Tag: சுன்னாகம்
சுன்னாகம் புத்தூர் வீதிக்கு தற்காலிக பூட்டு
சுன்னாகம் புத்தூர் வீதிக்கு தற்காலிக பூட்டு
சுன்னாகம் புத்தூர் வீதிக்கு தற்காலிக பூட்டு ,யாழ்ப்பாணம், சுன்னாகம் – புத்தூர் வீதியானது இன்றும் (16) நாளையும் (17) தற்காலிகமாக மூடப்பட்டிருக்கும் என வட பகுதி ரயில்வே பாதை மற்றும் பராமரிப்புத் திணைக்கள பொறியியலாளர் ஜி.கே. சதுரேனோ அறிவித்துள்ளார்.
சுன்னாகம் – புத்தூர் வீதியில் அமைந்துள்ள ரயில்வே கடவை
சுன்னாகம் – புத்தூர் வீதியில் அமைந்துள்ள ரயில்வே கடவை அவசரமாக மறுசீரமைக்கப்பட வேண்டியுள்ளதால், இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, குறித்த ரயில்வே கடவை இன்று காலை 7.00 மணி முதல் நாளை அதிகாலை 5.00 மணி வரை மூடப்பட்டிருக்கும்.
எனவே, பொதுமக்கள் மற்றும் வாகனச் சாரதிகள் போக்குவரத்துக்காக மாற்று வழிகளைப் பயன்படுத்துமாறு கோரப்பட்டுள்ளது.
இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல்
மேலும், இப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதைத் தவிர்ப்பதற்குத் தேவையான அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட
அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
- ஈராக்கிற்கு ஈரான் கடும் எச்சரிக்கை

- காசாவில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை இஸ்ரேல் 3000க்கும் மேற்பட்ட முறை மீறியுள்ளது

- இஸ்ரேல் முழுவதும் அமெரிக்கா போர் விமானங்கள் தயார் நிலையில்

- ஈரானை சிக்க வைக்க டிரம்ப் சதுரங்க ஆட்டம்

- ஒரு லட்சம் ரூபாவுக்கு விற்க பட்ட சிசு

- பாதுகாப்புச் செயலாளர் ரஷ்ய பிரதி பாதுகாப்பு அமைச்சரைச் சந்தித்தார்

- வாகனப் பதிவுத் தகடுகள் மீது சட்ட நடவடிக்கை இல்லை

- மத்திய வங்கி இந்த ஆண்டு 6 பில்லியன் ரூபாய் மதிப்பிலான பணத்தை அச்சிட்டுள்ளது

- மாணவியைக் காப்பாற்ற முயன்றபோது ஆசிரியர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்

- நவம்பர் வரை சீரான எரிபொருள் விநியோகம்

- போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஈரானுக்கு பணம் கொடுத்த கட்டார்

- ஈரான் பேச்சுவார்த்தைகளில் அமெரிக்காவின் அழுத்தத்திற்குப் பணியாது

மின்சாரம் தாக்கி யாழில் ஒருவர் பலி
மின்சாரம் தாக்கி யாழில் ஒருவர் பலி
மின்சாரம் தாக்கியதில் யாழில் குடும்பஸ்தர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம், சுன்னாகம் பகுதியில் பயிற்றங் கொடி நடுவதற்காக தடியை வெட்டிய குடும்பஸ்தர் ஒருவர் மின்சாரம் தாக்கி வெள்ளிக்கிழமை (23) உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்தவர் மின்சார நிலைய வீதி, சுன்னாகம் தெற்கைச் சேர்ந்த 48 வயதுடைய மூன்று பெண் பிள்ளைகளின் தந்தையாவார்.
குடுப்பஸ்தர் நேற்று பிற்பகல் பழைய பொலிஸ் நிலைய வீதி சுன்னாகம் தெற்கு பகுதியில் உள்ள வீட்டு வேலியில் பயிற்றங் கொடி நடுவதற்காக தடியை வெட்டியுள்ளார்.
இதன்போது நீண்டு வளர்ந்திருந்த தடி மின்சார கம்பி மீது தொடுகை ஏற்பட்டு அவர் மீது மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். வீதியால் சென்றவர்கள் மூலமே இந்த விடயம் வீட்டாருக்கு தெரிய வந்துள்ளது.
சடலம் தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு யாழ். மாவட்ட திடீர் மரண விசாரணை அதிகாரி விசாரணைகளை மேற்கொண்டு சம்பவ இடத்தையும் பார்வையிட்டார்.
சாட்சிகளை சுன்னாகம் பொலிஸார் நெறிப்படுத்தினர். பிரேத பரிசோதனையில் கடுமையாக மின்சாரம் தாக்கி உயிரிழப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அப் பகுதியில் மின்சார கம்பிகள் காணப்படுகின்ற போதிலும் நீண்டு வளர்ந்திருந்திருக்கும் மரங்களை
மின்சார சபையினர் வெட்டாமையினாலேயே இவ்வாறான சம்பவங்கள் ஏற்படுவதாக பிரதேச பொதுமக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபையில் வெற்றிபெற்றோர் தத்தம் பிரதேசங்களை அன்றாடம் கண்காணித்து, இவ்வாறு வளர்ந்திருக்கும் மரங்கள், தேங்கியிருக்கும் ஆறுகள்,
பழுதடைந்திருக்கும் கிணறுகள், உடைந்திருக்கும் பாலங்கள், வீதிகள் என்பவற்றை கருத்திற்கொண்டு அதற்கான தீர்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டால் இவ்வாறான அசம்பாவிதங்களை தடுத்திருக்க கூடும் என மக்கள் தெரிவிக்கின்றனர்.
சுன்னாகம் விபத்தில் வாலிபர் பலி
சுன்னாகம் விபத்தில் வாலிபர் பலி
சுன்னாகம் விபத்தில் வாலிபர் பலி ,யாழ்ப்பாணம் – சுன்னாகம் பகுதியில் இன்று (29) இடம்பெற்ற விபத்தில் இளைஞர் உயிரிழந்ததுடன் ஒருவர் காயமடைந்தார்.
ஏழாலை தெற்கு மயிலங்காட்டைச் சேர்ந்த 19 வயதான சிவராசா பிரவீன் என்பவரே உயிரிழந்தார்.
சுன்னாகம், கந்தரோடை பகுதியில் இரண்டு மோட்டார் சைக்கிள் மோதி விபத்து ஏற்பட்டது.
சம்பவம் தொடர்பாக சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்











