காஸாவுக்கு வழங்கிட நிதி திரட்டிய இலங்கை
காஸாவுக்கு வழங்கிட நிதி திரட்டிய இலங்கை
காஸாவுக்கு வழங்கிட நிதி திரட்டிய இலங்கை முசுலீம் மக்கள் அந்த நிதியை இலங்கை ஜனாதிபதியிடம் கையளித்தனர் .
பாலஸ்தீனம் காசா பகுதியில் பாதிக்க பட்டுள்ள ,பாலஸ்தீன காசா சிறுவர்கள் நலன் கருதி இந்த நிதி திரட்ட பட்டுள்ளது .
காஸாவுக்கு வழங்கிட நிதி
அவ்வாறு காஸாவுக்கு வழங்கிட நிதி திரட்டிய இலங்கைதிரட்ட பட்ட நிதியே தற்போது பாலஸ்தீனம் காசா மக்களுக்கு வழங்கும் முகமாக மட்டக்களப்பு முசுலீம்கள் இணைந்து ,இந்த நிதி சேகரிப்பில் ஈடுபட்டனர் .
இவ்வாறு திரட்ட பட்ட பெரும் தொகை பணமே ,இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவிடம் கையளிக்க பட்டுள்ளது .
இஸ்ரேல் பாலஸ்தீனம் போர்
இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் ஆரம்பிக்க பட்டு ஏழு மாதங்கள் கடந்து செல்கின்ற பொழுதும் ,இதுவரை இஸ்ரேல் அரச பயங்கரவாதம் ,பலஸ்தீன சிறுவர்கள் மீது நடத்தும் தாக்குதல்களை ஐநா கண்டுகொள்ளவில்லை .
இஸ்ரேலிய பிரதமர் நெதன்யாகு நடத்தும் ஆக்கிரமிப்பு ,இனப்படுகொலையை தடுத்து நிறுத்த மறுத்து ,மேற்கு நாடுகள் ,அமெரிக்கா என்பன இஸ்ரேலுக்கு ஆதரவாக இனப்படுகொலைகளை நடத்துவதை ஊக்குவித்து வருகின்றன .
மக்கள் போருக்கு எதிராக குரல்
மக்கள் போருக்கு எதிராக திசை திரும்பியுள்ள பொழுதும் ,அந்த நாடுகளின் அரசியல்வாதிகள் ,தமது பொருளாதரத்தை கைப்பற்றி கொள்ள ,இஸ்ரேலுக்கு ஆதாரவாக செயலாற்றி வருகின்றனர் .
ஒவ்வொரு நாடுகளின் அரசியல் தலைவர்களும் ,இஸ்ரேலுடன் நெருங்கிய பொருளாதார வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அதனால் தமது பொருளாதாரத்தை காப்பாற்றிட ,தமது நலன் சார்ந்து செயல் ஆற்றி வருகின்றனர்
இவ்வாறான கால பகுதியில் பாலஸ்தீன சிறுவர்களை காப்பாற்றிட இலங்கை முஸ்லீம்கள் ,சேகரித்த இந்த பணம் பாராட்டை பெற்றுள்ளது .
இலங்கை முஸ்லீம்கள்
ஸ்ரீலங்கா வாழ் முசுலீம்கள் தமது மத அடிப்படையிலும் ,மனிதபாபிமான செயல் பாட்டின் அடிப்படையில் ,பாலஸ்தீன குழந்தைகள் நலன் கருதி ,திரட்டிய பணம் உரிய முறையில் அந்த மக்களுக்கு சென்று சேரும் வகையில் கையளிக்க படும் என தெரிவிக்க பட்டுள்ளது .
காசா மக்களுக்கு ஆதரவாக இலங்கை குரல்
பாலஸ்தீனிய காசா மக்களுக்கு ஆதரவாக இலங்கை குரல் கொடுத்து இருந்ததுடன் ,பல அமைச்சர்களும் தமது ஆதரவை பாலஸ்தீனம் காசா மக்களுக்கு வழங்கி இருந்தனர்.
இவ்வாறான நிலையில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவிடம் இந்த நன்கொடை நிதி கையளிக்க பட்டுள்ளது .
வர்த்தகர்கள் விளையாட்டு குழுக்கள் ,பள்ளிவாசல்கள் என்பனவற்றின் ஊடக சேகரித்த பணமே இலங்கை ஜனாதிபதியிடம் கையளிக்க பட்டுள்ளன .
கிளிநொச்சியிலும் மனித எச்சங்கள் மீட்பு
கிளிநொச்சியிலும் மனித எச்சங்கள் மீட்பு
கிளிநொச்சியிலும் மனித எச்சங்கள் மீட்பு கிளிநொச்சி – பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகமாலைப் பகுதியில் கண்ணிவெடி அகற்றலின் போது மனித எச்சங்களுடன் கூடிய ஆடை ஒன்று இனங்காணப்பட்டுள்ளது.
இதையடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணைகளை மேற்கொண்டனர். தொடர்ந்து பொலிஸார் மாவட்ட நீதவானின் கவனத்திற்கு கொண்டு சென்றனர்.
கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவான்
கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற நீதவான் இஸ்மாத் ஜெமில் இன்று காலை சம்பவ இடத்திற்கு சென்று குறித்த மனித எச்சங்கள் மற்றும் மனித எச்சம் இனங்காணப்பட்ட பகுதிகளை பார்வையிட்டார்.
தொடர்ந்து குறித்த பகுதியில் கண்ணிவெடி அகற்றும் பணியாளர்கள் மூலம் கண்ணிவெடி அகற்றும் பணியை முன்னெடுக்குமாறும், தெரிவிக்க பட்டது .
பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி
கிடைக்கப் பெறுகின்ற எச்சங்கள் மற்றும் தடயங்கள் தொடர்பாக பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கவனத்திற்கு கொண்டு செல்லுமாறும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், கிடைக்கப்பெற்ற மனித எச்சங்களை சட்ட வைத்திய அதிகாரி மூலம் பரிசோதனைக்கு உட்படுத்த அனுப்பி வைக்குமாறும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை சம்பவ இடத்தினை மீண்டும் சென்று பார்வையிடுவதாகவும் நீதவான் தெரிவித்துள்ளார்.
சீமானுக்கு ஒட்டு போடுங்கள் வெள்ளைக்காரி
சீமானுக்கு ஒட்டு போடுங்கள் வெள்ளைக்காரி
நாம் தமிழர் கட்சி சீமானுக்கு ஒட்டு போடுங்கள் வெள்ளைக்காரி தெரிவித்துள்ளார் .
அவுஸ்ரேலியாவை சேர்ந்த வெள்ளக்கார பொண்ணு ஒருவரே நாம் தமிழர் கட்சி சீமான் அண்ணாவுக்கு வாக்குகளை வழங்குங்கள் என தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் .
நாற்பது தொகுதிகள் போட்டியிட்ட நாம் தமிழர் இம்முறை வெற்றி பெறும் என்ற எதிர்பார்ப்பு இருந்த வேளையில் ,அதற்கு பலம் சேர்க்கும் வகையில் வெள்ளக்கார பெண்மணியின் இந்த பேச்சு வைரலாகி வருகிறது .
கடல் கடந்து வெளிநாட்டவர்கள் மத்தியில் செந்தமிழன் சீமான் ,அவரது நாம் தமிழர் கட்சி என்பன சென்று சேர்ந்துள்ளது ,பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது .
சீமான் பேசும் அரசியல்
சீமான் பேசும் அரசியல் என்பது மனிதர்களுக்கும் மட்டும் அல்லாது ,அணைத்து உயிர்களுக்குமான அரசியலாக காணப்படுகிறது .
அவ்வாறன அரசியல் பேசும் சீமான் பேச்சு ,கொள்கை ,சிந்தாந்தம் ,வெளிநாட்டவர்கள் உற்று நோக்குவதன் வெளிப்பாடே இந்த அவுஸ்ரேலிய இளம் பெண்மணி வெளியிட்டுள்ள காணொளியாகும் .
நாம் தமிழர் சர்வதேச பேசு பொருளாக மாற்றம் பெற்றுள்ளது ,பிரதான கட்சிகளுக்கு பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது .
பாலியல் வன்புணர்வுக்கு கும்பல் சிக்கியது
பாலியல் வன்புணர்வுக்கு கும்பல் சிக்கியது
பாலியல் வன்புணர்வுக்கு கும்பல் சிக்கியது தனது சகோதரியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சகோதரன் தனது சகோதரியால் சிக்கினார்
தனது சகோதரியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சகோதரன் தனது சகோதரியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதுடன், வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்த குற்றச்சாட்டில் சகோதரன் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு பகுதியில்
யாழ்ப்பாணம் நகர் பகுதியை அண்டிய கிராமத்தை சேர்ந்த 34 வயதுடைய பெண்ணொருவர் தனது பெற்றோர் உயிரிழந்த நிலையில் , சகோதரியுடன் வடமராட்சி கிழக்கு பகுதியில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் வசித்து வந்துள்ளார்.
பெண்ணின் சகோதரி உயிரிழப்பு
இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் பெண்ணின் சகோதரி உயிரிழந்துள்ளார். அதனை அடுத்து ஆதரவற்றோர் இல்லத்தில் வசித்து வந்த சகோதரியை , யாழ்.நகர் பகுதியை அண்டிய பிரதேசத்தில் வாழும் சகோதரன் தன்னுடன் அழைத்து வந்து தங்க வைத்துள்ளார்.
பாலியல் வன்புணர்வுக்கு கும்பல் ஒன்று உட்படுத்தி
இந்நிலையில் கடந்த ஜனவரி மாதம் குறித்த பெண்ணுக்கு போதைப்பொருட்களை வலுக்கட்டாயமாக நுகர வைத்தும் , போதை
ஊசிகளை செலுத்தியும் பாலியல் வன்புணர்வுக்கு கும்பல் ஒன்று உட்படுத்தி வந்துடன் பெண்ணை சித்திரவதைக்கு உள்ளாக்கியதும் வந்துள்ளது.
ஆதரவற்றோர் இல்லத்தில்
பின்னர் கடந்த வாரம் மீண்டும் ஆதரவற்றோர் இல்லத்தில் சகோதரன் தனது தங்கையை கொண்டு சென்று சேர்த்துள்ளார்.
பெண்ணின் நடவடிக்கையில் மாற்றங்கள் தென்பட்டதுடன் , உடலில் காயங்கள் காணப்பட்டமையால் , இல்ல நிர்வாகத்தினரால் , பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் பெண் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
வைத்திய சிகிச்சையின் போதே பெண் தனக்கு நேர்ந்த கொடுமைகளை விபரித்துள்ளார்.
பெண்ணை அடித்து துன்புறுத்தி சித்திரவதை
அதனை அடுத்து சட்ட வைத்திய அதிகாரியினால் , முன்னெடுக்கப்பட்ட மருத்துவ பரிசோதனைகளின் போது , பெண் பாலியல் வன்புணர்வுக்கு
உட்படுத்தப்பட்டுள்ளமையும் , பெண்ணை அடித்து துன்புறுத்தி சித்திரவதைக்கு உள்ளாக்கியமைக்கான காயங்கள் உடலில் காணப்பட்டுள்ளமையும் உறுதிப்படுத்தப்பட்டது.
யாழ்ப்பாண பொலிஸார் விசாரணை
சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
விசாரணைகளின் அடிப்படையில் , பெண்ணின் சகோதரனே , பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி வந்தமையும் , போதைப்பொருட்களை கட்டாயப்படுத்தி நுகர வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியமையும் தெரிய வந்துள்ளது.
சகோதரன் கைது
அதனை அடுத்து சகோதரனை கைது செய்த பொலிஸார் விசாரணைகளின் பின்னர் யாழ்,நீதவான் நீதிமன்றில் நேற்றைய தினம் வியாழக்கிழமை முற்படுத்தியவேளை , சகோதரனை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.
பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியவர்கள் கைது
அதேவேளை, பெண்ணை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியவர்கள் என 08 பேரை அடையாளம் கண்டுள்ளதாகவும் , அவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஏவுகணைகளை தூக்கி செல்லும் உலங்குவானூர்தி
ஏவுகணைகளை தூக்கி செல்லும் உலங்குவானூர்தி
ஈரான் ஏவுகணைகளை தூக்கி செல்லும் உலங்குவானூர்தி,இஸ்ரேலுக்குள் ஈரான் நடத்திய ஏவுகணைகளை உலங்குவானூர்தியில் தூக்கிச்செல்லும் இஸ்ரேலிய இராணுவம் .
சிரியாவில் ஈரானிய தூதரகம் மீது தாக்குதல் நடத்தியமைக்கு பதிலடியாக ,இஸ்ரேல் மீது ஈரான் கடும் ஏவுகணை மற்றும் ,தற்கொலை டிரோன் தாக்குதலை நடத்தியது .
இந்த தாக்குதலில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் மூலமும் தாக்குதல் நடத்தியது .
இதில் ஈரான் கண்டம் விட்டு கண்டம் பாயும் நீண்டதூர ஏவுகணைகள் சுட்டு வீழ்த்த பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் அறிவித்து இருந்தது .
அவ்வாறு சுட்டு வீழ்த்த பட்ட சில ஏவுகணைகளை .இஸ்ரேலிய இராணுவம் உலங்கு வானூர்தி மூலம் தூக்கி செல்லும் காட்சிகள் இவை .
சொல்லி அடித்த ஈரான்
இஸ்ரேலிய நகரங்கள் இராணுவ மையங்கள் மீது தாக்குதல் நாடத்துவோம் என ,சொன்னது போன்று சொல்லியடித்த ஈரான் செயல் கண்டு ,இஸ்ரேல் அதிர்ச்சியில் உறைந்துள்ளது .
வாய் சாடல் மட்டும் ஈரான் விடும் என நினைத்த இஸ்ரேலுக்கு ,ஈரான் வழங்கிய நேரடி தாக்குதலை அடுத்து அதிர்ச்சியில் இஸ்ரேல் இராணுவம் ,மொசாட் உளவுத்துறை உறைந்துள்ளமை குறிப்பிட்ட தக்கது .
இஸ்ரேல் அமைச்சர் விபத்தில் காயம்
இஸ்ரேல் அமைச்சர் விபத்தில் காயம்
இஸ்ரேல் அமைச்சர் விபத்தில் காயம் .இஸ்ரேல் தேசிய பாதுகாப்பு அமைச்சர் பென் கிவீர் பயணித்த வண்டி கவிழ்ந்தத்தில் அவர் காயம் அடைந்துள்ளனர் .
இஸ்ரேலிய போர் அமைச்சரவையில் முக்கியமானவராக விளங்கிய இவரே இஸ்ரேல் பாலஸ்தீன போர் நீடித்து செல்ல காரணமானவர் .
அவ்வாறான அமைச்சு பெருமானே வீதி விபத்தில் காயமடைந்துள்ளார் .
இஸ்ரேல் போர் அமைச்சர்
இஸ்ரேல் நாட்டின் போர் அமைச்சராக விளங்கியவரும் ,இனவாதியும் கடும் போக்காளருமான ,பெண் கிவீரே விபத்தில் சிக்கி காயமடைந்துள்ளார் .
காயங்களுடன் தப்பியவர் ,உயிரிழக்காது தப்பித்துள்ளார் .

இஸ்ரேலிய உளவுத்துறையால் நன்கு திட்டமிட்டு இவர் வீதி விபத்தில் இவ்விதம் போட பட்டுள்ளார் என்பதாகவே விபத்தை பார்க்கும் பொழுது தெரிகிறது .
பாதுகாப்பு வண்டிகள் பயணித்த பொழுது ,இவ்விதம் இவர் விபத்தில் சிக்கியதால் இருந்து பலத்த சந்தேகத்தை கிளப்பியுள்ளது .
அப்பவி பாலஸ்தீன காசா மக்கள் பல்யாகவே ,இந்த இனவாதியே காரணமாக விளக்கியவர் .
இவர் இவ்விதம் காயமடைந்த செயல் கண்டு அரேபிய மக்கள் குஷியில் உறைந்துள்ளான் .

ஹிஸ்புல்லா தளபதி குண்டு வீச்சில் பலி
ஹிஸ்புல்லா தளபதி குண்டு வீச்சில் பலி
ஹிஸ்புல்லா தளபதி குண்டு வீச்சில் பலி .இஸ்ரேல் உளவு விமானம் நடத்திய குண்டுவீச்சில் ஹிஸ்புல்லா மூத்த தளபதி பலியாகியுள்ளார் .
கடந்த தினம் லெபனான் ஹிஸ்புல்லா அமைப்பின் ஆளுகை பகுதிக்குள் ,தனது வாகனத்தில் பயணித்து கொண்டிருந்த ,கலாஃப் என்கின்ற ,ஜமா இஸ்லாமியா அமைப்பில் மூத்ததளபதி ,இஸ்ரேலினால் படுகொலை செய்யப்பட்டுள்ளார் .
லெபனான் ஹிஸ்புல்லாவின் ஆளுகை பகுதிக்குள் தொடராக ,பலரை இஸ்ரேல் மொஸாட் உளவுத்துறை படுகொலை செய்து வருகிறது .
இவ்வாறு படுகொலை செய்ய பட்ட கலாஃப் என்கின்ற மூத்த தளபதி ,வடக்கு இஸ்ரேல் இராணுவ நிலைகள் மீது தாக்குதல் நடத்துவதற்கு ,முக்கிய மூளையாக செயல்பட்டவர் .
ஹிஸ்புல்லா ,ஹமாஸுடன் நெருங்கிய தொடர்புகளை பேணி , நாசகார தாக்குதல்களை இஸ்ரேலுக்கு நடத்திட தயாராகி கொண்டிருந்தவர் இவர் என ,இஸ்ரேல் மொசாட் அறிவித்துள்ளது .
அவ்வாறான மிக சக்தி வாய்ந்த முக்கிய தளபதியை ஹிஸ்புல்லா போர் அணிகள் ,இழந்துள்ளது என்கிறது இஸ்ரேல் .
தீவிரமடையும் இஸ்ரேல் தாக்குதல் .
முக்கிய தளபதிகளை படுகொலை செய்வதன் ஊடாக ,அந்த போர் அமைப்பை முற்றாக அழித்துவிடலாம் என்கின்ற, மொஸாட்டின் நடவடிக்கை வெற்றி பெறுகிறது என்கிறது மேற்குலகம் .
ஆனால் தளபதிகள் பலியானாலும் , இலக்கு நோக்கி நாங்கள் பயணிப்போம் என்கிறது போராட்ட அமைப்பினர் .
ஒருவாரத்தில் லெபனானுக்குள் நடந்த நான்காவது முக்கிய தளபதி படுகொலை சம்பவமாக இது அமைய பெற்றுள்ளது .
தாக்கியது எப்படி
இந்த தாக்குதல் தளபதி மீது தாக்குதல் நடத்தியது எப்படி என்பது தொடர்பில் ,தாக்குதல் நடத்தும் காணொளியை இஸ்ரேல் இராணுவம் வெளியிட்டுள்ளது .
வாகனம் பயணித்து கொண்டுள்ளது ,அப்பொழுது அந்த பகுதி ஊடாக பறந்து வந்த ஆள் இல்லா உளவு விமன்ம் திடீர் ஏவுகணை தாக்குதலை மேற்கொள்கிறது .
அப்பொழுது அந்த வண்டி தீப்பிடித்து வெடித்து எரிகிறது .சம்பவ இடத்திலேயே குண்டு பட்டு அவர் பலியாகியுள்ளார் .
யூத இராணுவத்தின் தாக்குதல் தளபதி ஒருவர் மீது வான்வெளி தாக்குதலை நடத்தி ஹிஸ்புல்லா படைகள் படுகொலை செய்திருந்தனர் .
அதன் பின்னர் இடம்பெற்ற தாக்குதலாக இது அமைய பெற்றுள்ளது குறிப்பிட தக்கது .
காசாவில் மக்கள் படுகொலை
காசாவில் மக்கள் படுகொலை
பாலஸ்தீனம் காசாவில் மக்கள் படுகொலை, மிக பெரும் புதை குழி கண்டு பிடிப்பு .
இஸ்ரேல் ஆக்கிரமிப்பு இராணுவத்தினரால் காசா நாசர் மருத்துவமனை ஆக்கிரமிக்க பட்டது .
அவ்வாறு இஸ்ரேல் இராணுவம் மருத்துவமனையில் இரண்டு மனித புதை குழி கண்டு பிடிக்க பட்டுள்ளது .
இவ்வாறு கண்டு பிடிக்க பட்ட புதைகுழியில் 390 சடலங்கள் மீட்க பட்டுள்ளன .
கை ,கால் கட்ட பட்ட சடலங்கள்
கை ,கால் கட்ட பட்ட நிலையில் சடலங்கள் மீட்க பட்டுள்ளன .இவ்வாறு மிக கொடூரமாக வதைகள் செய்ய பட்ட நிலையில் சடலங்கள் மீட்க பட்டுள்ளன .
சிறுவர்கள் ,பெண்கள் ,வயோதிபர்கள் ,உள்ளிட்டவர்கள் மிக கொடூரமாக தாக்க பட்டு , வெட்ட பட்டு ,கற்பழிக்க பட்ட நிலையில் சடலங்கள் மீட்க காணப்படுகின்றன .
சிறுவர்கள் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்த பட்ட நிலையில் சடலங்கள் மீட்க பட்டுள்ளன .
காஸாவில் கண்டு பிடிக்க பட்ட மனித புதைகுழியை ,விசாரணை நடத்தி உண்மையை கணடறியும் படி ,ஐக்கிய நாடுகள் சபை வேண்டுதல் விடுத்துள்ளது .
இஸ்ரேல் வீடுகள்அழிப்பு மக்கள் காயம்
இஸ்ரேல் வீடுகள் அழிப்பு மக்கள் காயம்
இஸ்ரேல் வீடுகள்அழிப்பு மக்கள் காயம் ,இஸ்ரேல் ஹிஸ்புல்லாவுக்கு இடையில் கடும் யுத்தம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .
இந்த இரு தரப்பு போரில் இஸ்ரேல் ,வீடுகள் அழிக்க பட்டுள்ளன .
ஆக்கிரமிக்க பட்ட பலஸ்தீனிய பகுதியில் நிறுவ பட்ட , இஸ்ரேல் வீடுகள்அழிப்பு மக்கள் காயம் பயங்கரவாத குடிகளின் வீடுகளே அழிக்க பட்டுள்ளன .
இந்த தாக்குதலில் இஸ்ரேல் வீடுகள் தீயில் எரிந்து அழிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .
இஸ்ரேலிய நகரங்கள் ,இராணுவ தளங்களை இலக்கு வைத்து, ஹிஸ்புல்லா போராளிகள் ஏவுகணைகள் ரொக்கட் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளன .
இடைவிடாது ஹிஸ்புல்லா நடத்தும் தாக்குதலினால் ,இஸ்ரேல் குடியேற்ற வாசிகள் வீடுகளை விட்டு ஓட்டம் வருகின்றன .
லெபனான் 35 வீடுகள் அழிப்பு
லெபனான் ஹிஸ்புல்லா ஆளுகைபகுதிக்குள் இஸ்ரேல் விமானங்கள் நடத்திய தாக்குதலில் .35 வீடுகள் அழிக்க பட்டுள்ளன .மக்களும் காயமடைந்துள்ளனர் .
வாழ்விடங்களை குறிவைத்து இஸ்ரேல் விமானங்கள் தாக்குதல் , இஸ்ரேலுக்கு உள்ளே மக்கள் வீடுகளை ஹிஸ்புல்லாவும் தாக்கிட ஆரம்பித்துள்ளது .
இஸ்ரேல் பாலஸ்தீன போர்
போராட்டம் ஏற்படாதவாறு பொருளாதார கட்டமைப்பு
போராட்டம் ஏற்படாதவாறு பொருளாதார கட்டமைப்பு
போராட்டம் ஏற்படாதவாறு பொருளாதார கட்டமைப்பு மக்கள் போராட்டம் மீண்டும் ஏற்படாத வகையில் பொருளாதாரத்தை கட்டமைப்போம்.
சரிவடைந்த பொருளாதாரத்தை இரண்டு வருடங்களில் மீட்க முடிந்தது. சரிவடையாத வகையில் வலுவான பொருளாதாரத்தை கட்டமைத்து மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவோம் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்தார்.
கொழும்பு ஐ.ரி.சி. ரத்னதீப அதி சொகுசு ஹோட்டல் கட்டடத்தை நேற்று திறந்து வைத்து உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
சரிவடைந்த பொருளாதாரத்தை மீட்பதற்கான அஸ்திரமாகவும் அது அமைந்திருக்கும். சுற்றுலா வியாபாரத்தினால் இலங்கையை துரிதமாக மீட்கலாம். அதற்கான வசதிகளை வழங்க நாம் தயார்.
அவ்வாறானதொரு மக்கள் போரட்டம் மீண்டும் ஏற்படாதவாறான பொருளாதாரத்தை கட்டமைக்க வேண்டும். அதற்கு தேவையான திட்டங்களை நாம் செயற்படுத்துவோம். இந்த திட்டங்களால் பொருளாதாரத்தையும் நிலைப்படுத்த முடியும். அதனால் மக்களின் வாழ்க்கைத் தரமும் உயர்வடையும் என்றார்.
எதிர் வரும் தேர்தலில் மக்கள் ஆதாராவை பெற்றுக்கொள்ள ரணில் பல்வேறு பட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருவது குறிப்பிட ஹக்கது .
திருட்டு வைத்தியருக்கு வலை வீச்சு
திருட்டு வைத்தியருக்கு வலை வீச்சு
திருட்டு வைத்தியருக்கு வலை வீச்சு குளியாப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு நேற்று (24) தனது தாயுடன் சென்ற குழந்தையிடமிருந்து வைத்தியர் போல நடித்த ஒருவர் தங்க ஆபரணங்களை திருடியுள்ளதாக குளியாப்பிட்டிய தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
அனுக்கனே கும்பகொடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 40 வயதுடைய தாய் ஒருவர் தனது மகனின் காலில் முள்ளினால் ஏற்பட்ட காயத்திற்கு சிகிச்சை பெற குளியாப்பிட்டிய போதனா வைத்தியசாலையில் வைத்தியரைச் சந்தித்து தேவையான சிகிச்சைகளை பெற்றுக்கொண்டார்.
மருத்துவர் போல் தோற்றமளிக்கும் குறித்த நபர் மகனுக்கு ஸ்கேன் பரிசோதனை செய்ய வேண்டும் என்றும், அவர் அணிந்திருந்த தங்க ஆபரணங்களை கழற்றி பையில் போடுமாறும் கூறியுள்ளார்.
இதன்போது, மருத்துவர் வேடமணிந்த நபர் குழந்தையை அழைத்துச் சென்று மருத்துவமனையில் உள்ள பெஞ்சில் உட்கார வைத்துவிட்டு குழந்தையின் தங்க ஆபரணங்களுடன் தப்பிச் சென்றதாக மூத்த பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மேற்படி சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .போலீஸ் விசாரணைகள் தொடர்கின்றன .
சுவீடன் பறந்த அனுர திஸாநாயக்க
சுவீடன் பறந்த அனுர திஸாநாயக்க
சுவீடன் பறந்த அனுர திஸாநாயக்க தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக்க சுவீடன் நாட்டிற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
நேற்றிரவு (25) அனுரகுமார திஸாநாயக்க இலங்கையில் இருந்து புறப்பட்டுச் சென்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அனுரகுமார திஸாநாயக்க ஏப்ரல் 27 ஆம் திகதி சனிக்கிழமை சுவீடனில் நடைபெறும் பொதுக்கூட்டம் மற்றும் பல சிநேகபூர்வ சந்திப்புகளில் பங்கேற்பதற்காகவே இந்த விஜயத்தை மேற்கொண்டுள்ளார்.
இலங்கையில் அடுத்த ஜனாதிபதி தான் எனவே முழக்கம் இட்டு வரும் அனுர திஸாநாயக்க தற்போது முக்கிய ஏறிப்போய் நாடுகள் மற்றும் ஆசிய நாடுகளுக்கு பயணம் சென்றவண்ணம் உள்ளார் .
தான் இலங்கையின் ஜனாதிபதியானால் அடுத்து என்ன செய்யவேண்டும் என்ற வரைபு அட்டவணை ஒன்று சில நாடுகளினால் அனுர திஸாநாயக்காவுக்கு வழங்க பட்டுள்ளது என, சில எதிரிகள் இப்படி உரைத்து வருகின்றன .
இது அனுர திஸாநாயக்க்வின் அரசியல் பயணத்தை திசை திருப்பி மக்களை அவருக்கு எதிராக திசை திருப்பும் தந்திரோபாய திட்டமா என எண்ண வைக்கிறது .
எனினும் இவரும் சிங்கள மக்கள் மத்தியில் பேசும் பொழுது இனவாதத்தை கக்கிய வண்ணம் பயணிக்கிறார் .
அவ்வாறன இவர் எவ்வாறு தமிழருக்கு தீர்வினை பெற்று கொடுப்பார் என்ற விடயம் எழுகிறது .
சுவீடன் பயணமும் இதன் ஒரு அங்கமாக காணப்படலாம் என எதிர் பார்க்க படுகிறது .
இராணுவ கெப்வண்டி மீது லொறி மோதல்
இராணுவ கெப்வண்டி மீது லொறி மோதல்
இராணுவ கெப்வண்டி மீது லொறி மோதல் ,அதிகாலை மாங்குளம் வசந்தநகரில் இராணுவ கெப் வண்டி மீது லொறி மோதியதில் இலங்கை இராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 9 பேர் காயமடைந்துள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ்
முல்லைத்தீவு மாவட்டத்தின் மாங்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முறிகண்டி பகுதியில் இன்று (26) காலை இடம்பெற்ற விபத்தில் இராணுவ வீரர் ஸ்தலத்தில் பலியாகியுள்ளதுடன், 7 பேர் காயமடைந்துள்ளனர்.
குறித்த சம்பவம் காலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளது. முறிகண்டி வசந்தநகர் சந்தியின் A9 வீதியில் குறித்த விபத்து இடம் பெற்றுள்ளது.
கொழும்பிலிருந்து யாழ். நோக்கி பயணித்த பார ஊர்தியை, அதே திசையில் பயணித்த இராணுவ கப் வாகனம் முன் நோக்கி முற்பட்டுள்ளது.
இதன்போது குறித்த கப் வாகனம் திடிரென இயங்காமல் நின்றுள்ளது. எதிரே வந்த வாகனம் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகி விடும் எனும் அச்சத்தில் விபத்தை தருக்கும் நோக்குடன் சாரதி பாரஊர்தியை செலுத்த முற்பட்டுள்ளார்.
இராணுவ வீரர்கள் வீதியில் விழுந்துனர்
இதன்போது, கப் வாகனத்தில் பாரஊர்தி மோதியதில் அதில் பயணித்த இரண்டு இராணுவ வீரர்கள் வீதியில் விழுந்துள்ளனர்.
அதில் ஒருவர் மேல் பாரஊர்தி ஏறியதில் குறித்த இராணுவ வீரர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்படவுள்ளது.
இதேவேளை சம்பவத்தில் காயமடைந்த 7 பேரில் இருவர் இரணைமடுவில் உள்ள இராணுவ வைத்தியசாலையிலும், மற்ற நால்வரும் கிளிநொச்சி வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஹிஸ்புல்லா ரொக்கட் விமானம் தாக்குதல்
ஹிஸ்புல்லா ரொக்கட் விமானம் தாக்குதல்
ஹிஸ்புல்லா ரொக்கட் விமானம் தாக்குதல் ,இஸ்ரேல் இராணுவ தளங்கள் மீது ஹிஸ்புல்லா தாக்குதல் ,அதிர்ச்சியில் எதிரி படைகள் .
இஸ்ரேலை இராணுவ படை முகாம்கள் ,ஆக்கிரமிப்பு குடியேற்ற பகுதிகள் மீது ஹிஸ்புல்லா ஏவுகணை விமானம் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது .
இஸ்ரேலிய எதிரிகளுக்கு இழப்பு
. இஸ்ரேலிய எதிரிகளுக்கு இழப்பு என ஹிஸ்புல்லா போர் படைகள் அறிவித்துள்ளனர் .
ஆக்கிரமிப்பு இஸ்ரேலிய இராணுவ மையங்கள் ,இராணுவ , கோபுரங்கள் என்பனவற்றின் மீது கடும் பட்டுள்ளது .
லெபனான் ஹிஸ்ப்[உள்ள பகுதிக்குள் இஸ்ரேலிய இராணுவம் தாக்குதலை நடத்திய நிலையில் பதிலடி பழிவாங்கும் தாக்குதலை ஹிஸ்புல்லா நடத்தியுள்ளது .
ரொக்கட் விமானம் தாக்குதல்
இஸ்ரேலிய படை நிலைகள் மீது மட்டும் மற்றும் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்த பட்டுள்ளதாக ஹிஸ்புல்க்ள போராளிகள் அறிவித்துள்ளன .
பாலஸ்தீனம் இஸ்ரேலுக்கு இடையில் தொடர்ந்து இடம்பெற்று வரும் இந்த தாக்குதலில் ,இஸ்ரேலிய இராணுவம் மிக பெரும் உள்ளது .
மீது ஆறுமுனைகள் ஊடாக கடும் தாக்குதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
லெபனான் ஹிஸ்புல்லா தாக்குதல் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவம் பெரும் நெருக்கடியை வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது .
கடல் கொந்தளிப்பாக காணப்படும் எச்சரிக்கை
கடல் கொந்தளிப்பாக காணப்படும் எச்சரிக்கை
கடல் கொந்தளிப்பாக காணப்படும் எச்சரிக்கை ,நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படுமென சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் கூறினார்.
இதன்படி, மத்திய, சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் தென் மாகாணங்களின் பல இடங்களில் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் காணப்படும்
காற்று மின்னல் தாக்குதல்
பலத்த காற்றும் மின்னல் தாக்கங்களும் ஏற்படக் கூடிய சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப் படுகின்றனர்.
நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்கள் மிதமான அலையுடன் காணப்படும்.
ஆனால் இடியுடன் கூடிய மழை பெய்கின்ற சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசுவதுடன் அவ்வேளைகளில் கடல் பிராந்தியங்கள் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படும் என்றார்.
இதன் கடல் கரையோர மக்களுக்கும் மீனவர்களும் ,சுற்றுலா பயணிகளுக்கும் கடும் எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .
சம்பந்தன் ஐயாவுக்கு விடுமுறை
சம்பந்தன் ஐயாவுக்கு விடுமுறை
சம்பந்தன் ஐயாவுக்கு விடுமுறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஐயா, பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்காமல் இருக்க மேலும் 3 மாத கால விடுமுறை வழங்க பாராளுமன்றம் அனுமதியளித்துள்ளது.
பாராளுமன்றம் வியாழக்கிழமை (25) எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவான லக்ஸ்மன் கிரியெல்ல எம்.பி., த.தே.கூவின் தலைவர் இரா.சம்பந்தன்
பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்காமல் இருக்க மேலும் 3 மாத கால விடுமுறை வழங்கும் முன்மொழிந்தார். அதற்கு பாராளுமன்றம் அங்கிகாரம் வழங்கியுள்ளது.
நெதன்யாகு ஆட்சி கவிழ்க்கபடும் ஈரான்
நெதன்யாகு ஆட்சி கவிழ்க்கபடும் ஈரான்
நெதன்யாகு ஆட்சி கவிழ்க்கபடும் ,ஈரான் இராணுவ தளபதி அறிவிப்பு.
இஸ்ரேல் முழுவதும் தாக்கும் சக்தி வாய்ந்த ஏவுகணை எம்மிடம் உள்ளது .அதனை வைத்து இஸ்ரேலிய இலக்குகள் மீது தாக்குவோம் என ஈரானிய தளபதி முழங்கியுள்ளார் .
ஈரான் மீது மிக பெரும் தாக்குதலை இஸ்ரேல் நடத்த கூடும் என்ற பதட்டம் உருவாகியுள்ள இவ்வேளையில் ,தற்போது முக்கிய ஈரான் இராணுவ தளபதி இவ்விதம் தெரிவித்து பரபரப்பை கிளப்பியுள்ளார் .
இஸ்ரேல் ஈரான் போர்
இஸ்ரேல் மீது ஈரான் மிக பெரும் போர் ஒன்றை நடத்த போகிறது என்பதை இவரது கூற்றில்இருந்து தெரிய முடிகிறது .
அவ்வாறு ஈரான் மீது இஸ்ரேல் வலிந்து தாக்குதலை நடத்தினால் அதற்கு பதிலடி தாக்குதல் ஒன்றை ஈரான் நடத்தும் .
அது மிக மோசமான தாக்குதல்களாகவும் ,பேரழிவை ஏற்படுத்த கூடிய வகையில் காணப்படும் என்பதே நிலவரமாக தெரிகிறது .
ஆழம் தெரியாதது காலை வைத்து இஸ்ரேல் இராணுவம் அடி வாங்கி சுருள போகிறது என்பதற்கான ,முன் அறிவிப்பாக இதனை எடுத்து கொள்ளலலாம்
ஆயுதங்களை போடுகிறோம் ஹமாஸ் அறிவிப்பு
ஆயுதங்களை போடுகிறோம் ஹமாஸ் அறிவிப்பு
பாலஸ்தீன தனி நாடு வழங்கினால், ஆயுதங்களை கீழே போடுகிறோம் ஹமாஸ் அறிவிப்பு.

பாலஸ்தீன தனி நாடு வழங்கினால், ஆயுதங்களை போடுகிறோம் ஹமாஸ் அறிவிப்பானது ,பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
இஸ்ரேல் பாலஸ்தீன போர்
இஸ்ரேல் பாலஸ்தீன போர் இன்றைய நிலவரத்தில் இந்த ஆயுத ஆயுத்தங்களை கீழே போடுதல் விடயம் அரசியலில் சல சலப்பை ஏற்படுத்தி இருக்கிறது .
காசா போர் படைகள் இந்த அறிவிப்பு இஸ்ரேலிய ,அமெரிக்கா அதிகார வர்க்கங்களையும் ,கிலி கொள்ள வைத்துள்ளது .
இஸ்ரேல் பாலஸ்தீன போர் அரங்கில் பல அதிசயிக்க வைக்கும் அதிரடி தாக்குதல்களை நடத்தி ,ஆக்கிரமிப்பு இஸ்ரேலியா இராணுவத்திற்கு வரலாற்று தோல்வியை ஏற்படுத்திய ஹமாஸ் ஆயுதங்களை போடுவதர்க்கு தயார் எனும் விடயம் இஸ்ரேலுக்கு வைக்க பட்ட பொறியாகும் .
பாலஸ்தீன தனி நாடு
ஹாமாஸ் அழிக்க பட வேண்டுமாக இருந்தால் ,பாலஸ்தீன தனி நாட்டை கொடுத்து விடு என்ற இந்த விடயம் ,ஹமாஸ் போர் படைகளின் அடுத்த அரசியல் வெற்றியாகவே பார்க்க படுகிறது
ஈரான் ஒருபோதும் சரண் அடையாது
ஈரான் ஒருபோதும் சரண் அடையாது
ஈரான் ஒருபோதும் சரண் அடையாது என ஈரான் மத தலைவர் அறிவித்துள்ளார் .
அமெரிக்கா ,ஐரோப்பா ,மேற்கு நாடுகளினால் விதித்த பொருளாதார தடைகள் ஈரானிய நாட்டை சரண் அடைய வைக்க முடியாது என அவர் முழங்கினார் .
பொருளாதார தடை
இந்த பொருளாதார தடைகளினால் ,ஈரானிய தேசம் ஒருபோதும் எதிரிகள் காலின் கீழ் சரணாகதி ஆகாது என ஈரான் மத தலைவர் முழங்கியுள்ளார் .
அடக்குமுறைகளை விதித்து அடக்கியாள நினைத்த , அந்த அடக்கு முறைகளை உடைத்தெறிந்து ஈரான் ,அதி உச்ச வளர்ச்சியை தழுவியுள்ளது .
இந்த ஆண்டில் மட்டும் 50 அமெரிக்கா டொலர்களை வருமானமாக பெற்று சாதனை படைத்துள்ளது .
அவ்வாறு சாதனை படைத்து செல்லும் ஈரான் இந்த அமெரிக்கா உள்ளிட்ட நேச நாடுகளுக்கு வியப்பையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
வடகொரியாவின் ஆயுத கப்பல்
ரஸ்யாவுக்கு சென்று கொண்டிருந்த வடகொரியாவின் ஆயுத கப்பல் ஒன்று சிக்கியுள்ளது .
ரஷ்யா உக்ரைன் போருக்கு உதவிட ,வடகொரியா ரஸ்யாவுக்கு ஆயுதங்களை விற்பனை செய்கிறது .
அவ்வாறான வடகொரியா ஆயுத கப்பலே அமெரிக்காவிடம் சிக்கியுள்ளது .
நீதிபதி இளஞ்செழியன்மீது துப்பாக்கிச்சூடு
நீதிபதி இளஞ்செழியன்மீது துப்பாக்கிச்சூடு
மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன்மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் அவரது மெய்ப்பாதுகாவலாரான பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் உயிரிழந்தார் .
மற்றும் ஒரு பொலிஸ் உத்தியோகத்தர் காயமடைந்த சம்பவம் தொடர்பான வழக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் புதன்கிழமை (24) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன்
இந்த வழக்கில் சாட்சியமளிப்பதற்காக வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன், விசேட அதிரடிப் படையினரின் பாதுகாப்புடன் யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாகத்திற்கு வருகைதந்தார்.
யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி டெனிஸ் சாந்தன் சூசைதாஸன் முன்னிலையில் எடுத்து கொள்ளப்பட்ட வழக்கு விசாரணையில் மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியனும் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தரும் சாட்சியமளித்தனர்.
சட்டமா அதிபர் திணைக்களம்
குறித்த வழக்கில் சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் விசேட அரச சட்டவாதி நாகரத்தினம் நிசாந்தும் எதிராளிகள் சார்பில் சட்டத்தரணி பிரதீபன் சர்மினியும் ஆஜராகினர்.
குறித்த வழக்கு விசாரணை தொடர்ச்சியாக மூன்று தினங்களுக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளது.











































