Author: நலன் விரும்பி
கிரிக்கெட் வீரரை மணக்கும் இயக்குனர் ஷங்கர் மகள்
கிரிக்கெட் வீரரை மணக்கும் இயக்குனர் ஷங்கர் மகள்
இயக்குனர் ஷங்கரின் மகளுக்கும், இளம் கிரிக்கெட் வீரர் ஒருவருக்கும் வருகிற ஜூன் 27-ந் தேதி திருமணம் நடைபெற உள்ளதாம்.
கிரிக்கெட் வீரரை மணக்கும் இயக்குனர் ஷங்கர் மகள்
மகள் ஐஸ்வர்யா, மனைவி ஈஸ்வரியுடன் இயக்குனர் ஷங்கர்
ஷங்கர் இயக்கத்தில் வெளியான அனைத்துப் படங்களுக்குமே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. மேலும் பாக்ஸ் ஆபிஸிலும் இடம் பிடித்துள்ளது. இதனால், இந்தியத் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வருகிறார் ஷங்கர்.
இவருக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இதில் ஷங்கரின் மூத்த மகளான ஐஸ்வர்யாவுக்கு தற்போது திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி கிரிக்கெட் அணியின்
கேப்டனான ரோகித்தை தான் ஐஸ்வர்யா மணக்க இருக்கிறாராம். 29 வயதாகும் ரோகித், டி.என்.பி.எல். கிரிக்கெட் தொடரில் விளையாடும் மதுரை பாந்தர்ஸ் அணி உரிமையாளரின் மகன் ஆவார்.
கடந்த பிப்ரவரி மாதம் நடந்த விஜய் ஹசாரே தொடரில் புதுச்சேரி அணி கேப்டனாக பொறுப்பேற்ற ரோகித், அந்த தொடரில் அதிகபட்சமாக மும்பைக்கு எதிரான போட்டியில் 63 ரன்கள் அடித்திருந்தார்.
ஐஸ்வர்யா – ரோகித் திருமணம் வருகிற ஜூன் 27-ம் தேதி நடைபெற உள்ளதாம். கொரோனா
ஊரடங்கு அமலில் இருப்பதால் திருமணத்தை எளிமையாக நடத்திவிட்டு, ஊரடங்கு முடிவுக்கு வந்தபின் வரவேற்பு நிகழ்ச்சியை பிரம்மாண்டமாக நடத்த திட்டமிட்டுள்ளார்களாம்.
6 மொழிகளில் ரசிகர்களுக்கு நன்றி சொன்ன ரம்பா
6 மொழிகளில் ரசிகர்களுக்கு நன்றி சொன்ன ரம்பா
தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்த ரம்பா, ரசிகர்களுக்கு ஆறு மொழியில் நன்றி தெரிவித்து வீடியோ வெளியிட்டுள்ளார்.
6 மொழிகளில் ரசிகர்களுக்கு நன்றி சொன்ன ரம்பா
ரம்பா
தமிழ் சினிமாவில் ’உள்ளத்தை அள்ளித்தா’ என்ற திரைப்படம் மூலம் மிகவும் பிரபலமானவர் ரம்பா. இவர் ரஜினிகாந்த், விஜய், அஜித், சரத்குமார் உள்பட பல பிரபல நடிகர்களுடன் நடித்தார்.
முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் கனடாவை சேர்ந்த தொழிலதிபர் இந்திரன் பத்மநாபனை திருமணம் செய்து கொண்டு செட்டிலானார்.
இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் ரம்பாவுக்கு தற்போது 2 மில்லியன் பாலோயர்கள் கிடைத்துள்ளனர். இதனை அடுத்து அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டு தனது நன்றியை தெரிவித்துள்ளார்.
அந்த வீடியோவில் அவர் தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம், கன்னடம், மலையாளம் என ஆறு மொழிகளில் நன்றி கூறியிருக்கிறார்.
மாம்பழ விற்பனையில் இறங்கிய பிரபல நடிகர்
மாம்பழ விற்பனையில் இறங்கிய பிரபல நடிகர்
பிரபல நடிகர் ஒருவர் தன்னுடைய தோட்டத்தில் விவசாயம் செய்து அதில் கிடைத்த மாம்பழங்களை விற்பனை செய்து இருக்கிறார்.
மாம்பழ விற்பனையில் இறங்கிய பிரபல நடிகர்
மாம்பழம் விற்கும் நடிகர் நரேஷ்
தெலுங்குத் திரையுலகின் பிரபல நடிகர் கிருஷ்ணாவின் மூத்த மகன் நரேஷ். தெலுங்கில் 200க்கும் மேற்பட்ட படங்களிலும் தமிழில் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். தெலுங்கில் பல நடிகர்கள்
வைத்துள்ளதைப் போன்று இவரும் விவசாயப் பண்ணை வைத்துள்ளார். கடந்த வருட லாக்டவுனின் போதே விவசாயம் செய்வதில் இறங்கினார். இந்த லாக்டவுனில் மாம்பழம், நாவல்பழம் விற்பதிலும் இறங்கியுள்ளார்.
நரேஷ்
நடிகர் நரேஷ்
இது குறித்து தனது சமூக வலைத்தள பதிவில், “நரேஷ் என்கிற விவசாயி அவரது கையால் பறிக்கப்பட்ட மாம்பழம், நாவல் பழங்கள் ஆகியவற்றை, கிலோ 50 ரூபாய்க்கு விற்றார். அதன்
மூலம் 3600 ரூபாய் சம்பாதித்தார். ஒரு நடிகராக அதிகபட்ச சம்பளம் வாங்கியதை விட இது மகிழ்ச்சியானது. விவசாயம் செய்து உண்மையான மகிழ்ச்சியை உணருங்கள்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
தந்தையை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த மகன்
தந்தையை இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்த மகன்
இலங்கை பேருவளை பகுதியில் அறுபது வயதுடைய தந்தையை இரும்பு கம்பியால் அடித்து இருபத்தி ஒன்பது வயதுடைய மகன் படுகொலை செய்துள்ளார்
இருவருக்கும் இடையில் ஏற்பட்ட காரசாரமான கருத்து முரண்பாட்டை அடுத்து இந்த கொலை இடம்பெற்றுள்ளது
கொலை குற்ற சாட்டில் மகன் கைது செய்ய பட்டுளளார்
இலங்கை கடலில் எரியும் மூன்றாவது கப்பல்
இலங்கை கடலில் எரியும் மூன்றாவது கப்பல்
இலங்கை இராவணன் கலங்கரை விளக்கத்தில் இருந்து கிழக்கு பகுதி நோக்கி பயணித்து கொண்டிருந்த
கப்பல் ஒன்றின் இயந்திர அறையில் திடீரென தீ பிடித்து கொண்டது ,இந்த தீ பரவலினால் அந்த கப்பல் தொடர்ந்து எரிந்த வண்ணம் உள்ளது
இலங்கை கடற்பரப்பில் மூன்றாவது கப்பல் இவ்வாறு பற்றி எரிந்த வண்ணம் உள்ளது ,இது
சதிகளின் நவடிக்கையாக இருக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது
கவிழ்ந்த இராணுவ வண்டி -இருவர் மரணம்
கவிழ்ந்த இராணுவ வண்டி -இருவர் மரணம்
மட்டக்களப்பு செங்கலடி பகுதியில் பயணித்து கொண்டிருந்த இராணுவத்தினரின் வண்டி ஒன்று கவிழ்ந்ததில் அதில் பயணித்த இருவர் பலியாகினர்
இராணுவத்தினரின் வண்டிகள் இவ்விதம் தொடராக விபத்துக்களில் சிக்கிய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது
பரவும் நோய் -4 கிராமங்கள் தனிமை படுத்தல்
பரவும் நோய் -4 கிராமங்கள் தனிமை படுத்தல்
கேகாலை மாவட்ட பிரிவில் உள்ள நன்கு கிராமங்கள் தபோது தனிமை படுத்த பட்டுள்ளன
,வேகமாக பரவி வரும் கொரனோ நோயினை அடுத்து இந்த தனிமை படுத்தல் இடம்பெற்றுள்ளது
நடந்து சென்ற நபர் வீதியில் வீழ்ந்து மரணம்
நடந்து சென்ற நபர் வீதியில் வீழ்ந்து மரணம்
இலங்கை அம்பலந்தொட திலகபுர ஜலடெங்கிய பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த நபர் ஒருவர் திடீரென வீதியில் வீழ்ந்து மரணித்துள்ளார்
இவருக்கு கொரானா நோயானது ஏற்பட்டுள்ளதும் எனவும் அதானல் இந்த மரணம் சம்பவித்துள்ளதாக தெரிவிக்க படுகிறது
மேற்படி சம்பவம் மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது
323 பேர் கைது – பாயும் பறக்கும் படை சோதனை
323 பேர் கைது – பாயும் பறக்கும் படை சோதனை
இலங்கையில் நிகழ்கால கொரனோ விதிகளை மீறி வீதிகளில் உலாவிய குற்ற சாட்டில் 323 பேர் கைது செய்ய பட்டுள்ளனர்
இவ்வாறு கைதானவர்கள் முகமூடி மற்றும் மாகாண எல்லைகளை தாண்டினர் என்ற குற்ற சாட்டில் கைது செய்ய பட்டுள்ளனர்
விஜய்யை புகழ்ந்த ஷாருக்கான்
விஜய்யை புகழ்ந்த ஷாருக்கான்
கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டிருக்கும் பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான், விஜய்யை பற்றி தனது சமூக வலைத்தள பக்கத்தில் பதிவு செய்திருக்கிறார்.
விஜய்யை புகழ்ந்த ஷாருக்கான்… வைரலாகும் பதிவு
விஜய் – ஷாருக்கான்
பாலிவுட்டில் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் ஷாருக்கான். இவருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருக்கிறார். கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்டிருக்கும் ஷாருக்கான் சமூக வலைத்தளத்தில் அவ்வப்போது ரசிகர்களுடன் உரையாடுவார்.
அந்த வகையில் #AskSRK என்ற ஹேஷ்டேக்கில் இன்று ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது விஜய்யின் பீஸ்ட் படத்தைக் குறிப்பிட்டு, இவரைப்பற்றி ஒரு வார்த்தையில் கூற முடியுமா என்று
ரசிகர் ஒருவர் கேட்டிருந்தார். அதற்கு ‘வெரி கூல்’ என ஷாருக்கான் பதிலளித்திருக்கிறார். இந்த பதிவை பார்த்த விஜய் ரசிகர்கள் இதை வைரலாக்கி வருகிறார்கள்.
சிங்கிளாக இருப்பதை வெறுக்கிறேன் – ரைசா
தனிமையை வெறுக்கிறேன் – ஜோடி தேடும் ரைசா
தமிழ் சினிமாவின் இளம் நடிகை மற்றும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போட்டியாளருமான ரைசா, சிங்கிளாக இருப்பதை வெறுக்கிறேன் என்று சமூக வலைத்தளத்தில் பதிவு செய்திருக்கிறார்.
சிங்கிளாக இருப்பதை வெறுக்கிறேன் – ரைசா
ரைசா
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ரைசா வில்சன். கல்லுாரியில் படிக்கும் போதே, ‘மாடலிங்’ துறையில் ஈடுபாடு கொண்டிருந்த இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் நடிகையானார்.
போட்டியாளரான ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக பியார் பிரேமா காதல் படத்தில் நடித்தார். அந்த படம் ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது. தற்போது அலைஸ், எப் ஐ ஆர், காதலிக்க நேரமில்லை ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
ரைசா
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ரைசா, அவ்வப்போது புகைப்படங்கள் மற்றும் சில பதிவுகளை செய்து வருவார். அந்த வகையில் தற்போது சிங்கிளாக இருப்பதை வெறுக்கிறேன்
என்று பதிவு செய்திருக்கிறார். இதற்கு ரசிகர்கள் பலரும் நானும் சிங்கிள்… நீங்களும் சிங்கிள்… என்று பல்வேறு கருத்துகளை பதிவு செய்து வருகிறார்கள்.
அமெரிக்காவில் ரஜினி… வைரலாகும் புகைப்படம்
அமெரிக்காவில் ரஜினி… வைரலாகும் புகைப்படம்
சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று இருக்கும் நடிகர் ரஜினியின் புதிய புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அமெரிக்காவில் ரஜினி… வைரலாகும் புகைப்படம்
ரஜினி
நடிகர் ரஜினிகாந்த் சில ஆண்டுகளுக்கு முன்பு உடல்நிலை பாதிப்பு காரணமாக அமெரிக்காவில்
சிகிச்சை பெற்றார். அதன்பின் உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்ததை தொடர்ந்து திரைப்படங்களில் கவனம் செலுத்தி வந்தார்.
தற்போது மீண்டும் சிகிச்சைக்காக சில தினங்களுக்கு முன்பு தனி விமானம் மூலம் அமெரிக்கா சென்றார் ரஜினி. இந்நிலையில் அமெரிக்காவில் மகள் ஐஸ்வர்யா தனுஷுடன் ரஜினி நடந்து வரும்
புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வெளியாகி இருக்கிறது. இந்த புகைப்படம் ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது.
10 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன
10 கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன
உடன் அமுலுக்கு வரும் வகையில் 5 மாவட்டங்களைச் சேர்ந்த 10 கிராம சேவகர் பிரிவுகள் இன்று காலை முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளராதாக, கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய
செயற்பாட்டு மையத்தின் பிரதானியும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
இதன்படி பதுளை, களுத்துறை, மன்னார், யாழ்ப்பாணம், இரத்தினபுரி மாவட்டங்களிலேயே 10 கிராம சேவகர் பிரிவுகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, கொழும்பு கிரேன்ட்பாஸ் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட 233 ஆம் தோட்டம் மற்றும்
மஹவத்த வீதி ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சிறைச்சாலைகளில் கைதிகள் உண்ணாவிரதம்
சிறைச்சாலைகளில் கைதிகள் உண்ணாவிரதம்
மஹர மற்றும் வெலிகட சிறைச்சாலைகளில் கைதிகள் சிலர் ஆரம்பித்துள்ள உண்ணாவிரதம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள கைதிகள் சிலரே இவ்வாறு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
தங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனையை, ஆயுள் தண்டனையாக மாற்றுமாறு கோரி இவ்வாறு உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்.
வெலிகட சிறைச்சாலையின் கூரையில் மேல் ஏறி கைதிகள் சிலர் போராட்டம் நடத்தி வருவதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
பயணக் கட்டுப்பாட்டில் தளர்வு!
பயணக் கட்டுப்பாட்டில் தளர்வு!
நாடு முழுவதும் அமுல் நடத்தப்பட்ட பயணக் கட்டுப்பாடு இன்று (25) அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது.
பயணக் கட்டுப்பாடுகள் மூலமான பெறுபேறுகளை மதிப்பீடு செய்யும் நடவடிக்கை தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய
நிபுணர் அசேல குணவர்த்தன நேற்று (24) நடைபெற்ற செய்தியாளர்களுடனான சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்தார்.
மக்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கேட்டுக் கொண்டுள்ளார்.
மாகாணங்களுக்கு இடையிலான பயணத் தடை எதிர்வரும் 5 ஆம் திகதி வரை அமுலிலிருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
மேலும் நாள் தோறும் 2,000 மேற்பட்ட கொவிட் தொற்றாளர்கள் இனங்காணப்படுகின்றார்கள்.
இதன் காரணமாக மக்கள் சுகாதார வழிமுறைகளை முறையாகப் பின்பற்றுவது அவசியம் என்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டினார்.
திருகோணமலையில் பாரிய இராணுவ போர் ஒத்திகை நடவடிக்கை
திருகோணமலையில் பாரிய இராணுவ போர் ஒத்திகை நடவடிக்கை
இலங்கை, அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் கடற்படையினர் பங்கு கொள்ளும் கூட்டு கடற்பயிற்சி நடைவடிக்கை திருகோணமலை கடற்படை தளத்தில் நேற்று (24) ஆரம்பமானது.
(Cooperation Afloat Readiness and Training Exercise-2021 (CARAT-21) “நீர்வழி தயார் நிலை, ஒத்துழைப்பு
மற்றும் பயிற்சி தொடர்பான கூட்டுப் பயிற்சி” மூன்று கட்டங்களாக எதிர்வரும் 30ஆம் திகதி வரை திருகோணமலை துறைமுக மற்றும் கிழக்கு கடற்பரப்பில் நடைபெறவுள்ளது.
பயிற்சியின் துறைமுக சார்ந்த பயிற்சிகள் ஜூன் 24 மற்றும் 25 ஆகிய திகதிகளில் திருகோணமலை துறைமுகத்தில் செயற்கை நிரை அமைப்பில் நடைபெறும் அதேவேளை, அதன்
கடல் சார்ந்த பயிற்சிகள் ஜூன் 26 முதல் 30 வரை திருகோணமலையில் நடைபெறவுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
கடல்சார் ஈடுபாடு மற்றும் இயங்குதளத்தை மேம்படுத்துதல், பகிரப்பட்ட கடல்சார் சவால்களில் மேலும் ஒருங்கிணைப்பை வளர்ப்பது, செயல்பாட்டு சூழல், விதிமுறைகள் மற்றும் தரநிலைகள் குறித்து நன்கு புரிந்துகொள்வது, கடல்சார் கூறுகள் மற்றும் சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கு
இடையிலான தொடர்புகளை எளிதாக்குதல், கடல்சார் பரஸ்பர திறனை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் சர்வதேச சட்டத்திற்கு ஏற்ப செயல்படுதல் என்பன பயிற்சியின் முக்கிய நோக்கங்களில் அடங்கும் என கடற்படை தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் 7ஆவது கடற்படை குழுமம் மற்றும் ஜப்பானிய கடல்சார் தற்காப்பு படை, இலங்கை கடற்படை ஆகியவற்றுக்கிடையில் மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த நிவாரணம்,
கடல்சார் கள விழிப்புணர்வு, கடல்சார் விமான போக்குவரத்து, கடலில் நிரப்புதல், மேற்பரப்பு டிராக்கெக்ஸ், வருகை வாரிய தேடல் மற்றும் பறிமுதல் மற்றும் தேடல் மற்றும் மீட்பு உள்ளிட்ட பல்வேறு கூட்டு பயிற்சி வாய்ப்புகள் இடம்பெறவுள்ளன.
இந்த கூட்டுப் பயிற்சியில் இலங்கை கடற்படையின் ஆழ் கடல் ரோந்து கப்பல்களான சயுரல, கஜபாஹு, ஆகிய கப்பல்களும் இலங்கை விமானப்படையின் பெல் 212, 412 ரக
ஹெலிகொப்டர்கள், B 200 ரக பீச் கிராப்ட் விமானம், அமெரிக்காவின் 7ஆவது கடற்படை குழுமத்திற்கு சொந்தமான யூஎஸ்எஸ் சார்ள்ஸ்டன் கப்பல், பி-8 பொசிடன் போயிங் கடல் சார்
ரோந்து விமானம் மற்றும் எஸ்எச்-60 ரக ஹெலிகொப்டர் ஆகியவற்றுடன் ஜப்பான் கடற்படையின் ஜேடிஎஸ் யூகிரி நாசகாரி கப்பல் மற்றும் எம் எச் -60ஆர் ஹெலிகொப்டர் ஆகியன பங்கெடுக்கின்றதாக கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.
இந்த கூட்டுப் பயிற்சியின் அங்குரார்பன நிகழ்வில் இலங்கை கடற்படையின் பிரதிப் பிரதம அதிகாரியும் கிழக்கு கடற்பிராந்திய கட்டளைத் தளபதியுமான ரியர் அட்மிரல் வை என் ஜயரட்ண,
இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகத்தின் கடற்படை பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கொமாண்டர் ரிச்சர்ட் லிஸ்டெர் உட்பட உயர் அதிகாரிகள் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
கோட்டா இன்று மக்களுக்கு விசேட உரை
கோட்டா இன்று மக்களுக்கு விசேட உரை
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று நாட்டு மக்களுக்கு விசேட உரையாற்ற உள்ளார்.
இன்றிரவு 8.30ற்கு அவர் உரையாற்ற உள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது
இந்த உரை அனைத்து தொலைக்காட்சி மற்றும் வானொலி அலைவரிசைகளிலும் ஒலி, ஒளிபரப்புச் செய்யப்படவுள்ளது.
743 பேர் கைது – தொடரும் அத்துமீறல்
743 பேர் கைது – தொடரும் அத்துமீறல்
தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 743 பேர் கடந்த 24 மணித்தியாலத்தில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண இதனை தெரிவித்துள்ளார்.
அவர்களில் அதிகளவானோர் குளியாபிட்டிய பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பேச்சாளர் மேலும் கூறினார்.
முல்லைத்தீவில் மரத்தில் தொங்கிய வாலிபன் – கண்ணீரில் குடும்பம்
முல்லைத்தீவில் மரத்தில் தொங்கிய வாலிபன் – கண்ணீரில் குடும்பம்
முல்லைத்தீவு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஆறுமுகத்தான் குள கிராமத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் குடும்பஸ்தர் ஒருவரின் உடலம் இன்று (24) காலை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வேப்ப மரம் ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் குறித்த நபரின் சடலம் இவ்வாறு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
அதே கிராமத்தினை சேர்ந்த 29 அகவையுடைய குடும்பஸ்தரே இவ்வாறு உடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குடும்பத்தில் ஏற்பட்ட தகராறினை தொடர்ந்து நேற்று இரவு முதல் கணவனை காணவில்லை என உயிரிழந்தவரின் மனைவி தெரிவித்துள்ளார்.
உடலம் மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கொரனோவுக்கு 45 பேர் மரணம் – உண்மை பேசும் அரசு
கொரனோவுக்கு 45 பேர் மரணம் – உண்மை பேசும் அரசு
இலங்கையில் நேற்றைய (23) தினம் கொரோனா தொற்றின் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 45.
சுகரா சேவைகள் பணிப்பாளர் நாயகம் இதனை உறுதி செய்திருப்பதாக அரசாங்க தகவல்
திணைக்களம் இன்று (24) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.







