ஜனாதிபதியை தமிழ் முற்போக்கு கூட்டணி 11ம் திகதி சந்திக்கும் மனோ கணேசன்

Spread the love

ஜனாதிபதியை தமிழ் முற்போக்கு கூட்டணி 11ம் திகதி சந்திக்கும். நாளை ஐமகூ-ஜனாதிபதி சந்திப்பிலும் இடம்பெறும்
– தமுகூ தலைவர் மனோ கணேசன்

தமிழ் முற்போக்கு கூட்டணியின் தூதுக்குழு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஆகஸ்ட் 11ம் திகதி நேரடியாக சந்தித்து மலையக தமிழ் இலங்கையர்களின் அபிலாசைகள் தொடர்பில் குறிப்பாகவும்,

தென்னிலங்கையில் வாழும் தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பொதுவாகவும் கலந்துரையாடும். “பொருளாதார மற்றும் சமூக

ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதற்கான தேசிய சர்வகட்சி வேலைத்திட்டம் ஒன்றினை செயல்படுத்துதல்” தொடர்பில், ஜனாதிபதி தமிழ் முற்போக்கு கூட்டணிக்கு விடுத்துள்ள அழைப்பின் பேரிலேயே இந்த சந்திப்பு இடம்பெறும்.

அதேவேளை, நாளை ஆகஸ்ட் 5ம் திகதி ஐக்கிய மக்கள் கூட்டணியின்
தூதுக்குழுவிலும் இடம்பெற்று பொதுவான தேசிய பிரச்சினைகள்


தொடர்பிலும் கலந்துரையாடுவோம் என தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் எம்பி தெரிவித்துள்ளார்.

    Leave a Reply