இலங்கை இந்தியா கப்பல் சேவை ஆரம்பம்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை இந்தியா கப்பல் சேவை ஆரம்பம்

இலங்கை இந்தியா கப்பல் சேவை ஆரம்பம்

இலங்கை இந்தியா கப்பல் சேவை ஆரம்பம் ஆக உள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது .நிறுத்த பட்ட இரு நாட்டு கப்பல் சேவைகள் வழமை போன்று இடம்பெறும் என தெரிவிக்க பட்டுள்ளது .

இந்தியா இலங்கைக்கு இடையில் மேற்கொள்ள பட்ட ஒப்பந்தத்தின் அடைப்படையில் ,இந்த கப்பல் நடவடிக்கை மேற்கொள்ள பட்டு வந்தது .

சீரற்ற காலநிலை காரணமாக தடை பட்டிருந்த ,இந்தியா இலங்கை பயணிகள் கப்பல் சேவைகள், மீளவும் ஆரம்பிக்க படவுள்ள விடயம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

கப்பல் சேவையின் கட்டண விபரம்

இந்தியா இலங்கைக்கு இடையில் இடம்பெறும் பயணிகள் கப்பல் சேவையின் அதிகரித்த கட்டணம் .

கீழ் தளத்தில், பயணிக்க ஐந்து ஆயிரம் இந்தியா ரூபாய்களும் ,மேல்தளத்தில் பயணிக்க, ஏழு ஆயிரம் ரூபாய்கள் கட்டணமாக அறவிட படுவதாக தெரிவிக்க பட்டுள்ளது .

இந்தியா நாக பட்டினம் ,இலங்கை காங்கேசன் துறைக்கு இடையில் ,இந்த கப்பல் பயண சேவைகள் காணப்படுகின்றன .

இந்த கப்பல் சேவைகள் ஊடாக இரு நாடுகளுக்கும் சிறந்த வர்த்தக பொருளாதார பயன்பெறுகள் உள்ளதாக இரு நாடுகளும் தெரிவித்துள்ளன .

மீளவும் இலங்கை இந்தியாவுக்கு இடையில் பயணிகள் கப்பல் சேவைகள் ஆரம்பிக்க படுவதை இட்டு , பயணிகள் மகிழ்ச்சியில் உறைந்துள்ளனர் .

மீள கப்பல் சேவை நிறுத்த படுமா ..?

பிரதமர் நரேந்திர மோடியினால் ஆரம்பித்து வைக்க பட்ட இந்திய இலங்கை கப்பல் சேவை,பயணிகள் வரவு குறைந்து காணப்பட்டதால் ,அந்த சேவை நிறுத்த .பட்டது

அவ்வாறன நிலையில் மீளவும் இலங்கை இந்தியாவுக்கு இடையில் மக்கள் சென்று வருவதற்கு ,வசதிகளை ஏற்படுத்தி கொடுத்துள்ள ,இந்த கப்பல் சேவை நிறுத்த படக்கூடும் என்கின்ற அச்சமும் வெளியிட பட்டுள்ளது .

மக்கள் பயணிக்க அதிக கட்டணத்தை ,கப்பல் சேவை நிறுவனம் அறவிடுவதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர் .

இதனை இந்தியா இலங்கை போக்குவரத்து அமைச்சர்கள் கவனத்தில் எடுத்து ,மக்களுக்கு சிறந்த விலையில் கட்டணத்தை வசூல் செய்தால் மக்கள் ,கப்பல் ஊடாக பயணம் செய்திட ஏதுவாக இருக்கும் என்கின்ற கருத்து வெளியிட பட்டுள்ளது .

தடைபடாது இந்தியா இலங்கை கப்பல் சேவை தொடர்ந்து பயணிக்க ,இலங்கை அரசு ,இந்தியா அரசு கவனத்தில் எடுத்து செயலாற்றுமா என்பதே கேள்வியாக உள்ளது .

இனஅழிப்பு நடத்திய நெதன்யாகு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

இனஅழிப்பு நடத்திய நெதன்யாகு

இனஅழிப்பு நடத்திய நெதன்யாகு


இனஅழிப்பு நடத்திய நெதன்யாகு கைது செய்ய நடவடிக்கை.
பாலஸ்தீனம் காஸாவில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு நடத்திய இனப்படுகொலையில் கைது செய்திட சர்வதேச நீதிமன்றம் நடவடிக்கை மேற்கொள்ளஉள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .

நெதன்யாகு கைது செய்வதை தடுக்கும் அமெரிக்கா

நெதன்யாகு கைது செய்வதை தடுக்கும் அமெரிக்கா முயற்சிகளை மேகொள்வதாக பிரதமர் நெதன்யாகுவிற்கு ஜனாதிபதி பைடன் தெரிவித்துள்ளார் .


சர்வதேச நீதிமன்றம் நெதன்யாகுவை கைது செய்திடும் நடவடிக்கையை ,தடுத்து நிறுத்த அமெரிக்கா,ஐரோப்பா ,கடும் முயற்சி மேற்கொண்டு வருகின்றன .

உலக மக்கள் கடும் கண்டனம்

வல்லரசுகள் நடவடிக்கைக்கு எதிராக உலக மக்கள் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளனர் .

பாலஸ்தீனம் காஸாவில் முப்பத்தி மக்கள் ,கடந்த ஏழு மாதங்களில் ,இஸ்ரேல் லாம் நெதன்யாகுவின் ஆட்சியால் படுகொலை செய்ய பட்டுள்ளனர் .

படுகொலைகள் இடம்பெற்ற வண்ணம் இருக்க ,தற்போது அந்த பாடுகொலையை புரிந்தவரை காப்பாற்றும் நடவடிக்கையில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளது கொதி நிலையை ஏற்படுத்தியுள்ளது .

நாம் யாரையும் எங்கயேயும் எப்படியும் படுகொலை செய்வோம் ,அதனை யாராலும் ,தடுத்து நிறுத்தவோ தட்டை கேட்கவோ முடியாது என்பது இந்த சம்பவங்கள் கோடிட்டு காட்டுகின்றன .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
Village Cooking Channel புரியும் படுகொலைகள்
Posted in உலக செய்திகள்

Village Cooking Channel புரியும் படுகொலைகள்

Village Cooking Channel புரியும் படுகொலைகள்

Village Cooking Channel புரியும் படுகொலைகள் உலக உலக மக்களை அதிரவைத்து வருகிறது .Village Cooking Channel மிக பெரும் தமிழ் சமையல் youtube சனலாகும் .

மக்கள் மத்தியில் அதிக பிரபலமான இந்த Village Cooking Channel தற்போது ,வாசகர்களை தமது பக்கம் அதிகார ஈர்த்து கொள்ளும் நோக்குடன் ,விலங்குகளை படுகொலை புரிந்து வருகிறது .

village cooking channel விலங்குகள் படுகொலை

இதுவரை 233 தமிழ் சமையல் காணொளிகளை Village Cooking Channel வெளியீடு செய்துள்ளது .அவ்வாறான அனைத்து Village Cooking Channel விலங்குகள் சமையலாக காணப்படுகிறது .

அதிக மக்கள் பார்வையை கவர்வதற்கு ,அதன் மூலம் அதிக பணத்தை சம்பாதிக்கும் நோக்குடன் ,வாய்பேசா விலங்குகளை அதிகமாக தற்போது இந்த தமிழ் சமையல் village cooking channel படுகொலை புரிந்து வருகிறது .

இதுவரை இவர்களானால் 100 க்கு மேற்பட்ட பறவைகல்,மற்றும் 15 க்கு மேற்பட்ட ஆடுகள் ,முயல்,கோழி ,வாத்து ,தீ கோழி ,பண்டி ,போன்ற விலங்குகள் ,பறவைகளை மிக கொடூரமாக கொலை செய்துள்ளனர் இந்த தமிழ் சமையல் குழுமத்தினர் .

விலங்குகளுக்கு எதிரியாக மாறும் Village Cooking Channel

கடவுளின் பெயரால் பற்றும் பாசமும் உள்ளதாக தெரிவிக்கும் இந்த Village Cooking Channel ,செய்வது மிக பெரும் தவறு என விலங்கு பாதுகாவலர்கள் குற்றம் சுமத்துகின்றனர் .

உண்மையில் இந்த தமிழ் சமையல் Village Cooking Channel ரசிகர்களில் நாமும் ஒருவர் ,ஆனால் இந்த கிரமத்து சமையல் சனல் செய்கின்ற .

விலங்குகள் படுகொலையால் இவர்களது காணொளிகளை பார்வையிடுவதை ,எம்மை போன்ற பல உறவுகள் தவிர்த்து வருகின்றனர் .

சமீப காலங்களாக சில முக்கிய அரேபிய மற்றும் உலக நாடுகள் முக்கிய கிரமத்து சமையல் சேனல்களை பார்வையிட்ட பொழுதுஅதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தன .

,இவ்விதமாக விலங்குகள் அதிகம் கொலை செய்யப்படுவதால் ,தற்போது அந்த சமையல் தளங்களின் பார்வைகள் தற்போது வீழ்ச்சியுற்று காண படுகிறது .

ஆபத்தானதாக மாறும் Village Cooking Channel

இவ்வாறு இந்த Village Cooking Channel பயணித்தால்,இவர்களும் அவர்களில் ஒன்றாக காணாமல் போகும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது .

தமிழர்களின் ,முன்னோடிகளாகவும் , முன்னுதாரணமாக விளங்கி வரும் இந்த தமிழர் Village Cooking Channel ,என்ற சமையல் கலை நிபுணர்கள் ,சோகையிழந்து போவதற்கான வாய்ப்புக்கள் அதிகம் காணப்படுகின்றன .

மக்கள் அதிகம் தம்மகத்தே வைத்திருந்து ஆட்சியில் ஏறி வாலாட்டி திரிந்த பல அரசியல் காட்சிகள், எவ்வாறு மக்களில் விரோதிகளாக காணமல் போனார்களோ , இந்த Village Cooking Channel லும் காணாமல் போகும் நிலை ஏற்பட போகிறது .

ஏமாற்றம் அளிக்க போகும் Village Cooking Channel

இது இந்த Village Cooking Channel லை அதிகம் விரும்பி பார்க்கும் மக்களுக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தும் .

அவ்வாறன தவறான வழியில் இந்த Village Cooking Channel செல்கிறது .அதன் குழுமம் இதனை பரிசீலனை செய்து முன்னோக்கி நகருங்கள் .

கிராமத்து முறைக்கு எதிராக மாற மறுக்கும் ,நீங்கள் அந்த கிராமிய வாழ்வே வாழ்வே பிடித்துள்ளதாக கூறும் நீங்கள் ,ஏன் விலங்குகள் மீது அன்பு செலுத்த மறுக்கின்றீர்கள் என்பதற்கு பதில் கூற வேண்டும் தோழர்களே .

அறத்தை போதித்த காந்தியின் தேச புதல்வர்களான Village Cooking Channel விலங்குகள் படுகொலை நிறுத்தி அறத்தின் பால் செல்ல வேண்டும் என்பது மக்கள் வேண்டுதலாகும் .

Error: View 9293b2au4w may not exist
ஆயுதங்கள் வெடித்து 25 கிராமங்கள் அழிவு
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

ஆயுதங்கள் வெடித்து 25 கிராமங்கள் அழிவு

ஆயுதங்கள் வெடித்து 25 கிராமங்கள் அழிவு

கம்போடியாவில் ஆயுத களஞ்சியம் வெடித்து சிதறல் .இந்த ஆயுதங்கள் வெடித்து சிதறியதால் 25 கிராமங்கள் அழிவு என அரசு அறிவித்துள்ளது .

மிக பெரும் வெடியோசையுடன் குண்டுகள் வெடித்து சிதறியது .இந்த சத்தங்கள் பல மைல்களுக்கு கேட்டதாக உள்ளூர் வாசிகள் தெரிவித்துள்ளனர் .

தமது வீடுகள் அழிந்த மக்கள் அழுகையுடன் காணப்படுகின்றனர் .

கம்போடியா மிக வறுமையான .நாடாகும் ,இலங்கையை விட பொருளாதாரத்தில் மிகவும் நலின பட்ட நாடாக காணப்படுகிறது .

குண்டுகள் வெடித்தது எப்படி விசாரணை ஆரம்பம்

அவ்வாறான நாட்டில் , இந்த இராணுவத்தினர் சேமித்து வைத்திருந்த வெடிகுண்டுகள் எப்படி வெடித்தன என்பது தொடர்பான விசாரணையில் பொலிஸ் இராணுவம் ஈடுபட்டுள்ளனர் .


சுடுகாடாக காட்சியளிக்கும் வீடுகள் ,கிராமங்கள் .
மழை வெள்ளத்தில் சிக்கி அழிந்தது போல குடிமனைகள் அழிந்து காணப்படுகின்றன .


ஆயுதம் வெடித்த குண்டுகள் சத்தம் பல மைல்களுக்கு கேட்டதாக மக்கள் தெரிவிப்பு .

பாதிக்க பட்ட மக்களுக்கு வீடுகள் கட்டி வேண்டிய நிலையில் அரசு தள்ள பட்டுள்ளது .

இராணுவம் காயம் வாகனங்கள் அழிப்பு

இந்த குண்டு வெடிப்பில் சிக்கி இராணுவம் காயமடைந்துள்ளனர் ,அவ்வேளை அங்கு தரித்து நின்ற வாகனங்கள் என்பனவும் அழிக்கப்பட்டுள்ளன .

நான்கு மாடி கட்டடங்களில் இந்த வெடி குண்டுகள் களஞ்சிய படுத்த பட்டு அந்த இராணுவ முகம் பலத்த பாதுகாப்பின் கீழ் வைக்க பட்டிருந்தது .

அவ்வாறான பாதுகாப்பபு நிறைந்த இராணுவ முகாம் குண்டுகள் வெடித்து சிதறியது ,மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .

திட்டமிடப்பட்ட சதி

திட்டமிடப்பட்ட சதிகளினால் இந்த குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளதாக ,சந்தேகம் வெளியிட பட்டுள்ளது .

உடனடி விசாரணை நடத்தி ஆயுத களஞ்சியம் வெடிப்பு அறிக்கை சமர்ப்பிக்கும் படி அரசு உத்தரவிட்டுள்ளது .

பலமில்லியன் டொலர் பெறுமதியான ஆயுதங்கள் வெடித்து சிதறிட காரணமாக உள்ள அந்த இராணுவ முக்கிய புள்ளி .யார் .?

இலங்கை கொழும்பில் ஆயுத கூடங்கள் வெடித்து சிதறியதற்கு இதுவரை கைது செய்யப்படவில்லை .

அதே போன்றே கம்போடியாவில் இடம்பெற்ற இந்த குண்டு வெடிப்பும் இடம்பெற்று இருக்க கூடும் என ஐயம் வெளியிட பட்டுள்ளது .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
மக்களுக்கு அரிசி வழங்கும் திட்டத்தில் முறைகேடுகள்
Posted in இலங்கை செய்திகள்

மக்களுக்கு அரிசி வழங்கும் திட்டத்தில் முறைகேடுகள்

மக்களுக்கு அரிசி வழங்கும் திட்டத்தில் முறைகேடுகள்

மக்களுக்கு அரிசி வழங்கும் திட்டத்தில் முறைகேடுகள் ,குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரிசி வழங்கும் திட்டத்தில் பல்வேறு முறைகேடுகள் மற்றும் ஊழல்கள் நடந்துள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள்

2.74 மில்லியன் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அரிசி வழங்கும் ஜனாதிபதியின் வேலைத்திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் அரிசி விநியோகிக்கப்படுகிறது.

தெரிவு செய்யப்பட்ட பயனாளி குடும்பங்களுக்கு தலா 10 கிலோ அரிசி விநியோகம் பிரதேச செயலக மட்டத்தில் இடம்பெறுகின்றது.

இந்த அரிசி மக்களுக்கு இலவசமாக வழங்கப்படுகின்ற போதிலும், தங்காலை, நெடோல்பிட்டிய, வெலிபென்ன, லலிதபுர ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பணம் கொடுத்து அரிசியை பெற்றுக் கொள்ள வேண்டியுள்ளதாக குற்றம் சுமத்துகின்றனர்.

பல்வேறு தொகைகளில் பணம்

அதன்படி, 20 ரூபாய் முதல் 150 ரூபாய் வரை பல்வேறு தொகைகளில் பணம் செலுத்த வேண்டியுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் ஹம்பாந்தோட்டை மாவட்ட செயலாளரிடம் வினவியபோது, ​​மக்களுக்கு விநியோகிக்கப்படவிருந்த அரிசி தொகையை பாதுகாப்பதற்காக இருந்த காவலாளிக்கு பணம் கொடுப்பதற்காக மக்களிடம் பணம் வசூலித்து வழங்கப்பட்டமை குறித்து தகவல் கிடைத்ததாக தெரிவித்தார்.

எவ்வாறாயினும், இது தொடர்பான உண்மைகளை ஆராய்ந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

கந்தளாய் பிரதேசத்தில் குறைந்த வருமானம்

இதேவேளை, கந்தளாய் பிரதேசத்தில் குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு வழங்குவதற்காக உத்தியோகபூர்வ நிழற்குடை கட்டிடத்தில் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த வைக்கப்பட்டிருந்த அரசி தொகையில் 20 மூட்டை அரிசியை திருடி செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இன்று (27) காலை குறித்த கட்டிடத்தின் ஜன்னல் திறந்து கிடப்பதைப் பார்த்த பிரதேசவாசி ஒருவர் கிராம அதிகாரி மற்றும் பிரதேச செயலாளரிடம் தெரிவித்துள்ளார்.

கந்தளாய் பொலிஸாரும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

அறையின் பிரதான கதவை உடைத்து உள்ளே நுழைந்து யாரும் அரிசியை திருடிச் சென்றிருக்கவில்லை என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், சந்தேக நபர்களை கண்டுபிடிப்பதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதனிடையே ஹப்புத்தளை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட குறைந்த வருமானம் பெறுவோருக்கு நேற்று வழங்கப்பட்ட அரிசி பாவனைக்கு தகுதியற்றது என அப்பகுதி மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

அரிசி அம்பாறை பிரதேசத்தில்

இந்த அரிசி அம்பாறை பிரதேசத்தில் உள்ள அரிசி ஆலையொன்றினால் வழங்கப்பட்டதாகவும், காலாவதியாகும் திகதிக்கு மேல் மேலும் ஒரு திகதி குறிப்பிட்டு லேபிள் ஒட்டப்பட்டுள்ளதாகவும் மக்கள் தெரிவித்தனர்.

எனினும் ஹப்புத்தளை பிரதேச செயலகத்தின் தலையீட்டின் மூலம் காலாவதியான அரிசிக்கு பதிலாக பொருத்தமான அரிசியை வழங்குவதற்கு அரிசி விநியோகஸ்தர்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.

விவசாய நவீனமயப்படுத்த அமெரிக்க இலங்கையுடன் பேச்சு
Posted in இலங்கை செய்திகள்

விவசாய நவீனமயப்படுத்த அமெரிக்க இலங்கையுடன் பேச்சு

விவசாய நவீனமயப்படுத்த அமெரிக்க இலங்கையுடன் பேச்சு

விவசாய நவீனமயப்படுத்த அமெரிக்க இலங்கையுடன் பேச்சு.அமெரிக்கா விவசாயத் தணைக்களத்தின் (USDA) வர்த்தக மற்றும் வெளிநாட்டு விவசாய விவகாரங்களுக்கான துணைச் செயலாளர் அலெக்சிஸ் டெய்லர் (Alexis Taylor)மற்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோருக்கு இடையிலான சந்திப்பொன்று ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.

அமெரிக்க உதவியுடன் உற்பத்தி

இதன்போது, அமெரிக்க உதவியுடன் முன்னெடுக்கப்படும் பால் உற்பத்தியை நவீனமயப்படுத்துவது குறித்து கலந்துரையாடப்பட்டது.

அந்த திட்டத்தின் ஊடாக நாடளாவிய ரீதியில் பால் உற்பத்தியை விரிவுப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

விவசாய நவீனமயமாக்கல் செயற்பாடுகள்

அரசாங்கத்தின் விவசாய நவீனமயமாக்கல் செயற்பாடுகள் குறித்து விளக்கமளித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இத்துறையில் இளைஞர்களை அதிகளவில் உள்ளீர்ப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

இதன்போது அரசாங்கத்தின் விவசாய நவீனமயப்படுத்தல் செயற்பாடுகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவதாக அமெரிக்க விவசாய துணைச் செயலாளர் உறுதியளித்தார்.

ஐரோப்பா அமெரிக்கா நாடுகளில் விவசாயம் அதி நவீன முறையில் செய்கை முறைக்கு உள்ளாக்க படுகிறது .

அவ்வாறு இலங்கையில் நடைமுறை ப்படுத்தினால் ,தன்னிறைவு பொருளாதரத்தில் இலங்கை அதியுச்ச பயனை அடையும் என எதிர் பார்க்க படுகிறது .

வீதி வாகன விபத்தில் மூவர் மரணம்
Posted in இலங்கை செய்திகள்

வீதி வாகன விபத்தில் மூவர் மரணம்

வீதி விபத்தில் மூவர் மரணம்

வீதி வாகன விபத்தில் மூவர் மரணம் .இலங்கையில் நாடளாவிய நிலையில் ஏற்பட்ட வாகன விபத்தில் மூவர் மரணம் ஆகியுள்ளனர் .

புறக்கோட்டை – ஒல்கொட் மாவத்தை இரண்டாம் குறுக்குத் தெரு,அனுராதபுரம் – புத்தளம் வீதியில் பண்டுலகம தொம்பே, புதுபாகல – வானலுவாவ வீதிகளில் ஏற்பட்ட வாகன விபத்தில் சிக்கிய இந்த மூவரும் மரணமாகியுள்ளனர் .

பாதை சாரி உள்ளிட்டவர்களே இந்த வாகன விபத்தில் சிக்கி பலியாகியுள்ளார் .

விபத்து மரணம் பொலிஸ் விசாரணை

வீதி விபத்து மரணம் தொடர்பாக பொலிஸ் விசாரணை ஆரம்பிக்க பட்டுள்ளது .

வாகன சாரதிகள் வீதியல் , வாகனங்களை செலுத்தி செல்லும் பொழுது ,வீதி விதிமுறைகளை பின்பற்ற தவறுவதால் ,இவ்வாறன வீதி வாகன விபத்துக்கள் ஏற்படுவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர் .

இவ்வாறான வீதி விபத்துக்களை கட்டு படுத்துவதற்கு பல்வேறு பட்ட விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ள பட்டு வருகின்ற பொழுதும் ,தொடர்ந்து இடம்பெறும் இவ்விதமான வீதி விபத்துக்களை தடுக்க முடியவில்லை என்ற கவலை வெளியிட பட்டுள்ளது .

சாலை விதிகளை மக்கள் சமுகம் பின் பற்றாத வரை ,இவ்வாறான வீதி விபத்துக்களை ,தடுக்க முடியாது என்கிறது பொலிஸ் .

சாரதிகள் ,பாதை சாரிகள் குறுக்கும் மறுக்கும் செல்லும் ,பொழுதும் வீதி விதிகளை மதித்து ,செயலாற்றினால் ,இவ்வாறன வீதி வாகன விபத்துக்கள் இடம்பெறாது அவர்கள் தெரிவிக்கின்றனர் .

மிரட்டும் வீதி விபத்துக்கள்

வீதி வாகன விபத்தில் மூவர் மரணம் அடைந்த செயல் மக்கள் மத்தியில் அதிரவலைகளை ஏற்படுத்தியுள்ளது .,பேரூந்து மோட்டர் சைக்கிள்,ஆட்டோ ,என்பன இலங்கையில் அதிக வீதி விபத்துக்களில் சிக்கி வருகின்றன .

மாதம் ஒன்றுக்கு மூன்றுக்கு மேற்பட்ட பேரூந்து வீதி விபத்துக்கள் ,ஆட்டோ விபத்துக்கள் என்பன இடம்பெறுவதாக புதிய புள்ளி விபரம் தெரிவித்துள்ளது .

பயணிகள் பேரூந்துகள் போட்டி போட்டு ஓடுவதால் ,அதில் பயணிக்கும் மக்களும் காயமடைந்து ,பலியாகியும் வருகின்றனர் .

உலக நாடுகளில் அதிக வீதி விபத்துக்களில் பலியாகும் மக்கள் எண்ணிக்கை கொண்ட நாடாக இலங்கை இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது .

மக்கள் சமூகம் விழித்து கொள்ளாத வரை இந்த வீதி வாகன விபத்துக்களை யாராலும் தடுக்க முடியாது என்பது குறிப்பிட தக்கது .

    காணி மோசடி செய்து விற்பனை
    Posted in இலங்கை செய்திகள்

    காணி மோசடி செய்து விற்பனை

    காணி மோசடி செய்து விற்பனை

    காணி மோசடி செய்து விற்பனை வெளிநாட்டில் உள்ளவரின் காணியை மோசடி செய்து விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

    வெளிநாட்டில் வசிக்கும் நபர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் உள்ள தனது காணியை பராமரிப்பதற்காக யாழ்ப்பாணத்தை சேர்ந்த உறவினர் ஒருவருக்கு அற்றோணித்தத்துவம் முடித்து கொடுத்துள்ளார்.

    அற்றோணித்தத்துவத்தை தனக்கு சாதகமாக பயன்படுத்தி காணியினை மூன்று துண்டுகளாக பிரித்து ஒரு பகுதியை நபர் ஒருவருக்கு விற்பனை செய்ததுடன், மற்றுமொரு பகுதியை வங்கியில் ஈடுவைத்துள்ளார்.

    மற்றைய துண்டினை தனது உறவினருக்கு நன்கொடையாக கொடுத்து , அதனை மீள அறுதியாக பெற்றுள்ளார்.

    காணி உரிமையாளர்

    இது தொடர்பில் அறிந்த காணி உரிமையாளர் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில் , முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து , காணி விற்பனையில் ஈடுபட்ட நபரை கைது செய்தனர்.

    கைது செய்யப்பட்டவரிடம் விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் யாழ்.நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியவேளை, மன்று சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.

    காதாலியை பார்க்க சென்றவர் மாயம்
    Posted in இலங்கை செய்திகள்

    காதாலியை பார்க்க சென்றவர் மாயம்

    காதாலியை பார்க்க சென்றவர் மாயம்

    காதாலியை பார்க்க சென்றவர் மாயம் .காதலியின் வீட்டுக்குச் சென்ற இளைஞன் காணாமல் போன சம்பவம் குளியாபிட்டிய பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.

    குறித்த பகுதியில் ஹோட்டல் ஒன்றை நடத்தி வரும் இளைஞர் ஒருவரே காணாமல் போயுள்ளார்.

    காணாமல் போன வாலிபன்

    குளியாபிட்டிய – கபலேவ பிரதேசத்தை சேர்ந்த 36 வயதான சுசித ஜயவன்ச என்ற இளைஞன் தொடர்பில் ஆறு நாட்கள் ஆகியும் இதுவரை தகவல் எதுவும் கிடைக்கவில்லை.

    இவர் கடந்த 22ஆம் திகதி குளியாப்பிட்டி வஸ்ஸாவுல்ல பிரதேசத்தில் உள்ள தனது காதலியின் வீட்டிற்கு தனது கடையின் ஊழியர் ஒருவருடன் சென்றுள்ளார்.

    அவர் குறித்த வீட்டிற்குச் சென்ற நேரம் முதல் அவரைப் பற்றிய எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

    காணாமல் போவதற்கு முன்னர்

    காணாமல் போவதற்கு முன்னர் சுசித சென்றதாக கூறப்படும் வீட்டின் உரிமையாளரான சிங்கிதி என்ற நபரால், சுசிதவின் நண்பருக்கு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.

    இது தொடர்பாக காணாமல் போனதாகக் கூறப்படும் சுசிதவின் நண்பர் கூறும் போது,

    “செவ்வாய்க்கிழமை இரவு 7:58 மணிக்கு சிங்கிதி என்ற நபர் எனக்கு போன் செய்தார்.

    என் மகளுக்கு நியாயம் செய்தேன்

    அப்பாவாக என் மகளுக்கு நியாயம் செய்தேன். இப்போது அதை பேசி பலனில்லை. அவனை நான் கொன்று விட்டேன். அவனால் இனி வர முடியாது” என்றார்.

    சம்பவம் தொடர்பில் குளியாபிட்டிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், சந்தேகத்திற்கிடமான வகையில் மோட்டார் வாகனமொன்றும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

    காதலனை வீட்டுக்கு அழைத்து திட்டம் போட்டு காதலனை வீட்டில் வைத்து கொலை செய்த காதலியின் இந்த கேடுகட்ட செயல்பாடு மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

    காதலில் தகராறு

    காதலில் தகராறு ஏற்பட்டாலோ அல்லது முரண்பாடுகள் ஏற்பட்டாலோ விலகி செல்வது முறையாகும் .

    இவ்வாறு நம்பி வந்த ஒருவரை நயவஞ்சமாக படுகொலை புரிந்த செயல் மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது .

    இலங்கையில் அதிகரிக்கும் கொலைகள்

    இலங்கையில் நாள்தோறும் இவ்வாறு இடம்பெறுகின்ற வன்ம கொலைகள் அதிகரித்து காணப்படுகின்றன .

    மனங்களில் ஏற்பட்ட சஞ்சல ,எதிர்பார்ப்பு ஆசைகள் என்பன அதிகரிப்பதன் விளைவே இந்த ,இவ்விதமான படுகொலைகள் அதிகரிக்க காரணம் என தெரிவிக்க படுகிறது .

    சூடுபிடிக்கும் ஈரான் ஆயுத விற்பனை
    Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

    சூடுபிடிக்கும் ஈரான் ஆயுத விற்பனை

    சூடு பிடிக்கும் ஈரான் ஆயுத விற்பனை

    சூடுபிடிக்கும் ஈரான் ஆயுத விற்பனை ,இஸ்ரேல் மீதான ஈரான் தாக்குதலை அடுத்து ,ஈரான் ஆயுதங்களை வாங்கி குவிக்க பல நாடுகள் போட்டி போடுகின்றன .

    ஈரானிய தற்கொலை வெடிகுண்டு விமானங்கள் ,ஏவுகணைகள் என்பனவையே அதிக தொகையில் விற்க படுகின்றன .

    இஸ்ரேலிய படைகளுக்கு ஈரானிய ஏவுகணைகள் விமானங்கள் பலத்த இழப்பை ஏற்படுத்தியதை அடுத்தே ,இப்பொழுது, ஏவுகணைகள் ,கெமிக்காசி விமானங்கள் , விற்பனை கொடி கட்டி பறக்கிறது .சூடுபிடிக்கும் ஈரான் ஆயுத விற்பனை

    மலிந்த விலையில் ஈரான் ஆயுதங்கள்

    அமெரிக்கா ,ஐரோப்பிய நாடுகளின் ஆயுத விலையில் ,குறைந்த விலையில் ஈரான் ஆயுதங்கள் விற்க படுகின்றன .

    ஈரானிய ஆயுதங்கள் அமெரிக்கா, ஆயுதங்களுக்கு மேலான செயல் திறன் காணப்படுகிறது .

    அவ்வாறான ஆயுதங்களை முண்டியடித்து ,வாங்கி குவிக்க நாடுகள் போட்டி போடுகின்றன .

    இஸ்ரேல் மீதான ஈரான் தாக்குதல்

    இஸ்ரேல் மீதான ஈரான் தாக்குதல் நிகழ்ந்ததை அடுத்தே ,ஈரான் ஆயுதங்களுக்கு உலக ஆயுத சந்தையில் அதிக மவுசு ஏற்பட்டுள்ளது .

    இதனை தனக்கு சாதகமாக பயன் படுத்திய ஈரான் ,தற்போது ,பல மில்லியன் டொலர்களுக்கு ஆயுதங்களை ஏற்றுமதி செய்திட ஆரம்பித்துள்ளது குறிப்பிட தக்கது .

    வீடியோ

    Error: View 9293b2au4w may not exist
    கடை சுவையில் பராட்டோ செய்ங்க
    Posted in சமையல் சமையல் cook

    கடை சுவையில் பராட்டோ செய்ங்க

    கடை சுவையில் பராட்டோ செய்ங்க

      
    கடை சுவையில் பராட்டோ செய்ங்க ,பராட்டோ மிக பிரபலமான உணவாகும் .மிருதுவான பராட்டோ   இப்படி செய்ங்க ,செம சுவையாக இருக்கும் .
    
    
    இந்த பராட்டோ வகையில் பல பராட்டோ  உள்ளது ,அவற்றில் தென் இந்தியா மற்றும் இலங்கையில் இவ்வகையான பராட்டோ மிக பிரபலமாகும் .
    
    கடை சுவையில் பராட்டோ செய்ங்க
    
    
    அவ்வாறான கடை சுவையில் பராட்டோ செய்ங்க ,சுவையான  பராட்டோ வீட்டில் எப்படி செய்வது என்று பார்க்கலாம் வாங்க .

    கடை சுவையில் பரட்டோ செய்வது எப்படி ..?

    இந்த பரோட்டா செய்திட தேவையான பொருட்கள் .

    அரைகிலோ கோதுமை மாவு ,உப்பு ,எண்ணெய் ,சக்கரை .வெண்ணை .இப்போ இவற்றை வைத்து கொண்டு பரட்டோ செய்வது எப்படி என பார்ப்பம் .

    பாத்திரத்தில் மாவை போட்டு கொள்ளுங்க ,அப்புறம் ,உப்பு ,சக்கரை நன்றாக தண்ணியாக கரைத்து மாவில் ஊற்றி கலக்கிடுங்க .

    அதன் பின்னர் 4 தே கரண்டி எண்ணெய் சேர்த்து மாவை நனறாக கலக்கி மாவை நன்றாக பிசைந்து எடுங்க .

    தேவையான தண்ணீர் சேர்த்து நன்றாக மிருதுவா மாவை உருட்டி எடுங்க .அப்புறம் மாவிலை எண்ணெய் ஊற்றி இரண்டு மணித்தியாலம் ஊற வைத்திடுங்க .

    மாவை நன்றாக பரட்டோ உருண்டையாக உருட்டி எடுங்க .லேயர் வருவதற்கு தட்டையாக தோசை போல தட்டி எடுத்து கத்தியை பயன் படுத்தி மாவை கீறி விடுங்க .

    அப்புறம் அதனை உள்ளங்கையில் வைத்து உருட்டி எடுங்க . பூரி கட்டையை வைத்து உருண்டைகளை தட்டி எடுங்க .

    அடுப்பில பரட்டோ சுட்டு எடுங்க

    அடுப்பில தோசை காலை வைத்து தட்டி வைத்த மாவை லேயர் பிரியமா அப்படியே சுட்டு எடுங்க .

    அவ்வளவு தாங்க கடை சுவையில் சிறந்த பரட்டோ ரெடியாகிடிச்சு .

    கோதுமை மாவில் வீடே மணக்கும் snacks
    Posted in சமையல் சமையல் cook

    கோதுமை மாவில் வீடே மணக்கும் snacks

    கோதுமை மாவில் வீடே மணக்கும் snacks

    கடை சுவையில் ,கோதுமை மாவில் வீடே மணக்கும் snacks sweet,வாங்க இன்றே கோதுமை மாவில வீடே மணக்கும் snacks sweet செஞ்சு சாப்பிடலாம் .

    கோதுமை மாவில் snacks sweet செய்வது எப்படி ..?

    மொறு மொறு கோதுமை மாவில் snacks இப்படி செஞ்சு கொடுத்தால் குழந்தைகள் நன்றாக விரும்பி சாப்பிடுவாங்க .

    மொறு மொறு கோதுமை மாவில் snacks செய்வதற்கு ,அகலமான பாத்திரம் எடுத்திடுங்க .அதில் இரண்டு கப் கோதுமை மாவு எடுத்திடுங்க .

    அரை கப் ரவை ,கால் கப் எள்ளு ,கால் கப் துருவிய தேங்காய் ,கால் கப் நெய் சேர்த்து நன்றாக கலக்கி எடுங்க .

    மொறு மொறு கோதுமை மாவில் snacks செய்முறை இரண்டு

    இப்போ அடுப்பில பாத்திரத்தில் ஒரு கப் அளவுக்கு சக்கரை எடுத்திடுங்க ,கூடவே கால் கப் தண்ணி சேர்த்திடுங்க .ஒரு கரண்டி ஏலக்காய் சேர்த்து நனறாக கலந்து விடுங்க ,சக்கரை கரையும் வரை காத்திருங்க .

    நன்றாக சக்கரை கொதித்து கரைந்து வந்தததும் அடுப்பில் இருந்து இறக்கிடுங்க .

    இப்போ இந்த சக்கரையை அந்த மாவுடன் சேர்த்து நன்றாக கலக்கி எடுங்க .தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக உருண்டை பிடிக்கும் பதம் வரும்படி எடுங்க .

    snacks செய்முறை மூன்று

    இப்ப இந்த மாவை மூன்று உருண்டையாக உருட்டி எடுங்க .அப்புறமா ,சப்பாத்தி போல உருட்டி எடுங்க .

    கோதுமை மாவில் வீடே மணக்கும் snacks

    சப்பாத்திக்கு மாவு பூரி கட்டையில் வைத்து உருட்டுவது போன்று உருட்டி எடுங்க .படத்தில் உள்ளது போல .சின்னதாக வெட்டி எடுங்க .

    வெட்டி எடுத்ததும் அடுப்பில கடாயை வைத்து எண்ணெய் ஊற்றிடுங்க ,எண்ணெய் கொதித்து வந்ததும் ,வெட்டிய துண்டுகளை அதில் போட்டு பொரித்து எடுங்க .படத்தில் உள்ளது போல .

    கோதுமை மாவில் வீடே மணக்கும் snacks

    இரு பக்கமும் நன்றாக வேகி வரும் வரை பொரித்து எடுங்க .அவ்வளவு தாங்க .

    வாய்க்கு சுவையான மொறு மொறு கோதுமை மாவு snacks sweet ரெடியாடிச்சு .

    போத்தல்களில் போட்டு அடைத்து வைத்து மூன்று மாதம் வரை வைத்திருக்கலாம் ,கெட்டு போகாது .

    குழந்தைகள் அதிகம் விரும்பி உண்ணுவாங்க .காலை மாலை நேரம் டீ கூட சாப்பிடுக்கலாம் .அம்புட்டு தாங்க மிக ஈஸியான மொறு மொறு snacks sweet .இப்படி செஞ்சு அசத்துங்க மக்களே .

    வாழைக்காய் குழம்பு வைப்பது எப்படி
    Posted in சமையல் சமையல் cook

    வாழைக்காய் குழம்பு வைப்பது எப்படி

    வாழைக்காய் குழம்பு வைப்பது எப்படி

    வாழைக்காய் குழம்பு வைப்பது எப்படி.கவலையே வேண்டாம் ,வாழைக்காய் வைத்து குழம்பு இப்டி செஞ்சுபாருங்க ,செமையாக இருக்கும் .ஒருமுறை சாப்பிட்டால் விடவே மாட்டிங்க .

    வாழைக்காய் குழம்பு செய்யும் முறை

    வீட்டில் வாழைக்காய் குழம்பு செய்யும் முறை இது போல பின் தொடர்ந்து செய்து பாருங்கள் .நாமம் சொல்வது போன்றே மிக தரமான அட்டகாசமான சுவையை தருவிக்கும் .

    வாங்க இப்போ வாழைக்காய் குழம்பு செய்யும் முறைக்குள் போகலாம் .

    வாழைக்காய் குழம்பு வைப்பது எப்படி

    வாழைக்காய் குழம்பு செய்ய தேவையான பொருட்கள்

    இதுபோல வாழைக்காய் குழம்பு செய்ய தேவையான பொருட்கள் பின்வருபனவற்றை குறிப்பெடுத்து கொள்ளுங்க மக்களே .

    சமையல் ஆரம்பிக்க ,வாழைக்காய் எடுத்து கொள்ளுங்கோ .வாழைக்காயை மூன்றா தோலுடன் வெட்டி குக்கரில் போட்டு இரண்டு விசில் அடிக்கும் வரை அல்லது வேகி வரும் வரை போட்டு எடுத்து கொள்ளுங்க .

    அவிந்து வந்ததும் வாழைக்காய் தோலை உரித்து எடுத்து , பாத்திரத்தில் மாற்றி ,நன்றாக மசித்து எடுங்க .

    2 மேசை கரண்டி கடலை மாவு
    1 மேசை கரண்டி மிளாகாய் தூள் ,
    1 மேசை கரண்டிமல்லித்தூள்
    1 மேசை கரண்டிகரம் மசாலா
    தேவையான அளவு உப்பு
    கோத்த மல்லி
    பொடியை நறுக்கிய வெங்காயம்
    ,இஞ்சி பூண்டு .

    இப்போ இது எல்லாதையும் மசித்து வைத்திருக்கும் வாழைக்காயுடன் சேர்த்து கலக்கி பிசைந்து எடுங்க .

    வடைக்கு பிசைவது போன்று நன்றாக வடை பருவம் போல் பிசைந்து எடுங்க .

    பிசைந்த பின்னர் சின்ன சின்ன உருண்டையாக உருட்டி எடுத்து கொள்ளுங்க .

    கடை சுவையில் வாழைக்காய் குழம்பு செய்முறை இரண்டு

    உருண்டையாக உருட்டி எடுத்ததும் இப்பொழுது அடுப்பில கடாயா வைத்து ,வாழைக்காய் உருண்டையை நன்றாக பொரித்து எடுத்திடுங்க .

    பொரித்த வாழைக்காய் உருண்டையை எடுத்து குழம்பு ,கிரேவி வைத்திடுவோம் .

    இப்போ இதில உள்ள பாதி எண்ணையை வெளியில் , எண்ணையில் ,சூடானதும் ,

    குழம்பிற்கு தேவையான பொருட்கள்

    1 மேசை கரண்டி சோம்பு
    பிரிஞ்சி இலை
    மூன்று கராம்பு
    மொன்று ஏலக்காய்
    நட்ஷத்திர சோம்பு
    ஒரு கல்பாசி .
    சின்ன தூண்டி பட்டை .
    கடலை மாவு சேர்த்து நனறாக கலக்கி எடுங்க .
    காதலி மாவு கலர் மாறியதும் ,
    அரைத்து வாய்த்த தக்காளி ,வெங்காயத்தை இதில கலந்திடுங்க .

    வெங்காயம் ,தக்காளி பச்சை வாசம் போகும் வரை வாதகிடுங்க ,உப்பு சேர்ந்து ,இஞ்சி பூண்டு ,இரண்டு கிராந்தி மிளகாய் ,தூள்,மல்லி தூள் ,சேர்த்து நனறாக கலக்கிடுங்க .

    பச்சை வாசம் போகும் வரை நன்றாக வற்றி வந்ததகும் ,தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலக்கிடுங்க .

    எண்ணெய் பிறிந்து வரும் வரை மூடி போடு வேகா வைத்திடுங்க .

    குழம்பு செய்முறை

    குழம்பு பருவம் வந்ததும் ,பொரித்து வைத்து வாழைக்காய் உருண்டையை போட்டு வேகா வைத்திடுங்க .

    வாழைக்காய் குழம்பு வைப்பது எப்படி

    மூன்று நிமிடம் வேக விட்டு இறக்கிடுங்க .இப்போ வாழைக்காய் குழம்பு ரெடியாகிடிச்சு .இதுபோல வீட்டில் நாள்தோறும் வாழைக்காய் கிரேவி செஞ்சு சாப்பிடுங்க மக்களே .

    சிக்கன் 65 செய்வது எப்படி
    Posted in சமையல் சமையல் cook

    சிக்கன் 65 செய்வது எப்படி

    சிக்கன் 65 செய்வது எப்படி

    வீட்டில் சிக்கன் 65 செய்வது எப்படி. கடை சுவையில் சிக்கன் 65 இது போல நம்ம வீட்டில் நாள் தோறும் செய்து சாப்பிடுங்க மக்களே .

    மிக இலகுவான முறையில் மசாலா பிரியாமல் சிக்கன் 65 செய்து அசத்துங்க .

    சிக்கன் 65 செய்ய தேவையான பொருட்கள்

    கோழி – 3/4 கிலோ
    கெட்டி தயிர் – 2 டேபிள் ஸ்பூன்
    இஞ்சி பூண்டு விழுது – 2 டேபிள் ஸ்பூன்
    1/2 கப் சிக்கன் 65 மசாலா .
    மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்
    காஷ்மீரி மிளகாய் தூள் – 2 டேபிள் ஸ்பூன்
    மல்லி தூள் – 2 டேபிள் ஸ்பூன்
    கரம் மசாலா – 1 டேபிள் ஸ்பூன் ,இவை யாவும் போட்டு நன்றாக கலக்கி பிசைந்து எடுங்க
    .

    நன்றாக கலந்ததும் மூடி போட்டு ஒரு மணி நேரம் ஊறவைத்து கொள்ளுங்க . ஊறியதும் சோளம் மாவு சேர்த்து தண்ணியுடன் நன்றாக பிசைந்து எடுங்க .

    மசாலா பிரியாமல் சிக்கன் 65 செய்முறை இரண்டுக்கு செல்வோம் .

    சிக்கன் 65 செய்வது எப்படி

    மசாலா பிரியாமல் சிக்கன் 65

    இப்படித்தான் மசாலா பிரியாமல் சிக்கன் 65 ,செய்வது இப்படி தாங்க .இப்போ அடுப்பில கடயா வைத்து எண்ணெய் ஊற்றி கொள்ளுங்க .

    எண்ணெய் சூடானதும் ,பொரிப்பதற்கு பிசைந்து வைத்த ,சிக்கன் 65 எடுத்து ஒன்று ஒன்றாக எண்ணையில் போட்டு பொரித்து எடுங்க .

    நன்றாக மூன்று நிமிடம் பொரியும் படி ,சிக்கன் வேகும் வரை பொரித்து எடுங்க .

    அளவான துண்டாக சிக்கன் வெட்டி எடுத்தால் நன்றாக பொரிந்து வரும் .அவ்வளவு தாங்க .

    இப்போ சிக்கன் 65 ரெடி

    சிக்கன் 65 செய்வது எப்படி

    இப்போ சிக்கன் 65 ரெடியாடிச்சு . கடை சுவையில் மிக சுவையான சிக்கன் 65 ரெடியாடிச்சு .

    இது கூட சாதம் (சோறு ) சேர்த்து சாப்பிடுங்க .

    கொட்டல் சுவையில் மிக வாசமான ,சுவையான அருமையான ,மசாலா பிரியாத சிக்கன் 65 செய்தாச்சு .

    செம்மையான கோழி பொரியல் ரெடியாகிடிச்சி .

    இது போல வீட்டில் வாரம் தோறும் சிக்கன் 65 செய்து சாப்பிடுங்க மக்களே .

    வீடியோ

    லண்டன் லெஸ்டர் தேர் திருவிழா
    Posted in இலங்கை செய்திகள்

    லண்டன் லெஸ்டர் தேர் திருவிழா


    லண்டன் லெஸ்டர் தேர் திருவிழா

    லண்டன் லெஸ்டர் தேர் திருவிழா .தேர் திருவிழாவுக்கு விசேடமாக லண்டனில் தயாரிக்க பட்ட தேர் இதுவாகும் .

    தேர் தயாரிப்பது எப்படி

    ஸ்ரீ ஜெ துர்க்கா அம்மான் ஆலயம் ,லெஸ்டர் , தேர் திருவிழா வெகு விமரிசையாக இடம்பெற்றுள்ளது

    ஸ்ரீ ஜெ துர்க்கா அம்மான் ஆலயம் தேர் உருவாக்கத்தின் ஒரு பகுதி .

    -லண்டனை சேர்ந்த நந்தன் அவர்கள் செதுக்கி அசத்கியுள்ளார் .
    விசேடமாக சிறப்பான வடிவமைப்பில் தயாரிக்க பட்ட அம்மன் ஆலயத்தின் தேர் இதுவாகும் .

    தேர் திருவிழா

    லண்டன் லெஸ்டர் தேர் மிக சிறப்பாக இடம்பெற்றுள்ளது ,அந்த தேர் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைராலகி வருகிறது ,.

    நம்ம தமிழர்கள் கடல் கடந்து வந்த பொழுதும் ,தமிழர்கள் தமது சமயத்தை காட்டி காத்து வருவதை இந்த தேர்த்திருவிழா எடுத்து காட்டுகிறது .

    அழகான சிற்ப வடிவமைப்பை அவர்கள் ,தேரின் முகப்பு பகுதிகளை செதுக்கி வடிவமைத்துள்ளார் .


    குறுகிய கால இடைவெளிக்குள் மிக , ,அழகுற செதுக்கி இருப்பதானது , வியக்க வைக்கிறது .

    தேரை நீங்களும் உங்கள் ஆலயங்களுக்கு தாயரிக்க ,லண்டன் சிற்பி நந்தன் அவர்களை நாடுங்கள் .

    தேரை வடிவமத்தை சிற்பி நந்தன் அவர்களுக்கு எமது வாழ்த்துக்கள் ,பாராட்டுக்கள் .

    முழுமையான மேலதிக தகவலுடன் காணொளி கீழே இணைக்க பட்டுள்ளது .

    full video

    ஹைபா துறைமுகம் மீது தாக்குதல்
    Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

    ஹைபா துறைமுகம் மீது தாக்குதல்

    ஹைபா துறைமுகம் மீது தாக்குதல் விமானங்கள் தாக்குதல்

    ஹைபா துறைமுகம் மீது தாக்குதல் ,இஸ்ரேல் தலிங்கர் பகுதியில் மைய பெற்றுள்ள ஹைபா துறைமுகம் மீது
    ஈராக்கிய போர் படைகள் கடும் தாக்குதலை நடத்தியுள்ளது .

    இந்த துறைமுகம் மீது வெடிகுண்டு விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

    தற்கொலை விமான தாக்குதல்


    எனவும் இந்த தற்கொலை விமான ,தாக்குதலில் ஹொபா துறைமுகம் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

    இஸ்ரேல் பாலஸ்தீன போர் ஆரம்பிக்க பட்ட நாள் முதல் இன்று வரை 20 தடவை ,இந்த ஹைபா துறைமுகம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது .

    இங்கே தரித்து நின்ற சரக்கு கப்பல் ஒன்றும் சேதங்களை உள்ளாகி இருந்ததாக தெரிவிக்க பட்டு இருந்தது .

    பாலஸ்தீனம் இஸ்ரேல் போர்

    பாலஸ்தீனம் இஸ்ரேல் போர் நிறுத்த படும் வரை இந்த தாக்குதல்கள் தொடர்ந்து இடம்பெறும் என ,போர் படைகள் அறிவித்துள்ளன .

    ஈரான் ஆதரவு போராளி குழுக்கள் இணைந்து இஸ்ரேல் முக்கிய கேந்திர பகுதிகளை தொடர்ச்சியாக தாக்கி உள்ளனர் .


    இதனால் இஸ்ரேல் உள்கட்டமைப்பு , பொருளாதாரத்தில் பாரிய பின்னடைவை சந்தித்துள்ளது .

    வீடியோ

    Error: View 9293b2au4w may not exist
    அமெரிக்கா விமானம் சுட்டு வீழ்த்தல்
    Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

    அமெரிக்கா விமானம் சுட்டு வீழ்த்தல்


    அமெரிக்கா விமானம் சுட்டு வீழ்த்தல்

    அமெரிக்கா விமானம் சுட்டு வீழ்த்தல் .ஏமன் கட்டு பாட்டு பகுதி மேலாக பறந்து கொண்டிருந்த ,அமெரிக்கா இராணுவத்தின்,ஆள் இல்லாத உளவு விமானம் ஒன்று சுட்டு வீழ்த்த பட்டுள்ளது .

    அதி உச்ச பாதுகாப்பு கொண்ட இந்த போர் உளவு விமானம், ஏமன் படைகள் சுட்டு வீழ்த்தியுள்ளன .

    பிரித்தானிய எண்ணெய் கப்பல் மீது ,கப்பல் ஏவுகணைகள் கொண்டு தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

    அந்த தாக்குதலின் பொழுதே உயர் பாதுகாப்பு அடுக்கு கொண்ட வெற்றிகரமாக சுட்டு வீழ்த்த பட்டுளள்து .

    தாக்குதல் ஆரம்பம்

    தாக்குதல் ஆரம்பிக்க போவதக ஏமன் ஹவுதிகள் அறிவித்திருந்த நிலையில் , விமானம் மற்றும் பிரிட்டன் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

    அமெரிக்கா போர் விமானம் சுட்டு வீழ்த்த பட்டதை அடுத்து , ஏமன் ஹவுதிகள் இராணுவ நிலைகள் மீது ,அமெரிக்கா ,பிரிட்டன் இணைந்து தாக்குதல்களை நடத்த கூடும் என எதிர் பார்க்க படுகிறது .

    செங்கடல் வழியாக பயணிக்கும் கப்பல் ,போர் கப்பல்கள் யாவும் தாக்க பட போவதாக ஏமன் ஹவுதிகள் அறிவித்துள்ளமை குறிப்பிட தக்கது .

    வீடியோ

    Error: View 9293b2au4w may not exist
    செங்கடலில் கப்பல் மீது ஹவுதிகள் தாக்குதல்
    Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

    செங்கடலில் கப்பல் மீது ஹவுதிகள் தாக்குதல்

    கப்பல் மீது ஹவுதிகள் தாக்குதல்

    செங்கடல் பயணித்து கொண்டிருந்த Andromeda Star என்கிற எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்.செங்கடலில் கப்பல் மீது ஹவுதிகள் தாக்குதல் நடத்தியதல் மீளவும் செங்கடல் பகுதி படகுடத்தில் உறைந்துள்ளது .

    செங்கடல் பகுதியில் தொடர்ந்து ஏமன் ஹவுதி படைகள் தகுதலை நடத்தி வருவதால் ,சர்வதேச கப்பல் நிறுவனங்கள் அச்சத்தில் உறைந்துள்ளன .

    இஸ்ரேல் பாலஸ்தீன போர்

    இஸ்ரேல் பாலஸ்தீனம் மெது போரை நிறுத்துவரை செங்கடல் வழியாக பயணிக்கும் கப்பல்கள் மீது தாக்குதக் நடத்துவோம் என ஏமன் ஹவுதிகஜால் தொடர்ந்து அறிவித்து வருகின்றனர் .

    உலகின் மிக முக்கிய கடல்பாதையாக விளங்கும் செங்கடலில் கப்பல் மீது ஹவுதிகள் தாக்குதல்தொடர்வதால் , ,உலக நாடுகளின் பொருளாதாரம் ஆட்டம் கண்டு வருகிறது .

    செங்கடலில் கப்பல் மீது ஹவுதிகள் தாக்குதல்

    ஆக்கிரமிப்பு இஸ்ரேல் போரினை தடுத்து நிறுத்த மறுத்து வரும் ,மேற்குலக நாடுகள் .காசா மீது இஸ்ரேல் தொடுக்கும் போருக்கு தொடர்ந்து ஆதரவை வழங்கி கண்மூடி உறங்குகின்றனர் .

    இத்னால் சீற்றமுற்ற ஏமன் ஹவுதி படைகள் ,இஸ்ரேல் ,இஸ்ரேல் ஆதரவு நாடுகளின் கப்பல்கள் மீது தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர் .

    இந்த கப்பல் மீது தாக்குதல் நடத்தியதில், எண்ணெய் கப்பல் பலத்த சேதங்களுக்கு உள்ளாகியுள்ளதாக ,தாக்குதலை நடத்திய போர் படைகள் அறிவித்துள்ளன .

    48 மணித்தியாலங்களுக்கு முன்னதாக செங்கடலில் கப்பல்கள் மீது தாக்குதலை நடத்துவோம் என அறிவித்து இருந்தனர் ..

    சொல்லி அடிக்கும் ஹவுதி படைகள்

    சொன்னதை போன்று சொல்லி அடிப்பதில் கிளாடிகளாகி விளங்கும் ஏமன் ஹவுதிகள் இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர் .

    இந்த கப்பல் எந்த நட்டுக்கு சொந்தமானது ,எத்தனை மாலுமிகள் கப்பலில் இருந்தனர் என்கின்ற விடயம் முழுமையக தெரியவரவைல்லை .

    வரும் மணித்தியாலங்கள் தாக்குதலுக்கு உள்ளான எண்ணெய் கப்பல் தொடர்பான விடயங்கள் தெரியவரும் என எதிர் பார்க்க படுகிறது .

    இஸ்ரேலுக்குள் ஈரான் நேரடி தாக்குதலை நாடத்தியத பின்னர் ,நீண்ட வாரத்தின் பின்னர் ,மீளவும் ஹவுதிகள் தாக்குதலை ஆரம்பித்துள்ளது ,கப்பல் நிறுவனங்களை அலற வைத்துள்ளது

    அதன் பின்னர் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது .

    full வீடியோ

    Error: View 9293b2au4w may not exist
    பெண்கள் பாடசாலை கிரிக்கெட் முறை
    Posted in இலங்கை செய்திகள்

    பெண்கள் பாடசாலை கிரிக்கெட் முறை

    பெண்கள் பாடசாலை கிரிக்கெட் முறை

    ஆண்களுக்கான பாடசாலை கிரிக்கெட் முறைமையை போன்று பெண்கள் பாடசாலை கிரிக்கெட் முறை யையை விரிவுபடுத்தப்படுவதற்கு சமமான வசதிகள் வழங்கப்பட வேண்டும் என இலங்கை கிரிக்கெட் பயிற்சி ஆலோசகர் மஹேல ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

    கல்லூரி மைதானத்தில்

    கொழும்பு நாலந்தா கல்லூரி மைதானத்தில் நேற்று (26) ஆரம்பமான நாலந்தா கல்லூரி 88 அணி தலைமையிலான மஹேல சங்க சவால் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பிரதம அதிதியாக கலந்துகொண்ட போது அவர் இதனை தெரிவித்தார்.

    ஆண்களுக்கான கிரிக்கெட்டை போன்று பெண்களுக்கு

    “ஆண்களுக்கான கிரிக்கெட்டை போன்று பெண்களுக்கான பாடசாலை விளையாட்டு முறையை விரிவுபடுத்த வேண்டும், ஏனென்றால் பெண் வீரர்கள் எதிர்காலத்தில் தேசிய மட்டத்திற்கு வர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்…”

    இதேவேளை, நேற்று முன்தினம் (25) அபுதாபியில் நடைபெற்ற மகளிர் 20-20 உலகக் கிண்ணத்திற்கான தகுதிச் சுற்றுப் போட்டியில் தாய்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை மகளிர் அணி 67 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 122 ஓட்டங்களைப் பெற்ற நிலையில், இலக்கை துரத்திய தாய்லாந்து மகளிர் அணியால் 16.2 ஓவர்களில் 55 ஓட்டங்களை மாத்திரமே பெற முடிந்தது.

    தமிழர் பாடசாலைகளில் அரசியல் தலையீடுகள்
    Posted in இலங்கை செய்திகள்

    தமிழர் பாடசாலைகளில் அரசியல் தலையீடுகள்

    தமிழர் பாடசாலைகளில் அரசியல் தலையீடுகள்

    வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள தமிழர் பாடசாலைகளில் அரசியல் தலையீடுகள் அதிகரித்து காணப்படுவதாகவும்,

    குறிப்பாக தேசிய பாடசாலைகளில் தான் அரசியல் தலையீடுகள் தற்போது அதிகரித்து வருவதாகவும் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் தெரிவித்தார்.

    யாழ்ப்பாணத்தில் நேற்று நடாத்திய ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

    இதன் போது அவர் மேலும் தெரிவித்ததாவது..

    வட மாகாணத்தில்

    குறிப்பாக வட மாகாணத்தில் யாழ்ப்பாணத்திலுள்ள தேசிய பாடசாலையான யாழ் மத்திய கல்லூரியில் புதிதாக நியமிக்கப்பட்ட ஒரு அதிபரை கூட மாற்றியிருக்கின்ற ஒரு செயற்பாடு நடந்திருக்கிறது.

    இதே போன்று தான் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பிலுள்ள தேசிய பாடசாலையான பட்டிருப்பு கல்லூரியிலும் அரசியல் தலையீடுகளுடனான சம்பவம் ஒன்று நடைபெற்றிருக்கின்றது.

    அங்கும் நியமிக்கப்பட்ட அதிபரை மாற்றி வேறு ஒருவரை தற்போது நியமித்திருக்கின்றர்.

    அங்குள்ள அரசியல்வாதியானபிள்ளையான் கல்வி அமைச்சுடன் பேசி இந்த மாற்றத்தைக் கொண்டு வந்திருக்கின்றார்.

    அரசியல் நலன்களுக்காக கல்வியிலும் அரசியல் தலையீடு

    தமது அரசியல் நலன்களுக்காக கல்வியிலும் அரசியல் தலையீடுகளை பாடசாலைகளில் செய்ய முயல்வது உண்மையில் ஒரு தவறான செயற்பாடாகும்.

    எனவே பாடசாலைகளில் அரசியல் தலையீடுகள் மேற்கொள்வதை அரசியல்வாதிகள் நிறுத்திக் கொள்ள வேண்டும். கல்வி அமைச்சும் அதிகாரிகளும் இதற்கு இடமளிக்ககூடாது.

    இதனால் தான் வடக்கு கிழக்கு மாகாணங்கள் உள்ள இந்த பாடசாலைகளின் முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் அரசியல் தலையீடுகளை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் நாம் கல்வி அமைச்சிடம் கோரிக்கை விடுத்திருக்கின்றோம்..

    தேர்தலில் வெல்ல அரசியல் நுழைவு

    தேர்தல் வருகின்றதால் தமக்கான ஆதரவை பெருகி கொள்வதற்கே அரசியல்வாதிகள் இவ்வாறான செயற்பாடுகளை தற்போது தீவிரமாக முன்னெடுக்கின்றனர்.

    இதனை நிறுத்த வேண்டும் என்று கல்வி அமைச்சிடம் கூறிய போது, நிறுத்துவதாக சொல்லி இருக்கின்றார்கள். ஆனால் இதுவரையில் அதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை.

    இவ்வாறு நியமனங்கள் மட்டுமல்ல சில முறையான இடமாற்றங்களில் கூட அரசியல்வாதிகளின் தலையீடுகள் காணப்படுகின்றன.

    இத்தகைய செயற்பாடுகள் கல்வியில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் தான் கல்வியில் அரசியல் தலையீடுகளை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று நாம் கூறுகின்றோம்.

    மேலும் முழு இலங்கையிலும் இருக்கின்ற சுற்றறிக்கை வடமாகாணத்தில் பல சந்தர்ப்பங்கள் பல இடங்களில் ஆசிரியர்கள் விடயத்தில் மீறப்பட்டு வருகிறது.

    ஆகவே சுற்றறிக்கையை மீறி செயற்படுவதை நிறுத்த வேண்டும் என்றும் கூறுகின்றோம்.

    மேலும் இந்த வருடம் மே தினத்தை யாழ்ப்பாணத்தில் செய்ய தீர்மானித்திருக்கின்றோம். இதில் விசேஷமாக அதிபர், ஆசிரியர்கள் முகம் கொடுக்கிற பிரச்சினைகள் மட்டுமில்லாமல்,

    இந்த அரசாங்கம் கொண்டு வந்திருக்கின்ற அடக்குமுறை சட்டங்கள் பேச்சுரிமை தொழிலுரிமை பயங்கரவாத எதிர்ப்பு போன்ற சட்டங்கள் உட்பட பல்வேறு சட்டக்களுக்கு எதிராகவும் அனைவரதும் உரிமைகளை வலியுறுத்தி இதனை செய்கிறோம்.

    ரணில் விக்கிரமசிங்க அரசுக்கு ஒரு உரிமையும் இல்லை

    எனவே மக்களுக்கு இருக்கின்ற உரிமையை மாற்றுவதற்கு ரணில் விக்கிரமசிங்க அரசுக்கு ஒரு உரிமையும் இல்லை.

    ரணில் ராஜபக்ச அரசாங்கம் மக்களுக்கு எதிரான சட்டங்களை கொண்டு வந்தது மட்டுமல்லாமல் கல்வியில் கூட திருத்தங்கள் என்ற பெயரில் புதிய கொள்கைகளை கொண்டு வர முயன்றிருக்கின்றார்கள்.

    இவ்வாறான திருத்தங்கள் அல்லது புதிய கொள்கைகளை கொண்டு வந்து இந்த நாட்டில் உள்ள இலவச கல்வி முறை இல்லாமல் ஆக்குகின்ற ஒரு செயற்பாட்டை தான் இவர்கள் செய்யப் போகின்றார்கள்.

    இது இலவச கல்வியை காசுக்கு கொடுக்கிற செயற்பாட்டைதான் அரசாங்கம் முன்னெடுக்கின்ற ஆபத்து உள்ளது.

    இதேபோன்று இப்போது பாடசாலைகளை மூடுகின்ற செயற்பாட்டுகளை ரணில் ராஜபக்ச அரசாங்கம் முன்னெடுக்கின்றது.

    இது அந்தந்த பிரதேசங்களில் இருக்கின்ற மக்களின் உரிமையை பறிக்கின்ற ஒரு செயற்பாடாகவே இந்த அரசின் செயற்பாடுகள் அமைகின்றன.

    அது மட்டுமல்லாமல் பல்கலைக் கழகங்களில் மாணவர்கள் காசு கொடுத்து படிக்க வேண்டிய ஒரு செயல்பாட்டையும் இவர்கள் செய்ய பார்க்கின்றார்கள்.

    அடக்குமுறை சட்டங்கள்

    இந்த அரசாங்கம் கொண்டு வருகின்ற அடக்குமுறை சட்டங்கள் கல்வியை விற்கின்ற சட்டங்கள் ஆசிரியர், அதிபர்கள் முகம் கொடுக்கின்ற பிரச்சனைகள் சம்பளம் முரண்பாடுகளை பிரச்சனையை தீர்க்கிறது.

    இப்படியான பல பிரச்சினைகளை முன் வைத்து தான் இலங்கை ஆசிரியர் சங்கம் வருகின்ற மே முதலாம் திகதி யாழ்ப்பாணத்தில் எமது மே தினத்தை நடத்துவதற்கு தீர்மானித்திருக்கிறது.

    இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்ப்பட வேண்டுமென அரசாங்கத்திற்கு அழுத்தமாக நாம் கூறுகிறோம்.

    அப்படி அரசாங்கம் செய்யாத விடத்து ஏனைய தொழிற்சங்கங்களை ஒன்றிணைத்து நாம் போராட்டங்களை முன்னெடுப்போம்.

    உண்மையிலே மக்கள் விரோத, மாணவர் விரோத, ஆசிரியர் விரோத செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு ரணில் விக்கிரமசிங்கவிற்கு எந்த உரிமையும் இல்லை.

    ஏனென்றால் அவர் மக்கள் ஆணையில்லாத ஒரு ஜனாதிபதி, அவர் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஒரு ஜனாதிபதி அல்ல.

    ஆனாலும் பெரமுனவின் 134 வாக்குகளை வைத்து தான் அவர் எல்லாத்தையும் செய்கின்றார்.. அவ்வாறு அவர் செய்கின்ற அனைத்தும் மக்களுக்கு எதிரான செயற்பாடுகளாகத்தான் இருக்கிறது.

    தேர்தலும் இல்லை

    குறிப்பாக தேர்தல் வைக்கிறேன் வைக்கிறேன் என்று சொல்லி ஓரு தேர்தலும் இல்லை. அவ்வாறு தேர்தல் என்பது வெறுமனே பேசு பொருளாக மட்டுமே இருக்கிறது.

    மக்கள் தங்களுடைய பிரதிநிதிகளை தெரிவு செய்வதற்கு அல்லது தங்கள் விருப்பத்தை வெளிப்படுத்துவதற்கு அந்த மக்களுக்கு இருக்கின்ற உரிமையை வாய்ப்பை அளிக்காத ரணில் ராஜபக்ச அரசாங்கம், மறுபக்கத்தில் கல்வி உட்பட நாட்டின் எல்லா உரிமையும் அழிக்கின்ற செயற்பாடுகளை தான் செய்கின்றது என்றார்.

    Error: View 9293b2au4w may not exist