின் ஊடாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனை தெரிவித்தார்.

‘உலகம் ஒரு பொதுவானதும் நிகரற்றதுமான அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் ஒரு சந்தர்ப்பத்தில், ‘எமக்குத் தேவைப்படும் ஐக்கிய நாடுகள் சபை’, என்ற சுலோகம் நாடுகளின் இறையாண்மை

சமத்துவத்திற்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கும் என்றும் ஆள்புல ஒருமைப்பாட்டினை மதித்து அவர்களின் உள்நாட்டு

விவகாரங்களில் தலையிடாதிருக்கும் என்றும் தான் நம்புவதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

ஒரு சிலரின் நலன்களுக்காக எந்த ஒரு நாட்டையும் பிணையாக வைத்திருக்காததன் மூலம் உறுப்பு நாடுகளுக்கும் ஐ.நா.வுக்கும்

இடையிலான கூட்டாண்மயை மிகச் சிறந்த முறையில் பேண முடியும் என்று தான் உறுதியாக நம்புவதாகவும் ஜனாதிபதி கூறினார்.

ஐ.நா. தனது 75 ஆவது ஆண்டு நிறைவை ஐ.நா. பொதுச் சபையின் ஒரு நாள் உயர்மட்டக் கூட்டத்துடன் 2020 ஆம் ஆண்டு செப்டெம்பர் 21 திங்கட்கிழமையன்று பன்முகத்தன்மைக்கான கூட்டு

உறுதிப்பாட்டை மீள் உறுதிப்படுத்தும் வகையில் ‘நாம் விரும்பும் எதிர்காலம்இ எமக்குத் தேவையான ஐக்கிய நாடுகள் சபை’ என்ற

கருப்பொருளின் கீழ் கொண்டாடுவதாக ஐ.நா. உறுப்பு நாடுகள் 2019 ஜூன் மாதம் இணக்கம் கண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பொதுச் சபையின் 75 வது அமர்வின் தலைவர் வோல்கன் போஸ்கிர் மற்றும் ஐ நா பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டேரஸ் ஆகியோர் இக்கூட்டத்தின் ஆரம்ப மற்றும் இரண்டாவது உரைகளை

நிகழ்த்தினர். 180 நாடுகளின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் வீடியோ தொழிநுட்பத்தின் ஊடாக மாநாட்டில் உரைகளை நிகழ்த்தினர்.

‘முன்னெப்போதுமில்லாத வகையில் கொவிட்-19 தொற்றுநோயால் உலகம் பாதிக்கப்பட்டுள்ளது, இது நமது பொருளாதாரங்கள்

, சுகாதார அமைப்புகள் மற்றும் உண்மையில் நமது சமூகங்களை ஒரு சில மாதங்களுக்குள் பெரிதும் பாதித்துள்ளது’ என்று ஜனாதிபதி குறிப்பிட்டார்.

ஒரு செயற்திறமான தலையீட்டின் மூலம் கொவிட்-19 இன் சவாலை இலங்கைக்கு வெற்றிகரமாக எதிர்கொள்ள முடிந்தது. இலங்கையில் முதல் நோயாளி கண்டறியப்படுவதற்கு முன்பே கொவிட்-19 ஐ

தடுப்பதற்கான தேசிய நடவடிக்கைக் குழுவை நாங்கள் அமைத்தோம். இராணுவம், சுகாதாரத் துறை மற்றும் தேசிய மற்றும்

பிராந்திய மட்டங்களில் உள்ள சிவில் அதிகாரிகளை அக்குழு உள்ளடக்கியிருந்தது.

இலங்கையில் கொவிட்-19 நோயில் இருந்து மீளும் வீதம் உலகளாவிய மீட்பு வீதத்தை விட 90மூ அதிகமாக உள்ளது. எமது மிகப் பெரிய பலமாக இருந்த ‘தடமறிதல் மற்றும்

தனிமைப்படுத்தலை’ நாம் சார்ந்திருந்தமை எமது வெற்றிக்கு பெரிதும் உதவியது என்று ஜனாதிபதி அவர்கள் வலியுறுத்தினார். கடந்த ஒரு மாத காலப்பகுதியில் நாட்டில் கொவிட்

நோய்த்தொற்றுக்கு ஆளான எந்வொருவரும் கண்டறியப்படவில்லை என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

ஐக்கிய நாடுகள் சபையின் அங்கத்தவர்கள் என்ற வகையில் இந்த மாபெரும் நிறுவனத்தை வலுப்படுத்தும் முயற்சிகள் நாங்கள்

விரும்பும் எதிர்காலத்தை உறுதி செய்வதற்கு உதவும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

ஐக்கிய நாடுகள் சபையின் 75 வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் அரச தலைவர்களின் உயர் மட்ட கூட்டத்தில் வீடியோ

தொழில்நுட்பத்தின் மூலம் பங்கேற்று இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஆற்றிய முழுமையான உரை.

பொதுச் சபையின் 75 வது கூட்டத்தொடரின் தலைவர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்டுள்ள திரு. வோல்கன் பொஸ்கர் அவர்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவிக்கின்றேன். இந்த வரலாற்று

சிறப்புமிக்க தருணத்தில் இலங்கை மக்களை பிரதிநிதித்துவம் செய்வதற்கு கிடைத்தமை எனக்கு கிடைத்த மாபெரும் கௌரவமாகும்.

துரதிஷ்டவசமாக இ 75 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த கெளரவமான சபையை ஆரம்பித்தவர்களின் எதிர்பார்ப்புகளுக்கு முற்றிலும் மாற்றமானதாகவே இன்றைய உலகம் காணப்படுகின்றது.

ஒரு சில மாதங்களுக்குள் எமது பொருளாதாரம், சுகாதார கட்டமைப்பு மற்றும் முழுமையாக எமது சமூக செயற்பாடுகளை

இடை நிறுத்திய, முன்னர் எப்போதும் இருக்காத கொவிட் – 19 நோய்த்தொற்றினால் முழு உலகும் பாதிக்கப்பட்டுள்ளது.

அறிவார்ந்த செயற்பாடுகளின் மூலம் கொவிட் – 19 சவாலுக்கு வெற்றிகரமாக இலங்கை முகங்கொடுத்தது. இலங்கையில் முதலாவது நோயாளியை இனங்காண்பதற்கு முன்னராகவே நாம்

கொவிட் – 19 தேசிய நிவாரண செயற்பாட்டுக் குழுவை ஸ்தாபித்தோம். பாதுகாப்பு தரப்பினர், சுகாதார, தேசிய மற்றும்

பிரதேச மட்டத்தில் சிவில் அதிகாரிகள் அனைவரையும் உள்ளடக்கிய வகையிலேயே எமது முன்னெடுப்புகள் அமைந்திருந்தன.

இலங்கையில் கொவிட் – 19 நோயாளிகள் சுகம் அடையும் வீதம் நூற்றுக்கு 90 ஐ விடவும் அதிகமாக உள்ளதுடன் அது உலகின் சுகம் அடையும் வீதத்தின் உயர் நிலையாகும். எமது பலமான சக்தியாக

அமைந்த ‘தடமறிதல் மற்றும் தனிமைப்படுத்தல்’ என்பதே எமது வெற்றிக்கான காரணங்களாகும். கடந்த ஒரு மாத காலத்தில்

எந்தவொரு கொரோனா தொற்றுக்குள்ளானவரும் நாட்டினுள் இனங்காணப்படவில்லை.

கௌரவ அரச தலைவர்களே,

பேண்தகு அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலை 2030 இல் அடைந்துகொள்வதற்கு இலங்கை அர்ப்பணிப்புடன்

செயற்படுகின்றது. விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட உற்பத்தி பொருளாதாரத்தின் மூலம் வறுமையை ஒழிப்பது எனது அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாகும்.

நாம் வருடத்தின் ஆரம்பத்தில் உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்துவதற்காக எடுத்த பல்வேறு நடவடிக்கைகளான இறக்குமதியை கட்டுப்படுத்தல் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர

தொழிற்முயற்சியாளர்களுக்கு சலுகைகளை வழங்குவதன் மூலம் எதிர்பார்த்த பிரதிபலன்களை அடைந்துகொள்ள முடிந்துள்ளது.

இலங்கை ஐக்கிய நாடுகள் சபையில் அங்கத்துவம் பெற்று 65 ஆண்டுகளை கொண்டாடுகின்ற இச்சந்தர்ப்பத்தில், நாம் ஐக்கிய நாடுகள் நிகழ்ச்சி நிரலுக்கு பங்களிக்க கிடைத்தமையை ஒரு

பாக்கியமாக கருதுகின்றோம். இலங்கை ஐக்கிய நாடுகள் சபையின் அமைதிப்படையினருடன் இணைந்து செயற்பட்டதோடு சபையின் பலவேறு விசேட நிறுவன திட்டங்களுக்கும் பங்களித்துள்ளது.

‘உலகம் ஒரு பொதுவானதும் நிகரற்றதுமான அச்சுறுத்தலை எதிர்கொள்ளும் ஒரு சந்தர்ப்பத்தில்இ ‘எமக்குத் தேவைப்படும் ஐக்கிய நாடுகள் சபை’, என்ற சுலோகம் நாடுகளின் இறையாண்மை

சமத்துவத்திற்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கும் என்றும் ஆள்புல ஒருமைப்பாட்டினை மதித்து அவர்களின் உள்நாட்டு

விவகாரங்களில் தலையிடாதிருப்பதற்கும் உரிய கவனம் செலுத்தும் என்று நான் நம்புகின்றேன்.

கௌரவ அதிதிகளே, ஒரு சிலரின் தேவைக்கு எந்தவொரு நாட்டையும் பணயக் கைதியாக்காமல் இருப்பதன் மூலமே அங்கத்துவ நாடுகள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கு

இடையிலான பங்களிப்புக்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் மேலாண்மையையும் நிலைத்தன்மையையும் இயன்றளவு

அடைந்துகொள்ள முடியுமாக இருக்கும் என்பது எனது உறுதியான நம்பிக்கையாகும்.

ஐக்கிய நாடுகள் சபையின் அங்கத்துவ நாடான இலங்கை எமக்கு அவசியமான எதிர்காலத்தை உறுதி செய்வதற்காக இந்த

சிறப்புமிக்க அமைப்பை பலப்படுத்துவதற்கு எடுக்கப்படும் முயற்சிகள் வெற்றியளிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கின்றது.

எமது மக்களுக்கும், எதிர்கால சந்ததியினருக்கும் அதன் பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்கு நாம் கடமைப்பட்டுள்ளோம்.

Author: நலன் விரும்பி

Leave a Reply