Tag: சஜித்
ஒரே அரசியல் கட்சி நாங்கள்தான் சஜித்
ஒரே அரசியல் கட்சி நாங்கள்தான் சஜித்
ஒரே அரசியல் கட்சி நாங்கள்தான் சஜித் ஜனரஞ்சக அரசியல் பாதையை உருவாக்குவதே தமது கட்சியின் நோக்கம் என சர்வஜன அதிகாரத்தின் கம்பஹா மாவட்ட வேட்பாளர் திலித் ஜயவீர தெரிவித்துள்ளார்.
நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு சர்சஜன அதிகாரம் புதிய பார்வையை கொண்டுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கம்பஹாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்ட போதே திலித் ஜயவீர இதனைத் தெரிவித்தார்.
“இலங்கையில் மீண்டும் ஒரு நல்லதொரு அரசியலை உருவாக்குவதற்கான அரசியல் இயந்திரம் சர்வஜன அதிகாரமே. ஒரு நல்ல அரசியல் கட்சி, உங்களை நேசிக்கும் பாசமுள்ள அரசியல் கட்சியாக இதை உருவாக்குவோம்.
இந்த அதிகாரத்தின் ஊடாக முன்பு போல பிறருக்காக அரசியல் மேற்கொள்ளும் மனிதர்களுக்கான அரசியலையே நாம் உருவாக்க நினைக்கிறோம்.
சலுகைகளை அனுபவிக்கவோ அல்லது பிற நன்மைகளைப் பயன்படுத்தவோ அரசியல் செய்யவில்லை.உண்மையான மனிதாபிமான முகமும்
அணுகுமுறையும் கொண்ட அரசியலாக, நமது அரசியல் இயக்கம் மிகக் குறுகிய காலத்தில் முதிர்ச்சியடைந்து இன்று உயிர்ப்புடன் இருக்கும் ஒரே அரசியல் கட்சி.
இன்று அனைத்து மதங்களையும் இனங்களையும் ஒன்றுபட்ட தேசியத்தில் ஒன்றிணைக்கும் பயணத்தை எம்மால் மேற்கொள்ள முடிந்துள்ளது.
ஜனாதிபதியுடன் சஜித் கைகோர்க்க முடியும்
ஜனாதிபதியுடன் சஜித் கைகோர்க்க முடியும்
ஜனாதிபதியுடன் சஜித் கைகோர்க்க முடியும் ,எதிர்வரும் பொதுத் தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொண்டு நாட்டைக் கட்டியெழுப்ப ஜனாதிபதியுடன் கைகோர்க்க முடியும் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.
ருவன்வெல்ல பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
என்னாலும் ஐக்கிய மக்கள் சக்தியாலும் ஜனாதிபதியுடன் இணைந்து செயற்பட முடியும்.
குறுகிய அரசியல் நோக்கங்கள் அல்லாமல், 220 லட்சம் மக்களின் எண்ணங்களையும் விருப்பங்களையும் உறுதிப்படுத்தும் நாடு உருவாக்கப்பட வேண்டும்.
இந்த வேலைத்திட்டத்தில் போட்டி மனப்பான்மையை விட, ஒன்றுபட்டு அதன்மூலம் அபிவிருத்தியை மேற்கொண்டு நாட்டை கட்டியெழுப்ப வேண்டும். இது குறித்து கவனம் செலுத்த வேண்டும். இது காலத்தின் தேவையாகும் என்றார்.
சஜித் தமிழர் பகுதியில் அமோக வெற்றி
சஜித் தமிழர் பகுதியில் அமோக வெற்றி
சஜித் தமிழர் பகுதியில் அமோக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ள விடயம் வெளி வந்து கொண்டிருக்கும் தேர்தல் வாக்கு அறிவிப்புக்கள் காண்பிக்கின்றன .
எதிர் பார்க்க பட்டது போன்று தமிழர்கள் சஜித் பிரேமதசாவுக்கு ஆதரவாக ,வாக்கு அளிப்பார்கள் என்கின்ற விடயம், இதன் ஊடக உறுதி படுத்த பட்டுள்ளது .
இவ்வாறான கால பகுதியில் சஜித் பிரேமதாசா தமிழ் மக்கள் மனங்களினால் நேசிக்க பட கூடிய ஒருவராக காணப்படுவதும் ,அவரது கட்சிக்கு தொடர்ந்து தமது ஆதரவு இருக்கும் என்பதை இந்த தேர்தல் வாக்கு பதிவுகள் எடுத்து காண்பித்துள்ளன .
பொது வேட்பாளராக களமிறங்கிய அரியேந்திரனுக்கு நல்லூர் பகுதியில் மட்டும் ,அதிகமான வாக்குகளை பெற்று சாதனை படைத்துள்ளார் என்பது இங்கே கவனிக்க தக்கது .
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வந்த வெள்ளைக்காரர் செய்த செயல்! 2026 இல் பார்த்திராத காட்சிகள்

- சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்

- நாய்களை எரிக்க சுடலை

- கொழும்புப்பிட்டியில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கைது

- ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் சுற்றுலா வருவாய் சரிவு

- விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கி மூன்று இளைஞர்கள் பலி

- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

- சிங்கள கைக்கூலி,தமிழகத்தை திசைதிருப்பும் தமிழினத் துரோகி, அர்ச்சுனா முகத்திரையை கிழித்த சீமான் தம்பி

- 700மில்லியன் வழங்கும் சர்வதேச நாணய நிதியம்

- பெண்கள் கர்ப்பமாவதை தடுக்க காவல்துறை நடவடிக்கை

சஜித்தும் அநுரவும் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்
சஜித்தும் அநுரவும் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்
சஜித்தும் அநுரவும் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் ,அரசியல் மேடைகளில் நீலிக் கண்ணீர் வடிக்காமல், கடந்த பொருளாதார நெருக்கடியால் மக்கள் வரிசையில் கஷ்டப்பட்ட போது அதனைக்
கண்டுகொள்ளாமல் ஓடியதற்காக சஜித்தும் அநுரவும் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
கேகாலையில் நேற்று (14) பிற்பகல் இடம்பெற்ற ரணிலால் இயலும் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த மக்கள் பேரணியில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.
ஜனாதிபதிக்கு மக்கள் மிகுந்த உற்சாகத்துடன் வரவேற்பளித்தனர். பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவிக்கையில், நாட்டின் பொருளாதார நெருக்கடியைத் தீர்த்து, மக்கள் வாழக்கூடிய நாட்டை தானே உருவாக்கியதாகவும் தெரிவித்தார்.
அத்துடன், மக்களின் எதிர்காலத்தை ஒன்று வழங்குமாறு கோரும் அரசியல்வாதிகளுக்கு வழங்கும் சந்தர்ப்பம் இதுவல்ல என சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, கஷ்டப்பட்டு காப்பாற்றப்பட்ட நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்கு செப்டெம்பர் 21 ஆம் திகதி கேஸ் சிலிண்டருக்கு அனைவரும் வாக்களிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
இந்த பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் கூறியதாவது,
ஜனாதிபதித் தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி வாரத்தில் நாம் இப்போது இருக்கிறோம். இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் 38 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அன்று மக்கள் கஷ்டப்பட்ட போது இவர்களில் யாரும் அதனைக் கண்டுகொள்ளவில்லை.
உணவு, மருந்து, எரிபொருள், எரிவாயு இன்றி மக்கள் படும் துன்பத்தையும், மாணவர்களை பாடசாலை அனுப்ப முடியாமல் தவித்ததையும் அவர்கள் கண்டுகொள்ளவில்லை.
அவர்கள் இன்று மக்கள் முன்னிலையில் வந்து நீலிக் கண்ணீர் வடித்தாலும் அன்று ஒளிந்து கொண்டனர். நாடு கஷ்டத்தில் இருக்கும் போது மக்களை கைவிட்ட சஜித்தும் அநுரவும் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும்.
நாட்டின் பொருளாதாரப் பிரச்சினையைத் தீர்த்து மக்களுக்கு நிவாரணம் அளித்து வாழ்வதற்கான நம்பிக்கையை நான் ஏற்படுத்தினேன். இன்று நாட்டின் பொருளாதாரம் ஸ்தீரமடைந்துள்ளது. மக்களின் வாழ்க்கைச் சுமையை படிப்படியாக குறைத்து வருகிறோம்.
அதற்காக கடந்த தடவை நிவாரணம் உள்ளிட்ட திட்டங்களை செயல்படுத்தினோம். உர நிவாரணம் வழங்கப்பட்டது.
ஓய்வூதியம் மற்றும் முதியோர் உதவித்தொகை அதிகரிக்கப்பட்டது. ஒரு பக்கம் பொருட்களின் விலையைக் குறைக்கும் அதேவேளை, மறுபுறம் பணத்தைக் கொடுத்து மக்களின் வாழ்க்கைச் சுமையை குறைக்கும் பணியை செய்து வருகிறோம்.
அடுத்த ஆண்டுக்குள் மக்களின் வாழ்க்கைச் சுமை குறையும். நான் மேடையில் வாக்குறுதிகளை அள்ளி வீசும் நபரல்ல. பொறுப்பை நிறைவேற்றிய பின்னர் அதனை மக்களுக்கு அறிவிக்கிறேன்.
எதிர்காலத்தைப் பற்றி நாம் சிந்திக்க வேண்டும். உங்கள் எதிர்காலம் தொடர்பில் யாருக்காவது கொடுப்பதா அல்லது நிரந்தர எதிர்காலத்திற்கு செல்வதா என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும்.
எங்களுக்கு ஒரு முறை வாய்ப்பு கொடுங்கள் என்று திசைகாட்டி கோருகிறது. அவர்களின் பட்ஜெட் ஊடாக அனைத்து IMF நிபந்தனைகளும் மீறப்படுகிறது.
நிபந்தனைகளை உடைத்து, IMF ஆதரவை இழந்த பிறகு, நாட்டின் பொருளாதாரம் மீண்டும் சரிவடையும். அதேபோல், பொருளாதாரப் பிரச்சினைகளை எப்படித் தீர்ப்பது என்று நான் கேட்ட கேள்விகளுக்கும் அவர்கள் பதிலளிக்க வேண்டும்.
அவர்களிடம் திட்டம் எதுவும் இல்லாததால் பதில் சொல்லாமல் இருக்கிறார்கள். அவர்கள் பிரச்சினைகளைப் பற்றி பேசுவதில்லை. திட்டுவதை மட்டுமே செய்கின்றனர். ஆனால் மக்களின் கேள்விகளுக்கு என்னால் பதிலளிக்க முடியும்.
எனவே மக்கள் மத்தியில் வெறுப்புணர்வை ஏற்படுத்தாமல் உண்மையைப் பேசுமாறு சஜித்திடமும்அநுரவிடமும் கேட்டுக்கொள்கிறேன்.
முன்னோக்கி செல்லும் பாதையை நாம் காட்டியுள்ளோம். அந்த பாதையில் நாட்டை முன்னோக்கி கொண்டு சென்று நாட்டை வெற்றிபெற செய்ய அனைவரும் செப்டம்பர் 21ஆம் திகதி கேஸ் சிலிண்டருக்கு வாக்களிக்குமாறு
கேட்டுக்கொள்கிறேன்” என்று ஜனாதிபதி தெரிவித்தார்.
என்னை தோற்கடிக்க பாரிய சதித்திட்டம்
என்னை தோற்கடிக்க பாரிய சதித்திட்டம்
என்னை தோற்கடிக்க பாரிய சதித்திட்டம் ,நாட்டை பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளும் குழுக்களுக்கு தாம் ஒருபோதும் ஆதரவளிக்கவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
கிருலப்பனை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
தனது வெற்றியை தடுக்க எதிர்க்கட்சிகள் சதிகளை மேற்கொண்டாலும் பலனில்லை என அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கருத்து தெரிவித்த அவர், “இன்று சஜித் பிரேமதாசவின் வெற்றியை எல்லா முடிச்சுகளையும் போட்டு தடுப்பதுதான் அந்த அரசியல்வாதிகளின் ஒரே இலக்கு.
சாத்தியமான அனைத்து சதிகளும் செய்யப்படுகின்றன.
ஆனால் அவர்கள் இருவரும் ராஜபக்சக்களின் முன்னாள் அமைச்சரவையில் அங்கம் வகித்தவர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
இருவரும் ராஜபக்சேவுடன் அமைச்சரவையில் ஒன்றாக அமர்ந்திருந்தனர்.
நினைவில் கொள்ளுங்கள், நாட்டை வங்குரோத்து செய்த குழுவோடு என்றும் சஜித் பிரேமதாசவும், ஐக்கிய மக்கள் சக்தியும் இணையாது.
எனவே, 21 ஆம் திகதி, உங்கள் மதிப்புமிக்க பங்களிப்பைப் பயன்படுத்தி, நாட்டு மக்களுக்கு ஒரு முற்போக்கான திருப்புமுனைக்கு முன்முயற்சி எடுப்போம்” என்றார்.
சஜித் பிரேமதாசவை வெற்றி பெற வைப்போம்
சஜித் பிரேமதாசவை வெற்றி பெற வைப்போம்
சஜித் பிரேமதாசவை வெற்றி பெற வைப்போம் ,முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீனின் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் மன்னார் மாவட்ட உள்ளூராட்சி மன்ற முன்னாள் உறுப்பினர்கள் மற்றும் வேட்பாளர்கள் இணைந்து நேற்று (10) மதியம் மன்னாரில் ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தனர்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவை ஆதரிப்பதாக தீர்மானிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் குறித்த முடிவை ஆதரித்து தொடர்ச்சியாக பிரசார பணிகளை மேற்கொள்வதற்காக விரைவான செயற்பாடுகளை மேற்கொள்வது தொடர்பில் ஆராய்வதற்கான முன்னாயத்த கூட்டம் மன்னார் தனியார் விருந்தினர் விடுதியில் இடம் பெற்றது.
குறித்த கூட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கட்சியின் முக்கியஸ்தர் பல்வேறு விடயங்களை முன்வைத்திருந்தனர்.
குறிப்பாக சிலர் எமது கட்சியில் இருந்து சில சலுகைகளுக்காக அண்மைய நாட்களாக கட்சி தாவல்களில் ஈடுபடுவதாகவும் தோற்பார் என்று தெரிந்து ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிப்பதாகவும் இது கட்சியையோ அல்லது கட்சியின் வாக்குகளையோ எந்த விதத்திலும் பாதிக்காது என தெரிவித்தனர்.
இலங்கை முழுவதும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி மக்கள் மத்தியில் செல்வாக்குடன் இருப்பதாகவும் தலைமையின் முடிவின் அடிப்படையில் மக்கள் சஜித் பிரேமதாசவுக்கு தங்கள் ஆதரவை தெரிவிப்பார்கள் எனவும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் தெரிவித்திருந்தனர்.
அதே நேரம் முன்பை விட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி சார்பாக சஜித் பிரேமதாசவின் வெற்றிக்காக உழைக்க போவதாகவும், தலைமையின் கரங்களை பலப்படுத்துவதற்கான தீர்மானமும் குறித்த கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவித்திருந்தனர்
உதவி கேட்டார் சஜித் என்னிடம் அர்ச்சுனா
உதவி கேட்டார் சஜித் என்னிடம் அர்ச்சுனா
உதவி கேட்டார் சஜித் என்னிடம் அர்ச்சுனா ,கதறி அழுத அர்ச்சுனா வீடியோ .
எதிரிகளினால் திட்டமிட்ட சூழ்ச்சியில் சிக்கி ,மன உளைச்சலை வழங்கி அதன் ஊடாக மக்கள் மத்தியில் அர்ச்சுனா கீழ் நிலையான அஒருவராக அர்ச்சுனவை சித்தரிக்க வைக்கும் நகர்வில் எதிரிகள் ஈடுபட்டுள்ளனர் .
வலிந்து சீண்டி கோபத்தை ஏற்படுத்தி அதன் ஊடக அரசுன்னாவின் வாயில் வருகின்ற தவறான வார்த்தைங்களை வைத்து ,அவரது நற்பெயருக்குகலங்காத்தை ஏற்படுத்தும் வகையில் ,எதிரிகள் நடந்து கொண்டது இந்த காணொளியில் வெளியாகியுள்ளது .
மக்களே பாருங்கள் நம்ம அர்ச்சுனா அழுகின்றார் ,வார்த்தைகள் இடறி வீழ்கின்றன ,ஏன் அவ்விதம் பேசினார் என்பது இதில் பாருங்கள் .
இப்படி தேர்தல் முடியும் வரை எதிரிகள் செய்ய போகிறார்கள் என்பதற்கான முன் மாதிரி நடவடிக்கையாக இது பார்க்க படுகிறது .
ஆனால் இது போன்ற வலைகளுக்குள் அர்ச்சுனா சிக்க மாட்டார் என நம்புகிறோம் .
தேர்தல் மேடையில் சஜித்துடன் அர்ச்சுனா
தேர்தல் மேடையில் சஜித்துடன் அர்ச்சுனா ,திருகோணமலை தேர்தல் மேடையில் சஜித் பிரேமதாசாவுடன் தேர்தல் மேடையில் ஒன்றாக மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் வீற்றிருக்கும் காட்சிகள் வெளியாகியுள்ளன .
கீழே உள்ள காணொளியில் இவற்றை பார்க்க
சஜித்துக்கு தேர்தலில் அர்ச்சுனா ஆதரவு
சஜித்துக்கு தேர்தலில் அர்ச்சுனா ஆதரவு
சஜித்துக்கு தேர்தலில் அர்ச்சுனா ஆதரவு ,மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசாவுக்கு தனது ஆதரவு வழங்க உள்ளதாக நேற்று அறிவித்துள்ளார் .
ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள இவ்வேளையில் சஜித்துக்கு தனது ஆதரவு இருக்குமென , அர்ச்சுனா இராமநாதன் தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
அடக்குமுறைக்கு உள்ளாக்க பட்டு வரும் சிறுபான்மை தமிழர்களுடைய விடுதலையை வென்றெடுக்க ,நேரிய நிகழ்ச்சி நிரலை அர்ச்சுனா இராமநாதன் முன்னெடுத்துளளார் .
விடுதலை புலிகளை அழித்தொழிக்க இந்தியா இராணுவம் இலங்கை வந்தடைந்த 1987 ஆம் ஆண்டு முதல் மிக பெரும் நெருக்கடி புலிகளுக்கு ஏற்பட்டது .
அவ்வேளை தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடி வந்த அதே விடுதலை புலிகளை சஜித் பிரேமதாசாவின் தந்தையான ரணசிங்க பிரேமதாசா காப்பற்றினார் .
இந்தியா இராணுவத்தை இலங்கையை , விட்டு ஓட ஓட விரட்டியடித்தார் ,அதனை அடுத்து தமிழீழ விடுதலை புலிகளுக்கு இரண்டு லாரிகளில் ஆயுதம் வழங்கினார் .
அத்துடன் பாதிக்க பட்ட தமிழ் சிங்கள மக்களுக்கு வீடுகளை கட்டி கொடுத்தார் ,அத்துடன் பாடசாலை மாணவர்களுக்கு உணவு ,மற்றும் இலவசமாக சீருடைகளை வழங்கினார் .
அதனை கருத்தில் கொண்டு தற்போது சஜித் பிரேமதாசாவுக்கு ஆதரவக மக்கள் நாயகன் ,வீர புதல்வன் அர்ச்சுனா இராமநாதன் தற்போது களத்தில் குதித்துள்ளார் .
அந்த வரலாற்றை சிறப்பு முடிவினை அவரை நேசிக்கும் மக்கள் ஏற்று களமாட தயராகி வருகின்றனர் .
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வந்த வெள்ளைக்காரர் செய்த செயல்! 2026 இல் பார்த்திராத காட்சிகள்

- சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்

- நாய்களை எரிக்க சுடலை

- கொழும்புப்பிட்டியில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கைது

- ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் சுற்றுலா வருவாய் சரிவு

- விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கி மூன்று இளைஞர்கள் பலி

- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

- சிங்கள கைக்கூலி,தமிழகத்தை திசைதிருப்பும் தமிழினத் துரோகி, அர்ச்சுனா முகத்திரையை கிழித்த சீமான் தம்பி

- 700மில்லியன் வழங்கும் சர்வதேச நாணய நிதியம்

- பெண்கள் கர்ப்பமாவதை தடுக்க காவல்துறை நடவடிக்கை

அர்ஜுனா சஜித்க்கு ஆதரவு
அர்ஜுனா சஜித்க்கு ஆதரவு
அர்ஜுனா சஜித்க்கு ஆதரவு ,எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரேமதாசாவுக்கு ஆச்சினார் ராமநாதன் ஆதரவு அளிப்பதாக தெரிவித்திருக்கின்றார்.
ஜனாதிபதி விக்கிரமசிங்க மற்றும் அனுராதா திசநாயக்க ஆகியிருக்கு எதிராக தனது கருத்தை வெளியிட்டவர் சாவுக்கு எதிராக இதனை தெரிவிக்காத நிலையில் மௌனம் காண்பித்துள்ளார்
மக்களுக்கு ஏதாவது நன்மையை செய்வார் என்கின்ற விடயம் அவரது மனதில் உள்ளதினாலேயே அவருக்கு தனது வாக்குகளை அளிப்பதாக மறைமுகமாக தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரம் சிங்காவுக்கு தனது வாக்கு ஒருபோதும் வழங்கப்பட மாட்டாது என வெளிப்படையாக தெரிவித்துள்ளவர் அலுவலர் இனவாதி எனவும் அவர் தமிழ் மக்களுக்கு ஏற்றவர் அல்ல என்பதை சில கூறல் பதவி விடுவதாக காண்பித்து அம்பலப்படுத்தி இருக்கின்றார்.
அதனை அடுத்து தற்பொழுது மிக நல்லவர் என்பது போலவும் அவருக்காக தனது வாக்குகளை அளிக்கும்படி தனது நேசத்திற்குரிய மக்களுக்கு அன்பு கட்டளை இட்டு இருக்கின்றார்.
கடந்த காலங்களில் நாமும் இடைவிடாது இதனை தெரிவித்து வருகின்றோம் புதிய ஒரு அரசியல் புதிய ஒரு மாறுதலையும் புதிய ஒரு புரட்சிய பெருமாள் அவதானிக்க முடியும் என்பது நமது திட்டமான நம்பிக்கையாக இருந்த
நிலையிலேயே இதனை தெரிவித்து வந்திருந்தோம் அதனை தற்பொழுது அர்ச்சினார் ராமநாதன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வந்த வெள்ளைக்காரர் செய்த செயல்! 2026 இல் பார்த்திராத காட்சிகள்

- சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்

- நாய்களை எரிக்க சுடலை

- கொழும்புப்பிட்டியில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கைது

- ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் சுற்றுலா வருவாய் சரிவு

- விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கி மூன்று இளைஞர்கள் பலி

- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

- சிங்கள கைக்கூலி,தமிழகத்தை திசைதிருப்பும் தமிழினத் துரோகி, அர்ச்சுனா முகத்திரையை கிழித்த சீமான் தம்பி

- 700மில்லியன் வழங்கும் சர்வதேச நாணய நிதியம்

- பெண்கள் கர்ப்பமாவதை தடுக்க காவல்துறை நடவடிக்கை

மங்கள சமரவீரா குடும்பம் சஜித்க்கு ஆதரவு
மங்கள சமரவீரா குடும்பம் சஜித்க்கு ஆதரவு
மங்கள சமரவீரா குடும்பம் சஜித்க்கு ஆதரவு ,என்ற மு என்ற முன்னாள் அமைச்சரும் பலியிரவு அமைச்சராகவும் பணிபுரிந்து வந்த மங்கள சமர வீரனின் குடும்பம் தனக்கு ஆதரவு அளித்துள்ளதாக தெரிவித்திருக்கின்றார்.
எமது நாட்டில் மக்களுக்கான நல்ல அபிலாசைகளை நிவர்த்தி செய்யும் முகமாக ஆதரவு பெருகி பெறுவதாக குடும்பத்தினர் சாதித்து பேசியதாகவும் தெரிவித்துள்ளார்
இவரது குடும்ப உறுப்பினர்கள் ஒருவர் இவரது கட்சியினுடைய மிக முக்கியமான பொறுப்பில் நியமிக்கப்பட்டு இருக்கின்றார் அதில் எடுத்து நேரில் சந்தித்தார் இவர்கள் தமது ஆதரவை முதல் தெரிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
பெட்டிகளுக்காக தனது கட்சிகளை மாற்றி அமைக்கின்ற மங்கள சமரவீர ஒரு சிறந்த ஒரு ராஜதந்திரியாகவும் அரசியல்வாதியாகும் காணப்பட்டார் விடுதலைப் புலிகள் ஆளுகின்ற பக்கத்தில் விடுதலை புலிகளுக்கு எதிராக பல்வேறுபட்ட நடவடிக்கை மேற்கொண்டவர் இவர் அவர்
ஒரு சுத்தமான இனவாதியாக காணப்பட்ட ஒருவராக குடும்பமே மேலும் தனக்கு ஆதரவு அளிக்க உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் இங்கே கவனிக்கத்தக்கது
பொன்சேகா சஜித் கட்சியிலிருந்து ஓட்டம்
பொன்சேகா சஜித் கட்சியிலிருந்து ஓட்டம்
பொன்சேகா சஜித் கட்சியிலிருந்து ஓட்டம் ,ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பதவியில் இருந்து ராணுவ தளபதி சரத் போன்ற பதவி விலகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கியிருக்கும் சரத் பொன்சேகாவுக்கு எதிராக செயலாற்றுகின்ற நடவடிக்கையில். ஒரு அங்கமாகவே இந்த பதவியை விலகி போட்டியிடுகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் ஆளுகின்ற சிங்கள மக்கள் மத்தியில் தனக்கு மகத்தான வரவேற்பு உள்ளதாக நம்பி ,குதிக்கும் ரணில் விக்கிரமசிங்காவும் சரத் பொன் ஜெயகாவும் இந்த தேர்தலில் தோற்கடிப்பதற்கான வகையில் ஒன்றாகவே இந்த களத்தை பார்க்க முடிகின்றது.
புலிகளையும் அதனுடைய தமிழ் மக்களையும் இறுதி யுத்தத்தின் போது தானே கொன்று குவித்தது தான் என்கின்ற இனவாதத்தை கக்கி , மக்களுடைய வாக்குகளை சூறையாடி வந்த சரத் பொன்சேகா இப்பொழுது ஜனாதிபதியாகி விடுவேன் என்ற இறுமாப்பில் இந்த ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடுகின்றார்.
தமிழர்கள் முன் குரல் முன்னெடுக்கின்ற பொழுது ஒற்றுமையும் நல்லிணக்கத்தை ஏற்படுத்தி விடுவேன் என்ற வரிசையில் இடைவிடாது பேசி வருகின்ற, சரத் பொன்சேகா தற்பொழுது இனவாதத்தைக் காக்கி தேர்தலில் வெல்வதற்காக சிங்கள மக்கள் வாக்குகளை சேகரிக்க நடவடிக்கை ஈடுபட்டு இருக்கின்றார்.
சுகபோகங்களுக்காக கட்சிகளை மாறி தமது சுயநலத்துக்காக விலை போகின்ற அரசியல் வியாபாரிகளாக ஒருவராக தற்பொழுது பொன்சேகா மாற்றம் பெற்றுள்ளது மேற்படி விடயங்கள் எடுத்துக் காட்டுகின்றன.
நல்லிணக்கம் நல்லாட்சி என கூவி பெறுகின்ற ஆண்டு ஆளுகின்ற கட்சிகள் யாவும் அதனை மறந்து விட்டு தமது கட்சிகளை பாதுகாத்து ,தமது குடும்ப வியாபாரங்களை உயர்த்துகின்ற நடவடிக்கையில் ஈடுபட்டு செயல் அணியின் ஒன்றாகவே இந்த பொன் செய்காவினுடைய இந்த விழாக்களும் அறிவிப்பும் காணப்படுகின்றது.
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வந்த வெள்ளைக்காரர் செய்த செயல்! 2026 இல் பார்த்திராத காட்சிகள்

- சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்

- நாய்களை எரிக்க சுடலை

- கொழும்புப்பிட்டியில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கைது

- ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் சுற்றுலா வருவாய் சரிவு

- விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கி மூன்று இளைஞர்கள் பலி

- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

- சிங்கள கைக்கூலி,தமிழகத்தை திசைதிருப்பும் தமிழினத் துரோகி, அர்ச்சுனா முகத்திரையை கிழித்த சீமான் தம்பி

- 700மில்லியன் வழங்கும் சர்வதேச நாணய நிதியம்

- பெண்கள் கர்ப்பமாவதை தடுக்க காவல்துறை நடவடிக்கை

அர்ச்சுனா சஜித்துடன் இணைவு
அர்ச்சுனா சஜித்துடன் இணைவு
அர்ச்சுனா சஜித்துடன் இணைவு என்பதாக மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் தனது முகநூல் பதில் தெரிவித்துள்ளார் .
மக்கள் பணி இன்றுடன் ஆரம்பித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார் .இந்த விடயம் மக்கள் மத்தியில் பேசு பொருளாக இடம்பெற்றுள்ளது.
அரசியலுக்குள் அவர் வருகை தருகிறார் என்ற முன் அறிவிப்பாக இது காணப்படுகிறது .
மக்கள் பணியே தனது முதல் பணி எனவும் நான் ஏதும் தவறிழைத்து இருந்தால் என்னை மன்னித்து கொள்ளுங்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார் .
அவர் கூறிய அந்த முகநூல் பதிவு கீழே பார்க்க ….
எனது வாழ்க்கையை எனது மக்களுக்காக அர்ப்பணித்து வெகு நாட்களாகிறது.
இந்தப் பெரும் சுமையை எனது சின்ன கைகளில் சுமத்தி அழகு பார்க்கும் எனது இனிய தமிழ் மக்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
உங்களுடைய இந்த நம்பிக்கையை இந்த கணத்தில் நான் பிழையான வழியில் அவமதிப்பேன் என்றால் எனது வீரம் செறிந்த தமிழினத்திற்கு மிகப்பெரிய துரோகி நானாகத்தான் இருப்பேன்.
இந்த உன்னதமான பணியை எனக்குத் தந்த எனதருமை தமிழ் சொந்தங்கள் இந்த வீர போராட்டத்திலே தங்களையே ஆகுதியாக்கி கொண்ட அண்ணா மார்கள் அக்கா மார்கள் தம்பிகள் தங்கைகள் அனைவருக்கும் என்னால் செய்யக்கூடிய ஒரே ஒரு நன்றி கடன் இது மட்டுமே.
எப்போதுமே உங்கள் நம்பிக்கை புதல்வனாக இருந்து மரணிப்பேன் என்று சொல்லிக் கொண்டு இனிவரும் காலங்கள் எமக்கு மிக முக்கியமான காலமாக இருக்கும்என்பதை நான் அறிவேன் என்பதையும் சொல்லிக் கொண்டு
எனக்கான மக்களின் போராட்டத்தில் இன்றிலிருந்து நான் முழுமையாக அர்ப்பணித்துக் கொண்டு விட்டேன் என்பதை சொல்லி இந்தப் பதிவை நான் பதிவிடுகிறேன்.
நாங்கள் மீண்டும் சந்திப்போம்.
என தெரிவித்துள்ளார் .
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வந்த வெள்ளைக்காரர் செய்த செயல்! 2026 இல் பார்த்திராத காட்சிகள்

- சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்

- நாய்களை எரிக்க சுடலை

- கொழும்புப்பிட்டியில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கைது

- ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் சுற்றுலா வருவாய் சரிவு

- விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கி மூன்று இளைஞர்கள் பலி

- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

- சிங்கள கைக்கூலி,தமிழகத்தை திசைதிருப்பும் தமிழினத் துரோகி, அர்ச்சுனா முகத்திரையை கிழித்த சீமான் தம்பி

- 700மில்லியன் வழங்கும் சர்வதேச நாணய நிதியம்

- பெண்கள் கர்ப்பமாவதை தடுக்க காவல்துறை நடவடிக்கை

முக்கியவர்களுக்கு சஜித் கட்சிக்குள் சிக்கல்
முக்கியவர்களுக்கு சஜித் கட்சிக்குள் சிக்கல்
முக்கியவர்களுக்கு சஜித் கட்சிக்குள் சிக்கல் ,தற்பொழுது மிக முக்கியவர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.
அதன் அடிப்படையில் இராணுவ தளபதி சரத் பொன்சேகா மற்றும் ஏனைய இருவருக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும், இவர்களை பொது கட்சி கூட்டங்களில் பொதுமடைகளில் பேசுவதற்கு தடைகள் விதிக்கப்பட உள்ளதாக தெரிய வந்துள்ளது.
கட்சி மற்றும் கட்சி தலைமைத்துவம் மீதான இவர்களின் விமர்சனங்களுக்கு காரணமாக ,இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளது,
எதிர்வரும் தேர்தலை எதிர்நோக்கி இருக்கும் இந்த காட்சிக்கு ,மக்கள்; மத்தியில் முதலிடம் பெற்று வருவதால் ,
கட்சியினை பலவீனப்படுத்தி அதை அழிக்கின்ற ஒரு நடவடிக்கை
இவர்களது இந்த விமர்சனங்களும் கட்சியினை பலவீனப்படுத்தி அதை அழிக்கின்ற ஒரு நடவடிக்கையின் தந்திரமாக இது காணப்படுகின்றது.
இவர்கள் மூவரும் அந்த கட்சியில் இருந்து வெளியேறி ரணில் உடைய கட்சிக்கு ஆதரவு வழங்கும் நிலைமை ஏற்படக்கூடும் என்கின்ற நிலை காணப்படுவது ,தற்பொழுது இந்த நிலைப்பாட்டை அந்த கட்சியை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறான முக்கிய விடயங்கள் சந்தேகத்தை எழுப்பியுள்ளதாக அவர்களை ஆதரித்த மக்கள் சமுதாயம் தெரிவித்துள்ளது .
தேர்தல் வருகின்ற பொழுது கட்சிகள் மாறுவது இவ்வாறு காணப்படுவதுடன் இவ்வாறான நிலையில் அவர்கள் உடைய வாய்கள் இவ்வாறு ,அந்த கட்சிக்கு எதிராக பேசிக் கொண்டனவா என்ற சந்தேகத்தை எழுப்பி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதை செய்தாவது எப்படியாவது தமது கட்சியை இந்த முறை முன்னிலைப்படுத்தி விட வேண்டும் என்கின்ற நிலையில், ஐக்கிய தேசியக் கட்சி கடுமையான நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றது.
அதன் ஒரு அங்கமாகவே தற்பொழுது ஏனைய காட்சிகளை உடைத்து அதில் இருந்த கட்சியில் உள்ளவர்களை தனது கட்சிகளுக்கு ,
நடவடிக்கையில் ரணில் ஈடுபட்டு வருவதனால் சம்பவங்கள் கடந்த காலங்கள் இடம்பெற்ற நிலைமை இங்கு கவனிக்கத்தக்கது.
- முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வந்த வெள்ளைக்காரர் செய்த செயல்! 2026 இல் பார்த்திராத காட்சிகள்

- சிங்கள அரச பயங்கரவாதம் தமிழனை அழித்த கறுப்பு நாள் முள்ளி வாய்க்கால்

- நாய்களை எரிக்க சுடலை

- கொழும்புப்பிட்டியில் வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் சீன நாட்டவர் கைது

- ஏப்ரல் மாதத்தில் இலங்கையின் சுற்றுலா வருவாய் சரிவு

- விக்டோரியா நீர்த்தேக்கத்தில் மூழ்கி மூன்று இளைஞர்கள் பலி

- முள்ளி வாய்க்கால் பாடல் எழுதிய எம்பி துரைராசா ரவிகரன்

- சிங்கள கைக்கூலி,தமிழகத்தை திசைதிருப்பும் தமிழினத் துரோகி, அர்ச்சுனா முகத்திரையை கிழித்த சீமான் தம்பி

- 700மில்லியன் வழங்கும் சர்வதேச நாணய நிதியம்

- பெண்கள் கர்ப்பமாவதை தடுக்க காவல்துறை நடவடிக்கை

சஜித் தேர்தலில் வெற்றி பெறுவார்
சஜித் தேர்தலில் வெற்றி பெறுவார்
சஜித் தேர்தலில் வெற்றி பெறுவார் ,இலங்கையில் இடம் பெற உள்ள தேர்தலில் சையத் பிரேமதாசாவே அதிகம் வெற்றி வாய்ப்பினை தட்டிச் செல்வர் என நுரைய மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு மழையை மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் பதுளையில் இடம் பெற்ற கூட்டம் அதில் பேசுகின்ற பொழுது இவ்வாறு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தார்.
மலையக மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் பேராசிரியர் சங்கரன் ,விஜயசாந்தரன் பிரதித் தலைவரும் முன்னாள் மத்திய மாகாண சபை உறுப்பினர் ராஜாராம் ,மலையக தொழிலாளர் முன்னணி செயலாளர் புஷ்பா
விஸ்வநாதன், பதுளை மாவட்ட அமைப்பாளர் பகிர் பாலச்சந்திரன் ஆகியோரும் மேற்படி சந்திப்பில் கலந்து கொண்டு தமது கருத்துக்களை தெரிவித்தனர்
ஜனாதிபதி தேர்தலில் அதிகமான வாய்ப்ப்பு
இலங்கையில் ஜனாதிபதி தேர்தலில் அதிகமான வாய்ப்பினை எதிர்க்கட்சியாக விளங்கக்கூடிய சஜித் பிரேமதாச மகத்தான வெற்றியை பெறுவார் எனவும் ,அவரே மக்களுக்கு நல்ல ஆட்சியைத் தந்து புதிய வழியினை காண்பார் என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ராஜபக்ச குடும்பங்கள் இந்த தேர்தலில் காணாமல் போகும் வாய்ப்பு அதிகம் காணப்படுகிறது நம்பப்படுகிறது.
இவ்வாறு சூடு பிடித்துள்ள இந்த தேர்தல் காரணமாக பல கட்சிகள் தமது அரசியல் வியாபாரத்தில் அறிவித்துள்ளன .
அதேபோல இப்பொழுது வெள்ளை வேட்டிகளை மடிச்சு கட்டி மக்களை சந்திக்கின்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றமை, கண்கூடாக காண முடிகின்றது இதுவே தேர்தல் நாடகம் என புலப்படுகிறது.
இவர்கள் மூளை குழம்பியவர்கள் சஜித்
இவர்கள் மூளை குழம்பியவர்கள் சஜித் ,பஸ்களை வழங்கும் போது பஸ் மேன் என பெயர் சூட்டி அழைக்கின்றனர்.
இருப்பவர்களிடம் இருந்து எடுத்து இல்லாதோருக்கு இவ்வாறு பகிர்ந்து வருவதில் தவறில்லை.
உலகம் சுற்றி வந்த மூளை
இவ்வாறு விமர்சிப்பவர்கள் உலகம் சுற்றி வந்து அவர்களின் மூளை குழம்பிப்போயுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இந்த திட்டம் எந்தளவு முக்கியமானது என்பது தற்போதைய ஜனாதிபதி பிரதமராக இருந்தபோது, ’மூச்சு’ திட்டத்தின் கீழ் நாட்டுக்கு உதவுமாறு கேட்டுக் கொண்டார்.
அப்போது 150 இலட்சம் ரூபா பெறுமதியான இருதய நோயாளர்களுக்கான மருந்தை அரசாங்கத்தினால் பெற்றுக்கொள்ள முடியாத நிலை ஏற்பட்ட போது, எதிர்க்கட்சித் தலைவராக இருந்து அந்த மருந்தை நாட்டுக்கு பெற்றுக் கொடுத்தேன்.
76 வருட வரலாற்றில் இவ்வாறானதொரு சம்பவம் இடம்பெறுவது இதுவே முதல் தடவை என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
கல்விக்கு முன்னுரிமை அளிப்பதே ஐக்கிய மக்கள் சக்தியின் தேசியக் கொள்கைகளில் பிரதானமானது. இதற்கு எம்மிடம் நிறைய வேலைத்திட்டங்கள் இருக்கின்றன.
சமூக வலைத்தளங்கள்
இவற்றைக் கூறும் போது, சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்தி, பல்வேறு விதமாக மக்களுக்குப் பொய்யான தகவல்களை வழங்கி, 220 இலட்சம் மக்களை மீண்டும் 2019 போல் ஏமாற்றும் முயற்சி இடம்பெற்று வருகிறது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இதுபோன்ற ஏமாற்று வேலைகளை செய்யாமல், போட்டி போட்டுக்கொண்டு மக்களுக்கு உதவவும், மருத்துவமனைகள் மற்றும் பாடசாலைகளுக்கு உதவவும் ஒன்று சேருமாறு எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்தார்.
இதன் மூலம் நாட்டு மக்கள் நன்மையடைவார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
76 ஆண்டு கால வரலாற்றில் அதிகாரம் இல்லாமல் நாட்டிற்காக சேவை செய்த ஒரே எதிர்க்கட்சி ஐக்கிய மக்கள் சக்தியே என்றும், மக்கள் கோரும்
முறைமையில் மாற்றத்தைக் கூட போராட்டத்திற்கு முன்னரே ஐக்கிய மக்கள் சக்தியால் ஆரம்பிக்கப்பட்டதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டம்
பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 200 ஆவது கட்டமாக 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள்
அனுராதபுரம், கெக்கிராவ, பலாகல, மனேருவ மகா வித்தியாலயத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வு மே 25 ஆம் திகதி இடம்பெற்றது.
இதன்போது, பாடசாலை அபிவிருத்தி சங்கத்தினருக்கு ஒரு இலட்சம் ரூபா நிதியுதவியும் வழங்கி வைக்கப்பட்டது.
பிரபஞ்சம் 200 ஆவது கட்டத்தையும் தாண்டி விட்டது. இதன் பெருமை எனக்கு மட்டும் சொந்தமானதல்ல,
மொனராகலை மாவட்டத்தில்
2021 டிசம்பர் 30 ஆம் திகதி அன்று மொனராகலை மாவட்டத்தில் உள்ள போதாகம வித்தியாலத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்ட பிரபஞ்சம் ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்களை வழங்கும் இந்தத் திட்டம், இன்று 200 ஆவது
கட்டத்தை எட்டியுள்ளது. எனக்கு மாத்திரமல்லாது, இந்த வேலைத்திட்டத்தை வெற்றியடையச் செய்வதற்கு பல வழிகளிலும் உழைத்து வரும், ஒத்துழைப்பு
வழங்கிய, வழங்கி வரும் அனைவருக்கும் இதன் பெருமையும் பாராட்டும் சேர வேண்டும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.
Featured
அரசாங்கத்தின் செயலை தோற்கடிக்க வேண்டும்
அரசாங்கத்தின் செயலை தோற்கடிக்க வேண்டும்
அரசாங்கத்தின் செயலை தோற்கடிக்க வேண்டும் ,பிரித்தானிய வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் இந்து-பசிபிக் பிராந்திய
பணிப்பாளர் பென் மேலருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று நேற்று (07) கொழும்பில் இடம்பெற்றது.
இச்சந்திப்பில் இலங்கை தற்போது எதிர்நோக்கும் வங்குரோத்து நிலை குறித்து இரு தரப்பினருக்கும் இடையில் நீண்ட நேரம் கலந்துரையாடப்பட்டதுடன்,
இதில் இருந்து விடுபட தாம் மற்றும் தமது குழுவினர் மேற்கொள்ளும் திட்டங்கள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச விளக்கினார்.
அதேபோன்று தற்போதைய அரசாங்கத்தின் படுமோசமான ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்து, மக்கள் சார் ஆட்சியை எதிர்பார்க்கும், மக்களின் ஜனநாயக உரிமைகளை இல்லாதொழித்து தேர்தலை ஒத்திவைக்கும்
அரசாங்கத்தின் முயற்சியை தோற்கடிக்க வேண்டும் எனவும், மக்கள் எதிர்பார்க்கும் ஆட்சியை உருவாக்குவதே தனதும் தனது குழுவினதும் நோக்கமாகும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பிரித்தானி
ய வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் இந்து பசுபிக் பிராந்திய பணிப்பாளர் பென் மேலர் உள்ளிட்ட தூதுக்குழுவிடம் சுட்டிக்காட்டினார்.
பிரித்தானிய வெளிவிவகார, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் இலங்கைப் பிரதானி Humairaa Hatia மற்றும் இலங்கைக்கான
பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பெட்ரிக், முதல் செயலாளர் டொம் சோப்பர் ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர். மேலும், ஐக்கிய
மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, நிரோஷன் பெரேரா ஆகியோர் இதில் கலந்து கொண்டனர்.
Featured
சஜித்துடன் நோர்வே தூதுவர் சந்திப்பு
சஜித்பிரேமதாசா நோர்வே தூதுவர் சந்திப்பு
சஜித்துடன் நோர்வே தூதுவர் சந்திப்பு .நோர்வே தூதுவர் May Elin Stener மற்றும் நோர்வே தூதரகத்தின் இரண்டாவது செயலாளர் Johan Bjerkem ஆகியோருக்கு இடையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது .
இலங்கையில் இடம்பெறவுள்ள தேர்தல்
இலங்கையில் இடம்பெறவுள்ள தேர்தல் மற்றும் அவ்வேளை சஜித் பிரேமதாசா அணியினர் நடத்த உள்ள நகர்வுகளை தொடர்பில் நோர்வே கேட்டு அறிந்து கொண்டனர் .
ஸ்ரீலங்காவில் யார் ஆட்சியில் நிலை பெறவேண்டும் என்பதை ,சஜித்துடன் நோர்வே தூதுவர் சந்திப்பு எடுத்து காட்டுகிறது .,அரேபிய நாடுகள் முடிவை எடுக்கின்றன என்பதற்கு ,இந்த சந்திப்புக்கள் கட்டியம் இடுகின்றன .
ரணில் விக்கிரமசிங்காவுடன் முன்னாள் நோர்வே அமைச்சர் எரிக் சொல்கெம் முக்கிய பதவிகளில் அமர்த்த பட்டுள்ளார் .
அவ்வாறன நிலையில் அவர் ஊடக பல்வேறு பட்ட விடயங்கள் நோர்வேக்கு தெரிய படுத்த பட்டிருக்கும் .
எதிர்காலத்தில் சஜித் பிரேமதாஹஸாவின் தேர்தல் நிலைய தடுக்க அல்லது ,மாற்றீடாக என்ன செய்ய வேண்டும் என்கின்ற விடயத்தை ,இதன் ஊடக நோர்வே நகர்த்தி இருக்க கூடும் என எதிர் பார்க்க படுகிறது .
Featured
வடக்கு ஞாபகம் தற்போதே வந்துள்ளது சாடும் எதிர்க்கட்சித் தலைவர்
வடக்கு ஞாபகம் தற்போதே வந்துள்ளது சாடும் எதிர்க்கட்சித் தலைவர்
அரசாங்கத்தின் கூற்றுப்படி, நாடு ஸ்திரமடைந்தாலும், உலக வங்கியின் பிரகாரம், வறுமை இரட்டிப்பாகியுள்ளது. நாட்டில் தற்போது ஒரு புதிய இயல்புநிலை ஏற்பட்டாலும், வறுமை அதிகரித்து, வருமான மூலங்கள் வீழ்ச்சியடைந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
பெற்றோர்களால் தங்கள் குழந்தைகளுக்கு தினமும் 3 வேளை உணவு பரிமாற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மக்களோடு ஒன்றித்து உறவுகளை பேணுவதால் வடக்கிலும், தெற்கிலும், கிழக்கிலும், மேற்கிலும் வறுமை அதிகரித்துள்ளமையை அவதானிக்க முடிந்தது.
நாட்டில் கிட்டத்தட்ட பாதிப்பேர் வறுமை, அழுத்தம், அசௌகரியம் மற்றும் வறுமையால் பீடிக்கப்பட்டுள்ளனர். நன்றாக இருந்த மக்களின் வாழ்வு சுருங்கிவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
அரசாங்கம் சொல்லும் ஸ்திரத்தன்மை புதிய இயல்பு நிலையாக்கத்தால் நடந்துள்ளது. புதிய இயல்பு நிலையில் மக்களின் பிரச்சினைகள் தாறுமாறாக அதிகரித்துள்ளன, வேலையில்லா திண்டாட்டத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும், சுமார் 2 இலட்சம் நுண்ரக, சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளதாகவும் சனத் தொகை மற்றும் புள்ளிவிபரவியல் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணங்களை குறைத்து மக்களை சிரமத்தில் ஆழ்த்தி ஸ்திரத்தன்மைக்கு செல்ல முடியும். மக்களின் வாழ்வுரிமையைப் பறித்துள்ள புதிய இயல்பு நிலையால் நாட்டுக்கோ அல்லது 220 இலட்சம் மக்களுக்கோ எந்தப் பயனும் இல்லை என்பதால், வறுமையை ஒழிப்பதற்கான தேசியத் திட்டமொன்று உடனடியாக முன்னெடுக்கப்பட வேண்டும். இங்கு கல்விக்கு கூடிய வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 139 ஆவது கட்டமாக 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், முல்லைத்தீவு, தண்ணீரூற்று முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு வழங்கி வைக்கும் நேற்று (03) நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
வறுமையை ஒழிக்கவும், மத நல்லிணக்கத்தை உருவாக்கவும், தீவிரவாதத்தை ஒழிக்கவும் கல்வியானது பயன்படும். எந்த தீவிரவாதத்துக்கும் இடமளிக்கக்கூடாது.
ஒரு நாடாக, ஒரு தாயின் பிள்ளைகளாக நடுநிலை போக்கில் சமத்துவம் என்ற கொள்கையின் பிரகாரம் நாம் செயற்பட வேண்டும். எந்த இனத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, எந்த மதத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி அனைவரும் சமம்.
உயர்சாதி செல்வந்த குடிமக்கள் அல்லது தாழ்ந்த சாதாரண குடிமக்கள் என்று 2 வகையான குடிமக்கள் இங்கு இல்லை. அரசியலமைப்பின் முன் நாம் அனைவரும் சமம் என எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.
பாராளுமன்ற உறுப்பினர்களாக பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் போது அதை பாதுகாக்கவும், அதன் உரிமைக்காக குரல் கொடுக்கவும் முன்நின்றவர்கள், பாராளுமன்றத்தில் இருந்து நிறைவேற்று அதிகாரத்திற்கு வந்த பிற்பாடு, நிறைவேற்று அதிகாரம் பாராளுமன்றத்தை கட்டுப்படுத்த முயற்சிக்கிறது.
பாராளுமன்றம் ஜனாதிபதியின் கைப்பாவையாக கருத்திற் கொள்ளப்பட்ட சம்பவங்கள் நடந்தேறியுள்ளன.
ஜனநாயக கட்டமைப்பில் நிறைவேற்று அதிகாரம், சட்டமன்றம், நீதித்துறை என 3 பகுதிகள் உள்ளதால், எந்த ஒரு நிறுவனமும் மற்றொரு நிறுவனத்தை குறைமதிப்பிற்குட்படுத்ததாது, தடைகள் மற்றும் சமன்பாடுகள் மூலம் அதிகாரம் கட்டுப்படுத்தப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.
யுத்தத்தால் முல்லைத்தீவு பிரதேசம் பெரிதும் பாதிக்கப்பட்டது. போருக்குப் பின்னர் எந்தவொரு முன்னாள் ஜனாதிபதியாலும் சர்வதேச ஒத்துழைப்பு மாநாட்டை நடத்த முடியவில்லை.
தேர்தல் காலத்தில்தான் வடக்கு கிழக்கை நினைவு கூர்கின்றனர். இந்தக் கொள்கையை மாற்ற வேண்டும். ஐக்கிய மக்கள் சக்தி அமைக்கும் அரசாங்கத்தில் வடக்கு, கிழக்கை மையமாகக் கொண்டு சர்வதேச ஒத்துழைப்பு மாநாடு நடத்தப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
Featured
வேலைத்திட்டம் இன்றி நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது சஜித் பிரேமதாசா
வேலைத்திட்டம் இன்றி நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது சஜித் பிரேமதாசா
வேலைத்திட்டம் இன்றி நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது நாட்டின் எழுந்துள்ள ஒவ்வொரு பிரச்சினைக்கும் பதில் நாடு பெறும் டொலர்களும் ரூபாக்களையும்
கொண்டே அமைகிறது. டொலரையும், ரூபாவையும் ஈட்டுவதற்கு முறையான வேலைத்திட்டம் இல்லாமல் வெறும் பேச்சுக்களை வைத்து பதவிக்கு வர யாராவது யோசித்தால்,
நாட்டு மக்கள் இரண்டாவது அவலத்தை எதிர்நோக்குவர். 2019 ஆம் ஆண்டைப் போன்று 2024 ஆம் ஆண்டிலும் மக்கள் பாரிய அனர்த்தத்தை எதிர்கொள்ள நேரிடும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
உண்மை, யதார்த்தம், தரவு, அறிவியல் மற்றும் பரிசோதனைகள், பகுப்பாய்வுகள் என்பவற்றின் அடிப்படையில் அமைந்த கொள்கை உருவாக்கத்திற்கு ஒரு நாடாக நாம் முன்னேற வேண்டும்.
கொள்கைகளை உருவாக்குதல் மற்றும் அவற்றை செயல்படுத்துதல், கண்காணித்தல், பின்தொடர்தல் மற்றும் மீளாய்வு செய்தல், பின்னூட்டம் ஆகியவை மேற்கொள்ளப்பட வேண்டும். இவ்வாறானதொரு
வேலைத்திட்டத்தை தயாரிக்க ஐக்கிய மக்கள் சக்தி தயாராகவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 122 ஆவது கட்டமாக 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள் அநுராதபுரம் கே.பீ.ரத்நாயக்க மகா வித்தியாலயத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வு 13 ஆம் திகதி இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இப்பாடசாலையில் நடன மற்றும் அரங்கேற்றங்கள் குழுவிற்குத் தேவையான பொருட்களை கொள்வனவு செய்வதற்கு தேவையான நிதியுதவியை பெற்றுத் தருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு வாக்குறுதியளித்தார்.
வேலைத்திட்டம் இன்றி நாட்டைக் கட்டியெழுப்ப முடியாது சஜித் பிரேமதாசா
பொருளாதார அபிவிருத்தியின் மூலமே நாட்டை கட்டியெழுப்ப முடியும், நாட்டின் பிள்ளைகள் மற்றும் பெற்றோர்களின் எதிர்காலத்தை வலுப்படுத்த ரூபாக்களும் டொலர்களும் தேவை, இந்த டொலர்களை பொருளாதார
அபிவிருத்தியின் மூலம் மட்டுமே ஈட்டிக்கொள்ள முடியும். அறிவை மையமாகக் கொண்ட, ஏற்றுமதியை மையமாகக் கொண்ட பொருளாதாரம், நேரடி அன்னிய முதலீடு முறைமையின் ஊடாகவே, விழுந்து கிடக்கும் தேசத்தை மீண்டும் பெருமைக்குரிய தேசமாக கட்டியெழுப்ப முடியும் என எதிர்க்கட்சித்
தலைவர் தெரிவித்தார். கல்விக்கு முதலிடம், பிரபஞ்சம் வேலைத்திட்டத்தின் முக்கிய நோக்கம் Education First என்ற கொள்கையாகும். கல்விக்கு முதலிடம் வழங்குவதே தனது பிரதான இலக்கு என்றாலும், இந்த கல்வி முறை
நவீனமயப்படுத்தப்பட வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். அரசாங்கத்தின் டிஜிட்டல் ஸ்ரீலங்கா என்பது உயரடுக்கு வர்க்கத்தின் பிள்ளைகளுக்கு மட்டுமே! உயரடுக்கு பெரும் பணக்காரர்களின் பிள்ளைகளுக்கே டிஜிட்டல் ஸ்ரீலங்கா உருவாக்கப்பட்டுள்ளது.
இலவசக் கல்வியை போதிக்கும் 10,126 அரச பாடசாலைகளில் 41 இலட்சம் பிள்ளைகளுக்கு இந்த சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுக்கும் போக்கை காண்பதிற்கில்லை.
இந்த பிள்ளைகளின் அடிப்படை மற்றும் மனித உரிமைகள் நாளுக்கு நாள் மீறப்பட்டு வருகின்றன. காலாவதியான கல்வி முறைமையினால் ஒரு சில துறைகளைத் தவிர, பெரும்பாலான துறைகளைச் சேர்ந்தவர்கள்
வேலையின்மை வரிசையில் நிற்கிறார்கள். தனியார் துறையில் கூட அவர்களால் வேலைவாய்பை எடுத்துக் கொள்ள முடியாத நிலையில் உள்ளனர். இது பெரும் துரதிஷ்டம் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக் காட்டினார்












































