பொலிசாரை தாக்கிய கணவன் மனைவி
Posted in இலங்கை செய்திகள்

பொலிசாரை தாக்கிய கணவன் மனைவி

பொலிசாரை தாக்கிய கணவன் மனைவி

பொலிசாரை தாக்கிய கணவன் மனைவி ,போலீஸ் அதிகாரி மீது கணவன் மனைவி திடீர் தாக்குதல் .

இலங்கை களுத்துறை பகுதியில் நீதிமன்றம் ஒன்றுக்கு வழக்கு விசாரணைக்காக வருகை தந்திருந்த கணவன் மனைவி இணைந்து போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் மீது கடும் தாக்குதலை நடத்தினர்.

நீதிமன்ற வளாகத்திற்கு விசாரணைக்காக வருகை தந்த கணவன் மனைவி ஆகியோரை வழிமறித்த போலீஸ் அதிகாரி .பெண் அணிந்திருந்த உடையானது நீதிமன்றத்திற்கு பொருத்தமற்றது என தெரிவித்துள்ளார் .

கணவன் மனைவிக்கு இடையில் கடும் வாக்குவாதம்

இதனை அடுத்து காவல்துறை அதிகாரிக்கும் கணவன் மனைவிக்கு இடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றது .

இந்த வாக்குவாதம் ஒரு கட்டத்தில் உச்சம் அடைந்து முட்டி வெடித்த நிலையில் ,கணவன் மனைவி இணைந்து காவல்துறை அதிகாரியை சரமரியாக தாக்கினர்.

இதன் பொழுது பலத்த காயமடைந்த கான்ஸ்டபிள் அதிகாரி தரத்திலான காவல்துறை அதிகாரி தற்பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

நீதிமன்றங்களுக்கு வருகை தருகின்ற மக்கள் இந்த உடை தான் அணிந்து வருகை தர வேண்டும் என்கின்ற சட்ட ஏதும் இலங்கையில் காணப்படவில்லை .

ஆனால் போலீசார் வேண்டுமென்றே இந்த பெண் கணவன் மனைவி மீது விஷமத்தனமாக வலிந்து சீண்டும் நடவடிக்கை ஈடுபட்டு அவர்களை திசை திருப்ப நடவடிக்கை ஈடுபட்டதான தகவலாகவே இந்த சம்பவம் காணப்படுகிறது .

லஞ்சம் பெறுவதற்காக நடவடிக்கை

அல்லது இந்த அதிகாரி அவர்களும் லஞ்சம் பெறுவதற்காக இவ்வாறான ஒரு விடயத்தை கையாண்டாரா என்கின்ற விடயங்களும் தற்பொழுது விழுந்து வெடிக்கின்றன .

இலங்கையில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல் துறை லஞ்சம் குற்றச்சாட்டுகளில் சிக்கித் தவித்து வருகின்ற நிலையில், இந்த சம்பவம் பல்வேறுபட்ட சர்ச்சைகளையும் பேசு பொருளையும் ஏற்படுத்தி உள்ளது.

மேற்படி சம்பவம் தொடர்பாக இலங்கை சகா காவல்துறை அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் .

கழுத்துறை நீதிமன்ற வளாகத்தில் இலங்கை காவல்துறை அதிகாரி மீது நடத்த பட்ட இந்த தாக்குதல், சிங்கள மக்கள் மத்தியில் மட்டுமல்ல ,தமிழ் மக்கள் மத்தியிலும் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

இஸ்ரேல் தாக்குதலில் 210மக்கள் பலி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இஸ்ரேல் தாக்குதலில் 210மக்கள் பலி

இஸ்ரேல் தாக்குதலில் 210மக்கள் பலி

இஸ்ரேல் தாக்குதலில் 210மக்கள் பலி ,கமாஸ் மக்கள் விடுதலை இயக்கத்தினால் சிறைபிடித்து வைக்கப்பட்டிருந்த நான்கு கைதிகளை மீட்க அப்பாவி மக்கள் 210 பேரை கொன்றுள்ளது .

அவ்விதமான தாக்குதலை நடத்தியே யூத ராணுவம் திடீர் ராணுவ நடவடிக்கை மூலமாக மீட்டு சென்றது .

இந்த மீட்பு நடவடிக்கையின் பொழுது நான்கு கைதிகளை மீட்க பட்ட பகுதியில் அமைந்துள்ள 2 அகதி முகாம்கள் மீது தாக்குதலை நடத்தியது.

210 மக்கள் பலியாகியுள்ளனர்

இதன் பொழுது 210 மக்கள் பலியாகியுள்ளனர் ,மேலும் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்த்துள்ளனர் .என அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன .

இரண்டு முகாம்களிலும் பெண்கள் சிறுவர்கள் கர்ப்பிணிகள் குழந்தைகள் உள்ளிட்ட 210 பேரை ஈவிரக்கம் இன்றி கொன்றுவிட்டு இந்த நான்கு பேரையும் சிறை மீட்டு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இஸ்திரேலிய ராணுவத்தின் விசேட விமானங்கள் ,காமெண்டோ படைகள் என்பன கடும் தாக்குதலை நடத்தின .

அதன் பின்னர் இந்த தாக்குதலை நடத்தி அங்கிருந்த அந்த நான்கு கைதிகளை மீட்டு சென்றனர்.

இவ்வாறு மீட்டு சென்றவர்களில் இரண்டு பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் உள்ளிட்டவர்கள் என புதிய தகவல் வெளியாகியுள்ளன .

பாலஸ்தீன மக்களை படுகொலை

210 மக்களை படுகொலை செய்து நான்கு தமது மக்களை மீட்டுச் சென்ற இந்த சம்பவம் அரபிய தேசங்களில் கொந்தளிப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது .

சியோனிசம் நடத்திய இந்த படுகொலையின் பின்னர், சிறை பிடித்து வைக்கப்பட்டுள்ள ஏனைய கைதிகளை கமாஸ் மக்கள் விடுதலை இயக்க போராளிகள் படுகொலை செய்யக் கூடும் என்கின்ற ஐயம்நிலவுகிறது .

இஸ்ரேலின் அரசுக்கு எதிராக பெரும் போராட்டம்

கைதிகளின் பெற்றோர்கள் உறவினர்கள் இஸ்ரேல் அரசுக்கு எதிராக பெரும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர் .

இதே போன்றான தாக்குதலை நடத்தி ஏனைய கைதிகளையும் நாங்கள் மீட்டு வருவோம் .

அதற்காக எத்தனை ஆயிரம் காசா மக்களையும் படுகொலை செய்ய தயங்கமாட்டோம் என்பது ,இஸ்ரேல் ராணுவத்தின் செயலாகவே இந்த இனப்படுகொலை தாக்குதல் காண்பிக்கின்றது.

அப்பாவி மக்கள் படுகொலையை அடுத்து ஹமாஸ் மக்கள் விடுதலை இயக்க விடுதலை போராளிகள் இணைந்து ,கூட்டு தாக்குதல் ஒன்றை இசுரேலியா மக்கள் வாழ்விடங்கள் மீது நடத்த கூடும் என எதிர் பார்க்க படுகிறது .

இஸ்ரேல் இராணுவ கொமாண்டர் பலி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இஸ்ரேல் இராணுவ கொமாண்டர் பலி

இஸ்ரேல் இராணுவ கொமாண்டர் பலி

இஸ்ரேல் இராணுவ கொமாண்டர் பலி ,கமாஸ் விடுதலை போர் படைகள் தாக்குதலில் இஸ்ரேலிய இராணுவ தளபதி பலி.

கமாஸ் மக்கள் விடுதலை இயக்க போராளிகள் நடத்திய திடீர் தாக்குதலில் இஸ்திரேலியா இராணுவத்தின் மிக முக்கியமான தளபதி ஒருவர் பலியாகி உள்ளதாக இஸ்ரயேலிய ராணுவ தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன .

இஸ்திரேலியா கைதிகளை மீட்பு

காசா பகுதியில் மறைவிடம் ஒன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த இஸ்திரேலியா கைதிகளை, மீட்கும் நடவடிக்கையில் ,இஸ்ரேலிய ராணுவத்தின் சிறப்புமாண்டாக்கள் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர் .

இதன் பொழுது நால்வர் மீட்டு செல்லப்பட்டனர். மிக முக்கியமான தளபதி ஒருவர் சம்பவத்தில் பலியானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிக முக்கிய கட்டளை தளபதியே பலியாகியுள்ளார் .

கமாஸ் போர் படைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்த கைதிகளை மீட்கும் நடவடிக்கையில், ஈடுபட்டுக் கொண்டிருந்த கமாண்டோ படையணியின் தளபதியாக செயல்பட்டவரே காயம் அடைந்த நிலையில் தற்போது பலியாகியுள்ளதாக இஸ்ரேலிய செய்திகள் தெரிவிக்கின்றன.

மக்கள் போராட்டம்

கைதிகளை விடுவித்து தரும்படி கோரி இஸ்ரேலிய அரசு அதிபருக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்ற இந்த வேளையில் இந்த மீட்பு நடவடிக்கை இடம் பெற்றுள்ளது.

எட்டு மாதங்களை கடந்து இடம்பெற்று கொண்டிருக்கின்ற இந்த யுத்தத்தில், இடம்பெற்ற இரண்டாவது கைதிகள் மீட்பு நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது .

வெற்றிகரமான கைதிகள் மீட்பு தாக்குதலாக முடிவு பெற்றுள்ளதாக ,இஸ்ரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார் .

இவர்களைப் போன்று ஏனையவர்களையும் தாங்கள் மீட்டு வருவோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

இவ்வாறு மீட்கப்பட்டவர்களில் சிலர் இராணுவ சிப்பாய்களாக இருக்கலாம் என்ற தகவல் வெ ளியாகியுள்ளது .எனினும் முழுமையான தகவல் ஏதும் தெரியவரவில்லை .

சம்பந்தனும் சுமந்திரனும் துரோகிகள்
Posted in இலங்கை செய்திகள்

சம்பந்தனும் சுமந்திரனும் துரோகிகள்

சம்பந்தனும் சுமந்திரனும் துரோகிகள்

சம்பந்தனும் சுமந்திரனும் துரோகிகள் என மஹிந்த ராஜபக்சவின் கட்சி உறுப்பினர்கள் திடுக்கிடும் தகவல் வெளியிட்டுள்ளனர் .

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராகவும் ,அதனுடைய பேச்சாளராகவும் விளங்கிய சம்பந்தன் மற்றும் சுமந்திரன் ஆகியோர், தமிழ் மக்களுக்கு துரோகம் செய்தவர்கள் என ஸ்ரீலங்கா பெரமுனா தெரிவித்துள்ளது .

தேசிய ஏற்பாட்டாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ,ரோகித அபய குணவர்த்தன தெரிவித்த இந்த விடயம் தற்பொழுது பெரும் பேசு பொருளாக மாற்றம் பெற்றுள்ளது .

ஊடகங்களை சந்தித்து பேசும் பொழுது இலங்கையை ஆண்ட ஜனாதிபதியான, மஹிந்த ராஜபக்சா , தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதற்கு முன் வந்ததார் .

தீர்வினை குழப்பிய சம்பந்தன் சுமந்திரன்

ஆனால் அந்த தீர்வினை குழப்பி அடித்ததில் ,சம்பந்தன் மற்றும் சுமந்திரன் தீவிரமாக செய்யப்பட்டார்கள் .

தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதற்கு ,இலங்கையினுடைய ஜனாதிபதிகள் தயாராகி வந்ததாகவும் ,அதனை தமிழ் மக்களை பிரதிநிதிப்படுத்துவதாக கூறிக் கொள்ளும் இவ்வாறானவர்களே குழப்பி வருவதாக அவர் இதன் ஊடாக தெரிவித்துள்ளார்.

தமிழ் கட்சிகள் ஒன்றுபட மறுத்து ,இரண்டு பட்டு நிற்பதும் ,அவர்களை சாதுரியமாக இலங்கையினுடைய ஆளும் வர்க்கங்கள் பயன்படுத்தி வருகின்றன .

அந்த தமிழ் மக்களுக்கு வழங்கப்படக்கூடிய தீர்வுகளை குழப்புவதாக, இதன் ஊடாக பார்க்கப்படுகிறது .

எதிர்வரும் தேர்தலில் சம்பந்தன் சுமந்திரன் தமிழ் மக்களுக்கு செய்த துரோகத்தை அடுத்து ,அவர்களை மக்கள் தோற்கடிக்க வேண்டும் என அவர் கேட்டு கொண்டார் .

இவர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்கின்ற விடயத்தை தெரிவித்துள்ளார் .

சம்பந்தன் சுமந்திரன் மீது தமிழ் மக்களுக்கு அடங்காத கோபம்

சம்பந்தன் சுமந்திரன் மீது தமிழ் மக்களுக்கு அடங்காத கோபம் இதுவரை உள்ளது .

அவ்வாறான மன நிலையே தற்பொழுது சிங்கள அமைச்சர் ஒருவரும் உள்ளதாக தெரிவித்து பர பரப்பை ஏற்படுத்தியுள்ளார் .

சிங்கள மக்கள் மத்தியிலும் சிங்கள அரசியல்வாதிகள் மத்தியிலும் சம்பந்தன் சுமந்திரனுக்கு எதிரான கருத்துக்கள் நிலவுவதை இவை எடுத்துக்காட்டுகின்றன.

எதிர்வரும் தேர்தலில் மொட்டுக்கட்சி வெற்றியை பெறவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது .

மக்களினால் விரட்டி அடிக்கப்பட்ட இந்த கட்சி ,எவ்வாறு இந்த தேர்தலில் வெற்றி பெறப் போகிறது என்கின்ற கேள்வி எழுப்பப்பட்டு வருகின்ற நிலையில் ,இந்த விடயம் தற்பொழுது சூடு பிடித்துள்ளது குறிப்பிட தக்கது .

பாராளுமன்றத்தில் சாணக்கியன் ஆற்றிய உரை
Posted in இலங்கை செய்திகள்

பாராளுமன்றத்தில் சாணக்கியன் ஆற்றிய உரை

பாராளுமன்றத்தில் சாணக்கியன் ஆற்றிய உரை

இலங்கை பாராளுமன்றத்தில் சாணக்கியன் ஆற்றிய உரை முழு வடிவம் இதோ .

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் அவர்கள் பாராளுமன்றத்தில் சரமரியாக பேசிய விடயம் தற்பொழுது தமிழ் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கின்றது .

இலங்கை சுதந்திரம் அடைந்த நாளிலிருந்து

1948 ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் அடைந்த நாளிலிருந்து, இதுவரை தமிழர்கள் அடக்கி ஒடுக்கப்பட்ட வருவதாக அவர தெரிவித்துள்ளார் .

தமிழர்களையும் இலங்கையினுடைய ஒரு குடிகளாக ஏற்று, அவர்களுக்கான சம உரிமைகள் வழங்கப்படுகின்ற பொழுதுதான் ,மக்கள் ஒன்றாக வாழுகின்ற ஒரு ஒற்றை ஆட்சி நாடாக இதனை பார்க்க முடியும் என்பதாக அவரது கருத்து பதியப் பெற்றிருக்கிறது .

தமிழ் மக்களுக்கான உடனடியான உரிய தீர்வினை வழங்க வேண்டும், அவ்வாறு வழங்கப்பட விட்டால் , இந்த நாடு மிகப்பெரும் பேரழிவில் இருந்து மீளவும் எழுச்சி பெற முடியாது என்கின்ற ,விடயத்தினை ஆணித்தரமாக அவர் அங்கு தெரிவித்தார் .

அது தவிர அனுராதபுரத்தில் உள்ள சிறைச்சாலை ஒன்றில் ,அமைச்ச ஒருவர் தமிழ் கைதி ஒருவருடைய தலையில் காலை வைத்து, சப்பாத்தை நக்கும் படி கூறியதாக தெரிவித்துள்ளார் .

அவ்வாறான அமைச்சர் தற்பொழுது தமிழ் மக்களுக்கு விடுதலை கிடைக்கும் எனவும் ,அவர்களுக்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பதாகவும் அவர் சூட்டிக் காட்டியுள்ளார் .

மேலும் சில தமிழ் அரசியல் தலைவர்களுக்கு மதுபான பத்திரங்கள் வழங்கி ,அதனூடாக தமது பக்கம் இழுத்து அரசியலை நகர்த்துகின்ற நடவடிக்கையில் இலங்கையினுடைய ஜனாதிபதி ரனில் விக்கிரம சிங்கா ஈடுபட்டு ,உள்ளதான குற்றச்சாட்டினையும் ,சாணக்கியன் அவர்கள் பாராளுமன்றத்தில் தெரிவித்தார் .

சாணக்கியனின் இந்த சாணக்கியமான பதிலடி

சாணக்கியனின் இந்த சாணக்கியமான பதிலடி வர வேற்பையும் அவரது திறமையையும் தமிழ் மக்கள் மீது கொண்டுள்ள அவரது நல்லெண்ண வெளிப்பாட்டையும் இதனூடாக காண்பித்துள்ளது .

அதனால் பல்வேறுபட்ட முரண்பாடுகளுக்கு நிலையில் சிக்கித் தவித்த தமிழர்களும் ,இப்பொழுது தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனை வரவேற்று உள்ளதாகவே பேசப்படுகின்றது .

சாணக்கியன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் விரோதியாகவும், மக்களினால் அருவருக்கப்படுகின்ற அல்லது ஒதுக்கப்படுகின்ற, சுமந்திரன் வலது கையாக செயல்படுவார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது .

தேர்தல் வருகின்ற பொழுது பாராளுமன்றத்தில் ஏறி இவ்வாறு ,மக்களுக்கு எண்ணங்களை தூண்டிவிட .

உணர்ச்சிகரமாக பேசி தாங்கள் தமிழர்களின் ஏகப்பிரதிகள் என்பதை எடுத்துக்காட்டுவதற்காகவே, திருவாளர் சாணக்கியன் அவர்கள் இவ்வாறு பேசியுள்ளதாக, ஒரு சில கருத்துக்களும் வரத்தான் செய்கின்றன.

எரிவாயு கசிவினால் மூவர் பலி
Posted in உலக செய்திகள்

எரிவாயு கசிவினால் மூவர் பலி

எரிவாயு கசிவினால் மூவர் பலி

எரிவாயு கசிவினால் மூவர் பலி ,இந்தியாவில் ஏற்பட்ட திடீர் எரிவாயு கசிவினால் மூவர் மரணமாகியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன .

வடமேற்கு டெல்லி பகுதியில் ஏற்பட்ட திடீர் எரிவாயு கசிவினால் மூவர் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

அடுக்குமாடி கட்டிடம் ஒன்றில் சமையல் எரிவாயு திடீரென வெடித்து சிதறியில் அந்த அடுக்குமாடி கட்டிடங்கள் இடிந்து காணப்படுவதுடன், அவ்வேளை அதற்குள் இருந்த மூவர் பலியாகியும் ஆறுபேர் காயம் அடைந்துள்ளனர் .

தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

காயமடைந்தவர்களில் மூவர் மிக ஆபத்தான்களில் காணப்படுவதாகவும் அவ்வாறு காயம் அடைந்தவர்கள் தற்பொழுது மீட்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்த விபத்து தொடர்பான விசாரணைகளை, தற்போது போலீசார் ஆரம்பித்து உள்ளனர் .

மேற்படி சம்பவம் அந்த மக்கள் மத்தியில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

இந்த எரிவாயு சிலிண்டர்கள் வெடித்து சிதறியதால் அடுக்குமாடி கட்டடம் சிதறி காணப்படுகிறது .

எவ்வாறு இந்த எரிவாயு சிலிண்டர்கள் வெடித்து சிதறியது என்பது தொடர்பான விசாரணைகள் தற்போது ஆரம்பிக்க பட்டுள்ளன .

உயிர் பலி மேலும் அதிகரிக்க படலாம் என எதிர்பார்க்க படுகிறது .

Error: View 9293b2au4w may not exist
அலறும் இஸ்ரேல் தாக்கும் விமானங்கள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

அலறும் இஸ்ரேல் தாக்கும் விமானங்கள்

அலறும் இஸ்ரேல் தாக்கும் விமானங்கள்

அலறும் இஸ்ரேல் தாக்கும் விமானங்கள் இஸ்ரேல் மீது கடும் தாக்குதல் நடத்த ப்பட்டதாக ஈராக்கிய போர்படைகள் தெரிவித்துள்ளன .

தமது வெடிகுண்டு விமானங்களை பயன்படுத்தி ,ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இடத்திலேயே இராணுவ தளங்களை தாக்கி அழித்துள்ளதாக அந்த அமைப்பினர் தெரிவிக்கின்றனர்.

விமானங்கள் நீண்ட தூரம் பறந்து சென்று தமது இலக்கினை துல்லியமாக தாக்கி அழித்துள்ளதாக அந்த படைகள் தெரிவிக்கின்றனர்.

இந்த தாக்குதலில் இஸ்ரேலிய இராணுவத்தினருக்கும் ,அவர்களது ஆயுத தளபாடங்களுக்கும் பெரும் இழப்பினை தாங்கள் ஏற்படுத்தி உள்ளதாகவே அந்த அமைப்பினர் தெரிவித்துள்ளனர் .

மக்கள் மீதான படுகொலை

அப்பாவி மக்கள் மீதான படுகொலை தாக்குதலை தடுக்கவே ,இஸ்ரேல் மீது இவ்விதமான தாக்குதல் இடம் பெறுவதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

இவ்வாறான கால பகுதியில் அமெரிக்கா வெளியுறவு மந்திரி நாரதர் பிளிங்கடன் மத்தியகிழக்கை நோக்கி பயணம் செய்கிறார் .

இஸ்ரேல் பாலஸ்தீனம் இடையில் இடம்பெற்று வருகின்ற யுத்தத்தினை உடனடியாக நிறுத்த கோரி, இஸ்ரேலிய மக்கள், ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்டவர்கள் குரல் கொடுத்த வருகின்றனர்.

ஆனால் காசா மக்கள் மீதான போரினை நிறுத்த தவறி தொடர்ந்து போரில் நாட்டம் கொண்டு இஸ்ரேல் பிரதமர் தீவிரம் காண்பித்து வருகின்றார்.

இவ்வாறான பர பரப்பான சம்பவங்கள் இடம்பெற்று வருகின்ற இவ்வுலகில் இப்பொழுது நாரதர் என அழைக்கப்படும் அமெரிக்காவின் வெளியுறவு அமைச்சர் பயணம் செய்கிறார் .

மத்திய கிழக்கு நாடுகளுக்கு

தற்பொழுது இவர் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பயணத்தை மேற்கொண்டுள்ளார் .

இவரது சுற்றுப்பயணத்தின் நோக்கம் ,காசாவில் தொடர்ந்து அமைதியை ஏற்படுத்தி போரை முடிவுக்கு எடுத்து செலவதே நோக்கம் எனப்படுகிறது .

இப்போது இந்த எட்டாவது முறை பயணத்தினை மேற்கொள்ளும் இவர் காசா ,இஸ்ரேலுக்கு இடையிலான யுத்தம் நிறுத்தம் ஏற்படுமா ,அல்லது தொடர்ந்து அங்கு யுத்தம் இடம்பெருமை என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் .

பிளின்கடன் சென்று வந்ததன் பின்னர் அங்கு பாரிய யுத்தங்கள் இடம்பெற்று வந்துள்ளது .கடந்த கால சம்பவங்கள் எடுத்த காண்பிக்கிறது குறிப்பிட தக்கது .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்

வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை

வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை

வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை ,இலங்கையில் வாகனச் சாரதிகள் மூன்று ஆவணங்களை கண்டிப்பாக வைத்திருக்க வேண்டுமென, இலங்கை காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர் .

வாகனங்களை ஓட்டிச் செல்கின்ற ,வாகன சாரதிகள் தம்முடன் அல்லது வாகனத்துடன் ,வாகன காப்புறுதி , சாரதி அனுமதிப்பத்திரம் என்பன கண்டிப்பாக எடுத்து செல்ல வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர் .

கைது செய்யப்படக்கூடிய வாய்ப்பு

இந்த முக்கியமான குறிப்புகள் அடிப்படையில் இவற்றை எடுத்துச் செல்லாதவர்கள், கைது செய்யப்படக்கூடிய வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

வாகன காப்பீடு சான்றிதழ் வாகனத் தகுதிகளை, சான்றிதழ் தேவை என்பனவே இவை அடங்கப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்படி ஆவணங்கள் இல்லாது வாகனங்களை செலுத்தி செல்கின்ற சாரதிகள், போலீசாரினால் கைது செய்யப்பட்டு, அவர்கள் விளக்கமுடியில் வைக்கப்படக்கூடிய ஆபத்து காணப்படுகிறது.

இலங்கை தமிழ் மக்களே

எனவே இலங்கை தமிழ் மக்களே உங்களது வாகன சாரதி அனுமதி பத்திரங்கள் மற்றும் மேலே கூறப்பட்ட விடயங்களை ,உடனடியாகவே எடுத்துச் செல்லுங்கள் .

அவ்வாறு எடுத்துச் செல்ல தவறுகின்ற பட்சத்தில் நீங்கள் தண்டம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் .

குற்றத்தண்டம் செலுத்தப்பட்டு சிறையில் வாடக்கூடிய அவலமும் காணப்படுகிறது .

ஆதலால் வண்டிகளை செலுத்தி செல்கின்ற பொழுது ,மேற்படி ஆவணங்களை எடுத்துச் செல்ல தவற கூடாது என்று விடையத்தின் மூலம் , இலங்கை மக்களுக்கு இலங்கை போலீசார் எச்சரிக்கை கொடுத்திருக்கின்றனர்.

வீடு ஒன்றில் வாள்கள் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

வீடு ஒன்றில் வாள்கள் மீட்பு

வீடு ஒன்றில் வாள்கள் மீட்பு

வீடு ஒன்றில் வாள்கள் மீட்பு ,யாழ்ப்பாணத்தில் வாள்கள் மீட்பு.

யாழ்ப்பாணம் பிராந்திய விசேட குற்ற தடுப்பு பிரிவு போலீசாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து வீடு ஒன்று சுற்றி வளைக்கக்கப்பட்டது .

இதன் பொழுது சுன்னாகம் ஈவினை பகுதியில் வெளிநாட்டு பிரையை ஒருவருக்கு சொந்தமான வீடு ஒன்றை திடீரென சுற்றிவளைத்தனார் .

அதன்பொழுது அங்கிருந்து வாள்கள் கத்திகள் கோடரிகள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன.

வாள்கள் கூறிய ஆயுதங்கள் மீட்பு

வெளிநாடு ஒன்றிலிருந்து இலங்கை வந்திருந்த நபரது வீட்டிலேயே இந்த வாள்கள் கூரிய ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ள, செயல் பர பரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

யாழ்ப்பகுதியில் இடம்பெற்ற பல்வேறுபட்ட வாள்வெட்டு சம்பவங்களுடன் இவருக்கு தொடர்பு இருக்கலாம் என்ற வகையில், தற்பொழுது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது .

இங்கு பல வாள்கள் மீட்கப்பட்டதை அடுத்து ,தற்போது சந்தேக நபர்கள் சிலர் கைது செய்யப்பட்டு இருக்கின்றனர் .

ஆவா குழு

யாழ்ப்பாணத்தில் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக ஆவா குழு உள்ளிட்ட பல வாள்வெட்டு குழுக்கள் ஆரம்பிக்கப்பட்டு ,வாள்வெட்டு சம்பவங்கள் இடம் பெற்று வருகின்றன .

வெளிநாட்டிலிருந்து வருகை தந்த இந்த நபருடைய வீடு, எவ்வாறு இவர்களுக்கு கிடைக்கப்பெற்றது .

யார் அந்த நபர் எனவும் விசாரணை கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது .

விரைவில் வெளிநாட்டில் உள்ள இந்த வீட்டினுடைய உரிமையாளர்கள் ,மற்றும் அவர்களது தொடர்பு பட்டவர்கள், கைது செய்யப்பட கூடும் என்கின்ற விடயங்கள் வெளியாகி பர பரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

புலிகளின் புதையல் தேடிய ஐவர்கைது
Posted in இலங்கை செய்திகள்

புலிகளின் புதையல் தேடிய ஐவர்கைது

புலிகளின் புதையல் தேடிய ஐவர்கைது

புலிகளின் புதையல் தேடிய ஐவர்கைது ,இலங்கை இரத்தினபுரம் பகுதியில் விடுதலைப் புலிகளின் தங்கப் புதையல்களை தேடி ஐவர் கைது .

தங்க புதையல் அகழ்வில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஐவரை கைது செய்துள்ளதாக இலங்கை போலீசார் தெரிவித்திருக்கின்றனர்.

கிளிநொச்சி இரத்தினபுரம் அன்பு முகாம் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் புதையல் புதைக்கப்பட்டுள்ளதாக கிடைக்கப்பெற்றுள்ளது .

ஐந்து பேர் கைது

அந்த தகவலை அடுத்து அதனை தோண்டி எடுப்பதற்காக ,அங்கு அகழ்வு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் .

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில் போலீஸ் அதிகாரி ,ஆசிரியர் உள்ளிட்ட ஐவர் உள்ளடக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்த புதையல் தோண்டுவதற்காக பயன்படுத்தப்பட்ட இரண்டு இலத்திரனியல் இயந்திரங்கள் மீட்கப்பட்டுள்ளன.

சமீப காலமாக தமிழிழ விடுதலை புலிகளின் கட்டுப்பாட்டு பகுதிகளில் ,அவர்களது தங்கம் பணம் மற்றும் இதர பொருட்களை மீட்பதற்காக இவ்வாறு புதையல் தோண்டும் நடவடிக்கையில் சிங்கள போலீஸ் அதிகாரிகள் ராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளது .

விடுதலை புலிகள்

தமிழீழ விடுதலை புலிகள் அந்த தாய் மண்ணில் முற்றாக அழிக்கப்பட்டு, 14 வருடங்கள் கழிவுற்ற நிலையிலும் தமிழிழீழ விடுதலைப் புலிகளினால் புதைத்து வைக்கப்பட்ட தங்கம் பணம் என்பதுவற்றை மீட்டெடுக்கும் நடவடிக்கையில் சிங்கள பெரும்பான்மை வாதிகள் ஈடுபட்டு வருகின்றநர் .

இவ்வாறான தங்க புதையல் தேடும் செயல் தொடர்கிறது .

விடுதலைப் புலிகள் பயன்படுத்திய பல தங்கங்கள் ,ஆயுதங்கள் என்பனவவற்றை மீட்ட மாற்று குழுக்களும் ,அவற்றை வைத்து கோடீஸ்வரராக இலங்கையில் மாறி உள்ளது குறிப்பிடத்தக்கது.

பத்தாயிரம் ரூபா உதவி தொகை
Posted in இலங்கை செய்திகள்

பத்தாயிரம் ரூபா உதவி தொகை

பத்தாயிரம் ரூபா உதவி தொகை

பத்தாயிரம் ரூபா உதவி தொகை ,வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பத்தாயிரம் ரூபாய் நிதி வழங்க படுகிறது .

இலங்கையில் நாடளாவிய ரீதியில் இடம்பெற்று வந்த சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட வெள்ள விபத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தலா பத்தாயிரம் ரூபாய் வழங்க உள்ளதாக ஆளும் அரசு தெரிவித்துள்ளது .

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை பார்வையிட்ட அரச அதிகாரிகள் அந்த வீடுகளை சுத்தம் செய்வதற்காக முதற்கட்டமாக 10,000 ரூபாய் வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் ஆண்டுதோறும் இவ்வாறு வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு வருகின்ற மக்கள் பல இன்னல்களை சந்தித்து வருகின்றனர் .

அதிகம் மழை வீழ்ச்சி

அதிகம் மழை வீழ்ச்சி காரணமாக குளங்கள் நிரம்பி வழிந்ததால் வான் உடைத்து வெள்ளம் பாய்ந்ததில்,தாழ் நில பகுதியில் உள்ள பல ஆயிரக்கணக்கான வீடுகள் பாதிக்கப்பட்டன .

இந்த வெள்ளத்தினால் லட்சக்கணக்கான மக்களும் பாதிக்கப்பட்டனர் .

அதனை எடுத்து வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகள் திருத்தம் செய்வதற்கும் அதனை சுத்தம் செய்வதற்குமாக இலங்கை ஆளும் அரசினால் தற்பொழுது இந்த 10,000 ரூபாய் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

தேர்தல் இடம் பெற உள்ள நிலையில் மக்களை குஷி படுத்த ,தற்பொழுது இவ்விதம் அரசு பத்தாயிரம் ரூபாய் நிதிகளை வழங்கிவருகிறது .

அந்த மக்களை குசி படுத்தி அவர்களது வாக்கு வங்கிகளை சுருட்டிக்கொள்ளவே , இவ்வாறு நடந்து கொள்வதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்துக்கொண்டனர்.

ரயில்விபத்தில் தந்தையும் மகளும் பலி
Posted in இலங்கை செய்திகள்

ரயில்விபத்தில் தந்தையும் மகளும் பலி

ரயில்விபத்தில் தந்தையும் மகளும் பலி

ரயில்விபத்தில் தந்தையும் மகளும் பலி , குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைவு .

என்டேரமுல்ல ரயில் கடவையில் இடம்பெற்ற விபத்தில், தந்தை மகள் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

குறித்த ரயில் கடவையை காரொண்டு கடக்க முற்பட்ட பொழுது வேகமாக வந்த ரயிலில் மோதுண்டு அதில் பயணித்த தந்தையும் மகளும் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்தில் சிக்கிய கார் பலத்தை சேதங்களுக்கு உள்ளார நிலையில் தற்போது காணப்படுகின்றது .

ஆபத்தான ரயில் கடவை

ஆபத்தான ரயில் கடவையில் ரயில் வருவதை அவதானிக்காது, கார் கடந்து செல்ல முற்பட்ட பொழுதே ,அந்த ரயிலில் மோதி தந்தையும் மகளும் பரிதாபகரமாக பலியாகி இருக்கின்றனர்.

அபாய கடவைகளுக்கு அருகில் பயணிக்கின்ற பொழுது, மக்கள் மிகவும் அவதானமாக செல்லுமாறு வேண்டுதல் விடுக்கப்பட்டு வருகின்ற பொழுதும் இவ்வாறான விபத்துக்கள் இலங்கையில் நாளுக்கு நாள் அதிகரித்து காணப்படுகின்றது.

பலியானவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டு தற்பொழுது மருத்துவ மருத்துவ பரிசோதனை க்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கையில் நாள்தோறும் இடம்பெற்று வருகின்ற விபத்தில், தினமும் நால்வர் பலியாகி வருவதாகவும், 10க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்து வருவதான புதிய தகவல்கள் வெளியாகியுள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது .

பிக்கு தாக்கி நபரொருவர் உயிரிழப்பு
Posted in இலங்கை செய்திகள்

பிக்கு தாக்கி நபரொருவர் உயிரிழப்பு

பிக்கு தாக்கி நபரொருவர் உயிரிழப்பு

பிக்கு தாக்கி நபரொருவர் உயிரிழப்பு ,பிக்கு தாக்குதலில் ஒருவர் மரணம் .

இலங்கை கிரியுள்ள அயலந்தவா மாராவில் பிரதேசத்தில் வீடொன்றில் தங்கி இருந்தவரை பிக்கு தாக்கியதில் அவர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

போதை குடிப்பழக்கத்திற்கு அடிமையான பிக்கு,

மது போதை குடிப்பழக்கத்திற்கு அடிமையான பிக்கு, விகாரையிலிருந்து தப்பிச் சென்று தனது உறவினர் வீட்டில் தங்கியுள்ளார்.

அப்பொழுதே அங்கு இருந்த நபர் ஒருவரை, போதை தலைக்கேறிய நிலையில் அவரை அடித்து படுகொலை செய்துள்ளார் .

பலத்த காயமடைந்த நிலையில் மீட்கப்பட்ட நபர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி தற்பொழுது பலியாகி இருக்கின்றார் .

கொலையை புரிந்த பிக்கு தற்பொழுது தலைமறைவு

இந்த படுகொலையை புரிந்த பிக்கு, தற்பொழுது தலைமறைவாகி உள்ளதை அடுத்து ,அவரை கைது செய்து விசாரணைக்கு உட்படுத்தும் , நடவடிக்கையில் குற்ற தடுப்பு போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

இலங்கையில் சமீப காலங்களாக துறவிகள் என அழைக்கப்படும் பிக்குகளினால், மக்கள் ,மாணவர்கள், பெண்கள், என பலதரப்பட்டவரும் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்ற வன்முறை சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றது .

இது புத்த பிக்குகள் மீதும், துறவிகள் மீதும் ஒரு அவநம்பிக்கையை ஏற்படுத்துகின்ற செயலாகவே பார்க்கப்படுகின்றது .

ஒருவர் செய்கின்ற செயலினால் ,அனைத்து துறவிகளுக்கும், இழுக்கு ஏற்பட்டு வருவதாகவும் ,புத்த மகாசங்கத்தை சேர்ந்த, சார்பு நபர்கள் தெரிவித்தது வருகின்றனர்.

விமானங்கள் கடும் தாக்குதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

விமானங்கள் கடும் தாக்குதல்

விமானங்கள் கடும் தாக்குதல்

விமானங்கள் கடும் தாக்குதல் ,வடக்கு பகுதிகளை இலக்கு வைத்து லெபனான் போர் விமானங்கள் கடும் தாக்குதலை நடத்தின .

இந்த விமானங்களின் தாக்குதலில் இஸ்ரேல் ராணுவத்தின் இராணுவத் தளங்கள் ,ஆக்கிரமிப்பு குடியேற்ற பகுதிகள் என்பன முற்றாக சேதமடைந்து காணப்படுவதாக தாக்குதலை நடத்திய லெவனன் கிஸ்புல்லா போர்படைகள் அறிவித்துள்ளனர்.

இடைவிடாது தொடரும் கிஸ்புல்லா போர்படைகளின் தாக்குதினால், வடக்கு இஸ்ரேலிய இராணுவத் தளங்கள் ,ஆக்கிரமிப்பு குடியேற்ற பகுதிகள் பலமான சேதங்களுக்கு உள்ளாகி வருகின்றன.

கடந்த நான்கு வாரங்களாக இடைவிடாது தொடரும் இருதரப்பு மோதலில் ,இஸ்ரேலிய இராணுவ தளங்கள் பாரிய சேதங்களுக்கு உள்ளாகி வருகின்றன.

வடக்கு இஸ்ரேல் பகுதியில் அமையப் பெற்றுள்ள கோபுரங்கள் கண்காணிப்பு மையங்கள் உளவுத்துறை மையங்கள் ஏவுகணை மையங்கள் பீரங்கி தளங்கள் மற்றும் பாதுகாப்பு படைகளின் படை கூடாரங்கள் என்பன தாக்கி அழிக்கப்பட்டுள்ளன .

இந்த தாக்குதலில் இராணுவத்தின் டாங்கிகள் , ஏவுகணைகள் உள்ளிட்டவையும் அழிக்கப்பட்டுள்ளன.

ஹிஸ் புல்லா படைகள் கடந்த 24 மணித்தியாலத்தில் நடத்திய தாக்குதலில் இசுரேலியா படைகளுக்கு ஆள் ஆயுத இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதனாலேயே மிகப்பெரும் நெருக்கடியில் இஸ்ரேலிய இராணுவம் சிக்கி தவித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இடைவிடாத தொடரும் இருதரப்புக்கு இடையிலான இந்த போரில் ,அப்பாவி பொதுமக்கள் ,அவர்களின் சொத்துக்களுக்கும், பெரும் இழப்புகள் ஏற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
விமான விபத்து
Posted in உலக செய்திகள்

விமான விபத்து

விமான விபத்து

விமான விபத்து ,போர்த்துக்கல்லில் நாட்டில் விழுந்து நொறுங்கிய விமானம் .

போர்த்துக்கல் நாட்டில் இலகுரக விமானம் ஒன்று திடீரென விழுந்து நொறுங்கியது.

இந்த விமான விபத்தில் விமானிகள் உள்ளிட்ட இருவர்கள் படுகாயம் அடைந்துள்ளதாக போர்த்துக்கள் செய்திகள் தெரிவிக்கின்றன.

விமானத்தில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாகவே இந்த இலகு ரக விமானம் விழுந்து நொறுங்கியதாக முதல் கட்ட விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது .

விழுந்து நொறுங்கிய இந்த விமானத்திலிருந்து காயமடைந்த நிலையில் துடித்துக் கொண்டிருந்த விமானி உள்ளிட்ட இருவரும் மீட்கப்பட்டு ,தற்பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இந்த விமானங்கள் விபத்து

இந்த விமானதின் விபத்து தொடர்பான சம்பவம் பொது மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

சமீப காலங்களாக இவ்வாறான விமானதின் விபத்துக்கள் உலகளாவிய ரீதியில் அதிகரித்து வருகின்ற சம்பவங்கள் மக்கள் மத்தியில் ஒரு வித பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது .

விழுந்து நொறுங்கிய விமானத்தின் இறக்கைகள் என்பன உடைந்து காணப்படுகின்றன .

தற்பொழுது இந்த சம்பவம் இடம்பெற்ற பகுதியில், மீட்பு குழுக்கள் சென்று மீட்பு பணியில் ஈடுபட்ட வண்ணமுள்ளனர் .

சாலை போக்குவரத்துக்கள்

இதனால் இந்த சாலை போக்குவரத்துக்கள் பல மணி நேரம் பாதிக்கப்பட்டுள்ளதாக, அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன .

இந்த விமானதின் விபத்து இன்றைய உலகச் செய்திகளில், தலைப்புச் செய்திகளாக இடம்பிடித்து சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Error: View 9293b2au4w may not exist
ரஷ்யாவை தாக்குவதற்கு உக்கிரனுக்கு அமெரிக்கா ஆயுத விற்பனை
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

ரஷ்யாவை தாக்குவதற்கு உக்கிரனுக்கு அமெரிக்கா ஆயுத விற்பனை

ரஷ்யாவை தாக்குவதற்கு உக்கிரனுக்கு அமெரிக்கா ஆயுத விற்பனை

ரஷ்யாவை தாக்குவதற்கு உக்கிரனுக்கு அமெரிக்கா ஆயுத விற்பனை ,ரஷ்யாவை தாக்குவதற்கு உக்கிரனுக்கு அமெரிக்காஆயுத தளபடங்கள் விநியோகம்.

உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையில் கடும் போர் இடம்பெற்று வருகின்ற இந்த யுத்த கால பகுதியில் ,உக்ரைன் உள் கட்டமைப்புகள் பலமாக சிதைந்து காணப்படுகின்றன .

இவ்வாறான காலப்பகுதியில் தற்பொழுது அமெரிக்கா உக்ரைனுக்கு 22 மில்லியன் டாலர் பெறுமதியான ஆயுத தள பாடங்களை வழங்குவதற்கு சம்மதம் அளித்துள்ளது .

ஆயுத விநியோக நடவடிக்கை

இவ்வாறான ஆயுத விநியோக நடவடிக்கையின் பொழுது மிக முக்கியமான ஏவுகணைகள் ,தாங்கி எதிர்ப்பு ஏவுகணைகள் ,மற்றும் பீரங்கி குண்டுகள் என்பன முதலிடம் பிடிக்கின்றன .

கார்கீவ் பகுதியில் உள்ள ஐந்து கிராமங்களை தம் வசப்படுத்திய நிலையில் தற்பொழுது ரஷ்யா படைகள் தொடர் முன்னேற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் .

மேலும் முன்னேறி வரும் எதிரி முன்னேற்ற நடவடிக்கையை முறியடிக்க, அமெரிக்கா ஆயுதங்களை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது .

ரஷ்யாவின் உடைய மையப் பகுதிகளை சென்று தாக்க வல்ல நீண்ட தூர ஏவுகணைகளையும் அமெரிக்கா வழங்கி இருக்கின்றது .

நீண்ட தூர ஏவுகணைகள்

அமெரிக்கா வழங்கிய இந்த நீண்ட தூர ஏவுகணைகள் தமது மையப் பகுதிகளை தாக்கி வருவதாகவும், அந்த ஏவுகணைகளை வழங்கிய நாடுகளுக்கு எதிராக தமது படைகள் கடும் தாக்குதலை நடத்த வேண்டிய சூழல் ஏற்படும் என ரஷ்யா படைகள் மிரட்டல் விடுத்திருக்கின்றனர் .

ரஷ்யாவினை முற்றாக தாக்கி அழிப்பதன் ஊடாகவே, ஐரோப்பிய நாட்டினை பாதுகாத்துக் கொள்ள முடியும் என்கின்ற நிலை ஏற்பட்டுள்ள நிலையில், தற்பொழுது அவசர அவசரமாக அமெரிக்கா இந்த ஆயுத தள படங்களை வழங்கி வருகின்றது .

அமெரிக்கா வழங்கிய இந்த ஆயுத தளபாடங்களை அடுத்து, தற்பொழுது ரஷ்யாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் ,பெரும் முறுகல் சம்பவங்கள் நீடித்து செல்கின்றன .

இவ்வாறு சென்றால் விரைவில் அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் பெரும் போர் இடம்பெற கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது .

ஆயுதங்கள் இல்லாமல் தமது படைகள் ரஷ்யா படைகளின் தாக்குதலை சமாளிக்க முடியாது உள்ளது என ,உக்கிரனுடைய அதிபர் தெரிவித்த நிலையில் ,தற்பொழுது அமெரிக்கா அவசர ஆயுத உதவிகளை வழங்கி உள்ளமை இங்கே குறிப்பிடத்தக்கது.

Error: View 9293b2au4w may not exist
தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெறும் நாம் தமிழர் கட்சி
Posted in உலக செய்திகள்

தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெறும் நாம் தமிழர் கட்சி

தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெறும் நாம் தமிழர் கட்சி

தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெறும் நாம் தமிழர் கட்சி என்ற நிலையை பெற்றுள்ளது .

நடித்து முடிந்த டெஹ்ரதலில் மாட்டான் வெற்றியை பெற்று நிமிர்ந்து அசுர பலத்தை நாம் தமிழர் காண்பித்துள்ளது .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
அங்கீகாரம் பெறும் நாம்தமிழர் கட்சி
Posted in உலக செய்திகள்

அங்கீகாரம் பெறும் நாம்தமிழர் கட்சி

அங்கீகாரம் பெறும் நாம்தமிழர் கட்சி

அங்கீகாரம் பெறும் நாம்தமிழர் கட்சி பலத்த சாதனையை நடத்தி முடித்துள்ளது .எதிர்வரும் தேர்தலில் தமிழகத்தை நாம் தமிழர் புரட்டி போடும் என தெரிவிக்க படுகிறது .

வீடியோ

Error: View 9293b2au4w may not exist
வனராஜா விபத்தில் மூவர் காயம்
Posted in இலங்கை செய்திகள்

வனராஜா விபத்தில் மூவர் காயம்

வனராஜா விபத்தில் மூவர் காயம்

வனராஜா விபத்தில் மூவர் காயம் ஹட்டன்- வனராஜா கல்பள்ளி பகுதியில் கார் கவிழ்ந்ததில் மூன்றரை வயது குழந்தை உட்பட ஒரே குடும்பத்தைச்

சேர்ந்த மூவர் காயமடைந்து டிக்கோயா கிளங்கன் மாவட்ட ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சாமிமலை பகுதியில் மரண வீடொன்றுக்கு வந்த குழுவினர் கொழும்பு நோக்கி திரும்பிக் கொண்டிருந்த போது, ​​கார் வீதியை விட்டு விலகி வனராஜா கல்பள்ளிய பிரதேசத்தில் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது.

கார் கவிழ்ந்ததில் மூன்றரை வயது குழந்தை உட்பட மூவர் காயமடைந்ததாகவும், காயமடைந்தவர்கள் டிக்கோயா- கிளங்கன் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

​​காயமடைந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை எனவும், காயமடைந்தவர்கள் தற்போது வைத்தியசாலை யில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர் எனவும் வைத்தியசாலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Error: View 9293b2au4w may not exist
திடீரென பற்றி எரிந்த வாகனங்கள்
Posted in இலங்கை செய்திகள்

திடீரென பற்றி எரிந்த வாகனங்கள்

திடீரென பற்றி எரிந்த வாகனங்கள்

திடீரென பற்றி எரிந்த வாகனங்கள் நாவலப்பிட்டி – குறுந்துவத்த பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தொலஸ்பாகை மீனகொல்ல பிரதேசத்தில் வீட்டிற்கு முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளன.

இதில் மோட்டார் சைக்கிள் மற்றும் வேனும் இன்று அதிகாலை மூன்று மணியளவில் திடீரென தீப் பிடித்து எரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தீப்பிடித்தமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.

இது தொடர்பான மேலதிக விசாரணை களை குறுந்துவத்த பொலிஸார் மற்றும் கைரேகை அதிகாரிகள் முன்னெடுத்து வருகின்றனர்.