Posted in இலங்கை செய்திகள்

வெடிக்கும் கோட்டாவுக்கு எதிரான போராட்டம்

வெடிக்கும் கோட்டாவுக்கு எதிரான போராட்டம்

நாளை (09) முதல் ஒரு வார ‍காலம் தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும் என தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

அவசரகாலச் சட்டங்களை விதித்து போராட்டங்களை நசுக்கும் அரசாங்கத்தின்

முயற்சிக்கு எதிராகவே இந்தப் போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் என இலங்கை மின்சார சபை


கூட்டு தொழிற்சங்க கூட்டமைப்பின் அழைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.

    Posted in Uncategorized

    கோட்டா பாதுகாப்பு இறுக்கம் – புதிய அதிகாரிகள் நியமனம்

    கோட்டா பாதுகாப்பு இறுக்கம் – புதிய அதிகாரிகள் நியமனம்

    இலங்கையில் ஆளும் அதிபர் கோட்டபாயாவின் பாதுகாப்பில் திடீர் மாற்றம் இடம்பெற்றுள்ளது ,

    அதன்படி, ஜனாதிபதி பாதுபாப்பு படையணியின் உதவிக்காக பிரதி பொலிஸ் மா

    அதிபர் ஒருவரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளதாக அவற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.


    ஜனாதிபதி பாதுகாப்பு படையணிக்கு பொறுப்பாக புத்தளம் பிரதி பொலிஸ் மா அதிபர் நிமல் பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார்.


    இதேவேளை, ஜனாதிபதியின் பாதுகாப்பிற்காக புலனாய்வு மற்றும் கண்காணிப்புக்கு

    பொறுப்பான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பி.டி.ஜயலத் உட்பட 100 பொலிஸ்

    புலனாய்வு அதிகாரிகள் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக
    இன்று பத்திரிகைகள் செய்தி வெளியிட்டுள்ளன.

      Posted in Uncategorized

      லண்டனில் கோட்டாவுக்கு எதிராக முளைத்த வீடு

      லண்டனில் கோட்டாவுக்கு எதிராக முளைத்த வீடு

      பிரிட்டன் பாராளுமன்றம் முன்பாக உள்ள பகுதியில் கொட்ட கோ காமா என்ற பெயரை தாங்கிய படி சிங்களவர்களினால்


      ஆளும் கொள்ளையர்கள் வீடு செல்ல வேண்டும் என கோரி போராட்டம் ஆரம்பிக்க பட்டுள்ளது

      இந்த போராட்டம் அங்கு தொடர்ச்சியாக இடம்,பெற்ற வண்ணம் உள்ளது

      உலக நாடுகளின் முக்கிய நாடுகளில் இருந்து ஆரம்பிக்க பட்டுள்ள இந்த போராட்டம்

      மகிந்த குடும்பத்திற்க்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது ,

        Posted in Uncategorized

        சஜித்தை தூக்கும் முயற்சியில் ரணில் கோட்டா சதி

        சஜித்தை தூக்கும் முயற்சியில் ரணில் கோட்டா சதி

        எதிர்கட்சி தலைவராக உள்ள சஜித் பிரேமதாசாவை , அந்த தலைவர் பத்வியில் இருந்து ,அவரை துரத்தி புதியவரை நியமிக்கும் நகர்வில் ரணில்,கோட்டாபய ஈடுபட்டுள்ளனர்

        இவர்களுக்கு இடையில் இடம்பெற்ற பேச்சுக்களின் பொழுது இந்த விடயம் பேசப்பட்டுள்ளது

        இதனை அடுத்து தற்போது தனக்கு மிரட்டல் அழைப்புக்கள் விடுக்க பட்டுள்ளதாக சஜித் தெரிவித்துள்ளார்


        ரணில் இதுவரை ஜனாதிபதியாக துடித்த பொழுதும் அது முடியவில்லை ,தனக்கு பின் ஆசனத்தில் இருந்தவர் நாட்டின் தலைவராக வருவதை ரணில் விரும்பவில்லை

        அதனாலேயே அவரது வெற்றியை மகிந்தாவுடன் இணைந்து தடுத்து கோட்டாவை வெல்ல வைத்தார் ,


        அதன் பின்னர் மற்றுமொரு சதியில் ரணில் ஈடுபட்டு வருவதாக உள்ளக கசிவுகள் இடித்து கூறுகின்றன

          Posted in Uncategorized

          மகிந்தா கொள்ளையர்கள் ஒன்றா கூடி இரகசிய பேச்சு

          மகிந்தா கொள்ளையர்கள் ஒன்றா கூடி இரகசிய பேச்சு

          இலங்கையில் ஆளும் மகிந்த குடும்ப உறுப்பினர்கள் ஒன்றாகா கூடி முக்கிய

          பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளனர்

          அலரி மாளிகையில் இந்த பேச்சு இடம்பெற்றுள்ளது

          இதன் பொழுது பிரதமர் மகிந்தா,பசில்,நாமல் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர்

          Posted in இலங்கை செய்திகள்

          ஊசலாடும் கோட்டா ஆட்சி – வரும் வாரம் ஆட்சி கவிழ்ப்பு

          ஊசலாடும் கோட்டா ஆட்சி – வரும் வாரம் ஆட்சி கவிழ்ப்பு

          அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை 11 அரசியல் கட்சிகள்

          மற்றும் 42 சுயேச்சை எம்.பி.க்கள் இணைந்து இந்த வாரம் பாராளுமன்றத்தில்

          சமர்ப்பிக்கவுள்ளதாக பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

          ஏற்கனவே 125 எம்பிக்கள் என்சிஎம்முக்கு ஆதரவளிப்பதாக உறுதியளித்துள்ளதாக அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

          “இதன் விளைவாக, அரசாங்கம் NCM ஆல் தோற்கடிக்கப்பட்டால், SLPP MP ஒருவர் பிரதமராக நியமிக்கப்படுவார், மேலும் ஒரு இடைக்கால அரசாங்கம் அமைக்கப்படும்.

          வரைவு NCM SJB, JVP மற்றும் SLPP க்கு அனுப்பப்பட்டுள்ளது, மேலும் அவர்கள்


          ஏற்கனவே பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிக்க தங்கள் ஆதரவை உறுதியளித்துள்ளனர், ”என்று அவர் கூறினார்.

            Posted in Uncategorized

            பதவி விலக தயார் – கோட்டா அறிவிப்பு

            பதவி விலக தயார் – கோட்டா அறிவிப்பு

            இலங்கையில் ஆளும் இரத்த காட்டேறி கோட்டா பாயாவிற்கு எதிராக மக்கள்

            போராட்டம் நடத்தி வருகின்றனர் ,இவ்வேளை அனைத்து கட்சிகளின் தலைவர்கள் பதவி விலகும் படி


            கோரினால் தான் பதவி விலகிட தயாராக உள்ளதாக கோட்டா அறிவித்துள்ளார்

            இவரது இந்த அறிவிப்பு ஒரு நாடகம் என எதிர்பார்க்க படுகிறது

              Posted in Uncategorized

              கோட்டா சீனி வியாபாரத்திற்கு ஆப்பு

              கோட்டா சீனி வியாபாரத்திற்கு ஆப்பு

              இலங்கையில் ஆளும் கோட்டா அரசு சீனி இறக்குமதியை ஏற்படுத்தி பல மில்லியன் டொலர் பணத்தினை
              சம்பாதித்து வந்துள்ளது

              இதனை அடுத்து தற்போது இவ்விதம் மோசடி புரிந்த நபர்களை கண்டு பிடித்து அவர்களுக்கு


              எதிராக வழக்கு தாக்குதல் செய்திட வேண்டும் என்ற கோரிக்கை முன்னெடுக்க பட்டு வருகின்ற நிலையில்


              கோட்டா அரசின் சீனி வியாபாரம் அம்பலத்திற்கு வரும் என எதிர் பார்க்க படுகிறது

                Posted in இலங்கை செய்திகள்

                பதவி விலக மறுக்கும் கோட்டா – தொடரும் போராட்டம்

                பதவி விலக மறுக்கும் கோட்டா – தொடரும் போராட்டம்

                இலங்கையில் ஆளும் ஜனாதிபதி கோட்டா பிரதமர் மகிந்தா உள்ளிட்டவர்கள் பதவி

                விலக கோரி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர்

                இந்த மக்களின் கோரிக்கையை ஏற்று ஆட்சியாளர்கள் பதவி திறக்க மறுத்து வருவதால் போராட்டம் அதி உச்சம் பெற்றுள்ளது

                மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்காது செல்லும் ராஜபக்ஸ்ச குடும்பங்களுக்கு எதிராக
                மக்கள் மேலும் கொதிப்படைந்து போராட்டம் உக்கிரம் பெற்று வருகிறது

                  Posted in இலங்கை செய்திகள்

                  கோட்டாவுக்கு ஆப்பு ஆரம்பம் -ஆரம்பித்து வைத்த சஜித்

                  கோட்டாவுக்கு ஆப்பு ஆரம்பம் -ஆரம்பித்து வைத்த சஜித்

                  அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையிலும் ஜனாதிபதிக்கு எதிரான குற்றப் பிரேரணையிலும் ஐக்கிய மக்கள் சக்தி கையொப்பமிட்டுள்ளது.

                  எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து சஜித் பிரேமதாச மற்றும் அவரது

                  தலைமையிலான பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு நேற்று (12) குறித்த பிரேரணைகளில் கைச்சாத்திட்டுள்ளனர்.

                  நம்பிக்கையில்லாப் பிரேரணை மற்றும் குற்றப்பிரேரணைக்கு மேலதிகமாக, 20 ஆவது திருத்தம் மாற்றப்பட்டு 19


                  ஆவது திருத்தம் மீண்டும் செயற்படுத்தப்படல் மற்றும் அரசியலமைப்பு வழிமுறைகள் மூலம் ஜனநாயகத்தின் அனைத்து வெற்றிகளையும்


                  அடைவதற்கான போராட்டம் உறுதியான முறையில் மேற்கொள்ளப்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ இதன்போது தெரிவித்தார்.

                    Posted in Uncategorized

                    வரும் வராம் கோட்டா ஆட்சி கவிழ்க்க படும்

                    வரும் வராம் கோட்டா ஆட்சி கவிழ்க்க படும்

                    பாகிஸ்தான் நாட்டில் இம்ரான்கான் ஆட்சி கவிழ்க்க பட்டது ,அதே போன்று


                    எதிர்வரு வாரம் கோட்டாபய ஆட்சியும் கவிழ்க்க படும் என எதிர் பார்க்க படுகிறது

                    நாடளாவிய ரீதியில் மக்கள் போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில்,பாரளுமன்றில்

                    நம்பிக்கையில்லா பிரேரணை நடத்த பட உள்ளநிலையிலும் பெரும்பான்மை பலத்தை

                    நிரூபிக்க முடியாது கோட்டா சிக்கி தவித்து வருகிறார்

                    இங்கு தோற்கடிக்க பட்டு அவர் ஆட்சி கவிழ்க்க படும் என எதிர்பார்க்க படுகிறது

                      Posted in இலங்கை செய்திகள்

                      முடிந்தால் உங்களை பலத்தை பாராளுமன்றில் காட்டுங்கள் – கோட்டா சாவால்

                      முடிந்தால் உங்களை பலத்தை பாராளுமன்றில் காட்டுங்கள் – கோட்டா சாவால்

                      இலங்கை பாரளுமன்றம் நாளை கூடுகிறது ,இதன் போது ஆட்சி அமைக்க 113 பேர்

                      ஆதரவை காண்பித்து பாருங்கள் என கோட்டா சவால் விட்டுளளார்

                      இதுவே பெரும் பின்னடைவை எதிர்க்கட்சிகளுக்கு தருவிக்கும் என்பது அவர் வாதம் ,கணிப்பு

                      ஆனால் இதனை முறியடித்து கோட்டாவை வீட்டுக்கு அனுப்பும் மந்திராலோசனைகள் இடம் பெற்ற வண்ண உள்ளன

                      நாளை வாழ்வா சாவா என்ற போராட்டம் கோத்த பாயாவுக்கு நடக்க போகிறது

                        Posted in Uncategorized

                        சர்வாதிகாரி கோட்டா அலுவலகம் நோக்கி ஆர்ப்பாட்டம் – முற்றுகையில் ஓடுவாரா கோட்டா

                        சர்வாதிகாரி கோட்டா அலுவலகம் நோக்கி ஆர்ப்பாட்டம் – முற்றுகையில் ஓடுவாரா கோட்டா

                        இலங்கை சர்வாதிகாரியும் ,தமிழ் இனப் படு கொலையாளியுமான கோட்டா பாயாவின்

                        செயலகம் நோக்கி மக்கள் பேரணியாக சென்ற வண்ணம் உள்ளனர்

                        சில மணி நேரங்களில் அந்த செயலகம் முற்றுகையிட படும்

                        இவ்வாறு தொடராக மக்கள் கொதித்து போராட்டம் நடத்தி வரும் நிலையிலும்


                        எவ்வித சலனமும் இன்றி பதவி விலகிட கோட்டா மறுத்து வருகிறார்

                          Posted in இலங்கை செய்திகள்

                          நாடு தழுவிய நிலையில் மக்கள் போரராட்டம் – திணறும் கோட்டா அரசு

                          நாடு தழுவிய நிலையில் மக்கள் போரராட்டம் – திணறும் கோட்டா அரசு

                          இலங்கையில் ஆளும் அரசுக்கு எதிராக மக்கள் நாடளாவிய ரீதியில் பலத்த எதிர்ப்பு போராட்டங்களை தொடராக நடத்திய வண்ணம் உள்ளனர்

                          கோட்டாவே வீட்டுக்கு போ என்ற வாசகங்கள் தொடர்ந்து ஒலித்த வண்ணம் உள்ளது

                          எனினும் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காது கோட்டா அதிகாரத்தை விட்டு செல்ல மறுத்து வருகிறார்

                          சிங்களவர்கள் அதிகம் வசிக்கும் காலி ,கொழும்பு,அம்பன்தோட்டை என விரிந்து

                          கொழும்பின் பல பகுதிகளும் இந்த போராட்டம் முன்னெடுத்து செல்ல படுகிறது

                          மக்களின் தொடர் போராட்டங்கள் அதிகாரித்து செல்லும் நிலையில் பலத்த நெருக்கடியில் ஆளும் அரசு சிக்கியுள்ளது

                            Posted in இலங்கை செய்திகள்

                            பாராளுமன்றம் நுழைந்து விட்டு ஓடிய கோட்டா

                            பாராளுமன்றம் நுழைந்து விட்டு ஓடிய கோட்டா

                            இலங்கை பாராளுமன்றம் இன்று கூடிய பொழுது சற்று நேரம் தங்கி இருந்த

                            கோட்டா அங்கிருந்து வெளியேறினார்

                            இவருக்கு ஆதரவாகவும் ,எதிராகவும் அங்கு கோஷங்கள் எழுப்ப பட்டண

                            இதனால் பாராளுமன்றம் குழப்பதில் காணப்பட்டது ,ஆட்சியில் இருந்து விலக

                            கோட்டா தொடர்ந்து மறுத்து
                            வருகின்றமை குறிப்பிட தக்கது

                              Posted in இலங்கை செய்திகள்

                              கோட்டாவை பதவி விலகும்படி பவுத்த பீட முக்கியஸ்தர் கோரிக்கை

                              கோட்டாவை பதவி விலகும்படி பவுத்த பீட முக்கியஸ்தர் கோரிக்கை

                              இலங்கையில் ஆளும் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்து பறக்கும்

                              நிலையில் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து உடனே மகிந்தா ,கோட்டா பதவி விலக வேண்டும் என


                              பவுத்த பீடாதிபதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

                              பதவி விலக மறுத்து மகிந்த கோட்டா அடம் பிடித்து வரும் நிலையில்


                              வரும் நாட்களில் மக்களின் போராட்டம் அதிகமாக இடம் பெறுமென


                              ஏதிர்பார்க்க படுவதுடன் ,மகிந்த குடும்பத்தினர் வீடுகள் சுற்றிவளைக்க படலாம் என எதிர் பார்க்க படுகிறது

                                Posted in உளவு செய்திகள்

                                புலிகளை அழித்தவர்கள்- புலிகளை தேடும் பரிதாபம்

                                புலிகளை அழித்தவர்கள்- புலிகளை தேடும் பரிதாபம்

                                இலங்கையில் தமிழ் தேசிய விடுதலைக்கு போராடிய தமிழீழ விடுதலை புலிகளைஅழித்தவர்கள் இன்று அதே எதிரியாக விளங்கிய புலிகளை தேடும் கால மாற்றம் நிகழ்ந்துள்ளது

                                அவர் தம் ஆட்சியும் ,அதிகாரமும் இலங்கையில் மீள நிலை நிறுத்த முடியா நிலைக்கு சென்றுள்ள இந்த கால கட்டத்தில் , எதிரி என பறையடித்து இனவாதம் பேசிய இதே வாய்கள் இன்று அதே எதிரிகளை தேடும் பரிதாபம் நிகழ்கிறது

                                புலிகளின் பீதியிலும் ,அரசுகள் கக்கிய இனவாதத்தில் உறைந்து கிடந்த சிங்களவர்கள் இப்பொழுதும் நாட்டில் எதிரிகளின் அச்சம் இல்லை என்ற நிலையில் உலாவி வந்தனர்


                                இது தலைகீழ் மாற்றத்தை உருவாக்கியதுடன் ஆட்சிகளை தூக்கி எறியும் நிலைக்கு வித்திட்டுள்ளது

                                சிங்கள இனவெறியுடன் அதே மக்கள் தம்மை காப்பார்கள் என எண்ணிய மகிந்த குடும்பம் ,இன்று அதே மக்களினால் எதிரியாக பார்க்க பட்டு தூக்கி வீச படும் நிலையில்

                                இப்பொழுது புலிகள் ஆயுத போரட்டத்தை உச்சரிக்க வேண்டிய தேவையும் .,சிங்கள மக்களை பயமுறுத்த வேண்டிய அவசியமும் ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது

                                அதற்கு ஆயுத குழுக்கள் தேவை படுகிறது ,எதிர் பாரத இடத்தில எதிர் பாராத தாக்குதல்களை எதிரியின் பெயரினால் நடத்திட வேண்டிய நிலையில் கோட்டா அரசு உள்ளது

                                அதனை இப்பொழுது செய்திட முடியா நிலையில் தவிக்கிறது ,அது அவர்கள் ஆட்சிக்கு மேலும் களங்கத்தை விளைவிக்கும் ,அதனால் புதிதாக ஆட்சியில் இருப்பவர்களுக்கு பெரும் நெருக்கடியை தோற்றுவிக்க

                                குண்டு வெடிப்புக்கள்,முஸ்லீம் தீவிரவாதத்தை மீளவும் நாட்டுக்குள் திணிக்க கோட்டா விளைவார்

                                புலிகளை அழித்தவர்கள்- புலிகளை தேடும் பரிதாபம்


                                அதற்காக தனது ஆயுத வளங்களையும், கூலி குழுக்களையும் உருவாக்குவார்,நாடு மீளவும் குண்டு சத்தங்களினால் அதிரும் காலம் உருவாகும் ,

                                அதனை உருவாக்கும் என்பதே புத்தி கெட்டவர்களில் சக்தியில் இருந்து தெரிகிறது,எதிர் வரும் ஆட்சி குண்டுகளினாலும் ,பட்டினியாலும் தவிக்கும் நிலை உருவாக்கம் பெற போகிறது ,

                                இங்கு எதிர் எதிர் அரசியல் படுகொலைகள் மீள அரங்கேற போகிறது,பின்புலத்தில் ராஜபக்ஸ முகங்கள் ஒளிந்து கிடக்கும் ,புலிகளை அழித்து வீர் வசனம் பேசியவர்கள்

                                இன்று அதுவே கோழைத்தனம் என்பதை பட்டுணர்ந்து தெரிந்து கொண்டதன் பின்னர்,பாவிகளாக அழுகின்றனர்

                                புலிகள் பெயரில் புதிய தாக்குதல்களை தாமே நடத்தி ,அதனை எதிரிகளான புலிகள் தலையில் சுமத்தி விடும் நிலைக்கு கோட்டா ,ராஜபக்ஸா குடும்பம் செல்ல போகிறது

                                போரை முடித்தவர்கள் போரை ஆரம்பித்து வைக்கும் புதிய காலம் ஒன்று உருவாக்கம் பெற போகிறது

                                காத்திருந்து பாருங்கள் காட்சிகளின் அகோரத்தை .எழுதி வைத்து கொள்ளுங்கள் எரிய போகிறது இலங்கை .


                                இது பர பரப்பு அல்ல பயன் பாடுகளின் பயணங்கள் …..அரசியல் என்பது தலைக்கீழ் மாற்றங்களின் சுழற்சி !

                                எதிரி எப்பொழுதும் எதிரி தான் என்பதற்கு எதிர் காலம் எழுத போகிறது ,எதிர்த்தவர்களின் வரலாற்றை .

                                • வன்னி மைந்தன் –
                                Posted in இலங்கை செய்திகள்

                                லண்டனில் கோட்டாவே வீட்டுக்கு போ – மக்கள் போராட்டம் – படங்கள் உள்ளே

                                லண்டனில் கோட்டாவே வீட்டுக்கு போ – மக்கள் போராட்டம் – படங்கள் உள்ளே

                                இலங்கையில் ஆளும் ஜனாதிபதி கோட்டாபாயாவுக்கு எதிராக


                                இன்று -06-04-2022 மதியம் 12 மணியளவில் லண்டன் இலங்கை தூதரகம் முன்பாக கண்டன பேரணி இடம்பெற்றது

                                இலங்கையில் மக்கள் படும் அவலம் ,மற்றும் பொருளாதார நெருக்கடி ,பட்டினி ,மற்றும் மக்களுக்கு எதிரான வன் முறைகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக கோஷமிட பட்டன

                                இங்கு கலந்து கொண்ட மக்களை சிங்கள உளவுத்துறையினர் மறைந்திருந்து காணொளி மற்றும் படங்கள் பிடித்துள்ளனர்

                                எனினும் அதனை மீறி மக்கள் தமது எதிர்ப்பை காண்பித்தனர் ,இலங்கையில் தொடர்ந்து ஆளும் ஆட்சியாளர்க்ளுக்கு எதிராக சிங்கள தமிழ் மக்கள் இணைந்து

                                போராட்டம் நடத்திய வண்ணம் உள்ளதும் ,இவர்கள புரிந்த தமிழ் இன படுகொலைக்கு தீர்வு வழங்க படவேண்டும் எனவும் மக்கள் கோரி வருகின்றனர்

                                தமிழர்களை அழித்த அதே மே மாதம், மற்றும் அந்த மக்கள் அகதிகளாக இடம்பெயர்நது உயிர் நீத்த இதே சித்திரையில் அதே ஆட்சியாளர்களுக்கு எதிராக

                                சிங்கள மக்கள்
                                உள்ளிட்டவர்கள் எதிராக பொங்கி எழுந்துள்ளமை இங்கே குறிப்பிட தக்கது

                                  Posted in Uncategorized

                                  நாட்டை விட்டு மகிந்த சகோதரி நிருபமா தப்பி ஓட்டம்

                                  நாட்டை விட்டு மகிந்த சகோதரி நிருபமா தப்பி ஓட்டம்

                                  இலங்கை ஆளும் சகோதர்கள், சகோதரியான நிருபமா கடந்த இரவு பத்து

                                  முப்பது மணியளவில் இலங்கையை விட்டு தப்பி ஓடியுள்ளார்,இவர் டுபாய்

                                  நாட்டுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது


                                  இது போலவே நாமல் மனைவி ,மற்றும் அவர் குடும்பமும் தப்பித்து சென்றது

                                  இவர் ஊழல் சர்ச்சையில் சிக்கியவர் என்பது இங்கே குறிப்பிட தக்கது

                                    Posted in Uncategorized

                                    போர் குற்றவாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துக ! சிங்கள மக்களிடத்தில் எழுந்துள்ள கோரிக்கை

                                    போர் குற்றவாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துக ! சிங்கள மக்களிடத்தில் எழுந்துள்ள கோரிக்கை

                                    சிறிலங்காவின் தற்போதைய ஆட்சியாளர்களுக்கு எதிரான தென்னிலங்கை

                                    மக்களின் போராட்டங்களில் ‘போர்குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துக’ என்ற முழக்கம் பலரது கவனத்தினை பெற்றுள்ளது.

                                    தமிழினஅழிப்புக்கு பொறுப்புக்கூற சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்த வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

                                    வலுவாக கூறிவருவதோடு, 2015ம் ஆண்டு 1.8 மில்லியனுக்கு மேற்பட்ட பொதுமக்கள் இதற்கான கோரிக்கையில் ஒப்பமிட்டிருந்தனர். ஐ.நா மனித

                                    உரிமைச்சபை ஆணையாளர் உட்பட பல சர்வதேச வளஅறிஞர்களும் இந்நிலைப்பாட்டை எடுத்துள்ளனர்.

                                    இந்நிலையில், ‘ராஜபக்ச குடும்பத்தினை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துக’ என்பதோடு ‘போர்குற்றவாளிகள்’ என சிறிலங்காவின் தற்போதைய

                                    ஆட்சியாளர்களுக்கு எதிரான தென்னிலங்கை மக்கள் போராட்ட முழக்கமொன்று பலரது கவனத்தினை பெற்றுள்ளது.

                                    ‘தமிழர்களுக்கு எதிராக சிறிலங்கா அரச கட்டமைப்பு நிகழ்த்திய இனப்படுகொலைக்கான பொறுப்புக்கூறலும், அதற்கான பரிகாரநீதியிலான

                                    அரசியல் தீர்வுமே இலங்கைத்தீவுக்கான முழுமையான நிலையான அமைதியினை தரும்’ என இவ்விடயம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின்

                                    அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சு கருத்து வெளியிட்டுள்ளது.

                                    சிறிலங்காவின் தற்போதைய அதிபராக இருக்கின்ற கோத்தபாய இராஜபக்ச, பிரதமர் மகிதந்த ராஜபக்ச உட்பட 12 அரசியல், இராணுவ தலைவர்களை

                                    ‘இனப்படுகொலையாளிகளாக’ (DIRTY DOZEN – Genocidaires and War Criminals on

                                    Tamils in Sri Lanka) நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னராக பட்டியலிட்டிருந்தமை இங்கு குறிப்பிடதக்கது.