Tag: மின்சார
இலங்கையில் 65000க்கும் மேற்பட்ட மின்சாரத் தடை
இலங்கையில் 65000க்கும் மேற்பட்ட மின்சாரத் தடை
இலங்கையில் 65000க்கும் மேற்பட்ட மின்சாரத் தடை கள் பதிவாகியுள்ளன
இலங்கை முழுவதும் நிலவும் கடுமையான வானிலை காரணமாக பரவலான மின்சாரத் தடைகள் ஏற்பட்டுள்ளன,
நாடு முழுவதும் 65000 க்கும் மேற்பட்ட மின் தடைகள் பதிவாகியுள்ளன.
கனமழை, பலத்த காற்று
கனமழை, பலத்த காற்று மற்றும் மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் விழுந்ததால் நாடு முழுவதும் ஏராளமான மின் தடைகள் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.
இன்று காலை நிலவரப்படி, 65,000 க்கும் மேற்பட்ட மின் தடைகள் பதிவாகியுள்ளன, அவற்றில் கிட்டத்தட்ட 26,000 ஏற்கனவே மீட்டெடுக்கப்பட்டுள்ளன.
நாடு முழுவதும் மழை அளவு மிக அதிகமாக உள்ளது என்றும், மின் உற்பத்தி நிலையங்களுக்கு அருகிலுள்ள பல நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழிகின்றன என்றும் அமைச்சர் ஜெயக்கொடி கூறினார்.
நிலைமையை நிர்வகிக்கவும் மேலும் இடையூறுகளைத் தடுக்கவும் அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அவர் கூறினார்.
மறுசீரமைப்பு நடவடிக்கைகள்
மறுசீரமைப்பு நடவடிக்கைகள் குறித்து, இலங்கை மின்சார வாரியமும் அதன் ஊழியர்களும் மின்சாரத்தை மீட்டெடுக்க விடாமுயற்சியுடன் பணியாற்றி வருவதாக அமைச்சர் கூறினார்.
இருப்பினும், பலத்த காற்று மற்றும் மழை உள்ளிட்ட தற்போதைய பாதகமான வானிலை சில மறுசீரமைப்பு முயற்சிகளை, குறிப்பாக விழுந்த மரங்களை அகற்றுவதை தாமதப்படுத்துகிறது.
இந்த சவால்கள் இருந்தபோதிலும், நம்பகமான சேவையை வழங்கவும், மின்சாரத்தை விரைவாக மீட்டெடுக்கவும் அனைத்து முயற்சிகளையும்
மேற்கொண்டு வருவதாக எரிசக்தி அமைச்சகம் பொதுமக்களுக்கு உறுதியளித்தது.
இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு
இலங்கை மின்சார சபையின் மறு சீரமைப்பு
இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு ,இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்புடன் தொடர்புடைய சட்டமூலம் மற்றும் வேலைத்திட்டம் குறித்து
தொழிற்சங்க பிரதிநிதிகளுக்கும் எரிசக்தி அமைச்சுக்கும் இடையே கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
மின்சார சபையின் மறுசீரமைப்பு
இலங்கை மின்சார சபையின் மறுசீரமைப்பு திட்டத்தில் ஊழியர்களின் உரிமைகள் மற்றும் சலுகைகளைப் பாதுகாப்பது உட்பட
தொழிற்சங்கங்களின் கவனத்திற்கு வந்த பல பிரச்சினைகள் குறித்து இதன்போது விவாதிக்கப்பட்டது.
மின்சாரத் துறையை அரசாங்க உரிமையின் கீழ் வைத்திருப்பது அரசாங்கத்தின் கொள்கை என்றும், இந்த மறுசீரமைப்பு திட்டத்தின் மூலம்
ஊழியர் உரிமைகளைக் குறைக்க எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்றும் அமைச்சர் கூறினார்.
தொழிற்சங்க பிரதிநிதிகள்
இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்ற தொழிற்சங்க பிரதிநிதிகள், தங்கள் கருத்துகளையும் பரிந்துரைகளையும் அமைச்சரிடம் நேரடியாக முன்வைக்க வாய்ப்பு கிடைத்ததற்கு நன்றி தெரிவித்தனர்.
மின்சாரத் துறையை அரசாங்க உரிமையின் கீழ் வைத்திருக்கும் இந்தக் கொள்கையை அவர்கள் மிகவும் பாராட்டுவதாகக் கூறினர்.
ஊழியர் உரிமைகள் மற்றும் சலுகைகளைப் பாதுகாப்பதில் அரசாங்கமும் அமைச்சரும் காட்டிய அக்கறைக்கு நன்றி தெரிவித்ததோடு,
மின்சாரத் துறையின் வளர்ச்சிக்கு அதிகபட்ச பங்களிப்பைச் செய்ய தொழிற்சங்க இயக்கத்திற்கு ஆதரவையும் தெரிவித்தனர்.
மின்சார சபையின் பிரதிநிதிகள் மற்றும் 42 தொடர்புடைய தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் இந்தக் சந்திப்பிற்காக அழைக்கப்பட்டிருந்தனர்.
அரசாங்கத்தின் புதிய மின்சார சட்டம்
அரசாங்கத்தின் புதிய மின்சார சட்டம்
அரசாங்கத்தின் புதிய மின்சார சட்டம் ,மின்சாரத் துறைக்கு புதிய சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது. இது தொடர்பான திருத்தச் சட்டமூலமொன்று 2002 இல் சமர்ப்பிக்கப்பட்டபோது தற்போதைய அரசாங்கத்தின் சில தரப்பினர் அதை எதிர்த்தனர்.
2002 இல் கொண்டு வரப்பட்ட சட்டத்துடன் தற்போது முன்வைக்கப்பட்டுள்ள சட்டத்தை, இரண்டு சட்டங்களையும் ஒப்பிடும் போது, பொறுப்புக்கூறல் மற்றும்
வெளிப்படைத்தன்மை ஆகியவற்றில் 2002 ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட சட்டத்தில் காணப்படுகின்ற விடயங்கள் சிறந்து விளங்குகின்றன. நாடும் மக்களும் வங்குரோத்து
நிலையில் உள்ள வேளையில், வீழ்ச்சி கண்டுள்ள நாட்டிற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் சட்டமூலமொன்று முறையற்ற முறையிலும், முறைசாரா
முறையிலும் முன்வைக்கப்பட்டுள்ளமை குறித்து கவலையை வெளிப்படுத்துவதாக எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
அரசாங்கத்தினால் முன்வைக்கப்பட்ட இலங்கை மின்சார சட்டம் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த புதிய சட்டம் தொடர்பாக ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்த சாதகமான திருத்தங்களை நடைமுறைப்படுத்துங்கள்.
இதன் மூலம் பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தலாம். இவை ஏற்படுத்தப்படும் பட்சத்தில் இதற்கு ஆதரவை வெளிப்படுத்த முடியும்.
ஆனால் இதற்கான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும். இந்த சட்டமூலத்தில் கட்டமைப்பு ரீதியான பலவீனம் காணப்படுகிறது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
மேலும், இச்சட்டத்தின் மூலம் இந்தத் துறை தீவிரமாக அரசியல்மயமாக்கப்பட்டு, அமைச்சர் கூடிய அதிகாரங்களைப் பெற்று, தடைகள் மற்றும் சமன்பாடுகள் இல்லாது போகிறது.
பனிப்பாளர் சபையை நியமித்துக் கொள்ளும் அதிகாரம் கூட அமைச்சருக்கு செல்கிறது. இதையெல்லாம் அமைச்சரால் கட்டுப்படுத்தவும் முடியும்.
எனவே, இந்த சட்டமூலத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
இந்த சட்டத்தின் மூலம், இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவை பலவீனப்படுத்தியுள்ளனர்.
கட்டுப்பாட்டாளர்களுக்கு அதிகாரம் அளிப்பதற்குப் பதிலாக, கட்டுப்பாட்டாளர்களின் அதிகாரங்கள் குறைக்கப்பட்டு, அமைச்சருக்கு கூடிய அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி இங்கு தொடராக மின்சாரம் வழங்கப்படுவது உறுதி செய்யப்படவில்லை.
இது பாரபட்சமான செயல் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார்.
இந்த சட்டத்தின் மூலம் மின்சார சபையின் சொத்துக்களை மதிப்பிடும் முறை இங்கு குறிப்பிடப்படவில்லை. இலங்கை மின்சார சபை ஒரு டிரில்லியனுக்கும் அதிகமான வளங்களைக் கொண்டுள்ளது.
இந்த பங்குகளுக்கு என்ன நடக்கும் என்பது இங்கு குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. இங்கு அச்சம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.
அமைச்சர் விரும்பியவாறு அரச வளங்களை விற்கும் போக்கு ஏற்படுகிறது என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
எனவே, கொள்முதல் முறை, பொறுப்புக்கூறல் மற்றும் வெளிப்படைத்தன்மை ஆகியவை கண்டிப்பாகப் பாதுகாக்கப்பட வேண்டும்.
இந்நாட்டில் 220 இலட்சம் மக்கள் மீது அதிக மின் கட்டணத்தை சுமத்தி நடந்து வரும் இந்த சுரண்டல்களை நிறுத்த வேண்டும்.
இதில் ஐக்கிய மக்கள் சக்தி முன்வைக்கும் முற்போக்கான திருத்தங்களும் உள்ளடக்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்தார்.
Featured
மின்சார கட்டணத்தை 20 வீதத்தால் குறைக்கும் திறன் மின்சார சபை
மின்சார கட்டணத்தை 20 வீதத்தால் குறைக்கும் திறன் மின்சார சபைக்கு இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
தவறான புள்ளிவிவரங்களை முன்வைத்து மின் கட்டணத்தை சபை உயர்த்தியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, மக்களுக்கு மானிய விலையில் மின்சாரம் வழங்குவதற்கு மின்சார சபைக்கு அவசியமில்லை என தேசிய மக்கள் சக்தியின் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சட்டவிரோதமான முறையில் மக்களிடம் பணம் அறவிடுவதன் மூலம் மின்சார சபை 60 பில்லியன் ரூபாவிற்கும் அதிகமான இலாபத்தை ஈட்டியுள்ளதாக மின்சார பாவனையாளர் சங்கத்தின் சஞ்சீவ தம்மிக்க தெரிவித்துள்ளார்
மின்சார சபையின் விசேட அறிவிப்பு
மின்சார சபையின் விசேட அறிவிப்பு
மின்சார கட்டண திருத்த பிரேரணை தொடர்பான தரவுகள் பொது பயன்பாட்டு ஆணைக்குழுவுக்கு (PUCSL) அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் நோயல் பிரியந்த,
நவம்பர் டிசம்பரில் நல்ல மழை பெய்தது. அதனால் மின்சாரக் கட்டணத்தின் மூலம் மக்களுக்கு அதிகபட்ச நிவாரணம் வழங்க நாங்கள் பணியாற்றி வருகிறோம்.
0-30, 0-60 மற்றும் 0-90 யூனிட்களுக்கு இடைப்பட்ட மக்களைப் பற்றி பேசுகிறார்கள். அவர்களின் வாழ்க்கை நிலைமை மிகவும் கீழ் மட்டத்தில் உள்ளது.
கண்டிப்பாக அந்த வரம்பில் உள்ளவர்களுக்கு குறித்த நிவாரணத்தை வழங்க கடமையாற்றுவோம் என குறிப்பிட்டார்
இருளில் மூழ்கிய பல பகுதிகள் – மக்கள் அவதி
இலங்கை
இருளில் மூழ்கிய பல பகுதிகள் – மக்கள் அவதி
இலங்கை அடைமழை அதனால் ஏற்பட்ட வெள்ள பெருக்கு காரணமாக நாடு தழுவிய ரீதியில் பல
பகுதிகள் இருளில் மூழ்கியுள்ளன
மின்சார தடை ஏற்பட்டுள்ளதால் இந்த விபரீதம் நிகழ்ந்துள்ளதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது
வழமை போல மின்சாரத்தினை வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள பட்டு வருகிறது
இங்கிலாந்தில் மின்சார கட்டணம் ஏப்பிரல் முதல் அதிகரிப்பு – கொதிப்பில் மக்கள்
இங்கிலாந்தில் மின்சார கட்டணம் ஏப்பிரல் முதல் அதிகரிப்பு – கொதிப்பில் மக்கள்
இங்கிலாந்தில் எதிர்வரும் சித்திரை மாதம் முதல் மின்சார கட்டணங்கள்
அதிகரிக்க பட உள்ளதாக
தெரிவிக்க பட்டுள்ளது ,ஒவ்வொரு வீட்டுக்கும் சுமார் நூறு
பவுண்டுகள் விகிதம் அதிகரிக்க கூடும் என தெரிவிக்க படுகிறது
ஆளும் அரசு தனது வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில் முக்கிய
பாவனையாக உள்ள மின்சாரத்தில் கையை வைத்துள்ளது குறிப்பிட தக்கதாகும்
























