பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு பொலிஸ் கவலை
பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு பொலிஸ் கவலை
பாலியல் குற்றங்கள் இலங்கையில் அதிகரித்து வருவதாக பொலிஸ் கவலை வெளியிட்டுள்ளது ,இந்த் ஆண்டில் பாலியல் குற்றங்கள் விபரத்தை வெளியிட்ட பொலிஸ் புள்ளி விபரங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன .
ஆண்டு தோறும் அதிகரிக்கும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் சம்சுபா உளவியலுடன் சம்பந்த பட்ட ஒன்றாக காண படுகிறது .
இ கடந்த வாரியத்தில் 18 வயதுக்கு உள்ளிட்ட பெண்கள் 1502 பேர் பிழையால் துன்புறுத்தல் குற்றங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸ் மா அதிபர் ரேணுகா தெரிவித்துள்ளார் .
பெண்கள் மற்றும் மக்கள் மத்தியில் விழுப்புணர்வுஅட்டிர காரணத்தினாலும் ,போதை பாலகத்தினால் இவ்விதமான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாக தெரிவிக்க பட்டுள்ளது .
பாலஸ்தீனம் மீது போர் தொடரும் இஸ்ரேல்
பாலஸ்தீனம் மீது போர் தொடரும் இஸ்ரேல்
பாலஸ்தீனம் மீது போர் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு .தெரித்துள்ளார் சர்வதேச நீதிமன்ற அறிவிப்பு வெளியான பின்னர் இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார் .
இஸ்ரேல் தனது பாதுகாப்பிற்கு போராடுகிறது ,அதனால் சர்வதேச குற்றவியல் நீதிமன்ற ஒன்றும் செய்யாது என்பதாக இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு முழங்கியுள்ளார் .
எமது நாட்டையும் மக்களை காப்பாற்ற நாங்கள் தற்காப்பு தாக்குதலை நடத்துகிறோம் ,அவ்வளவு த்தான் என்கிறார் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு .
பிரிட்டன் எண்ணெய் கப்பல் மீது ஹவுதிகள் ஏவுகணை தாக்குதல்
பிரிட்டன் எண்ணெய் கப்பல் மீது ஹவுதிகள் ஏவுகணை தாக்குதல்
பிரிட்டன் எண்ணெய் கப்பல் மீது ஹவுதிகள்
ஏடன் வளை குடாவில் ஏவுகணை தாக்குதல் நடத்த பட்டுள்ளது .
பிரிட்டன் எண்ணெய் கப்பல் ஹவுதிகள் தாக்குதலுக்கு உள்ளானது
அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
இஸ்ரேல் போர் விமானம் தாக்குதல் ஒரேநாளில் 183 மக்கள் பலி
இஸ்ரேல் போர் விமானம் தாக்குதல் ஒரேநாளில் 183 மக்கள் பலி
இஸ்ரேல் போர் விமானம் காசாவில் நடத்திய தாக்குதல் ,ஒரேநாளில் 183 மக்கள் பலியாகியுள்ளனர் ,இஸ்ரேல் பலஸ்தீன போர் ஆரம்பிக்க பட்ட நாள் முதல் இஸ்ரேல் போர் விமானங்கள் கடும் தாக்குதலை நடத்தி வருகின்றன
பாலஸ்தீனம் காசா மக்கள் வாழ்விடங்கள் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் மற்றும் தரை படைகள் கடும் தாக்குதலை நடத்திய உள்ளனர் .
இதனால் நாள் நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் பலியாகிய உள்ளனர் .
இஸ்ரேல் புரிந்த இனப்படுகொலைக்கு தண்டனை வழங்கப்படாத நிலையில் ,இஸ்ரேல் படுகொலைகளை இடைவிடாது நடத்தி கொண்டுள்ளது குறிப்பிட தக்கது .
சர்வதேச நீதிமன்ற தீர்ப்பால் பதட்டத்தில் இஸ்ரேல்
சர்வதேச நீதிமன்ற தீர்ப்பால் பதட்டத்தில் இஸ்ரேல்
சர்வதேச நீதிமன்ற தீர்ப்பால் பதட்டத்தில் இஸ்ரேல்
கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொள்ளை
கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொள்ளை
பமுனுகம தெலத்துர எலபெம்ம பகுதியில் கூரிய ஆயுதங்களால் மூவர் தாக்கப்பட்டுள்ளதுடன், அவர்களின் பணம் மற்றும் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
இணையத்தில் வெளியான விளம்பரத்துக்கு அமைய மோட்டார் சைக்கிள் வாங்குவதற்காக லொறியில் வந்த மூவரே இவ்வாறு தாக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீதியில் மறைந்திருந்த நால்வர் இந்த தாக்குதலை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், 132,000 ரூபாய் பணம், 5 அலைலைபேசிகள், தங்க நகை மற்றும் வளையல் என்பவற்றை திருடிக்கொண்டு தப்பிச் சென்றுள்ளனர்.
தாக்குதலில் காயமடைந்தவர்கள் ராகம வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், கொள்ளைச் சம்பவத்தை மேற்கொண்ட சந்தேக நபர்கள் பமுனுகம பொலிஸாரினால் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
சுதந்திர காற்றை சுவாசிக்க முடியாது இருக்கிறோம் ஸ்ரீதரன்
சுதந்திர காற்றை சுவாசிக்க முடியாது இருக்கிறோம் ஸ்ரீதரன்
தமிழ் மக்கள் அனுபவித்த துன்பங்களை சிங்கள மக்கள் அனுபவிக்க தொடங்கி விட்டனர். இதனால் அரசு அச்சத்தில் மூழ்கியுள்ளது. இதுவும் தமிழர்களுக்கான பாதை திறக்க வழியாகும். ஆகவே நாம் எல்லோரும் இணைந்து ஒருமிக்க வேண்டிய காலகட்டம் என இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவித்தார்.
இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் கடந்த 21 ந் திகதி தெரிவு செய்யப்பட்டதை தொடர்ந்து மன்னார் மாவட்ட தமிழரசுக் கட்சி உறுப்பினர்களினால் வியாழக்கிழமை(24) மாலை வரவேற்பு நிகழ்வு மன்னார் அலுவலகத்தில் நடத்தப்பட்டது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,,,
சுதந்திர காற்றை சுவாசிக்க முடியாது இருக்கிறோம் ஸ்ரீதரன்
மனிதர்களுடைய வாழ்விலே பிறப்பிலிருந்து இறப்பு வரை எவ்வளவோ நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இவ்வாறே தமிழர்களுடைய வாழ்வில் பல அடையாளங்களோடும் எதிர் பார்ப்புகளோடும் கடந்து சென்று கொண்டிருக்கின்றன.இந்த நேரத்தில் மன்னார் மக்களுடன் நான் உரையாடுவது எனது வரலாற்றில் ஒரு பதிவாகின்றது.என்னுடைய தெரிவுக்கு மன்னார் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்களுக்கு நன்றியுடன் அத்துடன் உங்களுடன் நம்பிக்கையுடன் பயணிக்க இருக்கிறேன்.
இந்த மண்ணிலே நாம் பல உயிர்களை தியாகம் செய்திருந்தும் நாம் இன்னொரு சுதந்திரமான காற்றை சுவாசிக்க முடியாத கட்டத்தில் இருக்கிறோம். நாம் இன்னும் அந்நியப்படுத்த பட்டிருக்கின்றோம்.
நாம் 75 ஆண்டுகளுக்கு மேலாக போராடி போராடி வரும் ஓர் இனமாக இருக்கின்றோம். 1949 ஆம் ஆண்டு தந்தை செல்வா கூறியது தமிழர் ஒரு தேசிய இனம். இழந்துபோன இறைமையை மீட்டு எடுத்து எமது தேசிய அடையாளத்தோடு வாழ வேண்டும் என செயல்பட ஆரம்பித்தார்.
தந்தை செல்வா மன்னார் மண்ணுக்கும் வந்து சென்றுள்ளார். அவருடைய காலத்தில் பலர் இந்த மண்ணில் எமது கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களாகவும் இருந்துள்ளனர்.அவருடைய தேசிய சின்னத்துடன் இந்த மண்ணில் தேசிய மாநாடு இங்கு நடந்துள்ளது.
இவ்வாறு வரலாறு இப்பொழுதும் எமக்கு புதிய பணியை தந்துள்ளது. இது ஒரு தனி மனிதன் ஆற்றும் பணியல்ல. மாறாக நாம் யாவரும் ஒன்றிணைந்து ஒரு சக்தியாக தமிழர் என்று திரள்கின்ற பொழுது இந்த சமூகம் உலகம் எம்மை அங்கிகரிக்கின்ற நாள் நெருங்கிக் கொண்டு இருக்கின்றது என்ற நம்பிக்கை எம்மிடம் இருக்க வேண்டும்.
எதிர்வரும் நான்கு ஆண்டுகளுக்குள் உலகம் முழுவதும் பாரிய மாற்றங்கள் இடம்பெற இருக்கின்றன. இன்று உலகத்தில் நிகழ்கின்ற சண்டைகள் அரசியல் நிகழ்வில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.
இலங்கை நாடும் இங்கு ஒரு பிரச்சனையும் இல்லை என்று கண்ணை மூடிக் கொண்டு இருக்கிறார்கள். இலங்கை உலகத்தை ஏமாற்றிக் கொண்டு இருக்கின்றது என உலகம் தெளிவாக புரிந்து கொண்டு இருக்கின்றது.
தமிழர்களின் தேசிய அபிலாசைகளை உலகம் புதிய பரிமாணத்துடன் சிந்திக்க முற்பட்டுள்ளது. நாம் இழந்த ஆத்மாக்கள் இப்பொழுது எமக்கு உத்வேகத்தை தருகிறது.நாம் எந்த நோக்கத்துக்காக எமது உறவுகளின் உயிர்களை இழந்தோ மோ அந்த நோக்கங்கள் இன்னும் அழிந்து போகவில்லை.சிங்கள மக்களுக்கு முன்பே நமது தமிழினம் இங்கு வாழ்ந்துள்ளது. நாம் இங்கு பல அடையாளங்களுடன் வாழ்ந்திருக்கிறோம்.
ஆகவேதான் இழந்த இறைமையை தான் நாம் மீண்டும் பெற போராடுகின்றோம். எமது மொழி , இடம் , கலை பண்பாட்டு இவைகள் எமது தமிழ் தேசிய அடையாளத்தை பற்றியுள்ளது.நாம் பல சவால்களை சந்தித்து இன்னும் மனிதர்களாக இருக்கிறோம் என்றால் நாம் அறத்தின் மீதும் தர்மத்தின் மீது பற்றுக் கொண்டவர்களாக இருக்கின்றோம்.இலங்கை அரசுக்கு ஒரு செய்தியை கூறுகின்றோம்.
தமிழர்களுக்கு வெளிச்சமான பாதை தொடங்கியுள்ளது. ஆகவே நாம் ஒருமித்த கரங்களாக இணைந்து கொள்வோம்.
நமக்கு இந்த நாடு நிம்மதியான அமைதியை தருமா? என்ற கேள்வியை மீண்டும் மீண்டும் கேட்டு நிற்கின்றோம். இலங்கை அரசு தமிழர்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்காவிடில் இந்த நாடு பெரும் பாதாளத்துக்குள் விழும் என்பது ஐயம் இல்லை.
நாம் பெற்ற துன்பங்களை சிங்கள மக்கள் அனுபவிக்க தொடங்கி விட்டனர். இதனால் அரசு பயத்தில் மூழ்கியுள்ளது. இதுவும் தமிழர்களுக்கான பாதை திறக்க வழியாகும். ஆகவே நாம் எல்லோரும் இணைந்து ஒருமிக்க வேண்டிய காலகட்டம் என தெரிவித்தார்.
அமெரிக்கா போர் விமானங்களை வாங்கி குவிக்கும் இஸ்ரேல்
அதிக வரையறைகளால் பொருளாதாரத்துக்கு பாதிப்பு
அதிக வரையறைகளால் பொருளாதாரத்துக்கு பாதிப்பு
அதிக வரையறைகளை விதிக்கும், தெளிவற்ற சட்டங்கள் மூலம் இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி பாதிக்கப்படும் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.
அவை முதலீடுகளையும் டிஜிட்டல் பொருளாதார அபிவிருத்தியையும் பாதிக்கும் எனவும் அவர் முன்னெச்சரிக்கை விடுத்துள்ளார்.
பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் தொடர்பில் சமூக வலைத்தளத்தில் அவர் இவ்வாறு பதிவிட்டுள்ளார்.
இந்த சட்டத்திருத்தம் மூலம் கருத்து சுதந்திரம், புத்தாக்கம் மற்றும் தனியுரிமைக்கு அச்சுறுத்தல் ஏற்படுவதாகவும் சிவில் சமூகமும் தொழில்நுட்ப
நிறுவனங்களும் அடங்கலாக பிரதான தரப்பினர் முன்வைத்த முக்கிய விடயங்கள் உள்வாங்கப்படவில்லையெனவும் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்
இஸ்ரேல் ஐயன்டோம் ஏவுகணைகள் அழிப்பு
இஸ்ரேல் ஐயன்டோம் ஏவுகணைகள் அழிப்பு
இஸ்ரேல் ஐயன்டோம் ஏவுகணைகள் ஏவுதளத்தை ஹிஸ்புல்லா அழித்துள்ளது ,ஹிஸ்புல்லா இஸ்ரேல் இராணுவ ஐயன்டோம் ஏவுகணைகள் ஏவுதளத்தை அளித்துள்ளதாக தெரிவித்து பர பரப்பை கிளம்பியுள்ளன .
கடந்த சில தினங்களுக்கு முன்னதாக இஸ்ரேல் இராணுவ வான்கண்கணிப்பு கட்டளை தலைமையகன்களை இலக்கு வைத்து அழித்தன .
அதனை அடுத்து தற்போது இந்த ஏவுகணை ஏவுதளத்தை அளித்துள்ளது இஸ்ரேலுக்கு மிக பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது .
முத்தமிழ் வித்தியாலயத்தின் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு
முத்தமிழ் வித்தியாலயத்தின் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு
பல வருடங்களுக்கு பின்னர் வவுனியா வடக்கு கல்வி வலயத்தின் பின் தங்கிய பாடசாலையான கோயில்புளியங்குளம் முத்தமிழ் வித்தியாலயத்தின் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு காணும் வகையில் குடிநீர் திட்டம் அமைத்து கொடுக்கப்பட்டுள்ளது.
வவுனியா, கோவில்குளம் மஹா விஸ்ணு ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ ஜெ.மயூரக்குருக்கள் அவர்களின் நிதிப் பங்களில் வவுனியா ஊடகவியலாளர்களினால் அமைக்கப்பட்ட குடிநீர் திட்டம் தைப்பூச தினமான நேற்று (25) பாடசாலை அதிபரிடம் கையளிக்கப்பட்டது.
குறித்த பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்கள் குடிநீர் இன்றி பல்வேறு சிரமங்களை எதிர் கொள்வதாக கடந்து 5 வருடங்களுக்கு மேலாக பாடசாலை அதிபர் மற்றும் பாடசாலை சமூகம் பல்வேறு தரப்பினரிடமும் கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர்.
இது தொடர்பாக குறித்த பாடசாலையில் கல்வி கற்கும் மாணவன் ஒருவரின் பெற்றோர் முன் வைத்த கோரிக்கைக்கு அமைவாகவும், அதிபர் அவர்களின் வேண்டுதலுக்கு அமைவாகவும் வவுனியா ஊடகவியலாளர்கள் புலம்பெயர்
தேசத்தில் தற்போது வசிக்கும் வவுனியா, கோவில்குளம் மஹா விஸ்ணு ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ ஜெ.மயூரக்குருக்கள் அவர்களிடம் முன்வைத்த
முத்தமிழ் வித்தியாலயத்தின் குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு
கோரிக்கைக்கு அமைவாக அவரால் வழங்கப்பட்ட நிதித் திட்டத்தின் மூலம் மோட்டருடன் கூடிய குழாய் கிணறு நிர்மாணிக்கப்பட்டு, குடிநீர் தாங்கியும் நிறுவி பாடசாலையிடம் கையளிக்கப்பட்டது.
இதன்போது, அதிதிகள் குடிநீர் திட்டத்தை திறந்து வைத்ததுடன், பெயர் பலகையையும் திரை நீக்கம் செய்து வைத்தனர். மாணவர்களுக்கு குடி நீரும் அதிதிகளால் வழங்கப்பட்டதுடன், குறித்த நிகழ்வின் நினைவாக பயன்தரும் மரநடுகையும் இடம்பெற்றது.
பாடசாலை அதிபர் மா.அரவிந்தன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வவுனியா உதவிப் பிரதேச செயலாளர் திருமதி சுஜீபன் பிரியதர்சினி, செட்டிகுளம் பிரதேச செயலக இந்து கலாசார உத்தியோகத்தர் சிவ.கஜன்,
ஊடகவியலாளர்களான ந.கபில்நாத், கி.வசந்தரூபன், திருமதி சி.திவியா, வ.பிரதீபன், இ.சங்கர், சமுதாய சிவில் பாதுகாப்பு குழுத் தலைவர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
சந்தைகளுக்குள் அழுகிய உணவு விற்பனை
பழுதடைந்த இறைச்சி விற்பனை சீல் வைப்பு
இலங்கையில் துப்பாக்கிச் சூடு வன்முறை அதிகரிப்பு
பாலங்களை புனரமைக்க RDA-க்கு ஒன்றரை ஆண்டுகள் தேவை
சர்வதேச உதவி அரசாங்க எச்சரிக்கை
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கண் நோய்
இனிப்புப் பண்டத்தை முன்னணி ஏற்றுமதித் துறையாக அரசாங்கம் ஆதரவு
இனிப்புப் பண்டத்தை முன்னணி ஏற்றுமதித் துறையாக அரசாங்கம் ஆதரவு
இனிப்புப் பண்டத் தொழில்துறையை முன்னணி ஏற்றுமதித் துறையாக மாற்றுவதற்கு அரசாங்கம் ஆதரவளிக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார்.
கொக்கோ உள்ளிட்ட பயிர்களைப் பயிரிடுவதற்கு அரசாங்கத்திற்கு சொந்தமான தோட்டங்களை குத்தகை அடிப்படையில் வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
கொழும்பு சினமன் கிரேண்ட் ஹோட்டலில் 24 ஆம் திகதி பிற்பகல் நடைபெற்ற இலங்கை இனிப்புப் பண்ட உற்பத்தியாளர் சங்கத்தின் 30ஆவது பொதுச் சபைக் கூட்டத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார்.
சிலாபம் மற்றும் குருநாகல் பிரதேசங்களில் உள்ள தோட்டங்களுக்குச் சொந்தமான அனைத்துக் காணிகளையும், ஜனதா தோட்ட அபிவிருத்திச் சபை , அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான எல்கடுவ உள்ளிட்ட ஏனைய காணிகளையும் இதற்காகப் பயன்படுத்துவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
இனிப்புப் பண்டத்தை முன்னணி ஏற்றுமதித் துறையாக அரசாங்கம் ஆதரவு
இதுவரை பயன்படுத்தப்படாத மகாவலி ஏ மற்றும் பி வலயங்களில் பயிர்ச்செய்கையையை ஊக்குவிப்பதன் மூலம் நாட்டில் உணவுப் பாதுகாப்பை ஏற்படுத்த முடியும் எனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.
மேலும், நாட்டில் போட்டிமிக்க ஏற்றுமதிப் பொருளாதாரத்தை உருவாக்குவதற்காக தேசிய உற்பத்தித் திறன் ஆணைக்குழு ஸ்தாபிக்கப்படும் எனத் தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஏனைய நாடுகளுடன் தற்போதுள்ள சுதந்திர வர்த்தக உடன்படிக்கைகளையும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு உடன்படிக்கைகளையும் வலுப்படுத்த அரசாங்கம் எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்தார்.
அத்துடன், தேயிலை ஆராய்ச்சி நிறுவனம், தென்னை ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவற்றையும் நவீனமயப்படுத்தப்பட்டு வருவதாகவும் இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ஆராய்ச்சித் துறைக்காக சுமார் 08 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
இனிப்புப் பண்டத் தொழில்துறையினூடாக தேசிய பொருளாதாரத்திற்கு அவர்கள் ஆற்றிய பங்களிப்பை பாராட்டி, நாட்டில் உள்ள எட்டு முன்னணி இனிப்புப் பண்ட உற்பத்தியாளர்களுக்கு ஜனாதிபதியினால் விருதுகள் வழங்கி வழங்கப்பட்டன.
மெலிபன் ஸ்தாபகர் ஏ.ஜி. ஹின்னி அப்புஹாமி, கெண்டோஸ் ஸ்தாபகர் உபாலி விஜேவர்தன, Elephant House ஸ்தாபகர் ஆர்தர் வொன் போஸ்னர், மஞ்சி ஸ்தாபகர் மேனக விக்ரமசிங்க, மோதா ஸ்தாபகர் ஜூலியஸ் மோதா,
உஸ்வத்த ஸ்தாபகர் பி.ஜே.சி. பெரேரா, லக்கி லேண்ட் ஸ்தாபகர் சிங்கசாமி முத்தையா, செரிஸ் பிஸ்கட் ஸ்தாபகர் விதானகே ஜோன் அப்புஹாமி ஆகியோருக்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டன.
இனிப்புப் பண்டத்தை முன்னணி ஏற்றுமதித் துறையாக அரசாங்கம் ஆதரவு
இலங்கை இனிப்புப் பண்ட உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் கலாநிதி சமித பெரேரா, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு நினைவுப் பரிசை வழங்கி வைத்தார்.
கைத்தொழில் மற்றும் சுகாதார அமைச்சர் வைத்தியர் ரமேஷ் பதிரன, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, பொருளாதார விவகாரங்களுக்கான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் கலாநிதி ஆர்.எச்.எஸ். சமரதுங்க மற்றும் இலங்கை இனிப்புப் பண்ட உற்பத்தியாளர்கள் சங்க உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
இளையராஜா மகள் பாடகி பவதாரிணி மரணம்
இளையராஜா மகள் பாடகி பவதாரிணி மரணம்
இளையராஜா மகள் பாடகி பவதாரிணி மரணமடைந்துள்ளார் ,கல்லீரல் புற்று நோயால் பாதிக்க பட்டு இருந்த அவர் ,இலங்கைக்கு சிகிச்சை பெற சென்றார் .
அப்பொழுதே அங்கு சிகிச்சை பலனின்றி இறந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .
அவரது சடலம் சென்னைக்கு எடுத்து செல்லும் நடவடிக்கைகள் முன்னெடுக்க பட்ட வண்ணம் உள்ளன .
இளையராஜா மகள் பாடகி பவதாரிணி மரணமான செய்தி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
பாடகி பவதாரிணி மஸ்தான மஸ்தான என்ற பாடல் மூலம் அறிமுகமாகி பல ஹிட் பாடல்களை வழங்கி இருந்தார் .
அவ்வாறான சிறந்த இளம் பாடகியான ,பவதாரிணி மரணம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .
சவுதிக்கு F-35 விமானம் அமெரிக்கா விற்பனை
மத்திய கிழக்கு மோதலில் தலையிட இராணுவம் அனுப்பப்படாது என தென் கொரியா
மெக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்தை செயல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது பாகிஸ்தான்
30 ஹூத்தி போராளிகளைக் கொன்றதாக யேமன் ராணுவம் தெரிவித்துள்ளது
சட்டவிரோத கடவுச்சீட்டு வழங்கிய வழக்கில் குடிவரவு உதவி கட்டுப்பாட்டாளர் கைது
கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
ரஷ்யா ஒயில் கிடங்கு மீது உக்ரைன் விமானம் தாக்குதல் எரியும் கிடங்கு
ரஷ்யா ஒயில் கிடங்கு மீது உக்ரைன் விமானம் தாக்குதல் எரியும் கிடங்கு
ரஷ்யா ஒயில் கிடங்கு மீது உக்ரைன் தற்கொலை விமானம்திடீர் தாக்குதலை நடத்தியது .
இந்த தாக்குதலில் சிக்கி அந்த கிடங்கு முற்றாக எரிந்துள்ளது
இங்கு நாள் ஒன்றுக்கு 240.000 பரல் ஒயில் தயாரிக்க படுகிறது ,அவ்வாறன ஒயில் கிடங்கு மீது உக்ரைன் விமானங்கள் தாக்குதல் நடத்தி பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது .
இதற்கு பதிலடியாக தற்போது உக்ரைன் பகுதிகளை இலக்கு வைத்து ,ரஷ்யா கடும் தாக்குதலை நடாத்திய வண்ணம் உள்ளது .
சூயஸ் கால்வாய் வருவாய் பலத்த வீழ்ச்சி
சூயஸ் கால்வாய் வருவாய் பலத்த வீழ்ச்சி
எகிப்து சூயஸ் கால்வாய் வருவாய் ஜனவரி 2024 இல் 44% வீழ்ச்சியடைந்துள்ளது .
எகிப்தின் சூயஸ் கால்வாய் ஆணையத் தலைவர் ஒசாமா ராபி வியாழன் அன்று தெரிவிக்கும் பொழுதே மேற்படி விடயத்தை தெரிவித்து இருந்தார் .
இஸ்ரேல் காசா போரை அடுத்து செங்கடல் வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு அச்சறுத்தலை ஏற்படுத்தி தாக்குதலை நடத்தி வரும் நிலையில் ,இந்த பெரும் இழப்பு சூயஸ் கால்வாய்க்கு ஏற்பட்டுள்ளது .
இஸ்ரேல் போர் டாங்கிகள் அழிப்பு ஹமாஸ் அதிரடி தாக்குதல்
இஸ்ரேல் போர் டாங்கிகள் அழிப்பு ஹமாஸ் அதிரடி தாக்குதல்
இஸ்ரேல் போர் டாங்கிகள் இரண்டு காசா கான்யுனிஸ் பகுதியில் வைத்து ஹமாஸ் போராட்ட காரர்களினால் அழிக்க பட்டுள்ளது .
இஸ்ரேல் போர் ஆரம்பிக்க பட்ட நாளில் இருந்து பாலஸ்தீனம் காச பகுதியில் வைத்து 700 க்கு மேற்பட்ட போர் டாங்கிகள் அழிக்க பட்டுள்ளதாக காசா போர் படைகளினால் அறிவிக்க பட்டு இருந்தன .
அவ்வாறன நிலையில் இந்த இஸ்ரேலை போர் டாங்கிகள் வெற்றிகரமாக ஹமாஸ் போராளிகள் அமைப்பினார்கள் முற்றாக தாக்கி அழித்து இஸ்ரேலுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளன .
அமெரிக்கா விமான தளங்களுக்குள் வெடித்த விமானம்
அமெரிக்கா விமான தளங்களுக்குள் வெடித்த விமானம்
ஈராக் அமெரிக்கா விமான தளங்களுக்குள் வெடிகுண்டு விமானங்கள் வீழ்ந்து வெடித்தால் அந்த முகாம் பலத்த சேதமடைந்துள்ளது
அடுத்தடுத்து பல விமானங்கள் தொடராக தாக்குதல் நடத்திய நிலையில் தற்போது ஈராக்கை விட்டு அமெரிக்கா படைகள் ஓட்டம் பிடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது .
எனினும் இங்கு தமது படைகளுக்கு ஏற்பட்ட இழப்பு தொடர்ப்பில் அமெரிக்கா இராணுவம் எதனையும் இதுவரை தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிட தக்கது .
Grid
செங்கடலில் அமெரிக்க போர் கப்பல் மீது ஹவுதி தாக்குதல்
செங்கடலில் அமெரிக்க போர் கப்பல் மீது ஹவுதி தாக்குதல்
செங்கடலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த
அமெரிக்க போர் கப்பல் மீது ,செங்கடலில் வைத்து ஹவுதி ஏவுகணைகள் தாக்குதல்.
சவுதிக்கு F-35 விமானம் அமெரிக்கா விற்பனை
மத்திய கிழக்கு மோதலில் தலையிட இராணுவம் அனுப்பப்படாது என தென் கொரியா
மெக்கா பாதுகாப்பு ஒப்பந்தத்தை செயல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது பாகிஸ்தான்
30 ஹூத்தி போராளிகளைக் கொன்றதாக யேமன் ராணுவம் தெரிவித்துள்ளது
சட்டவிரோத கடவுச்சீட்டு வழங்கிய வழக்கில் குடிவரவு உதவி கட்டுப்பாட்டாளர் கைது
கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு
அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு
அரச உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சம்பள அதிகரிப்பு போதுமானதாக இல்லாததால், இது தொடர்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து எதிர்வரும் வாரத்தில் தீர்மானிக்கவுள்ளதாக அரச மற்றும் மாகாண அரச சேவை சங்கங்கள் தெரிவித்துள்ளது.
அரச ஊழியர்களுக்கு 20,000 ரூபா கொடுப்பனவை வழங்குமாறு கோரிக்கை விடுப்பதாக அதன் இணைப்பாளர் சந்தன சூரியராச்சி தெரிவித்தார்.
“அரசு ஊழியர்களுக்கு ஜனவரி மாதம் அரசாங்கம் வழங்கியுள்ள 5,000 ரூபாய் கொடுப்பனவு. ஏப்ரல் மாதம் வழங்க வேண்டிய மீதி ரூ.5,000 கொடுப்பனவு எமக்கு போதாது. உழைக்கும் மக்கள் குறைந்தபட்சம் 20,000 ரூபாய்
கொடுப்பனவு உயர்வுக்காகவே போராடினார்கள். எதிர்வரும் 29ஆம் திகதி கொழும்பில் அரச மற்றும் மாகாண தொழிற்சங்கங்கள் ஒன்றுகூடுகின்றன.
தற்போதைய வாழ்க்கைச் செலவுக்கு ஏற்றவாறு நியாயமான சம்பள அதிகரிப்பு அல்லது கொடுப்பனவுகளைப் பெறுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என்றார்.
இதேவேளை, தற்போதைய பொருளாதார நிலைமையை கருத்திற்கொண்டு ஹோட்டல் தொழிலை பராமரிப்பது சிரமமாக உள்ளதாக ஹோட்டல் பணியாளர்கள் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
தமது தொழில்துறையினர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் அரசாங்கம் இதுவரை கவனம் செலுத்தவில்லை என அதன் தேசிய அமைப்பாளர் ஜயதிலக்க ரணசிங்க https://www.youtube.com/watch?v=BzjMyMPsY3Qதெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட போவது தமிழ் மக்கள் தான் சாணக்கியன்
பாதிக்கப்பட்ட போவது தமிழ் மக்கள் தான் சாணக்கியன்
நேற்று (24) இடம்பெற்ற நிகழ்நிலைக் காப்பு வரைவுச் சட்டமூலம் தொடர்பான விவாதத்தின் போது Online Safety Bill எனும் பெயரில் கொண்டு வரப்பட்ட சட்ட மூலம் தமிழ் மக்களுக்கு மிகவும் ஆபத்தானது என பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையில் கொண்டு வரப்பட்ட சட்டங்கள் 30, 40 ஆண்டுகளாக தமிழ் மக்களை ஒடுக்குவதற்கும் அடக்குவதற்குமே பயன்படுத்தப்பட்டது. Online Safety Bill சட்ட மூலம் நடைமுறைப்படுத்தப்படுமாயின் நடைமுறையில் மக்கள் எதிர்கொள்ளும் சில பிரச்சனைகளை இங்கு நான் கூற விரும்புகின்றேன்.
இந்த Online Safety Bill சட்ட மூலம் ஊடாக வடக்கு, கிழக்கில் தமிழ் மக்கள் முகம் கொடுக்கும் ஒரு பிரச்சனைக்கு எதிராக ஒரு பாரிய கடையடைப்பு போராட்டம் அல்லது ஹர்த்தால் அறிவித்தால் அந்த அறிவித்தலை வழங்குபவர்களை இந்த Online Safety Bill ஊடாக கைது செய்து அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க முடியும்.
அதே போல 15 வருடங்களாக காணாமல் போன எமது உறவுகளுக்காக தாய்மார்களும், உறவினர்களும் வீதி வீதியாக போராடி 2,000 இற்கும் மேற்பட்ட நாட்கள் கடந்தும் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மக்களை Online Safety Bill சட்ட மூலத்தினூடாக கைது செய்யக்கூடிய வாய்ப்புகளும் உள்ளன.
தற்போது நாங்கள் மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் தரை நிலம் பற்றி பேசிக் கொண்டிருக்கின்றோம். மயிலத்தமடு மாதவனையில் சட்டவிரோதமாக குடியேற்றங்கள் அமைக்கப்படுகின்றது என்பது யாவரும் அறிந்த விடயமே ஆகும்.
பாதிக்கப்பட்ட போவது தமிழ் மக்கள் தான் சாணக்கியன்
அரசாங்கம் நமது வடக்கு, கிழக்கில் காணப்படும் மக்களின் விகிதாசாரத்தை மாற்றுவதற்காகவும் பெரும்பான்மை சமூகத்தினரை மேலும் அதிகரிக்க சட்ட விரோத குடியேற்ற வேலை திட்டம் மேற்கொள்ளப்படுகின்றது என அறிவித்தால் அதற்கு கூட Online Safety Bill சட்ட மூலம் சட்ட விரோதமான செயற்பாடு என மேற்கோள் காட்டும்.
ஜனாதிபதி அவருடைய பினாமிகளாக ஐந்து பேரை நியமிப்பதை அரசியல் Constitution Council அனுமதித்தாலும் கூட இந்த ஐந்து பேர் மாத்திரம் இனி வரும் காலங்களில் எவை சரியான கருத்துக்கள், எவை பிழையான கருத்துக்கள் என கூறும் அளவிற்கு மாறிவிடலாம்.
இன்று ஒரு அமைச்சர் இருக்கலாம் நாளை இன்னும் ஒருவர் மாறலாம். மாற்றமடையும் அமைச்சர்களுடைய செயல்பாடுகள் எங்களுக்கு தெரியாது. அமைச்சர் விரும்பினால் திறமை உள்ளவர் ஒருவரை நியமித்து நாளைய தினம் அவருடைய தொலைபேசி மற்றும் மடிக்கணினி என்பவற்றை எடுத்து என்ன இருக்கிறது என்பதை ஒரு நீதிமன்றத்தின் உத்தரவின்றி மேற்கொள்ளலாம் என தெரிவித்தார்.







































