காணிகளை பறிக்கும் வனஜீவராசிகள் திணைக்களம்
Posted in இலங்கை செய்திகள்

காணிகளை பறிக்கும் வனஜீவராசிகள் திணைக்களம்

காணிகளை பறிக்கும் வனஜீவராசிகள் திணைக்களம்

காணிகளை பறிக்கும் வனஜீவராசிகள் திணைக்களம் ,முல்லைத்தீவில் 130 நபர்களுக்கு எதிராக வனஜீவராசிகள் திணைக்களத்தினரால் தொடுக்கப்பட்ட வழக்கு தவணை விசாரணைக்கு வந்தது .


கரியல்வயல் , சுண்டிக்குளம் பகுதிகளை அண்மித்துள்ள மக்கள் 130 நபர்களுக்கு எதிராகவனஜீவராசிகள் திணைக்களத்தினரால் தொடுக்கப்பட்ட வழக்கு இன்றையதினம் முல்லைத்தீவு நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

வனஜீவராசிகள் திணைக்களத்தின் அடாவடி


1908ஆம் ஆண்டு தொடக்கம் மக்கள் பயிர் செய்து வாழ்ந்துவரும் நிலையில் குறித்த இடத்தில் உள்ள மக்கள் தம் காணிகளை துப்பரவு செய்தமையை அடுத்து வனஜீவராசிகள் திணைக்களத்தினர் அது தமக்குரிய

காணி என முல்லைத்தீவு நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.


சுண்டிக்குளம் தேசிய பூங்காவிற்குள் உட்சென்றமை , தாவரங்களை வெட்டி வெளியாக்கியமை , காணிகளை வெளியாக்கியமை, பாதைகளை அமைத்தல் மற்றும் பாதைகளை பயன்படுத்தியமை போன்ற காரணங்களை முன்வைத்து இது குறித்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் வழக்கு விசாரணை


குறித்த வழக்கானது கடந்த வருடம் 7.12.2023 அன்றையதினம் இடம்பெற்று 02.05.2024 வழக்கு தவணையிடப்பட்டிருந்தது. இதற்கமைய இன்றையதினம் குறித்த வழக்கானது விசாரணைக்காக முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்டது.


வழக்கு தொடுக்கப்பட்ட மக்கள் சார்பில் சட்டத்தரணி சி.தனஞ்சயன் அவர்களும் முன்னிலையாகியிருந்தார். இது தொடர்பாக வழக்கின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது ,

ரவிகரன் அரச அதிகாரிகள் தர்க்கம்


இன்றையதினம் புதுக்குடியிருப்பு பகுதியிலே இருக்கின்ற கரியல் வயல் பிரதேசத்திலே வாழும் 100 மேற்பட்ட மக்களின் காணிகள் வனஜீவவராசிகள் திணைக்களத்திற்கு கீழே வருகின்ற காணிகள் என வனஜீவராசிகள் திணைக்களத்தினால் தொடரப்பட்ட வழக்குகள் இரண்டாம் தவணையாக நீதிமன்றிலே எடுத்துக்கொள்ளப்பட்டன.


இந்த வழக்கிலே சம்பந்தபட்ட மக்கள் ஏற்கனவே தனியார் காணிகளுக்கான நூற்றாண்டு உறுதி வழங்கப்பட்ட மக்களும், தனியார் காணிகளுக்கு சொந்தமான மக்களும் அரச அனுமதிபத்திரம் பெற்றமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு எதிராகவே இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

அதனால் இந்த வழக்கில் இருக்கும் குறைபாடுகளை ஏற்கனவே நாம் சுட்டிகாட்டி இருந்தோம். அதேபோல் இன்றைய தினமும் இந்த வழக்கில் சுட்டிகாட்டியிருந்தோம்.

வழக்கு தொடர்பாக குற்றச்சாட்டு பத்திரம் தாக்கல்

இந்த வழக்கு தொடர்பாக மீள் பரிசீலனை செய்து இவ் வழக்குகள் தொடர்பாக குற்றச்சாட்டு பத்திரம் தாக்கல் செய்ய வேண்டி இருப்பின் தாக்கல் செய்யுமாறும் நீதிமன்றத்தினால் வழக்கு தொடுனர் தரப்புக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது .

குறித்த வழக்கானது மூன்றாக பிரித்து வருகின்ற யூலை மாதம் 19 ஆம் திகதி, 25 ஆம் திகதி, 26 ஆம் திகதிகளுக்கும் தவணையிடப்பட்டுள்ளது என ரவிகரன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார் .

வனஜீவராசிகள் திணைக்களம் செயல்பாட்டுக்கு எதிராக ரவிகரன்

தமிழர் காணிகளை பறிக்கும் வனஜீவராசிகள் திணைக்களம் செயல்பாட்டுக்கு எதிராக ரவிகரன் அவர்கள் கடும் தர்க்கத்தில் ஈடுபட்தவேளை அங்கு முறுகல் நிலை காணப்பட்டது .

அப்பாவி தமிழ் மக்கள் காணிகளை அபகரிக்கும் வனஜீவராசிகள் திணைக்களத்தின் செயல்படு திட்டமிடப்பட்ட சிங்கள ஆக்கிரமிப்பாக உள்ளதை இதன் ஊடக காணமுடிகிறது .

மொஸாட் தலைமையகம் மீது தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

மொஸாட் தலைமையகம் மீது தாக்குதல்


மொஸாட் தலைமையகம் மீது தாக்குதல்

மொஸாட் தலைமையகம் மீது தாக்குதல் ,இஸ்ரேல் தலைநகரில் உள்ள மொசாட் தலைமையகம் மற்றும் முக்கிய உளவுத்துறை மூன்று மையங்கள் மீது தாக்குதல் .

ஈராக் போராளிகள் அமைப்பினர் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளதாக அறிவித்துள்ளனர் .

முதன் முதலாக மொஸாட் உளவுத்துறை மூன்று முகாம்கள் கடும் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது .

இந்த தாக்குதலுக்கு மேம்படுத்த பட்ட குருஸ் ஏவுகணைகளை பயன்படுத்தி, தாக்குதல் நடத்த பட்டுள்ளதக தாக்குதல் நடத்திய படைகள் அறிவித்துள்ளன .

சற்றும் எதிர்பாராத திகைக்க வைக்கும் தாக்குதலை நடத்தியுள்ளது ,இஸ்ரேல் மொசாட் உளவுத்துறையை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .

சர்வதேச விமான நிலையம் மீதும் தாக்குதல்


ஏமன் ஹவுதி போராளிகளின் கட்டு பாட்டு பகுதியில் உள்ள சர்வதேச விமான நிலையம் மீதும் தாக்குதல் .

அமெரிக்கா மற்றும் பிரிட்டன் விமானங்கள் இணைந்து தொடர்ந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்

கென்யா வெள்ளத்தில் சிக்கி பேரழிவு ,மக்கள் பாதிப்பு .அதிகரித்த உயிரிழப்பு .90 க்கு மேற்பட்ட மக்களை காணவில்லை ,தொடரும் தேடுதல் .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
மனித சடலம் வெட்டுகாயங்களுடன் கண்டுபிடிப்பு
Posted in இலங்கை செய்திகள்

மனித சடலம் வெட்டுகாயங்களுடன் கண்டுபிடிப்பு

மனித சடலம் வெட்டுகாயங்களுடன் கண்டுபிடிப்பு

மனித சடலம் வெட்டுகாயங்களுடன் கண்டுபிடிப்பு. ,மனைவியை பிரிந்து வாழ்ந்த கணவன் வெட்டி கொலை .

வவுனியா நெடுங்கேணி பகுதியில் 47 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் ,வெட்டு காயங்களுடன் சடலமாக மீட்க பட்டுள்ளார் .

கொலை நடந்தது எப்படி

இவர் எப்படி வெட்டி கொலை செய்யப்பட்டார் என்பது தொடர்பில் தற்போது பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .

மனைவியை பிரிந்து வாழ்ந்த நிலையில் இந்த படுகொலை சம்பவம் இடம்பெற்றுள்ளது, பல சந்தேகங்களை எழுப்பிய நிலையில் ,தற்போது மனைவி தற்கொலை புரிந்த நிலையில் சடலமாக மீட்க பட்டுள்ளார் .

மனைவி நஞ்சருந்தி பலியான நிலையில் சடலமாக மீட்க பட்டுள்ளார் .இந்த இருவரது மரணங்களும் படு கொலையா என்ற நோக்கில்,பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்க .பட்டுள்ளன

இலங்கையில் நாள்தோறும் இவ்வாறான வெட்டி படுகொலை சம்பவங்கள் ,தற்கொலைகள் அதிகரித்து காணப்படுகின்றன .

இவை இலங்கையில் குற்ற சமூகம் ஒன்று உருவாகி வருவதையும் ,மக்கள் வாழ்வியலுக்கு மிக பெரும் அச்சுறுத்தலாக இவ்வாறான சம்பவங்கள் காணப்படுவதாக மக்கள் தெரிவித்து வருகின்றனர் .

சஜித்துடன் நோர்வே தூதுவர் சந்திப்பு
Posted in இலங்கை செய்திகள்

சஜித்துடன் நோர்வே தூதுவர் சந்திப்பு

சஜித்பிரேமதாசா நோர்வே தூதுவர் சந்திப்பு

சஜித்துடன் நோர்வே தூதுவர் சந்திப்பு .நோர்வே தூதுவர் May Elin Stener மற்றும் நோர்வே தூதரகத்தின் இரண்டாவது செயலாளர் Johan Bjerkem ஆகியோருக்கு இடையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது .

இலங்கையில் இடம்பெறவுள்ள தேர்தல்

இலங்கையில் இடம்பெறவுள்ள தேர்தல் மற்றும் அவ்வேளை சஜித் பிரேமதாசா அணியினர் நடத்த உள்ள நகர்வுகளை தொடர்பில் நோர்வே கேட்டு அறிந்து கொண்டனர் .

ஸ்ரீலங்காவில் யார் ஆட்சியில் நிலை பெறவேண்டும் என்பதை ,சஜித்துடன் நோர்வே தூதுவர் சந்திப்பு எடுத்து காட்டுகிறது .,அரேபிய நாடுகள் முடிவை எடுக்கின்றன என்பதற்கு ,இந்த சந்திப்புக்கள் கட்டியம் இடுகின்றன .

ரணில் விக்கிரமசிங்காவுடன் முன்னாள் நோர்வே அமைச்சர் எரிக் சொல்கெம் முக்கிய பதவிகளில் அமர்த்த பட்டுள்ளார் .

அவ்வாறன நிலையில் அவர் ஊடக பல்வேறு பட்ட விடயங்கள் நோர்வேக்கு தெரிய படுத்த பட்டிருக்கும் .

எதிர்காலத்தில் சஜித் பிரேமதாஹஸாவின் தேர்தல் நிலைய தடுக்க அல்லது ,மாற்றீடாக என்ன செய்ய வேண்டும் என்கின்ற விடயத்தை ,இதன் ஊடக நோர்வே நகர்த்தி இருக்க கூடும் என எதிர் பார்க்க படுகிறது .

டிப்பர்மோதி பொலிஸ் அதிகாரி காயம்
Posted in இலங்கை செய்திகள்

டிப்பர்மோதி பொலிஸ் அதிகாரி காயம்

டிப்பர்மோதி பொலிஸ் அதிகாரி காயம்

டிப்பர்மோதி பொலிஸ் அதிகாரி காயம்,வவுனியாவில் பொலிஸ் அதிகாரி மோட்டார்சைக்கிள் டிப்பருடன் மோதியதில் காயமடைந்துள்ளார் .

வவுனியா நெடுக்குளம் பகுதி பொலிஸ் அதிகாரி பயணித்த மோட்டார் சைக்கிள் ,டிப்பருடன் மோதியதில் ,காயமடைந்துள்ளார் .

காயமடைந்த பொலிஸ் அதிகாரி வவுயனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டுள்ளார் .

இலங்கையில் அதிகரித்த வீதி விபத்துக்கள்

இலங்கையில் அதிகரித்த வீதி விபத்துக்கள் சம்பவங்களினால் ,நாள்தோறும் மூன்றுக்கு மேற்பட்ட மக்கள் பலியாகியும் ,பலர் காயமடைந்து வருகின்றனர் .

வீதி விதிமுறைகளை சாரதிகள் முறையாக பின்பற்ற தவறியாமையே ,இந்த பேரழிவிற்கான காரணம் என தெரிவிக்க பட்டுள்ளது .

விழிப்புணர்வு அற்ற சமுதாயமாக இலங்கையில் புதிய சந்ததி காணப்படுவது கவலை தருகிறது .

ஐரோப்பிய நாடுகளில் ,வீதி ஒழுங்கு முறைகளும் ,வாகன ஓட்டிகள் விதி விதி முறை பின்பற்றல் காரணமாக ,விபத்துக்கள் தவிர்க்க படுகின்றன .

ஆனால் இலங்கையில் இவ்விதமான நிலை காணப்படவில்லை என்ற குற்ற சாட்டு முன்வைக்க பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது .

இஸ்ரேலை தோற்கடித்த ஈரான் ஏவுகணைகள்
Posted in உக்ரைன் உளவு செய்திகள்

இஸ்ரேலை தோற்கடித்த ஈரான் ஏவுகணைகள்

இஸ்ரேலை தோற்கடித்த ஈரான் ஏவுகணைகள்


இஸ்ரேலை தோற்கடித்த ஈரான் ஏவுகணைகள்,பட்ரியாட் ஏவுகணையை திருப்பி அனுப்பும் இஸ்ரேல்.

இஸ்ரேல் மீது ஈரான் நடத்திய ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தாது அமெரிக்கா பட்ரியாட் ஏவுகணை தோல்வியை தழுவியதால் கடுப்பான இஸ்ரேல் ,தற்போது அந்த பட்ரியாட் ஏவுகணையை அமெரிக்காவிற்கு திருப்பி அனுப்புகிறது .

இஸ்ரேல் மீது சரமாரி தாக்குதலை ஈரான் நடத்தியது .இங்கே இப்பொழுது ஈரான் சொன்னது நடத்திருக்கு மாப்புள்ள என்ற நிலையே காணப்படுகிறது .

எமது ஏவுகணைகள் விமானங்கள் என்பன இஸ்ரேல் ஏவுகணைகளினால் சுட்டு வீழ்த்த படமுடியாதவை என ,ஈரான் தெரிவித்தது சரிதான் என்பதை ,இப்பொழுது இஸ்ரேல் ஓத்த்துக்கொண்டுள்ளது .

விமானங்களை பறக்கவிடாது தாக்கிய ஈரான்

விமானங்களை பறக்கவிடாது தாக்கிய ஈரான் செயல் திறன் வீச்சு போரியல் அரங்கில் ,பல மாற்றங்களை நிகழ்த்தியுள்ளது .

ஏறத்தாழ மூன்று மணித்தியாலங்களுக்கு மேலாக அதிகமாக இஸ்ரேல் விமானங்கள் பறக்கவில்லை .

அவ்விதமான சாட்டை அடியை இஸ்ரேலுக்கு ஈரான் நடத்தியது .இஸ்ரேல் வரலாற்றில் ஈரான் நடத்திய இந்த அதிரடி அதிர்ச்சிகர வைத்தியத்தை ,இஸ்ரேல் எப்பொழுதும் மறக்காது .

தோற்று போன நிலையில் காணப்படும் இஸ்ரேல் நிலை பரிதாபம் தான் போங்க .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
சரிகமபாவில் பாடும் பாடகர் இந்திரஜித்
Posted in இலங்கை செய்திகள்

சரிகமபாவில் பாடும் பாடகர் இந்திரஜித்

சரிகமபாவில் பாடும் பாடகர் இந்திரஜித்

இந்தியா தமிழக ஜீ தமிழ் தொலைக்காட்சியின் சரிகமபாவில் பாடும் பாடகர் ,இந்திரஜித் அப்பா தம்பி அழகிய குடும்பம் இவங்க தான் .

ஜீ தமிழ் தொலைக்காட்சியின் சரிகமபாவில் பாடும் பாடகரான இந்திரஜித் பதுளை இலங்கையை சேர்ந்தவர் ,.

ஜீ தமிழ் தொலை காட்சியில் இந்திரஜித் பாடல் பாடுகிறார் ,சரிகமபா பாட்டு போட்டியில் ,போட்டியாளராக கலந்து சிறப்பாக அசத்தி கொண்டுள்ளார் .

மதுரக்குரலில் சரிகமாபாவில் பாடி அசத்தும் இந்திரஜித்

அழகிய மதுரக்குரலில் சரிகமாபாவில் பாடி அசத்தும் இந்திரஜித்தின் அப்பா, தம்பி ,இந்திரஜித் தொடர்பாக நெகிழ்ந்து பேசி உள்ளார்கள் .

இந்திரஜித்துக்கு மூன்று சகோதரர்கள் ,இந்திரஜித் அவர்கள் குடும்பத்தில் இரண்டாவது மகனாவார் .

வீட்டு சுமைகளை வேலைக்கு சென்று சுமந்தவராம் .அதானல் கல்வியை இடையில் விட்டு சுமையை சுமந்தவன் இன்று ,அப்பாவின் பாடல் ஆசையை நிறைவேற்ற களம் புகுந்துள்ளார் .

இலங்கை மலையகத்தை சேர்ந்த வாலிபன் இந்திரஜித்

இலங்கை மலையகத்தை சேர்ந்த வாலிபன் இந்திரஜித் ,மலையக மைந்தன் ,இந்திரஜித் சரிகமபாவில் பாடி கொண்டு இருக்கிறார் என மக்கள் இந்திரஜித்தை கொண்டாடிய வண்ணம் உள்ளனர் .

பாட பாடா இந்திரஜித்துக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் குவிகிறது .

சரிகமபாவில் முதல் பாடல் பாடி இந்திரஜித் அசத்தி உள்ளார் ,மதுர குரலின் மலையக மைந்தன் ,வலி கடந்து வந்த பாதையில் பயணிக்கும் இலங்கை பாடகன் இந்திரஜித் வெற்றி பெற நாமும் வாழ்த்துகிறோம் .

மலையகத்தை சேர்ந்த அசானி சரிகமபாவில் திறனோடு பாடி அசத்தி இருந்தார் .

ஏழை குடும்பத்தை சேர்ந்தவர் என்பதல் அசானிக்கு உலகளாவிய ரீதியில் மக்கள் ஆதரவு கிட்டியது .

அவருக்கு பல லட்சக்கணக்கான பணமும் சரிகமபா நிகழ்வின் பின் திரட்ட பட்டது .

அவ்வாறான நிலையில் மீளவும் மலையக பாடகன் மதுர குரலவன் இந்திரஜித் ,சரிகமபாவில் பாடி அசத்த ஆரம்பித்துள்ளார் .

திறமைக்கு வறுமை ஒரு தடையாக உள்ளதை இந்த நிகழ்வுகளில் இருந்தும் ,இவர்கள் பேச்சில் இருந்தும் தெரிந்து கொள்ள முடிகிறது .

உள்ளத்தின் வழிகளை இறக்கி வைத்து மகிழ்வோடு சரிகமபா அரங்கை ,ஆட்கொள்ளும் மலையக மைந்தனுக்கு மீளவும் எமது .வாழ்த்துக்கள்

வீடியோ

எம்மிடம் ஆயுதம் இல்லை உக்ரைன்
Posted in உலக செய்திகள்

எம்மிடம் ஆயுதம் இல்லை உக்ரைன்

எம்மிடம் ஆயுதம் இல்லை உக்ரைன்

எம்மிடம் ஆயுதம் இல்லை உக்ரைன் மன்றாட்டம் ,உடேனே ஆயுதங்களை வழங்கும்படி அமெரிக்கா மேற்குநாடுகளிடன் உக்ரைன் அதிபர் கோரிக்கை .

ரஷ்யா உக்ரைனுக்கு இடையில் இடம்பெற்று வரும் போரில் ,உக்ரைன் மிக பெரும் இழப்பை சந்தித்துள்ளதஜு .

கடந்த இரண்டு ஆண்டுகளாக உக்ரைன் ரஸ்யாவுக்கு இடையில் நிலவிய கடும் போரில் ,உக்ரைன் உள் கட்டமைப்புக்கள் முற்றாக சேதமடைந்துள்ளன .

இவ்வாறான அபாயகரமான பேரழிவு ஆயுதங்களை பயன் படுத்தி , ரஷ்யா தொடர் தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளது .

இதனை அடுத்து தற்பொழுது ,ரஸ்யாவின் முன்னேற்றத்தை தடுக்கவும் ,உக்ரேனை பாதுகாக்கவும் அவசரமாக ஆயுதங்களை வழங்கும் படி உக்ரைன் அதிபர் கோரியுளளார் .

ஆயுதம் வழங்க நாடுகள் ஒப்புதல்

ஆயுதம் வழங்க பல நாடுகள் ஒப்புதல் அளித்துள்ள நிலையில் ,எதிர் வரும் சில வாரங்களில் மிக நீண்ட தூர ஏவுகணைகள் உள்ளிட்டவற்றை அமெரிக்கா பிரிட்டன் ,நெதர்லாந்து ,ஜெர்மன் போன்றவை வழங்கிட உள்ளன .

இவற்றில் நீண்ட தூர ஏவுகணைகள் முக்கிய இடத்தை பிடித்துள்ளன .

இந்த நெடுதூர ஏவுகணைகளை கொண்டு ரஷ்யா தலைநகரை தாக்கலாம் என்பது .உக்ரைன் நிலைப்பாடாக உள்ளது .

அதற்கு அமைவாக இந்த தாக்குதல்களை நடத்திட உக்காரன் தயாராகி வருகிறது .

நவீன ஆயுதங்களுடன் உக்ரைன் படைகள் வலம் வந்தாலும் ,ஈற்றில் ரஷ்யா படைகளே வென்று நிமிரும் என்கின்ற தோற்றம் காணப்படுகிறது .

ரஷ்ய உக்ரைன் போரினை அடுத்து ,மூன்றாம் உலக யுத்தம் வெடிக்கும் அபாயம் காணப்படுகிறது .

Error: View 9293b2au4w may not exist
மாணவர்களை அடித்து தூக்கும் அமெரிக்கா பொலிஸ்
Posted in உலக செய்திகள்

மாணவர்களை அடித்து தூக்கும் அமெரிக்கா பொலிஸ்

மாணவர்களை அடிக்கும் அமெரிக்கா பொலிஸ்

மாணவர்களை அடித்து தூக்கும் அமெரிக்கா பொலிஸ் ,இஸ்ரேல் இராணுவ தாக்குதலுக்கு எதிராக ,போராட்டம் நடத்தும் பல்கலைக்கழக மாணவர்களை அடிக்கும் அமெரிக்கா பொலிஸ் அராயகம் .

இஸ்ரேல் இராணுவத்தின் தொடர் இராணுவ தாக்குதலினால் பாலஸ்தினம் காசா மக்கள் பாதிக்க பட்டு வருகின்றனர் .

,அவ்வாறான மக்கள் மீது நடத்த படும் இனப்படுகொலை தாக்குதலை நிறுத்த கோரி ,அமெரிக்கா பல்கலைக்கழக மாணவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் .

ஜனநாயக வழியில் போராட்டத்தை நடத்தும் மக்கள் மீது ,வன்முறை தாக்குதலை அமெரிக்கா பொலிசார் நடத்தி வருகின்றனர் .

அதனை அடுத்து தற்போது ,அமெரிக்கா காவல்துறை மாணவர்கள் மீது நடத்தும் இந்த தாக்குதல் மிக பெரும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது .

இஸ்ரேல் கொலைகளை ஆதரிக்கும் அமெரிக்கா

இஸ்ரேல் கொலைகளை ஆதரிக்கும் அமெரிக்கா நிலை பாட்டுக்கு எதிராக வரும் நாட்களில் மக்கள் போராட்டம் மேலும் வெடிக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது .

இந்த அடக்குமுறைகள் ஊடக ஆதிக்க சக்திகளின் இரும்பு கரத்தில், எவ்வாறு அப்பாவி மக்கள் சிக்கி சீராழிந்து வருகின்றனர் என்பதற்கு ,இவை சிறந்த முன்னுதாரணமாக காண படுகின்றன .

மாணவர்களை அடித்து தூக்கும் அமெரிக்கா பொலிஸ் தாக்குதல் காணொளிகள் ,சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது .

இதில் கண்ணீர் புகை குண்டுகளை வீசி தாக்குதல் நடத்துவதும் ,மக்கள் ,மாணவர்கள் மீது அமெரிக்கா காவல்துறையினர் பொல்லுகளினால் தாக்குதல் நடத்துவதையும் காண முடிகிறது .

அமைதி வழியில் இடையூறு இன்றி போராட்டம் நடத்திய மக்களை இவ்விதம் நசுக்கும் திகைக்கும் காட்சிகளை வெளியிட பட்டுள்ளன ..

இஸ்ரேலிய போருக்கு ஆதரவாக அமெரிக்கா பிரிட்டன் என்பன தொடர்ந்து ஆதரவு வழங்கி வருகின்றன .

அவ்வாறான நிலையில் மாணவர்களை அடக்கி ஆளும் அதிகார துஸ்பிரயோகம் மேற்கொள்ளும் அமெரிக்கா பொலீஸ் செயல்பாடுகள் ,உலகலாவிய மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .

Error: View 9293b2au4w may not exist

தமிழ்தேசிய கூட்டமைப்பை உடைக்கும் சுமந்திரன்
Posted in இலங்கை செய்திகள்

தமிழ்தேசிய கூட்டமைப்பை உடைக்கும் சுமந்திரன்

தமிழ்தேசிய கூட்டமைப்பை உடைக்கும் சுமந்திரன்

தமிழ்தேசிய கூட்டமைப்பை உடைக்கும் சுமந்திரன் தமிழர்களை கொதிப்பில் உறைய வைத்துள்ளது .

தமிழீழ விடுதலை புலிகளினால் பிரிந்து கிடந்தது அரசுக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த குழுக்களை ஒன்றிணைத்து ,தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ற அரசியல் காட்சியை உருவாக்கினர் .

அதற்கு தலைவராக இரா சம்பந்தன் அவர்களை தெரிவு செய்தனர் .

இவ்வாறு தமிழீழ விடுதலை புலிகளினால் தமிழ் அரசியல் தீர்வு தொடர்பாக நகர்ந்து செல்ல ஒருங்கிணைக்க பட்ட கட்சிகள் ,உடைக்கும் நகர்வில் சட்டத்தரணி சுமந்திரன் ஈடுபட்டு வருகிறார் .

இலங்கை தமிழரசு கட்சி தலைவராக சிறிதரன்

இலங்கை தமிழரசு கட்சி தலைவராக சிறிதரன் தெரிவு செய்ய பட்டதில் , இருந்து இன்றுவரை சிறிதரனுக்கு எதிராக சட்ட மிரட்டல் விடுத்த வண்ணம் உளளார் இந்த எடுபிடி எம் ஏ சுமந்திரன் .

கிழக்கு ஆளுநருடன் சுமந்திரன் பேச்சு
கிழக்கு ஆளுநருடன் சுமந்திரன் பேச்சுகிழக்கு ஆளுநருடன் சுமந்திரன் பேச்சு

தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு காண போகிறோம் , இலங்கை அரசுடன் பேச போகிறோம் என கூறும் சுமந்திரன் ,இன்று அதே மக்களினால் தெரிவு செய்ய பட்ட உறுப்பினர்கள் ஊடக தெரிவு செய்ய பட்ட தலைவரை ஏற்க மறுத்து ,சிறிதரனுக்கு சதிகளை அவிழ்த்து வருகிறார் .

கட்சிக தோழமைகளே மிரட்டும் சுமந்திரன்

என்னை எதிர்க்கும் யாவருக்கும் சிறை காத்துள்ளது என்பதே சுமந்திரன் நிலை பாடாக உள்ளது .

சுமந்திரன் சிறந்த இராய தந்திரி எனவும் ,தமிழ் மக்களுக்கு விடுதலை வாங்கி தருவார் என பல அரசியல் கட்சியின் தலைகள் ,வாடகை வாய்களும் பேசுகின்றன .

விரிவாக கூறுவது என்றால் அவருக்கு பரிந்து படுகின்றன .கடந்த தேர்தலில் ஆசனங்களை இழந்து வீடு செல்லும்நிலைக்கு சென்ற சுமந்திரன் ,சம்பந்தன் மயிரிழையில் தப்பினர் .

அதன் பிற இப்பொழுது ஆளும் அதிகார வர்க்கத்தை தன்னக்தே வைத்தும் ,சட்டத்தை வைத்தும் ,பல குளறு படிகளையும் ,சக கட்சி தோழர்களையும் திரைமறைவில் மிரட்டி வருகின்றாராம் .

இதனை வெளியில் கூற முடியாது பல தலைகள் சுழல்கின்றன .சட்டத்தை வைத்து மிரட்டுவதே சட்ட குற்றம் என்பது சட்டம் படித்த சட்ட மேதை சுமந்திரனுக்கு தெரியவில்லை போலும் .

பதவி ஆசைகளுக்கு அலைவதை விடுத்து ,மக்களின் விடியலுக்கு போராடுங்கள் மிஸ்ட்டர் சுமந்திரன் .

நீங்கள் தான் துணிந்தவர் ஆயிற்றே ..சிங்கம் சிங்கிளா தானே வரும் .வாருங்கள் நேரலையில் விவாதிப்போம் ,கேட்பதற்கு நிறைய உள்ளன .பலமுறை கேட்டு விட்டோம் .ஏன் ஊடகங்களை சந்திக்க பயந்து ஓடுகின்றீர்கள் .

ஏனைய கட்சி பிரமுகர்கள் அழைத்தால் ,திருப்பி அழைத்தும் பேசுகின்றனர் ,தமது தரப்பு நிலை பாட்டை தெரிவிக்கின்றனர் .

தனி நபர் சுமந்திரனுடன் எமக்கு எவ்வித கருத்து முரணும் இல்லை ,மக்கள் அரசியல் பொதுத்தளத்தில் பயணிக்கும் உங்கள் மீது எதிர் தரப்பால் இவ்விதமான குற்ற சாட்டு வைக்க படுகிறது .அதற்கு உங்கள் பதில் என்ன மிஸ்ட்டர் சுமந்திரன் ..?

வன்னி மைந்தன்

வியாபாரி தமிழ் கட்சிகளை சாடினார்
Posted in இலங்கை செய்திகள்

வியாபாரி தமிழ் கட்சிகளை சாடினார்

வியாபாரி தமிழ் கட்சிகளை சாடினார்

பிரபல வியாபாரி தமிழ் கட்சிகளை சாடினார் என்ற விடயம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.பிரபல வெளிநட்டு தமிழ் வியாபாரியின் கருத்துக்கள் பல்வேறு பட்ட சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளன .

தமிழீழ விடுதலை புலிகள் ஆயுத ,அரசியல் ரீதியாக வீழ்த்த பட்ட பின்னர் ,தற்போது அந்த வெற்றிடம் தொடர்ந்தும் நீள்கிறது .

தமிழீழ விடுதலை புலிகளிகள் அமைப்பானது ,ஒழுக்கம் கட்டுகோப்பான தனித்துவமானஅமைப்பாகும் . அவர்களது சிந்தனை வடிவத்திற்குள் ,இன்றுள்ள தமிழ் அரசியல் கட்சிகளினால் பயணிக்க முடியவில்லை .

வலையில் சிக்கிய முதலைகள்

இலங்கை வீசிய வலையில் பெரும் முதலைகள் சிக்கி விட்டன .,இவற்றுக்கு பிரதான தமிழ்கட்சிகளும் ஆகும் .

தமிழ் தேசிய அரசியல் பாதையை மறந்து ,தமது தனி குடும்ப நலன் வளர்ச்சியில் கட்சிகள் மிளிர்கின்றன.

தமிழ் தேசியம் என பேசும் இதே காட்சிகள் ,தேர்தல் வரும் பொழுது மட்டும் வீதி இறங்கும் நிலையும் ,அவ்வப்போது வெடி கொளுத்துவதுமாக உள்ளனர் என்கின்ற குற்ற சாட்டை கந்தையா பாசுக்கரன் தெரிவித்துள்ளார் .

மக்களின் அரசியல் அபிலாசைகளை மறந்து பயணிப்பதாகவும் ,இவர்களின் ஒன்று படுத்தும் ஒருமை கிழிந்ததினால் , இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக ,தொழில் அதிபரும் ,சிறந்த வியாபாரியாக விளங்கி வரும் கந்தையா பாசுக்கரன் தெரிவித்துள்ளார் .

மிக முக்கிய தொழில் அதிபராக காணப்படுவதுடன், இலங்கையில் பாதிக்க பட மக்களுக்கும் உதவி செய்து வருவதாக தெரிவித்துள்ளார் .

பதில் இன்றி தடுமாறும் காட்சிகள்

பிரபல வியாபரியின் இந்த அதிரடி நேர்கோட்டு சில கேள்விகளுக்கு பதில் இன்றி பல கட்சிகள் தடுமாறுகின்றன .

மேலும் இவர் தமிழ் கட்சி ஒன்றில் இணைந்து ,அரசியலில் போட்டியிட போவதாக தனது ஆசையை மறைமுகமாக வெளிக்காட்டியுள்ளார் .

புதிய இளம் அரசியல் வாதிகள் நுழைய வேண்டும் எனவும் ,அப்பொழுது தான் ,இலங்கை தமிழ் அரசியல் முதிர் நிலை பெறுவதுடன் ,புதிய பாதை நோக்கி பரிணமிக்க முடியும் என்கிறார் .

இவரது கருத்து என்னவோ நேரடி பார்வைக்கு சரியானதாக பார்வைக்கு காணப்டுகிறது .

ஆனால் களத்தில் ,நிலத்தில் மிக பெரும் முதலீட்டை செய்துள்ள இந்த தொழில் அதிபரின் சொத்துக்களுக்கு ,இலங்கை அரசு கெடுதல் விளைவிக்காது பார்த்து கொள்ள வேண்டும் .

அப்படி என்றால் இவரால் எப்படி தமிழ் தேசிய பரப்பில் ,நேரடியாக புலிகள் பாணியில் ,தேசிய அசரசியல் சமன் நிலை பெறும் என்ற கேள்வி எழுப்ப பட்டுள்ளது .

ஆக மொத்தம் குளம் கலக்க படுகிறது ,குட்டையில் மீன் பிடிக்க பட போகிறது .சிக்கப்பபோவது மீன் குஞ்சுகளா ,….? அல்லது ..எதுவென்ற கேள்வியோட களம் நகர்கிறது .

ஊது பத்திக்கும் ..ஊந்துகணைக்கும் …வாசம் இரண்டாம் ..என…நாம் பேசிய சில அரசியல் தலைகள் இப்படி ஆட்டுகின்றன .- வன்னி மைந்தன்

எட்ட முடியா சிகரம் எட்டு
Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

எட்ட முடியா சிகரம் எட்டு

எட்ட முடியா சிகரம் எட்டு

எட்ட முடியா சிகரம் எட்டு
ஏறி உச்சம் உலகை தட்டு
நீ தமிழன் என்பதால் மகிழ்ச்சி
நினைத்தால் பெருமை மனதில் குளிர்ச்சி

மரங்களின் உயர்வை வேர்கள் அறியும்
மனங்களின் நிலையை வலிகள் புரியும்
அறத்தின் நிறம் அகத்தில் தெரிந்தது
ஆதலால் உன்னை வாழ்த்திட முனைந்தது .

சரித்திட பகைவர் பலர் முனைவார்
சாதனை வீழ்த்த சிலர் எழுவார்
எதுவும் நடக்கலாம் எண்ணி விழிப்பாய்
எச்சரிக்கை கொள் துணிந்தாய் வெல்வாய்

நாளை உந்தன் புகழை விரிப்பாய்
நம் நாட்டு நெறிகள் (NL ) விதைப்பாய்
புத்தம் புதிதாய் தாயில் இருக்கும்
புரிந்தால் நாடே செழிப்பாய் மிதக்கும் ….!

ஆக்கம் -02-05-2024
நட்புடன் – வன்னி மைந்தன் _

இறங்கி ,செயல் முறை விளக்கத்துடன் சமையலை காட்டியமை காரணமாகவும் ,அந்த உணவை தன் கரத்தால் அனைவருக்கும் வழங்கிய நிலை என்னை கவர்ந்தது . அதலால் கந்தையா பாஸ்கரன் (கரன் ) அறத்தை எண்ணி வடித்தேன்.

இன்று லண்டன் மேயர் தேர்தல்
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

இன்று லண்டன் மேயர் தேர்தல்

இன்று லண்டன் மேயர் தேர்தல்

இன்று லண்டன் மேயர் தேர்தல் இடம்பெற்றது .லண்டன் மேயரை தெரிவு செய்திடும் தேர்தல் சிறப்பாக இன்று இடம் பெற்றுள்ளது .

மக்கள் தமது வாக்குகளை செலுத்தும் பணியை வேகமாக செய்து முடித்தனர் .

அதே போன்று நாமும் இன்று லண்டன் மேயர் தெரிவு செய்திடும் நமது வாக்கினை ,ஆளும் லண்டன் மேயருக்கும், ஏனைய தொழில் கட்சி உறுப்பினர்களுக்கும் வழங்கி வந்தோம் .

கண்ணியமான முறையில் தேர்தல் இடம்பெற்று இருந்தது .காலை வேளையில் வீடுகளுக்கு தொழில் கட்சி தேர்தல் பரப்புரை குழிவினார் ,துண்டு பிரசுரங்களை பிரசுரம் செ ய்திருந்தனர் .கீழே அதனை பார்க்க .

இன்று லண்டன் மேயர் தேர்தல்

அதில் லண்டன் மேயருக்கு போட்டியிடும் மூன்று நபர்களது பெயர்கள் குறிப்பிட பட்டு இருந்தது .

அதில் முதலாம் இரண்டாம் மூன்றாம் நிலை என்ற வாக்கு முறையின் கீழ் மூன்று சீட்டுக்கள் புள்ளடி போட பட்டு இருந்தது ..

மீளவும் சார்ஜகான் ஆட்சி அதிகாரத்தில்

மீளவும் ஆளும் சார்ஜகான் ஆட்சி அதிகாரத்தில் வீற்றிருப்பார் என எதிர் பார்க்க படுகிறது .

இஸ்ரேல் பாலஸ்தீன யுத்தம் இவருக்கு சார்பான ஆதரவை ஏற்படுத்தியுள்ளதை அவதானிக்க முடிந்தது .

பாகிஸ்தான் பூர்விக குடியான லண்டன் மேயர் மக்கள் மத்தியில் பிரபலம் பெற்ற ஒருவராகவும், நன்மதிப்பை பெற்றவராக காண படுகினறார் .

மீளவும் லண்டன் மேயராக ஆட்சியில் அமர்ந்தால், மக்களுக்கு நண்மை செய்திடுவார் என லண்டன் மக்கள் எதிர் பார்க்கின்ற்னர் .

லண்டன் மாநகரத்தில் ,வெளிநாட்டவர்கள் அதிகம் வசித்து வருவதே இவருக்கு ,பெரும் ஆதரவை ஏற்படுத்த காரணம் என எதிர் பார்க்க படுகிறது .

Error: View 9293b2au4w may not exist
இருளில் மூழ்கிய உக்ரைன்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உக்ரைன் உலக செய்திகள் உளவு செய்திகள்

இருளில் மூழ்கிய உக்ரைன்


இருளில் மூழ்கிய உக்ரைன்

இருளில் மூழ்கிய உக்ரைன் .ரஷ்யா உக்ரைன் மீது நடத்தி வரும் தாக்குதலில் ,அதன் மின்சார மையங்கள் அழிக்க பட்டதால் ,உக்ரைன் இருளில் மூழ்கியது .

மின்சார உற்பத்தி மையங்கள் பலமான உள்ளாகிய நிலீயல் ,உக்ரின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது .

இதனால் உக்ரைன் பாதி நாடு இருளில் மூழ்கியுள்ளதாக உக்ரைன் அரச அதிகாரிகள் தெரிவித்துள்ளன .

மூன்றாவது ஆண்டுக்குள் வைத்து நகரும் உக்ரைன் ரஷ், உக்ரைன் மிக மோசமகா பாதிக்க [பட்டுள்ளது .

இதுவரை பல கிராம மக்கள் வெளி முடிய நிலையில் சிக்கி தவித்து ,.வருகின்றன

உக்ரைனை விட்டு வெளியேற மக்களுக்கு தடை

இஸ்ரேல் இராணுவ தளங்கள் மீது கடும் தாக்குதல் ,இழப்பு என அறிவிப்பு .சவுதியில் மசூதியின் கூரை இடிந்து வீழ்ந்தது ,அதிர்ச்சியில் மக்கள் .

அதிக மாழைவீழ்ச்சி காரணமாக பள்ளிவாசல் கூற இடித்து வீழ்ந்துள்ளது ,காணொளி வைபர் வாட்சாப் பகுதியில் இணைக்க பட்டுள்ளது .

,மின்சார உற்பத்தி மையங்கள் ரஸ்யாவினால் அழிப்பு ,மக்கள் போராட்டம் வெடித்தது .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
மனித எலும்புகூடு கண்டுபிடிப்பு
Posted in இலங்கை செய்திகள்

மனித எலும்புகூடு கண்டுபிடிப்பு

மனித எலும்புகூடு கண்டுபிடிப்பு

மனித எலும்புகூடு கண்டுபிடிப்பு ,யாழ்ப்பாணம் புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் வியாழக்கிழமை (02) அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் நளினி சுபாகரன், சட்ட வைத்திய அதிகாரி செ.பிரணவன் உள்ளிட்ட துறைசார் அதிகாரிகள் முன்னிலையில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

புங்குடுதீவில் கடற்கரை பகுதியில் மனித எலும்பு

புங்குடுதீவு 10 ஆம் வட்டாரத்தில் அரசினர் வைத்தியசாலையை அண்மித்த பகுதியிலுள்ள தென்பெருந்துறை சதானந்தசிவன் ஆலயத்தின் புனரமைப்பு

பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் வேளையில் , ஆலய சூழலில் கிடங்கொன்றினை வெட்டிய போது , மனித எலும்பு கூட்டு எச்சங்கள் அண்மையில் வெளிவந்தன.

அதனை தொடர்ந்தே கிடங்கு வெட்டும் பணிகளை இடைநிறுத்தி அது தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் ,

அவ்விடத்தினை தமது கட்டுப்பாட்டுக்குள் எடுத்த நிலையில் அவ்விடத்தில் அகழ்வு பணிகளை முன்னெடுக்க , ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் அனுமதி கோரி விண்ணப்பம் செய்தனர்.

அதன் அடிப்படையில் வியாழக்கிழமை(02) நீதிமன்றத்தின் அனுமதியுடன் அவ்விடத்தில் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வரத்தகர்களை மிரட்டி பணம் மோசடி
Posted in இலங்கை செய்திகள்

வர்த்தகர்களை மிரட்டி பணம் மோசடி

வர்த்தகர்களை மிரட்டி பணம் மோசடி

வர்த்தகர்களை மிரட்டி பணம் மோசடி ,பொதுச் சுகாதார பரிசோதகர்கள் எனக் கூறி வர்த்தகர்களுக்கு தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு பணம் பெறும் மோசடி ஒன்று இடம்பெற்று வருவதாக இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.

கடந்த சில நாட்களாக இது தொடர்பில் பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக அதன் தலைவர் உபுல் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.

பொது சுகாதார பரிசோதகர்கள் என கூறி மோசடி

பொது சுகாதார பரிசோதகர்கள் என கூறிக்கொண்டு தொலைபேசி அழைப்புக்களை மேற்கொள்ளும் நபர்களுக்கு பணம் வழங்குவதை தவிர்க்குமாறு உபுல் ரோஹன, வர்த்தகர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

“நட்சத்திர ஹோட்டல்களுக்குக் கூட தொலைபேசி அழைப்பெடுத்து வலய பொது சுகாதார பரிசோதகர் போல் நடித்து பணம் கேட்கின்றனர்.

சில தொழிலதிபர்களை ஏமாற்றி பணம் வசூலித்த முறைப்பாடுகள் ஏராளம். சமீபகாலமாக பொலிஸ் நிலையங்களில் ஏராளமான முறைப்பாடுகள் வந்துள்ளன.

எனவே இது போன்ற தொலைபேசி அழைப்புக்கள் ஏதும் வந்தால் பணம் வழங்குவதை தவிர்த்து அருகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் முறையிடவும்” என்றார்.

இஸ்ரேல் துறைமுகம் மீது தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உக்ரைன் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் துறைமுகம் மீது தாக்குதல்


இஸ்ரேல் துறைமுகம் மீது தாக்குதல்

இஸ்ரேல் துறைமுகம் மீது தாக்குதல் ,இஸ்ரேல் எலியாட் துறைமுகம் எம்மீது விமனக்கல் மற்றும் ஏவுகணைகள் மூலம் கடும் தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

இந்த ஏவுகணை தாக்குதலில் குறித்த எலியாட் துறைமுகம் பலதஹ் சேதங்களை உள்ளாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுளள்து .

ஆக்கிரமிக்க பட்ட பலஸ்தீன்

ஆக்கிரமிக்க பட்ட பலஸ்தீன் பகுதியில் அமைந்திருக்கும் ,இந்த துறைமுகம் பலமான தாக்குதலலுக்கு உள்ளாகி வருகிறது .

பலம் பொருந்திய இஸ்ரேல் இராணுவத்தின் கோட்டைகளை துல்லியமாக ஊடறுத்து ஈரான் ஆதரவு போராளி குழுக்கள் ,வெற்றிகர தாக்குதலை நாடத்திய வண்ணம் உள்ளனர் .

இவ்வாறான தாக்குதல்களை எதிர்கொள்ள முடியதாது இஸ்ரேல் இராணுவம் திணறிய வண்னம் உள்ளது .

ரபா மீதான தாக்குதல் இறுதி வடிவம் பெற்றுள்ள நிலையில் ,ஹிஸ்புல்லா போர் படைகள் வேக தாக்குதல்களை தீவிர படுத்தியுள்ளன .

லெபனான் ஹிஸ்புல்லா நடத்தும் அதிரடி தாக்குதல்களினால் ,இஸ்ரேல் இராணுவத்தினருக்கு மிக பெரும் ஆள் ,ஆயுத இழப்பு ஏற்படுத்த பட்டு வருகிறது குறிப்பிட தக்கது .

வீடியோ

சமயசடங்குகள் செய்யப்படாத திருமணம் செல்லுப்படியாகாது
Posted in உலக செய்திகள்

சமயசடங்குகள் செய்யப்படாத திருமணம் செல்லுப்படியாகாது

சமயசடங்குகள் செய்யப்படாத திருமணம் செல்லுப்படியாகாது

சமயசடங்குகள் செய்யப்படாத திருமணம் செல்லுப்படியாகாது ஒவ்வொரு மதங்களுக்கும் மத சடங்குகள் முக்கியமானவை. திருமணத்தின் போது, இந்த சடங்குகள் முக்கியமாக கடைப்பிடிக்கப்படும். சிலர், சடங்குகளைச் செய்யாது, பதிவு திருமணத்துடன் நிறைவு

செய்துகொள்கின்றனர். எனினும், சமய சடங்குகள் செய்யப்படாத திருமணம் செல்லுப்படியாகாது என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

திருமணம் செல்லாது

இந்தியாவின் உத்திரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த தம்பதியினர் அவர்களது திருமணம் செல்லாது என அறிவிக்க வேண்டி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.இந்து முறைப்படி திருமண சடங்குகள் எதுவும்

நடைபெறவில்லை எனவும் திருமண சான்றிதழ் பெற வேண்டி சிறிய விழா ஏற்பாடு செய்து உத்திரப் பிரதேச சட்டப்படி சான்றிதழ் பெற்றோம் எனவும் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.

இதன்படி, இந்து திருமண சட்டங்களின் படி நடத்தப்படாத திருமணங்கள் குறித்தும், அதனை ஒழுங்குபடுத்த கோரியும் உச்சநீதிமன்றத்தில் ஏற்கனவே பொதுநல மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டு இருந்தன.

சமயசடங்குகள் செய்யப்படாத திருமணம் செல்லுப்படியாகாது

இந்த வழக்குகள் மீதான விசாரணை நடத்தப்பட்டு அது தொடர்பான பல்வேறு உத்தரவுளை உச்சநீதிமன்ற நீதிபதி அமர்வு வெளியிட்டுள்ளது. இந்து திருமணத்தில் அக்னி சாட்சியாக நடைமுறையில் இருக்கும் சடங்குகள் கொண்டு திருமணம் நடைபெற வேண்டும் எனவும் இந்து திருமணம் சட்டம் பிரிவு 5இன் படி, திருமண விழா நடைபெற வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

இதற்கமைய, பிரிவு 7இன் படி இந்த சடங்குகள் நடைபெறவில்லை என்றால் திருமணம் செல்லாது. பிரிவு 8இன் படி இந்துமுறைப்படி சான்றிதழ் பெறுவது எளிது எனவும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

அக்னி சாட்சி போன்ற இந்து சடங்குகளின்படி ஒரு இந்து திருமணம் செய்யப்படாவிட்டால், அந்த திருமணம் இந்து திருமணமாக கருதப்படாது.

தேவையான சடங்குகள் செய்யப்படாத நிலையில், அது இந்து திருமண சட்டத்தின் கீழ் ஒரு திருமணமாக அதனை கருத முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

திருமண விதிகளை பின்பற்றாமல்,

எந்த மதமாக இருந்தாலும், இல்லாவிட்டாலும் உரிய திருமண விதிகளை பின்பற்றாமல், ஒரு ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் கணவன்-மனைவி என்ற அந்தஸ்தைப் பெற முடியாது எனவும் ஆண் பெண் என இருவரும்,

கணவன் – மனைவி என்ற அந்தஸ்தைப் பெற வேண்டும் என்றால், திருமண சட்ட விதிகளின் கீழ் செல்லுபடியாகும்படி திருமணவிழாவை நடத்த வேண்டும் எனவும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், திருமணம் என்பது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஒரு உறவை ஏற்படுத்தி, அவர்களை குடும்பமாக திகழ வைக்கும் ஒரு முக்கிய நிகழ்வு எனவும் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்து திருமணச் சட்டம், 1955 இன் பிரிவு 7 இன் கீழ், மத சடங்குகளுக்கு ஒரு சிறப்பு இடம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்து முறைப்படி திருமண சான்றிதழ் வேண்டும் என்றால் அவர்கள் அதற்கான வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் எனவும் உச்சநீதிமன்ற நீதிபதி அமர்வு கூறியுள்ளது.

மாணவன் அடித்து மாணவன் படுகொலை
Posted in இலங்கை செய்திகள்

மாணவன் அடித்து மாணவன் பலி

மாணவன் அடித்து மாணவன் பலி

மாணவன் அடித்து மாணவன் பலி ,இந்த படுகொலை ,கிரிக்கெட் திடல் தொடர்பில் பாடசாலை மாணவர்கள் இருவருக்கு இ​டையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில், மாணவர் ஒருவர் கிரிக்கெட் மட்டையால் அடித்து கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் என்றக் குற்றச்சாட்டின் கீழ் மற்றுமொரு மாணவனை நாவலப்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளனர்.

நாவலப்பிட்டி மொன்டி கிறிஸ்டோ தோட்டத்தின் கீழ் பகுதியைச் சேர்ந்த ஸ்டேன்லி ஸ்டெப்பில் (வயது 13) என்ற பாடசாலை மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இரு மாணவர்களும் பாடசாலை நண்பர்கள் எனவும், இருவரும் கடந்த 23ஆம் திகதி தோட்டத்தில் கிரிக்கெட் விளையாடச் சென்ற போது, ​​கிரிக்கெட் திடல் தொடர்பில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியுள்ளது. இதில், மற்றைய மாணவர் கிரிக்கெட் மட்டையால் தாக்கியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதில் பலத்த காயமடைந்த மாணவன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த மாணவன், திங்கட்கிழமை (29) உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த செய்தி மிக பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் ,மக்கள் கொதிப்பில் உறைந்துள்ளனர்

மக்களுக்கு காணி உரிமை நிச்சயம் கிடைக்கும்
Posted in இலங்கை செய்திகள்

மக்களுக்கு காணி உரிமை நிச்சயம் கிடைக்கும்

மக்களுக்கு காணி உரிமை நிச்சயம் கிடைக்கும்

மக்களுக்கு காணி உரிமை நிச்சயம் கிடைக்கும் ,இந்த மாத இறுதிக்குள் மக்களுக்காண காணி உரிமை நிச்சயம் கிடைக்கும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் செயலாளரும் அமைச்சருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.,

கொட்டகலை பொது மைதானத்தில் நேற்று இடம்பெற்ற இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் மே தினக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே ஜீவன் தொண்டமான் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

மேதினக் கூட்டம் நடத்த முடியவில்லை.

ஆறுமுகன் தொண்டமான் மறைந்த பின்னர் எம்மால் மேதினக் கூட்டம் நடத்த முடியவில்லை.

கொரோனா, பொருளாதார நெருக்கடி என்பவற்றை எதிர்கொள்ள நேரிட்டது. இ.தொ.க முடிந்து விட்டதா என கேள்வி எழுப்பினார்கள். 4 வருடத்தின் பின்னர் பாரிய மேதின கூட்டமொன்றை நடத்துகின்றோம்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு 1700 ரூபா சம்பள அதிகரிப்பை பெற்றுக் கொடுப்பதாக உறுதியளித்தோம்.

வாக்குறுதியை நிறைவேற்றியிருக்கிறோம்

அந்த வாக்குறுதியை நிறைவேற்றியிருக்கிறோம். கடந்த 4 வருடங்களாக பல்வேறு அவமானங்களையும் பிரச்சினைகளையும் சந்தித்திருக்கிறோம்.

எமது மக்கள் பல பிரச்சினைகளை எதிர்கொள்கின்றனர். நாம் நில உரிமையற்ற சமூகமாக இருக்கிறோம். இந்த மாத இறுதிக்குள் எமது மக்களுக்கு காணிக்ளுக்கான உரிமை நிச்சயம் கிடைக்கும் என்றார்