Author: நலன் விரும்பி
பயணக் கட்டுப்பாடு மேலதிக நடவடிக்கை
பயணக் கட்டுப்பாடு மேலதிக நடவடிக்கை
பயணக் கட்டுப்பாடு தொடர்பிலான மேலதிக நடவக்கை குறித்து ஜனாதிபதி செயலணிக்குழுவினால்
நாளை தீர்மானிக்கப்படும் என்று மருந்து தயாரிப்பு இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.
பயணக் கட்டுப்பாட்டை மேலும் அமுல்படுத்துவது குறித்து இதுவரை எந்த தீர்மானமும் மேற்கொள்ளப்படவில்லை
பயணக் கட்டுப்பாடுகளை விதிக்கலாமா வேண்டாமா என்பது குறித்து நாளை விசேட பேச்சுவார்த்தை நடத்தப்படவிருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
வில்லியாக மாறும் சிம்ரன்.
வில்லியாக மாறும் சிம்ரன்.
விஷாலின் இரும்புத்திரை, சிவகார்த்திகேயனின் ஹீரோ போன்ற படங்களை இயக்கியவர்
பி.எஸ்.மித்ரன். இவர் அடுத்ததாக கார்த்தியை வைத்து சர்தார் என்னும் படத்தை இயக்க இருப்பதாக அறிவிப்புகள் வெளியானது.
இதில் கார்த்திக்கு ஜோடியாக ராசி கண்ணா மற்றும் ரஜிஷா விஜயன் ஆகியோர் நடிக்க
ருக்கிறார்கள். இந்நிலையில் நடிகை சிம்ரன் இப்படத்தில் வில்லியாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
நயன்தாராவுக்கு வில்லனாகும் பிரபல நடிகர்
நயன்தாராவுக்கு வில்லனாகும் பிரபல நடிகர்
பல வெற்றிப் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாராவின் அடுத்த படம் பற்றிய தகவல்கள் வெளியாகி உள்ளது.
நயன்தாராவுக்கு வில்லனாகும் பிரபல நடிகர்
நயன்தாரா
முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, தற்போது ரஜினியுடன் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை அடுத்து பேஷன் ஸ்டுடியோ தயாரிக்கும் இரண்டு படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் அறிமுக இயக்குநர் ஒருவர் இதில் ஒரு படத்தை இயக்குவதாகவும் அதில் நயன்தாராவுக்கு வில்லனாக கன்னட நடிகர் ‘நான் ஈ’ சுதீப் நடிக்கவிருப்பதாகவும் தகவல்கள்
வெளியாகியிருக்கின்றன. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
விளம்பரங்களில் நடிக்க ரூ.150 கோடி சம்பளத்துடன் வந்த டீல்…. நோ சொல்லி திருப்பி அனுப்பிய பிரபாஸ்
விளம்பரங்களில் நடிக்க ரூ.150 கோடி சம்பளத்துடன் வந்த டீல்…. நோ சொல்லி திருப்பி அனுப்பிய பிரபாஸ்
பாகுபலி படத்தில் நடித்ததன் மூலம் முன்னணி கதாநாயகனாக உயர்ந்தவர் பிரபாஸ். இவருக்கு பட வாய்ப்பு குவிந்து வருகிறது. தற்போது ராதே ஷ்யாம், சலார், ராமாயண கதையை மையமாக வைத்து தயாராகும் ஆதிபுருஷ் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.
பாகுபலி படத்துக்கு பிறகு நடிகர் பிரபாஸ் இந்திய அளவில் பிரபலமான நடிகர் ஆகிவிட்டதால் அவரின் மார்க்கெட்
பன்மடங்கு உயர்ந்துவிட்டது. இதைக் கருத்தில் கொண்டு பல்வேறு நிறுவனங்கள் நடிகர் பிரபாஸை தங்கள் விளம்பரங்களில் நடிக்க வைக்க முயற்சித்துள்ளன.
பிரபாஸ்
கடந்த ஓராண்டில் நடிகர் பிரபாஸுக்கு காலணிகள், மின்னணு பொருட்கள், சோப்பு என ஏராளமான விளம்பரங்களில் நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளது.
இவற்றில் நடித்திருந்தால் அவருக்கு ரூ.150 கோடி வரை சம்பளம் கிடைத்திருக்குமாம். ஆனால் அவர் அவற்றில் நடிக்க மறுத்துவிட்டாராம்.
தனக்கு அதிக ரசிகர்கள் சேர்ந்துள்ளதால் குறிப்பிட்ட விளம்பரங்களில் தான் நடிக்க வேண்டும் என அவர் கவனமாக இருப்பதாக கூறப்படுகிறது
பயணக் கட்டுப்பாடுகள்- 20,000 பொலிசார் கடமையில்
பயணக் கட்டுப்பாடுகள்- 20,000 பொலிசார் கடமையில்
பயணக் கட்டுப்பாடுகள் மீண்டும் நடைமுறைக்கு வருவதால் பொசன் போயா தினத்தில் 20,000 பொலிசார் கடமையில் ஈடுபடவுள்ளனர்
வீடுகளில் தங்கி இருந்து மத வழிபாடுகளை அனுஷ்டிக்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பதில் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபருமான அஜித் ரோஹண பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.
வாடிக்கையாளர் இடங்கள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் பொதுப் போக்குவரத்து சேவைகள் போன்ற பொது இடங்களில், மக்கள் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுவதில்லை என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறுகின்றவர்கள் தொடர்பான தகவல்களைப் பெறுவதற்காக சிவில் உடையில் பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
துமிந்த சில்வா கோட்டா மன்னிப்பின் கீழ் விடுதலை
துமிந்த சில்வாகோட்டா மன்னிப்பின் கீழ் விடுதலை
இலங்கையில் முன்னாள் அமைச்சர் துமிந்த சில்வா சிறையில் அடைக்க பட்டார் ,இவர் ஆளும்
ஜனாதிபதி கோத்தபாயாவின் மன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய பட்டுள்ளார்
இவருக்கு நீதிமன்றம் மரண தண்டனை வழங்கி தீர்ப்பளித்திருந்தமை குறிப்பிட தக்கது
தீயில் எரிந்த கடைகள் – நடந்தது என்ன ..?
தீயில் எரிந்த கடைகள் – நடந்தது என்ன ..?
இலங்கையில் போதி ராஜா மாவத்தை பகுதியில் இரு பல்பொருள் அங்காடிகள் தீயில் எரிந்து அழிந்துள்ளன
இந்த தீ விபத்துக்கான காரணம் தெரியவாவில்லை
விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது
யாழில் இரு கிராமங்கள் தனிமை படுத்தல்
யாழில் இரு கிராமங்கள் தனிமை படுத்தல்
இலக்கை யாழ்பாணத்தில் குருநகர் உள்ளிட்ட இரு கிராமங்கள் தனிமை படுத்த பட்டுள்ளது
இந்த பகுதியில் நோயின் தாக்குதல் அதிகம் காணப்படுவதால் இந்த முடக்க நிலை ஏற்படுத்த
பட்டுள்ளதாக இராணுவம் தெரிவித்துள்ளது
11 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் முடக்கம் – மக்கள் அவதி
திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் 11 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள்
புதிதாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு
மத்திய நிலையத்தில் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
சிறை கைதிகள் 19 பேர் கொரானாவுக்கு பலி
சிறை கைதிகள் 19 பேர் கொரானாவுக்கு பலி
இலங்கை சிறைகளில் தடுத்து வைக்க பட்டிருந்த கைதிகளில் பத்தொன்பது பேர் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி பலியாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
குறித்த நோயானது பரவி வரும் நிலையில் ,கைதிகள் பலரை அரசுகள் மன்னித்து விடுதலை
செய்து இருந்தது ,ஆனால் இலங்கையில் ஆளும் கோட்டா அதனை சையது கொள்ளவில்லை என்பது இங்கே குறிப்பிட தக்கது
இலங்கையில் கரை ஒதுங்கிய மர்ம உயிரினம்
இலங்கையில் கரை ஒதுங்கிய மர்ம உயிரினம்
இலங்கை மொரட்டுவ பகுதியில் கடல் கரையில் மர்ம உயிரினம் ஒன்று கரை ஒதுங்கியுள்ளது
டொல்பின் வகையை சேர்ந்த உயிரினமாக உள்ள பொழுதும் ,இது எவ்வகையான உயிரினம் என்பது தொடர்பில் தெரியவரவில்லை
கடல் சார் ஆய்வாளர்கள் இதனை ஆய்வு செய்து வருகின்றனர்
புலிகள் என சிறைபிடிக்க பட்ட 17 பேரை மன்னித்து கோட்டா – விடுதலை
புலிகள் என சிறைபிடிக்க பட்ட 17 பேரை மன்னித்து கோட்டா – விடுதலை
இலங்கையில் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்ய பட்டு புலிகள் என குற்ற சுமத்த
பட்டு தடுத்து வைக்க பட்டுள்ள அப்பவி மக்களில் 17 பேரை ஆளும் ஜனாதிபதி கோட்டபாய விடுதலை செய்துள்ளார்
ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் இந்த விடுதலை இடம்பெற்றுள்ளது
11 கிராமங்கள் தனிமைப்படுத்தல் – மக்கள் அவதி
11 கிராமங்கள் தனிமைப்படுத்தல் – மக்கள் அவதி
இன்று (23) காலை 6 மணி முதல் 2 மாவட்டங்களில் உள்ள 11 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக, கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களை சேர்ந்த 11 கிராம சேவகர் பிரிவுகளே இவ்வாறு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் திருகோணமலை மாவட்டத்தின் திருகோணமலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாகராஜ வலவ்வ கிராம சேவகர் பிரிவு தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தின் வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிறைந்துறைச்சேனை கிராம சேவகர் பிரிவின் முதலாம் மற்றும் இரண்டாம் குறுக்கு வீதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி பிரிவு 4, காத்தான்குடி பிரிவு 5 தெற்கு, காத்தான்குடி பிரிவு 6 மேற்கு, புதிய காத்தான்குடி பிரிவு வடக்கு, தெற்கு மற்றும் கிழக்கு ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
தெல்லிப்பழை வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சை பிரிவு
தெல்லிப்பழை வைத்தியசாலையின் அதி தீவிர சிகிச்சை பிரிவு
தெல்லிப்பழை வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவு அமைப்பதற்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான மீளாய்வு வடமாகாண ஆளுநர் திருமதி பீ. எஸ்.எம் சார்ள்ஸ் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நேற்று (22.6.2021) மதியம் 1.00 மணிக்கு இடம்பெற்றது.
இதன் போது கருத்து தெரிவித்த ஆளுநர், தெல்லிப்பழை ஆதார வைத்திய சாலையின் அதி தீவிர சிகிச்சைப்பிரிவு மற்றும் வைத்தியர்களுக்கான தங்குமிட விடுதியினை நிர்மாணிப்பதற்காக வருடாந்த திட்டத்தில் திறைசேரியினால் அனுமதிக்கப்பட்ட 60 மில்லியன் ஒதுக்கீட்டிற்கு
மேலதிகமாக, 180 மில்லியன் தொகைக்கான திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், அது தொடர்பில் அதிருப்தி வெளியிட்டதுடன் ஏற்கனவே தனக்கு விசேடமாக கிடைக்கப்பெற்ற வேண்டுகோளின்
அடிப்படையில் தான் குறிப்பிட்ட தெல்லிப்பழை வைத்தியசாலையின் அபிவிருத்தி செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட்டதாகவும் அதனை சில தரப்பினர் தவறாக புரிந்துகொண்டு ஊடகங்களில்
விமர்சனங்களை வெளியிட்டு மக்கள் மத்தியில் பிழையான கருத்தை பரப்புவதாகவும் கவலை வெளியிட்டார்.
மேலும் செப்ரெம்பர் மாத முடிவுக்கு முன்னர் தேவையான அனைத்து ஒதுக்கீடுகளையும் பெற்று செயற்பாடுகளையும் மேற்கொள்ளுமாறும் 2022 ஆம் ஆண்டிற்கான திட்டத்தினை ஒக்டோபர்
மாதத்திற்கு முன்னர் சமர்ப்பிக்குமாறும் ஆளுநரால் அறிவுறுத்தப்பட்டதுடன் ஆரம்பிக்கும் அபிவிருத்தி திட்டங்களை 2 வருடங்களுக்குள் முடித்து அதனை பயன்பாட்டிற்குரியவாறு செயற்படுத்தவும் அறிவுறுத்தினார்.
மேலும் ஜனாதிபதியுடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் பலனாக தேவையான மேலதிக நிதி ஒதுக்கீடு கிடைக்கும் எனவும்; வடமாகாணத்தில் கல்வி மற்றும் சுகாதார துறைகளுக்கு அதிக
முக்கியத்துவம் வழங்கி அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக அதிக ஓதுக்கீடுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இன்றிரவு பத்து மணி முதல் மீண்டும் பயணக்கட்டுப்பாடு
இன்றிரவு பத்து மணி முதல் மீண்டும் பயணக்கட்டுப்பாடு
கடந்த மூன்று தினங்கள் விலகிக் கொள்ளப்பட்ட பயணக்கட்டுப்பாடு மீண்டும் இன்றிரவு பத்து மணியில் இருந்து எதிர்வரும் வெள்ளிக்கிழமை அதிகாலை 4 மணி வரை அமுவ்படுத்தப்படவுள்ளது.
கொவிட்-19 வைரஸ் தொற்று பரவலைத் தடுக்கும் வகையில் கடந்த மே மாதம் 21 ஆம்திகதி தொடக்கம் அரசாங்கத்தினால் அமுல்படுத்தப்பட்ட இந்த பயணக்கட்டுப்பாடு நேற்று முன்தினம் அதிகாரை 4.00 மணிக்கு தளர்த்தப்பட்டது..
இதேவேளை ,தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை மீறி செயற்பட்டதாக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ,பதில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இவர்கள் தொடர்பிலான குற்றம் உறுதி செய்யப்படும் நபர்களுக்கு 10,000 ரூபா அபராதம் அல்லது 6 மாத சிறைத் தண்டனை அல்லது இந்த இரு தண்டனைகளும் வழங்கப்படும்.
தனிமைப்படுத்தல் சட்டவிதிகளை மீறி செயல்பட்டதான குற்றச்சாட்டில் நேற்று (22) காலை ஆறு மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலயத்துக்குள் 396 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த வருடம் அக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையில் இதுதொடர்பில் 41, 914 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சந்தேக நபர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் மற்றும்
நோய்த் தடுப்புச் சட்டத்தின் 4, 5 ஆம் இலக்க சட்டவிதிகளுக்கு கீழும்,தண்டனைச் சட்டக்கோவையின் 264 ஆம் இலக்க சட்டவிதிகளுக்கு கீழும் சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
குற்றம் உறுதிச் செய்யப்படும் பட்சத்தில் நபர்களுக்கு 10,000 ரூபா அபராதம் மற்றும் ஆறு மாதகால
சிறைத்தண்டனை வழங்கப்படும் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பதில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண மேலும் தெரிவித்தார்.
கடலுணவுகளை அச்சமின்றி உட்கொள்ள முடியும் – டக்ளஸ்
கடலுணவுகளை அச்சமின்றி உட்கொள்ள முடியும் – டக்ளஸ்
கடல் உணவுகளை உட்கொள்வதில் எவ்வித ஆபத்தும் இல்லை என்று கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மக்கள் மத்தியில் பொய்யான பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அமர்வின்போது எதிர்க்கட்சி உறுப்பினர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன் எக்ஸ்-பிரஸ் பேர்ள் கப்பலில் தீ பரவியதால் ஏற்பட்ட பாதிப்புகளின் அடிப்படையில் முதற்கட்டமாக அதன் உரிமையாளர்களிடம் நஷ்ட ஈட்டை கோரியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறித்த நிதி அடுத்த இரு வாரங்களுக்குள் கிடைத்ததும் பாதிக்கப்பட்ட தொழிலார்களுக்கு நஷ்ட ஈடாக வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
இலங்கையில் லஞ்ச்ஷீட்ட்டுக்கு வருகிறது தடை
இலங்கையில் லஞ்ச்ஷீட்ட்டுக்கு வருகிறது தடை
நாட்டில் பாரியளவில் சுற்றாடல் பாதிப்புக்கு காரணமாக இருக்கும் அனைத்து வகையான லஞ்ச் ஷீட் பாவனையையும் தடை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அமைச்சர் மஹிந்த அமரவீர நேற்று (21) சுற்றாடல் அமைச்சில் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கினார்.
2016 ஆம் ஆண்டில் அப்போதைய சுற்றாடல் அமைச்சராக இருந்த முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன லஞ்ச் ஷீட் பாவனையை தடை செய்ய நடவடிக்கை எடுத்திருந்தார், ஆனால் சில நிறுவனங்கள் விரைவில் உக்கும் லஞ்ச் ஷீட்களை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகக் கூறியிருந்தனர், ஆனால் அந்த தீர்மானம் முறையாக செயல்படுத்தப்படவில்லை என்றும் அமைச்சர் கூறினார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், தற்போது உலகில் எந்தவொரு நாடும் லஞ்ச் ஷீட்களைப் பயன்படுத்துவதில்லை. லஞ்ச் ஷீட்களைப் பயன்படுத்தும் ஒரே நாடு இலங்கை மட்டும் தான்.
மேலும், தற்போதைய தகவல்களின்படி, நான்கு பெரிய நிறுவனங்களினால் மாதமொன்றிற்கு 07-08 தொன் லஞ்ச் ஷீட்களை உற்பத்தி செய்கின்றனர். இதற்கமைவாக இலங்கையில் வருடாந்தம் கிட்டத்தட்ட 106 டொன் லஞ்ச் ஷீட்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இதற்கமைய, எமது நாட்டில் நாளொன்றிற்கு சூழலில் வெளியேற்றப்படும் லஞ்ச் ஷீட்களின் அளவு குறைந்தது 10 மில்லியனுக்கும் அதிகமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த லஞ்ச் ஷீட்கள் மண்ணில் சிதைந்து உக்கிப்போவதற்கு இரண்டு மூன்று ஆண்டுகள் செல்லும். இருப்பினும், லஞ்ச் ஷீட்கள் காரணமாக மண்ணில் சேரும் மைக்ரோபிளாஸ்டிக் துகள்கள் 200 ஆண்டுகளுக்கும் மேலாக நீடிக்கும் என்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், லஞ்ச் ஷீட் பயன்பாட்டிற்கு பதிலாக மாற்று வழிகளை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு குறித்த நிறுவனங்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டிருந்தாலும் அவர்கள் அது தொடர்பாக இந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மேலும், சில நிறுவனங்கள் லஞ்ச் ஷீட் உற்பத்தி இயந்திரங்களை வீட்டுத் தொழிலாக ஊக்குவித்து வருவதால், இந்த நாட்டில் தயாரிக்கப்படும் லஞ்ச் ஷீட்கள் குறித்த துல்லியமான தகவல்களைப் பெறுவது கடினமாகவுள்ளது.
இதற்கு முன்னர் சுற்றாடல் அமைச்சு லஞ்ச் ஷீட்களைத் தடை செய்ய நடவடிக்கை எடுத்துள்ளதால், புதிய வர்த்தமானி அறிவிப்பை வெளியிடாமல் உத்தரவு பிறப்பிக்க முடியும் என்றும் கூறிய அமைச்சர், லஞ்ச் ஷீட்களைப் பயன்படுத்துவதைத் தடை செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சின் சம்பந்தப்பட்ட பிரிவுகளையும் மேலும் அறிவுறுத்தினார்.
இந்த கலந்துரையாடலில் சுற்றாடல் அமைச்சின் செயலாளர் விசேட வைத்தியர் அனில் ஜசிங்க மற்றும் மத்திய சுற்றாடல் அதிகாரசபை உள்ளிட்ட நிறுவனங்களின் அதிகாரிகளும் பங்கேற்றனர்.
சட்டத்தை மீறிய 433 பேர் கைது
சட்டத்தை மீறிய 433 பேர் கைது
கடந்த 24 மணித்தியாலத்தில் மாத்திரம் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 433 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சரியான முறையில் முகக்கவசம் அணியாமை, மாகாண எல்லைகளை கடந்தமை தொடர்பான
குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
மாளவிகா மோகனனை மால்மோ என அழைக்கும் பிரபல நடிகர்
மாளவிகா மோகனனை மால்மோ என அழைக்கும் பிரபல நடிகர்
மாஸ்டர் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்த மாளவிகா, தன்னை பிரபல நடிகர் ஒருவர் செல்ல பெயர் வைத்து அழைத்து வருவதாக கூறி இருக்கிறார்.
மாளவிகா மோகனனை மால்மோ என்று செல்லமாக அழைக்கும் பிரபல நடிகர்
மாளவிகா மோகனன்
விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்தில் கதாநாயகியாக நடித்தவர் மாளவிகா மோகனன். இவர் நேற்று சமூக வலைத்தளத்தில் ரசிகர்களின் பல கேள்விகளுக்கு பதில் அளித்தார்.
அப்போது, நடிகர் தனுஷ் தன்னை ’மால்மோ’ என்று தான் அழைப்பார் என்று அவர் ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்தார். மேலும் தனுஷ் தன்னை ’மால்மோ’ என்று அழைத்தாலும் தனக்கு மிகவும் நெருக்கமானவர்கள் மற்றும் நண்பர்கள் தன்னை ’மாலு’ என்றே அழைப்பார்கள் என்றும் கூறினார்.
தனுஷ்
தனுஷ் – மாளவிகா மோகனன்
மாளவிகா மோகனன் தற்போது தனுஷுடன் ’D43’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். கார்த்திக் நரேன் இயக்கி வரும் இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு மட்டும் முடிவடைந்துள்ளது.
சினிமா தடுப்பூசி போட்டுக் கொண்ட சூர்யா – ஜோதிகா
சினிமா தடுப்பூசி போட்டுக் கொண்ட சூர்யா – ஜோதிகா
சினிமா பிரபலங்கள் பலரும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட சூர்யா – ஜோதிகா
சூர்யா ஜோதிகா
இந்தியாவில் கடந்த 2 மாதங்களாக வேகமாக பரவி வந்த கொரோனா தொற்றின் 2வது அலை, தற்போது படிப்படியாக குறையத்
தொடங்கி உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும், தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் முதல் நடைபெற்று வருகிறது.
அரசியல் பிரபலங்களும், சினிமா நட்சத்திரங்களும் தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
சூர்யா ஜோதிகா
அந்த வகையில், தற்போது நடிகர் சூர்யா மற்றும் அவரது மனைவி ஜோதிகா இருவரும் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். அப்போது எடுத்த புகைப்படத்தை நடிகர் சூர்யா தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.












