கந்தபொல விபத்தில் மூவர் காயம்
Posted in இலங்கை செய்திகள்

கந்தபொல விபத்தில் மூவர் காயம்

கந்தபொல விபத்தில் மூவர் காயம்

கந்தபொல விபத்தில் மூவர் காயம் ,கந்தபொலவிலிருந்து நுவரெலியா நகரத்திற்குச் சென்ற கார் ஒன்று, வீதியை விட்டு விலகி, தேயிலைத் தோட்டத்தில் சுமார் 15 அடி பள்ளத்தாக்கில் விழுந்ததில், காரில் பயணித்த ஒரு

முன்பள்ளி மாணவி, அவரது தாயார் மற்றும் ஓட்டுநர் ஆகியோர் காயமடைந்து நுவரெலியா மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த விபத்து, நுவரெலியா-கந்தபொல பிரதான வீதியில் உள்ள பொரலந்த பகுதியில் திங்கட்கிழமை (10) பிற்பகல் 3.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

விபத்து குறித்து விசாரணை நடத்தி வரும் நுவரெலியா காவல்துறை போக்குவரத்துப் பிரிவின் அதிகாரிகள், கடந்த 10 ஆம் திகதி பெய்த கனமழை

காரணமாக கந்தபொல மற்றும் பொரலந்த பகுதிகளில் சென்று கொண்டிருந்த மோட்டார் வாகனம் சறுக்கி பள்ளத்தாக்கில் விழுந்ததில் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவித்தனர்.

படப்பிடிப்பின் போது விபத்தில் சிக்கிய ஜனனி
Posted in உலக செய்திகள்

படப்பிடிப்பின் போது விபத்தில் சிக்கிய ஜனனி

படப்பிடிப்பின் போது விபத்தில் சிக்கிய ஜனனி

படப்பிடிப்பின் போது விபத்தில் சிக்கிய ஜனனி ,நிழல் படத்தின் படப்பிடிப்பின் போது இலங்கையைச் சேர்ந்த நடிகை ஜனனி குணசீலனுக்கு விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், அவர் பலத்த காயமடைந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

தளபதி விஜய் நடிப்பில் வெளியான லியோ படத்தில் நடித்தவர் நடிகை ஜனனி குணசீலன். பிக் பாஸ் தமிழ் சீசன் 6 நிகழ்ச்சியின் மூலமாக உலகம் முழுவதும் பிரபலமானார். இதே போன்று குக் வித் கோமாளி ரியாலிட்டி ஷோவிலும் கலந்து கொண்டார்.

தற்போது நிழல் என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் தான் ஷூட்டிங் ஸ்பாட்டில் விபத்து ஒன்றில் சிக்கியிருக்கிறார்.

அதில், அவருடைய காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து காலில் கட்டு போட்டுள்ளார்.

இலங்கை – யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஜனனி, மாடல், விஜே மற்றும் செய்தி வாசிப்பாளராக இருந்து தனது திறமையாலும் அழகாலும் தற்போது தமிழ் சினிமாவில் கால் பதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

விபத்தில் சிக்கினாரா யோகி பாபு
Posted in உலக செய்திகள்

விபத்தில் சிக்கினாரா யோகி பாபு

விபத்தில் சிக்கினாரா யோகி பாபு

விபத்தில் சிக்கினாரா யோகி பாபு ,சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், பெங்களூரு நோக்கி யோகிபாபு காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது அதிகாலை 3 மணியளவில் வாலாஜாபேட்டை

சுங்கச்சாவடியை கடந்த போது, திடீரென்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு மீது ஏறி கார் விபத்துக்குள்ளானது.

இந்தில் எந்தவித காயமுமின்றி யோகி பாபு அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக தகவல் வெளியானது. மேலும், காவல்துறையினர் நீண்ட நேரம்

போராடி நெடுஞ்சாலையின் நடுவில் சிக்கிய காரை அப்புறப்படுத்தியதாக செய்திகள் மற்றும் வீடியோ இணையத்தில் வெளியானது.

இது தொடர்பாக தனது சமூகவலைதளத்தில், “நலமாக இருக்கிறேன்.

இது தவறான செய்தி” என்று தெரிவித்தார் யோகி பாபு. மேலும், இந்த விபத்து தொடர்பாக, “அது ஒரு தவறான செய்தி. அந்த மாதிரி எதுவுமில்லை. யாருக்கும் எதுவும் ஆகவில்லை.

அது ஒரு தயாரிப்பு நிறுவனத்தின் வண்டி தடுப்பின் மீது மோதிவிட்டார். முன்னால் சென்ற நாங்கள் திரும்பி போய் என்னவென்று பார்த்து சரி செய்து அனுப்பிவிட்டேன்” என்று தெரிவித்துள்ளார் யோகி பாபு.

விபத்தில் சிக்கிய எம்.பி வைத்தியசாலையில்
Posted in இலங்கை செய்திகள்

விபத்தில் சிக்கிய எம்.பி வைத்தியசாலையில்

விபத்தில் சிக்கிய எம்.பி வைத்தியசாலையில்

விபத்தில் சிக்கிய எம்.பி வைத்தியசாலையில் ,யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளானதில் படுகாயமடைந்த எம்.பி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சாவகச்சேரி – தனக்கிளப்பு பகுதியில் இந்த விபத்து இன்று மாலை இடம்பெற்றுள்ளது.

வேகக்கட்டுப்பாட்டை இழந்த வாகனம் வயலுக்குள் பாய்ந்து விபத்துக்ககுள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது

92 லட்சம் ரூபாய் மோசடி இளைஞன் கைது
Posted in இலங்கை செய்திகள்

எம் பியின் தம்பி விபத்தில் கைது

எம் பியின் தம்பி விபத்தில் கைது

எம் பியின் தம்பி விபத்தில் கைது ,தேசிய மக்கள் சக்தியின் (NPP) புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் பைசலின் சகோதரர், விபத்து தொடர்பில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று (14) காலை, கொஸ்வத்த – ஹல்ததுவன பிரதேசத்தில், பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் பைசல், பாராளுமன்றத்திற்கு சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

அதிகாரிகளின் கூற்றுப்படி, பாராளுமன்ற உறுப்பினரின் கார் வீதியை விட்டு விலகி எதிர்திசையில் பயணித்த மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் சென்றவர் உயிரிழந்தார்.

வாகனத்தின் சாரதியான பாராளுமன்ற உறுப்பினரின் சகோதரர் கொஸ்வத்த பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்

கனடா வாகன விபத்தில் பகீரதனும் அவரது 3 வயது மகளும் மரணம்
Posted in சமையல் சமையல் cook

கனடா வாகன விபத்தில் பகீரதனும் அவரது 3 வயது மகளும் மரணம்

கனடா வாகன விபத்தில் பகீரதனும் அவரது 3 வயது மகளும் மரணம்

கனடா வாகன விபத்தில் பகீரதனும் அவரது 3 வயது மகளும் மரணம் ,கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் தந்தையும் அவரது மூன்று வயது மகளும் உயிரிழந்துள்ளனர்.

வாகனமொன்றில் மோதுண்டதனால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

வாகனத்தில் மோதுண்டு விபத்துக்குள்ளான நிலையில் குறித்த நபர் வாகனத்தை விட்டு கீழே இறங்கி மகளை தூக்கிக் கொண்டு விதியின் மறுமுனைக்கு செல்ல முயற்சித்த போது மற்றும் ஒரு வாகனம் குறித்த இருவர் மீதும் மோதியதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த மோதல் காரணமாக குறித்த இருவரும் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும் பின்னர் சிகிச்சைகள் பலனின்றி இருவரும் உயிர் இழந்து விட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த சம்பவம் தொடர்பில் போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த வாகன விபத்தில் மூன்று வாகனங்கள் தொடர்பு பட்டியிருந்ததாகவும் ஒரு வாகனத்தின் சாரதி சம்பவ இடத்தை விட்டு தப்பி சென்று விட்டதாகவும் மற்றவர்கள் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வாகன விபத்தில் இருவர் பலி
Posted in இலங்கை செய்திகள்

வாகன விபத்தில் இருவர் பலி

வெல்லாவெளி வாகன விபத்தில் பலி

வாகன விபத்தில் இருவர் பலி நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் இருவர் உயிரிழந்தனர்.

வெல்லாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பலாந்துறை சவலக்கடை வீதியில் பிலாலி வெம்பு சந்திக்கு அருகில், வெல்லாவெளியிலிருந்து காந்திபுரம் நோக்கிச் பயணித்த உழவு இயந்திரம் ஒன்று, எதிர் திசையில் இருந்து வந்த மோட்டார் சைக்கிளுடன் மோதி நேற்று (12) மாலை விபத்து ஏற்பட்டது.

விபத்தில் பலத்த காயமடைந்த மோட்டார் சைக்கிள் செலுத்துனர் களுவாஞ்சிகுடி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்தார்.

விபத்தில் உயிரிழந்தவர் மண்டூர், சங்கர்புரத்தைச் சேர்ந்த 43 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சடலம் களுவாஞ்சிகுடி மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

வாகன விபத்தில் இருவர் பலி

விபத்தையடுத்து உழவு இயந்திரத்தின் சாரதி தப்பி ஓடிய நிலையில், வாகனத்தை பொலிஸார் பொறுப்பேற்றனர்.

பின்னர் தப்பிச் சென்றிருந்த சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெல்லாவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையில், பின்னவல பொலிஸ் பிரிவின் கொழும்பு – மட்டக்களப்பு பிரதான வீதியில் அமுபிட்டிய பகுதியில் பாதுக்க திசையிலிருந்து சீலகம நோக்கி பயணித்த டிப்பர் வாகனத்தை சாரதியால் கட்டுப்படுத்த முடியாமல் வீதியை விட்டு விலகி கொங்ரீட் தூணில் மோதி விபத்து இடம்பெற்றுள்ளது.

விபத்தில் பலத்த காயமடைந்த டிப்பர் வாகனத்தின் சாரதி, பலாங்கொடை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் பெலிஹுல்ஓயாவைச் சேர்ந்த 49 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

சடலம் பலாங்கொடை மருத்துவமனை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பின்னவல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

32பேர் பலி பேரூந்து விபத்தில்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

32பேர் பலி பேரூந்து விபத்தில்

32பேர் பலி பேரூந்து விபத்தில்,

32பேர் பலி பேரூந்து விபத்தில் .பிரேசில் நாட்டில் இடம் பெற்ற விபத்தில் 32 பேர் பலியாக உள்ளதாக அந்த நாட்டு உள்ளூர் ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு இருக்கின்றன.

பேருந்து மற்றும் டிராக் நேரெதிர் மோதியதில் இந்த பாரிய விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் சம்பவ இடத்தில் 32 பேர் பலியாகி மேலும் பல காயப்படுத்தி உள்ளதாக அங்கு இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த விபத்தில் 14 பேர் காயமடைந்த நிலையில் மீட்க பட்டு தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவித்துள்ளன.

வீடியோ

இந்த பேருந்து விபத்தில் ஏற்பட்ட இந்த உயிர் இழப்பு தொடர்பாக அந்த நாட்டில் போலீசார் தீவிர விசாரணைகள் நடத்தி வருவதுடன் மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரேசில் நாட்டை உலுக்கிய மிக பெரும் கோர விபத்தாக இந்த பேரூந்து டிராக் நேரெதிர் மோதல் விபத்து காணப்படுகிறது .

அமெரிக்க விபத்தில் இந்திய மாணவர் பலி 2 பேர் காயம்
Posted in உலக செய்திகள்

அமெரிக்க விபத்தில் இந்திய மாணவர் பலி 2 பேர் காயம்

அமெரிக்க விபத்தில் இந்திய மாணவர் பலி 2 பேர் காயம்

அமெரிக்க விபத்தில் இந்திய மாணவர் பலி, 2 பேர் காயம் அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தில் உள்ள மெம்பிஸ் நகரில் வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்குப் பிறகு அவர்களது கார் மற்றொரு வாகனத்துடன் மோதியதில் விபத்து ஏற்பட்டது.

அமெரிக்காவில் நடந்த சாலை விபத்தில் இந்திய மாணவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தில் உள்ள மெம்பிஸ் நகரில் வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்குப் பிறகு அவர்களது கார் மற்றொரு வாகனத்துடன் மோதியதில் விபத்து ஏற்பட்டது.

பலியானவர் 26 வயதான நாக ஸ்ரீ வந்தனா பரிமளா என அடையாளம் காணப்பட்டுள்ளார், அவர் மெம்பிஸ் பல்கலைக்கழகத்தில் முதுகலை அறிவியல் (எம்எஸ்) பட்டப்படிப்பைப் படித்து வருவதாக கூறப்படுகிறது.

மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், அங்கு உயிரிழந்தார் என போலீசார் தெரிவித்தனர். ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில் உள்ள

தொழிலதிபரின் மகளான திருமதி பரிமளா 2022 ஆம் ஆண்டு உயர் படிப்பிற்காக அமெரிக்கா சென்றார்.

மேலும் இரண்டு மாணவர்களான பவன் மற்றும் நிகித் ஆகியோரும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், அங்கு முன்னாள் மாணவர்களின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.

ஆட்டோ விபத்தில் 4 மாணவர்கள் படுகாயம்
Posted in இலங்கை செய்திகள்

ஆட்டோ விபத்தில் 4 மாணவர்கள் படுகாயம்

ஆட்டோ விபத்தில் 4 மாணவர்கள் படுகாயம்

ஆட்டோ விபத்தில் 4 மாணவர்கள் படுகாயம் ,பாடசாலை மாணவன் ஓட்டிச் சென்ற முச்சக்கரவண்டி பிரதான வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் முச்சக்கரவண்டியில் பயணித்த மாணவர் உட்பட நான்கு மாணவர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

காயமடைந்த மாணவர்கள் உடனடியாக நாவலப்பிட்டி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து நேற்று (18) மாலை 5 மணியளவில் கினிகத்தேன நாவலப்பிட்டி பிரதான வீதியில் கினிகத்தேன நூலகத்திற்கு அருகில் இடம்பெற்றுள்ளது.

கினிகத்தேன கடவல தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்கும் தரம் 12 ஐ சேர்ந்த மாணவர்களே விபத்தில் காயமடைந்துள்ளனர்.

பாடசாலையில் இடம்பெற்ற வைபவம் முடிந்து நான்கு மாணவர்களும் முச்சக்கர வண்டியில் வீட்டுக்குச் சென்று கொண்டிருந்த போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

வளைவான பகுதியில் அதே திசையில் சென்ற வேனை முந்திச் செல்ல முற்பட்ட போது, ​​எதிரே வந்த லங்கம பேருந்து ஒன்று முச்சக்கரவண்டியுடன் மோதியதில் வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

முச்சக்கரவண்டியின் பின் இருக்கையில் பயணித்த மாணவர்கள் வீதியில் வீழ்ந்ததையடுத்து அவர்களின் உயிரைக் காப்பாற்ற பேருந்து வீதிக்கு வௌியே செலுத்தப்பட்டுள்ளது.

அப்போது, ​​அரசாங்கத்திற்கு சொந்தமான கட்டிடமொன்றின் மதில் மற்றும் வாயிலில் மோதி பேருந்து நின்றதாகவும், விபத்தில் பேருந்தில் பயணித்த

எவருக்கும் காயங்கள் ஏதும் ஏற்படவில்லை எனவும் கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.

முச்சக்கரவண்டியை ஓட்டிச் சென்ற பாடசாலை மாணவனிடம் சாரதி அனுமதிப்பத்திரம் இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், இதுவரை பொலிஸாரிடம் சமர்ப்பிக்கப்படவில்லை எனவும், பாடசாலை மாணவன்

கவனக்குறைவாக வாகனம் செலுத்தியமையே விபத்துக்கான காரணம் எனவும் இவ்விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் பேருந்தும் முச்சக்கரவண்டியும் கடுமையாக சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

விபத்தில் மரணம் மரண சடங்குக்கு வந்தவர்
Posted in இலங்கை செய்திகள்

விபத்தில் மரணம் மரண சடங்குக்கு வந்தவர்

விபத்தில் மரணம் மரண சடங்குக்கு வந்தவர்

விபத்தில் மரணம் மரண சடங்குக்கு வந்தவர் ,யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மரண சடங்குக்கு வந்த மட்டக்களப்பை சேர்ந்த ஒருவர் விபத்தில் சிக்கி படுகாயமடைந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு மாமாங்கம் பகுதியை சேர்ந்த குகதாஸ் விஜிதா (வயது 40) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உரும்பிராய் பகுதியில் நடைபெற்ற மரண சடங்குக்கு கடந்த 09 ஆம் திகதி வருகை தந்த குறித்த நபர் மறுநாள் மட்டக்களப்பு நோக்கி பயணிக்கும் போது ,

கொக்காவில் பகுதியில் வைத்து பன்றி ஒன்று வீதியின் குறுக்கே ஓடியதில் , அவர் பயணித்த வாகனம் பன்றியுடன் மோதி விபத்துக்கு உள்ளானது.

விபத்தில் படுகாயமடைந்தவரை மாங்குளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு , அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ் .

போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் புதன்கிழமை (13) அன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

ரயில் விபத்தில் 19 பேர் படுகாயம்
Posted in உலக செய்திகள்

ரயில் விபத்தில் 19 பேர் படுகாயம்

ரயில் விபத்தில் 19 பேர் படுகாயம்

ரயில் விபத்தில் 19 பேர் படுகாயம் ,இந்தியா – மைசூருலிருந்து தர்பங்கா நோக்கிச் சென்ற பாக்மதி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் விபத்துக்குள்ளானதில், 19 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

நேற்று இரவு பொன்னேரியை அடுத்த கவரப்பேட்டை ரெயில் நிலையம் அருகே சென்றுகொண்டிருந்தபோதே, சரக்கு ரெயில் மீது மோதி குறித்த ரயில் விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், இரண்டு ரயில்களின் பெட்டிகளும் தடம்புரண்டு மற்ற தண்டவாளங்களை ஆக்கிரமித்துள்ளன. தடம்புரண்ட பெட்டிகளை அகற்றும் பணியில் ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், கவனக்குறைவே ரயில் விபத்துக்கு காரணம் என ரயில்வே இருப்புப்பாதை பொலிஸா நடத்திய விசாரணையில் தெரிய வந்துள்ளது.

விபத்து தொடர்பாக கொருக்குப்பேட்டை ரயில்வே இருப்புப்பாதை பொலிஸார் விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில், கிரீன் சிக்னல் கொடுக்கப்பட்டதால் மட்டுமே ரயிலை இயக்கியதாக, பாக்மதி விரைவு ரயிலை ஓட்டிய லோகோ பைலட் சுப்பிரமணி விளக்கம் அளித்துள்ளார்.

பேரூந்து விபத்தில் 8 பேர் காயம்
Posted in இலங்கை செய்திகள்

பேரூந்து விபத்தில் 8 பேர் காயம்

பேரூந்து விபத்தில் 8 பேர் காயம்

பேரூந்து விபத்தில் 8 பேர் காயம் அடைந்துள்ளதாக இலங்கை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .

இரத்தினபுரி பகுதியிலிருந்து ரம்புகளை நோக்கி பயணித்த பயணிகள் பேரூந்து ஒன்று அவிசாவளை கேகாலை பிரதான வீதியில் கொட்டப்பல தண்டவாளத்திற்கு அருகில் விபத்தில் சிக்கியத்தில் எட்டு பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .

காயமடைந்த எட்டு பேரும் தற்போது கேகாலை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர் .

இலங்கையில் தொடராக இடம்பெற்று வரும் இவ்விதமான வீதி விபத்துக்களினால் மக்கள் சொல்லென்னா துயரை சந்தித்த வண்ணம் உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது .

விபத்தில் கொலண்டில் தமிழ் வாலிபன் பலி
Posted in இலங்கை செய்திகள்

விபத்தில் கொலண்டில் தமிழ் வாலிபன் பலி

விபத்தில் கொலண்டில் தமிழ் வாலிபன் பலி,கொலண்ட் நாட்டில் இடம்பெற்ற வீதி விபத்தில் யாழ்ப்பாணம் புங்கிடுதீவை சேர்ந்த தமிழ் வாலிபர் ஒருவர் பலியாகியுள்ளார் .

இந்த சம்பவமானது கடந்த சனிக்கிழமை அதிகாலை வேளையில் இடம்பெற்றுள்ளது .

விபத்தில் கொலண்டில் தமிழ் வாலிபன் பலி
விபத்தில் கொலண்டில் தமிழ் வாலிபன் பலி

தனது வாகனத்தில் வீடு நோக்கி வருகை தந்து கொண்டிருந்த பொழுது ,அல்கமார் ,ரவுண்ட போர்ட் பகுதியில் லொறி ஒன்றுடன் மோதுண்டு பலியாகியுள்ளார் .

பலியானவர் ஒரு பெண் குழந்தையின் தந்தையான டியே மாஸ்டர் என அழைக்க படும் சஞ்சிஜீவ் அமிர்தராஜா என அவரது குடும்ப உறவினர்கள் தெரிவித்துள்ளனர் .

குறுகிய காலத்தில் மிக பெரும் சாதனைகளை படைத்து மக்கள் நெஞ்சங்களில் இடம் பிடித்த ஒருவராக சஞ்சிஜீவ் அமிர்தராஜா காண படுகின்றார் .

இசைதான் அவனது உலகம்,வாழ்வியலின் தத்துவத்தின்
தந்தை என மக்களால் அறியப்பட்டவர்,வாழ்க்கை
புனிதமானது.வாழ்ந்து காட்டுவதே…சிறப்பு என்று.. தினம்.. சொல்லு பவன்..

அவ்வாறான அற்புத திறமையான ஒருவனை எமது மண் இழந்து நிற்பதாக நெதர்லாந்து வாழ் தமிழ் மக்கள் தெரிவித்துள்ளனர் .

பல கனவுகளை சுமந்து ,இசையோடு பயணித்தவன் ,இன்று இளம் வயதில் குடும்பத்தை தவிக்க விட்டு மறைந்துவிட்டான் .

இவர் கொலண்ட் நாட்டில் வசித்து வரும் பாவலர் புங்கையூர் ராஜாவின் அருமை புதல்வனாவார் .

நாடகம் , பாடல் ,கவிதை , என பல்வேறு பட்ட ,கலை பண்புகளை சுமந்து பயணிக்கும் படைப்பாளி புங்கையூர் ராஜா ஒருவர் ,தனது மகனை இழந்து கண்ணீரில் தவித்து வருகிறார் .

குறித்த விபத்து தொடர்பிலான விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .

இவ்வேளை ஆறா துயரில் தவிக்கும் குடும்பத்தினருடன் எதிரி இணையமாகிய நாமும் பங்கெடுத்து .கொள்கிறோம் .

தகவல் குடும்பத்தினர் .

  • வன்னி மைந்தன் –
தென் கொரியாவின் கார் விபத்தில் 22 பேர் காயம்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

தென் கொரியாவின் கார் விபத்தில் 22 பேர் காயம்

தென் கொரியாவின் கார் விபத்தில் 22 பேர் காயம்


தென் கொரியாவின் கார் விபத்தில் 22 பேர் காயம், தென் கொரியாவின் இலையுதிர்கால அறுவடைக் கொண்டாட்டமான ஐந்து நாள் சூசோக் விடுமுறையின் முதல் நாளில், தென் கொரியாவின் கார் விபத்தில் 22 பேர் காயமடைந்ததாக காவல்துறை மற்றும் தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

நாட்டின் தென்கிழக்கு துறைமுக நகரமான மேற்கு பூசானில், உள்ளூர் நேரப்படி காலை 6:56 மணியளவில் (2156 GMT வெள்ளிக்கிழமை) ஒரு விரைவுப் பேருந்து ஒரு பாதுகாப்புப் பாதையில் மோதியது மற்றும் ஒரு இடைநிலைப் பகுதியின் மீது மோதியது, Xinhua அறிக்கைகள்.

இதில், பேருந்தில் இருந்த 22 பேரும், ஓட்டுனர் உட்பட 4 பேரும் படுகாயமடைந்தனர்.

படுகாயமடைந்த இருவர் விபத்தின் தாக்கத்தால் பேருந்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட நிலையில் அதிவேக நெடுஞ்சாலையின் எதிர் பாதையில் காணப்பட்டனர்.

பலத்த காயம் அடைந்தவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் இல்லை.

விபத்துக்கான சரியான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வந்தனர், டிரைவர் குடிபோதையில் வாகனம் ஓட்டவில்லை.

இலையுதிர் விடுமுறையின் போது, ​​தென் கொரியர்கள் கிராமப்புறங்களில் உள்ள தங்கள் சொந்த ஊர்களுக்கு குடும்பங்கள் மற்றும் உறவினர்களுடன் கூடி வரும்போது நாடு முழுவதும் போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டது.

விபத்தில் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பலி
Posted in இலங்கை செய்திகள்

விபத்தில் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பலி

விபத்தில் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பலி

விபத்தில் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பலி ,யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை பகுதியில் நேற்று (13) இடம்பெற்ற விபத்தில் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் , புங்குடுதீவு பகுதியை சேர்ந்த கண்ணதாசன் எனும் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.

வேலணை பகுதியில் இருந்து அராலி சந்தியை நோக்கி மோட்டார் சைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த வேளை மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் மோதி, எதிரே வந்த ஜே.சி.பி வாகனத்தினுள் அகப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

விபத்து தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

கென்யாவில் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் பலி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

கென்யாவில் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் பலி

கென்யாவில் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் பலி

கென்யாவில் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் பலி ,கென்யாவில் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 பேர் பலி.


தெஹ்ரான், செப். 06 (எம்என்ஏ) – கென்யாவில் பள்ளி விடுதி ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 17 மாணவர்கள் உயிரிழந்ததுடன், 13 பேர் பலத்த தீக்காயங்களுக்கு உள்ளானதாக போலீஸார் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.

பலி எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்சப்படுகிறது என போலீசார் தெரிவித்துள்ளனர்.

நைரி கவுண்டியில் உள்ள ஹில்சைட் எண்டராஷா பிரைமரியில் வியாழக்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்துக்கான காரணம் விசாரிக்கப்பட்டு வருவதாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் ரெசிலா ஒன்யாங்கோ தெரிவித்தார்.

“நாங்கள் காரணத்தை ஆராய்ந்து வருகிறோம், தேவையான நடவடிக்கை எடுப்போம்,” என்று அவர் கூறினார், AP தெரிவித்துள்ளது.

கென்ய உறைவிடப் பள்ளிகளில் பள்ளி தீ பொதுவானது, அங்கு பல மாணவர்கள் தங்கியுள்ளனர், ஏனெனில் நீண்ட பயணங்கள் இல்லாமல் படிக்க அதிக நேரம் கிடைக்கும் என்று பெற்றோர்கள் நம்புகிறார்கள்.

பணிச்சுமை அல்லது வாழ்க்கை நிலைமைகள் தொடர்பாக போராட்டங்களின் போது மாணவர்களால் சில தீக்குளிக்கப்பட்டது. 2017ஆம் ஆண்டு தலைநகர் நைரோபியில் உள்ள பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் உயிரிழந்தனர்.

விபத்தில் சிதறியது மருத்துவர் கார்
Posted in இலங்கை செய்திகள்

விபத்தில் சிதறியது மருத்துவர் கார்

விபத்தில் சிதறியது மருத்துவர் கார்

விபத்தில் சிதறியது மருத்துவர் கார் ,விசேட வைத்தியர் ஒருவரின் மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளை ஏற்றிச் சென்ற அதிசொகுசு காரொன்று தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்துக்கு உள்ளானது.

ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலையில் விசேட வைத்தியர் ஒருவருக்கு சொந்தமான அதிசொகுசு காரே இவ்வாறு விபத்துக்கு உள்ளானது.

பத்தேகம அதிவேக நெடுஞ்சாலையின் நுழைவாயிலுக்கு அருகில் 80 ஆவது கிலோமீற்றர் மைல் கல்லுக்கு அருகில் விபத்துக்குள்ளாகியுள்ளதாக நெடுஞ்சாலை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்தவர்களில் 16-21 வயதுடைய இரண்டு மகன்களும் மனைவியும் அடங்குவதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

விபத்தின் போது 21 வயது மகன் காரை ஓட்டி வந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மாத்தறையிலிருந்து கொழும்பு நோக்கி வந்த கார் மொனராகலையில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற சொகுசு தனியார் பேருந்தின் வலது பக்க உடற்பகுதியில் பாதுகாப்பு வேலிக்கு நடுவில் விபத்துக்கு உள்ளாகி மோதியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்து இடம்பெற்ற அதேநேரம், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் அம்பியூலன்ஸ் வண்டிகள் வருவதற்கு முன்னர், காரில் சிக்கி காயமடைந்தவர்களை வீதியில் பயணித்த வாகனங்களின் சாரதிகள் கராப்பிட்டிய வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றுள்ளனர்.

விபத்தில் மூவர் பலி
Posted in இலங்கை செய்திகள்

விபத்தில் மூவர் பலி

விபத்தில் மூவர் பலி

விபத்தில் மூவர் பலி ,நாட்டின் பல பகுதிகளில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

ஹோமாகம, மடாட்டுகம மற்றும் வரகாபொல பொலிஸ் பிரிவுகளில் நேற்று (10) இந்த விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன.

ஹோமாகம – கொட்டாவ பழைய வீதியின் வளவ சந்தியில் முச்சக்கரவண்டி ஒன்று காருடன் மோதியதில் முச்சக்கர வண்டியின் சாரதியான 41 வயதுடைய நபர் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, யாழ்ப்பாணம் – கண்டி வீதியின் பஹல புலாகல பகுதியில் முச்சக்கர வண்டியொன்று எதிர் திசையில் இருந்து வந்த கெப் வண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதியும் பின்னால் பயணித்த நபரும் தம்புள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பெற்று வந்த முச்சக்கரவண்டி சாரதி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் கிதுல்ஹிட்டியாவ பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

இதேவேளை, வரகாபொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அம்பேபுஸ்ஸ – அலவ்வ வீதியின் துல்ஹிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் 19 வயதுடைய இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மோட்டார் சைக்கிள், செலுத்துனரின் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மூவர் காயம் ஜீப் விபத்தில்
Posted in இலங்கை செய்திகள்

மூவர் காயம் ஜீப் விபத்தில்

மூவர் காயம் ஜீப் விபத்தில்

மூவர் காயம் ஜீப் விபத்தில் ,மட்டக்களப்பு கரண்டி ஆறு காவல்துறை பிரிவுக்குள் உள்ள மரப்பல பகுதியில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

கண்டியிலிருந்து மட்டக்களப்புக்கு விடுமுறையை கழிக்க வந்த குடும்பமே விபத்தில் சிக்கியுள்ளது .

வேகமாக பயணித்த இவ்வாறு சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து தலைகளாக கூத்து காரணமாக அடித்துள்ளார் .

குறித்த வண்டியில் 5 பேர் பயணித்ததாகவும் அதில் மூவர் மட்டுமே காயம் அடைந்துள்ளதாக எங்களுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேகமாக பயணித்த வாகனம் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து விபத்தில் அடுத்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாரதிகளின் அலட்சியப் போக்கும் வீதி விதிமுறைகளை பின்பற்ற அமையும் வாகனங்களை ஓட்டி செல்வதாலேயே இவ்வாறான பீதி போத்துக்கள் அதிக இடம்பெற்று வருவதாகவும் மக்கள் மரணமாகி வருவதாகவும் கூட்டம் சுமத்தப்படுகின்றது.

லஞ்ச ஊழல் பெருகி உள்ள இலங்கை நாட்டில் இவ்வாறு சாரதி அனுமதிப்பத்திரம் பெற்றவர்களும் பணத்தை கொடுத்து வாங்கினார்கள் விபத்துக்கள் ஊடாக வெளியாகி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்துகள் லொறிகளை , ஓட்டி செல்கின்ற சாரதிகளும் பல்வேறுபட்ட விபத்துகளை சிக்கி வருகின்ற காரணத்தினால் ,இவர்களும் பணத்தை கொடுத்து சாரதி அனுமதி பத்திரங்களை வாங்கி வண்டிகளை ஓட்டுகின்ற இந்த சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளதாகவே தெரிவிக்கப்படுகிறது.

மேற்படி விபத்து தொடர்பான விசாரணைகளை போலீசார் ஆரம்பித்துள்ளதாக இலங்கை செய்திகள் தெரிவிக்கின்றன.