இலங்கையில் கொரனோ தொற்று புதிதாக 12 பேர் அடையாளம்

Spread the love

இலங்கையில் கொரனோ தொற்று புதிதாக 12 பேர் அடையாளம்

இலங்கையில் இன்று காலை வரையில் கொவிட் – 19 தொற்று நோயாளர்கள் 12 பேர் புதிதாக அடையாளங்காணப்பட்டுள்ளனர்.

இவர்கள் வெளிநாடுகளில் இருந்து இலங்கை வந்தவர்கள் என்று கொவிட் தொற்று தடுப்பு செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

துபாயில் இருந்து 290 பேர் இன்று காலை நாட்டுக்கு வருகை தந்தனர். இந்தியாவில் இருந்து மேலும் சிலர் இன்று நண்பகல்

இலங்கை வரவிருந்தனர். இவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தலுக்காக இராணுவ மத்திய நிலையங்களுக்கு அனுப்பப்படுவர்.

இந்த மத்திய நிலையங்களில் இருந்த 18 பேர் தனிமைப்படுத்தலை பூரத்தி செய்து இன்று வீடுகளுக்கு செல்லவிருந்தனர்.

இராணுவத்தினால் நிர்வகிக்கப்படும் 66 தனிமைப்படுத்தும் மத்திய நிலையங்களில் 6626 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இன்று காலை 6.00 மணியளவில் 12 பேர் முழுமையாக குணமடைந்து

வைத்தியசாலைகளில் இருந்து வீடுதிரும்பியுள்ளனர். கந்தக்காடு சிகிச்சை

மற்றும் புனர்வாழ்வு மத்திய நிலையத்தில் உள்ளவர்களின் எண்ணிக்கை 3 இனால் குறைவடைந்துள்ளது.

Covid -19 பரம்பலின் புதுப்பிக்கப்பட்ட தரவுகள் 2020-09-22 14:09:19

உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகள் – 3299

சிகிச்சை பெறும் நோயாளிகள் – 168

குணமடைந்த நோயாளிகளின் எண்ணிக்கை – 3118

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *