Posted in இலங்கை செய்திகள்

காதல் சண்டை நண்பனை கத்தியால் குத்திய காதலன்

காதல் சண்டை நண்பனை கத்தியால் குத்திய காதலன்

இலங்கை ; தெரணியகல நகரிலுள்ள பாடசாலையில் 10ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகியுள்ளார்.

நேற்று (2) பகல் பாடசாலையில் வைத்து இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பாடசாலையில் 11ஆம் தரத்தில் கல்வி கற்கும் மாணவன் ஒருவனே அந்த மாணவனை கத்தியால் குத்தியுள்ளதாக தெரணியகல பொலிஸார் தெரிவித்தனர்.

கத்தியால் குத்திய மாணவன் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், காயத்துக்கு உள்ளான மாணவன் தெரனியகல வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வருகின்றார்.

கைதுசெய்யப்பட்ட மாணவன் இன்றைய தினம் அவிசாவளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காதல் தொடர்பே இந்தச் சம்பவத்துக்கு காரணம் என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

    Posted in இலங்கை செய்திகள்

    தமிழ் மக்கள் அரசியல் பிரச்சனையை தீர்ப்பேன் ரணில்

    தமிழ் மக்கள் அரசியல் பிரச்சனையை தீர்ப்பேன் ரணில்

    பல வருட காலமாக தமிழ் மக்கள் முகம்கொடுக்கும் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வினைப் பெற்றுக்கொடுக்க வேண்டியமை அத்தியாவசியமான விடயங்களில் ஒன்றாகும் என்று தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்ஹ தெரிவித்தார்.

    யுத்தத்தின் மூலம் பாதிக்கப்பட்ட அந்த மக்கள் சமூக மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகள் பலவற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறினார்.

    ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்ஹ ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடரை இன்று (03) ஆரம்பித்துவைத்து உரையாற்றுகையில் இவ்வாறு குறிப்பிடடார்..

    அம்மக்களின் தீர்க்க வேண்டிய காணிப் பிரச்சினைகள் பல உள்ளன. வடக்கின் அபிவிருத்திச் செயற்பாடுகள் தொடர்பாக நாம் புதிதாக சிந்திக்க வேண்டியுள்ளது. வெளிநாடுகளில் வாழுகின்ற இலங்கை தமிழ் மக்களுடன்

    நெருங்கிச் செயற்பட்டு, இலங்கையினை மீளக் கட்டியெழுப்பும் வேலைத் திட்டத்திற்கு அவர்களது ஒத்துழைப்பினைப் பெற்றுக்கொள்வதற்கும் நாம் எதிர்பார்க்கின்றோம் என்றும் ஜனாதிபதி மேலும் கூறினார்.

    1977 இல், அரசியலில் பிரவேசித்த நாள் முதல் எனக்கு தேவைப்பட்ட ஒரு விடயம் இவ்வாறான பிரிவுகளற்ற இலங்கையெனும் ஆளடையாளத்தைக்

    கொண்ட சமூகமொன்றினை உருவாக்குவதாகும். ஒருதாயின் பிள்ளைகளாக ஒற்றுமையாக வாழக்கூடிய தேசமொன்றை உருவாக்குவதாகும்.

    இம்முயற்சியில் தொடர்ச்சியாக ஈடுபட்டதன் காரணமாக நான் அரசியல் ரீதியாக தோல்விகளை சந்தித்தேன். தோல்விகளை சந்தித்தேன்.

    சிங்கள பேரினவாதிகளின் மாத்திரமன்றி, தமிழ், முஸ்லிம் பேரினவாதிகளின் விமர்சனங்களுக்கு ஆளானேன். இனவாதிகளுக்கும்.

    சமயவாதிகளுக்கும் எதிராக தொடர்ச்சியாக ஈடுபட்டமையால் சில அரசியல் கட்சிகள் என்னை தேசத்துரோகியாகவும் சமய எதிரியாகவும் அவதூறுக்கு உட்படுத்தின

    எனினும் நான் எனது கொள்கையில் இருந்து விலகிச் செல்லவில்லை. ஒருபோதும் நான் அந்தக்கொள்கையிலிருந்து விலகவும் மாட்டேன்.

    இன்று இளம்பராயத்தில் பெரும்பாலானவர்கள் எனது அந்தக் கொள்கையை முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என ஏற்றுக்கொண்டுள்ளனர்.

    அவர்கள் இனவாதத்திற்கும் சமயவாதத்திற்கும் எதிராக கோஷம் எழுப்புகின்றனர். சிங்களவர், தமிழர், முஸ்லிம், பறங்கியர் உள்ளிட்ட அனைத்து இனங்களுக்கும் சமத்துவமாக கவனித்தல் வேண்டும் என சிங்கள இளைஞர்

    யுவதிகள் கூறுகின்றனர். சுமார் ஐந்து தசாப்த காலமாக நான் இச்சமூகத்திற்கு விளங்கவைப்பதற்கு முயற்சித்த சத்தியத்தை இன்று இளம் பராயத்தினர் புரிந்துகொண்டுள்ளமையானது மகிழ்ச்சிக்குரிய ஒரு விடயமாகும்

    இந்த இளைஞர் யுவதிகளின் ஒத்துழைப்புடன், முழு நாட்டையும் அக்கொள்கையின் பக்கம் ஒன்றுதிரட்டுவதற்கான வாய்ப்பு தற்போது எமக்கு கிடைத்துள்ளது. இன, மத, கட்சி, குலம் உள்ளிட்ட அனைத்து வேதங்களையும்

    ஒழிப்பதற்கு வாய்ப்புக்குக் கிட்டியுள்ளது. அந்த பேதங்கள் காரணமாக சில சமயங்கள் படுகின்ற துன்பத்தை ஒழிப்பதற்கு வாய்ப்பு கிட்டியுள்ளது. திறமை மற்றும் தேர்ச்சி மூலம் நபர்களின் எதிர்காலப் பயணத்தைத்

    தீர்மானிப்பதற்குகான அடித்தாளத்தை உறுதிப்படுத்துவதற்கும் வாய்ப்புக் கிட்டியுள்ளது. அனைத்துப் பிரசைகளும் சுதந்திரமாக வாழக் கூடிய சூழலை

    உருவாக்குவதற்கான பின்னணி ஏற்பட்டுள்ளளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்ஹ சுட்டிக்காட்டினார்..

    எமது நாட்டின் சனத்தொகையில் பெரும்பான்மையாக காணப்படுகின்றன பெண்கள் இன்னமும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள், ஏனைய வித்தியாசங்கள், குறைபாடுகள் பலவற்றிற்கு முகம்கொடுத்து வருகின்றனர்.

    இந்நிலையினை மாற்றியமைத்தல் வேண்டும். அதற்குத் தேவையான அரசியல் மற்றும் சமூக செயற்பாடுகளை நாம் எடுக்க வேண்டியுள்ளது.


    அவ்வாறே இலஞ்சம், ஊழல் மற்றும் மோசடி என்பவற்றினை சமூகத்தில் இருந்து முழுமையாக ஒழிப்பதும் கட்டாயமான ஒன்றாகும். இலஞ்சம் மற்றும் ஊழலை ஒழிப்பதற்கான தேசியக் கொள்கை ஒன்றினை நாம்

    அமுல்படுத்துவேன். இதற்குத் தேவையான சட்டதிட்டங்கள் நிதி அமைச்சினால் தயாரிக்கப்பட்டுவரும் நிலையில் உள்ளன. அவ்வாறே சர்வதேச நாணய நிதியத்துடனும் ஊழல் ஒழிப்பு பற்றிய இணக்கப்பாடொன்றிற்கு வருவோம்.

    இந்த அனைத்துப் பணிகளையும் மேற்கொள்வதற்கு முழுமையான அரசியல் மறுசீரமைப்புத் திட்டமொன்று தேவைப்படுகின்றது. அந்த மறுசீரமைப்பை எனது பதவிக்காலத்தினுள் நான் மேற்கொள்வேன். எனினும் அது எனது

    தனிப்பட்ட அபிப்பிராயத்திற்கு அமைவாக அல்ல. இளைஞர்களின், பெண்களின் மற்றும் ஏனைய மக்களின் கருத்துக்களை அடிப்படையாக்

    கொண்டு மக்களினதும் பாராளுமன்றத்தினதும் இணக்கப்பாட்டிற்கு அமையவே அதனை மேற்கொள்வேன் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

    மேற்கொள்ள வேண்டிய சமூக மற்றும் அரசியல் மறுசீரமைப்புக்கள் என்ன என்பது பற்றி தீர்மானிப்பதற்காக மக்கள் சபை ஒன்றினை நிறுவுவதற்கு நான் நடவடிக்கை எடுப்பேன். அரசியல் கட்சிகள், நானாவித அமைப்புகள் மற்றும்

    இது தொடர்பாக ஆர்வம் காட்டுகின்ற அனைத்து நபர்களதும் கருத்துக்களை மக்கள் சபையின் ஊடாக விசாரிப்பதற்கான பொறிமுறை ஒன்றினை உருவாக்குவேன்.

    இதற்காக கருத்துக்களைப் பெற்றுத்தருமாறு போராட்டத்துடன் தொடர்புடைய இளைஞர்களிடமும், தொடர்புபடாத இளைஞர்களிடமும் நான் முக்கியமாக வேண்டுகோள் விடுக்கின்றேன் என்றும் குறிப்பிட்டார்.

    எமது நாட்டின் ஜனாதிபதி முறைமையினை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்ல வேண்டுமா? நாட்டிற்கு மிகவும் பொருத்தமான முறைமை எது? ஆட்சி முறையானது எவ்வாறான மறுசீரமைப்புகளுக்கு உட்பட வேண்டும்? உள்ளிட்ட

    அனைத்து விடயங்களும் மக்கள் சபையின் ஊடாக கலந்துரையாடப்படும். நாட்டிற்கு மிகவும் பொருத்தமான முறைமை தொடர்பாக தேசிய

    இணக்கப்பாடொன்றுக்கு வந்ததன் பின்னர் அம்முறைமையினை சட்டமாக வரைந்து நடைமுறைப்படுத்துவேன்.

    என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்ஹ ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடர் உரையில் மேலும் தெரிவித்தார்..

    இவ்வாறான தேசிய இணக்கப்பாட்டிற்கு வருவது கட்டாயமான ஒரு விடயமாகும். அதுபற்றி நான் சிறிது விளக்க விரும்புகின்றேன்.

    நமது நாட்டில் பல சனாதிபதி தேர்தல்களின் போது முன்வைக்கப்பட்ட பிரதான வாக்குறுதி தான் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிக்கப்படும் என்பதாகும்.

    எனினும் அந்த வாக்குறுதியை வழங்கி அதன் மூலம் அதிகாரத்திற்கு வந்த எவரும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிக்கவில்லை.

    மாறாக ஒருவர் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையினை ஒழித்தாலும், அதன் பின்னர் ஆட்சிக்கு வரும் கட்சியினால் மீண்டும் அதனை மாற்றியமைக்கும் இயலுமை உள்ளது என்பதையும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.

    அதனால் தான் நாங்கள் மக்கள் சபை ஊடாக பொதுவான தேசிய இனக்கப்பாடு ஒன்றிற்கு வரவேண்டிய தேவையுள்ளது.


    மக்கள் சபை என்பது முழுமையாக சுயாதீனமாக செயற்படும் ஒரு நிறுவனமாகும். அரசாங்கம் அதற்குத் தேவையான வளங்களை வழங்குவதை மாத்திரமே மேற்கொள்ளும். அதன் பணிகளுக்கு அல்லது தீர்மானங்களுக்கு

    அரசாங்கத்தின் விதவித தாக்கமும் இருக்காது. மக்கள் சபையின் அமைவு பற்றி நாம் பல்வேறு தரப்பினருடன் கலந்துரையாடி தீர்மானிப்போம்.


    சாதாரண சமூகமொன்றிற்கான தேசிய இணக்கமானது தற்போதும் கூட, மக்கள் சபை பற்றி கருத்துக்கள் மற்றும் பிரேரணைகள் என்பவற்றினை எமக்குப் பெற்றுத்தந்துள்ளன.

    மக்கள் சபையின் பணிகளை மிகவும் முறைப்படுத்துவதற்காகவும் மற்றும் வினைத்திறன்மிக்கதாக அமையும் பொருட்டு ஐக்கிய நாடுகள் சபை போன்ற பல்தரப்பு அமைப்புகளின் ஒத்துழைப்பினைப் பெற்றுக்கொள்வதற்கும்

    வாய்ப்பினை வழங்குவேன். அவதானிப்புகள் அல்லது தொழில்நுட்ப ஆலோசனை மட்டத்தில் அவ்வாறான ஒத்துழைப்புகளை பெற்றுக்கொள்வதற்கு மக்கள் சபைக்கு வாய்ப்பு உள்ளது.

    நான் இதற்கு முன்னரும் சபையில் குறிப்பிட்டது போன்று பாராளுமன்ற மேற்பார்வைக் குழுக்களை உடனடியாக நிறுவுவதற்கு நடவடிக்கை எடுப்பேன். .அந்த குழுக்கள் ஊடாகவும் அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் ஒன்றாக

    இணைந்து செயல்படுவதற்கான வாய்ப்புக் கிட்டும். சாதாரண சமூகமொன்றிற்கான தேசிய இயக்கம் இது தொடர்பாக சமர்ப்பித்த அறிக்கையினை நான் ஏற்கனவே இச்சபையில் சமர்ப்பித்துள்ளேன்.

    அவ்வாறே அரசியல் கட்சித் தலைவர்களை உள்ளடக்கிய தேசிய சபை ஒன்றினை நிறுவுவதற்கு நான் நடவடிக்கை எடுப்பேன். முன்னெடுக்கும்

    நோக்கில் அனைவரினதும் ஆகக் குறைந்த பொது இணக்கப்பாடொன்றுடன் கூடிய வேலைத்திட்டம் ஒன்றினை இந்த தேசிய சபையின் ஊடாக தயாரித்துக்கொள்ள எம்மால் முடியும்.

    பேதங்கள் மூலம் எமது நாடு முற்காலம் தொட்டு பின்னடைவுகளுக்கு உள்ளானது. நாம் இன ரீதியாக பிரிந்தோம், மொழி ரீதியாக பிரிந்தோம், சமய ரீதியாக பிரிந்தோம். கட்சி ரீதியாக பிரிந்தோம். வகுப்பு ரீதியாக பிரிந்தோம், பூகோள ரீதியாகவும் பிரிந்தோம் குல ரீதியாகவும் பிரிந்தோம்.

    சில தரப்பினர்கள் இப்பிரிவினை மேலும் விஸ்தரித்தனர். அதிகாரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக இவ்வாறான பிளவுகளை பயன்படுத்தினர். பிரித்து ஆள்வதன் அனுகூலத்தை அனுபவித்தனர். முஸ்லிம் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் இடையில் பிரச்சினைகளை உருவாக்கினர்.

    தமிழ்; மக்களுக்கும் முஸ்லிம் மக்களுக்கும் இடையில் பிரச்சினைகளை உருவாக்கினர். இவ்வாறு இன ரீதியாவும் சமய ரீதியாகவும் பல்வேறு விதமான பிளவுகளை ஏற்படுத்தி அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்வதற்கு முயற்சித்தனர் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.

    வரிசையில் காத்திருக்காது சமையல் எரிவாயுவை இன்னும் சில தினங்களில் அனைவராலும் பெற்றுக்கொள்ள முடியும். உணவுத் தட்டுபாடொன்று ஏற்படாதவாறு அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

    மருத்துவமனைகளுக்குத் தேவையான மருந்து வகைகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் என்பவற்றினைக் கொள்வனவு செய்யும் பணி

    ஆரம்பிக்கப்பட்டுள்ளது. பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கைத்தொழில்கள் மற்றும் ஏற்றுமதித் துறை என்பவற்றிற்கு ஏற்பட்டுள்ள தடைகளை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளன.

    மீளெழும் முயற்சியிலே எமது அயல் நாடான இந்தியா வழங்கிய ஒத்துழைப்பு தொடர்பாக நான் விசேடமாக இங்கு குறிப்பிட விரும்புகின்றேன் இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தலைமையிலான இந்திய அரசாங்கம்

    எமக்கு வழங்கிய உயிர் மூச்சுக்கு நான் இலங்கை மக்கள் சார்பாக மோதி பிரதமர் அவர்களுக்கும், இந்திய அரசாங்கத்திற்கும், இந்திய மக்களுக்கும்

    நன்றியினை தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன் என்று தெரிவித்த ஜனாதிபதி:

    தற்போது எமது முன்னால் உள்ள குறுங்கால பிரச்சினை அமைவது எரிபொருள் தட்டுப்பாடாகும். எரிபொருளை கொண்டு வருவதற்காக ஏனைய நாடுகளிடமிருந்து கடன் உதவிகள் கிடைக்கும் வரையில் காத்திருக்கும்

    முறைமையிலே நாம் முடிவுக்கு கொண்டு வருதல் வேண்டும் எனவே எமது நாட்டின் ஏற்றுமதி வருமானம் மற்றும் வெளிநாட்டு நாணயமாற்று ஊடாக எரிபொருளை கொண்டு வருவதற்கான முறைமை ஒன்றினை நாம் ஆரம்பிக்க

    உள்ளோம். இதன் போது எரிபொருளுக்கான கொடுப்பனவினை சமப்படுத்திக்கொள்வதற்காக தேர்ந்தெடு இறக்குமதிகளை

    வரையறுத்துக்கொள்ள வேண்டியும் எமக்கு ஏற்படும.; மறுபுறமாக எரிபொருள் விநியோகத்தை மட்டுப்படுத்த வேண்டியும் ஏற்படும்

    . எனவே இந்த ஆண்டின் இறுதி வரையில் இந்த கஷ்டத்தினை நாட்டுக்காக நாம் தாங்கிக்கொள்ளல் வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.


    பொருளாதார நெருக்கடி காரணமாக நாம் அனைவரும் பல்வேறுபட்ட இன்னல்களுக்கு முகம்கொடுத்து வருகின்றோம்;, துன்பப்படுகின்றோம், கஷ;டப்படுகினறோம்;, சிக்கல்களுக்கு ஆளாகின்றோம். இவ்வாறான

    கஷ;டங்கள் மற்றும் துன்பங்கள் என்பவற்றிலிருந்து விடுபடுவதற்கான பாதையை நோக்கி இந்நாட்டினைக் கொண்டுசெல்வதற்கு உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்புடன் நான் நடவடிக்கை எடுப்பேன்.

    இந்த கஷ;டங்களிலிருந்து மீழுவதற்குநாம் நீண்ட கால தீர்வுகளை நோக்கிப் பயணித்தல் வேண்டும். மீண்டும் ஒருபோதும் எமது நாட்டிலே இவ்வாறான பொருளாதார நெருக்கடியொன்று எமது நாட்டிலே ஏற்படாதவாறு பலமிக்க

    அடித்தாளமொன்றினை இடுதல் வேண்டும். பொருளாதாரத்தை நவீனமயப்படுத்துதல் வேண்டும். பொருளாதார ஸ்திரத்தன்மையினை ஏற்படுத்தி, போட்டித்தன்மைமிக்க சந்தைப் பொருளாதாரம் ஒன்றின் பக்கம்

    மாற்றியமைத்தல் வேண்டும். அவற்றிற்குத் தேவையான அறிக்கைகள், திட்டமிடல், சட்டதிட்டங்கள், ஒழுங்கு விதிகள் மற்றும் நிகழ்ச்சித் திட்டங்கள்

    என்பவற்றினை தற்போது நாம் தயாரித்து வருகின்றோம என்றும் குறிப்பிட்டார்.

    நாம் நடைமுறைப்படுத்தும் செயல்திட்டங்கள் என்பவை தொடர்பான விபரமான தகவல்கள் எதிர்காலத்தில் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படும்

    இடைக்கால வரவுசெலவு மற்றும் 2023 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தினூடாக முன்வைக்கப்படும்.
    மீளெழுச்சிபெறும் ஆரம்பக் கட்டமொன்றாக நாம் சர்வதேச நிதியத்தோடு நான்கு வருட வேலைத் திட்டமொன்று தொடர்பான கலந்துரையாடல்களை ஆரம்பித்தோம். ஆகஸ்ட் மாதத்திலிருந்து நாம் அந்த கலந்துரையாடல்களை

    மீணடும் முன்னெடுத்துச் செல்வோம். ஆரம்ப கட்ட உயர்மட்டத்திலான கலந்துரையாடல்களைச் துரிதமாகவும் சிறப்பான முறையிலும் முடிப்பது எமது எதிர்பார்ப்பாகும்.

    சர்வதேச நிதியம் மற்றும் சட்ட நிபுணர்களான லசாட் மற்றும் கிளிபட் சான்ஸ் நிறுவனங்களோடு சேர்ந்து கடன் நிலைபடுத்தும் திட்டம் தற்போது முடியுறும் தறுவாய்க்கு வந்துள்ளது. இந்தத் திட்டத்தை இன்னும் சில தினங்களில் நாம்

    சர்வதேச நிதியத்திடம் முன்வைப்போம். அதன்பின்பு எமக்கு கடன் உதவிகள் வழங்கியுள்ள நாடுகளோடு கலந்துரையாடுவோம். அதன்பின்பு தனியார்

    கடனாளிகளோடும் கலந்துரையாடல்களை ஆரம்பிப்போம். அவர்களோடு உடன்பாட்டுக்கு வருவோம்.

    பொருளாதாரத்தை நிலைபேறுடையதாக்கும் முயற்சியின்போது சமூகத்தின் வலுவற்ற மற்றும் நிர்க்கதியானோர் தொடர்பில் மிகுந்த கவனம் செலுத்துவோம். நாட்டின் தொழில்முயற்சியாளர்களுக்கு தங்களது

    ஆற்றல்களினூடாக முன்வருவதற்குத் தேவையான வழிகளை மேலும் விரிவுபடுத்துவதோடு சமூகத்தில் கீழ்மட்டத்தில் வசிக்கும் மக்களின் தேவைகளைப் பூர்த்திசெய்வதற்கு நடவடிக்கை எடுப்போம். நாடுபூராகவும்

    வசிக்கும் ஏழை மக்களுக்கு குறுகியகால நிவாரணங்களை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்போம். அதேபோன்று அவர்களது வாழ்வாதாரத்தை

    மேம்படுத்துவதற்கு நீண்டகால வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்துவோம். நான் சமூக மாற்றங்களுக்காக அர்ப்பணிப்போடு செயற்படுவேன்.

    நான் எதிர்காலத்திற்காக மேற்கொள்ள வேண்டிய நேர்மறையான சமூக மாற்றங்களுக்காக அர்ப்பணிப்பேன். மீண்டும் விரிவான நடுத்தர வர்க்கத்தினரை உருவாக்குவதற்குத் தேவையான அடிப்படையை

    உருவாக்குவேன். சமூக சந்தைப் பொருளாதாரம் ஒன்றின் ஊடாக நன்மைகள் முழு சமூகத்திற்கும் நியாயமானவாறு பெற்றுக்கொடுப்பேன்.

    இலங்கை தேசத்தைக் கட்டியெழுப்புவதற்காகப் பாடுபடும்போது சம்பிரதாய சிந்தனையிலிருந்து விடுபடுமாறு நான் சகல தரப்பினரிடமும் கேட்டுக்கொள்கின்றேன். வெறுமனே அதிக வட்டிக்கு வர்த்தகக் கடன்களைப்

    பெற்றுக்கொள்ளும்போது அமைதியாகப் பார்த்திருந்த சில குழுக்கள் நாட்டுக்கு பொருத்தமான முதலீடுகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். பொய்யான பலிக்கடாக்களை உருவாக்கி மக்களை திசைதிருப்புகின்றார்கள்.

    இந்தியாவோடு ஒன்றிணைந்து திருகோணமலை எண்ணெய்த்தாங்கித் தொகுதியினை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கும்போது இந்தியாவுக்கு இலங்கையை விற்கின்றார்கள் என்று கூறி அபிவிருத்தித்

    திட்டத்துக்கு இடையூறு விளைவித்தனர். அன்று எமக்கு எண்ணெய்த்தாங்கித் தொகுதியினை அபிவிருத்தி செய்துகொள்வதற்குச் சந்தர்ப்பம்

    கிடைத்திருப்பின் இன்று மக்களுக்கு எரிபொருள் வரிசைகளில் நீண்டநாட்கள் அலைவதற்கு அவசியம் ஏற்பட்டிருக்காது.

    சுவசெரிய நோய் காவு வண்டிகளின் சேவையை ஆரம்பிக்கும்போது அதேபோன்று எதிர்ப்புகளைச் செய்தார்கள். சுவசெரிய நோய் காவு வண்டிகள் வைத்தியசாலைகளுக்கு வந்தால் ஏற்படுவது மரணம் எனக்கூறி சில

    வைத்தியர்கள் ஊடகக் கலந்துரையாடல்கள் நடத்தினார்கள். ஆனாலும் நாம் எவ்வாறாயினும் சுவசெரியவை ஆரம்பித்ததனால் தற்போது பல்லாயிரக்கணக்கான உயிர்கள் பாதுகாக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக மக்களை வழிதவறி நடத்தி தடைசெய்த கருத்திட்டங்கள் காரணமாக எமது பொருளாதாரக் கட்டமைப்பு அழிவடைந்தது என்றும் ஜனாதிபதி கூறினார்.

    இலகு புகையிரதச் சேவையைத் தாபிப்பதற்கும், துறைமுகத்தை மேம்படுத்துவதற்கும் ஜப்பான் நாடு முன்வந்த சந்தர்ப்பத்தில் அதற்கெதிராக

    அடிப்படையற்ற வீணான காரணிகள் பலவற்றை எடுத்துக்காட்டியதன் காரணமாக எமது நாட்டுக்குக் கிடைப்பதற்கிருந்த 3 பில்லியன் டொலருக்கு 8

    அதிகமான அளவு கிடைக்காமல் போயிற்று. அதுமட்டுமன்றி ஜப்பான் மற்றும் இலங்கைக்கிடையே இருந்த நீண்டகால நட்பு சிதறிப்போனது என்றும் குறிப்பிட்டார்.

    2025 ஆம் ஆண்டளவில் ஆரம்ப நிலை வரவுசெலவுத் திட்டத்தில் மிகை ஒன்றினை ஏற்படுத்துவது எமது முயற்சியாகும். பொருளாதார அபிவிருத்தி வேகத்தை நிலையான தன்மைக்கு உயர்த்துவதும் நமது முயற்சியாகும். 2026

    ஆம் ஆண்டாகும் போது நிலையான பொருளாதார அடிப்படை ஒன்றினை உருவாக்கிக் கொள்வது எமது எதிர்பார்ப்பாகும் தற்போது அரச கடன்

    அளவானது மொத்த தேசிய உற்பத்தியின் நூற்றுக்கு 140 சதவீதம் ஆகும். இதனை 2032 ஆம் ஆண்டளவில் மொத்தத் தேசிய உற்பத்தியில் நூறு சதவீதத்தை விடவும் குறைப்பது எமது திட்டமாகும்.

    அவ்வாறு தேசிய பொருளாதாரக் கொள்கையின் ஊடாக நாட்டினையும,; நாட்டு மக்களையும் கட்டியெழுப்பும் செயற்பாட்டினை முன்னெடுத்துச்

    சென்றால், 2048 ஆம் ஆண்டிலே சுதந்திர தின நூற்றாண்டினைக் கொண்டாடும்;போது, முழுமையான அபிவிருத்தி அடைந்த ஒரு நாடக எம்மால் மாற முடியும்.

    நான் இவ்வாறான நீண்டகால இலக்குகளுக்குத் திட்டங்களைத் தயாரிக்கும்போது சிலர் பரிகாசமாகப் பார்க்கின்றார்கள். கேலிக்கதைகள் சொல்கின்றனர். ஆம். நான் ஏனைய அரசியல்வாதிகள் போன்றவர் அல்ல.

    என்னிடம் இருப்பது நீண்டகாலத் திட்டங்கள்.நான் திட்டமிடுவது எனது முன்னேற்றத்துக்காக அல்ல. இளைஞர் சமுதாயத்துக்காகவே. நாளைய நாளுக்காகவே. நான் இன்று நாட்டும் மரத்தின் அறுவடையை எனக்கு

    அனுபவிக்க கிடைக்காது என்பதை நான் நன்றாக அறிவேன். ஆனாலும் நாளைய தினம் எமது பிள்ளைகளான எதிர்காலப் பரம்பரைகள் அந்த அறுவடையை அனுபவிப்பார்கள்.

    இன்று ஏற்பட்டுள்ளது என்ன? அரசியல் முறைமை மற்றும் அரசியல்வாதிகள் தொடர்பான மக்களது நம்பிக்கை அற்றுப்போய்விட்டது. அரசியல்

    பொறிமுறை தொடர்பான மக்களது எதிர்பார்ப்புகள் உடைந்துபோயுள்ளன. கடந்தகாலம்பூராகவும் எதிர்ப்பில் ஈடுபட்ட மக்கள் இந்த முறைமைத்தொகுப்பின் மாற்றத்தை கேட்டு நின்றது அதற்காகத்தான்.

    இலங்கை நாட்டையும் நாட்டு மக்களையும் கட்டியெழுப்புவதற்குத் தேவையான
    சகல மாற்றங்களையும் செய்வதற்கு நான் நடவடிக்கை எடுப்பேன்.
    நாடு கேட்கும் சமூக மற்றும் அரசியல் மறுசீரமைப்புகளை நான்

    நடைமுறைப்படுத்துவேன்என்றும்
    ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்ஹ ஒன்பதாவது பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடர் உரையில் மேலும் தெரிவித்தார்.. .

    ஜப்பானியத் தூதுவர் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருடன் சந்திப்பு
    Posted in இலங்கை செய்திகள்

    ஜப்பானியத் தூதுவர் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருடன் சந்திப்பு

    ஜப்பானியத் தூதுவர் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருடன் சந்திப்பு

    இலங்கையில் உள்ள ஜப்பானியத் தூதுவர் மிசுகோஷி ஹிடேகி, புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கையின் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரியை 2022 ஜூலை 28ஆந் திகதி அமைச்சில் சந்தித்தார்.

    அமைச்சர் சப்ரி மற்றும் தூதுவர் மிசுகோஷி ஆகியோர் இந்த ஆண்டு 70வது ஆண்டு நிறைவை எட்டிய பன்முக இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடினர்.

    ஜப்பானிய அரசாங்கம் சரியான நேரத்தில் வழங்கிய உதவி மற்றும் ஆதரவைப் பாராட்டிய அமைச்சர், தற்போதைய பொருளாதார நிலைமை மற்றும் சவால்களைத்

    தணிப்பதற்காக அரசாங்கம் முன்னெடுத்துள்ள முயற்சிகள் குறித்து தூதுவருக்கு விளக்கினார்.

    இந்த சந்திப்பின் போது வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் சிரேஷ்ட
    அதிகாரிகள் மற்றும் ஜப்பான் தூதரக அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

      தேவாயலம் அடித்து நொறுக்கு விஷமிகள் அட்டகாசம்
      Posted in இலங்கை செய்திகள்

      தேவாயலம் அடித்து நொறுக்கு விஷமிகள் அட்டகாசம்

      தேவாயலம் அடித்து நொறுக்கு விஷமிகள் அட்டகாசம்

      இலங்கை ; முசலி – கஜிவத்தை பகுதியில் காணப்பட்ட புனித அந்தோனியார் சிற்றாலயத்தில் உள்ள தூய அந்தோனியார் திருச் சொரூபங்கள் இரண்டு

      இனம் தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டுள்ளதாக கொக்குப்படையான் கிராம மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

      குறித்த புனித அந்தோனியார் சிற்றாலயத்தில் நேற்று மாலை ஆராதனைகளை மேற்கொள்ள கொக்குப்படையான் கிராம மக்கள் சென்றிருந்தனர்.

      இதன் போது குறித்த சிற்றாலயத்தில் கண்ணாடிப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த சுமார் 1 மற்றும் 3 அடி உயரம் கொண்ட அந்தோனியார் திருச் சொரூபம் உடைக்கப்பட்டமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

      சம்பவம் குறித்து உடனடியாக சிலாவத்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளதாக கொக்குப்படையான் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.

        பொருட்களின் விலை அதிகரிப்பினால் மக்கள் அவதி ரணிலிடம் முறையீடு
        Posted in இலங்கை செய்திகள்

        பொருட்களின் விலை அதிகரிப்பினால் மக்கள் அவதி ரணிலிடம் முறையீடு

        பொருட்களின் விலை அதிகரிப்பினால் மக்கள் அவதி ரணிலிடம் முறையீடு

        பொருட்களின் விலை அதிகரிப்பினால் பொது மக்கள் எதிர்கொண்டுள்ள இன்னலை ஜனாதிபதியிடம் தான் சுட்டிக்காட்யிருப்பதாகவர்த்தகம், வணிகம்

        மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

        மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இன்று (02) மேற்கொண் உத்தியோகபூர் விஜயத்தின் போது நுகர்வோர் மத்தியில் அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

        இந்த விஜயத்தின் போது அமைச்சர் இ கள்ளியங்காடு பகுதியில் அமைக்கப்பட்டுவரும் சத்தோச மொத்த விற்பனை நிலையத்தை பார்வையிட்டார்.

        கள்ளியங்காடு பகுதியில் அமைக்கப்பட்டுவரும் சதோச மொத்த விற்பனை நிலையத்தை பார்வையிட்டதுடன், அதற்கு அருகாமையில் தற்காலிகமாக நிறுவப்பட்டுள்ள சதோச விற்பனை நிலையத்தை பார்வையிட்டார்.

        பொருட்களின் விலை அதிகரிப்பினால் மக்கள் அவதி ரணிலிடம் முறையீடு


        விற்பனை நிலயத்தில் காணப்படும் குறைபாடுகளை அதிகாரிகளிடமும்இ வாடிக்கையாளர்களிடமும் கேட்டறிந்துகொண்டதுடன், காணப்பட்ட குறைபாடுகளை நிவர்த்திப்பதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொண்டார்.

        இதன்போது பொருட் கொள்வனவில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவர் தமக்கு பால்மா இங்கு கிடைப்பதில்லையென கூறியதை தொடர்ந்து அமைச்சர்

        தொலைபேசி வாயிலாக உரிய அதிகாரியை தொடர்பு கொண்டு மாவட்டத்திற்கென இலவசமாக ஒரு தொகுதி பால்மாவை

        அனுப்பிவைக்குமாறு பணித்ததுடன், சத்தோசையின் விற்பனைக்காகவும் பால்மாவினை அனுப்பிவைக்குமாறும் பணித்தார்.

        அத்தோடு கடந்த அமைச்சரவை கூட்டத்தின்போது தான் ஜனாதிபதியிடம் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட வேண்டும், மக்கள் மிகுந்த கஸ்டத்தை

        எதிர்நோக்கி வருகின்றார்கள் என கூறியிருப்பதாகவும் இதன்போது பொருட் கொள்வனவில் ஈடுபட்டிருந்த மக்களிடம் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

        அமைச்சரின் கள விஜயத்தின்போது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கே.கருணாகரன், மாவட்ட உதவி அரசாங்க அதிபர் ஏ.நவேஸ்வரன், அரச

        வர்த்தக கூட்டுத்தாபனத்தின் தலைவர் மற்றும் சத்தோச நிறுவனத்தின்
        அதிகாரிகள் உள்ளிட்ட மேலும் பலர் இதன்போது கலந்துகொண்டனர்.

          மோசடி அமைச்சர் மீளவும் அமைச்சரானார்
          Posted in இலங்கை செய்திகள்

          மோசடி அமைச்சர் மீளவும் அமைச்சரானார்

          மோசடி அமைச்சர் மீளவும் அமைச்சரானார்

          இலங்கையில் லஞ்ச உள்ள குற்ற சட்டு சுமத்த பட்டிருந்த நிமால் சிறிபாலடிசில்வா மீளவும் இலங்கையில் அமைச்சராக மாற்றம் பெற்றுள்ளார் .

          நிமால் சிறிபாலடிசில்வா விமான மற்றும் கப்பல் போக்குவரது அமைச்சராக நியமனம் பெற்றுள்ளார் .

          மிக முக்கிய பொறுப்பை நிமல் சிறிபாலடி சில்வா தன் வசப்படுத்தியுள்ளதால் பெரும் சர்ச்சை எழுந்துள்ளது .


          மேலுநிமால் சிறிபாலடி சில்வா மேற்கொண்ட லஞ்ச உள்ள மோசடிகள் தொடர்பில் இதுவரை விசாரணைகள் மேற்கொள்ள படவில்லை.

          இவை மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

            Posted in இலங்கை செய்திகள்

            இலங்கையில் கொரானாவுக்கு ஒரே நாளில் 7 பேர் மரணம்

            இலங்கையில் கொரானாவுக்கு ஒரே நாளில் 7 பேர் மரணம்

            இலங்கையில் வேகமாக கொரனோ பரவி வருகிறது ஏழுபேர் பலியாகியுள்ளதாக இலங்கை சுகாதர அமைச்சு தெரிவித்துள்ளது.

            ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாகிய பின்னர் தற்போது கொரனோ மரணங்கள் அதிகரிக்க பட்டு வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்து வருகிறது .

            இதன் மூலம் மக்களை வீடுகளுக்குள் முடக்கிட இந்த வார அறிவிப்பை இலங்கை அரசு புரிந்த வண்ணம் உள்ளது.


            ரணிலுக்கு எதிராக மக்கள் தொடர்ந்து போராடி வரும் நிலையில் இந்த அறிவிப்புக்கள் அதிரடியாகி வெளியாகிய வண்னம் உள்ளதான உள்நோக்கு
            இலங்கை அடித்து பூட்டும் நிகழ்விற்கு செல்ல போகிறது என்பதாக உள்ளது.

            நீண்டகாலமாக கடமையாற்றிய மாகாண திணைக்களத் தலைவர்களுக்கு உடனடி இடமாற்றம்.
            Posted in இலங்கை செய்திகள்

            நீண்டகாலமாக கடமையாற்றிய மாகாண திணைக்களத் தலைவர்களுக்கு உடனடி இடமாற்றம்.

            நீண்டகாலமாக கடமையாற்றிய மாகாண திணைக்களத் தலைவர்களுக்கு உடனடி இடமாற்றம்.

            கிழக்கு மாகாணத்தில் நீண்டகாலமாக ஒரே பதவியில் கடமையாற்றி வந்த சில மாகாண திணைக்களத் தலைவர்களை வேறு திணைக்களங்களுக்கு

            இடமாற்றம் செய்யுமாறு கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் மாகாண பிரதம செயலாளர் துசித பீ. வணிகசிங்கவிற்கு விடுக்கப்பட்ட பணிப்புரைக்கமைய இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

            அதற்கமைய, மாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்கள ஆணையாளராக கடமையாற்றிய திருமதி. ஆர்.வளர்மதி மாகாண கல்வி அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளராகவும், மாகாண கல்வித்

            திணைக்களத்தின் மேலதிக மாகாண கல்விப் பணிப்பாளராக கடமையாற்றிய என்.சிவலிங்கம் மாகாண கூட்டுறவு திணைக்கள ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

            நீண்டகாலமாக கடமையாற்றிய மாகாண திணைக்களத் தலைவர்களுக்கு உடனடி இடமாற்றம்.

            மாகாண கூட்டுறவு ஆணையாளராக கடமையாற்றிய ஏ.எல்.எம்.அஸ்மி கல்முனை மாநகர ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

            மாகாண கலாசார பணிப்பாளராக கடமையாற்றிய எஸ்.நவநீதன் மாகாண கிராமிய கைத்தொழில் திணைக்களத்தின் மட்டக்களப்பு மாவட்ட மேலதிக பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

            நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களத்தின் மேலதிக ஆணையாளராக பணியாற்றிய (திருமதி) எஸ்.சரணியா மாகாண கலாச்சார திணைக்களத்தின் பணிப்பாளராகவும், மாகாண கூட்டுறவுச்

            சேவைகள் ஆணைக்குழுவின் செயலாளராக பணியாற்றிய ஏ.ஜி.தேவேந்திரன் மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் மாகாண பணிப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

            மாகாண கிராமிய கைத்தொழில் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளராக கடமையாற்றிய கே.இளந்துடுதன் மாகாண கூட்டுறவு சேவைகள்

            ஆணைக்குழுவின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர்களுக்கான நியமனக் கடிதங்களை மாகாண பிரதம செயலாளர் துசித பீ. வணிகசிங்கவினால் வழங்கி வைக்கப்பட்டது.

            குறித்த இடமாற்றங்களைப் பெற்ற அதிகாரிகள் இன்று (02) திருகோணமலை ஆளுநர் அலுவலகத்தில் ஆளுநர் அனுராதா யஹம்பத்தை சந்தித்து விசேட

            கலந்துரையாடலில் ஈடுபட்டனர். இக்கலந்துரையாடலின்போது இடமாற்றங்களைப் பெற்றவர்கள் தங்களின் கருத்துக்களைத் தெரிவித்தனர்.

            இடமாற்றங்களைப் பெற்ற சகல அதிகாரிகளும் தங்களுக்கான கடமைகளை உடனடியாக பொறுப்பேற்றுக்கொள்ளுமாறும்,


            அதில் எந்த மாற்றங்களும் இடம்பெறாது என்று கிழக்கு மாகாண ஆளுநர் சகல அதிகாரிகளுக்கும் தெரிவித்துள்ளார்.

            பைஷல் இஸ்மாயில் –

              Posted in இலங்கை செய்திகள்

              யாழில் வாள்களுடன் திருடர்கள் மடக்கி பிடிப்பு

              யாழில் வாள்களுடன் திருடர்கள் மடக்கி பிடிப்பு

              இலங்கை .யாழ்ப்பாணம் ; வட்டுக்கோட்டை பகுதியில் வாள்களுடன் நடமாடிய திருடர்கள் மக்களினால் பிடிக்க பட்டனர் .

              வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டு வந்த கும்பலை சேர்ந்த மூவர் மோட்டார் சைக்கிளில் பயணித்த பொழுது அவர்களை கண்ணுற்ற மக்கள் அவர்களை துரத்தினர்.

              இதன் பொழுதே ,அவர்கள் தப்பிக்க முற்பட்ட வேளையில் மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கியது .

              அவ்வேளை வாள்களை போட்டு இருவர் தப்பித்து ஓடியுள்ளனர் .

              ஒருவர் மக்களினால் பிடிக்க பட்டு காவல்துறையினரிடம் ஒப்படைக்க பட்டுள்ளார்.

                மண்சரிவில் சிக்கி மூவர் மரணம் பலரை காணவில்லை
                Posted in இலங்கை செய்திகள்

                மண்சரிவில் சிக்கி மூவர் மரணம் பலரை காணவில்லை

                மண்சரிவில் சிக்கி மூவர் மரணம் பலரை காணவில்லை

                இலங்கை மலையகம் நோட்டன்-பிரிட்ஜ் டெப்லோ பகுதியில் ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி இதுவரை மூவர் பலியாகியுள்ளனர்.

                மேலும் சிலரை காணவில்லை என தெரிவிக்க படுகிறது .

                காணாமல் போனவர்களை தேடும் பணியில் மீட்பு பணிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது .

                மழை அதனால் ஏற்பட்ட மண்சரிவு வெள்ளத்தில் சிக்கிய இந்தஅனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

                உயிரிழப்ப்புக்கள் மேலும் அதிகரிக்க படலாம் என அஞ்ச படுகிறது.

                  Posted in இலங்கை செய்திகள்

                  மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

                  மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

                  இலங்கையில் பொதுவில் முதல் காலி வரையிலான கடல் பகுதியில் புயல் வீசுவதால் மீனவர் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது.

                  இந்த புயலானாது மணிக்கு எழுபது கிலோமீட்டர் வேகத்தில் வீசும் எனவும், இதனால் கடலில் கொந்தளிப்பு காணப்படலாம் என தெரிவிக்க படுகிறது.

                  கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்களை எச்சரிக்கையாக இருக்கும்படி வேண்ட பட்டுள்ளது.

                    Posted in இலங்கை செய்திகள்

                    கோட்டபாயவுக்கு சிங்கப்பூரில் சலுகை இல்லை

                    கோட்டபாயவுக்கு சிங்கப்பூரில் சலுகை இல்லை

                    இலங்கை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச சிங்கப்பூரில் ஓடி பதுங்கியுள்ளார் .

                    இவர் சிங்கப்பூரில் தஞ்சம் அடைந்துள்ள கோட்டபாயாவுக்கு சிங்கப்பூர் அரசு எவ்வித சலுகைகளையும் வழங்கவில்லை என இலங்கை தெரிவித்துள்ளது,

                    கோட்டபாயவை கைது செய்ய கோரி சிங்கப்பூரில் மக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் கைது செய்யப்படலாம் என்ற நிலையில் கோட்டபாய உள்ளார்.

                    இதனால் இலங்கை திரும்பிட கோட்டபாய முனைகிறார் .

                    இலங்கையில் மக்கள் இவருக்கு எதிராக உள்ளதினால் அவரை சுற்றிவளைத்து தாக்க கூடும் என எதிர் பார்க்க படுகிறது .

                    அதனால் என்னவோ இப்பொழுது கோட்டபாய தொடர்பிலான இவ்விதமான தகவல்களை இலங்கை நாள்தோறும் கசிய விட்ட வண்ணம் உள்ளது.

                      Posted in இலங்கை செய்திகள்

                      யாழ்ப்பாணத்தில் எரிபொருள் வரிசையில் மோதல் ஒருவர் காயம்

                      யாழ்ப்பாணத்தில் எரிபொருள் வரிசையில் மோதல் ஒருவர் காயம்

                      இலங்கை ; யாழ்ப்பாணம் கொக்குவில் பகுதியில் உள்ள எரிபொருள் நிலையத்தில் எரி பொருள் வாங்கிட வரிசையில் காத்து நின்றவர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் சிக்கி ஒருவர் காயமடைந்துள்ளார்.

                      காயமடைந்தவர் யாழ்ப்பாண வைத்தியசாலையில் அனுமதிக்க பட்டுள்ளார் .


                      எரிபொருள் பெற்றிட காத்திருக்கும் மக்களுக்குள் இடையில் புகுந்திட மேற்கொள்ளும் செயல்பாடுகளினால்
                      மோதல் இடம்பெறுவதாக தெரிவிக்க படுகிறது.

                        கைது நடவடிக்கை அச்சம் கோட்டபாய வேறு நாடு செல்ல திட்டம்
                        Posted in இலங்கை செய்திகள்

                        கைது நடவடிக்கை அச்சம் கோட்டபாய வேறு நாடு செல்ல திட்டம்

                        கைது நடவடிக்கை அச்சம் கோட்டபாய வேறு நாடு செல்ல திட்டம்

                        இலங்கை முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய சிங்கப்பூரில் தங்கியுள்ளார்.


                        அங்கு தங்கி இருக்கு இவரை போர்குற்றத்தில் கைது செய்யுமாறு தமிழர்கள் போராட்டம் நடத்திய வண்ணம் உள்ளனர் .


                        இதனால் கோட்டபாய எவ்வேளையும் கைது செய்யும் வாய்ப்பு ஏற்படலாம் என்ற அச்ச நிலை ஏற்பட்டுள்ளது .

                        இதனால் சிங்கப்பூரில் இருந்து கோட்டபாய வேறு நாடு ஒன்றுக்கு செல்ல திட்டமிடுகிறார் என்கிறது முக்கிய தரப்பு வட்டாரங்கள்.

                        கோட்டபாய அரேபிய நாடு ஒன்றை இலக்கு வைத்து நகரவுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

                        கைது நடவடிக்கை அச்சம் கோட்டபாய வேறு நாடு செல்ல திட்டம்

                        இலங்கை சென்றால் மீளவும் அங்கு பெரும் நெருக்கடி ஏற்படும் என்ற நிலையில் கோட்டபாய சிக்கியுள்ளார் .

                        இலங்கையில் கோட்டபாயவை சிங்களவர்கள் துரத்திட வெளி நாடுகளில் தமிழர்கள் துரத்துகின்றனர் .

                        ஆக மொத்தம் இலங்கை சிங்கள தமிழ் மக்களினால் கோட்டாபய விரட்ட பட்ட வண்ணம் உளளார் .


                        முள்ளி வாய்க்கால் மக்களின் சாபத்தின் அவலம் இப்பொழுது கோட்டபாயவை துரத்துகிறது .

                          கிழக்கு மாகாணப் பணிப்பாளராக ஏ.ஜீ.தெய்வேந்திரன் (01) கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
                          Posted in இலங்கை செய்திகள்

                          கிழக்கு மாகாணப் பணிப்பாளராக ஏ.ஜீ.தெய்வேந்திரன் (01) கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

                          கிழக்கு மாகாணப் பணிப்பாளராக ஏ.ஜீ.தெய்வேந்திரன் (01) கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

                          கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் புதிய மாகாணப் பணிப்பாளராக ஏ.ஜீ.தெய்வேந்திரன் இன்று காலை (01) தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

                          கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளராக கடமையாற்றி வந்த என்.மதிவண்ணன் மட்டக்களப்பு மாநகர சபையின்

                          ஆணையாளராக கடந்த 2022.03.31 ஆம் திகதி கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்தினால் நியமிக்கப்பட்டதையடுத்து ஏற்பட்ட

                          வெற்றிடத்திற்கு இலங்கை நிருவாக சேவை தரம் – II யைச் சேர்ந்த ஏ.ஜீ.தெய்வேந்திரன் நியமிக்கப்பட்டார்.

                          கிழக்கு மாகாணப் பணிப்பாளராக ஏ.ஜீ.தெய்வேந்திரன் (01) கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.

                          இவர், கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தின் உதவிச் செயலாளராக கடமையாற்றி வந்த நிலையிலேயே ஆளுநர் அனுராதா யஹம்பத்தினால் நியமிக்கப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

                          இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவ, நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்பு,


                          சமூக நலன்புரிச் சேவைகள், கிராமிய மின்சார அமைச்சின் செயலாளர் திருமதி ஜே.ஜே.முதளிதரன், உதவிப் பணிப்பாளர் திருமதி எஸ்.சரண்யா,

                          கிழக்கு மாகாணப் பணிப்பாளராக ஏ.ஜீ.தெய்வேந்திரன் (01) கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.


                          நிருவாக உத்தியோகத்தர் எ.சுவேந்தர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு சிறப்பித்தார்.

                          பைஷல் இஸ்மாயில் –

                            யாழ் சித்த போதனா வைத்தியசாலையில் மூலிகை தகவல் மையம் ஆரம்பித்து வைப்பு
                            Posted in இலங்கை செய்திகள்

                            யாழ் சித்த போதனா வைத்தியசாலையில் மூலிகை தகவல் மையம் ஆரம்பித்து வைப்பு

                            இலங்கை ,யாழ்ப்பாணம் ; யாழ் சித்த போதனா வைத்தியசாலையில் மூலிகை தகவல் மையம் ஆரம்பித்து வைப்பு
                            பொதுமக்களின் சந்தேகங்களை தீர்த்துவைக்க வைத்திய கலாநிதிகள்

                            பைஷல் இஸ்மாயில் –

                            யாழ். கைதடி சித்த போதனா வைத்தியசாலையில் மூலிகைகள் மற்றும் நச்சுத்தாவரங்களை பற்றிய தகவல்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும்

                            வகையில் மூலிகை தகவல் மையம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் ஐ.ஜெபநாமக்கணேசன் தெரிவித்தார்.


                            இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ் மாவட்டத்தில் காணப்படும் நச்சுத் தாவரங்கள் மற்றும் அவை தொடர்பான விடயங்களை பொதுமக்கள் அறிந்துகொள்ளும் வகையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாகவும்

                            , அவை தொடர்பான அனைத்து விடயங்களையும் நேரடியாகவும் தொலைபேசியூடாகவும் அறிந்து கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.


                            இது பற்றிய முழுமையான தகவல்களை பொதுமக்களுக்கு வழங்குவதற்காக சித்த மருத்துவ பேரரறிஞர்கள் மற்றும் சித்த மருத்துவக் கலாநிதிகள்

                            ஆகியோர்களின் வழி காட்டலின் கீழ் மூலிகை தகவல் மையம் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.


                            மேலும், இன்றைய போக்குவரத்து பிரச்சனை மற்றும் மூலிகை தகவல் மையத்துக்கு வருகை தர முடியாதவர்களின் பிரச்சினைகளையும்

                            கருத்திற்கொண்டு அவர்களுக்கு எழுகின்ற சந்தேகங்களை 021 – 2057104, 077 0661005 தொலைபேசி ஊடாகவோ அல்லது வட்சப் ஊடாகவோ அல்லது

                            mpicjaffna@gmail.com மின்னஞ்சல் ஊடாகவோ பெற்றுக்கொள்ள முடியும் என்றும் அவர் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார்.

                              வவுனியாவில் வாலிபர் வெட்டி கொலை
                              Posted in இலங்கை செய்திகள்

                              வவுனியாவில் வாலிபர் வெட்டி கொலை

                              வவுனியாவில் வாலிபர் வெட்டி கொலை

                              இலங்கை ,வவுனியா – நேற்று வவுனியா ஆச்சிபுரம் பகுதியில் வாலிபர் ஒருவர் கொடூரமாக வெட்டி கொலை செய்ய பட்ட நிலையில் சடலமாக மீட்க பட்டுள்ளார்

                              ஆயுதங்களுடன் வருகை தந்த ரவுடி கும்பல் இவரை படுகோரமாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி சென்றுள்ளது .

                              சடலத்தில் இவரது கை ஒன்று முற்றாக வெட்டி வீச பட்ட நிலையில் காணப்பட்டுள்ளது .

                              சடலம் மீட்க பட்டு உடல் கூற்று பரிசோதனைக்கு உள்ளாக்க பட்டுள்ளது.

                              இவரது கொலைக்கான காரணம் தெரியவில்லை .இவ்வாறு வெட்டி கொலை செய்ய பட்டவர் குடும்பஸ்தர் என்பது குறிப்பிட தக்கது .

                                ரயிலுடன் மோதி இராணுவ சிப்பாய் மாரணம்
                                Posted in இலங்கை செய்திகள்

                                ரயிலுடன் மோதி இராணுவ சிப்பாய் மரணம்

                                ரயிலுடன் மோதி இராணுவ சிப்பாய் மரணம்

                                இலங்கை,கொழும்பு ,. வீரவில விமானப்படை தளத்தில் பணியாற்றும் விமான படையை சேர்ந்த இராணுவ சிப்பாய் ரயிலுடன் மோதி பலியாகியுள்ளார் .

                                இவர்கள் பயணித்த வான் ரயிலுடன் மோதியதில் சிப்பாய் ஒருவர் சம்பவ இடத்தில பலியானார் .மேலும் ஒருவர் படுக்கையாமடைந்துள்ளார் .

                                காயமடைந்தவர் தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளார்.

                                .பாதுகாப்பற்ற ரயில்வே கடவையை கடக்கும் பொழுதே ரயிலுடன் வான் மோதி இந்த விபத்து சம்பவம் இடமேற்றுள்ளது என தெரிவிக்க படுகிறது .

                                  பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருடன் சந்திப்பு
                                  Posted in இலங்கை செய்திகள்

                                  பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருடன் சந்திப்பு

                                  பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் இலங்கை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சருடன் சந்திப்பு

                                  இலங்கை ,கொழும்பு ; இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு பெற்ற) உமர் பாரூக் புர்கி, 2022 ஜூலை 29ஆந் திகதி வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரியை அமைச்சில் வைத்து மரியாதை நிமித்தம் சந்தித்தார்.

                                  இலங்கைக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் அபிவிருத்தியடைந்து வரும் இருதரப்பு உறவுகள் குறித்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர்

                                  கலந்துரையாடியதுடன், பல துறைகளில் நடைபெற்று வரும் ஒத்துழைப்பு குறித்து திருப்தியை வெளிப்படுத்தினார். இரு வழி உறவுகளை

                                  வலுப்படுத்துவதற்கான வழிமுறையாக மக்களுக்கு இடையிலான தொடர்புகளை வலுப்படுத்துவதற்கு அவர்கள் தீர்மானித்தனர்.

                                  பல்வேறு பிராந்திய மற்றும் சர்வதேச அரங்குகளில் கடினமான காலங்களில் பாகிஸ்தான்


                                  அரசாங்கம் வழங்கிய உறுதியான மற்றும் நிலையான ஆதரவை அமைச்சர் பாராட்டினார்.

                                    சேவையில் இருந்து அகற்றப்பட்ட 800 பஸ்கள் மீண்டும் சேவையில்
                                    Posted in இலங்கை செய்திகள்

                                    சேவையில் இருந்து அகற்றப்பட்ட 800 பஸ்கள் மீண்டும் சேவையில்

                                    சேவையில் இருந்து அகற்றப்பட்ட 800 பஸ்கள் மீண்டும் சேவையில்

                                    இலங்கை ,கொழும்பு ; சேவையில் இருந்து அகற்றப்பட்ட 800 பஸ்கள் இன்று (01) முதல் மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளன.

                                    இதுதொடர்பாக போக்குவரத்து மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவிக்கையில் ,டயர் மற்றும் உதிரிப்பாகத் தட்டுப்பாட்டினால் இந்த பஸ்கள் சேவையில் இருந்து அகற்றப்பட்டிருந்ததாக தெரிவித்தார்.

                                    105 டிப்போக்களில் இந்த பஸ்கள் பழுதடைந்த நிலையில் நிறுத்தப்பட்டிருந்தன. இவ்வாறான பின்னணியில் தற்போது குறித்த


                                    பஸ்கள் செப்பனிடப்பட்டு சேவையில் ஈடுபடுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.