யாழ் பாடசாலை ஒன்றின் இல்ல அலங்கரிப்பு தொடர்பில் விசாரணை
Posted in இலங்கை செய்திகள்

யாழ் பாடசாலை ஒன்றின் இல்ல அலங்கரிப்பு தொடர்பில் விசாரணை

யாழ் பாடசாலை ஒன்றின் இல்ல அலங்கரிப்பு தொடர்பில் விசாரணை

யாழ்ப்பாணம் தெல்லிப்பழை யூனியன் கல்லூரியில் இடம்பெற்ற இல்ல மெய்வல்லுனர் போட்டியின் போதான இல்ல அலங்கரிப்பு தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

யூனியன் கல்லூரி இல்ல மெய்வல்லுனர் போட்டி நேற்றைய தினம் சனிக்கிழமை நடைபெற்றது.

அதன் போது, கார்த்திகைப் பூ வடிவிலும், போர் டெங்கி வடிவிலும், இல்ல அலங்கரிப்புக்கள் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

அவை தொடர்பிலான புகைப்படங்கள் நேற்றைய தினம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருந்தன.

விடயம் தொடர்பில் நேற்றைய தினம் விளையாட்டு போட்டி நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையே பொலிஸார் , இராணுவ புலனாய்வாளர்கள் உள்ளிட்ட பாதுகாப்பு தரப்பினர் பாடசாலைக்கு நேரில் சென்று இல்லங்களை பார்வையிட்டு, புகைப்படங்கள், காணொளிகள் என்வற்றை எடுத்ததாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ் பாடசாலை ஒன்றின் இல்ல அலங்கரிப்பு தொடர்பில் விசாரணை

அத்துடன் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை பொலிஸ் நிலையத்திற்கு வருகை தருமாறு பாடசாலை நிர்வாகத்திற்கு அறிவுறுத்தி இருந்தனர்.

இந்நிலையில் அதிபர் உள்ளிட்டவர்கள் பொலிஸ் நிலையம் சென்று இருந்த நிலையில், பொலிஸார் அவர்களிடம் வாக்கு மூலங்களை பெற்ற பின்னர் அவர்களை விடுவித்துள்ளனர்.

இதேவேளை அண்மையில் கிளிநொச்சி மாவடத்தில் உள்ள பாடசாலை ஒன்றில், இடம்பெற்ற விளையாட்டு போட்டியில் இல்ல அலங்கரிப்பு மற்றும் விநோத உடை போட்டிகள் தொடர்பிலான படங்கள் சமூக வலைத்தளங்களில்

வெளியாகி சர்ச்சைகள் ஏற்பட்டதை அடுத்து, வடமாகாண கல்வி அமைச்சு பாடசாலை அதிபர்களுக்கு , இல்ல அலங்கரிப்பு மற்றும் விநோத உடை போட்டிகள் தொடர்பில் கவனம் செலுத்துமாறு அறிவுறுத்தி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

ஹிஸ்புல்லா தாக்குதலில் இஸ்ரேல் இராணுவம் காயம் தாக்கும் விமானங்கள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஹிஸ்புல்லா தாக்குதலில் இஸ்ரேல் இராணுவம் காயம் தாக்கும் விமானங்கள்


ஹிஸ்புல்லா தாக்குதலில் இஸ்ரேல் இராணுவம் காயம் தாக்கும் விமானங்கள்

ஹிஸ்புல்லா தாக்குதலில் இஸ்ரேல் இராணுவம் காயம் ,தாக்கும் விமானங்கள் ,
சண்டை ,

வீடியோ

நுவரெலியாவில் ஹோட்டல் ஒன்றில் தீ
Posted in இலங்கை செய்திகள்

நுவரெலியாவில் ஹோட்டல் ஒன்றில் தீ

நுவரெலியாவில் ஹோட்டல் ஒன்றில் தீ

நுவரெலியா நகர மையத்தில் உள்ள பிரதான ஹோட்டல் ஒன்றின் சமையலறை பகுதியில் (31) ஏற்பட்ட தீயினால் சமையலறை பகுதி முற்றாக எரிந்து நாசமாகியுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த தீப்பரவலுக்கான காரணம் சமையல் எரிவாயு கசிவு என பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

தீ பரவிய சில நிமிடங்களில் நுவரெலியா மாநகரசபையின் தீயணைப்பு பிரிவினரால் தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடிந்ததுள்ளது.

இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும், உடைமைகளுக்கு மட்டுமே சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

என்னை விட்டு விடு
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

என்னை விட்டு விடு

என்னை விட்டு விடு

பக்கத்தில் நீ இருக்க
பகலும் இங்கு இருளுதடி
சொர்க்கத்தில் இருப்பதுவாய்
சொல்லி மனம் துடிக்குதடி

அத்தனை கோள்களும்
அழகி உன்னை சுற்றுதடி
வெப்ப மாணிக்கும்
வேர்த்து இன்று கொட்டுதடி

மஞ்சள் வெயில் சூரியனும்
மணி கணகக்காய் காத்திருக்க
காணாமல் நடப்பவளே
கட்டழகி நீ தானோ ..?

வீதியில நீ போகையில
விபத்துக்கள் கூடுதடி
வெடிக்கின்ற எரிமலையே
வெப்பத்தை தணிக்காயோ

சத்தியமாய் சொல்கிறேன்
சம்மதம் சொல்லிடாதே
பிடிவாத காறியே – என்னை
பிடித்து போக வந்திடாதே …!

வன்னி மைந்தன்
ஆக்கம் -33-03-2024

கார் குண்டு தாக்குதல் பலர் காயம் மரணம்
Posted in உளவு செய்திகள்

கார் குண்டு தாக்குதல் பலர் காயம் மரணம்


கார் குண்டு தாக்குதல் பலர் காயம் மரணம்

திடீரென வெடித்த கார் குண்டு ,இந்த கார் குண்டு தாக்குதலில் பலர் காயம் பலர் மரணம் ,

வீடியோ

மாத்தறையில் துப்பாக்கிச்சூடு
Posted in இலங்கை செய்திகள்

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகிய நபர் ஒருவர் வைத்தியசாலையில்

பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகிய நபர் ஒருவர் வைத்தியசாலையில்


ரன்மினிதென்ன பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகிய நபர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திஸ்ஸமஹாராம, ரன்மினிதென்ன பிரதேசத்தில் வசிக்கும் 30 வயதுடைய நபரே காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று அதிகாலை ரன்மினிதென்ன பிரதேசத்தில் பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று சுற்றிவளைப்பை மேற்கொண்டதுடன், சந்தேக நபரை கைது செய்ய முற்பட்ட போது, ​​பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் அவரது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டுள்ளது.

வடக்கின் காணிகள் மற்றும் அரசியல் கைதிகளை விடுவிக்க ரணில் இணக்கம் -சுமந்திரன்
Posted in இலங்கை செய்திகள்

ஜனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பிலிருந்து பொது வேட்பாளர்

ஜனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பிலிருந்து பொது வேட்பாளர்

மக்கள் ஆணையற்ற ஜனாதிபதியே தற்போது நாட்டில் இருக்கிறார். எனவே சட்டத்தின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தல் நடாத்தப்பட வேண்டியது அவசியம்.

அத்தோடு தற்போது உள்ள, மக்கள் ஆணையில்லாத பாராளுமன்றம் வெகு விரைவில் கலைக்கப்பட்டு தேர்தல் நடாத்தப்பட வேண்டும் எனவும் எம்.ஏ.சுமந்திரன் கோரியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே எம்.ஏ.சுமந்திரன் இவ்வாறு தெரிவித்தார். இதன் போது அவர் மேலும் தெரிவித்ததாவது..

ஜனாதிபதி சொல்வது ஒன்று செய்வது இன்னொன்றாக இருக்கிறது. எனவே நடத்த வேண்டிய தேர்தல்களை கூட நடத்தாமல் இருக்கிற இந்த ஜனாதிபதி இனியும் தாதமிக்காது ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலை உடனடியாக நடத்த வேண்டுமென்றார்.

ஜனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பிலிருந்து பொது வேட்பாளராக ஒருவரை நிறுத்துவதற்கு பேசப்பட்டு வருவது தொடர்பில் கேள்வி எழுப்பிய போது,

தமிழரசுக் கட்சி இதைப்பற்றி இன்னமும் கலந்துரையாடவில்லை எனவும் தேர்தல் அறிவிக்கப்படுகிற போது இது சம்மந்தமாக கலந்துரையாடி முடிவெடுப்போம் என பதிலளித்துள்ளார்.

மேலும் பொது வேட்பாளரோ தனி வேட்பாளரோ அது எவருக்கும் இருக்கிற உரிமை. யாரும் தேர்தலில் போட்டியிடலாம். எவரையும் போட்டியிடக் கூடாது என்று சொல்லுகிற உரிமை எவருக்கும் கிடையாது.

இந்த பொது வேட்பாளர் தொடர்பில் எமது தமிழரசுக் கட்சி எந்தவொரு நிலைப்பாட்டையும் எடுக்கவில்லை. முதலில் தேர்தல் அறிவிக்கப்பட வேண்டும். யார் யார் வேட்பாளர்கள் என தெரிய வேண்டும். அதைத் தொடர்ந்து நாங்கள் கலந்துரையாடி முடிவெடுப்போம்.

இதேவேளை ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவை வழங்குவார்கள் என ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதி தலைவர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ள விடயம் குறித்து கேட்ட போது,

அவர் மட்டுமல்ல ஒவ்வொரு கட்சியினரும் எல்லா மக்களின் வாக்கும் தங்களுக்கு தான் என்று சொல்லுவார்கள். ஆகையினால் அதையெல்லாம் பெரிசாக எடுத்துக் கொள்ள வேண்டிய தேவையில்லை. யாருக்கு வாக்களிப்பது என மக்கள் தீர்மானிப்பார்கள் என்றார்.

அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தியினர் இங்குள்ள தமிழ்க் கட்சிகளை சந்தித்து ஆதரவை கோர உள்ளதாக அறிவித்துள்ளமை தொடர்பில் கேட்ட போது,

அடுத்தவாரம் அவர்கள் சந்திக்க உள்ளதாக கூறினார்.

மேலும் அவர்களோடு மட்டுமல்ல ஏனைய பல கட்சிகளுடனும் நிறைய சந்திப்புக்கள் தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டு தான் இருக்கிறது.

ஆனால் தேர்தல் என்று வருகிற பொழுது அதில் யார் யார் வேட்பாளர்கள் என அறிவிக்கப்படுகிற பொழுது நாங்கள் உறுதியான சந்திப்புக்களை மேற்கொண்டு முடிவை தீர்மானிப்போம். இவ்வாறான நிலைமையில் தான் தேசிய மக்கள் சக்தியினர் எம்மை சந்திக்க போவதாக சொல்லியுள்ளனர். எனவே எம்மை சந்திக்க வருகிற எல்லோரையும் நாங்கள் சந்திப்போம் என்றார்.

இலங்கையில் 9 மாதத்தில் 1500 பேர் கற்பழிப்பு
Posted in இலங்கை செய்திகள்

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பு

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரிப்பு

சமூக ஊடகங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளன என பொலிஸ் கணினி குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது.

வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சமூக ஊடகங்கள் ஊடாக இடம்பெற்ற குற்றங்கள் தொடர்பில் 1500 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என பொலிஸ் கணினி குற்றப்பிரிவு கூறியுள்ளது.

இவற்றில் பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களே அதிகளவில் பதிவாகியுள்ளன என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பேஸ்புக் ஊடாக இடம்பெறும் மோசடிகளும் அதிகரித்துள்ளன என பொலிஸ் கணினி குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது

குற்றச் செயலில் ஈடுபட்ட 5 பொலிஸார் இடைநிறுத்தம் கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு - திருகோணமலை மாவட்டங்களில் பொலிஸார் ஒழுக்கம் தவறி மேற்கொண்ட குற்றச் செயல் தொடர்பாக கைது செய்யப்பட்ட 5 பொலிஸார் பணியில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளதாக இன்று (23) பொலிஸ் உயர் அதிகாரி தெரிவித்தார். மட்டக்களப்பு, வாகரை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த இரு பொலிஸாருக்கிடையே கடந்த 6 ஆம் திகதி மாலை ஏற்பட்ட கைகலப்பில் கல்லால் தாக்கிய சம்பவத்தில் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் காயமடைந்ததையடுத்து தாக்கிய பொலிஸ் கான்ஸ்டபிள் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் வெளிவந்த பின் பணியில் இருந்து இடை நிறுத்தப்பட்டுள்ளார். இதனை தொடர்ந்து கடந்த 11 ஆம் திகதி ஏறாவூரைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் மட்டக்களப்பு நகரில் வேலைபார்த்து வரும் கடையில் வேலை முடித்து கொண்டு இரவு 11 மணிக்கு நடந்து வீடுதிரும்பிக் கொண்டிருந்த இளைஞனை முச்சக்கரவண்டியில் வீதி சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 3 பொலிஸார் இளைஞனை நிறுத்தி அச்சுறுத்தி அவரிடம் இருந்து 6,500 ரூபாவை பறித்தெடுத்தனர். இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வந்த 3 பொலிஸாரை கைது செய்து நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட 3 பேரையும் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டனர். அதேவேளை கடந்த 20 ஆம் திகதி கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் கடமையற்றி வந்த அதேபிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் 150,000 ரூபா பெறுமதியான மாடு ஒன்றை திருடிய குற்றத்தில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற பிணையில் வெளிவந்த நிலையில் அவரும் பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டார். இவ்வாறு குற்றச் செயல் காரணமாக கிழக்கு மாகாணத்தில் கடந்த 15 நாட்களில் 5 பொலிஸார் கைது செய்யப்பட்டு பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸ் உயர் அதிகாரி தெரிவித்தார்.
Posted in இலங்கை செய்திகள்

உயிர்த ஞாயிறு ஆராதனைகள் நடைபெறும் அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் விசேட பாதுகாப்பு

உயிர்த ஞாயிறு ஆராதனைகள் நடைபெறும் அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் விசேட பாதுகாப்பு

நாடலாவிய ரீதியில் இன்று உயிர்த ஞாயிறு ஆராதனைகள் நடைபெறும் அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டத்தை அமுல்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இந்த பாதுகாப்பு ஏற்பாடுகள், இன்று பிற்பகல் ஆராதனை நிறைவடைந்து பக்தர்கள் அனைவரும் அவரவர் வீடுகளுக்கு செல்லும் வரை அமுல்படுத்தப்படும் என பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, நேற்று முன்தினம் பெரிய வெள்ளி ஆராதனை ஆரம்பமானதையடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், இன்றும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது

ஹமாஸ் தாக்குதலினால் இஸ்ரேல் வடக்கை விட்டு மக்கள் ஓட்டம்
Posted in உலக செய்திகள்

சமாதான பேச்சுக்கு இஸ்ரேல் இணக்கம்

சமாதான பேச்சுக்கு இஸ்ரேல் இணக்கம்


ஹமாஸ் கிளர்ச்சியாளர்களுடன் மீண்டும் சமாதான பேச்சுவார்த்தையை முன்னெடுக்க இஸ்ரேல் இணக்கம் தெரிவித்துள்ளது.

டோஹா மற்றும் கெய்ரோ நகரங்களில் இந்த கலந்துரையாடலை நடத்த இஸ்ரேல் பிரதமர் அனுமதி வழங்கியுள்ளார் என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த கலந்துரையாடலில் கட்டார் மத்தியஸ்தம் வகிக்கின்றது.

காஸா எல்லையில் போர் நிறுத்தத்தை அறிவித்தல் மற்றும் பணயக் கைதிகளை விடுவித்தல் என்பன இந்த கலந்துரையாடலின் பிரதான நோக்கமாக உள்ளது.

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா இலங்கை திரும்பினார்
Posted in இலங்கை செய்திகள்

ஐ எம் எப் நிறைவடையும் வரை தேர்தல்கள் இல்லை

ஐ எம் எப் நிறைவடையும் வரை தேர்தல்கள் இல்லை

சர்வதேச நாணய நிதியத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் பொருளாதார சீர்திருத்தப் பணிகள் நிறைவடையும் வரை தேர்தலை நடத்துவதற்கு வாய்ப்பில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவை மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அறிவித்துள்ளார்.

நாடு பொருளாதார ரீதியில் முன்னேற்றம் காண சர்வதேச நாணய நிதியத்துடன் இணைந்து மேற்கொள்ளப்படும் பொருளாதார சீர்திருத்த செயற்பாடுகள் மிகவும் முக்கியமானதென ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார், எனவே அந்த வேலைத்திட்டத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சரவை மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு அதிகாரிகளை தனித்தனியாக சந்தித்த போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டம் ஜூலை இறுதி வரை அமுலில் உள்ளதால் அதற்கு முன்னர் தேர்தல் நடத்தப்பட மாட்டாது எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

நிதியச் செயற்பாட்டின் பின்னர் அரசியலமைப்பு ரீதியாக ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான நேரம் வருவதால் சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்திற்கு ஜனாதிபதித் தேர்தல் தடையாக இருக்காது எனத் தெரிவித்த ஜனாதிபதி, அதற்கேற்ப தேர்தல் வரைபடத்தை அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலுக்கு முதலில் தயாராகுமாறு அமைச்சரவை மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தல் நடத்தப்படாது என்பதை இது தெளிவாகக் காட்டுவதாக அரசாங்கத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

துப்பாக்கி தயாரிக்கும் இடத்தை சுற்றிவளைத்து பொலிஸார்
Posted in இலங்கை செய்திகள்

விசித்திர உடையில் வீதிக்கு இறங்கிய பொலிஸார்

விசித்திர உடையில் வீதிக்கு இறங்கிய பொலிஸார்

மஹியங்கனை – கண்டி பிரதான வீதியில் மகாவலி பாலத்திற்கு அருகில் இன்று (30) சோதனையில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரிகளின் உடை அனைவராலும் பேசப்படுகின்றது.

காலை 8.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை வழக்கமாக மக்கள் பார்க்காத வகையிலான ஆடைகளை அணிந்து கொண்டு சிறப்பு போக்குவரத்து சோதனை அமுல்படுத்தப்பட்டது.

மஹியங்கனை மாபாகடவெவ பொலிஸ் பயிற்சிப் பாடசாலையில் பயிற்சி பெற்று வரும் 240 தொழிற்பயிற்சி பொலிஸ் உத்தியோகத்தர்கள் “யுக்திய” நடவடிக்கையுடன் இணைந்து போதைப்பொருள் சோதனைகளுக்காக போக்குவரத்தையும் பொதுமக்களையும் சோதனை செய்ய இவ்வாறு ஒன்றிணைந்தனர்.

ரிதிமாலியத்த, எகிரியன் கும்புர, லொக்கலோயா, தம்பான 51 மைல்கல், வெரகந்தோட்டை பாலத்திற்கு அருகில், சொரபொர சந்தி ஆகிய 06 இடங்களில் இந்த சோதனைகள் இடம்பெற்றன.

பயிற்சி பெறும் அதிகாரிகளுக்கு ஆய்வுகளின் நடைமுறை அனுபவத்தை வழங்குவதே இதன் நோக்கமாகும்

நெதன்யாகு வீடு சுற்றிவளைப்பு எரியும் இஸ்ரேல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

நெதன்யாகு வீடு சுற்றிவளைப்பு எரியும் இஸ்ரேல்


நெதன்யாகு வீடு சுற்றிவளைப்பு எரியும் இஸ்ரேல்

நெதன்யாகு வீடு மக்களினால் சுற்றிவளைப்பு ,எரியும் இஸ்ரேல் .


மக்கள் போலீசார் மோதல் ,நெதன்யாகு பதவி விளக்க கோரி மக்கள் போர் முழக்கம்

வீடியோ

கொலண்டில் ஆயுத தாரியால் மக்கள் சிறைபிடிப்பு
Posted in உலக செய்திகள்

கொலண்டில் ஆயுத தாரியால் மக்கள் சிறைபிடிப்பு

கொலண்டில் ஆயுத தாரியால் மக்கள் சிறைபிடிப்பு

கிழக்கு டச்சு நகரமான Ede இல் உள்ள ஒரு இரவு விடுதியில் பணயக்கைதிகள் நிலைமை சனிக்கிழமை தொடர்ந்தது, மேலும் மூன்று பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று போலீசார் ஒரு அறிக்கையில் தெரிவித்தனர்.

சனிக்கிழமை முன்னதாக ஒரு துப்பாக்கிதாரி பலரை பிணைக் கைதிகளாக பிடித்து வெடிகுண்டு வெடிக்கப் போவதாக மிரட்டியதாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

மூன்று ஊழியர்கள் தங்கள் கைகளை தலைக்கு மேல் தூக்கிக்கொண்டு அந்த இடத்தை விட்டு ஓடிப்போவதை செய்தியாளர்கள் பார்த்த பிறகு இன்னும் எத்தனை பேர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

தீவிரவாத நோக்கம் எதுவும் இல்லை என போலீசார் தெரிவித்தனர்.

ஐரோப்பாவில் இன்று நேர மாற்றம்
Posted in உலக செய்திகள்

ஐரோப்பாவில் இன்று நேர மாற்றம்

ஐரோப்பாவில் இன்று நேர மாற்றம்

ஐரோப்பாவில் இன்று நேர மாற்றம் .இடம்பெறுகிறது ஒரு மணித்தியாலம் முன்னோக்கி நகர்த்த படுகிறது .

அதாவது ஒரு மணி என்றால் அதுவே இரண்டு மணியாக காண்பிக்க படும் ,

சமர் காலம் ஆரம்பிக்க படுவதை அடுத்து இந்த நேர மாற்றம், காணப்படுகிறது .

எனேவ ஐரோப்பிய மக்களே இன்று ஒரு மணித்தியாலம் முன்னதாக எழுந்து வேலைக்கு ஓடி செல்லுங்கள் .

தோல்விகள் தந்த சாதனை
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

தோல்விகள் தந்த சாதனை

தோல்விகள் தந்த சாதனை

பங்கு சந்தையில் தோல்வியுற்றால்
பல் இழித்தார் பலரை யான் கண்டேன்
சொல்லி சொல்லி வெல்கின்றார் – என்
சொந்தங்கள் சிலர் முன் வென்றார்

நாளுக்கும் ஆயிரம் வென்று விட்டார்
நாளாந்த வருமானம் இது கொண்டார்
எட்டு ஆயிரம் எட்டும் என்றார்
எதிர் வரும் நாட்களில் ஆகும் என்றார்

தோல்வி எல்லாம் சாதனை தான்
தோழமை தாங்கினார் வேதனை தான்
ஆயிரம் ஆயிரம் நாள் பிடித்தார்
அந்தோ வாய்கள் புகழிட்டார்

அலட்ச்சியம் நாளில் அவர் கொண்டார்
அதனால் தோல்வி ஏற்று நின்றார்
தவறை திருத்தி அவர் எழுந்தார்
தரணி வியக்கும் நிலை கொண்டார்

மணிக்கு ஆயிரம் இலக்கு என்றார்
மகுடம் இதுவே ஏற்றும் என்றார்
திட்டம் போட்டே நகர்கின்றார் – இந்த
திருப்பம் தோல்வியால் பெற்றெழுந்தார் …!

வன்னி மைந்தன்
ஆக்கம் -30-03-2024

இஸ்ரேலுக்கு ஆயுதம் கடத்தியவர்கள் கைது அடி கொடுத்த நாடு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேலுக்கு ஆயுதம் கடத்தியவர்கள் கைது அடி கொடுத்த நாடு


இஸ்ரேலுக்கு ஆயுதம் கடத்தியவர்கள் கைது அடி கொடுத்த நாடு

இஸ்ரேலுக்கு ஆயுதம் கடத்தியவர்கள் கைது ,அடி கொடுத்த நாடு ,
தக்குதல் முறியடிப்பு என தகவல்

வீடியோ

மெழுகுவர்த்தி ஏற்றி மக்கள் போராட்டம்
Posted in இலங்கை செய்திகள்

மெழுகுவர்த்தி ஏற்றி மக்கள் போராட்டம்

மெழுகுவர்த்தி ஏற்றி மக்கள் போராட்டம்

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினுடைய உரிமைக்கான மக்கள் போராட்டம் 5வது நாளாக மெழுகுவர்த்தி ஏற்றி உரிமை கோஷம் எழுப்பிய போராட்டமாக அமைந்திருந்தது.

அதாவது நேற்று (29) மாலை குறித்த போராட்டத்தில் அதிகளவான மக்கள் கலந்து கொண்டிருந்ததுடன் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் மற்றும் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் ஆகியோரும் கலந்து கொண்டனர் .

இப் போராட்டம் வழமைக்கு மாறாக தீச்சுடர் ஏந்திய ஓர் போராட்டமாக மக்கள் எழுச்சியுடன் இடம்பெற்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

உடைந்து விழுந்த பாலத்தின் காப்பீடு இத்தனை பில்லியனா
Posted in உலக செய்திகள்

உடைந்து விழுந்த பாலத்தின் காப்பீடு இத்தனை பில்லியனா

உடைந்து விழுந்த பாலத்தின் காப்பீடு இத்தனை பில்லியனா

அமெரிக்காவின் பிரான்சிஸ் ஸ்கொட் என்ற பாலம் இடிந்து விழுந்ததை அடுத்து, இடிபாடுகளை அகற்றுவதற்காக கிழக்கு அமெரிக்க கடற்கரையில் உள்ள மிகப்பெரிய கிரேன் பால்டிமோருக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்த பாலம் இடிந்து விழுந்துள்ளதால் அந்நாட்டின் பரபரப்பான துறைமுகமான இதில் ஏற்றுமதி நிறுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இடிபாடுகளுக்கு இடையில் நீந்தும் அபாயம் காரணமாக நான்கு தொழிலாளர்களின் சடலங்களை தேடும் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாலத்தை மீட்டெடுக்க 60 மில்லியன் ​டொலர் மத்திய அரசின் அவசர நிதியில் இருந்து ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், பாலம் இடிந்து விழுந்ததற்கான காப்பீட்டு இழப்பீடு 3 பில்லியன் டொலரைத் தாண்டும் என்றும் வெளிநாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரபல திரைப்பட நடிகர் டேனியல் பாலாஜி காலமானார்
Posted in உலக செய்திகள்

பிரபல திரைப்பட நடிகர் டேனியல் பாலாஜி காலமானார்

பிரபல திரைப்பட நடிகர் டேனியல் பாலாஜி காலமானார்

பிரபல திரைப்பட நடிகர் டேனியல் பாலாஜி உயிரிழந்துள்ளார்.

மாரடைப்பு காரணமாக கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

48 வயதான டேனியல் பாலாஜி காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, பைரவா, பொல்லாதவன் உள்ளிட்ட பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தமிழ் மட்டுமல்லாது மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழி திரைப்படங்களிலும் இவர் நடித்துள்ளார்