என்ன பெத்த அம்மா எங்கே
Posted in பாடல்கள்

என்ன பெத்த அம்மா எங்கே

என்ன பெத்த அம்மா எங்கே என்ன பெத்த அப்பா எங்கே |தியாகி புதிய பாடல் |10வது பாடலாசிரியர் |new tamil songs

பாடியவர் – பாவேந்தன் இளங்கோவன்

இசை – இளங்கோ செல்லப்பா

பாடல்வரிகள் – தியாகி

-தயாரிப்பு – தியாகி

வெளியீடு – எதிரி இணையம்

வன்னிமைந்தன் டிக்டாக் தளத்தின் ஊடாக அறிமுக படுத்திய 10வது பாடலாசிரியர்இவரை அறிமுக ப்படுத்திய இளங்கோ செல்லப்பா அவர்களுக்கு மிக்க நன்றிகள்.

|இளங்கோ செல்லப்பாசிறந்த இசையில் |மதுரக்குரலோன் பாவேந்தன் பாடி அசத்தியுள்ளார் .

வெடித்து சிதறிய இஸ்ரேல் டாங்கி
Posted in உலக செய்திகள்

வெடித்து சிதறிய இஸ்ரேல் டாங்கி

வெடித்து சிதறிய இஸ்ரேல் டாங்கி

வெடித்து சிதறிய இஸ்ரேல் டாங்கி ,வெடித்து சிதறிய ஸ்டில் டாங்கி கிளைமோர் தாக்குதலில் தூக்கி வீசப்பட்ட இஸ்ரேல் படைகள் வாகன அணி.

பிஸ்லெஸ்த்தீனம் ஜெனின் பகுதியாக வீதியில் பயணித்துக் கொண்டிருந்த யூத இராணுவத்தின் வாகன தொடர் அணியை வழிமறித்து கண்ணி தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலில் இஸ்ரேல் படைகளின் டாங்கிகள் தூக்கி வீசப்பட்டன.

மேற்படிக்கு தாக்குதலும் அதில் இஸ்ரேல் ராணுவத்தின் வண்டிகள் தூக்கி வீசப்படுகின்ற காட்சிகள் படம் பிடிக்கப்பட்டு வெளியாகி உள்ளன.

இந்த தாக்குதல் நடவடிக்கை இஸ்ரேல் படைகளுக்கு மிகப்பெரும் நெருக்கடியையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்த தாக்குதலில் அந்த டாங்கியை செலுத்தி சென்றவர்கள் பலியாகி அல்லது காயப்படுத்தி இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்பாவி மக்களை கைது செய்து படுகொலை செய்துவரும் இஸ்ரேல் ராணுவத்தை இலக்கு வைத்து தொடராக நடத்தப்பட்டு வரும் இந்த தாக்குதல் ஆக்கிரம் , உப்பு ராணுவத்தில் உளவியலை பலமாக சீர்குலைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெடித்த ஏவுகணை விமானதளம் பூட்டு
Posted in உலக செய்திகள்

வெடித்த ஏவுகணை விமானதளம் பூட்டு

வெடித்த ஏவுகணை விமானதளம் பூட்டு

வெடித்த ஏவுகணை விமானதளம் பூட்டு ,பரிதவித்திருக்கும் இஸ்ரேல் படைகள் நாடு,பல மில்லியன் நாள் ஒன்றுக்கு இழப்பு .

துப்பாக்கியுடன் ஒருவர் கைது
துப்பாக்கியுடன் ஒருவர் கைதுகைத்துப்பாக்கியுடன் ஒருவர் கைது

யூத நாட்டின் தலைநகராக விளங்கும் செல்லபி பகுதி அமைந்துள்ள பெண் கிரியன் ஏர்போர்ட் இலக்கு வைத்து தாக்குதலை சவுதி அன்சரல்லா நடத்தி வந்தன.

இதனை அடுத்து உலக நாடுகள் இருந்து வருகை தரும் விமானங்கள் அங்கு பயணம் செய்வதற்கு தமது சேவையை இடைநிறுத்தி உள்ளதாக தெரிவித்துள்ளது.

தற்பொழுது இஸ்ரேலுக்குள் வரும் பயணிகள் வருகை குறைந்து காணப்படுவதுடன் விமானத்தளங்கள் பெரும் அதிர்ச்சியை சந்தித்துள்ளனர்.

இந்த விமான தளத்தை விமானங்கள் வருகின்ற பயணிகள் வரவு குறைந்ததினால், யூத நாட்டினுடைய உல்லாச பயணத்துறை மற்றும் விமான பாவனைகள் என்பன தடைப்பட்டுள்ளதாக தெரிய வருகின்றது.

பலஸ்தீன மக்கள் மீது தொடராக தாக்குதலை நடத்தி வருகின்ற நிலையில் ,விமானத்தளங்கள் இலக்கு வைத்து ,ஏவுகணை தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது .

அதனை எடுத்து தற்போது இந்த விமானத்தில் மடித்து மூடப்பட்டுள்ளது.

பல லட்சக்கணக்கான மக்களை காய படையை வைத்தும் படுகொலை செய்து வருகின்ற இஸ்ரேல் ராணுவத்துக்கு எதிராக .தற்போது ஹவுதி அன்சர் அல்லா தாக்குதல் நடத்திக் கொண்டிருப்பது இஸ்ரேலை திணற வைத்துள்ளது .

இந்த விமானத்திலும் மூடப்பட்டுள்ளதால் பல மில்லியன் டாலர் நாளொன்றுக்கு விள்ளப்புச் சந்தித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

55 பேருக்கு எதிராக வழக்கு
Posted in இலங்கை செய்திகள்

55 பேருக்கு எதிராக வழக்கு

55 பேருக்கு எதிராக வழக்கு

55 பேருக்கு எதிராக வழக்கு ,மட்டக்களப்பு, காத்தான்குடி பகுதியில் இன்று (07) மேற்கொள்ளப்பட்ட வாகனப் போக்குவரத்து சோதனைகளில், விதிமீறல்களில் ஈடுபட்ட 55 பேருக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டியமை காரணமாக இவர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டுவோருக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துவதாக பொலிஸார் முன்னரே அறிவித்திருந்த போதிலும், அதைப் புறக்கணித்து மோட்டார் சைக்கிள் ஓட்டியவர்களுக்கு எதிராக இவ்வாறு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கிடையில், காத்தான்குடி பகுதியில் தலைக்கவசம் அணியாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டிய 21 வயது இளைஞர் ஒருவர், சமீபத்தில் ஏற்பட்ட விபத்து ஒன்றில் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

துப்பாக்கியுடன் ஒருவர் கைது
Posted in இலங்கை செய்திகள்

T56துப்பாக்கியுடன் ஒருவர் கைது

T56துப்பாக்கியுடன் ஒருவர் கைது

T56துப்பாக்கியுடன் ஒருவர் கைது ,மட்டக்குளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சமித்தபுர பகுதியில் T-56 ரக துப்பாக்கி மற்றும் 29 தோட்டாக்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (07) மாலை, கொழும்பு வடக்கு பிரிவு குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகள் குழுவினரால் இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டவர் 36 வயதுடைய மட்டக்குளி பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக கொழும்பு வடக்கு குற்ற விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இதற்கிடையில், எத்திமலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வராகநத்த பகுதியில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி மற்றும் கோடாவுடன் மற்றொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் 55 வயதுடைய எத்திமலை பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

இதேவேளை, போரா 12 வகை துப்பாக்கியுடன் மற்றொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (07) மாலை, சிலாபம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பங்கதெனிய பகுதியில் இவர் கைது செய்யப்பட்டார்.

சிலாபம் பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் முன்னெடுத்த சோதனையில், குறித்த துப்பாக்கியை வைத்திருந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டவர் 54 வயதுடைய பங்கதெனிய பகுதியை சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

நிதிமோசடி தண்டனை பெற்றவருக்கு மன்னிப்பு
Posted in இலங்கை செய்திகள்

நிதிமோசடி தண்டனை பெற்றவருக்கு மன்னிப்பு

நிதிமோசடி தண்டனை பெற்றவருக்கு மன்னிப்பு

நிதிமோசடி தண்டனை பெற்றவருக்கு மன்னிப்பு ,நிதி மோசடி குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு, தண்டனை பெற்ற நபருக்கு மன்னிப்பு வழங்கப்பட்டதாக கூறப்படும் விவகாரம் தொடர்பில் அரசாங்கம் தெளிவுபடுத்த வேண்டும்

என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகமும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர் கோரிக்கை விடுத்துள்ளார்.

நிதி மோசடி

கடந்த காலத்தில் நிதி மோசடியில் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட டபிள்யூ எச். அதுல திலகரத்ன என்பவருக்கு ஜனாதிபதியினால் மன்னிப்பு வழங்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் பரவிய செய்தி, நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதைத் தொடர்ந்து, ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், அவர் உத்தியோகபூர்வ ஜனாதிபதி மன்னிப்பு பட்டியலில் இடம்பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலை திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட நடைமுறைகளுக்கு ஏற்ப” இந்த விடுதலை மேற்கொள்ளப்பட்டதாகக் கூறியுள்ளது.

ஜனாதிபதி தரப்பினதும் சிறைச்சாலை

ஜனாதிபதி தரப்பினதும் சிறைச்சாலை திணைக்களத்தினதும் ஒன்றுக்கொன்று முரண்பட்ட தகவல்கள் மக்களில் குழப்பத்தையும் நம்பிக்கையிழப்பையும் உருவாக்குகின்றன. மன்னிப்பின் சட்டப்பூர்வ நிலை பற்றி தெளிவாக தகவல் இல்லாத சூழ்நிலையில், மக்கள் யாரை நம்புவது?

சட்டத்தின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை பாதுகாப்பது அரசின் பொறுப்பு. குற்றங்களை விட, அவற்றை மறைத்தல் மிகப்பெரிய சமூகத் தீமையாகும்.

எனவே, இந்த விடுதலைக்கான முழுமையான ஆதாரங்களும், தீர்மானங்களும் பொதுமக்களுக்கு வெளிப்படையாக தெளிவுபடுத்தப்பட வேண்டும்- என்று நிசாம் காரியப்பர் எம்.பி வலியுறுத்தியுள்ளார்.

1200 பாதுகாப்பற்ற ரயில் கடவைகள்
Posted in இலங்கை செய்திகள்

1200 பாதுகாப்பற்ற ரயில் கடவைகள்

1200 பாதுகாப்பற்ற ரயில் கடவைகள் ,1200பாதுகாப்பற்ற ரயில் கடவைகள் ,ரயில் கடவைகளில் ஏற்படும் விபத்துக்களில் பெரும்பாலானவை பாதுகாப்பு முறைமைகள் கொண்ட ரயில் கடவைகளில் நிகழ்ந்துள்ளதாக கோபா குழுவில் தெரியவந்துள்ளது.

அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு அல்லது கோபா குழு முன்னிலையில், ரயில்வே திணைக்கள அதிகாரிகள் சமீபத்தில் அழைக்கப்பட்டபோது இந்த விடயம் தெரியவந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அந்தக் குழுவின் உறுப்பினரான பாராளுமன்ற உறுப்பினர் சந்தன சூரியபண்டார, ரயில் கடவைகளில் ஏற்படும் விபத்துக்கள் தொடர்பாக ரயில்வே திணைக்கள அதிகாரிகளிடம் வினவியிருந்தார்.

அதற்கு பதிலளித்த ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர, நாட்டில் சுமார் 1200 பாதுகாப்பற்ற ரயில் கடவைகள் உள்ளதாக தெரிவித்தார்.

இதனிடையே, இதன்போது கருத்து தெரிவித்த ரயில்வே திணைக்களத்தின் இயந்திரவியல் பிரிவின் மேலதிக பொது முகாமையாளர் கே.கே. ஹேவாவிதாரண, 5 புதிய ரயில் பெட்டிக் கட்டமைப்புகளை கொள்முதல் செய்ய அனுமதி கிடைத்துள்ளதாக கூறினார்.

அந்த ரயில் பெட்டிகள் அனைத்தும் மூன்றாம் வகுப்பு குளிரூட்டப்பட்ட பெட்டிகளைக் கொண்டவை என கே.கே. ஹேவாவிதாரண தெரிவித்தார்.

டெங்கு சிக்குன்குனியா நோய்
Posted in இலங்கை செய்திகள்

டெங்கு சிக்குன்குனியா நோய்

டெங்கு சிக்குன்குனியா நோய்

டெங்கு சிக்குன்குனியா நோய் ,பாடசாலைகளில் டெங்கு மற்றும் சிக்குன்குனியா நோய்களைத் தடுப்பதற்காக எடுக்கப்பட வேண்டிய

நடவடிக்கைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கல்வி அமைச்சு சிறப்பு வழிகாட்டல் பத்திரம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

விசேட ஆய்வுகளின் போது பாடசாலை வளாகத்தில் நுளம்புகள் பெருகும் இடங்கள் கண்டறியப்பட்டால், அந்தப் பாடசாலையின் அதிபருக்கு எதிராக

சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படலாம் என அந்த வழிகாட்டல் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாடசாலை சூழல் நுளம்புகளிலிருந்து பாதுகாப்பு பு

பாடசாலை சூழல் நுளம்புகளிலிருந்து பாதுகாப்பாகவும், தூய்மையாகவும் பராமரிக்கப்படுவதற்கு, முன்னர் வெளியிடப்பட்ட 2010/22 மற்றும் 30/2017

ஆகிய சுற்றறிக்கைகளுக்கு மேலதிகமாக, புதிய வழிகாட்டல் பத்திரத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அதன்படி, அனைத்து பாடசாலை வளாகங்களையும் நும்புகள் பெருகாதவாறு பராமரிக்க, பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படாத

வகையில் உகந்த உள் செயற்திட்டமொன்றை உருவாக்கி செயல்படுத்துவதற்கு இதன்மூலம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

பாடசாலைகளின் அதிபர்கள்

இது தொடர்பாக, அனைத்து அரச மற்றும் அரசு அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளின் அதிபர்கள், பிரிவெனாக்களின் பரிவேனாதிபதிகள், தேசிய

கல்வியியல் கல்லூரிகளின் பீடாதிபதிகள் மற்றும் மாகாணத்தில் உள்ள ஏனைய கல்வி நிலையங்கள் மற்றும் அலுவலகங்களின் பொறுப்பாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, பாடசாலைகளில் அவ்வப்போது மேற்கொள்ளப்படும் ஆய்வுகளின் போது, வளாகத்தில் டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய இடங்கள்

பதிவாகினால், அந்தப் பாடசாலைகளின் அதிபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படலாம் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆற்றில் நீராடச்சென்ற நால்வர் பலி
Posted in இலங்கை செய்திகள்

ஆற்றில் நீராடச்சென்ற நால்வர் பலி

ஆற்றில் நீராடச்சென்ற நால்வர் பலி

ஆற்றில் நீராடச்சென்ற நால்வர் பலி ,ஆற்றில் நீராடச் சென்ற நான்கு பேர் நீரில் மூழ்கி பலியாகியுள்ளதாக இலங்கை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .

பொலநறுவை பகுதியிலுள்ள ஆறு ஒன்றில் குளிக்கச் சென்ற பொழுது ,இந்த நண்பர் குழு நீரில் மூழ்கியுள்ளது. இதன்போது நாலு பேர் நேர்கில் மூழ்கி இறந்து காப்பாற்றப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் குறித்த பகுதி போலீசார் தீவிர விசாரணை ஆரம்பித்துள்ளார்கள் .

இலங்கையில் ஆண்டுதோறும் இவ்வாறு நீர் நிலைகள் மூழ்கி ஆயிரத்துக்கு மேற்பட்டோர் பலியாகி வருகின்ற அதிர்ச்சி ஊட்டும் திடுக்கிடும் தாக்குதல் வெளியாகியிருக்கின்றன.

நாள்தோறும் இவ்வாறு நீராடி செல்லும் மக்களை நேரில் மூழ்கி இறப்பதாக புதிய தகவல் தெரிவிக்கின்றன .

மேற்படி சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் மிகப்பெரும் துயரை ஏற்படுத்தியுள்ளது .

நண்பர் கூட்டமாக இணைந்து நீராட சென்ற பொழுது இவர்கள் நீரில் மூழ்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது .

இதனால் அந்த கிராம பகுதியில் அந்த குடும்பத்துடன் கண்ணீரில் தவித்து வருகின்றது .

நிலவுக்கு ஆபத்து விஞ்ஞானிகள் எச்சரிக்கை
Posted in Technology தொழில்நுட்பம் இலங்கை செய்திகள்

நிலவுக்கு ஆபத்து விஞ்ஞானிகள் எச்சரிக்கை

நிலவுக்கு ஆபத்து விஞ்ஞானிகள் எச்சரிக்கை

நிலவுக்கு பெரும் ஆபத்து இருப்பதாகவும் அதனை இழக்க நேரிடும் எனவும் விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

2024 YR4′ எனும் விண்கல் நிலவை மோத வாய்ப்பு இருப்பதாகவும், இந்த சம்பவத்தால் நாம் நிலவை நிரந்தரமாகக்கூட இழக்கலாம் என விஞ்ஞானிகள் அச்சம் தெரிவித்திருக்கின்றனர்.

அப்படி நடந்தால் அது பூமியிலும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். நாசாவின் ‘ஜேம்ஸ் வெப்’ தொலைநோக்கி ‘2024 YR4’ எனும் விண்கல்லை, தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறது.

இக்கல் பயணிக்கும் பாதைக்கு குறுக்கே பூமி வரும், இதனால் இந்த விண்கல் பூமி மீது மோதும் என்று தொடக்கத்தில் கணிக்கப்பட்டிருந்தது.

ஆனால் அதற்கான சாத்தியங்கள் இல்லை என்று இப்போது உறுதி செய்யப்பட்டிருக்கின்றன.

ஆனால் இக்கல் நிலவு மீது மோத வாய்ப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.

நிலவை இக்கல் 2032ம் ஆண்டு தாக்கலாம். முதன் முதலில் இக்கல் கடந்த ஆண்டு டிசம்பரில் கண்டுபிடிக்கப்பட்டது.

நிலவுடன் ஒப்பிடும்போது இக்கல், மிகவும் எடை குறைந்தது. எனவே பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. எனவே அச்சப்பட வேண்டியதில்லை என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

ஆனால் சில தனியார் விண்வெளி ஆய்வாளர்கள், இக்கல் நிலவு மீது மோதும்போது நிலவு பூமியை விட்டு மேலும் விலகி செல்ல வாய்ப்பு இருப்பதாக கூறுகிறார்கள். அப்படி நடந்தால், அதன் விளைவுகளை பூமி எதிர்கொள்ள வேண்டி இருக்கும்.

நிலவின் ஈர்ப்பு விசையால் கடல் அலைகள் உருவாகின்றன. நிலவு இல்லையெனில், சூரியனின் ஈர்ப்பு மட்டுமே அலைகளை உருவாக்கும், இதனால் அலைகள் மிகவும் பலவீனமாகவும் ஒழுங்கற்றதாகவும் இருக்கும்.

நிலவு பூமியின் சுழற்சி அச்சை நிலைப்படுத்த உதவுகிறது. இல்லையெனில், பூமியின் அச்சு பெரிய அளவில் பாதிக்கப்படும். இது காலநிலையில் தீவிர மாற்றங்களை ஏற்படுத்தும்.

நிலவு இரவில் இயற்கையான வெளிச்சத்தை வழங்குகிறது. இது இல்லையெனில், இரவுகள் மிகவும் இருண்டதாக இருக்கும், இது விலங்குகள் மற்றும் மனிதர்களின் நடவடிக்கைகளை பாதிக்கும்.

உதாரணத்திற்கு கடற்கரை மணற் பரப்பிலிருந்து வெளிவரும் ஆமை குஞ்சுகள் நிலவின் வெளிச்சத்தை அடையாளம் கண்டுதான் கடலுக்கு போகிறது.

கடல்வாழ் உயிர்களுக்கு இனப்பெருக்கம், வேட்டையாடுதல் உள்ளிட்டவற்றிற்கு நிலவு வெளிச்சம் அவசியம். நிலவு இல்லையெனில் ஆமை போல பல உயிர்கள் பாதிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

HKU5 வௌவால் வைரஸ் விஞ்ஞானிகள் எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள் உலக செய்திகள்

HKU5 வௌவால் வைரஸ் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

HKU5 வௌவால் வைரஸ் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

சீனாவில் சமீபத்தில் கண்டறியப்பட்ட புதிய கரோனா வைரஸ் – HKU5-CoV-2 – மிகச் சிறிய மரபணு மாற்றத்தின் மூலம் மனிதர்களுக்கு பரவக்கூடிய ஆபத்தான வகையிலான தொற்றாக மாறக்கூடும் என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த புதிய வகை வைரஸ், Covid-19 ஐ விட அதிக அளவிலான விலங்குகளை பாதிக்கக்கூடிய திறன் கொண்டது என்றும்,

விலங்குகளிடையே பரவுவதற்கும், மனிதர்களுக்கு மாறுவதற்கும் அதிக சாத்தியக்கூறு இருப்பதையும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

அமெரிக்காவின் வாஷிங்டன் ஸ்டேட் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், இந்த வைரஸ் மனித உடலில் உள்ள மூக்கு, வாய் மற்றும் தொண்டையில் உள்ள ACE2 செல்களில் இணையக்கூடிய

ஒரு சிறிய மாற்றம் மூலமே பரவக்கூடியதாக மாறும் வாய்ப்பு இருப்பது தெரியவந்துள்ளது. HKU5-CoV-2, மனித உடலின் மூச்சுவாய்கள் மற்றும் குடல்களில் உள்ள செல்களைத் தாக்கி, அந்த இடங்களில் வளர்வதும் குறிப்பிடத்தக்கது.

மர்மமான மற்றும் குறைவாக ஆய்வு செய்யப்பட்ட மெர்பெகோவைரஸ்கள் என்ற குழுவைச் சேர்ந்த HKU5 மற்றும் MERS-CoV வகைகள், மிகவும் ஆபத்தானவை.

MERS (Middle East Respiratory Syndrome) வைரசால் பாதிக்கப்படும் மக்களில் சுமார் 35% பேர் உயிரிழக்கின்றனர் என உலக சுகாதார அமைப்பு (WHO) தெரிவித்துள்ளது.

2012 முதல், 27 நாடுகளில் MERS வைரஸ் பரவியதில் 858 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த வைரஸ் பொதுவாக ஒட்டகங்களிலிருந்து மனிதர்களுக்கு பரவுகிறது.

HKU5-CoV-2 பொதுவாக蝙ாபாடுகளில் கண்டறியப்பட்டது. 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம், இந்த வைரஸ் முதன்முதலில் கண்டறியப்பட்டபோது, சில விஞ்ஞானிகள் இதன் ஆபத்தை மிகைப்படுத்த வேண்டாம் என எச்சரித்தனர்,

ஏனெனில் இது SARS-CoV-2 போல எளிதாக மனித செல்களில் நுழையக்கூடியதாக இல்லை என அவர்கள் கூறினர்.

HKU5-CoV-2, 2019 ஆம் ஆண்டு Covid-19 பரவலுக்குத் தொடக்கமாக இருந்தது என்று கூறப்படும் சீன ஆய்வகத்தில் செயல்பட்ட விஞ்ஞானிகளால் முதன்முதலில் களத்தில் கண்டறியப்பட்டது.

இந்த புதிய வைரஸ் தொடர்பான அறிக்கைகள் உலகம் முழுவதும் கவலைக்குரிய எச்சரிக்கைகளை உருவாக்கியுள்ளன.

தற்போது, இது மனிதர்களுக்கு பரவக்கூடிய திறனை வளர்த்து, மற்றொரு உலகளாவிய பரவலை (Pandemic) உருவாக்கக்கூடிய நிலைக்கு செல்லக்கூடும் என்பதால்,

தெளிவான கண்காணிப்பும், முன்கூட்டிய ஆய்வும் அவசியம் என உலக சுகாதார நிபுணர்கள் வலியுறுத்துகிறார்கள்.

உக்ரைனில் இரவிரவாக உக்கிர சமர்
Posted in உலக செய்திகள்

உக்ரைனில் இரவிரவாக உக்கிர சமர்

உக்ரைனில் இரவிரவாக உக்கிர சமர்

உக்ரைனின் கிழக்குப் பகுதியில் உள்ள கார்கிவ் நகரம் மீது ரஷ்யா இரவுப்பொழுதில் ட்ரோன்கள், ஏவுகணைகள் மற்றும் வழிநடத்தப்படும் குண்டுகள் மூலம் கடுமையாக தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்தனர், மேலும் 22 பேர் காயமடைந்தனர்,

இதில் ஒருமாதம் பாதி வயதுடைய குழந்தையும் உள்ளதாக, நகர முதல்வர் இகோர் தெரெகோவ் இன்று தெரிவித்தார்.

உக்ரைனின் மிகப்பெரிய நகரங்களில் ஒன்றான கார்கிவ், ரஷ்ய எல்லையிலிருந்து வெறும் சில கிலோமீட்டர்கள் தொலைவில் மட்டுமே உள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளாக ரஷ்யப் படைகளால் தொடர்ந்து குண்டுவீச்சிற்குட்பட்டு வருவதாகும்.

தொடர்ந்து தெரெகோவ், “முழுமையான போர் துவங்கியதிலிருந்து இதுவே எமக்கு ஏற்பட்ட மிக மோசமான தாக்குதல்” என்று டெலிகிராம் வழியாக தெரிவித்துள்ளார்.

இரவு முழுவதும் நூற்றுக்கணக்கான வெடித்தொடர்கள் கேட்கப்பட்டதாகவும், ரஷ்யப் படைகள் ஒரே நேரத்தில் ஏவுகணைகள், ட்ரோன்கள் மற்றும் காற்றிலிருந்து விழும் வழிநடத்தும் குண்டுகள் மூலம் தாக்கியதாகவும் கூறினார்.

பல்வேறு உயர்ந்த குடியிருப்பு கட்டடங்கள், தனியார் வீடுகள், கல்வி மற்றும் குடிமை அடிப்படை வசதிகள் ஆகியவை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.

உள்ளூராட்சி அதிகாரிகள் வெளியிட்ட புகைப்படங்களில் தீப்பிடித்த வீடுகள், சேதமடைந்த வாகனங்கள், மற்றும் மருத்துவப் பணியாளர்கள் காயமடைந்தவர்களை மீட்டு கொண்டு செல்லும் காட்சிகள் தென்பட்டன.

கார்கிவ் மாகாண ஆளுநர் ஒலெக் சினிஹூபோவ், ஒரு மக்கள் தொழிற்சாலை மீது 40 ட்ரோன்கள், ஒரு ஏவுகணை மற்றும் நான்கு குண்டுகள் வீசப்பட்டதாகவும், இதனால் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார்.

மேலும், சிலர் இடிபாடுகளின் கீழ் சிக்கியிருக்க வாய்ப்புள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

உக்ரைனிய இராணுவம் தெரிவித்ததாவது, ஒரே இரவில் ரஷ்யா 206 ட்ரோன்கள், 2 பலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் 7 பிற வகை ஏவுகணைகளை ஏவியதாகும்.

இதில் 87 ட்ரோன்கள் வான்வழி பாதுகாப்பு படையினரால் தகர்க்கப்பட்டன என்றும், மேலும் 80 ட்ரோன்கள் மின்னணு போர் தொழில்நுட்பத்தின் மூலம் வழிதவறச் செய்யப்பட்டவை அல்லது வெடிபொருள் இல்லாத பயிற்சி ட்ரோன்கள் எனவும் கூறினர்.

மொத்தம் பத்து இடங்களில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக உக்ரைனிய ராணுவம் தெரிவித்துள்ளது.

இத்தகைய தாக்குதல்கள், கார்கிவ் நகரத்தின் மக்கள் வாழ்க்கையை மட்டுமல்ல, உக்ரைனின் பாதுகாப்பு மற்றும் உள்கட்டமைப்புகளையும் பெரிதும் பாதிப்பதைக் காட்டுகின்றன.

செம்மணியில் கைக்குழந்தையின் எலும்புக் கூடுகள்
Posted in இலங்கை செய்திகள்

செம்மணியில் கைக்குழந்தையின் எலும்புக் கூடுகள்

செம்மணியில் கைக்குழந்தையின் எலும்புக் கூடுகள்

யாழ்ப்பாணம் செம்மணியில் கைக்குழந்தைகளுடையது என சந்தேகிக்கப்படும் மூன்று எலும்பு கூட்டு தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அவை உட்பட 18 மனித எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

அடையாளம் காணப்பட்டுள்ள 18 மனித எலும்பு கூட்டு தொகுதிகளில் 05 எலும்பு கூட்டு தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டு, அவை சட்ட வைத்திய அதிகாரியின் பாதுகாப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளன.

அதேவேளை சில எலும்புக்கூட்டு தொகுதிகள் இணைந்த நிலையில் காணப்படுவதால் , அவை ஒரே கிடங்கில் புதைக்கப்பட்டு இருக்கலாம் என்றும் ,

இதுவரையில் ஆடை , அணிகலன்களோ காலணிகளோ எவையும் மீட்கப்படாததால் , அவை வெற்று உடல்களாகவே புதைக்கப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

அதேவேளை குறித்த பகுதியை மனித புதைகுழியாக பிரகடனப்படுத்த கோரி யாழ் . நீதிவான் நீதிமன்றில் சட்டத்தரணிகள் விண்ணப்பம் செய்துள்ள நிலையில்

கட்டளைக்கு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை நீதிமன்று திகதியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இந்த புதைகுழிகள், 1996ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இடம்பெற்ற கிருஷாந்தி குமாரசுவாமி மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள் படுகொலைக்கு பின்னர்,

இலங்கை இராணுவ வீரர் சோமரத்ன ராஜபக்ஷவின் வாக்குமூலத்தின் அடிப்படையில் 1999ம் ஆண்டு அகழ்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்ட இடத்திலேயே உள்ளன.

அப்போது, 15 மனித உடல்கள் கண்டெடுக்கப்பட்டன, இதில் சிலர் கண்ணை கட்டிய நிலையில் மற்றும் கைகளைக் கட்டிய நிலையில் இருந்தனர்,

இது அவர்கள் படுகொலை செய்யப்பட்டதைக்கிறது.

இந்த புதுப்பட்ட கண்டுபிடிப்பு, கடந்த காலத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களை மீண்டும் வெளிக்கொணர்கிறது.

அதே நேரத்தில், பல ஆண்டுகளாக நீடித்து வரும் நீதியின் தேடலை மீண்டும் தூண்டுகிறது. மாற்றம் மற்றும் நியாயத்தை எதிர்பார்க்கும் குடும்பங்கள், சர்வதேச சமுதாயத்தின் கவனத்தை ஈர்க்க முயற்சிக்கின்றன.

இந்த நிலையில், சரியான மற்றும் முழுமையான விசாரணைகள் நடைபெற்று, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

எலனுக்கு மனநோய் ட்ரம்ப் அதிரடி
Posted in உலக செய்திகள்

எலனுக்கு மனநோய் ட்ரம்ப் அதிரடி

எலனுக்கு மனநோய் ட்ரம்ப் அதிரடி

எலான் மஸ்க் சுயநினைவை இழந்துவிட்டார் என்றும், அவருடன் தன்னால் பேச முடியாது என்றும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.

ஏபிசி நியூஸுக்கு அளித்த பேட்டியில், மஸ்க் தனது சுயநினைவை இழந்துவிட்டதாகவும், அப்படிப்பட்ட ஒருவருடன் தன்னால் பேச முடியாது என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.

ஏர் ஃபோர்ஸ் ஒன் செய்தியாளர் சந்திப்பில் பபேசிய டிரம்ப், தற்போது சீனா, ரஷ்யா மற்றும் ஈரானுடன் இணைந்து பணியாற்றி வருவதாக கூறினார்.

மேலும், தற்போது எலோன் மஸ்க்குடன் பேசத் திட்டமிடவில்லை என்று தெளிவுபடுத்தினார்.

சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோக நெட்வொர்க் தொடர்புடைய சர்ச்சைக்குரிய எப்ஸ்டீன் கோப்புகளில் டிரம்பின் பெயர் இருந்ததாகவும்,

அதனால்தான் விசாரணையின் விவரங்களும் கண்டுபிடிப்புகளும் பகிரங்கப்படுத்தப்படவில்லை என்றும் எலோன் மஸ்க் கூறியிருந்தார்.

டிரம்பை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்றும், துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸை அவருக்குப் பதிலாக நியமிக்க வேண்டும் என்றும் மஸ்க் வலுயுறுத்தியுள்ளார்.

மஸ்க், டிரம்பை வெற்றியடையச் செய்ய தனது $300 மில்லியனை செலவிட்டதாகவும், அதற்குப் பதிலாகக் கிடைத்தது “நன்றி இல்லாத தன்மை” என்றும் குற்றம்சாட்டினார்.

மேலும், டிரம்ப் ஜெஃப்ரி எப்ஸ்டீனின் பாலியல் குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டிருக்க வாய்ப்பு உள்ளதாகவும், அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டுமெனக் கூறிய சமூக ஊடக பதிவுக்கு ஒத்துழைப்பு அளித்தார்.

இதற்குப் பதிலாக, டிரம்ப் மஸ்க்கின் நிறுவனங்களுக்கான அரசாங்க ஒப்பந்தங்களை நிறுத்தப் பார்க்கிறேன் என எச்சரிக்கை விடுத்தார்.

MAGA ஆதரவாளர்கள் மஸ்க்கின் கையிலிருந்து பதிலடி எடுக்கும் பிற வழிகளை பரிசீலிக்கத் தொடங்கியுள்ளனர்.

இவ்வாறு, உலகின் பணக்கார மனிதனும், அமெரிக்காவின் முன்னாள் அதிபருமான இருவரின் மோதல், சமரசத்தைவிட சண்டையின் பக்கமே நகர்கிறது போலிருக்கிறது.

கைதுக்கு பயந்த அரசியல்வாதிகள் விகாரையில்
Posted in இலங்கை செய்திகள்

கைதுக்கு பயந்த அரசியல்வாதிகள் விகாரையில்

கைதுக்கு பயந்த அரசியல்வாதிகள் விகாரையில்

கைதுகளுக்கு பயந்து அரசியல்வாதிகள் பலர் பெளத்த விகாரைகளில் தஞ்சம் புகுந்துள்ளதாக உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன.

முன்னாள் அமைச்சர்கள் மற்றும் உயர் அரசு அதிகாரிகள் உட்பட ஐம்பதுக்கும் மேற்பட்ட அரசியல்வாதிகள் சமீபத்திய நாட்களில் பல,

விகாரைகள் மற்றும் கோவில்களுக்குச் சென்று பிரார்த்தனை செய்து ஆசி பெற்றுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிரார்த்தனை செய்தவர்களில் பெரும்பாலோர் பல்வேறு ஊழல் மற்றும் சட்டவிரோத குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சமீபத்திய நாட்களில் இருபதுக்கும் மேற்பட்ட முன்னாள் அரசியல்வாதிகள் கதிர்காம கோயிலுக்கு மட்டும் சென்று பிரார்த்தனை செய்துள்ளதாக ஆலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதற்கிடையில், பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ள ஒரு உயர் அரசு அதிகாரி, சிறப்பு பாதுகாப்புடன் அனுராதபுரம் ஜெய ஸ்ரீ மஹா போதி தேரரை சந்தித்து, அப்பகுதியின் முன்னணி துறவிகளைச் சந்தித்து ஆசி பெற்றதாக கூறப்படுகிறது.

இதேபோல், இந்தியாவுக்குச் சென்ற முன்னாள் அரசியல்வாதி ஒருவர் அங்குள்ள ஒரு கோவிலில் பெரிய அளவிலான பிரார்த்தனை நடத்தி ஆசி பெற்றுள்ளார்.

பல்வேறு ஊழல்கள் மற்றும் பிற முறைகேடுகள் தொடர்பாக அரசியல்வாதிகள் உட்பட கிட்டத்தட்ட இருபது அரசு அதிகாரிகள் சமீபத்திய நாட்களில் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

யாழில் விபத்து ஒருவர் பலி
Posted in இலங்கை செய்திகள்

யாழில் விபத்து ஒருவர் பலி

யாழில் விபத்து ஒருவர் பலி

யாழ்ப்பாணம் சங்கானைப் பகுதியில் நடைபெற்ற வீதி விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

யாழ்ப்பாணம், சங்கானைப் பிள்ளையார் ஆலய வளைவு வீதியில் பட்டா ரக வாகனத்துடன் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதி

விபத்துக்குள்ளானதில் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் உயிரிழந்துள்ளார்.

மேலும் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வெள்ளிக்கிழமை (06) காலை 9.00 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவத்தில் மாதகல் மேற்க்கைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 56 வயதுடையவர் ஆவார்.

மேற்படி குடும்பஸ்தர் இன்னொருவரை மோட்டார் சைக்கிளில் பின் இருக்கையில் ஏற்றிக் கொண்டு சங்கானையில் இருந்து சித்தங்கேணி நோக்கி மோட்டார் சைக்கிள் சென்றுள்ளார்.

இதன்போது, சங்கானை பிள்ளையார் கோவில் வளைவு பகுதியில் மேற்படி மோட்டார் சைக்கிள் முச்சக்கர வண்டி ஒன்றை மத்திய கோட்டை தாண்டி முந்தி செல்ல முற்பட்டபோது

எதிர்த் திசையில் வந்த பட்டா ரக வாகனத்துடன் மோதி இருவரும் மயக்கம் அடைந்தனர்.

உடனடியாக சங்கானை வைத்தியசாலையை கொண்டு செல்லப்பட்டு பின்னர் யாழ். போதனா வைத்தியசாலைக்கு இருவரும் மாற்றப்பட்ட நிலையில்

மேற்படி குடும்பஸ்தர் உயிரிழந்ததுடன் மற்றவர் மயக்கம் அடைந்த நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றார்.

இம் மரணம் தொடர்பில் யாழ். போதனா வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி விசாரணைகளை மேற்கொண்டதுடன் சாட்சிகளை மானிப்பாய் பொலிஸார் நெறிப்படுத்தினர்.

தண்ணி விற்பனை 5 லட்சம் ரூபா அபராதம்
Posted in இலங்கை செய்திகள்

தண்ணி விற்பனை 5 லட்சம் ரூபா அபராதம்

தண்ணி விற்பனை 5 லட்சம் ரூபா அபராதம்

தண்ணீர் போத்தல் ஒன்றுக்கு 10 இலாபம் வைத்து விற்றவருக்கு ஐந்து இலட்சம் ரூபா பராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இரத்தினபுரி – கலவானை பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடிக்கு நீதிமன்றம் 500,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

70 ரூபாய் விலையை கொண்ட 500 மில்லி லிட்டர் குடிநீர் போத்தலை 80 ரூபாய்க்கு விற்றதற்காக கலவானை நீதிவான் நீதிமன்றம் இந்த அபராதத்தை விதித்துள்ளது.

பல்பொருள் அங்காடி (சூப்பர் மார்க்கெட்) நிர்வாகம் குற்றத்தை ஒப்புக்கொண்டதை அடுத்து அபராதம் விதிக்கப்பட்டது.

இந்நிலையில் கொழும்பு தாமரை கோபுரத்தின் தரை தளத்தில் உள்ள கடை உரிமையாளருக்கு, அதிக விலைக்கு குடிநீர் போத்தலை விற்றதற்காக கொழும்பு மேலதிக நீதிவான் 100,000 ருபாய் அபராதம் விதித்துள்ளார்.

கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில், நுகர்வோர் விவகார அதிகாரசபையின் விசாரணைப் பிரிவு நடத்திய சோதனையின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபர், MRP விதிமுறைகளை மீறி, 80 ருபாயான 500 மில்லி குடிநீர் பாட்டிலை 150 ருபாய்க்கு விற்றதாக அதிகாரிகள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

இதுபோன்ற அதிக விலை நிர்ணய சம்பவங்கள் குறித்து முறையிடுமாறு நுகர்வோர் விவகார ஆணையகம் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.

அணுகுண்டு தயாரிக்கும் நிலையில் ஈரான்
Posted in உலக செய்திகள்

அணுகுண்டு தயாரிக்கும் நிலையில் ஈரான்

அணுகுண்டு தயாரிக்கும் நிலையில் ஈரான்

அணுகுண்டு தயாரிக்கும் நிலையில் ஈரான் தற்பொழுது அசுர வளர்ச்சி பெற்றுள்ளதாகவும் தற்பொழுது அதனுடைய அணு உலையில் புறப்பட்ட சிறுவைப் பொருட்கள் போதுமானதாகொழுதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் தொடர்ந்து பலஸ்த்தீனம் காசா மீது தொடர் தாக்குதலை நடத்தி வருகின்ற இந்த காலப்பகுதியில், அணுகுண்டு தயாரிக்கும் நடவடிக்கையில் ஈரான் ஈடுபட்டுள்ளது.

யூத படைகள் தாக்குதல்

ஈரான் மிக முக்கியமான பகுதிகளை இலக்கு வைத்து யூத படைகள் தாக்குதலை நடத்தக்கூடும் எதிர்பார்க்கப்பட நிலையில், தற்பொழுது அணுகுண்டு தயாரிப்பில் ஈரான் ஆரம்பித்துள்ளது .

நீண்டதூர் ஏவுகணைகளை பயன்படுத்தி அதனூடாக அணுகுண்டு தாக்குதலை நடத்தும் புதிய வடிவமைப்பிலான குண்டுகளையும் செய்திட இப்பொழுது ஆரம்பித்துள்ளனர்.

இதனை அடுத்து தற்பொழுது இஸ்ரேல் படைகள் பெறுவதில்லை.

ஈரானை முற்று முழுதாக அழித்து விடலாம்

ஈரானை முற்று முழுதாக அழித்து விடலாம் என கங்கனம் கட்டி அலையும் யூத படைகளுக்கு இந்த விடயம் ஒரு சவால் நிறைந்த ஒன்றாகவே பார்க்கப்படுகிறது.

தொடரும் யூத படைகளின் ஆக்கிரமிப்பு நடவடிக்கை, இவ்வாறு தொடர்ந்தால் அது மிகப்பெரும் நெருக்கடியை இஸ்ரேலுக்கு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இஸ்ரேல் தாக்குதல் 70மக்கள் பலி
Posted in உலக செய்திகள்

70மக்கள் பலி இஸ்ரேல் தாக்குதல்

70மக்கள் பலி இஸ்ரேல் தாக்குதல்

70மக்கள் பலி இஸ்ரேல் தாக்குதல் பலி யாகி உள்ளதாக பாலஸ்தீனம் காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது,இஸ்ரேல் நடத்தும் இன அழிப்பு தாக்குதல் நடவடிக்கை உச்சம் பெற்றுள்ளது .

இஸ்ரேல் தொடர்ந்தும் பலஸ்தீனம் காசா மீது தாக்குதல்

இஸ்ரேல் தொடர்ந்தும் பலஸ்தீனம் காசா பகுதியை இலக்கு வைத்து நடத்திவரும் கொடூரத் தாக்குதலில், பல நூற்றுக்கணக்கான மக்கள் நாள்தோறும் பலியாகி வருவதாக தெரிவித்துள்ளது .

கடந்த 24 மணித்தியாலத்தில் நடத்தப்பட்ட வான்வழி மற்றும் ஏவுகணை தாக்குதலில் 70-க்கு மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளனர் .

நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் காயம் அடைந்துள்ளதாக பலஸ்தீன காசா சுகாதார அமைச்சர் மேற்குலுகாட்டி செய்திகள் வெளியாகி உள்ளன.

இன அழிப்பை தொடராக நடத்தி வரும் இஸ்ரேல்

இன அழிப்பை தொடராக நடத்தி வரும் யூத நாட்டின் அதிபர் நெதன்யாகுவிற்கு எதிராக ,எவ்விதமான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என, உலக நாட்டு மக்கள் தமது உள்ள குமுறலை கொட்டி தீர்த்து வருகின்றனர்.

இடைவிடாது தொடரும் இந்த தாக்குதலினால், படைகள் மிகப்பெரும் இழப்பை சந்தித்து வருவதுடன், அதேபோல அதற்கு பதிலடியாக மக்களை பலியெடுத்து வரும் செயல் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

உக்கிரைன் மீது ரஷ்யா கடும்தாக்குதல்
Posted in உலக செய்திகள்

உக்கிரைன் மீது ரஷ்யா கடும்தாக்குதல்

உக்கிரைன் மீது ரஷ்யா கடும்தாக்குதல்

உக்கிரைன் மீது ரஷ்யா கடும்தாக்குதல் ,உக்கரின் மீது ரஷ்யா கடும் தாக்குதலை நடத்திக் கொண்டு இருப்பதாக, உக்கிரன் செய்திகள் தெரிவிக்கின்றன.

40 விமானங்களை முற்றாக அழித்தத உக்ரைன்

ரஷ்யா உள்ளே நுழைந்து யுக்கிரன் மேற்குலக நாடுகள் இணைந்து விமானத் தளத்தை தாக்கி 40 விமானங்களை முற்றாக அழித்தது .

அதனை அடுத்து தற்பொழுது ரஷ்யா உக்ரைன் தலைநகரை மையப்படுத்தி பெரும் தாக்குதலை நடத்திக் கொண்டுள்ளது.

தாக்குதல் நடத்திக் கொண்டிருப்பதால் ,விமான எதிர்ப்பு ஏவுகணைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக உக்கிரைன் தெரிவித்துள்ளது .

ரஷ்யாவுக்கு இந்த தாக்குதல் மிகப்பெரும் நெருக்கடியை வழங்கியுள்ளதாகவும் ,அதனை அடுத்து தற்பொழுது எதிர்ப்பு ஏவுகணைகள், உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் யுக்கிரைன் செய்திகள் தெரிவிக்கின்றன.

பொல்லை கொடுத்து அடி வாங்கிய உக்கிரைன்

பொல்லை கொடுத்து அடி வாங்கிய கதையாக, உக்கிரன் சிக்கி உள்ளதாகவே தற்பொழுது பார்க்க முடிகிறது.

வடகொரியா, ஈரான் ,ஏவுகணைகள் ,ட்ரின் தற்கொலை விமானங்களை பயன்படுத்தி உக்ரைன் மீது அழித்தொழிப்பு தாக்குதல், நடத்த ரஷ்யா தயாராகி வருவதாகவே ,இந்த சம்பவங்களை நோக்கும்பொழுது பார்க்க முடிகிறது.