வவுனியா சிறைச்சாலையில் புத்தாண்டை முன்னிட்டு 10 சிறைக் கைதிகள் விடுதலை
Posted in இலங்கை செய்திகள்

வவுனியா சிறைச்சாலையில் புத்தாண்டை முன்னிட்டு 10 சிறைக் கைதிகள் விடுதலை

வவுனியா சிறைச்சாலையில் புத்தாண்டை முன்னிட்டு 10 சிறைக் கைதிகள் விடுதலை

வவுனியா சிறைச்சாலையில் இன்றையதினம் (13) 10 கைதிகள் பொது மன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் அடிப்படையில் வவுனியா சிறைச்சாலையில் 10 சிறைக் கைதிகள் இன்று (13) காலை விடுதலை செய்யப்பட்டனர்.

சிறு குற்றங்களுக்காக குறுகிய கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் செலுத்த வேண்டிய அபராதங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதுடன் , சிறு குற்றங்களுக்காக கைதாகி தண்டனையின் பாதியை நிறைவு செய்த கைதிகளுமே இவ்வாறு பொது மன்னிப்பு வழங்கி விடுவிக்கப்பட்டுள்ளனர்.

கைதிகளை விடுவிக்கும் நிகழ்வில் வவுனியா சிறைச்சாலை அத்தியட்சகர் அபயரத்தன, பிரதான சிறைச்சாலை பிரதானி புத்திக்க உட்பட சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் என்பவர்கள் பங்கு பற்றியிருந்தனர்.

வெடுக்குநாறி மலையில் கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை
Posted in இலங்கை செய்திகள்

வெடுக்குநாறி மலையில் கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை

வெடுக்குநாறி மலையில் கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை

வவுனியா வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆலயத்தில் சிவாரத்திரி பூஜை வழிபாட்டில் ஈடுபட்டிருந்த போது கைது செய்யப்பட்ட ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேரும் வவுனியா நீதிமன்றத்தால் விடுதலை நேற்று (19) செய்யப்பட்டுள்ளதுடன், வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 8 ஆம் திகதி சிவராத்திரி பூஜை வழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது வெடுக்குநாறி மலை ஆதி சிவன் ஆவயத்தில் வைத்து ஆலய பூசகர் உள்ளிட்ட 8 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு 9 ஆம் திகதி வவுனியா நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட நிலையில் 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

கடந்த 12 ஆம் திகதி வழக்கு விசாரணை மீள எடுக்கப்பட்ட போது, நேற்று (19) வரை பொலிஸாரின் கோரிக்கைகு அமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். நேற்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது பொலிஸார் அவர்கள் மீதான குற்றச்சாட்டை நிரூபிக்க தவறிய காரணத்தால் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு 8 பேரும் விடுவிக்கப்பட்டனர்.

இது தொடர்பில் சட்டத்தரணி என்.சிறிகாந்தா கருத்து தெரிவிக்கையில்,

கடந்த சிவராத்திரி தினத்தன்று வெடுக்குநாறிமலை ஆதி சிவலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி வழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது பொலிசாரால் கைது செய்யப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில் பொலிஸ் தரப்பில் தொல்பொருள்கள் கட்டளைச் சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில் வவுனியா நீதிமன்றம் அனைவரையும் கடந்த 12 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கின்ற உத்தரவை வழங்கியிருந்தது.

பொலிசாரையும் விசாரணையை துரிதப்படுத்தி பூரணமான அறிக்கை ஒன்றை தாக்கல் செய்யுமாறு தெரிவித்திருந்தது. கடந்த 12 ஆம் திகதி இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது சந்தேக நபர் சார்பில் ஆஜராகிய சட்டத்தரணிகள் பொலிஸ் தரப்பில் சொல்லப்பட்ட பல்வேறு விடயங்களையும் ஆட்சேபித்து, எந்தவொரு இடத்திலும் சட்டம் மீறப்படுவில்லை என்ற நிலைப்பாட்டை வலியுறுத்தி, தொல்பொருட்கள்கட்டளைச்சட்டம் பொலிஸ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களை அவதானிக்கின்ற போது இதற்கு பொருந்தாது என்று சுட்டிக் காட்டப்பட்டு அவர்களுக்கு பிணை வழங்குமாறு வாதிட்டோம்.

வெடுக்குநாறி மலையில் கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை

ஆயினும், பொலிஸ் தரப்பில் குறித்த கட்டளைச் சட்டத்தின் பிரிவு 15 உப பிரிவு சீயினை சுட்டிக்காட்டி அவர்கள் விளக்கமறியலில் வைக்கப்பட வேண்டும் என மீண்டும் கோரப்பட்டது. அந்நிலையில் அறிவு சார் நீதவான் அவர்கள் இந்த விசாரணை முடிவுறுத்தப்பட்டு பொலிஸ் தரப்பில் இறுதி அறிக்கை வடிவில் பிராத்து எனப்படும் குற்றப்பத்திரம் தாக்கல் செய்வதற்கு பொலிசார் கோரியவாறு ஏற்றுக் கொண்ட ஒருவார கால அவகாசத்தை வழங்கியிருந்தார்.

நேற்று வரை சந்தேக நபர்கள் அனைவரையும் விளக்கமறியலில் வைக்கும் உத்தரவை வழங்கியிருந்தார். மீண்டும் நேற்று வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது, சட்டமா அதிபருடைய ஆலோசனையையும், அறுவுறுத்தல்களையும் பெறுவதற்காக வழக்கின் விசாரணை கோவையையும், தங்கள் வசம் இருக்கும் அனைத்து கோவைகளையும் சட்டமா அதிபரின் பரிசீலனைக்காக தாங்கள் அனுப்ப வேண்டி இருப்பதால் நேற்று குற்றப்பத்திரத்தை தாக்கல் செய்ய முடியவில்லை எனவும் மன்றில் தெரியப்படுத்தினர்.

இந்த அடிப்படையில் சந்தேக நபர்கள் அனைவரையும் விளக்கமறியலில் வைப்பதற்கான விண்ணப்பதை முன்வைத்தனர். நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து சந்தேகநபர்கள் அனைவரும் இந்த நாட்டின் பிரஜைகள். நீதிமன்ற கட்டளை ஊடாக விளக்கமறியலில் வைப்பதனால் அவர்களின் சுதந்திரம் கட்டுப்படுத்தப்படுகிறது. அது சட்டத்திற்கு அமைவாகவே இருக்க வேண்டும் என தெரிவித்தோம்.

பொலிஸ் தரப்பின் விண்ணப்பம், குற்றத்ப்பத்திரத்தை தாக்கல் செய்ய தாங்கள் ஒத்துக் கொண்ட நேற்று தாக்கல் செய்யாமல் சட்டா அதிபரின் அறிவுரையை இப்போது நாடியிருப்பது இந்த வழக்கின் சட்ட அடிப்படை தொடர்பிலே அவர்கள் திட்டவட்டமான தெளிவான நிலைப்பாட்டில் இல்லை என்பதை முன்வைத்தோம். இருட்டு அறை ஒன்றில் கறுப்பு பூனையை தேடுவது போன்று தான் சந்தேக நபர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை வடிவமைக்கும் விதமாக செயற்படுகிறார்கள் என்பதையும் நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு வந்தோம்.

எங்கள் தரப்பில் செய்யப்பட்ட பல்வேறு சமர்ப்பணங்கள் தொடர்பாக பரிசீலித்த நீதிமன்றம், குற்றப்பத்திரம் தாக்கல் செய்யாது சட்டமா அதிபரிடம் தற்போது ஆலோசனை பெறுவது தொடர்பில் பல கேள்விகளை பொலிசாரிடம் கேட்டிருந்தது. இறுதியில் விபரமான தீர்ப்பிளை வழங்கியிருக்கின்றது. சந்தேகநபர்கள் பிணை மறுக்கப்படும் தொல்பொருள் கட்டளைச் சட்டம் 15 சீயின் கீழ் பொலிசார் தாக்கல் செய்துள்ளார்கள் என்பதை சுட்டிக்காட்டிய மன்று, பிரஜைகள் சுதந்திரத்தை கட்டுப்படுத்த முடியாது. இது சட்டத்திற்கோ, நீதிக்குகோ ஏற்புடையது அல்ல. குற்றச்சாட்டு நிருப்பிக்கப்படும் வரை அனைவரும் நிரபராதிகளே. அதனடிப்படையில் நாங்கள் கோரியவாறு உகந்த கட்டளை ஒன்றை வழங்குமாறு முன்வைத்த கருத்தினை எடுத்து இந்த வழக்கில் இருந்து அனைத்து சந்தேக நபர்களையும் விடுதலை செய்து வழக்கினையும் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது.

குறித்த வழக்கில் சட்டத்தரணிகளான என்.சிறிகாந்தா, அன்ரன் புனிதநாயகம், க.சுகாஸ், தி.திருஅருள், அ.திலீப்குமார், நிவிதா, கிசான், தர்சா, நிதர்சன், கொன்சியஸ், சாருகேசி உள்ளிட்ட பலர் ஆஜராகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

கிறிஸ்மஸ் பண்டிகை விசேட பாதுகாப்பு கைதிகள் விடுதலை
Posted in இலங்கை செய்திகள்

கிறிஸ்மஸ் பண்டிகை விசேட பாதுகாப்பு கைதிகள் விடுதலை

கிறிஸ்மஸ் பண்டிகை விசேட பாதுகாப்பு கைதிகள் விடுதலை

கிறிஸ்மஸ் பண்டிகை கொண்டாடப்படும் இன்று (25) நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு போதுமானதாக இல்லாவிட்டால் 011 247 27 57 என்ற விசேட இலக்கத்தின் ஊடாக பொலிஸ் தலைமையகத்திற்கு அறிவிக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றை நடத்திய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ இதனைத் தெரிவித்தார்.

கிறிஸ்மஸ் பண்டிகை விசேட பாதுகாப்பு கைதிகள் விடுதலை

அதுமட்டுமின்றி, மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்களை கைது செய்வதற்கான விசேட நடவடிக்கைகள் இன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு விசேட அரச மன்னிப்பின் கீழ் 1,004 சிறைக்கைதிகள் இன்று விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் காமினி திஸாநாயக்க தெரிவித்தார்.

மேலும் முன்னதாக அறிவிக்கப்பட்டபடி சிறப்பு ரயில்கள் மற்றும் பேருந்து பயணத் திட்டங்கள் இன்று இயக்கத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நீண்ட தூர சேவைகளுக்காக சுமார் 100 மேலதிக பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளதுடன், இன்றும் தேவைக்கு ஏற்ப பஸ்களை சேவையில்

ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்ண ஹன்சா தெரிவித்தார்.

வீடியோ

இரு நாளில் 78 பலஸ்தீனர் 42 இஸ்ரேலியர் விடுதலை
Posted in உலக செய்திகள்

இரு நாளில் 78 பலஸ்தீனர் 42 இஸ்ரேலியர் விடுதலை

இரு நாளில் 78 பலஸ்தீனர் 42 இஸ்ரேலியர் விடுதலை

இஸ்ரேல் காஸாவுக்கு இடையில் இடம் பெற்று வரும் நான்கு நாள் யுத்த நிறுத்த நடவடிக்கையின் பொழுது கடந்த இரு நாளில் 42 இஸ்ரேலியர்கள் 78 பாலஸ்தீனியர்கள் விடுதலை செய்ய பட்டுள்ளனர் .


மேலும் வரும் நாட்களில் விடுதலை செய்திட தயாராகி வருகின்றனர் .

இவ்வாறு விடுதலை செய்ய பட்டவர்களில் 13 இராணுவத்தினரும் உள்ளடங்கும் என தெரிவிக்க படுகிறது

இந்த யுத்த நிறுத்தம் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என மக்கள் வேண்டுதல் விடுத்தது வருகின்றனர்.


ஆனால் நெதன்யாகு பொருள் தீவிர கவனம் செலுத்தி வருவதால் சந்தேகம் நிலவுகிறது

video

இஸ்ரேல் இராணுவம் விடுதலை |இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் இராணுவம் விடுதலை |இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war

இஸ்ரேல் இராணுவம் விடுதலை |இஸ்ரேல் போர் |isreal Gaza war|palestine isreal war

இஸ்ரேல் இராணுவம் ஹமாஸ் அமைப்பினரால் விடுதலை .யுத்த களத்தில் இடம்பெற்ற சற்றும் எதிர்பாராத திருப்பம்.

video

விடுதலைப் புலிகளின் உபகரணங்களை தேடும் நடவடிக்கை
Posted in இலங்கை செய்திகள்

விடுதலைப் புலிகளின் உபகரணங்களை தேடும் நடவடிக்கை

விடுதலைப் புலிகளின் உபகரணங்களை தேடும் நடவடிக்கை

போரின் இறுதி நாட்களில் முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் உள்ள கடற்கரை பகுதி ஒன்றில் விடுதலைப் புலிகளால் புதைத்து வைத்ததாக நம்பப்படும் இடம் ஒன்றினை நீதிமன்ற உத்தரவுக்கு அமைய தோண்டும் நடவடிக்கை இன்று (23) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு கடந்த 19 ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில் தொடரப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு பொலிஸின் விசேட புலனாய்வாளர்களுக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய குறித்த பகுதியில் விடுதலைப்புலிகள் ஆயுதங்கள் மற்றும் பெறுமதியான பொருட்களை புதைத்து வைத்துள்ளதாக நம்பப்படும் இடத்தில்

விடுதலைப் புலிகளின் உபகரணங்களை தேடும் நடவடிக்கை

தோண்டுவதற்கு நீதிமன்றத்தில் கடந்த 19 ஆம் திகதி வழக்கு தொடரப்பட்டு நீதிபதியின் அனுமதியுடன் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்ற நீதிபதி தர்மலிங்கம் பிரதீபன் முன்னிலையில் பொலிஸார், விஷேட அதிரடி

படையினர், இராணுவத்தினர், கிராம சேவையாளர், தொல்லியல் திணைக்களத்தினர், சுகாதார பிரிவினர், தடயவியல் பொலிஸார் ஆகியோரின் பிரசன்னத்துடன் இன்று (23) காலை 9 மணிக்கு குறித்த அகழ்வு பணி இடம்பெற்று வருகின்றது.

கனரக இயந்திரம் கொண்டு தோண்டப்பட்ட போது நிலத்திலிருந்து நீர் வருவதை அவதானிக்க முடிந்துள்ளது இருந்தும் தொடர்ச்சியாக குறித்த

இடத்தினை அகழ்வு பணி செய்யும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது

மேலும் மற்றுமொரு கனரக இயந்திரம் கொண்டு தோண்டும் நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.

குறித்த பகுதிக்கு அண்மையில் கடந்த பங்குனி மாதமளவில் அகழ்வு பணி முன்னெடுக்கப்பட்ட நிலையில்
எதுவும் மீட்கப்படாத நிலையில் மூடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

நீதிமன்ற அவமதிப்பு-ஓய்வு பெற்ற மேஜருக்கு 4 ஆண்டுகள் சிறை
Posted in இலங்கை செய்திகள்

LTTE உறுப்பினர்கள் மூவர் விடுதலை

LTTE உறுப்பினர்கள் மூவர் விடுதலை

2006ஆம் ஆண்டு இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் பயணித்த வாகனத் தொடரணி மீது மேற்கொள்ளப்பட்ட குண்டுவெடிப்புச் சம்பவம்

தொடர்பில் சந்தேகத்தின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள் மூவரையும் அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுதலை செய்ய கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நீண்ட விசாரணைக்குப் பின்னர் கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மகேன் வீரமன் இந்தத் தீர்ப்பை வழங்கினார்.

தீர்ப்பை அறிவித்த நீதிபதி, பிரதிவாதிகளுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை என்று குறிப்பிட்டார்.

இதன்படி பிரதிவாதிகள் விடுவிக்கப்படுவதாக நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

LTTE உறுப்பினர்கள் மூவர் விடுதலை

இந்த மூன்று பிரதிவாதிகளும் ஏறக்குறைய 15 வருடங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்ததாக சட்டத்தரணிகள் குறிப்பிட்டுள்ளனர்.

கடந்த 2006 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் 14 ஆம் திகதி கொழும்பு கொள்ளுப்பிட்டி பகுதியில், அப்போது இலங்கையில் பணியாற்றிய பாகிஸ்தான் உயர் ஸ்தானிகர் பசீர் அலி முகமட் பயணித்த வாகனத்

தொடரணி மீது குண்டுவீசி, அவரை கொலை செய்ய சதி செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட, ஸ்டார் என அழைக்கப்படும் யோகராஜா நிரோஜன், கரன் என அழைக்கப்படும் சுப்ரமணியம் சுரேந்திர ராஜா, கிரி என அழைக்கப்படும்

கனகரத்தினம் ஆதித்யன் ஆகிய விடுதலை புலிகள் உறுப்பினர்கள் மூவருக்கும் எதிராக 25 குற்றச்சாட்டுகளின் கீழ் சட்டமா அதிபர் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.

புலிகளை உயிர்ப்பிக்க முயன்ற விஜயகலா விடுதலை
Posted in இலங்கை செய்திகள்

புலிகளை உயிர்ப்பிக்க முயன்ற விஜயகலா விடுதலை

புலிகளை உயிர்ப்பிக்க முயன்ற விஜயகலா விடுதலை

பிணையில் விடுவிக்கப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனை சட்டமா அதிபரின் ஆலோசனையின் பேரில் விடுதலை செய்து கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

இந்த முறைப்பாடு கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸ் முன்னிலையில் அழைக்கப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

புலிகளை உயிர்ப்பிக்க முயன்ற விஜயகலா விடுதலை

2018ஆம் ஆண்டு புலிகள் இயக்கத்தை மீள ஸ்தாபிக்க வேண்டும் என தெரிவித்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனுக்கு இதற்கு முன்னர் பிணை வழங்கப்பட்டிருந்தது.

சந்தேகநபருக்கு எதிரான வழக்கை தொடர்வதற்கு போதிய சாட்சியங்கள் இல்லை என சட்டமா அதிபர் அறிவுறுத்தியதாக பொலிஸார் முன்னதாக நீதிமன்றில் அறிவித்திருந்தனர்#

வீடியோ

தனுஷ்க குணதிலக விடுதலை
Posted in இலங்கை செய்திகள்

தனுஷ்க குணதிலக விடுதலை

தனுஷ்க குணதிலக விடுதலை

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலகவை அவுஸ்திரேலிய நீதிமன்றம் அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.

சிட்னியில் உள்ள டவுனிங் சென்டர் மாவட்ட நீதிமன்ற நீதிபதி சாரா ஹகெட் இந்த தீர்ப்பினை வழங்கியிருந்தார்.

தனுஷ்க குணதிலக, டிண்டர் என்ற சமூக ஊடக செயலி மூலம் தான் சந்தித்த பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

கடந்த 21ஆம் திகதி சிட்னியில் உள்ள நியூ சவுத் வேல்ஸ் மாவட்ட நீதிமன்றத்தில் தனுஷ்கவின் வழக்கு விசாரணை முடிவடைந்த நிலையில், இன்று (28) அதன் தீர்ப்பை அறிவித்த நீதிமன்றம் தனுஷ்க குணதிலக்கவை அனைத்து குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளது.

அமெரிக்கா சிறையில் அடைத்து வைக்க பட்ட 5 ஈரானியர்கள் விடுதலை
Posted in உலக செய்திகள்

அமெரிக்கா சிறையில் அடைத்து வைக்க பட்ட 5 ஈரானியர்கள் விடுதலை

அமெரிக்கா சிறையில் அடைத்து வைக்க பட்ட 5 ஈரானியர்கள் விடுதலை

அமெரிக்கா இராணுவத்தால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்து வைக்க பட்டிருந்த ,
ஐந்து ஈரான் நாட்டவர்களை அமெரிக்கா விடுதலை செய்துள்ளது .

இவ்வாறு விடுதலை செய்ய பட்டவர் ஐவரும் ,
மிக முக்கியமானவர்கள் என தெரிவிக்க படுகிறது .

அதே போல ஈரான் சிறையில் அடைக்க பட்டிருந்த மிக,
முக்கிய ஐந்து அமெரிக்கர்களும் விடுதலை செய்ய பட்டுள்ளனர் .

அமெரிக்கா சிறையில் அடைத்து வைக்க பட்ட 5 ஈரானியர்கள் விடுதலை

அமெரிக்கா ஈரானுக்கு இடையில் இஒடம்பெற்ற இராயங்க பேச்சுக்களை அடுத்து ,
இந்த கைதிகள் பரிமாற்றம் இடம்பெற்றுள்ளது .

இவர்கள் அமெரிக்காவில் இருந்து டோகா வந்தகடிந்து அங்கிருந்து ஈரானுக்கு சென்றடைந்துள்ளனர்
என ஈரான் தகவல்கள் தெரிவித்துள்ளனர் .
விடுதலையானவர்கள் தமது குடும்ப உறுப்பினர்களுடன் இயல்பு
வாழ்வில் ஈடுபடுவார்கள் என தெரிவிக்க படுகிறது .,

நீதிமன்ற அவமதிப்பு-ஓய்வு பெற்ற மேஜருக்கு 4 ஆண்டுகள் சிறை
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை அகதிகளை அவுஸ்திரேலியா அனுப்ப முயன்ற வழக்கு: 7 பேர் விடுதலை

இலங்கை அகதிகளை அவுஸ்திரேலியா அனுப்ப முயன்ற வழக்கு: 7 பேர் விடுதலை

2010-ம் ஆண்டு இலங்கை அகதிகள் 15 பேரை புதுவை தேங்காய்த்திட்டு துறைமுகத்திலிருந்து அவுஸ்திரேலியாவுக்கு மீன்பிடி படகு மூலம் அனுப்ப சிலர் முயன்றனர். இதுகுறித்து சி.பி.சி.ஐ.டி. பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

வீராம்பட்டினத்தை சேர்ந்த திராவிடர் விடுதலைக்கழக தலைவர் லோகு.ஐயப்பன், தி.மு.க.வை சேர்ந்த சக்திவேல், காரைக்கால் மாவட்ட பா.ம.க.

செயலாளர் தேவமணி உட்பட 11 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் 3 பேர் தலைமறைவாகினர். 8 பேர் சிறையில் அடைக்கப்பட்டு பிணையில் வெளிவந்தனர்.

இதற்கிடையே சக்திவேல், லோகுஐயப்பன், தேவமணி ஆகியோர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது.

இலங்கை அகதிகளை அவுஸ்திரேலியா அனுப்ப முயன்ற வழக்கு: 7 பேர் விடுதலை

இதிலிருந்து விடுவிக்கக்கோரி மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அவர்கள் கடிதம் எழுதினர். இதன்பின் 3 பேரும் அந்த சட்டத்திலிருந்து விடுவிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் அஸ்திரேலியாவுக்கு ஆட்கடத்தல் வழக்கு புதுவை தலைமை குற்றவியல் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மோகன், ஆட்கடத்தல் வழக்கு நிரூபிக்கப்படாததால், அனைவரும் விடுதலை செய்யப்படுவதாக அறிவித்தார்.

வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட தேவமணி 2021-ல் வெட்டி படுகொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு சிறையில் இருந்து 14 பேர் விடுதலை
Posted in இலங்கை செய்திகள்

மட்டக்களப்பு சிறையில் இருந்து 14 பேர் விடுதலை

மட்டக்களப்பு சிறையில் இருந்து 14 பேர் விடுதலை

மட்டக்களப்பு சிறைச்சாலையில் வெசாக் பௌர்ணமி தினத்தையிட்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவின் பொது மன்னிப்பின் அடிப்படையில் 14 ஆண் கைதிகள் நேற்று (05) விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

நாடளாவிய ரீதியில் உள்ள சிறைச்சாலைகளில் பௌர்ணமி தினத்தில் வருடாவருடம் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுவரும் நிலையில், இந்த வருடம் நாடளாவிய ரீதியில் 988 கைதிகளை விடுதலை செய்யும் சிறைச்சாலைகள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கமைய மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் நல்லையா பிரபாகரன் தலைமையில் இடம்பெற்ற கைதிகளை விடுதலை செய்யும் நிகழ்வில் பிரதம ஜெயிலர் உள்ளிட்ட சிறைச்சாலையின் உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டு சிறு குற்றம் புரிந்த தண்டணைப் பணம் செலுத்தாத கைதிகள் 14 பேரை பொதுமன்னிப்பில் விடுதலை செய்துள்ளனர்

Error: View 9293b2au4w may not exist
வெற்றிமாறனின் விடுதலை படத்தை பார்க்க விடாமல் தடுத்த காவலர்கள்
Posted in இந்தியா செய்திகள் உலக செய்திகள்

விடுதலை படத்தை பார்க்க விடாமல் தடுத்த காவலர்கள்வீடியோ

விடுதலை படத்தை பார்க்க விடாமல் தடுத்த காவலர்கள்வீடியோ

வெற்றி மாறன் விடுதலை படத்தை திரை அரங்கில் பார்க்க விடாது தடுத்த காவல்துறை அதிகாரியை திரை அரங்கில் வைத்து தமிழிச்சி ஒருவர் வெளுத்து வங்கியுளளார் .

தமிழ் அரசியலை காவல்துறை அட்டூழியங்களை பேசும் படமாக விடுதலை திரைப்படம் உள்ளது .

அதில் நிர்வாண காட்சிகள் காண படுகின்றன ,அதனால் இந்த விடுதலை திரைப்படத்தை, திரையில் பார்க்க அனுமதிக்க முடியாது என தெரிவித்து காவல்துறையினர் கலகத்தில் ஈடுபட்டனர் .

விடுதலை படத்தை பார்க்க விடாமல் தடுத்த காவலர்கள்

காவல்துறையின் இந்த அட்டூழிய செயலானது, விடுதலை திரை படத்தை பார்க்க வந்த திரை அரங்கில், மக்கள் கொதித்து பேசும் காட்சிகள் , சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன ..

இந்த மக்கள் பேச்சுக்கள் வைரலாகிய வண்ணம் உள்ளதால் ,விடுதலை திரைப்படம் தொடர்பிலான எதிர் பார்ப்பும் மக்கள் ஆதரவும் அதிகரித்து காணப்படுகிறது .

https://www.youtube.com/watch?v=AUoECAnyQTg
பெண்ணை கற்பழித்த பொலிஸ் - கற்பழித்த பொலிசாருக்கு 10 ஆண்டு சிறை
Posted in இலங்கை செய்திகள்

நத்தார் பாண்டியை முன்னிட்டு 300 கைதிகள் விடுதலை

நத்தார் பாண்டியை முன்னிட்டு 300 கைதிகள் விடுதலை

இலங்கையில் இடம்பெறவுள்ள நத்தார் பண்டிகையை முன்னிட்டு ,ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் 300 கைதிகள் விடுதலை செய்ய பட்டுள்ளனர் .

நீண்டகாலமாக சிறைகளில் அடைக்க பட்டிருந்த கைதிகள் நன்னடத்தை அடிப்படையில் இவ்வாறு விடுவிக்க படுகின்றனர் .

No posts found.
Posted in இலங்கை செய்திகள்

கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்க சஜித் சொல்லிட்டாரு விடுதலை சாத்தியமா

கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்க சஜித் சொல்லிட்டாரு விடுதலை சாத்தியமா

இலங்கையில் ஆளும் அரசுகளுக்கு எதிராக போராட்டத்த்தில் ஈடுபட்ட மக்கள் கைது செய்யப்பட்ட வண்ணம் உள்ளனர் .

இவ்வாறு காரணமின்றி கைது செய்யப்பட்டவர்களை ,உடனடியாக விடுதலை செய்திடும் படி ,எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா வேண்டுதல் விடுத்துள்ளார் .

சஜித் பிரேமதசா கோரிக்கையை அடுத்து ,கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்ய ,போடுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது

மக்கள் போராட்டங்களை அடக்கிட ,மக்களை மிரட்டும் கைதுகள் தொடர்ச்சியாக இடம்பெற்ற வண்ணம் உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது .

    Posted in இலங்கை செய்திகள்

    வீரவன்ச மனைவி பிணையில் விடுதலை

    வீரவன்ச மனைவி பிணையில் விடுதலை

    முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் மனைவி சஷி வீரவங்ச கொழும்பு நீதவான் நீதிமன்றினால் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

    சட்டவிரோத இராஜதந்திர கடவுச்சீட்டை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் சசி வீரவன்சவுக்கு அண்மையில் இரண்டு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

    கொழும்பு பிரதான நீதவான் நந்தன அமரசிங்கவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

      Posted in இலங்கை செய்திகள்

      தமிழ் கைதிகள் சிறைகளில் இல்லை – நீதி அமைச்சர்

      தமிழ் கைதிகள் இலங்கை சிறைகளில் இறுதி போரின் பொழுதுகைது செய்ய பட்ட யாரும் சிறைகளில் தற்போது இல்லை எனஆளும் நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்

      சிறைகளில் விசாரணைகள் ஏதும் இன்றி தடுத்து வைக்க பட்டுள்ள அப்பாவி

      தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பினர்

      தெரிவித்து இருந்த நிலையில் ஆளும் கோட்டபாயா ராஜபக்சே வின் நீதி அமைச்சர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்

      செக்ஸ் படம் எடுத்த பிக்பாஸ் பிரபலம் கைது

      இவரது பொறுப்பற்ற கருத்தால் இலங்கை தமிழர் அரசியல், தலைமைகள் கொதித்து

      போயுள்ளன ,இந்த விடயம் ஐநா மனித உரிமை மன்றில் பெரும் நெருக்கடியை இலங்கைக்கு ஏற்படுத்தும் என ஏதிர் பார்க்க படுகிறது

      Posted in இலங்கை செய்திகள்

      இலங்கையில் கொரனோ நோயால் 104 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்

      இலங்கையில் கொரனோ நோயால் 104 பேர் குணமடைந்து வீடு திரும்பினார்

      இலங்கையில் கொரனோ நோயின் தொற்றுக்கு இலக்காகி சிகிச்சை

      பெற்று வந்தவர்களில் 104 பேர் அந்த நோயில் இருந்து முற்றாக விடுபட்டு

      அவர் தம் குடும்ப உறவுகளுடன் மீள இணைந்துள்ளதாக இலங்கை சுகாதர அமைச்சு அறிவித்துள்ளது

      உலகில் தலை சிறந்த சேவையை தமது மருத்துவம் செய்து வருவதாக

      இவர்கள் புகழாரம் சூடியுள்ளனர் .இவை தேர்தலை இலக்கு வைத்து இவ்விதமான

      பரப்புரைகள் மெல்ல கசிய விட படுகிறது என்பதே யதார்த்த நிலையாக உள்ளது

      இலங்கையில் கொரனோ
      இலங்கையில் கொரனோ
      Posted in இலங்கை செய்திகள்

      1,262 பேர் தொடர்ந்து தனிமை படுத்தல் இராணுவம் அறிவிப்பு

      1,262 பேர் தொடர்ந்து தனிமை படுத்தல் இராணுவம் அறிவிப்பு

      இலங்கையில் வைரஸ் நோயினால் பாதிக்க பட்டவர்கள் என சந்தேகிக்க

      படும் நபர்கள் கைது செய்ய பட்டு தனிமை படுத்தி வைக்க பட்டுள்ளனர் .

      இந்த நோயின் தாக்குதல் பாதிப்பு இல்லாதவர்களை தாம் விடுதலை புரிந்து வருவதாக இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்

      1,262 பேர் தொடர்ந்து தனிமை
      1,262 பேர் தொடர்ந்து தனிமை
      Posted in இலங்கை செய்திகள்

      இலங்கையில் தனிமை படுத்த பட்ட 312 பேர் விடுதலை

      இலங்கையில் தனிமை படுத்த பட்ட 312 பேர் விடுதலை

      வெளி நாடுகளில் இருந்து இலங்கை வந்தடைந்த மக்கள் 14 நாட்கள் தனிமை படுத்த பட்டு கொரனோ சோதனைக்கு உள்ளாக்க பட்டனர் .

      இவ்விதம் உள்ளாக்க பட்டவர்கள் தற்பொழுது விடு விக்க க பட்டு அவர் தம் குடும்பத்துடன் இணைந்திட அனுப்பி வைக்க பட்டுள்ளனர்

      இவ்வாறு 312 பேர் விடுதலை செய்ய பட்டுள்ளதாக இலங்கை சுகாதார அமைச்சும் ,இராணுவமும் தெரிவித்துள்ளது

      இலங்கையில் தனிமை படுத்த
      இலங்கையில் தனிமை படுத்த