இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு

இலங்கை மின்சார சபையின் மறு சீரமைப்பு

இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு ,இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்புடன் தொடர்புடைய சட்டமூலம் மற்றும் வேலைத்திட்டம் குறித்து

தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் எரிசக்தி அமைச்சுக்கும் இடையே கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

மின்சார சபையின் மறுசீரமைப்பு

இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு திட்டத்தில் ஊழியர்களின் உரிமைகள் மற்றும் சலுகைகளைப் பாதுகாப்பது உட்பட

தொழிற்சங்கங்களின் கவனத்திற்கு வந்த பல பிரச்சினைகள் குறித்து இதன்போது விவாதிக்கப்பட்டது.

மின்சாரத் துறையை அரசாங்க உரிமையின் கீழ் வைத்திருப்பது அரசாங்கத்தின் கொள்கை என்றும், இந்த மறுசீரமைப்பு திட்டத்தின் மூலம்

ஊழியர் உரிமைகளைக் குறைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்றும் அமைச்சர் கூறினார்.

தொழிற்சங்க பிரதிநிதிகள்

இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்ற தொழிற்சங்க பிரதிநிதிகள், தங்கள் கருத்துகளையும் பரிந்துரைகளையும் அமைச்சரிடம் நேரடியாக முன்வைக்க வாய்ப்பு கிடைத்ததற்கு நன்றி தெரிவித்தனர்.

மின்சாரத் துறையை அரசாங்க உரிமையின் கீழ் வைத்திருக்கும் இந்தக் கொள்கையை அவர்கள் மிகவும் பாராட்டுவதாகக் கூறினர்.

ஊழியர் உரிமைகள் மற்றும் சலுகைகளைப் பாதுகாப்பதில் அரசாங்கமும் அமைச்சரும் காட்டிய அக்கறைக்கு நன்றி தெரிவித்ததோடு,

மின்சாரத் துறையின் வளர்ச்சிக்கு அதிகபட்ச பங்களிப்பைச் செய்ய தொழிற்சங்க இயக்கத்திற்கு ஆதரவையும் தெரிவித்தனர்.

மின்சார சபையின் பிரதிநிதிகள் மற்றும் 42 தொடர்புடைய தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் இந்தக் சந்திப்பிற்காக அழைக்கப்பட்டிருந்தனர்.

இலங்கை மீதான டிரம்பின் வரி
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை மீதான டிரம்பின் வரி

இலங்கை மீதான டிரம்பின் வரி

இலங்கை மீதான டிரம்பின் வரி ,இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் 30% தீர்வை வரி விதிக்க அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தீர்மானித்துள்ளார்.

இது தொடர்பான கடிதம் வெள்ளை மாளிகையால் இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் 2 ஆம் திகதி, இலங்கையிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 44% வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி அறிவித்திருந்தார்.

இதற்கு ஒரு சலுகைக் காலம் வழங்கப்பட்டிருந்தது. அந்தக் காலம் நேற்று (9) முடிவடைந்த நிலையில், 2025 ஓகஸ்டு முதலாம் திகதி முதல் 30% வரி விதிக்கப்படும் என டிரம்ப் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை தனது வரிகளை உயர்த்தினால், அந்த வீதம் தற்போதைய 30% வரியுடன் சேர்க்கப்படும் என டிரம்ப் தனது கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, முன்னதாக விதிக்கப்பட்ட 44% வரியை 30% ஆக குறைத்தது நேர்மறையான அணுகுமுறை என இலங்கை வெளியுறவு அமைச்சு கூறியுள்ளது.

பட்டியலிடப்பட்ட அனைத்து நாடுகளிலும் இலங்கைக்கு மிகப்பெரிய வரிக் குறைப்பு வழங்கப்பட்டுள்ளதாக வௌிவிவகார பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர சுட்டிக்காட்டினார்.

இது இரு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகள் மற்றும் இராஜதந்திர மத்தியஸ்தத்தின் விளைவு என அவர் குறிப்பிட்டார்.

இலங்கையுடன், மேலும் ஆறு நாடுகளுக்கு நேற்றைய தினம் அமெரிக்க ஜனாதிபதி புதிய வரிகளை அறிவித்தார்.

அதன்படி, அல்ஜீரியா, ஈராக் மற்றும் லிபியாவுக்கு 30% வரியும், புருனை மற்றும் மால்டோவாவுக்கு 25% வரியும், பிலிப்பைன்ஸுக்கு 20% வரியும் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை, மேலும் 14 நாடுகளுக்கு புதிய

வரிகளை அமெரிக்க ஜனாதிபதி அறிவித்திருந்தார். இதற்கு மேலதிகமாக, பிரேசிலுக்கு 50% வரி விதிக்கப்படவுள்ளதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

2027முதல் இலங்கையில் புதிய வரி
Posted in இலங்கை செய்திகள்

2027முதல் இலங்கையில் புதிய வரி

2027முதல் இலங்கையில் புதிய வரி

2027முதல் இலங்கையில் புதிய வரி ,2027 ஆம் ஆண்டு முதல் சொத்து வரி ஒன்றை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

வரி முறை 2027 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அறிக்கை

இந்த வரி முறை 2027 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

சர்வதேச நாணய நிதியம் சமீபத்தில் இலங்கை தொடர்பாக வெளியிட்ட தனது ஊழியர் மட்ட அறிக்கையில் இது குறித்து அறிவித்துள்ளது.

இந்த புதிய சொத்து வரியை விதிப்பதற்குத் தேவையான அடிப்படை நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், தரவு சேகரிப்பு

பணிகளில் சிறிது தாமதம் இருந்த போதிலும், செப்டம்பர் மாதத்திற்குள் அந்தப் பணிகள் முடிவடையும் என சர்வதேச நாணய நிதியம் சுட்டிக்காட்டுகிறது.

சொத்துக்களின் மதிப்பை மதிப்பீடு செய்வதற்கும் வரி கணக்கிடுவதற்கும் டிஜிட்டல் தரவு முறைமை ஒன்று உருவாக்கப்படவுள்ளதுடன், 2026 ஆம் ஆண்டு

முடிவடைவதற்கு முன்னர் அதற்கு தேவையான அனைத்து தரவுகளும் தயாரிக்கப்பட வேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சொத்து வரி விதிப்பு முறைகள்

2027 ஆம் ஆண்டில் இந்த புதிய வரியை அமுல்படுத்துவதற்கு சொத்து வரி விதிப்பு முறைகள் குறித்து ஒருங்கிணைந்த கலந்துரையாடல்கள் அவசியம் என சர்வதேச நாணய நிதியம் மேலும் தெரிவிக்கிறது.

இதற்கிடையில், டிஜிட்டல் சேவைகளுக்கு ஒக்டோபர் 12 ஆம் திகதி முதல் 18% பெறுமதி சேர் வரி (VAT) விதிக்கப்பட்டுள்ளதாக வெளியாகும் அறிக்கைகள்

உண்மையற்றவை என தொழில் அமைச்சர் மற்றும் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.

அந்த வரி விதிப்பு 2025 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட ஒரு யோசனையாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஏப்ரல் மாதம் முதல் திகதி முதல் அமுலுக்கு வரவிருந்த அந்த வரி விதிப்பு ஒக்டோபர் மாதம் முதல் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பேராசிரியர் அனில் ஜயந்த குறிப்பிட்டார்.

இலங்கைக்கான 5வது கடன் தவணை
Posted in இலங்கை செய்திகள்

இலங்கைக்கான 5வது கடன் தவணை

இலங்கைக்கான 5வது கடன் தவணை

இலங்கைக்கான 5வது கடன் தவணை ,சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாகக் குழு, இலங்கைக்கான நீட்டிக்கப்பட்ட கடன் வசதியின் (Extended Fund Facility) 5வது தவணையாக 350 மில்லியன் அமெரிக்க டொலர்களை விடுவிக்க முடிவு செய்துள்ளது.

இலங்கைக்கு IMF இதுவரை வழங்கிய மொத்த கடன் தொகை

இதன் மூலம், இலங்கைக்கு IMF இதுவரை வழங்கிய மொத்த கடன் தொகை சுமார் 1.75 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்கிறது.

இன்று (03) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், இலங்கைக்கான IMF தூதரகத் தலைவர் இவான் பாபகியோகியோ இதனை அறிவித்தார்.

அவர் கூறியதாவது:

“நான்காவது மதிப்பாய்வு வெற்றிகரமாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இலங்கைக்கு 350 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைக்கும். இந்தத் தொகை, இலங்கையின் தற்போதைய பொருளாதாரக் கொள்கைகள் மற்றும்

இலங்கையில் பொருளாதார ஸ்திரத்தன்மை

சீர்திருத்தங்களை ஆதரிக்கப் பயன்படுத்தப்படும். இது இலங்கையில் பொருளாதார ஸ்திரத்தன்மையை மீட்டெடுப்பதற்கு ஒரு முக்கிய மைல்கல் ஆகும். இலங்கையின் செயல்திறன் இந்த மதிப்பாய்வில் பொதுவாக வலுவாக உள்ளது.”

மேலும், இலங்கை அதிகாரிகள் இரு முக்கிய நடவடிக்கைகளை நிறைவேற்றியுள்ளதாக அவர் தெரிவித்தார்:

2025 வரையிலான செலவு-மீட்பு அடிப்படையிலான மின்சார விலை நிர்ணயம்.

தானியங்கி மின்சார விலை நிர்ணய பொறிமுறையை செயல்படுத்துதல்.

இந்த நடவடிக்கைகள் இலக்குகளை அடைவதற்கான அபாயங்களைக் குறைப்பதற்கு உதவியுள்ளதாகவும், இலங்கையின் பொருளாதார சீர்திருத்தங்களை மேம்படுத்துவதற்கு இந்தக் கடன் உதவும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கை வந்த எலோன் மஸ்க்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை வந்த எலோன் மஸ்க்

இலங்கை வந்த எலோன் மஸ்க்

இலங்கை வந்த எலோன் மஸ்க் ,உலகப் புகழ்பெற்ற SpaceX நிறுவனத்தின் உரிமையாளர் எலோன் மஸ்க், இன்று (2) ‘Starlink’ என்ற வேகமான இணைய சேவை இலங்கையில் அதிகாரப்பூர்வமாக செயல்படத் தொடங்குவதாக அறிவித்தார்.

வேகமான இணைய வசதி

வேகமான இணைய வசதிகளை வழங்குவதற்காக இந்த இணைய செயற்கைக்கோள் அமைப்பு 2019 ஆம் ஆண்டு உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

அதற்கு பின்னர் சுமார் 130இற்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த இணைய சேவை பயன்படுத்தப்பட்டு வருகிறது.

பூமியின் தாழ்வான சுற்றுப்பாதையில் அமைந்துள்ள ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள் அமைப்பு, பயனர்களுக்கு வேகமான மற்றும் தடையற்ற இணைய அணுகலை வழங்கும்.

​​இந்த செயற்கைக்கோள்களில் 7,000 இற்கும் மேற்பட்டவை பூமியின் சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன

தற்போது, ​​இந்த செயற்கைக்கோள்களில் 7,000 இற்கும் மேற்பட்டவை பூமியின் சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன, மேலும் இந்த எண்ணிக்கை 2026 ஆம் ஆண்டுக்குள் 12,000 ஆகவும், எதிர்காலத்தில் 30,000 இற்கும் அதிகமாக அதிகரிக்கப்படவுள்ளது.

இந்த இணைய அமைப்பு மிகவும் எளிதாக நிறுவக்கூடிய ரவுட்டராக வருகிறது.

பதிவிறக்க வேகம் 50mbps – 250mbps வரை இருக்கும் என்று SpaceX குறிப்பிட்டுள்ளது.

இலங்கை கடற்பரக்குக்குள்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை கடற்பரக்குக்குள் அத்துமீறினால் கைது

இலங்கை கடற்பரக்குக்குள் அத்துமீறினால் கைது

இலங்கை கடற்பரக்குக்குள் அத்துமீறினால் கைது ,இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரக்குக்குள் அத்துமீறினால் கைதுகள் தொடரும், படகுகள் பறிமுதல் செய்யப்படும். இது விடயத்தில் விட்டுக்கொடுப்புக்கு இடமில்லை

அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று (01) அமைச்சில் நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பின்போது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘இந்திய மீனவர்களின் அத்துமீறலானது எமது மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கே பாதகமாக அமைந்துள்ளது. இது தொடர்பில் இந்திய தரப்புக்கும் தெரிவித்திருந்தோம். கடந்த மூன்று மாதங்களாக இந்திய

மீனவர்களின் பிரச்சினை இருக்கவில்லை. தற்போது மீண்டும் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைய ஆரம்பித்துள்ளனர். அவர்களை நாம் கைது செய்தோம்.

இந்திய மீனவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட படகுகள் மயிலிட்டி துறைமுகத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளன. அவை அரசுடமையாக்கப்பட்டுள்ளன.

தமிழக மீனவர்கள் எமது கடற்பரப்புக்குள் அத்துமீறுவதை நிறுத்த வேண்டும். அவ்வாறு இல்லையேல் கைதுகள் தொடரும். படகுகள் பறிமுதல் செய்யப்படும். உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

மீனவர் பிரச்சினை

மீனவர் பிரச்சினை தொடர்பில் இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கையிலும் இறங்கியுள்ளோம்.

கடற்படைக்கு கூடுதல் வளங்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன்மூலம் இந்திய மீனவர்களின் அத்துமீறல் தடுத்து நிறுத்தப்படும். இலங்கை கடற்படையினர் மிகவும் கட்டுக்கோப்பாகவே நடந்துவருகின்றனர்.

இந்திய மீனவர்களின் ரோலர் படகுகளால்தான் இலங்கை கடல்வளம் நாசமாக்கப்பட்டுள்ளது.

இந்நிலைமை தொடர்ந்தால் இலங்கை கடற்பரப்பு கடல் பாலைவனமாக மாறும் அபாயம் உள்ளது என தெரிவித்தார்.

இலங்கை வரும் நடிகர் ஷாருக்கான்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை வரும் நடிகர் ஷாருக்கான்

இலங்கை வரும் நடிகர் ஷாருக்கான்

இலங்கை வரும் நடிகர் ஷாருக்கான் ,City of Dreams SriLanka திட்டத்தின் தொடக்க விழாவில் பொலிவுட்டின் பிரபல நடிகர் ஷாருக்கான் விசேட விருந்தினராக கலந்து கொள்வார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

City of Dreams SriLanka அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது.

ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் (JKH) மற்றும் மெல்கோ ரிசார்ட்ஸ் & என்டர்டெயின்மென்ட் ஆகியவற்றின் தனித்துவமான

திட்டமான இது, அனைத்து வசதிகளையும் கொண்ட தெற்காசியாவின் முதல் முழுமையாக

ஒருங்கிணைக்கப்பட்ட சுற்றுலா ஹோட்டல் வளாகமாகவும், தனியார் துறையால் செய்யப்பட்ட மிகப்பெரிய முதலீடாகவும் கருதப்படுகிறது.

சர்வதேச தரநிலைகள் மற்றும் அனைத்து வசதிகளையும் கொண்ட ஒரு கேசினோ ஹால், சூப்பர் சொகுசு Nüwa ஹோட்டல் வளாகம் மற்றும் ஷொப்பிங்

மால் ஆகியவற்றைக் கொண்ட இந்த திட்டம், தெற்காசிய சுற்றுலா மற்றும் ஆடம்பர ஹோட்டல் துறையில் ஒரு தனித்துவமான மைல்கல்லைக் குறிக்கிறது.

இலங்கையின் பொருளாதாரத்தின் மையமான கொழும்பின் மையத்தில் அமைந்துள்ள இந்த ஆடம்பர சுற்றுலா ஹோட்டல் வளாகம், சிறந்த

ஹோட்டல்கள், உலகத்தரம் வாய்ந்த பொழுதுபோக்கு, ஷொப்பிங் மற்றும் MICE (Meetings, Incentives, Conferences, and Exhibitions) அனுபவங்களை ஒரே இடத்தில் ஒன்றிணைக்கிறது.

இலங்கையில் முதலீட்டு வாய்ப்புகள்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் முதலீட்டு வாய்ப்புகள்

இலங்கையில் முதலீட்டு வாய்ப்புகள்

இலங்கையில் முதலீட்டு வாய்ப்புகள் ,இலங்கையின் எரிசக்தி, உள்கட்டமைப்பு, டிஜிட்டல் பொருளாதாரம், சுற்றுலா, விவசாயம் மற்றும் தொழில்முனைவோரின் திறன் மேம்பாடு ஆகியவற்றில் புதிய முதலீட்டு

வவுனியா இளைஞன் கடத்தி தாக்குதல்
வவுனியா இளைஞன் கடத்தி தாக்குதல்வவுனியா இளைஞன் கடத்தி தாக்குதல்

வாய்ப்புகளில் கவனம் செலுத்தியுள்ளதாக இந்திய தொழில்முனைவோர் தெரிவித்தனர்.

தற்போதுள்ள முதலீட்டு வாய்ப்புகளை மேலும் மேம்படுத்துதல் மற்றும் புதிய முதலீட்டு வாய்ப்புகளை ஆராய்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு, இந்திய கைத்தொழில் சம்மேளனத்தின் (CII) ஒருங்கிணைப்பின் கீழ் பல

முக்கிய இந்திய நிறுவனங்களின் பிரதானிகள் உட்பட சுமார் 20 இந்திய தொழில்முனைவோர் குழு எமது நாட்டில் செயற்பாட்டிலுள்ள திட்டமொன்றில்

பங்கேற்கிறது. இந்தக் குழு இன்று (01) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவைச் சந்தித்த போது இவ்வாறு தெரிவித்தது.

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க

இந்தியாவிற்கு அண்மையில் மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின் போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில் இந்தக் குழு இலங்கை வந்துள்ளது.

பல பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுடனும் இலங்கை முதலீட்டுச் சபை போன்ற முன்னணி அரசு நிறுவனங்களுடன் அவர்கள் கலந்துரையாடியுள்ளனர்.

இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மை முதலீட்டாளர்களுக்கு மிகவும் உகந்த சூழலை உருவாக்கியுள்ளது என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

நாட்டின் சிறந்த பொருளாதார நிலைமை மற்றும் முதலீட்டிற்கு உகந்த சூழலை உருவாக்க அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து இந்திய தொழில்முனைவோருக்கு ஜனாதிபதி விளக்கினார்.

பாரிய அளவிலான முதலீடுகளைத் தக்கவைத்து அவற்றைப் பராமரிக்க தேவையான சட்ட கட்டமைப்பும், நிறுவன கட்டமைப்பும் வலுப்படுத்தப்பட்டுள்ளதாகவும்,

தற்போதைய அரசாங்கத்தின் கீழ் முதலீடுகளில் வீண் விரயம் மற்றும் ஊழலைத் தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

குறிப்பாக பிராந்திய முதலீட்டாளர்களை எளிதாக ஈர்ப்பதற்கும் அவர்களுக்குத் தேவையான வசதிகளை வழங்குவதற்கும் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும்,

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் பல துறைகளில் புதிய வணிக வாய்ப்பு

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் பல துறைகளில் புதிய வணிக வாய்ப்புகளுக்கு வாய்ப்புள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

இலங்கையின் மூலோபாய இருப்பிடம் முதலீட்டாளர்களிடமிருந்து வலுவான ஆர்வத்தை ஈர்த்துள்ளது என்று கூறிய இந்திய தொழில்முனைவோர்,

இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து ஜனாதிபதியின் தெளிவுபடுத்தலைப் பாராட்டியதோடு அது அவர்களுக்கு ஊக்கத்தையும் புதிய நம்பிக்கையையும் அளித்துள்ளது என்றும் கூறினர்.

தொழில் அமைச்சரும் பொருளாதார அபிவிருத்தி பிரதிஅமைச்சருமான பேராசிரியர் அனில் ஜயந்த பெர்னாண்டோ, ஜனாதிபதியின் சிரேஸ்ட மேலதிகச் செயலாளர் ரோஷன் கமகே,

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, இந்திய உயர் ஸ்தானிகர் அலுவலக அதிகாரிகள், இந்திய கைத்தொழில் சம்மேளனத்தின் (CII) முன்னாள் தலைவரும் ITC லிமிடெட் தலைவரும் முகாமைத்துவப்

பணிப்பாளருமான சஞ்சீவ் பூரி மற்றும் பல முன்னணி இந்திய நிறுவனங்களின் பிரதானிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இலங்கையுடனான ஒப்பந்தமே பிரச்சனைக்கு காரணம்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கையுடனான ஒப்பந்தமே பிரச்சனைக்கு காரணம்

இலங்கையுடனான ஒப்பந்தமே பிரச்சனைக்கு காரணம்

இலங்கையுடனான ஒப்பந்தமே பிரச்சனைக்கு காரணம் ,அவசர காலத்தின் போது இலங்கையுடன் ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தமே தமிழக மீனவர் பிரச்சனைக்கு காரணமாக அமைந்துள்ளதாக இந்திய வௌிவியறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இடம்பெற்று நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

அவசர நிலை காலத்தின்போது பாராளுமன்றத்தில் எந்தவித விவாதமும் இல்லாமல் மிகப்பெரிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

தமிழக மீனவர்களை இலங்கை கைது செய்வது குறித்து நாம் கேட்டிருக்கிறோம். அதற்கு அவசர காலத்தின்போது இலங்கையுடன் ஏற்படுத்தப்பட்ட ஒரு ஒப்பந்தமே காரணம்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் இலங்கையின் சில குறிப்பிட்ட கடற்பகுதிகளில் மீன் பிடிக்கும் நமது உரிமை விட்டுக்கொடுக்கப்பட்டது.

அவசர நிலை காலத்தின்போது உண்மையான பாராளுமன்றம் செயல்பாட்டில் இருந்திருந்தால் இது குறித்து விவாதிக்கப்பட்டு இருக்கும். அப்போது இந்த முடிவு ஏற்கப்பட்டிருக்காது.

அதன் விளைவுகளை தமிழ்நாட்டில் நாம் இன்னும் காண்கிறோம்.

உலகின் பழமையான, மிகப்பெரிய ஜனநாயக நாடு என்ற இந்தியாவின் பிம்பம் அவசர நிலை அமல்படுத்தப்பட்டதன் மூலம் உடைந்தது.

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக விடுதியில் பொலிஸார் சோதனை நடத்தியதை நானே நேரில் பார்த்தேன்.

அவசரநிலை பிரகடனத்தால் அரசியலமைப்பும், ஜனநாயகமும் படுகொலை செய்யப்பட்ட பிறகு இந்தியாவின் முடிவை ஆதரிப்பதற்கு எவ்வளவு கடினமாக

இருந்தது? என்பதை வெளியுறவுத்துறையில் உள்ள எனது மூத்த அதிகாரிகளிடம் இருந்து கேட்டறிந்தேன்.

நாட்டை விட ஒரு குடும்பமே முக்கியம் என்ற நிலை வரும்போது அவசர நிலை உருவாகிறது. சிலர் தங்கள் பாக்கெட்டுகளில் அரசியல் சாசன புத்தகத்தை

வைத்துக்கொள்கிறார்கள். ஆனால் அவர்களின் இதயத்தின் உணர்வோ வேறுமாதிரி இருக்கிறது.

எதிர்காலத்தில் இதுபோன்ற எத்தகைய நிலையையும் தவிர்ப்பதற்கு மக்கள் அதிகாரம் பெற வேண்டும். அதிகாரம் பெற்ற மக்கள் இதை ஒருபோதும் நடக்க விடமாட்டார்கள் என இந்திய வௌிவியறவு அமைச்சர் ஜெய்சங்கர் குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் போரால் தள்ளாடும் இலங்கை
Posted in இலங்கை செய்திகள்

ஈரான் போரால் தள்ளாடும் இலங்கை

ஈரான் போரால் தள்ளாடும் இலங்கை

ஈரான் போரால் தள்ளாடும் இலங்கை, பொருளாதார விரைவில் வீழ்ச்சியூறும் நிலைக்கு காணப்படுகின்றன.

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையில் போர்

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையில் இடம்பெற்று வருகின்ற ,இந்தப் போர் காரணமாக இலங்கையுனுடைய பொருளாதார ம் ஆட்டம் கண்டு வருகிறது .

விழுந்து போன பொருளாதாரத்தில் நிமிர்ந்து எழ முடியாது தத்தளித்துக் கொண்டிருக்கிறது .

இலங்கை இஸ்ரேல் ஈரானுக்கு இடையில் தற்பொழுது இடம்பெறும் யுத்தம் 3 மாதம் நீடித்தால் அதுவே இலங்கைக்கு எவ்வாறான பாதிப்பை ஏற்படுத்தும் .

தொடர்ந்து இஸ்ரேல் ஈரானுக்குள் போர் நடைபெற்றால் இலங்கையினுடைய பொருளாதாரம் , வீழ்ந்து பட்டினி பஞ்சத்தால் இலங்கை தள்ளாடும் நிலை காணப்படுகிறது .

விமானங்கள் ,கப்பல்கள் ,பறக்கவும். செல்லவும் முடியாத நிலை ஏற்படும் .அவ்வாறு ஏற்பட்டால் இலங்கை நிலை என்னவாகும்..? என்பதை இலங்கை தமிழர்கள் சிங்களவர்கள் முஸ்லிம்கள் உணர்ந்து கொள்ளவும்.

வரலாற்று முக்கியத்துவமான காலப்பகுதியில்

வரலாற்று முக்கியத்துவமான காலப்பகுதியில், இலங்கை கால்பதிக்கிறது .அதற்கான காரணம் பட்டினியால் அந்த நாடு மிக விரைவில் சிக்கப்போவது என்பதுதான் அபாய எச்சரிக்கையாகும் .

இதை உணராது ஆளுகின்ற அரசியல் வாதிகளும் ,ஆண்டு சென்ற ஆட்சியாளர்களும் லஞ்ச உடலில் சிக்கி திகழ்த்த இருக்கிறார்கள்.

இவ்வாறான ஏற்பட்டால் இலங்கையினுடைய ஆண்ட ஜனாதிபதிகள் வீடுகள் சுத்திவளைக்கப்பட்டு ,மக்களால் விரட்டப்படும் காலம் விரைவில் எழுதப்படும் என்பதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள் வரும் காலங்கள் இதை பகிரும்.

1500டன் திடக்கழிவுகள் திணறும் இலங்கை
Posted in இலங்கை செய்திகள்

1500டன் திடக்கழிவுகள் திணறும் இலங்கை

1500டன் திடக்கழிவுகள் திணறும் இலங்கை

1500டன் திடக்கழிவுகள் திணறும் இலங்கை,கடந்த ஆண்டு கதிர்காம பெரஹெராவில் 1,500 டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்பட்டன: CEA

கடந்த ஆண்டு கதிர்காம எசல பெரஹெரா பருவத்தின் இறுதியில் கிட்டத்தட்ட 1,500 டன் திடக்கழிவுகள், நான்கு டன் பிளாஸ்டிக் PET பாட்டில்கள் மற்றும் 50

பிளாஸ்டிக் மாலைகள்

கிலோகிராம் பிளாஸ்டிக் மாலைகள் சேகரிக்கப்பட்டதாக மத்திய சுற்றுச்சூழல் ஆணையம் (CEA) தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு சேகரிக்கப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளின் அளவு முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது குறிப்பிடத்தக்க அளவில் குறைந்துள்ளதாக

CEA குறிப்பிட்டுள்ளது, இது தொடர்ச்சியான விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மற்றும் கழிவு மேலாண்மை திட்டங்களின் நேர்மறையான விளைவாகும்.

ஒவ்வொரு ஆண்டும், வருடாந்திர எசல பண்டிகை பருவத்திற்காக கிட்டத்தட்ட 1.5 மில்லியன் பக்தர்கள் கதிர்காமத்திற்கு வருகிறார்கள். இருப்பினும், குப்பைகளை ஒழுங்கற்ற முறையில் அகற்றுவது நீண்ட காலமாக ஒரு

சவாலாக உள்ளது, குறிப்பாக கதிர்காம நகரம், புனித தலம் மற்றும் மெனிக் கங்கை நதிக்கரைகள் போன்ற இடங்களில்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக, இந்த ஆண்டு அனைத்து பக்தர்களும் பிளாஸ்டிக் மற்றும் பாலிதீன் பயன்பாட்டைக் குறைக்கவும், ருஹுணு

கதிர்காம மகா தேவாலாவில் எசல விழா

கதிர்காம மகா தேவாலாவில் எசல விழா மற்றும் மத நடவடிக்கைகளில் பங்கேற்கும்போது பொறுப்புடன் கழிவுகளை அப்புறப்படுத்தவும் CEA வலியுறுத்துகிறது.

இந்த ஆண்டு கதிர்காம எசல பெரஹெரா ஜூன் 26 முதல் ஜூலை 10 வரை நடைபெறும், மேலும் பல அரசு, தனியார் மற்றும் அரசு சாரா நிறுவனங்கள்

இணைந்து சீசன் முழுவதும் விரிவான கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்தியுள்ளன.

மத்திய சுற்றாடல் அதிகாரசபை, மொனராகலை மாவட்ட செயலகம், கதிர்காம பிரதேச செயலகம், கதிர்காம பிரதேச சபை மற்றும் பெரஹெரா குழு

உள்ளிட்ட நிறுவனங்கள் கழிவுகளை நிர்வகிக்கவும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பல்வேறு முயற்சிகளைத் தொடங்கியுள்ளன.

ஆக மொத்தம் இலங்கை குப்பையில் மிதக்கிறது .இப்படியே தொடரட்டும் வாழ்க .

இலங்கை ரூபாய்வீழ்ச்சி தள்ளாடும் பொருளாதாரம்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை ரூபாய்வீழ்ச்சி தள்ளாடும் பொருளாதாரம்

இலங்கை ரூபாய்வீழ்ச்சி தள்ளாடும் பொருளாதாரம்

இலங்கை ரூபாய்வீழ்ச்சி தள்ளாடும் பொருளாதாரம் ,இலங்கை ரூபாய் பாரிய வளர்ச்சி அடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது .

இன்றைய நாணயமாற்றின் படி ஒரு அமெரிக்க டாலர் 296 ரூபாய்கி 56 சதமாக உள்ளதாக தெரிவித்தார்.

ஈரான் இஸ்ரேல் யுத்தத்தம்

இதன் அடிப்படையில் ஈரான் இஸ்ரேல் யுத்தத்தினால் தற்போது இலங்கையின் பொருளாதாரம் பலமான வீழ்ச்சியை சந்தித்து வருவதாக காணப்படுகிறது.

மேலும் ஒரு மாதங்கள் இஸ்ரேல் ,ஈரானுக்கு இடையிலான போர் நீடித்தால் இலங்கையின் பொருளாதாரம் மிகப் பெரும் மாற்றத்தை, காண்பதுடன் ஆளும் அனுர ஆட்சிக்கு மிகப் பெரும் ஆபத்தை அது ஏற்படுத்தும் என எதிர் பார்க்க படுகிறது .

அதனால் தான் தற்பொழுது இரு நாடுகளையும் உடனடியாக சமரச பேச்சுக்கு வருமாறு அமெரிக்க அழைப்பு விடுத்துள்ளது .

உலக நாடுகளின் பொருளாதாரம்

உலக நாடுகளின் பொருளாதாரம் இந்த யுத்தம் நீடித்தால் மிகப்பெரும் ஆட்டம் காண்பதுடன் ,அந்த அரசாட்சிகள் காணாமல் போகக்கூடிய வாய்ப்பு உள்ளது.

இவ்வாறான நிலையில் தற்பொழுது வீழ்ந்து போய் கிடக்கிற இலங்கையின் ஆட்சி அதிகாரமும் பொருளாதாரமும் ,மீளவும் எழுந்து படுத்தாள் அனுரா ஆட்சி ,கோத்தாவை போல தூக்கி எறியப்படக்கூடிய வாய்ப்பு உள்ளதாக நம்பிக்கை வெளியிடப்படுகிறது.

இலங்கைக்கு ஏற்படவிருக்கும் ஆபத்து
Posted in இலங்கை செய்திகள்

இலங்கைக்கு ஏற்படவிருக்கும் ஆபத்து

இலங்கைக்கு ஏற்படவிருக்கும் ஆபத்து

இலங்கைக்கு ஏற்படவிருக்கும் ஆபத்து ,ஈரான் இஸ்ரேல் போர் மிகவும் மோசமடைந்து வரும் நிலையில், அமெரிக்காவும் தாக்குதலை ஆரம்பித்திருக்கும் நிலையில், இலங்கைக்கு பேராபத்து ஏற்படப்போவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

உலக சந்தையில் எரிபொருள் விலை

உலக சந்தையில் எரிபொருள் விலையுடன் இலங்கையின் எரிபொருள் விலையை சமநிலைப்படுத்த வேண்டிய கட்டாயம் காணப்படுகிறது.

இவ்வாறான நிலைமைகளால் இலங்கையில் பொருளாதார மந்த நிலைமை ஏற்படக் கூடிய அபாயமும் காணப்படுகிறது.

எனவே பொருளாதாரத்தை மேம்படுத்தக் கூடிய பொருளாதார மறுசீரமைப்புக்களை முன்னெடுக்க வேண்டியது அத்தியாவசியமானதாகும் என பொருளாதார ஆய்வாளர் தயநாத் பெர்னாண்டோ தெரிவித்தார்.

கொழும்பில் திங்கட்கிழமை (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

எரிபொருள் இறக்குமதி

தற்போது சுமார் நான்கரை பில்லியன் டொலர் எரிபொருள் இறக்குமதிக்காக செலவிடப்படுகிறது.

மத்திய கிழக்கு மோதலால் உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரித்தால், எமக்கும் இறக்குமதி செலவு அதிகரிக்கும்.

எனவே மாத இறுதியில் எரிபொருள் விலைகள் சடுதியாக அதிகரிக்கக் கூடிய அபாயம் காணப்படுகிறது.

அத்தோடு மத்திய கிழக்கு நாடுகளிலிருந்தே எமக்கு அதிகளவான அந்நிய செலாவணியும் கிடைக்கின்றது.

2024 முதல் காலாண்டில் இஸ்ரேலிலிருந்து 20 – 25 மில்லியன் டொலர் அந்நிய செலாவணி கிடைத்துள்ளது.

வருடத்துக்கு சுமார் 100 மில்லியன் டொலர் இஸ்ரேலிலிருந்து மாத்திரம் கிடைக்கப் பெறுகின்றது.

இவ்வாறு மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து கிடைக்கும் அந்நிய செலாவணியில் ஸ்திரமற்ற நிலைமை ஏற்படக் கூடும்.

அமெரிக்காவின் தலையீட்டுடன் இந்த பூகோள மோதல் நிலைமைகளில் இலங்கையும் பாதிக்கப்படக் கூடிய வாய்ப்புக்களும் காணப்படுகின்றன.

இலங்கையின் ஏற்றுமதிகளில் அமெரிக்கா முன்னிலை வகிக்கிறது.

அதனையடுத்து ஐரோப்பிய பிராந்தியம் மற்றும் சீனா என்பன காணப்படுகின்றன.

எனவே தான் இந்த மோதல்கள் இலங்கையில் நேரடிய தாக்கத்தை செலுத்தும் எனக் குறிப்பிடுகின்றோம்.

ஈரானுக்கு பெருமளவில் தேயிலை ஏற்றுமதி செய்யப்படுகிறது. அதிலும் பாதிப்பு ஏற்படக் கூடிய அபாயமும் நிலவுகிறது.

இஸ்ரேலுக்கும் குறிப்பிட்டளவு உற்பத்திகள் ஏற்றுமதி செய்யப்படுவதோடு, இறக்குமதிகளும் உள்ளன.

இவ்வாறு ஏற்படக் கூடிய பாதிப்புக்களை குறைத்துக் கொள்வதற்கு முன்னெடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும்.

உலக சந்தையில் எரிபொருள் விலையுடன் இலங்கையின் எரிபொருள் விலையை சமநிலைப்படுத்த வேண்டிய கட்டாயம் காணப்படுகிறது.

எரிபொருள் விலை சமநிலைப்படுத்தப்படாவிட்டால் பின்நாட்களில் ஏனைய விளைவுகள் ஏற்படக் கூடிய ஆபத்தும் காணப்படுகிறது.

அத்தோடு இராஜதந்திர ரீதியிலும் திட்டமிடல்களை முன்னெடுக்க வேண்டும்.

குறிப்பாக இவ்வாறான நிலைமைகளால் இலங்கையில் பொருளாதார மந்த நிலைமை ஏற்படக் கூடிய அபாயமும் காணப்படுகிறது. 2028இல் இவ்வாறானதொரு நிலைமை ஏற்படக் கூடும்.

எனவே பொருளாதாரத்தை மேம்படுத்தக் கூடிய பொருளாதார மறுசீரமைப்புக்களை முன்னெடுக்க வேண்டியது அத்தியாவசியமானதாகும்.

எவ்வாறிருப்பினும் இறக்குமதி கட்டுப்பாடுகள் இதற்கு பொறுத்தமான தீர்வாக அமையாது.

ஆனால் உலக சந்தையில் எரிபொருள் விலையுடன் இலங்கையில் எரிபொருள் விலை சமநிலைப்படுத்தப்பட்டால்

, இறக்குமதிகள் இயல்பாகவே மட்டுப்படும். விலைகள் உயர்வடையும் போது அவற்றின் பாவனைகளும் படிபடிப்படியாகக் குறைவடையும்.

எரிபொருள் விலை அதிகரிக்கும் பட்சத்தில் ஏனைய இறக்குமதிகளுக்கான செலவினையும், எரிபொருள் இறக்குமதியில் உள்ளடக்க வேண்டும்.

இவ்வாறான நிலைமையில் முறையான நிதி முகாமைத்துவம் இல்லாவிட்டால் அந்நிய செலாவணி இருப்பிலும் அது தாக்கம் செலுத்தக் கூடிய வாய்ப்புள்ளது.

அதனை விடுத்து நேரடியாக இறக்குமதிகளால் அந்நிய செலாவணி இருப்பிற்கு பாதிப்பு ஏற்படாது.

காரணம் ஏற்றுமதி வருவாய், சுற்றுலாத்துறை வருவாய் உள்ளிட்ட சேவை ஏற்றுமதியூடாக கிடைக்கப் பெறும் டொலர்களே இறக்குமதிக்கும் பயன்படுத்தப்படுகின்றன.

ரூபாவின் பெறுமதியைப் பேணுவதும் இங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகும். மாறாக ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்தால் பணவீக்கம் அதிகரிக்கும் என்றார்.

உக்கிரமாகும் போரால் திரும்பும் பயணிகள் விமானம்
Posted in இலங்கை செய்திகள் உலக செய்திகள்

உக்கிரமாகும் போரால் திரும்பும் பயணிகள் விமானம்

உக்கிரமாகும் போரால் திரும்பும் பயணிகள் விமானம்

உக்கிரமாகிவரும் போரால் பதற்ற நிலை ஏற்படுவதாலும் வான்வெளிகள் ஆங்காங்கே மூடப்பட்டுவருவதால் பயணிகள் விமானங்கள் திருப்பி அனுப்பப்படுகின்றன.

மத்திய கிழக்கு நாடுகளுக்கான ஐந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, மஸ்கட் விமான நிலையம் மற்றும் டுபாய் விமான நிலையத்திற்கு தலா இரண்டு விமானங்கள் திருப்பி விடப்பட்டுள்ளன, அதே நேரத்தில் ஒரு விமானம் ரியாத் விமான நிலையத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளது.

இதற்கிடையில், துபாய்க்குச் சென்ற ஃபிட்ஸ்ஏர் விமானம் மஸ்கட்டிற்கு திருப்பி விடப்பட்டது. இருப்பினும், விமானம் மஸ்கட் விமான நிலையத்தில் தரையிறங்க அனுமதிக்கப்படாததால், துபாய்க்குத் திருப்பி விடப்பட்டது.

இந்த விமானங்கள் குவைத், அபுதாபி மற்றும் தோஹாவுக்கு சென்று கொண்டிருந்ததாக சிவில் விமானப் போக்குவரத்து ஆதிகார சபை தெரிவித்துள்ளது.

ஈரான் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலுக்கு பதிலளிக்கும் விதமாக கட்டாரிலுள்ள அமெரிக்க இராணுவ தளத்தை ஈரான் ஏவுகனண தாக்குதலை நடத்தியது.

இதனால் கட்டார் மற்றும் குவைட் போன்ற நாடுகள் தங்களது வான்வெளியியை தற்காலிகமாக மூடியுள்ளன.

இதற்கிடையில், இலங்கையில் தரையிறங்க ஏதேனும் விமானங்கள் கோரப்பட்டால், மத்தள விமான நிலையமும் கட்டுநாயக்க விமான நிலையமும் தயாராக இருப்பதாக சிவில் விமானப் போக்குவரத்து அதிகார சபை தெரிவித்துள்ளது.

கனடா தமிழரிடம் இருந்து அனுராவுக்கு கடிதம்
Posted in இலங்கை செய்திகள்

கனடா தமிழரிடம் இருந்து அனுராவுக்கு கடிதம்

கனடா தமிழரிடம் இருந்து அனுராவுக்கு கடிதம்

கனடிய தமிழர் பேரவை இலங்கை ஜனாதிபதி அனுராவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளதாக செய்திகள் கசிந்துள்ளன.

செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பில் முறையான விசாரணைகள் செய்யுமாறும் அகழ்வு நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறும் உண்மையின் பக்கம் நின்று இதனை கையாளுமாறும்

கனடிய தமிழர் பேரவை இலங்கையின் ஜனாதிபதி கெளரவ அனுர குமார திசாநாயக்கவிற்கு வேண்டுகோள் விடுத்து கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

அதே வேளை செம்மணி மனித புதைகுழியில் புதைக்கப்பட்டவர்களுக்கு நீதிகோரியும் மனிதபுதைகுழி அகழ்வை மேற்கொள்ளவும் வலியுறுத்தி

ஜூன் 23 தொடக்கம் 25 வரை இலங்கையில் நடக்கவிருக்கும் அணையா விளக்கு போராட்டத்திற்கும் கனடிய தமிழர் பேரவை தனது ஆதரவைத்தெரிவித்துள்ளது.

இதுநிற்க, ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் வோல்க்கெர் டேர்க் செம்மணி மனிதபுதைகுழியை பார்வையிடுவதற்கு தடையற்ற அனுமதி வழங்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அந்த பகுதியில் விஜயம் மேற்கொள்வதற்கும் மக்களை சந்திப்பதற்கும்தடையற்ற அனுமதி வழங்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கடந்தகால மனித உரிமை மீறல்களை கையாள்வது குறித்த-நாட்டின் நல்லிணக்கத்திற்கான தனது அர்ப்பணிப்பு குறித்த நேர்மையை வெளிப்படுத்துவதற்கு அரசாங்கம் விரும்புவதால்

மனித உரிமை ஆணையாளர் மக்களை சந்திப்பதற்கும் அனைத்து இடங்களிற்கும் செல்வதற்கும் எந்த தடையையும் விதிக்கப்போவதில்லை என வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கனடிய தமிழர் பேரவையால் அனுப்பப்பட்ட கடிதத்திற்கிணங்க அனுரா செயற்படுவாரா என்பது கேள்விக்குறியே.

ஹோர்முஸ் மூடினால் இலங்கைக்கு என்ன பாதிப்பு
Posted in இலங்கை செய்திகள் உலக செய்திகள்

ஹோர்முஸ் மூடினால் இலங்கைக்கு என்ன பாதிப்பு

ஹோர்முஸ் மூடினால் இலங்கைக்கு என்ன பாதிப்பு

ஹோர்முஸ் நீரிணையை மூடுவதற்கு ஈரானிய பாராளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் இலங்கைக்கு ஏற்படப்போகும் பாதிப்பு என்ன

இருப்பினும் இறுதி முடிவு உயர் தேசிய பாதுகாப்பு பேரவையினால் எடுக்கப்படும் என ஈரானிய ஊடகமொன்று தெரிவித்துள்ளது.

கச்சா எண்ணெய் போக்குவரத்திற்கான முக்கிய வழித்தடமாக குறித்த நீரிணை காணப்படுகிறது.

உலக கச்சா எண்ணெய் போக்குவரத்தில் குறித்த பகுதியும் முக்கியம் பெறுவதால், எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படலாம் எனவும் இதனூடாக விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளது எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

ஹோர்முஸ் நீரிணையை ஈரான் மூடுவதால், கச்சா எண்ணெய் பொருட்களை அதிகளவு இறக்குமதி செய்யும் நாடுகளுக்கு பாதிப்பு ஏற்படுமா? என்று கேள்வி எழுந்துள்ளது.

இஸ்ரேலுக்கு ஆதரவாக ஈரானின் அணுசக்தி நிலையங்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்திய பிறகு, உலக கச்சா எண்ணெய் போக்குவரத்தின் முக்கிய வழித்தடமான, ஹோர்முஸ் நீரிணையை மூடுவதாக ஈரான் அறிவித்துள்ளது.

இதனால், கச்சா எண்ணெய் விலை உயர்ந்து, பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இது உலக நாடுகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

ஈரானுக்கு வடக்கேயும், ஓமன் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ்க்கு தெற்கேயும் ஹோர்முஸ் நீரிணை அமைந்துள்ளது.

சவுதி அரேபியா, ஈரான், ஈராக், குவைத் மற்றும் ஐக்கிய அரபு நாடுகளுக்கு கச்சா எண்ணெய் ஏற்றுமதிக்கு முதன்மை பாதையாக இது விளங்குகிறது.

கத்தார் போன்ற நாடுகளின் இயற்கை எரிவாயு (LNG) கப்பல்களும் இந்த நீரிணை வழியாகச் செல்கின்றன.

இலங்கைக்கு ஹோர்முஸ் நீரிணைக்கும் நேரடியாக எந்த தொடர்பும் இல்லை, ஆனாலும் உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் ஏற்படும் மாற்றங்களால், அது இலங்கையின் பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்தலாம்.

ஹோர்முஸ் நீரிணை மூடப்பட்டதால், ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் பொருட்கள், சூயஸ் கால்வாய், ஆப்பிரிக்காவை சுற்றிவரும் கடல் வழி அல்லது பசிபிக் பெருங்கடல் வழியாக வரும்.

இல்லையெனில், அமெரிக்கா, மேற்கு ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்கா ஆகிய நாடுகளின் வழியாக கொண்டு வரப்படலாம். இதற்கு செலவுகள் அதிகமானாலும், நம்பிக்கையான வழித்தடங்களாகும்.

இஸ்ரேல் – ஈரான் போர் பதற்றம் காரணமாக, கச்சா எண்ணெய் விநியோகத்தில் தற்போது எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்றாலும்,

கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதால், விரைவில் அதன் தாக்கம் தென்படலாம், இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சாரம் தாக்கி பல நூற்றுக்கணக்கானோர் பலி
Posted in இலங்கை செய்திகள்

மின்சாரம் தாக்கி பல நூற்றுக்கணக்கானோர் பலி

மின்சாரம் தாக்கி பல நூற்றுக்கணக்கானோர் பலி

மின்சாரம் தாக்கத்துக்கு உள்ளாகி, 550 பேர், கடந்த ஐந்து ஆண்டுகளில் மரணித்துள்ளனர் என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு மட்டும் மின்சாரம் தாக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை 120 என ஆணையம் தெரிவித்துள்ளது.

மின்சாரம் தாக்கி இறந்தவர்களில் சுமார் நாற்பது சதவீதம் பேர் பயிர் பாதுகாப்பு மற்றும் விலங்குகளைக் கொல்வது போன்ற நோக்கங்களுக்காக

சட்டவிரோதமாக பதிக்கப்பட்ட அங்கீகரிக்கப்படாத மின்சார கம்பிகள் காரணமாக ஏற்பட்டுள்ளது.

இந்த இறப்புகளில் பெரும்பாலானவை கண்டி மற்றும் பதுளை மாவட்டங்களிலிருந்து பதிவாகியுள்ளதாகவும் ஆணையம் கூறுகிறது.

கடந்த சில ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது மின்சாரம் தாக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணையம் கூறுகிறது.

பொதுமக்களின் அறியாமை, மின்சார வேலி நிறுவல்களின் தரம் குறைவாக இருப்பது மற்றும் சட்ட அமலாக்கத்தில் உள்ள சிக்கல்கள் ஆகியவை

மின்சாரம் தாக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு பங்களித்துள்ளதாகவும் ஆணையம் கண்டறிந்துள்ளது.

இந்த சூழ்நிலையின் காரணமாக, மின்சாரம் தாக்கி இறந்தவர்களைக் குறைக்க பொதுமக்கள் மற்றும் அனைத்து பங்குதாரர்களின் பங்கேற்புடன் ஆலோசனை அமர்வுகளை நடத்த இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணையம் முடிவு செய்துள்ளது.

சாரதிகளுக்கு இலங்கை எடுத்த அதிரடி நடவடிக்கையா
Posted in இலங்கை செய்திகள்

சாரதிகளுக்கு இலங்கை அதிரடி நடவடிக்கை எடுத்ததா

சாரதிகளுக்கு இலங்கை அதிரடி நடவடிக்கை எடுத்ததா

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களுக்கு 5 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்படும் என சமூக ஊடகங்களில் பரவி வருகின்றது.

இது தொடர்பில் ​​விசாரணைகளை மேற்கொண்ட போக்குவரத்து பிரதி பொலிஸ் கண்காணிப்பாளர் இந்திகா ஹபுகோட, இந்த செய்தி முற்றிலும் தவறானது எனத் தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற தவறான செய்தி விளம்பரங்களை உருவாக்குபவர்கள் பதிவிடுபவர்கள் மீது சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தி தவறானது என்று இலங்கை பொலிஸார் உத்தியோகபூர்வ பக்கத்திலும் ஒரு குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இருப்பினும், பது போதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு ஏன் அபராதம் விதிக்கக் கூடாது என மக்கள் மத்தியில் விசனம் ஏற்பட்டுள்ளது.

நாட்டில் தினந்தோறும் அதிகரித்துவரும் வீதி விபத்துக்கள் பெரும்பாலனவை மதுபோதையில் வாகனம் ஓட்டும் சாரதிகளால் ஏற்படுவதாக அறிக்கைகள் தெரிவித்த போதிலும் அதற்கான நடவடிக்கையை அரசாங்கம் எடுத்துள்ளதா?

மது போதையில் வாகனம் ஓட்டுவது என்பது ஒரு பொறுப்பற்ற செயலாகும். இது ஓட்டுனரின் விழிப்புணர்வைக் குறைத்து, பாதையைப் புரியாமல் தவறாக திருப்புவதற்கும், வேகக் கட்டுப்பாட்டை இழப்பதற்கும் வழிவகுக்கும்.

இதன் காரணமாக ஆபத்தான சாலை விபத்துகள், உயிரிழப்புகள், சிக்கல்கள் மற்றும் சட்ட நடவடிக்கைகள் ஏற்படுகின்றன. இப்படிப்பட்ட செயல்கள் மற்ற உயிர்களுக்கு ஆபத்து ஏற்படுத்தும் ஒரு சமூக குற்றமாகவும் கருதப்படுகின்றன.

இதற்கான தீர்வாக, ஓட்டுநர்கள் மது அருந்திய நிலையில் வாகனம் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும். அவசியமாயின், மாற்று ஓட்டுநரை தேர்ந்தெடுக்க வேண்டும் அல்லது பொது போக்குவரத்து சேவைகளை பயன்படுத்த வேண்டும்.

விழிப்புணர்வு முக்கியம் என்பதால், அரசு மற்றும் சமூக அமைப்புகள் விழிப்புணர்வு முகாம்களை ஏற்பாடு செய்து, இளைஞர்கள் மத்தியில் பாதுகாப்பான ஓட்டுமுறை பற்றிய அறிவை ஏற்படுத்த வேண்டும்.

இதுதான் சாலைகளில் உயிரைக் காக்கும் சிறந்த வழி.

ஆனாலும் அபராதம் விதிக்கப்படும் என்ற செய்தியைக் கூட அரசு எதிர்த்துள்ளமை யோசிக்கவே வைக்கின்றது.

ஈரானில் இருந்து இலங்கையரை மீட்க இந்தியா முயற்சி
Posted in இலங்கை செய்திகள் உலக செய்திகள்

ஈரானில் இருந்து இலங்கையரை மீட்க இந்தியா முயற்சி

ஈரானில் இருந்து இலங்கையரை மீட்க இந்தியா முயற்சி

ஈரான் – இஸ்ரேல் போர் உக்கிரமடைந்து வரும் நிலையில், ஈரானில் இருக்கும் இலங்கையரை மீட்க இந்தியா முயற்சி எடுத்துள்ளது.

நேபாளம் மற்றும் இலங்கையின் கோரிக்கையை ஏற்று அந்த நாடுகளின் குடிமக்களையும் ஈரானில் இருந்து இந்தியா மீட்டு அழைத்துவர உள்ளது.

ஈரான் – இஸ்ரேல் போரை தொடர்ந்து ஈரானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டு தாயகம் அழைத்து வருவதற்காக ஆபரேஷன் சிந்து என்ற பெயரில் மத்திய அரசு மீட்பு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதன்படி ஈரானின் மஷாத் நகரில் இருந்து வெள்ளிக்கிழமை இரவு சிறப்பு விமானம் மூலம் 290 இந்திய மாணவர்கள் டெல்லி அழைத்துவரப்பட்டனர்.

இதையடுத்து துர்க்மெனிஸ்தானின் அஷ்காபாத் நகரில் இருந்து இந்தியர்களுடன் புறப்பட்ட இரண்டாவது சிறப்பு விமானம் நேற்று காலை டெல்லி வந்து சேர்ந்தது.

இதன்மூலம் ஈரானில் இருந்து இதுவரை 517 இந்தியர்கள் பத்திரமாக தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளதாக வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறினார்.

இந்நிலையில் ஈரான் தலைநகர் டெஹ்ரானில் உள்ள இந்தியத் தூதரகம் நேற்று வெளியிட்டுள்ள ருவிட்டரில்

“நேபாளம் மற்றும் இலங்கை அரசுகளின் கோரிக்கையை ஏற்று அந்த நாடுகளின் குடிமக்களையும் ஈரானில் உள்ள இந்தியத் தூதரகம் மீட்டு அனுப்பி வைக்கும்” என்று கூறப்பட்டுள்ளது.

டெஹ்ரானில் உள்ள இந்திய தூதரகம் அவசர உதவிக்கான தொலைபேசி எண்களையும் அறிவித்துள்ளது.

நேபாளம் மற்றும் இலங்கை குடிமக்கள் டெலிகிராம் வாயிலாகவோ அல்லது +989010144557, +989128109115, +989128109109 ஆகிய எண்களிலோ தொடர்பு கொள்ளலாம் என்றும் இந்திய தூதரகம் கூறியுள்ளது.

தற்போது ஈரானில் 37 இலங்கையர்கள் இருப்பதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை வரும் மனிதஉரிமைகள் ஆணையாளர்
Posted in இலங்கை செய்திகள்

இலங்கை வரும் மனிதஉரிமைகள் ஆணையாளர்

இலங்கை வரும் மனிதஉரிமைகள் ஆணையாளர்

இலங்கை வரும் மனிதஉரிமைகள் ஆணையாளர் ,ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் வல்கர் டர்க் இம்மாதம் இலங்கை பெற உள்ளதாக இலங்கையின் பிரதான செய்திகள் தெரிவிக்கின்றது .

இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற யுத்தம்

இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற யுத்தம் தொடர்பாக மனித உரிமை பேரவையில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன உள்ளூர் வழிமுறைகள் அரசுகள் தீர்மானத்தை எடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு தீர்வு வழங்க வேண்டும் என்பது விதியாக இருக்கிறது.

ஆனால் அதனை இலங்கை அரசு இதுவரை செய்யவில்லை அதனை எடுத்து எதிர்வரும் ஜூன் 23 26 தினங்களில் இலங்கையில் இவர் தங்கையை பரணமும் பல்வேறுபட்டவுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனித உரிமை கூட்டத்துடன் ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில் இவர் இங்கு வந்து இடங்களுடன் பேரன்பேசிகளில் ஈடுபடுவர் என நம்பப்படுகிறது.

16 வருடங்களாக ஐந்து ஜனாதிபதிகள்

16 வருடங்களாக ஐந்து ஜனாதிபதிகள் பாரிய பொழுதும் இதுவரை இது விதமான தீர்ப்பும் அங்கு ஏற்படவில்லை.

இவர்களும் ஏமாற்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆர்வலர்களாகவே காணப்படுவதாக தவறு.

இறுதி முள்ளிவாய்க்கால் யுத்தம் இடம்பெற்று பதினாறு ஆண்டுகள் முடிந்த பொழுதும் பாதிக்கப்பட்ட தமிழருக்கு

ஐக்கிய நாடு சபையின் மனித உரிமை பேரவை ஏன் தீர்வுகளை பெற்று தரவில்லை என்ற கேள்வி இவர்கள் எழுப்பி நிக்கிறார்கள்.