சஜித் தனது சான்றிதழ்களை இன்னும் சமர்ப்பிக்கவில்லை
Posted in இலங்கை செய்திகள்

சஜித் தனது சான்றிதழ்களை இன்னும் சமர்ப்பிக்கவில்லை

சஜித் தனது சான்றிதழ்களை இன்னும் சமர்ப்பிக்கவில்லை

சஜித் தனது சான்றிதழ்களை இன்னும் சமர்ப்பிக்கவில்லை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது கல்விச் சான்றிதழ்களை நேற்று பாராளுமன்றத்தில் சமர்பிப்பதாகக் கூறிய போதிலும், அவர் இதுவரையில்

அதனை பாராளுமன்றத்தின் ஹன்சார்ட் திணைக்களத்தில் சமர்ப்பிக்கவில்லை என அமைச்சரவைப் பேச்சாளர் கலாநிதி நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில், சான்றிதழ்களை ஆய்வு செய்து அறிக்கை வெளியிட வேண்டும் என அவர் தெரிவித்தார்.

கேள்வியொன்றுக்கு பதிலளித்த அவர், இன்று (டிசம்பர் 19) காலை வரையிலும் எதிர்க்கட்சித் தலைவர் தனது சான்றிதழை ஹன்சார்ட் திணைக்களத்தில் சமர்ப்பிக்கவில்லை என்றார்.

Posted in இலங்கை செய்திகள்

பிறப்பு இறப்பு திருமண சான்றிதழ் வழங்கல் நிறுத்தம்

பிறப்பு இறப்பு திருமண சான்றிதழ் வழங்கல் நிறுத்தம்

பிறப்பு, இறப்பு மற்றும் திருமண சான்றிதழ் பிரதிகள் வழங்கப்படுவது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது.

உறுதிபடுத்தப்பட்ட பிரதிகளை வழங்கும் LNG தரவுக் கட்டமைப்பு செயலிழந்திருப்பதாக திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்காரணமாக நாடளாவிய ரீதியில் பிறப்பு, இறப்பு மற்றும் திருமண சான்றிதழ் பிரதி விநியோகம் தடைப்பட்டுள்ளது.

அந்த தரவுக் கட்டமைப்பை திருத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பதிவாளர் நாயகம் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த சேவை திருத்தப்பட்டதன் பின்னர் பொதுமக்களுக்கு அறிவிக்கப்படும் என்று திணைக்களம்
விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.