பயங்கரவாதிகள் விடுதலை புலிகள் சஜித் பிரமேதாசா முழக்கம்
Posted in இலங்கை செய்திகள்

சஜித் அணிக்கு தாவிய இருவர்

சஜித் அணிக்கு தாவிய இருவர்

ஐக்கிய மக்கள் சக்தியில் மேலும் இரண்டு அரசியல்வாதிகள் இணைந்துள்ளனர்.

காமினி திலகசிறி மற்றும் காமினி சில்வா ஆகியோர் இவ்வாறு சஜித் பிரேமதாசவுக்கு தமது ஆதரவைத் தெரிவித்து கட்சியில் இணைந்துள்ளனர்.

பயங்கரவாதிகள் விடுதலை புலிகள் சஜித் பிரமேதாசா முழக்கம்
Posted in இலங்கை செய்திகள்

பயங்கரவாதிகளை சட்டத்தின் முன் நிறுத்துவது முக்கிய பணியாகும் சஜித்

பயங்கரவாதிகளை சட்டத்தின் முன் நிறுத்துவது முக்கிய பணியாகும் சஜித்

பயங்கரவாதிகளை சட்டத்தின் முன் நிறுத்துவது முக்கிய பணியாகும் பிள்ளைகளுக்கு தகரத்தாலும் ஓலைகளாலும் பின்னப்பட்ட குடிசைகளும், ஆட்சியாளர்களுக்கு ஜனாதிபதி மாளிகையும் அலரி மாளிகையும் உரித்தாகியுள்ளது.

இந்த இரண்டு மாளிகைகளும் ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் சர்வதேச மட்டத்தை எட்டும் மிக உயர்ந்த மாதிரியிலான தகவல் தொழிநுட்ப பல்கலைக்கழகங்களாக மாற்றியமைக்கப்படும்.ஆட்சியாளர்களுக்கு மாளிகைகள் தேவையில்லை.

இந்நாட்டின் பிள்ளைகளுக்கும் பொது மக்களுக்குமே மாளிகைகள் தேவை என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இந்நாட்டில் ஏழை எழிய பெற்றோரின் பிள்ளைகள் இருந்தாலும்,இப்பிள்ளைகள் அறிவு,திறன் மற்றும் ஆற்றல் நிரப்பப் பெற்ற வளம் கொழிப்போராக உள்ளனர்.

சர்வதேச தரத்திலான உயர்தரக் கல்வியைப் பெறுவது நாட்டின் மாணவச் செல்வங்களது உரிமையாகும்.இந்தக் கடமையை நிறைவேற்றுவது அரசாங்கத்தின் பொறுப்பாகும்.

ஆனால் வங்குரோத்து நாட்டில் ஆட்சி செய்பவர்களும் திருடும் காலத்தில், தற்போதைய அரசாங்கத்தின் ஆட்சியாளர்கள் அரசின் சொத்துக்களையும் வளங்களையும் சூறையாடுகின்றனர்.ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் இந்த பொருளாதார பயங்கரவாதிகளும் கொலையாளிகளும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு,அவர்கள் நாட்டிலிருந்து கொள்ளையடித்த பணம் மீளக் கொண்டுவரப்பட்டு,

இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்பதோடு நாட்டின் அபிவிருத்திக்கும் பயன்படுத்தப்படும். பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப நிகழ்ச்சித் திட்டத்தின் 88 ஆவது கட்டமாக, அனுராதபுரம்,ராஜாங்கனை யாய 13/14 மஹசென் தேசியப் பாடசாலைக்கு 10 இலட்சம் ரூபா பெறுமதியான

ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்களை வழங்கும் நிகழ்வில் நேற்று (06) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவினால் பாடசாலை மாணவர்களுக்கு

வழங்கப்பட்ட மதிய உணவு கூட நிறுத்தப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் இந்த மதிய உணவு வழங்கும் வேலைத்திட்டம் மீண்டும் அமுல்படுத்தப்படும் என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

பயங்கரவாதிகளை சட்டத்தின் முன் நிறுத்துவது முக்கிய பணியாகும் சஜித்

நாட்டின் குடிமகன் அறிவு,கல்வி,ஞானம் ஆகியவற்றின் காரணமாகவே ஒரு நல்ல உலகளாவிய குடிமகனாக மாறுகிறான்.இதை வளப்படுத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதே அரசாங்கத்தின் பொறுப்பும் கடமையுமாக அமைய

வேண்டும்.இதனை சாத்தியப்படுத்த எடுக்க முடியுமான சிறந்த நடவடிக்கைகளை எடுப்போம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார். எத்தகைய தடைகள்,சவால்கள், பிரச்சினைகள் வந்தாலும்

ஐக்கிய மக்கள் சக்தியின் இந்தப் பயணம் நிறுத்தப்படாது. எமது நோக்கமும் பயணமும் தூய்மையானது.

41 இலட்சம் மாவணச் செல்வங்களையும் உலகளாவிய ஸ்மார்ட் குடிமக்களாக மாற்றுவதே பிரபஞ்ச வேலைத்திட்டத்தின் ஒரே குறிக்கோள் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்

பயங்கரவாதிகள் விடுதலை புலிகள் சஜித் பிரமேதாசா முழக்கம்
Posted in இலங்கை செய்திகள்

சுதந்திர தினத்தை எவ்வாறு அபிமானத்துடன் கொண்டாடுவது

சுதந்திர தினத்தை எவ்வாறு அபிமானத்துடன் கொண்டாடுவது

76 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்நேரத்தில் மரியாதை செலுத்துவதோடு மறுபுறம் மகிழ்ச்சியளிக்கிறது. நாடு யாருக்கும் அடிமையாகாமல், இறையாண்மை, சுதந்திரம் மற்றும் பிராந்திய

ஒருமைப்பாட்டைப் பாதுகாத்து சுதந்திரமான நாடாக செயல்படுகிறது.ஏகாதிபத்திய சக்திகளின் கீழ் காலனித்துவ நாடாக இல்லாவிட்டாலும், நாட்டில் அரசியல் சுதந்திரம் எந்தளவு உள்ளது? என்பது பிரச்சினைக்குரிய விடயம் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

உயர் நீதிமன்றத்தின் பரிந்துரைகளை மீறி சபாநாயகர் தலைமையிலான அரசாங்கம் நிகழ்நிலை காப்பு சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. இதனூடாக பேச்சு சுதந்திரம், கருத்து சுதந்திரம், உண்மையை நாட்டுக்கு வெளிப்படுத்தும் சுதந்திரம், அரசியல் சுதந்திரம் என்பன பறிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

சுதந்திர தினத்தை எவ்வாறு அபிமானத்துடன் கொண்டாடுவது

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப நிகழ்ச்சித் திட்டத்தின் 83 ஆவது கட்டமாக,காலி ஹபுக்கல மகா வித்தியாலயத்திற்கு 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்களை வழங்கும் நிகழ்வில் நேற்று (04) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வங்குரோத்து நிலைமையால், 220 இலட்சம் மக்களும் பொருளாதார சுதந்திரத்தையும் சமூக சுதந்திரத்தையும் இழந்துள்ளனர். சேதன உர மோசடியால் விவசாயத்தில் ஈடுபடும் சுதந்திரமும் இழக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

மக்களின் உரிமைகளுக்காக முன் நிற்க, குரல் கொடுக்க, வீதியில் இறங்கி ஜனநாயக உரிமைகளை நடைமுறைப்படுத்தும் போது, பேராட்டம் நடத்தும் போது,நீர் தாரை தாக்குதலுக்கும், கண்ணீர் புகைத் தாக்குதலுக்கும், தடிகள் தாக்குதல்களுக்கும் மக்கள் உள்ளாகும் போது நாட்டில் உண்மையான சுதந்திரம் உள்ளதா என்பது குறித்து பெரும் கேள்வி எழுவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில் முனைவோரின் வர்த்தகங்களும் சொத்துக்களும் பரேட் சட்டத்தின் மூலம் ஏலம் விடப்படும் நாட்டில், கல்வியில் சுதந்திரம் இல்லாத நாட்டில், சுதந்திரத்தை உண்மையாக கொண்டாட முடியுமா என்பது பிரச்சினைக்குரிய விடயம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

சுகாதாரத்துறையில் சுதந்திர செயல்பாடு இல்லாது போனமை, நாட்டைச் சுற்றி கடல் இருந்தாலும் மீன் வளத்தில் தன்னிறைவு இன்மை போன்ற பல பிரச்சினைகள் உள்ள நாட்டில் சுதந்திரத்தை அபிமானத்துடன் கொண்டாட முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பொருளாதார பயங்கரவாதத்தில் இருந்து நாட்டை காத்தே 76 ஆவது சுதந்திரத்தை நாம் உண்மையில் கொண்டாட வேண்டும். இந்த பொருளாதார பயங்கரவாதத்தில் இருந்து மீள 220 இலட்சம் மக்களும் சாதி, மதம், இனம் ,குலம், கோத்திரம் மற்றும் கட்சி என அனைத்து வேறுபாடுகளும் இன்றி அனைவரும் ஒன்றிணைந்து, பொருளாதாரப் பயங்கரவாதத்திலிருந்து நாட்டைக் காப்பாற்றி, நாட்டைக் கட்டியெழுப்ப ஒன்றிணையுமாறும் எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை விடுத்தார்.

பயங்கரவாதிகள் விடுதலை புலிகள் சஜித் பிரமேதாசா முழக்கம்
Posted in இலங்கை செய்திகள்

ஐக்கிய மக்கள் சக்தியின் பேரணிக்கு நீதிமன்றம் உத்தரவு

நடைபெறவுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் பேரணிக்கு நீதிமன்றம் உத்தரவு ஒன்று பிறப்பித்துள்ளது.

இதன்படி, கட்சியின் தலைவர் சஜித் பிரேமதாச, கட்சியின் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, மத்திய கொழும்பு பிரதான அமைப்பாளர் முஜிபர் ரஹ்மான், மத்திய கொழும்பு அமைப்பாளர் அப்சரா அமரசிங்க, கட்சியின் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, மேற்குறிப்பிட்ட பிரதிவாதிகள் மற்றும் அவர்களைப் பின்பற்றுபவர்கள் மாளிகாவத்தை பொலிஸ் பிரிவில் உள்ள முஸ்லிம் மயானத்திற்கு அருகில் இருந்து பிரதீபா மாவத்தை, ஜயந்த வீரசேகர மாவத்தை, மில்டன் பெரேரா மாவத்தை மற்றும் ஜும்மா சந்தி வழியாக சங்கராஜ சுற்றுவட்டத்தின் ஊடாக பயணிப்பது தடைசெய்யப்பட்டுள்ளது

ரணில் சஜித் மோதல் நாடகம்
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

ஜனாதிபதி தேர்தல் ரணிலின் கபட நாடகம் சஜித் முழக்கம்

ஜனாதிபதி தேர்தல் ரணிலின் கபட நாடகம் சஜித் முழக்கம்

ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என்ற செய்தியை பரப்பி மக்களிடமிருந்து கிடைக்கும் கருத்துக்களை ஆராய்ந்து ஜனாதிபதி எடை போட்டு வருகிறார். சுயேட்சை வேட்பாளர்கள் மற்றும் ஐ.தே.க வேட்பாளர் யார் என்பதில் ஜனாதிபதியும் மொட்டும் தற்போது குழப்பத்தில் உள்ளனர்.

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதற்கு கூட முதுகெலும்பில்லாத இந்த அரசாங்கம் பொதுத் தேர்தல்,ஜனாதிபதித் தேர்தல் என்று தம்பட்டம் அடித்து வருகிறது என்று குற்றஞ்சாட்டிய எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ ஜனநாயக உரிமைகளைப் பாதுகாக்கும் எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ள ஐக்கிய மக்கள் சக்தியும் மக்களும் தயாராகவே உள்ளனர் என்றார்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப நிகழ்ச்சித் திட்டத்தின் 68 ஆவது கட்டமாக,அனுராதபுரம் ஸ்ரீ துடுகெமுனு மகா வித்தியாலயத்திற்கு 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்களை வழங்கும் நிகழ்வு புதன்கிழமை (17) இடம்பெற்றது அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இப்பாடசாலையில் நடனம் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு நடனம் மற்றும் அரங்கேற்றங்களுக்குத் தேவையான ஆடைகளைக் கொள்வனவு செய்வதற்குத் தேவையான நிதியுதவியும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களால் இன்று வழங்கி வைக்கப்பட்டது.

ஜனாதிபதி தேர்தல் ரணிலின் கபட நாடகம் சஜித் முழக்கம்

மோசடியில் ஈடுபட்ட வியட்நாம் சுகாதார அமைச்சருக்கு சிறை தண்டனை, மோசடியில் ஈடுபட்ட இலங்கையின் சுகாதார அமைச்சருக்கு வரப்பிரசாதம்!

மோசடி கும்பலொன்று ஆளும் தரப்பு அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் சேர்ந்து மனித இம்யூனோகுளோபுலின் உள்ளிட்ட ஏராளமான மருந்துகளில் மோசடி செய்துள்ளனர்.மனித இம்யூனோகுளோபுலின் என்ற மருந்துடன் நீர் கலக்கப்பட்டுள்ளது.ஆளும் தரப்பு அமைச்சர்கள் ஜனாதிபதியின் பாதுகாப்பில் திருடும்போது கூட ஜனாதிபதி இந்த அமைச்சர்களை வெளியேற்றாது அவர்களை பாதுகாத்துக் கொண்டே வருகிறார் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

மருந்துப்பொருள் மோசடி செய்த சுகாதார அமைச்சருக்கு எதிராக எதிர்க்கட்சி நம்பிக்கையில்லாப் பிரேரணையை கொண்டு வந்த போது ஜனாதிபதி,மொட்டுக் கட்சியின் 113 பேரை பயன்படுத்தி சுகாதார அமைச்சரைப் பாதுகாத்தாலும்,சமீபத்தில், வியட்நாமில் கூடிய விலையில் கோவிட் பரிசோதனை உபகரண தொகுதிகளை

கொள்வனவு செய்யும் விடயத்தில் நிதி முறைகேடு காரணமாக,22 இலட்சம் அமெரிக்க டொலர் திருடிய குற்றத்துக்காக வியட்நாம் சுகாதார அமைச்சருக்கு 18

வருடங்களும்,அமைச்சருடன் இணைந்து திருட்டில் ஈடுபட்ட தொழிலதிபருக்கு 29 வருடங்களும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.வியட்நாமில் இவ்வாறு நடக்கும்

போது, இந்நாட்டில் ஊழல் மோசடியில் ஈடுபட்ட சுகாதார அமைச்சரை பாதுகாக்க ஜனாதிபதி முதல் ராஜபக்ச,மொட்டுக் குழுவின் கையாட்கள் சகலரும் கை தூக்கி உதவினார்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

வியட்நாம் இலங்கையைப் போல் வங்குரோத்தல்லாத வேகமாக அபிவிருத்தி கண்டு வரும் நாடு.இந்த அபிவிருத்தியடைந்து வரும் நாட்டிலும் திருட்டுக்கு தண்டனை வழங்கப்படும் போது,வங்குரோத்தான நாட்டில்,மக்கள் மீது பெரும் வரிச்சுமை சுமத்தப்பட்டு,திருட்டு,கடத்தல் பெரிய அளவில் நடத்தப்பட்டு வருகிறது.இந்நாட்டை அழித்த வங்குரோத்தடையச் செய்த திருடர்களை பிடித்து அவர்கள் திருடிய வளங்களை இந்நாட்டின்
கல்வி,சுகாதாரம்,விவசாயம் போன்றவற்றிற்கு ஒதுக்குவதே ஐக்கிய மக்கள் சக்தியின் பிரதான நோக்கமாகும் என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

பாடசாலைகளில் குடிநீர் துண்டிக்கப்பட்டாலும் ஜனாதிபதியின் வெளிநாட்டுப் பயணங்களுக்கு பஞ்சமில்லை.

ஜனாதிபதி தேர்தல் ரணிலின் கபட நாடகம் சஜித் முழக்கம்

நாட்டில் 18% VAT வரியை அதிகரித்து ஜனாதிபதி வெளிநாட்டுப் பயணங்கள் செல்வது போலவே 250 மில்லியன் ரூபா செலவழித்து செங்கடலைப் பாதுகாக்க கடற்படையை அனுப்பினாலும்,
பாடசாலைகளால் குடிநீர் கட்டணத்தை கூட செலுத்த முடியாத நிலையை எட்டியுள்ளதாகவும்,வியட்நாமில் தண்டிக்கப்பட்டதைப் போல,ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் வெளிப்படத்தன்மை மற்றும் பாரபட்சமற்ற நீதித்துறை கட்டமைப்பு மூலம் திருடர்கள் பிடிக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

கமிஷன் இல்லாமல் நேர்மையாகவும் தூய்மையாகவும் மக்களுக்கு சேவை செய்யும் திறன் தனக்கு இருப்பதாகவும்,இதற்காக தம்மை சுற்றி பெரும் நன்கொடையாளர்கள் இருக்கின்றனர் என்றும்,இங்கு பணம் எதுவும் தனக்கு கிடைக்கப்பெறுவதில்லை என்றும், உரிய உபகரணங்களை மாத்திரமே தாம் பெற்றுக் கொள்வதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

எனவே,ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில், ஒவ்வொரு நிதி பரிவர்த்தனையும் மக்கள் தெரிந்து கொள்ளும் பொருட்டு முன்வைக்கப்படும்.தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரிக்கைகளை முன்வைக்காமல் தொடர்புடைய தகவல்களை அணுக ஒரு நேரடித் திட்டம் வகுக்கப்படும். ஒவ்வொரு கொள்முதல் திட்டத்திற்கும் பல்தரப்பு அங்கீகாரத்தைப் பெறுவதற்கான வேலைத்திட்டம் தயாரிக்கப்படும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

ரணில் சஜித் மோதல் நாடகம்
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

ரணிலுக்கு சஜித் பெரும் போட்டியாக இருப்பார்

ரணிலுக்கு சஜித் பெரும் போட்டியாக இருப்பார்

தனது கட்சி மற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதற்கான பேச்சுவார்த்தைகளைக் கையாள்வதற்கான குழுவை நியமித்து வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்தார்.

“ஏனைய கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதற்கு எமது எமது கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு செயற்குழு அனுமதி வழங்கியுள்ளது. தற்போது மற்ற கட்சிகளுடன் கலந்துரையாட ஒரு குழுவை நியமிக்கும் பணியில் அவர் ஈடுபட்டுள்ளார்.

எமது வேட்பாளர் சஜித் பிரேமதாச, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு பாரிய போட்டியாக இருப்பார் என நம்புகின்றோம் ” என திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

ரணில் சஜித் மோதல் நாடகம்
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

உலகின் முதல்தர நாடாக மாற்றும் புதிய பயணம் பொங்கல் வாழ்த்துச் செய்தி சஜித்

உலகின் முதல்தர நாடாக மாற்றும் புதிய பயணம் பொங்கல் வாழ்த்துச் செய்தி சஜித்

இலங்கைவாழ் மற்றும் உலகெங்கிலும் உள்ள இந்து மக்கள் இயற்கைக்கு நன்றி செலுத்தும் முகமாக பக்தியுடனும் மரியாதையுடனும் கொண்டாடும் தைப்பொங்கல் திருநாள் தொடர்பில் வாழ்த்துச் செய்தியை தெரிவிப்பதையிட்டு மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன்.

மானுட வளர்ச்சியின் தொடக்கத்தில் இருந்து நாம் இயற்கையுடன் இணைந்த வாழ்க்கை முறையைக் கொண்டிருக்கிறோம். உலகிற்கு உயிர் கொடுக்கும் சூரிய பகவானை வழிபடுவது பண்டைய காலத்திலிருந்தே நடந்து வருகிறது. தைப்பொங்கல் பண்டிகை இந்த சூரிய பகவான் மீதுள்ள அபரிமிதமான நம்பிக்கை மற்றும் மரியாதைக்காக நடத்தப்படும் ஒரு சிறப்பு விழாவாக இந்த தைப்பொங்கள் திருவிழாவை சுட்டிக்காட்டலாம்.

தைப்பொங்கல் என்பது மனிதனுக்கும் இயற்கைக்கும் இடையிலான பரஸ்பர பிணைப்புக்கு நன்றி தெரிவிக்கும் ஒரு சிறந்த நிகழ்வாகும், மேலும் இந்து மக்களின் ஆன்மீக வாழ்க்கைக்கு நல்ல எண்ணங்களைச் சேர்க்கும் பண்டிகை என்றும் அழைக்கலாம்.

உலகின் முதல்தர நாடாக மாற்றும் புதிய பயணம் பொங்கல் வாழ்த்துச் செய்தி சஜித்

புதிய அறுவடையை சூரிய பகவானுக்கு படைத்து அடுத்து வரும் ஆண்டில் நல்ல அதிர்ஷ்டத்தை கொண்டு வர வேண்டப்படுகின்றது.

நம் நாட்டில் உருவாக்கப்பட்ட வங்குரோத்து நிலையால் ஏற்பட்ட சவால்மிக்க ஆண்டின் முடிவில் இன்னும் பல சவால்களுடன் இன்னுமொரு ஆண்டிற்குள் நுழைந்துள்ளோம்.

இனம், மதம், ஜாதி, குலம் என்ற வேறுபாடின்றி இந்த சவால்களை நாம் எதிர்கொள்ள வேண்டும். இதற்குத் தேவையான இயற்கையின்

ஆசீர்வாதங்களை இந்தத் தைப்பொங்கள் தினத்தில் பெற்று உலகின் முதல்தர நாடாக மாறுவதற்கான புதிய பயணத்திலும் புதிய மாற்றத்திலும் இணைந்து கொள்ளுமாறு உலகெங்கிலும் உள்ள இலங்கையர்களை இத்தருணத்தில் கேட்டுக்கொள்ளுகின்றேன்.

வீடியோ

ரணில் சஜித் மோதல் நாடகம்
Posted in இலங்கை செய்திகள்

அரச வளங்களை துஷ்பிரயோகம் செய்து விருந்துபசார கொண்டாட்டம்

அரச வளங்களை துஷ்பிரயோகம் செய்து விருந்துபசார கொண்டாட்டம்

பிரதமர் பதவியை பெற வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்றிருந்தால் திருடர்களுடனயே காலம் கடத்த நேரிட்டிருக்கும்.வரும் தேர்தல்களில் கூட திருடர்களுடன் சேர்ந்தே வாக்கு கேட்க வேண்டியிருந்திருக்கும்.திருடர்களை சட்டத்தின் முன் பாதுகாத்திருந்திருக்க வேண்டியிருக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

திருடர்களை பிடிக்க அரச அதிகாரம் தேவையில்லை என்றும்,அரச அதிகாரம் இல்லாமலயே உயர் நீதிமன்றத்தால் நாட்டையே வங்குரோத்தாக்கியவர்களை ஐக்கிய மக்கள் சக்தியால் வெளிக்கொண்டு வர முடிந்தது.தான்

ஜனாதிபதியாக பதவி ஏற்றிருந்தால் திருடர்கள் யார் என்று கண்டு பிடிக்க முடியாது போயிருக்கும் என்றும்,உயர் நீதிமன்றம் எந்தத் தீர்ப்பை

வழங்கினாலும் ரணில் விக்கிரமசிங்கவும் ஜனாதிபதியைப் போன்று கண்டும் காணாமலும் இருக்க நேரிட்டிருக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அரச வளங்களை துஷ்பிரயோகம் செய்து விருந்துபசார கொண்டாட்டம்

இரண்டு நாட்களுக்கு முன்னர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஆளும் தரப்பு அமைச்சர்கள் துறைமுக அதிகா ரசபைக்கு சொந்தமான இரு கப்பல்களைப் பயன்படுத்தி கடல் நடுவில் விருந்துபசார கொண்டாட்டம் போட்டனர்.

வங்குரோத்தடைந்த நாட்டில் இவ்வாறானதொரு விடயம் இடம்பெற்றதாகவும்,தானும் பிரதமராகவோ அல்லது ஜனாதிபதியாகவோ இருந்திருந்தால், ரணில் விக்கிரமசிங்க போன்று இவ்வாறான சட்ட விரோத செயல்களை கண்டுகொள்ளாதது போன்று செயற்பட்டிருக்க நேரிட்டிருக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப நிகழ்ச்சித் திட்டத்தின் 65 ஆவது கட்டமாக,மதுகம விதிய பண்டார வித்தியாலத்திற்கு 10 இலட்சம் ரூபா பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்களை வழங்கும் நிகழ்வில் நேற்று (11) கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சோசலிசம் என்பது வார்த்தைக்கு மட்டுமே. எனவே அதற்கு ஏமாறாதீர்கள்,

சோசலிசம் என்ற பெயரில் வீதியில் இறங்கி போராடும் புரட்சியாளர்களின் பிள்ளைகள் கூட வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களில் உயர்தர ஆடைகளை அணிந்து பயின்று வந்தாலும் அந்த வசதிகளை இந்நாட்டு மக்களுக்கு வழங்குதற்கு விருப்பம் இல்லாது செயற்பட்டு வருகின்றனர்.

சோசலிசம், சமத்துவம்,நீதி,நியாயம் என்று பேசினாலும் அவை வார்த்தைகளுடன் மாத்திரம் மட்டுப்பட்டவை என்றும், 2019 இல் கூட வெற்று கோஷங்களுக்கு செவி சாய்த்து ஏமாற்றியதாலும் தான் இந்நிலை ஏற்பட்டுள்ளது.இம்முறையும் அதே போன்ற பரப்புரைகளை நம்பி ஏமாந்தால் நாடு இன்னும் ஆழமான பாதாளத்திற்குச் செல்லும் என எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.

ரணில் சஜித் மோதல் நாடகம்
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

சஜித் பிரேமதாஸ, உயர்நீதிமன்றத்தில் செய்தார் சஜித்

சஜித் பிரேமதாஸ, உயர்நீதிமன்றத்தில் செய்தார் சஜித்

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாஸ, உயர்நீதிமன்றத்தில் இன்று (08) வழக்கொன்றை தாக்கல் செய்துள்ளார்.

கடந்த சில மாதங்களில் இலங்கை மின்சார சபை 52 பில்லியன் ரூபாaய் பாரிய இலாபத்தை ஈட்டியிருக்கும் வேளையில்,இந்த இலாபம் நாட்டின் மின்சார நுகர்வோருக்கு நிவாரணமாக வழங்கப்படாமை,மின் கட்டணம்

அதிகப்படியாக அதிகரிக்கப்பட்டதால் மின்கட்டணத்தைச் செலுத்த முடியாத 8 இலட்சம் மின் நுகர்வோரின் மின்சார இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளமை மற்றும் இதன் மூலம் நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகள்

மீறப்பட்டுள்ளன எனக் கூறி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கால் செய்தார்.

இலட்சக்கணக்கான மின் நுகர்வோரின் உரிமைகளைப் பாதுகாக்கும் வகையில், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, இலங்கை மின்சார சபை, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர,அமைச்சின் செயலாளர் எம்.பி.டி. யு.கே.மாபா பத்திரன மற்றும் சட்டமா அதிபரை பிரதிவாதியாகத் குறிப்பிட்டு எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி பர்மான் காசிம் இந்த மனுவை தாக்கல் செய்தார்.

மதிப்பிடப்பட்ட நீர்மின் உற்பத்தி 3750 முதல் 4510 ஜிகாவோட் வரை தாண்டியுள்ளமை, மின்சாரத் தேவை மணிக்கு 400 ஜிகாவோட் குறைந்துள்ளமையினால் 26 பில்லியன் ரூபாவும்,மின்சார அலகு ஒன்றின்

விலையை 18 சதவீதத்தால் அதிகரித்ததன் காரணமாகவும், மின்சார சபை தலா 26 பில்லியனாக ரூபாய் வீதம் 52 பில்லியன் ரூபாய் இலாபத்தை இத்தருணத்தில் ஈட்டியுள்ளமையினாலும், இந்த இலாபம் நாட்டின் மின்

சஜித் பிரேமதாஸ, உயர்நீதிமன்றத்தில் செய்தார் சஜித்

நுகர்வோருக்கு நிவாரணமாக வழங்கப்படாது,மின் நுகர்வோர்,நுண்,சிறிய மற்றும் நடுத்தர தொழில் முனைவோர் உள்ளிட்ட ஒட்டுமொத்த மக்களையும் மேலும் ஒடுக்குவதற்கு எதிராக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் வினைதிறனான மின் உற்பத்தி கொள்கை இல்லாததால்,மின்சாரத்தை உற்பத்தி செய்வதிலும்,வினைதிறனான சேவை வழங்குவதிலும் பல சிக்கல்கள் நிலவுகின்றன.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் ஒரு அலகு மின்சாரத்தின் விலை குறைந்த மட்டத்தில் கொடுக்கக்கூடிய தருணத்தில்,இதை மையமாக கொண்ட எந்த வேலைத்திட்டமும் நாட்டில் இல்லாததால், இது பெரும் பிரச்சினையாக உள்ளது.

அனைத்து மின்சார நுகர்வோரின் உரிமைகளுக்காகவும் வேண்டியே இந்த அடிப்படை உரிமை மனு தாக்கல் செய்யப்பட்டது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு தெரிவித்தார்.

இதன் மூலம் மின்சார விலையை குறைக்க வேண்டும்.இதற்கான பணிகளை பொதுப் பயன்பாட்டு ஆணைக்கு மேற்கொள்ள வேண்டும்.இதனால் கிடைக்கும் இலாபத்தை மக்களுக்கு வழங்க வேண்டும்.

அதுமட்டுமின்றி,வறிய மக்களுக்கான மின் நுகர்வோருக்காக வேண்டி புதிய மின்சார விலைச்சூத்திரமொன்று அறிமுகப்படுத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

நாட்டிலுள்ள மொத்த மின் நுகர்வோர் குறித்து சரியான தரவுகள் மின்சார சபையிடமோ அல்லது மின்சக்தி அமைச்சரிடமோ இல்லை.இந்த 2 நிறுவனங்களும் வைத்திருக்கும் தரவுகளில் முரண்பாடுகள்

உள்ளன.இவ்வாறான முரண்பாடுகள் இருந்தும்,துறைக்குப் பொறுப்பான அமைச்சர் பல்வேறு சட்டங்களை முன்வைத்துள்ளமை வியப்பளிக்கிறது.ஹிட்லரைப் போன்று மாறாமல் மகாத்மா காந்தி போன்று

செயற்படுமாறே துறைக்குப் பொறுப்பான அமைச்சரிடம் கூற வேண்டியுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் தெரிவித்தார்.

வீடியோ

ரணில் சஜித் மோதல் நாடகம்
Posted in இலங்கை செய்திகள்

ரணில் சஜித் மோதல் நாடகம்

ரணில் சஜித் மோதல் தேர்தல் நாடகம் ஆரம்பம்

ரணில் சஜித் மோதல் தேர்தல் நாடகம் ஆரம்பம் 15 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக பெறுமதி சேர் வரியை (வற்) அதிகரித்து நாட்டையே வங்குரோத்தாக்கிய ஜனாதிபதி சாடிய சஜித் .

எடுபிடிகள் மீண்டும் எழுச்சி பெற முயல்கின்றனர் என்றும்,7 மூளைகளை கொண்டவர்கள் என நாட்டையே வங்குரோத்தாக்கிய காக்கைகளுக்கு

மைனாக்களும் மீண்டும் எழுச்சி பெற கடும் பிரயத்தனம் எடுத்து வருகின்றனர் என எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாஸ குற்றஞ்சாட்டினார்.

ஆட்சிப் பொறுப்பை ஐக்கிய மக்கள் சக்தி ஏற்காமல் தற்போது ஜனாதிபதி கனவில் இருப்பதாக மாநாட்டின் போது நாட்டையே வங்குரோத்தாக்கிய

தலைவர் குறிப்பிட்டாலும்,நாட்டை வங்குரோத்தாக்கிய மொட்டுத் தரப்புடன் இணைந்து

கொண்டு நாட்டை கட்டியெழுப்ப முடியாது என்பதாலேயே இந்த பொறுப்பை ஏற்க தாம் விருப்பம் தெரிவிக்கவில்லை என்றும்,தான் தலைமையிலான

ஐக்கிய மக்கள் சக்தி மக்கள் ஆணையுடனேயே நாட்டைப் பொறுப்பேற்போம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.

ரணில் சஜித் மோதல் தேர்தல் நாடகம் ஆரம்பம்

பியகம பிரதேசத்தில் ஞாயிற்றுக்கிழமை (17) தினம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி,ஏனைய கட்சிகளைப் போல் ஊடகங்களில் வந்து கோப்புகளை காட்டி பொய்ப் படம் காட்டாது என்றும், நாட்டை

வங்குரோத்தடையச் செய்தவர்களை நடைமுறையில் சட்டத்தின் முன் எப்போதோ நிரூபித்து விட்டதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு வலியுறுத்தினார்.

நாட்டின் வங்குரோத்து நிலையால் வறுமை 30 இலட்சத்திலிருந்து 70 இலட்சமாக அதிகரித்திருக்கும் நேரத்தில், வறிய மக்களுக்கு நிவாரணம்

வழங்குவதற்கான முறையான வேலைத்திட்டம் எதுவும் அரசாங்கத்திடம் இல்லை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

தேர்தலின் போது மக்களுக்கு அதிகாரம் வழங்கப்படுவதாக கூறப்பட்டாலும், ஆட்சிக்கு வந்த பின் அரசியல்வாதிகளே தீர்மானங்களை எடுக்கின்றனர்

என்றும்,இந்நிலையை மாற்ற வேண்டிய தருணம் வந்துள்ளதாகவும், கிராமத்திலும் நகரத்திலும் முடிவெடுக்கும் அதிகாரத்தை இளைஞர்களுக்கு

வழங்குவதே ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இலக்கு எனவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் முடிவெடுக்கும் உரிமை வழங்கப்படும் அதிகாரம் அளிக்கப்படும் என்றும்,

நாட்டில் சிறுவயது முதலே கல்வியை மேம்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

பிரபஞ்சம்,மூச்சுத் திட்டங்களை எதிர்க்கட்சி செயல்படுத்தியபோது அரசாங்கம் சேறுபூசும் செயற்பாடுகளை முன்னெடுத்தாலும்,ஐக்கிய மக்கள்

சக்திக்கு பெறப்பட்ட ஒவ்வொரு நிதியும் வங்குரோத்து நிலையில் உள்ள நாட்டின் சுகாதாரம் மற்றும் கல்வி முறையை மேம்படுத்தவே பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

வீடியோ

ரணில் சஜித் மோதல் நாடகம்
Posted in இலங்கை செய்திகள்

சிங்களத்தால் மட்டுமே முன்னேற முடியாது

சிங்களத்தால் மட்டுமே முன்னேற முடியாது

50 களில் இருந்து சிங்களம் மட்டும் என்று கூறும் பொறிமுறைக்குள் இருந்து கொண்டு ஒரு நாடாக முன்னேற முடியாது. எனவே சிங்கள மொழி உள்ளடங்களாக பிற மொழிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுவது போல்

ஆங்கில மொழிக் கல்விக்கும் முன்னுரிமை வழங்க வேண்டிய நேரம் வந்துள்ளதென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (05) இடம்பெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான வரவு -செலவுத்திட்டத்தில் கல்வி அமைச்சுக்கான செலவுத்தலைப்பு மீதான விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

எமது நாட்டின் கல்விப் பரப்பில் புதிய மாற்றங்களை உள்வாங்கி கல்வியின் புதிய யுகத்திற்குள் நுழைய வேண்டும். 50 களில் இருந்து சிங்களம் மட்டும் என்று கூறும் பொறிமுறைக்குள் இருந்து கொண்டு ஒரு நாடாக முன்னேற

சிங்களத்தால் மட்டுமே முன்னேற முடியாது

முடியாது. நாமாகவே சுவர்களைக் கட்டிக்கொண்டு, எல்லைகளை வகுத்து, குறுகிய மனப்பாங்குடன் செயல்படும் போக்கில் ஒரு நாடாக உண்மையான சுபீட்சத்தை எட்ட முடியாது என்பதால்,சிங்கள மொழி உள்ளடங்களாக பிற

மொழிகளுக்கும் முன்னுரிமை வழங்கப்படுவது போலவே ஆங்கில மொழிக் கல்விக்கும் முன்னுரிமை வழங்க வேண்டிய நேரம் வந்துள்ளது என்றார்.

எனவே, நாட்டில் இருக்கும் 10,126 பாடசாலைகளிலும் ஆங்கில கல்வியை அபிவிருத்தி செய்ய வேண்டும். அதேபோன்று தற்போது பாடசாலைகளில் 6ஆம் தரத்தில் இருந்து 13ஆம் தரம் வரை கற்பிக்கப்படும் தொழிநுட்ப

கல்வியை 1ஆம் தரத்தில் இருந்து 13ஆம் தரம் வரைக்கும் விருத்தி செய்ய வேண்டும். அத்துடன் தொழிந்டப கல்வியை தாய் மொழியில் அல்லாமல் ஆங்கில மொழியிலேயே கற்பிக்க வேண்டும். அதன் மூலமே அதன்

உண்மையான கல்வியை பெற்றுக்கொள்ள முடியும். அதேநேரம் நாட்டில் இருக்கும் அனைத்து பாடசாலைகளையும் ஸ்மாட் வசதி உள்ள பாடசாலைகளாக மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிங்களத்தால் மட்டுமே முன்னேற முடியாது

மேலும் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு முன்னரும் பின்னரும் கல்வியில் இருந்து வெளியேறும் மாணவர்கள் தொழிற்பயிற்சி கல்வியை நாடினாலும்,தற்போது, அதன் தரம் குறைந்துள்ளது.

உயர்கல்வி வாய்ப்புகளை வலுப்படுத்த வேண்டும். உயர் கல்விக்கான வாய்ப்புகளை இழந்தோர்களுக்கான வாய்ப்புகளையும் விரிவுபடுத்த

வேண்டும் நாட்டில் 70 வீதமானவர்களுக்கு பல்கலைக்கழக வாய்ப்பு கிடைப்பதில்லை. அவர்களுக்கும் உயர்கல்விக்கான உரிமை வழங்கப்பட வேண்டும்.

அத்துடன், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பாக அரசாங்கம் மீண்டுமொரு முறை சிந்திக்க வேண்டும்.

மனப்பாட கல்வி முறையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். தரம் 5, கல்வி பொதுத் தராதர சாதாரண மற்றும் உயர் தர பரீட்சைகளின் சில பாடங்கள் மனப்பாடம் செய்து விடை எழுத வேண்டி இருக்கிறது என்றார்.

ரணில் சஜித் மோதல் நாடகம்
Posted in இலங்கை செய்திகள்

இறந்தாலும் ஊழலுக்கு எதிரான போராட்டத்தை நிறுத்த மாட்டேன் சஜித்

இறந்தாலும் ஊழலுக்கு எதிரான போராட்டத்தை நிறுத்த மாட்டேன் சஜித்

ஊழல், மோசடி, திருட்டு, வீண்விரயம் என்று நாடு முழுவதும் நடைமுறையில் உள்ளதாகவும், ஊழல் மோசடிகள் மூலம் வங்குரோத்து நாட்டை அழிக்கும் திட்டங்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் நிழலில் இருந்து

செயற்படுத்தப்படுவதாகவும், நாட்டை டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம் இந்த ஊழல் மற்றும் மோசடிக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

சில தலைவர்கள் கோப்புகளை தூக்கிக் கொண்டு கூட்டங்களுக்கு வந்து ஊழல் பேரங்கள் குறித்து பேசி ஆட்சிக்கு வந்ததும் தண்டிப்போம் என்று கூறினாலும், ஐக்கிய மக்கள் சக்தி எதிர்க்கட்சியாக இந்நாட்டை வங்குரோத்தாக்கிய

இறந்தாலும் ஊழலுக்கு எதிரான போராட்டத்தை நிறுத்த மாட்டேன் சஜித்

ராஜபக்ச குடும்பத்தை நீதிமன்றத்திற்கு கொண்டு வந்தது நாட்டை வங்குரோத்தாக்கியதன் மூலம் அடிப்படை உரிமைகளை மீறினார்கள் என்ற தீர்ப்பைப் பெற நடவடிக்கை எடுத்ததாகவும், இவை அனைத்தும் ஆட்சிக்கு

வருவதற்கு முன்பு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் என்றும், ஐக்கிய மக்கள் சக்தி கோப்புகளை காட்டி பொய்யான நடவடிக்கைகளை

நடத்துவதில்லை என்றும், ஊழலுக்கு எதிராக முன்நிற்கிறோம் என்று கூறும் சில தரப்பின் பொய்யை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

றந்தாலும் ஊழலுக்கு எதிரான போராட்டத்தை நிறுத்த மாட்டேன் சஜித்

உண்மையாகவும் தூய்மையாகவும் ஐக்கிய மக்கள் சக்தியானது திருடர்களுடன் எந்த டீல்களையும் மேற்கொள்ளவில்லை என்றும், ஐக்கிய மக்கள் சக்தி திருடர்களை பிடிக்கும் வேலையை ஆரம்பித்துள்ளதாகவும், உயர்

நீதிமன்ற தீர்ப்பின் மூலம் நாட்டையே வங்குரோத்தாக்கியவர்களை வெளிக்கொணர முடிந்ததாகவும், தற்போது கிராமம், நகரம், என அனைத்து பகுதிகளிலும் பொதுமக்களிடம் கையெழுத்து திரட்டும் பணி நடந்து

வருவதாகவும், இந்த மனுவின் மூலம் நாட்டை வங்குரோத்தாக்கிய 220 இலட்சம் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறிய அனைவருக்கும் எதிராக ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டு குடியுரிமைகளை

இல்லாதொழிக்கும் பொறுப்பை ஐக்கிய மக்கள் சக்தி பொறுப்பெடுத்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இந்த வழக்கின் தீர்ப்பு குறித்து பாராளுமன்றத்தில் கருத்துரைக்கும் போது குடும்ப ஆட்சிக்கு ஆதரவாக இருந்தவர்கள் பல்வேறு தடங்களை ஏற்படுத்தி தாம் கையில் வைத்திருந்த பத்திரங்களை கூட பறித்தெடுத்தனர் என்றும்,

தனது உயிரைப் பறித்தாலும் இந்த திருட்டு குடும்பத்தை சட்டத்தின் முன் நிறுத்துவதை யாராலும் தடுக்க முடியாது என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேலும் தெரிவித்தார்.

மினுவாங்கொடை நகரில் நேற்று (03) இடம்பெற்ற மினுவாங்கொட ஜனபவுர மக்கள் பிரதிநிதிகள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

வீடியோ

ரணில் சஜித் மோதல் நாடகம்
Posted in இலங்கை செய்திகள்

எனது ஆவணத்தை பறித்துவிட்டனர் சஜித் குற்றச்சாட்டு

எனது ஆவணத்தை பறித்துவிட்டனர் சஜித் குற்றச்சாட்டு

தான் முன்வைத்த விசேட கூற்றின் விபரங்கள் அடங்கியிருந்த கோவையை ஆளும் கட்சி உறுப்பினர்கள் சிலர் பறித்துச் சென்றதாக, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பாராளுமன்றத்தில், செவ்வாய்க்கிழமை (21) குறிப்பிட்டார்.

நாட்டை வங்குரோத்து செய்ய உழைத்தவர்கள் தொடர்பில் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் படி ராஜபக்ஷர்களிடம் இருந்து நட்டத்தை மீட்பீர்களா? என்றும் பாராளுமன்றத்தில் பிரேமதாச கேள்வி எழுப்பினார்.

கேள்வி முன்வைக்கப்பட்ட போது, ​​ஆளும் கட்சி உறுப்பினர்கள் தொடர்ச்சியாக கூச்சலிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எனினும், பாடசாலை

மாணவர்களும் கலரியில் இருக்கின்றனர். ஆகையால், தொடர்ந்தும் இவ்வாறு நடந்து கொள்ள வேண்டாமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

எனது ஆவணத்தை பறித்துவிட்டனர் சஜித் குற்றச்சாட்டு

இந்த சம்பவம் இடம்பெற்றுக்கொண்டிருந்த போது, எதிர்க்கட்சி உறுப்பினர் நளின் பண்டார வீடியோ எடுத்தார். அவ்வாறு வீடியோ எடுக்க வேண்டாம் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, நளின் பண்டாரவிடம் கேட்டுக்கொண்டார்.

ஆளும் கட்சி உறுப்பினர்களின் எதிர்ப்பையும் மீறி எதிர்க்கட்சித் தலைவர் தனது கேள்வியை முன்வைத்ததையடுத்து ஆளும் கட்சி உறுப்பினர்கள் ஆசனங்களில் இருந்து எழுந்து எதிர்க்கட்சித் தலைவரை அணுகினர்.

இதன்போது, ​​படைக்கல சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ மற்றும் ஏனைய சேவிதர்கள், எதிர்க்கட்சித் தலைவரின் அருகில் வந்து அவரைப் பாதுகாப்பதைக் காணமுடிந்தது.

இதையடுத்து அவையை ஐந்து நிமிடங்களுக்கு ஒத்திவைத்த சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன, மீண்டும் 11.14க்கு ஆரம்பித்தார்.

அப்போது உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, என்னுடைய கையில் இருந்த ஆவணத்தை ஆளும் கட்சி உறுப்பினர் சனத்

நிஷாந்த அபகரித்தார். அதனை, சமர விக்ரமவிடம் கொடுத்தார். அத்தனையும் பிரதமர் முன்னிலையிலேயே நடந்தது.

என்னுடைய கையில் இருந்த ஆவணத்தை இவ்வாறு அபகரிக்க முடியுமா? ​அல்லது 22/7இன் கீழ், சிறப்பு கூற்றொன்றை எனக்கு விடுவிக்க உரிமை இல்லையா? என்றும் வினவினார்.

அழைப்பு விடுக்கிறார் பிரதமர் மறுக்கிறார் சஜித்
Posted in இலங்கை செய்திகள்

அழைப்பு விடுக்கிறார் பிரதமர் மறுக்கிறார் சஜித்

அழைப்பு விடுக்கிறார் பிரதமர் மறுக்கிறார் சஜித்

பிரதமர் தினேஷ் குணவர்தன பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளுக்கும், இன்று தேர்தல் சீர்திருத்தம் குறித்து கலந்தாலோசிக்க அழைப்பு விடுத்துள்ளார்.

”அமைச்சரவையின் கோரிக்கையின் பேரில் நாங்கள் இந்த அழைப்பை விடுக்கிறோம். இன்றைய சந்திப்பின் முடிவுகளை நான் அமைச்சரவைக்கு அறிவிப்பேன்.

தேர்தல் சீர்திருத்தங்களைக் கொண்டு வருவதற்கான ஆணையை தற்போதைய அரசாங்கம் 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில் பெற்றுள்ளது” என பிரதமர் பாராளுமன்றத்திற்கு தெரிவித்தார்.

அழைப்பு விடுக்கிறார் பிரதமர் மறுக்கிறார் சஜித்

”பல கட்சிகள் சந்திப்பில் கலந்து கொள்வதற்கு ஒப்புக்கொண்டுள்ளன” என தேர்தல் ரத்து செய்யப்படாது என்பதை உறுதிப்படுத்தும் போது பிரதமர் மேலும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும் தனது தலைமையில் இயங்கும் ஐக்கிய மக்கள் சக்தி குறித்த சந்திப்பில் கலந்து கொள்ளாது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

”முதலில் தேர்தலை நடாத்துங்கள். பின்னர் தேர்தல் சீர்திருத்தங்கள் பற்றி யோசிப்போம்.

தேர்தல் மறுசீரமைப்பு எனும் போர்வையில் அரசாங்கம் தேர்தலைப் பிற்போடவே முயற்சிக்கிறது” என அவர் மேலும் தெரிவித்தார்.

முல்லைத்தீவு நீதிபதி விவகாரம் விசாரணை தேவை சஜித்
Posted in இலங்கை செய்திகள்

முல்லைத்தீவு நீதிபதி விவகாரம் விசாரணை தேவை சஜித்

முல்லைத்தீவு நீதிபதி விவகாரம் விசாரணை தேவை சஜித்

முல்லைத்தீவு நீதிபதியின் பதவி விலகல் மிகவும் பாரதூரமான விடயமாகும் என்றும், இது நீதித்துறை சுதந்திரம் சார் பிரச்சினை என்றும், அவருக்கு கொலை மிரட்டல்களும், அழுத்தங்களும் வந்ததாக கூறப்பட்டுள்ளதாகவும்,

இது ஒரு பாரதூரமான அறிவிப்பு என்பதால், சுதந்திரமான விசாரணை நடத்தப்பட்டு, இதன் பின்னனியில் உள்ள உண்மை குறித்து இந்த சபைக்கு

அறிவிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று(03) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதேவேளை, அரசாங்கம் சகல பக்கங்களிலிருந்தும் மக்களின் பேச்சுச் சுதந்திரத்தை இல்லாதொழிக்கவும், ஜனநாயகத்தை இல்லாதொழிக்கவும்

தயாராகி வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (3) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தில்,அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்தால், சிறையில் அடைக்க வாய்ப்பு உள்ளதாகவும்,நிகழ் நிலை காப்பு சட்டத்தின்

ஊடாக இவ்வாறான தண்டனைகளை விதிக்கவும் வாய்ப்பு உள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

முல்லைத்தீவு நீதிபதி விவகாரம் விசாரணை தேவை சஜித்

அப்பிள், அமேசான், கூகுள், மொட்டா, எக்ஸ், புக்கிங்.காம் போன்றவற்றை உள்ளடக்கிய Asia Internet Coalition கடுமையான எதிர்ப்பை

வெளியிட்டுள்ளதாகவும், இவர்கள் நாட்டை விட்டு வெளியேறினால் வெளிநாட்டு முதலீடுகள் வீழ்ச்சியடையும் என்றும் எதிர்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

நிகழ் நிலை காப்பு சட்டமூலத்தை கொண்டு வந்து இன்று என்ன நடந்துள்ளது என்று சிந்தித்து பார்க்குமாறும்,ஆசிய இன்டர்நெட் கூட்டமைப்பானது கடுமையான எதிர்ப்பை வெளியிட்டுள்ளதாகவும், இவற்றை விரட்டியடுத்து

விட்டால் சர்வதேச முதலீட்டை எவ்வாறு பெற்றுக்கொள்ள முடியும் என்றும், நிகழ் நிலையில் எவ்வித பாதுகாப்பும் இல்லை என்றும்,அரசாங்கத்தின்

பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், ஜனாதிபதியின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும் எடுக்கும் முயற்சியே இதுவாகும் என்றும்,இது

சர்வாதிகாரமான தவறானதோர் திட்டமாகும் என்பதனால் இதை வாபஸ் பெற வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஈஸ்டர் தாக்குதல் சஜித் வௌியிட்ட ஆதாரங்கள்
Posted in இலங்கை செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் சஜித் வௌியிட்ட ஆதாரங்கள்

ஈஸ்டர் தாக்குதல் சஜித் வௌியிட்ட ஆதாரங்கள்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான நேற்றைய (22) விவாதத்தில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆற்றிய முழுமையான உரை பின்வருமாறு,

ஈஸ்டர் தாக்குதல் மற்றும் விசாரணையின் காரணமாக ஒடுக்கப்பட்ட மற்றும் துன்புறுத்தப்பட்ட சமூகத்தின் சார்பாக ஐக்கிய மக்கள் சக்தி இந்த பிரேரணையை முன்வைத்தது. ஆரம்பத்திலேயே சொல்லவேண்டும் எங்களின் இந்த முயற்சி எவருக்கும் அரசியல் அவதூறுக்காகவோ நற்பெயருக்கு

களங்கம் விளைவிக்கவோ அதன் மூலம் அரசியல் ஆதாயம் பெறுவதோ அல்ல, உண்மை என்ன என்பதைப் புரிந்துகொள்வதே எங்களின் முக்கிய நோக்கம் சனல் 4 தொலைக்காட்சியினால் இது வெளிச்சத்திற்கு வந்தது என்று சில தூங்கிக்கொண்டிருக்கும் எம்.பி.க்கள் சொல்கிறார்கள். இந்த ஈஸ்டர்

தாக்குதலின் உண்மை மற்றும் சூத்திரதாரி குறித்து முழு நாடும் விழிப்புடன் இருக்கின்றது. எனவே, செனல் 4 பற்றி நாங்கள் கூறத்தேவை இல்லை. ஈஸ்டர் தாக்குதல் மற்றும் அதன் சூத்திரதாரி மற்றும் உண்மை பற்றி பல சந்தர்ப்பங்களில் நாங்கள் தொடர்ந்து பேசியுள்ளோம்.

இவ்வாறான தாக்குதல் அமெரிக்காவிலும் இடம்பெற்றது. இது அல்-கொய்தா 9 /11 தாக்குதல் என்று அழைக்கப்பட்டது. 9 /11 அறிக்கை என்னிடம் உள்ளன என்பதை கௌரவ சபாநாயகருக்குக் தெரிவிக்க விரும்புகிறேன்.

நான் அமெரிக்கன் அல்ல. நான் இலங்கையன் இந்த ஆணைக்குழு அறிக்கையில் அமெரிக்கா எதையும் தணிக்கை செய்யவில்லை. எந்த கட்டுப்பாடுகளும் இல்லை.

சபாநாயகரின் அனுமதி தேவை என்று கூறவில்லை. இது செனட் தலைவரின் அனுமதி தேவை என்று கூறவில்லை. அவ்வாறான பொய்யான நிபந்தனைகள் இந்த பாராளுமன்றத்தில் தான் போடப்பட்டுள்ளது. இது 9 /11 அறிக்கை. யார் வேண்டுமானாலும் வாசிக்கலாம். பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட்டது. 9 /11 ஆணைக்குழு கட்டமைப்பு ஜனநாயகக் கட்சியிலிருந்து 5 மற்றும் குடியரசுக் கட்சியிலிருந்து 5 பேர். சமமாக நியமிக்கப்பட்டனர் ஏன் .

உண்மையை தேட வேண்டும். என்பதற்காகும் அவர்கள் உண்மையைக் கண்டுபிடித்தார்கள். உண்மையில், 9/11 அறிக்கையின் விளைவாக ஹோம் லேண்ட் சிக்கியுரிட்டி டிபாட்மென்ட் உருவாக்கப்பட்டது.

உளவுப் பிரிவின் பல்வேறு அம்சங்கள் மீதான விமர்சனம். இருந்த CIA, FBI மற்றும் பிற புலனாய்வு அமைப்புகள் விமர்சிக்கப்பட்டன. புலனாய்வு அமைப்புகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு இல்லாதது குறித்தும் வெளிப்படையாக விவாதிக்கப்பட்டது. அதிலிருந்து கற்றுக்கொண்டார்கள்.

ஈஸ்டர் தாக்குதல் சஜித் வௌியிட்ட ஆதாரங்கள்

நம் நாட்டில் என்ன நடந்தது? படிப்பினை பெற்றோமா? நம் நாட்டில் தெரிவுக்குழு அறிக்கை உள்ளது. மலல்கொட அறிக்கை. இந்த மலல்கொட அறிக்கையும் மறைக்கப்பட்டது. இது தகவல் அறியும் சட்டத்தினாலேயே வெளியே வந்தது.

அடுத்து, ஜனாதிபதி ஆணைக்குழுவின் தொகுதி 1 உள்ளது. அதைத் தொட எங்களுக்கு உரிமை இல்லை. அதைப் பார்ப்பதற்கு நூலகத்தின் பின்னால் ஊர்ந்து செல்ல வேண்டும். நாங்கள் இன்னும் அதன் பிரதியைப் பெறவில்லை.. எங்களுக்கு 9/ 11 அறிக்கையைப் பெறலாம். 2019ல் நம் நாட்டில் நடந்த இழிவான பயங்கரவாதத் தாக்குதல் குறித்து எதிர்க்கட்சித் தலைவருக்கோ

அல்லது 225 பேருக்கோ முழுமையான அறிக்கையைப் பெற முடியாது. இதுதான் நிலைமை. இது வேடிக்கையானது. ஏன் இவ்வாறான நிலை உருவாக்கப்பட்டது என்று நாம் கேள்வி எழுப்ப வேண்டும். நாட்டு மக்களிடம் இந்த உண்மை யதார்த்தத்தை ஏன் மறைக்க வேண்டும்.

உங்களுக்கு முதுகெலும்பு இருந்தால் மலல்கொட அறிக்கை, தெரிவுக்குழு அறிக்கை, ஆணைக்குழு அறிக்கை மற்றும் அதன் பரிந்துரைகளை உடனடியாக நடைமுறைப்படுத்துங்கள் என்று இந்த அரசாங்கத்திற்கு நான் கூறுகின்றேன். மேலும் இந்த முயற்சியை கொச்சைப்படுத்துவதற்காக அல்ல. உண்மையைக் கண்டுபிடிக்கவும்.

இப்போது ஒரு கடுமையான பிரச்சினை உள்ளது பலர் ஏன் உண்மை வெளிவரவில்லை என்று சந்தேகிக்கிறார்கள். எனக்கும் உள்ளது.. சாட்சிகளுடன் சபைக்கு சமர்ப்பியுங்கள் ஏன் இந்த செயற்பாடுகளில் சந்தேகிக்கின்றோம் என இந்தச் சபையில் முன்வைக்க விரும்புகிறேன்.

முதல் கேள்வி வவுணதீவு பிரச்சினை

இதில் 2 போலீசார் கொல்லப்பட்டனர். 2018 நவம்பர் 30, இல் கொல்லப்பட்டனர். விசாரணைகள் டிசம்பர் 1 அன்று தொடங்கியது. டிசம்பர் 3 அரசாங்க உளவுத்துறை தலைவர் ஒரு கல்வெட்டின் பின்னால் ஒரு ஜாக்கெட் இருப்பதாகவும் தேடும்படியும் கேட்டார். அதன் பின்னர், கட்டுவாப்பிட்டி

குண்டுவெடிப்பு குறித்து டிஐஜி எஸ். பி.டி. ஜே. .பி.ஜெயசிங்கவைத் தேடினர். இப்போது அவர் ஜனாதிபதியின் பாதுகாப்புத் தலைவராக உள்ளார். டி.ஐ.ஜீ ஒரு நாயைப் பயன்படுத்தினார்.

அந்த நாய் அஜந்தனின் வீட்டிற்கு சென்றது. இது எமக்கு ஜாக்கெட்டை போட்டு இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களின் மரணத்திற்கு புலிகள் மீது பழி சுமத்தினர். சிஐடி தவறாக வழிநடத்தப்பட்டது. மேலும், இராணுவ புலனாய்வுப் பிரிவின் 5 அறிக்கைகள் உள்ளன. 2018 டிசம்பர் 5, 8, 13, மற்றும் 2019 ஜனவரி 3, இல், இந்த 4 அறிக்கைகளிலும் இந்தக் கொலைகள் புலிகளால்

செய்யப்பட்டவை என்று இராணுவப் புலனாய்வுப் பணிப்பாளர் சூல கொடித்துவக்கு கூறுகிறார். இறுதியில் சாய்ந்தமருது சம்பவத்தில் உயிரிழந்த அலுவலர்கள்தான் என்பது நிரூபணமானது. இந்த குண்டுவெடிப்பில் இந்த அலுவலர்களை கொன்ற ஆயுதம் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த இரண்டு

வவுணதீவு பொலிஸ் அலுவலர்களின் கொலைச் சம்பவம் தொடர்பாக சிஐடியை, அரச புலனாய்வுப் பிரிவு மற்றும் இராணுவப் புலனாய்வுப் பிரிவு தவறாக வழிநடத்தியது. இதை விசாரிக்கவும். இது சரியா தவறா என்று

சொல்லுங்கள். நாம் முடிவுகளுக்கு வர முடியாது. நடந்த சம்பவங்களின் சங்கிலித் தொடர் உள்ளது. அதை விசாரிக்க அரசு தயாராக இல்லை.

இரண்டாவது சந்தேகத்திற்குரிய விடயம்

9/11க்குப் பிறகு படிப்பினை பெற்ற நிறுவனங்களில் FBIயும் ஒன்று. ஈஸ்டர் தாக்குதலுக்குப் பிறகு, அவர்கள் கணினிகள், தொலைபேசி உரையாடல்கள், குறுந்தகடுகள் போன்றவற்றைச் சரிபார்த்து, அவர்கள் ஐபி முகவரியைக் கண்டுபிடிக்கிறார்கள். இது இராணுவ புலனாய்வு அதிகாரி ஒருவருக்கு

சொந்தமானதும் மற்றும் பயன்படுத்தப்பட்டதுமாகும். பெயர் தெரியவில்லை. கிடைத்த தகவலின்படி, ஒரு முஸ்லிம் தேசிய இராணுவ புலனாய்வு அதிகாரி. இதன் முக்கியத்துவம் என்னவென்றால், இந்த ஐபி முகவரியில் இருந்து சஹ்ரானுக்கு அதிகபட்ச தொலைபேசி அழைப்புகள் இருப்பது தெளிவாகத்

தெரிந்ததாக FBI தெரிவித்தது. ,. ஈஸ்டர் தாக்குதலுக்கு முன், சஹ்ரானை நாட்டின் பாதுகாப்புப் படையினர் தேடினர் என நாம் அனைவரும் அறிவோம். சஹ்ரானின் அணிகளைத் தேடினர். ஆனால் சஹ்ரான் இல்லை.

அந்த நேரத்தில், எஃப்பிஐ வழங்கிய ஐபி முகவரியில், உளவுத்துறை அதிகாரி ஒருவர் சஹ்ரானுடன் அதிக நேரம் பேசியிருக்கின்றார் என்பது தெளிவாகியது.

இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த சூலா கொடிதுவக்கு சொல்கின்றார் தேசிய பாதுகாப்புப் பிரச்சினை என்பதால் அவரைக் கேள்வி கேட்க வேண்டாம் என்று சிஐடியின் எப்.பி தர்ஷிகாவிடம் கூறுகிறார்.

இந்த உளவுத்துறை அதிகாரிக்கு ஒன்றும் செய்ய வேண்டாம் என்று. இந்த விஷயத்தை நாங்கள் விசாரிக்க வேண்டும். ஆராய வேண்டும்., அது உண்மையா இல்லையா என்பதை நீங்கள் கண்டுபிடிக்க வேண்டும்

மூன்றாவது விடயம்

சொனிக் சொனிக் என்ற விடயம். இந்த பாராளுமன்றத்துக்குள் சொனிக் சொனிக் என்றவர்கள் டானிக் டானிக் அமைச்சுக்களை எடுத்தார்கள் என்பது உங்களுக்கே தெரியும். டானிக் டானிக் அமைச்சை எடுத்துக் கொண்டு உண்மையைக் கண்டுபிடிக்க முடியாமல் இப்போது பெனிக் பெனிக்

ஆகிவிட்டனர். அப்போது, ​​சொனிக் சொனிக் அமைச்சர் பதவி எடுக்க, டானிக் டானிக், இப்போது பெனிக் பெனிக். இது என்ன சொனிக் சொனிக் பிரச்சினை? தெளிவாகச் சொல்வதானால், சிறிய சஹ்ரான் மாத்தளையில் பிடிபடுகின்றார். போலீசார் கைது செய்கின்றனர்.. அவரை சி.ஐ.டி. கைப்பற்றுகின்றனர்.

அவர் பெயர் பஸ்குல் ரஹ்மான். கத்தாரில் உள்ள ஐசிசி குறித்து அவரிடம் விசாரித்த போது சொனிக் சொனிக்குடன் தொடர்புடன் இருந்ததாகவும் இந்த சொனிக் சொனிக் என்ற நபரின் தொலைபேசி இலக்கம் மற்றும் ஐபி முகவரியைத் தேடும்போது, ​​​​ அந்த சிப் நகர போக்குவரத்துப் பிரிவின் பெண்

போலீஸ் சார்ஜென்ட் என்பவருடையதாக இருக்கின்றது.. இது தனது சிம் கார்டு என்றும், அதை தனது காதலன் எஸ்ஐ பண்டாரவிடம் (ஐபி அப்போது) கொடுத்ததாகவும் கூறுகிறார்.

இந்த உளவுத்துறை அதிகாரி சின்ன சஹ்ரானிடம் கூறுகிறார் பல குண்டுகள் வெடித்தும், இதை ஏன் ஐஎஸ்ஐஎஸ் ஏற்கவில்லை என்று. ஒரு எஸ்ஐஎஸ் அதிகாரி சின்ன சஹரான் போன்ற பயங்கரவாதியிடம் இதை ஐஎஸ்ஐஎஸ்ஸிடம் ஏற்றுக்

கொள்ளுமாறு சொல்வது ஏன்?. இந்த தாக்குதலை ஐஎஸ் நடத்தியது என்பதை ஏற்க வேண்டும். நமது நாட்டின் உளவுத்துறை அதிகாரி ஒருவர் இதைச் செய்கிறார்.

சின்ன சஹ்ரான் இந்தோனேசியாவுக்குக் கதைத்து கேட்டபோது, ​​பையத் செய்யவில்லையாம் என்று கூறியுள்ளார்… ஆனால் 23ம் திகதி இந்தியாவில் இருந்து சமூக வலைதளங்களுக்கு செல்லுகின்றது.

இந்த உண்மைகளை தேடிப் பார்க்கும் போது, ​​அரச புலனாய்வுப் பிரிவின் டி.ஐ.ஜி சம்பத் லியனகே, “இந்த எஸ்.ஐ. பண்டாரவைக் கேள்வி கேட்காதீர்கள். தேசிய பாதுகாப்பைப் பாதிக்கும் மிக முக்கியமான விஷயங்கள் உள்ளன, எனவே இவர்களை விசாரிக்க வேண்டாம்” என்று கூறுகிறார்.

நான் யாரையும் குறிவைக்கவில்லை. இது உண்மை. நான் எந்த முன்முடிவுக்கும் வரவில்லை. இந்த சோனிக் சோனிக்கையும் விசாரிக்க வேண்டும். சோனிக் சோனிக்கை பயன்படுத்தி அரசியல் டானிக் அடித்தவர்கள்

இன்று மௌனமாக உள்ளனர். அவர்கள் இன்று இந்த சபையில் இல்லை. அவர்கள் பீதியடைந்தனர். ஏனென்றால் உண்மை வெளிப்படுகிறது. எனவே இதையும் விசாரிக்கவும்.

நான்காவது விடயம்

தாஜ் ஹோட்டலை தகர்க்க வந்த பயங்கரவாதி ஜமீல், அவனது பையையும் டெலிபோனையும் ஒரு மேசையில் வைத்திருக்கிறான். போனை எடுக்கிறார். பேக்கை எடுத்துக்கொண்டு முச்சக்கர வண்டியில் செல்லுகிறான். அதன் பின்னர் தெஹிவளையில் உள்ள ட்ரெபிகல் இன்னுக்கு செல்கிறார். இந்த குண்டுதாரி தனது பையை ட்ரெபிகல் விடுதியில் வைத்துவிட்டு பள்ளிக்குச் செல்கிறார். பள்ளியில் உள்ள சிகுரிட்டி விசாரிக்கிறார்.

அப்போது குண்டு வெடித்து விடுகின்றது.. அப்போது அவர் சொல்கிறார் மனைவி மீது கோபம் கொண்டதால் தான் வீட்டில் இருந்து பள்ளிக்கு மத வழிபாடுகளுக்காக வந்ததாக கூறுகிறார். மனைவியின் தொலைபேசி இலக்கம் கொடுக்கப்படுகின்றது அந்த சிகுரிட்டி முன்னாள் போலீஸ் அதிகாரி. ஜெமிலின் மனைவி அப்போது உண்மையைச் சொல்கின்றார்..

இப்போது பாதுகாப்பு அமைச்சின் இரண்டு அதிகாரிகள் எங்கள் வீட்டில் இருக்கிறார்கள் என்று அவள் சொல்கிறாள். அந்த உரையாடலுக்குப் பிறகு, அவர் சந்தேகத்தை இழந்து விடுவிக்கப்பட்டார்.

அப்போது பாதுகாப்பு அதிகாரிக்கு அழைப்பு வருகிறது.ஜமீலின் மனைவி வீட்டிற்கு பாதுகாப்பு அதிகாரி ஒருவர் வந்துள்ளார். ஜெமிலை அருகில் வைத்துக்கொள்ளுங்கள் என்கிறார். அப்போது பாதுகாப்பு அதிகாரி ஜெமீல் சென்றுவிட்டதாக கூறுகிறார். பகல் 1.30 மணியளவில், ஜமீல் டிராபிகல் விடுதிக்குச் சென்று தன்னைத் தானே வெடிக்க வைத்துக் கொள்கின்றார்.

3.30 மணிக்குப் பிறகு, பள்ளி காவலருக்கு வெள்ளவத்தை பொலிஸுக்கு வருமாறு அழைப்பு வருகிறது. 5 மணியளவில் பொலிசுக்குச் செல்லும்போது, ​​அங்கு ஜமிலின் மனைவியைச் சந்திக்கச் சென்ற பாதுகாப்பு பிரிவு அலுவர்கள் இருந்துள்ளனர்.

அப்போது இவர்கள் உளவுத்துறை அதிகாரிகள் என்பது தெளிவாக காவலாளிக்கு தெரியவருகின்றது. இதில் மிக முக்கியமான விடயம் என்னவெனில் வெடிகுண்டை வெடிக்கச் செய்வதற்கு முன்னர் இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் ஜெமிலின் மனைவி வீட்டுக்கும் வேறு வீட்டுக்கும்

சென்றது ஏன் என்பதுதான். இதில் எது உண்மை? என்ன தொடர்பு அப்போது மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்படி, புலனாய்வு அதிகாரிகள் அழைக்கப்பட்ட இலக்கங்களை ஆராய்ந்தபோது, ​​சிம் கார்டு சிலோன் ஷிப்பிங் லைன்ஸ், இலக்கம் 88, பௌத்தாலோக மாவத்தை, கொழும்பு 3 என்ற முகவரியாக இருக்கின்றது.. இந்த சிம்கள் போலி முகவரியில்

வாங்கப்பட்டுள்ளன. இந்த சிம்மை பயன்படுத்தி லசந்த விக்கிரமதுங்கவின் மரணம் முன்னெடுக்கப்பட்டமை மிகவும் ஆபத்தான விடயமாகும். கீத் நொயர், எக்னலிகொட, உபாலி தென்னகோன் மீதான தாக்குதல்களுடன் தொடர்புடைய சிம் அட்டைகள் இவை. அன்றும் இந்த முகவரியில்தான் பதிவு செய்யப்பட்டது.

இவை விசாரணையில் தெரியவந்த விடயங்கள் அதனால்தான் நூலகத்தில் மறைத்து வைத்திருக்கின்றனர். சபாநாயகர் அவர்களே, எங்கள் உரிமைகளின் பாதுகாவலர் என்ற வகையில், அவற்றின் அனைத்து பிரதிகளையும் அனைவருக்கும் வழங்குங்கள். மறைக்க வேண்டாம் இந்த நாட்டு மக்களை ஏமாற்றாதீர்கள்.

ஜெமீல் தற்கொலை குண்டுதாரி பற்றி இராணுவ உளவுத்துறைக்கு தெரியுமா? வெடிகுண்டு வெடிக்கும் முன் இரண்டு வீடுகளுக்கு எப்படி சென்றீர்கள்? யார் செய்தது? பல்வேறு சாட்சியங்களில் இருந்து கிடைத்த தகவல்களில் இருந்தும் இதைச் சொல்கிறேன்.

நான் சொல்வது 100% சரிதானா என்று தெரிந்து கொள்ளுங்கள். நேற்று தெரிவுக்குழு நிறுவப்படும் என்று கூறப்பட்டது. கேலி செய்ய வேண்டாம். அப்படி நிறுவுவதானால் , 9/11 ஆணைக்குழு போல உறுப்பினர்கள் சமமாக இருக்க வேண்டும். சபாநாயகருக்கும் ஜனாதிபதிக்கும் அதற்கான முதுகெலும்பு உள்ளதா?

அதே போன்று முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் மஹீல் டூலின் சகோதரர் பல சந்தர்ப்பங்களில் சகோததர் பற்றி பயப்படுவதாகவும், சகோதரர் தீவிரவாதியாகிவிட்டதாகவும், இதைக் கண்டுபிடிக்கச் சொல்கிறார்.

அப்படிச் செய்யாவிட்டால் பேரழிவுதான் என்றும் சொல்கின்றார் மஹில் டூல் இது பற்றி அரச உளவுத்துறை தலைவரிடம் கூறுகிறார். ஆனால் கணக்கெடுக்கவில்லை. இதையும் விசாரிக்கவும். உண்மையைக் கண்டுபிடிக்கவும்.

ஐந்தாவது விடயம் – சாய்ந்தமருது ஆயுதம்

வவுணதீவு பொலிஸ் உத்தியோகத்தர்கள் புலிகளால் கொல்லப்பட்டதாக இராணுவ புலனாய்வுப் பிரிவினர் மற்றும் எஸ்ஐஎஸ் சிஐடியை தவறாக வழிநடத்தினர். ஆனால், 2008ல், ஏறாவூர் போலீசில், ஆதம் லெப்பை என்ற ஊர்க்காவலர் உள்ளார். அவருக்கு ஆயுதம் கொடுக்கப்பட்டுள்ளது.

அவர் பணிக்கு வரவில்லை, துப்பாக்கியை ஒப்படைக்கவில்லை. அது தன் மனைவி வீட்டுக் கூரையில் இருப்பதாகச் சொல்கிறார். சரணடையாததால் மாமனார் கைது செய்யப்படுகிறார். 10 நாட்களுக்குப் பிறகு அவர் வெளியேறுகிறார். ஆதம் லெப்பையினால் வழங்கப்பட்ட ஆயுதத்தின் சீரியல் இலக்கம் அகற்றப்பட்டு, அவருக்கு வழங்கப்பட்ட ஆயுதத்தின் சீரியல் இலக்கம் செயற்கையாக புகுத்தப்பட்டன. இப்போது இது தொடர்பாக வழக்கு விசாரணையில் உள்ளது..

அந்த வழக்கில், முரண்பட்ட சான்றுகள் இருப்பதாக்கூறி. ஆதம் லெப்பை விடுவிக்கப்படுகின்றார். ஆனால் இதில் மிக முக்கியமான விடயம் என்னவென்றால், 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி ஈஸ்டர் தாக்குதல் இடம்பெற்று 5 நாட்களின் பின்னர் சாய்ந்தமருது பிரதேசத்தில் தற்கொலை சம்பவம் ஒன்று இடம்பெறுகின்றது. 16 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. அங்கே ஒரு ஆயுதம் கிடைக்கின்றது. குண்டுவெடிப்பை சஹ்ரானின் சகோதரர் மற்றும் பெற்றோர் செய்துள்ளனர். அங்கு கிடைத்த ஆயுதம் ஆதம் லெப்பையின் ஆயுதம் போன்றது. அதனை மேலும் விசாரிக்கும் போது சாய்ந்தமருது வெடிப்புச் சம்பவத்தில் கண்டெடுக்கப்பட்ட ஆயுதமும், ஆதம் லெப்பையின் ஆயுதமும் ஒன்றே என்பது தெளிவாக நிரூபணமாகியுள்ளது. அது மட்டும் அல்ல. எனது ஞாபகத்தின் அடிப்படையில் வவுணதீவு பொலிஸ் உத்தியோகத்தர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்தில் 8 எமோ கெப்சியுல் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. கொலைக்கு பயன்படுத்திய ஆயுதத்தில் அவை இருந்ததாக கூறப்படுகிறது. அவை சாய்ந்தமருது சம்பவத்துடன் தொடர்புள்ள ஆயுதம் என தெரியவருகின்றது. அதனை மேலும் ஆராயும் போது, ​​தனது ஆயுதம் இராணுவத்துடன் தொடர்புடைய முஸ்லிம் குழுவினால் அல்லது இராணுவத்தின் உளவுப் பிரிவினால் எடுக்கப்பட்டதாக ஆதம் லெப்பை கூறுகிறார்.

இங்கே கடுமையான சந்தேகம் எழுகின்றது. விசாரியுங்கள். மறைக்க வேண்டாம். ஒரு பாரபட்சமற்ற விசாரணை செய்யுங்கள்.

ஆறாவது விடயம் – அபு ஹிந்த்.

ஹாதியா சஹ்ரானின் மனைவி. சஹ்ரானுக்கு எப்போதும் வீடியோக்களை அனுப்பும் ஒருவர் இருப்பதாக அவர் கூறுகிறார். அவரது மாற்றுப்பெயர் அபு ஹிந்த். அவர் பேசும் போது ஹாதியாவை சஹ்ரான் விரட்டி விடுவானாம். குறிப்பாக வவுணதீவு பொலிஸ் அதிகாரிகளின் மரணத்தில் தொடர்புடைய கபூர் மாமா என்ற கடும்போக்குவாதி சொல்கிறான் ஏப்ரல் 16 அன்று மேலிடத்தில் இருந்து சஹ்ரானுக்கு அறிவுறுத்தல் வந்ததாம் அந்த அறிவுறுத்தல்களின்படி, இந்த தாக்குதல் விரைவுபடுத்துமாறு இல்ஹாம் என்ற பயங்கரவாதி கூறுகின்றார். யார் இந்த அபு ஹிந்த் ? , 2019 ஏப்ரல் 21 முதல் இன்று வரை அனைவரும் விசாரிக்கின்றனர். அப்போது இந்த கோத்தபாய ராஜபக்ச நீதியை நிலைநாட்டுவார் என தெரிவித்தனர். அதனால்தான் இந்த சபாநாயகரும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் இன்றும் இந்த அபு ஹிந்தை அவர்கள் தேடவில்லை. சஹ்ரானுக்கு மேலே ஒரு சூத்திரதாரி இருந்தார். அந்த நபரின் புனைப்பெயர் அபு ஹிந்த். இந்த அபு ஹிந்தை அடையாளம் காண வேண்டும்.

நவுபர் மௌலவி என்ற சூத்திரதாரி இருப்பதாக.சரத் வீரசேகர கூறினார்..சரத் வீரசேகர கூறும் நவுபர் மௌலவி ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு அழைத்து வரப்படவில்லை அல்லது விசாரிக்கப்படவில்லை. யாரை ஏமாற்றுகிறீர்கள்? அபு ஹிந்தைம் தேடுங்கள் என்று சொல்கிறேன்.

ஏழாவது விடயம்- சாரா ஜாஸ்மின்

இந்த குண்டுவெடிப்பில் சஹாரானின் மனைவி ஹாதியா உடனிருந்தார். அந்த குண்டுவெடிப்புக்குப் பிறகு சாரா ஜாஸ்மினின் குரல் கேட்டுள்ளது மற்றொரு சாட்சியத்தில், மேலும் இரண்டு பேர் அவளை தூக்கிச் சென்றதாகக் கூறப்படுகிறது. பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சாரா ஜாஸ்மினை பைக்கில் ஏற்றிச் சென்றதாக ஈஸ்டர் ஆணைக்குழுவின் புலனாய்வு அதிகாரியான ஏஎஸ்பி மாஹின்கந்த கூறுகின்றார் சீசீடீவியை தேடுகின்றனர்.. அபுபக்கர் என்ற ஐ.பி., களவாஞ்சிக்குடி பொலிசார் பிடிக்கின்றனர் சாரா ஜாஸ்மினுக்கு 3 டிஎன்ஏ சோதனைகள் உள்ளன. 1வது நெகடிவ். இறக்கவில்லை உயிருடன். உள்ளார் 16. உடல்கள் நீதிமன்றம் 16 என்று சொல்லுகின்றது. 2வதிலும் இல்லை. ஆனால் திடீரென்று 3வது டெஸ்டில் சாரா. இறந்தார் 16 என்று நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாரா ஜாஸ்மின் இறந்துவிட்டதாக சொன்னால், அத்தியாயம் முடிந்துவிட்டது. உண்மை முடிந்துவிட்டது. இது என்ன பொய்? இறக்கும் வரை டிஎன்ஏ பரிசோதனை செய்ய வேண்டுமா?. 1 மற்றும் 2 இல்லை, ஆனால் 3 இல் உள்ளதாம்.. இவை உடல் இல்லாத பிரேத பரிசோதனைகள். யாரை ஏமாற்றுகின்றீர்கள் இது பற்றி விசாரிக்கவும். நாங்கள் யாரையும் குற்றம் சாட்டவில்லை. உண்மையைக் கண்டுபிடிக்கவும்.

எட்டாவது விடயம்

கோட்டாபய 2019.11 18 ஜனாதிபதியாகிறார். நவம்பர் 22ஆம் திகதி பிரதமர் நியமிக்கப்படுகின்றார் அதற்கு முன்னதாக ஷானி அபேசேகர இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். இது அமைச்சரவையை நியமிப்பதற்கு முன்பே செய்யப்படுகிறது. ஈஸ்டர் பண்டிகையை விசாரித்த 31 பேரை கோட்டாபய ராஜபக்ச இடமாற்றம் செய்துள்ளார். அது பொய்யல்ல. இது உண்மை. 700 சிஐடி அதிகாரிகள் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டது. இந்த நபர்களின் பெயர்களை சபாபீடத்தில் முன்வைக்கின்றேன்

டிஐஜி பி. கே டி பிரியந்தா

SSP ஷானி அபேசேகர

பியசென் அம்பாவில

நுவன் அசங்க

சி.டபிள்யூ விக்கிரமசேகர

ஜே. பி. டி. ஜயசிங்க (இவர் ஜனாதிபதி பாதுகாப்புத் தலைவர்)

ரஞ்சித் வெதசிங்க

டிஎஸ் திசேரா

கலனசிறி

ஹேமந்த குணசேகர

இந்திக்க லொகுஹெட்டி

தர்ஷிகா குமாரி

தனுஜா தமயந்தி

சந்திமா அருமப்பெரும

தீபானி மெணிக்கே

நாமலி ஹெராத்

கிரிதிசிங்க

மாரசிங்க

சாகர கரசிங்கஆராச்சி

எல்லெபோல

நிஷாந்த சில்வா

ஜெயசிங்க

இளங்கசிங்க

பசீர்

மெண்டிஸ் பிரேமகுமார

ஜகத்

லக்மல்

விஜிதா

ராஜபக்ச

இவர்கள்தான் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணை செய்த 31 பேர். இது மிகவும் சந்தேகத்திற்குரியது. கோத்தபாய ஏன் அவ்வாறு செய்தார்? இதன் பின்னணியில் உள்ள உண்மையை ஆராய வேண்டும்.

இன்னும் முக்கியமான விடயங்கள் உள்ளன. ஏப்ரல் 4 கலனிகம நுழைவாயிலுக்கு ஒரு லொறி வந்தது. இதற்கு முன் டபல் கெப் மற்றும் V8 வாகனமும் வருகிறது. நான் சொல்வதற்குப் பயப்படவில்லை. விசாரிக்கவும். 69 இலட்சம் வாக்குகளை பெற்று ஈஸ்டர் தாக்குதலில் ஈடுபட்டவர்களை கைகளில் இரத்தத்துடன் மறைக்க வராதீர்கள்.

சரத் ​​வீரசேகர ஏன் இந்த லொரி பற்றி பேசும்போது நடுவில் குதித்தார். யார் பாதுகாக்கப்படுகிறார்கள்? நுழைவு வாயிலில் உள்ள அதிகாரிகள் ஒரு மணி நேரம் லாரி மற்றும் கெப் வண்டியை நிறுத்துகின்றனர். இந்த லொரியை விடுவிக்குமாறு மேல்மாகாண டி.ஐ.ஜி. ஒருவர் கூறுகின்றார். இந்த வெடிகுண்டு பாணந்துறையில் உள்ள பாதுகாப்பான வீட்டில் தயாரிக்கப்பட்டது என்பது உங்களுக்குத் தெரியும். நான் யாரையும் சுட்டிக் காட்டவில்லை. விசாரிக்கவும். லொரியை விடுவித்தவர்கள் குறித்த பதிவுகள் உள்ளன. இதை விசாரிக்கவும்.

ரவி செனவிரத்ன ஒரு சிறந்த சிரேஷ்ட டி.ஐ.ஜி. அவர் TNL க்கு ஒரு தெளிவான அறிக்கையை வழங்குகிறார். இதை விசாரிக்கவும்.ஏப்ரல் 5 முதல் 2-0 வரை வாட்ஸ்அப் மெசேஜ்கள் 2 இந்திய கவுண்டர்பார்ட் ஏஜென்சிகளில் இருந்து வருகின்றன. ஆனால் துரதிர்ஷ்டவசமாக காரணம் என்னவென்றால், தற்போது அந்த வாட்ஸ்அப் செய்திகள் அனைத்தும் அழிக்கப்பட்டுவிட்டன .கணினி நீக்கப்பட்டுள்ளது. எந்த தகவலும் இல்லை. குறைந்தபட்சம் என்ன அடிப்படையில் உளவுத்துறைக்கு வாட்ஸ்அப் செய்திகள் மூலம் எச்சரிக்கை விடுக்கப்பட்டது என்று விசாரணை நடத்த வேண்டும்? இந்த தகவலை யார் கொடுத்தது என்று கண்டுபிடித்து உண்மையை சொல்லுங்கள். தனிப்பட்டவாறு நாங்கள் பொறுப்புகளை சுமத்தவில்லை. பாரபட்சமற்ற விசாரணைக்குப் பிறகு பொறுப்புக்கூறல் மற்றும் பொறுப்பு தேவைப்படுகிறது. மேலும், ஹாதியாவை அழைத்துச் சென்ற ஜெயசிங்க என்ற அதிகாரி மர்மமான முறையில் கோவிட் பாதிப்பால் இறந்தார் எரிக்கப்பட்டார் எரித்தால் எல்லாம் முடிந்து விடும். சாட்சி இல்லை. பொருட்களும் இல்லை. எப்படி இறந்தார் என்று தெரியவில்லை. அதையும் தேடுங்கள்.

அத்துடன் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் சட்டமா அதிபர் கலந்துரையாடும் போது புலனாய்வுப் பிரிவினரும் அண்மையில் இருந்து வருகி்ன்றார்களாம் என்பதையும் குறிப்பிட விரும்புகின்றேன். ஏன் அப்படி வருகிறார்கள்? இங்கே உளவுப் பிரிவுக்கு என்ன வேலை? உளவுத்துறையில் அனைவரும் இல்லை. கொஞ்சம் பேர் வந்து மூக்கை நுழைக்கின்றார்கள். இதைப் பற்றி விசாரியுங்கள். நடப்பவை அனைத்தும் உளவுத்துறை தலைவருக்கு வாரந்தோறும் செல்கிறதா என்பதை அறிய விரும்புகிறோம். விசாரிக்கவும்.

வெளிநாட்டுப் புலனாய்வுப் பிரிவினரின் தகவல்கள் தொடர்பில் சாட்சியமளித்தவர் பிரதான பொலிஸ் பரிசோதகர் சம்பத்குமார என்பதனால் தொலைபேசியும் கணினியும் ரீசெட் செய்யப்பட்டு நீக்கப்பட்டன. அதுதான் யதார்த்தம்.

இன்று பல விடயங்ளை முன்வைத்தேன். இவற்றைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள். உண்மைகளை ஆராயுங்கள். அரசியல் ஆதாயம் எங்களுக்கு தேவை இல்லை. நமக்கு உண்மை தெரிய வேண்டும். உண்மை கசப்பாக இருந்தாலும் உண்மை வேண்டும். பாராளுமன்ற உறுப்பினர் நேற்று பொய்யொன்றை கூறினார். கர்தினால் இது பற்றி தெரிந்திருந்ததாகவும். கார்தினாலிடம் MSD பாதுகாப்புத் துறை கூறியதாம். அது ஒரு பொய். ஈஸ்டர் தாக்குதலின் பின்னர் கர்தினாலுக்கு MSD பாதுகாப்பு வழங்கப்பட்டது.. எனவே பொய்களை பரப்ப வேண்டாம். மேலும், புலனாய்வு அமைப்புகளினால் கர்த்தினாலுக்கு ஆபத்துகள் குறித்து தெரிவித்த கடிதத்தின் பிரதியை சபா பீடத்தில் வைக்குமாறு பிரதமரை கேட்கின்றேன். கார்டினாலிடம் தெளிவாகக் கேட்கிறார். கொடுத்த MSD .யார் என்று யார் தலைவர் சபாபீடத்தில். சமர்ப்பிக்கவும் பெயரைச் சொல்லுங்கள். கர்தினாலுக்குகு இந்த பாதுகாப்பு எப்பொழுது முதல் கொடுக்கப்பட்டது? இதற்கு பதில்கள் தேவை.

கர்தினாலுக்கு அரசு உறுப்பினர்கள் குண்டர்களைப் பயன்படுத்தி அவதூறாகப் பேசக் கூடாது என்று நான் கூறுகிறேன். நற்பெயருக்கு களங்கம் விளைவிக்காதீர்கள். மேலும் இந்த சபையில் இன்னும் சில விடயங்கள் உள்ளன. ரவி செனவிரத்ன ஒரு நேர்மையான, ஒழுக்கமான டி.ஐ.ஜி. அவர் முன்வைத்த கருத்துக்கள் குறித்து நேர்மையான மற்றும் வெளிப்படையான விசாரணையை நான் கோருகிறேன். ஷானி அபேசேகர பற்றி ஒவ்வொன்றாக சொன்னார்கள். ஒரு குறிப்பிட்ட வழக்கில் ஷானி பிடிபட்டார் என்றும் பொய்யான சாட்சியம் அளித்தார் என்றும் ஒருவர் கூறுகிறார். 10 மாதங்கள் காவலில் வைக்கப்பட்டார். பின்னர் அவருக்கு பிணை கிடைத்தது. அந்தத் தீர்ப்பை நான் சபாபீடத்தில் முன்வைக்கின்றேன்.. இது தொடர்பாக எந்த ஆதாரமும் இல்லை என்று கனம் நீதிமன்றம் கூறுகிறது. இது இட்டுக்கட்டப்பட்ட பொய்யான குற்றச்சாட்டுகள் பற்றியது. ஷானி அபேசேகரவின் நற்பெயருக்கு களங்கம் விளைவிப்பதற்கு இது ஜோடிக்கப்பட்ட வழக்கு என மேன்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இவ்வளவு நேர்மையான போலீஸ் அதிகாரி ஏன் வேட்டையாடப்படுகிறார்? கோட்டாபய இந்த வேட்டையை ஆரம்பித்தார். மேலும் ஷானி அபேசேகர பற்றி தேசிய பொலிஸ் ஆணைக்குழு கூறுகிறது. அவருக்கு அனைத்து நிலுவை சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளுடன் ஓய்வூதியம் வழங்கவும் என்று, மோசடிக்காரர் ஒருவருக்கு இவற்றைக் கொடுக்கும்படி பொலிஸ் ஆணைக்குழு தெரிவிக்காது இன்னும் அவருக்கு வழங்கப்படவில்லை. அவற்றை மிக விரைவில் கொடுக்கவும்.

ஷானி அபேசேகர மற்றும் ஏனையோருக்கு எதிரான வழக்கை ஆகஸ்ட் மாதம் சட்டமா அதிபர் வாபஸ் பெற்றார். கம்பஹா நீதிமன்றத்தில். இதனை நான் சபாபீடத்தில் முன்வைக்கின்றேன். சானி நாட்டை விட்டு ஓட மாட்டார். போலிக் குற்றச்சாட்டுகளை கூறாதீர்கள். அவதூறு பேசாதீர்கள்

எங்களுக்கு உண்மை தெரிய வேண்டும் என்பதை நான் தெளிவாகச் சொல்கிறேன். பயங்கரவாதத் தலைவர்கள் தங்களைத் தாங்களே கொல்ல மாட்டார்கள். அது உண்மை. சஹரானுக்கும் மேல் ஒருவர் இருந்தார். அவர்தான் அபு ஹிந்த். நான் யாரையும் அவமதிப்பதில்லை. இந்த உண்மையைக் கண்டுபிடிக்க தாமதமாக வேண்டாம் .இந்த அரசாங்கத்தில் சம்பந்தப்பட்ட அனைவரின் கைகளிலும் இரத்தம் படிந்துள்ளது என்று நான் கூறுகிறேன்..

அது மட்டுமின்றி பாதிக்கப்பட்டவர்களை பற்றி பேசுவது யார்? எனக்கே வெட்கமாக இருக்கிறது. கத்தோலிக்க திருச்சபையிடம் ஏராளமான பணம் இருப்பதாக ஒரு கத்தோலிக்க எம்.பி. கூறுகிறார் அந்த மனிதனுக்கு வெட்கமில்லை. வாக்குக்காக, ஈஸ்டர் தாக்குதலை விற்பனை செய்தார்கள் . ஒரு கத்தோலிக்கராக இருந்து கொண்டு கத்தோலிக்க திருச்சபையிடம் பணம் இருப்பதாக அவர் கூறுகிறார்.

இதற்கு அனைவரும் பொறுப்பேற்க வேண்டும். நானும் பொறுப்பை ஏற்கிறேன் யாரும் கை கழுவ முடியாது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக நீதி வழங்க வேண்டும். இறந்தவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு 9 லட்சம் வழங்கப்படுமாம். ஒரு உயிரின் மதிப்பு 10 இலட்சம். காயமடைந்தவர்கள் மற்றும் இறந்தவர்களுக்காக பாடுபட எதிர்க்கட்சியில் உள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்.

இந்த விடயங்கள் யாருடைய மனதையும் புண்படுத்துவதற்காக அல்ல. உண்மையைக் கண்டறிய இந்த விடயங்கள் முன்வைக்கப்பட்டன. உண்மையைத் தேடுவதற்கு ஊழலற்ற ஒரு முறை தேவை. அதற்கான உள்ளூர் பொறிமுறை உள்ளதா? உண்மையில் து{ய்மையாக எதுவும் இல்லை. நான் சர்வதேச விசாரணைக்குச் செல்ல விரும்பவில்லை. ஆனால் அனைத்து உள்ளூர் முறைகளும் ஊழல் நிறைந்தவை. எனவே சர்வதேச விசாரணை தேவை. முதுகெலும்பு இல்லையென்றால் ஐக்கிய மக்கள் சக்தி ஆட்சியில் செய்து காட்டுவோம். ஆனால் அரசியல் வேட்டையாட மாட்டோம். சாட்சிகளை மறைக்க மாட்டோம்.. அரசியல் எதிர்த் தரப்புக்கு தேவையற்ற பிரச்சினைகளை கொடுக்க மாட்டோம். இன்று நான் உண்மையைக் கண்டுபிடிப்பதாக உறுதியளிக்கிறேன். நானும் தீவிரவாத தாக்குதலால் பாதிக்கப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவன். அதனால்தான் இன்று இந்த உறுதிமொழியை அளிக்கிறேன்.

ரணில் சஜித் மோதல் நாடகம்
Posted in இலங்கை செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையை கோட்டபாயவும் ரணிலும் மறைக்கிறார்கள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையை கோட்டபாயவும் ரணிலும் மறைக்கிறார்கள்

முறைமையில் மாற்றம் கொண்டு வரப்பட வேண்டும் என நாட்டு மக்கள் கோரும் இவ்வேளையில்,உயிர்த்த ஞாயிறு தாக்குதலையும் அதனால் ஏற்பட்டுள்ள சூழ்நிலையையும் அரசியலாக்காது முழுமையான உண்மையைத்

தேடுவதே எதிர்க்கட்சியின் நோக்கம் என்றும், அரசாங்கம் உண்மைகளையும் தரவுகளையும் மறைப்பதால், எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் தமக்கும் சரியான உண்மைகள் தெரியாது என்பதனால்,இது தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணையை நடத்துமாறே எதிர்க்கட்சி கோருவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இங்கு உண்மையை மறைப்பது என்பதிலிருந்து கைகளில் இரத்தம் தோய்ந்த நபர்களின் சதியோ என்று சந்தேகம் எழுகிறது என்றும், இந்த தாக்குதல் தொடர்பாக அரசாங்கம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை

என்றாலும், இங்கு உண்மை மறைக்கப்படுவது மாத்திரம் இடம் பெற்றுள்ளதால் அரசியல் சாதகங்களைப் பொருட்படுத்தாமல், முழுமையான உண்மையை இங்கு வெளிக்கொணர முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

எதிர்க்கட்சி ஒன்றியத்தின் வாராந்த செயற்குழுக் கூட்டம் இன்று (18) பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் கூடியபோதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையை கோட்டபாயவும் ரணிலும் மறைக்கிறார்கள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான பிரதான சூத்திரதாரிகளையும் ஏனைய காரணத்தை கண்டுபிடித்து சம்பந்தப்பட்ட அனைவரையும் தண்டிப்பதாக அளித்த வாக்குறுதிகளின் பிரகாரமே ஜனாதிபதி தேர்தலிலும் பொதுத்

தேர்தலிலும் கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதிக்கு 69 இலட்சம் மக்கள் ஆணை கிடைத்தாலும், அவர் அந்த உண்மையைத் தேடாது,உண்மையைக் கண்டறியாமல் பயங்கரவாத செயலை விசாரித்த குற்றப் புலனாய்வுத்

திணைக்களத்தின் அதிகாரிகள் பலரையும் அந்த நடவடிக்கைகளில் இருந்து நீக்கினார் என்றும், கடந்த காலங்களில் இடம்பெற்ற பல்வேறு செயற்பாடுகளை பார்க்கும் போது உண்மையை தேடுவதை விட உண்மை

மறைக்கப்பட்டுள்ளதையே மேற்கொண்டுள்ளதாக தோன்றுகிறது என்றும், இதன் காரணமாக உண்மையைக் கண்டறியும் பொறுப்பைக் கூட ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச புறக்கணித்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

அவ்வாறே,தற்போதைய அரசாங்கமும் ஜனாதிபதியும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவைப் பின்பற்றி உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான உண்மையை மறைத்து வருகிறது என்றும், எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நேர்மையான, நம்பகமான, பக்கச்சார்பற்ற தேசிய

விசாரணையைத்தான் தாம் விரும்பினாலும், கடந்த காலங்களில் நடந்த சம்பவங்களைப் பார்க்கும் போது, தேசிய விசாரணைகளில் அதிக நம்பிக்கை இல்லை என்றும், இவ்வாறான நிலையில் சர்வதேச விசாரணையே நடத்தப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கையின் முதல் பாகம் மாத்திரமே வெளியிடப்பட்டிருந்த போதிலும் இரண்டாவது மற்றும் மூன்றாவது பாகங்கள் குறைந்தபட்சம் பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்லது எதிர்க்கட்சித் தலைவரால் பரிசீலிக்க தடை

விதிக்கப்பட்டுள்ளதாகவும், பாராளுமன்ற செயலாளர் நாயகத்தின் மேற்பார்வையில் மாத்திரம் அதனை பரிசீலிக்க சந்தர்ப்பம் வழங்குவதில் பாராளுமன்ற உறுப்பினர்களின் சிறப்புரிமைகள் கூட மீறப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான சனல் 4 காணொளி தொடர்பில் விசாரணை நடத்த அரசாங்கம் நியமித்துள்ள புதிய குழுவிற்கு இந்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட கத்தோலிக்க மக்களும் கர்தினால் அவர்களும்

அதிருப்தி தெரிவித்துள்ளனர் என்றும், இவ்வாறு புதிய குழுக்களை நியமிப்பதாலும் கூட உண்மயை மூடி மறைக்கப்படுவதாகவே எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

மேலும் இவ்வாறான தாக்குதலுக்கு இந்நாட்டில் உள்ள அனைத்து மதங்கள் மற்றும் இனங்களைச் சேர்ந்த தீவிரப்போக்குடையவர்களும் பொறுப்பாளிகள் என்றும்,இந்த தீவிரவாதிகளால் இந்நாட்டின் தேசிய பாதுகாப்பு பறிபோனது

என்றும், இந்த தாக்குதலின் உண்மை கண்டறியப்படாத வரை, இது தேசிய பாதுகாப்பிலும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும், எனவே மதங்களுக்கும்

இனங்களுக்கும் இடையில் காணப்படும் நம்பமகற்ற தன்மையையும் சந்தேகத்தையும் நீக்க உண்மையை வெளிப்படுத்த வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் மேலும் சுட்டிக் காட்டினார்.

ரணில் சஜித் மோதல் நாடகம்
Posted in இலங்கை செய்திகள்

பேராசைக்காக ஜனாதிபதி பதவியை பெற தயார் இல்லை

பேராசைக்காக ஜனாதிபதி பதவியை பெற தயார் இல்லை

கொள்கைகளை மீறிக் கொண்டு நாட்டு மக்களை மறந்துவிட்டு தனிப்பட்ட பேராசைக்காக ஜனாதிபதி பதவியையும் பிரதமர் பதவியையும் பெற தாம் தயாராக இல்லை என்றும், மொட்டுவின் 134 உறுப்பினர்களின் மட்டுப்படுத்தப்பட்ட ஆணையுடன் ஜனாதிபதி கதிரைக்கு சென்ற

தற்போதைய ஜனாதிபதி, மொட்டு திருடர்கள் குழுவின் பாதுகாவலராக மாறி தற்போது உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையை மறைத்து வருகின்றார் என்றும், நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் கூட ஆணைக்குழு அறிக்கையின் பிரதிகளை பெற்றுக் கொள்ளமுடியாத விதமாக மறைத்து வைத்துள்ளனர் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

உண்மையை மறைப்பதால் தேசிய பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படும் என தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பூரண அரசாட்சியை தருவதாக கூறினாலும் மக்கள் ஆணையின்றி ஜனாதிபதி பதவியையோ பிரதமர் பதவியையோ ஏனைய பதவியையோ அரச அதிகாரத்தையோ பெற தாம் தயார் இல்லை என்றும் தெரிவித்தார்.

பேராசைக்காக ஜனாதிபதி பதவியை பெற தயார் இல்லை

சமய ஸ்தலங்கள் ஊடாக வெளியிடப்படும் சமய செய்திகளின் அடிப்படையில் ஐக்கிய இலங்கையின் தேசிய பாதுகாப்பு பாதுகாக்கப்பட்டாலும் கடந்த காலங்களில் மலட்டுக் கொத்து, மலட்டு அறுவை சிகிச்சை என கூறி உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் நாட்டில் இனங்கள் மற்றும் மதங்களுக்கு

இடையில் பிளவை ஏற்படுத்தினர் என்றும், இதனால்தான் போராட்டத்திற்கு முன் நல்லிணக்கம் என்பது கடுமையான வார்த்தை பிரயோகமாக அமைந்து காணப்பட்டதாகவும், தேசபிமானம் என்ற பெயரால் இவ்வாறு தாக்கப்பட்ட போதிலும் நாட்டை அடிமைப்படுத்தி நாட்டின் வளங்களை அபகரித்த

ஜனாதிபதியையும் குடும்பத்தையும் விரட்டியடிக்க மக்கள் ஒன்றாய் வீதியில் இறங்கி நடந்திய போராட்டத்தின் பின்னர் நல்லிணக்கம் என்ற வார்த்தை முக்கியமான அரச கொள்கையாக மாறியுள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

சதஹம் யாத்தரா நிகழ்ச்சியின் 1500 ஆவது நிகழ்வு 15 ஆம் திகதி கேகாலை, கலிகமுவ வட்டராம ரஜமஹா விகாரையில் இடம் பெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டை அழித்த தரப்புடன் ஒப்பந்தம் செய்து கொண்டிருந்தால் தாம் தற்போது நாட்டின் ஜனாதிபதி என்றும்,நாட்டை அழித்த மொட்டுடன் எந்த ஒப்பந்தமும் இல்லை என்றும்,ஒப்பந்தமொன்று போட வேண்டிய தேவை ஏற்பட்டால் அத்தகையதொரு ஒப்பந்தம் அரசியல் கட்சிகளுடன் அன்றி 220 இலட்சம் பேருடன்தான் போடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

ஒரு குடும்பம் ஒருதலைபட்சமாக அதிகாரத்திற்கு உரிமை கோரிவாறு தனி ஆட்சியை நடத்திய நாட்டில் ஒரு கட்சிக்குள் பிரதிவாதங்கள் ஏற்படும் போது, ​​கட்சிகளுக்குள் மோதல்கள் உருவெடுத்துள்ளது என்று விளம்பரம் செய்தாலும் அது மோதலாகாது என்றும், முறைமை மாற்றம் கோரும் நாட்டில் எழுந்துள்ள

இந்த வாதங்கள் ஒரு ஜனநாயகப் போக்கின் தொடக்கமாகும் என்றும்,தலைவர் தவறு செய்தாலும் சுதந்திரமாக பேசுவதே அடிமை அரசியலில் இருந்து விடுபட்டு ஜனநாயக பாதையில் பிரவேசிப்பதற்கான இலட்சனம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

பேராசைக்காக ஜனாதிபதி பதவியை பெற தயார் இல்லை

வாத பிரதிவாதங்களை முன்வைப்பதில் இறுதியில் ஒரு நல்ல முடிவு எட்டப்படும் என்றும்,அடிமைத்தனமான குடும்ப அரசியலில் இருந்தும், மதத்தை விற்கும் குடும்ப அரசியலிலிருந்தும் விலகுவதிலும், ஜனநாயக

சுதந்திரம், பேச்சு சுதந்திரம், எதிர்ப்புத் தெரிவிக்கும் சுதந்திரம் உள்ள மத்தியஸ்த பாதையில் சமூக ஜனநாயக பயணத்தை மேற்கொள்வதே ஐக்கிய மக்கள் சக்தியின் நோக்கமாகும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

புத்த பகவான் கூட ஊழலையும் மோசடியையும் நிராகரித்தார் என்றாலும்,நாட்டு மக்களை அடிமைகளாக கனவு காணும் பெரும் குடும்பங்கள் தேசாபிமான பெருமிதத்துடன் பௌத்தத்தை முன்நிறுத்தி, மக்களை ஏமாற்றி

நாட்டைக் காப்பாற்றுகிறோம் என்ற பெயரில் முன் வந்து இறுதியில் நாட்டின் வளங்களையும் பணத்தையும் கொள்ளையடித்துச் சென்றனர் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

தற்போது நாட்டில் உள்ள 220 இலட்சம் பேரினதும் வளங்களை கொள்ளையடித்தவர்கள் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டு இழந்த வளங்களை மீட்பதற்கு தயாராக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

சதஹம் யாத்ரா வேலைத்திட்டத்தின் கீழ் திஸ்ஸ அத்தநாயக்க அவர்கள் 1802 மத ஸ்தலங்களுக்குச் சென்று ஐக்கிய மக்கள் சக்தியின் சமயக் கொள்கைகள் மற்றும் சமூக நல்லிணக்கத் திட்டத்தை நடைமுறைப்படுத்தினார் என்றும்,

பௌத்த விகாரைகளில் இடம் பெறும் நிகழ்வுகளில் 1500 ஆவது நிகழ்ச்சி 15 ஆம் திகதி நடைபெற்றதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

ரணில் சஜித் மோதல் நாடகம்
Posted in இலங்கை செய்திகள்

அரசியலில் சூதாடுகிறது அரசாங்கம்

அரசியலில் சூதாடுகிறது அரசாங்கம்

இனவாதத்தையும், மதவாதத்தையும் தூண்டி 2019 ஆம் ஆண்டைப் போன்று மீண்டும் மக்களை ஏமாற்றத் தயாராகி வருகின்றனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசதெரிவித்தார்.

ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் தேர்தலை ஒத்திவைத்து அரசியல் சூதாட்டத்தில் ஈடுபட்டு தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கான திட்டங்களை வகுத்து வருவதாகவும்

தொடம்கஸ்லந்த ஸ்ரீ சைலத்தலாராம விகாரையில் தூபியைத் திறந்து வைக்கும் நிகழ்வில் சனிக்கிழமை (26) கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டில் மதங்கள் மற்றும் இனங்களுக்கு இடையே பூசல்கள் உருவாக்கப்படுகின்றன என்றும், வெவ்வேறு புவியியல் அதிகார வரம்புகளில் வாழும் மக்களின் சாதி மற்றும் மதத்தைப் பற்றி பேசி இந்த சர்ச்சைகளை அரசியல்வாதிகளே உருவாக்குகின்றனர் என்றும் குறிப்பிட்டார்.

அரசியலில் சூதாடுகிறது அரசாங்கம்

அதன் மூலம் வாக்குகளைப் பெறவே எதிர்பார்க்கின்றனர் என்றும், வெவ்வேறு பகுதிகளில் உள்ள வெவ்வேறு நபர்களிடம் 13 குறித்து சிலரிடம் விருப்பம் என்றும் மற்றும் சிலரிடம் விருப்பமில்லை என்றும் ஜனாதிபதி கனவுகளை கொண்ட இவர்கள் இனங்களுக்கும் மதங்களுக்கும் இடையில் முரண்பாடுகளை ஏற்படுத்துகின்றனர் என்றும் குறிப்பிட்டார்.

இந்த அரசியல் தலைவர்கள் சரியான குணாதிசயங்களில் இல்லாமல் அதிகாரத்தை பெற்று ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவியை பெற முயற்சிக்கின்றனர் என்றும், தமது சுகபோக வாழ்க்கை பாதிக்கப்படும் என்பதற்காக 220 இலட்சம் மக்களின் வாழ்க்கை எப்படி போனாலும் பரவாயில்லை என்ற போக்கில் பொய்யான வாக்குறுதிகளை வழங்கி ஆட்சியை தக்க வைக்க முயற்சிக்கின்றனர் என்றும் குறிப்பிட்டார்.

மதங்கள் இனங்களுக்கிடையில் நல்லிணக்கமும் ஒற்றுமையும் நிலவினால்தான் நாட்டின் ஒருமைப்பாடு, பிரதேச ஒருமைப்பாடு, பலம், இறைமை, எமது தேசியம் எமது வாழ்வியல் பாதுகாக்கப்படும் என்றும், எனவே இன, மத, சாதி முரண்பாடுகள் ஏற்படும் வகையில் ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் செயற்படாது என்றார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது, கருத்தடை அறுவை சிகிச்சை செய்ததாக வைத்தியர் சாபிக்கு பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து இனப் பிளவைக் கிளப்பினர் என்றும், இறுதியில்,வைத்தியர் சாபி சரியானவர் என்று நிரூபனமானது என்றும் குறிப்பிட்டார்.

அரசியலில் சூதாடுகிறது அரசாங்கம்

எனவே சம்புத்த சாசனத்தைப் பாதுகாக்க வேண்டுமானால் அனைத்து இன,மத,இன மக்களுக்கும் இடையிலான பிணைப்பு பலப்படுத்தப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.

ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அமைச்சுப் பதவிகளில் கொண்ட பேராசையால் சிலர் நாட்டை துண்டு துண்டாக பிரித்து வருகின்றனர் என்றும், இது தேசப்பற்று அல்ல என்றும், கடந்த காலங்களில் இனவாதத்தையும், மதவாதத்தையும் தூண்டி அதிகாரத்தைப் பெற்றவரை மக்களே விரட்டியடித்தனர் என்றும் படித்தவர்களையும் அறிவாளிகளையும் இணைத்துக் கொண்டு இந்நாட்டைக் கட்டியெழுப்பப் பங்களிப்பதை தான் பின்பற்றி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

நாட்டு மக்களின் பிரச்சனைகளை பேச பாராளுமன்றத்திற்கு செல்லும் போது பாராளுமன்றத்தில் ஒரு முட்டாள் கூட்டம் கடுமையான வார்த்தைப் பிரயோகங்களை பேசி,பேச்சுக்களில் குறுக்கிட்டு மக்கள் பிரச்சினைகளை மூடிமறைக்க முயற்சிக்கின்றனர் என்றும் தெரிவித்தார்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் துறைப் பேராசிரியரான வசந்த அத்துகோரலவின் ஆய்வின் பிரகாரம், இந்நாட்டின் 15 மாவட்டங்களில் உள்ள மக்கள் தண்ணீர் பற்றாக்குறையால் பாரிய பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.

இதனால் அம்மக்கள் 10 ஆயிரம் கோடி ரூபாவுக்கு மேல் தங்க ஆபரணங்களை அடகு வைத்துள்ளனர் என்றும், பயிர் சேதத்தால் 60 ஆயிரம் ஏக்கர் நாசமாகியுள்ளதாகவும் குறிப்பிட்ட அவர், இதனால் 68729 கோடி தங்கம், நகைகள் ஆபரணங்கள் அடமானம் வைக்கப்பட்டுள்ளன என்றார்.

என்றும்,இப்பிரச்சினைகளுக்கு அரசாங்கத்திடம் தீர்வு இல்லை என்றும் இவ்வாறான பிரச்சினைகளுக்கு மத்தியில் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கம் தேர்தலை ஒத்திவைத்து அரசியல் சூதாட்டத்தில் ஈடுபட்டு தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்கான திட்டங்களை வகுத்து வருவதாகவும் குறிப்பிட்டார்.

ரணில் சஜித் மோதல் நாடகம்
Posted in இலங்கை செய்திகள்

சஜித் WHO இலங்கை பிரதிநிதியுடன் சந்திப்பு

சஜித் WHO இலங்கை பிரதிநிதியுடன் சந்திப்பு

உலக சுகாதார ஸ்தாபனத்தின் இலங்கைப் பிரதிநிதி Dr. Alaka Singh மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோர்களுக்கிடையிலான சந்திப்பொன்று நேற்று (20) இடம்பெற்றது.

இந்நாட்டில் தற்போது எழுந்துள்ள மருந்துப் பொருட்களுக்கான தட்டுப்பாடு, தரம் குறைந்த பதிவு செய்யப்படாத மற்றும் அதிக விலைக்கு நாட்டிற்கு கொண்டு வந்த மருந்துகளால் அப்பாவி நோயாளிகள் உயிரிழந்துள்ளமை,

அரச மருத்துவமனைகளில் CT scan, MRI Scan போன்ற இயந்திரங்களின் தட்டுப்பாடு மற்றும் பராமரிப்பின்றி குறித்த இயந்திரங்களைப்

சஜித் WHO இலங்கை பிரதிநிதியுடன் சந்திப்பு

பயன்படுத்துதல், வைத்தியர்கள், சுகாதார அதிகாரிகள் நாட்டை விட்டு வெளியேறுவது போன்ற பல்வேறு விடயங்கள் தொடர்பில் இரு தரப்பினருக்கும் இடையில் இக்கலந்துரையாடல் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஐக்கிய மக்கள் சக்தியைப் பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்ற உறுப்பினர்களான நிரோஷன் பெரேரா மற்றும் வைத்தியர் காவிந்த ஜயவர்தன ஆகியோரும் கலந்து கொண்டனர்.