Tag: srilanka
இலங்கையில் 700 ஏரி பொருள் நிலையங்களை வெளிநாடுகளுக்கு விற்கும் இலங்கை
இலங்கையில் 700 ஏரி பொருள் நிலையங்களை வெளிநாடுகளுக்கு விற்கும் இலங்கை
இலங்கையில் உள்ள 700 எரிபொருள் நிலையங்களை, வெளிநாட்டு நிறுவனங்களுக்கு இலங்கை விற்பனை செய்கிறது.
இவ்வாறான கோரல்கள் வெளிநாடுகளினால் வேண்ட பட்ட நிலையில் ,இந்த எரிபொருள் நிலையங்களை வெளிநாடுகளுக்கு, விறகும் நிலையில் விண்ணப்பங்கள் கோர பட்டுள்ளன.
இந்தியா ,சீனா ,கனடா பிரிட்டன், போன்ற நாடுகள் முதன்மை இடத்தை வகிக்கின்றன.
சீனாவே இந்த நிறுவனங்களை கட்டு படுத்த தீவிரம் காண்பித்து வருவதால் ,அதிக நிறுவனங்களை, சீனா தன் வசப்படுத்தும் என எதிர் பார்க்க படுகிறது.
அவ்வாறு சீனா பெற்று கொண்டால் இலங்கை மேலும் பேராபத்தை சந்திக்கும் என எதிர் பார்க்க படுகிறது .
வெளிநாட்டு தமிழர்களுடன் இலங்கை அரசு பேச்சு
வெளிநாட்டு தமிழர்களுடன் இலங்கை அரசு பேச்சு
வெளிநாட்டில் உள்ள தமிழர் அமைப்புடன் இலங்கை அரசு பேச்சில் ஈடுபட்டுள்ளது.
பிரான்ஸ் ,கனடா பிரிட்டனை தளமாக கொண்டு இயங்கும் ,நான்கு அமைப்புகளுடன் இலங்கையின் சார்பில் இலங்கை நீதியமைச்சர் பேசியுளளார்.
இந்த தொலைத்தொடர்பு உரையாடலின் பொழுது கைதிகளின் விடுதலை ,மற்றும் வடக்கு கிழக்கு தமிழர்கள் துன்புறுத்தல் , மற்றும் காணி அபகரிப்பு என்பன நீக்க பட வேண்டும் என்ற கோரிக்கை முன் வைக்க பட்டுள்ளதாம் .
மேலும் வெளிநாட்டு அமைப்பினால் முன் வைக்க பட்ட ,நிபந்தனைகளை விசாரிக்க நீதிபதிகள் தலைமையில் குழுவொன்றும் ஆரம்பிக்க அப்ட்டுள்ளதாம்,என்கிறது இலங்கையின் முக்கிய தரப்பு .
இந்த குழுக்கள் மக்களின் நன்மதிப்பை மீள் பெற்றுக்கொள்ளுமா ..?
இவர்களுக்கு எதிராக மக்கள் கிளர்ந்து எழுவார்களா, என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்,
தமிழக மீனவர்கள் ஆறு பேர் கைது
தமிழக மீனவர்கள் ஆறு பேர் கைது
இலங்கை தலைமன்னார் கடல்பரப்பில், அத்து மீறி மீன் பிடியில் ஈடுபட்டனர் என்ற ,குற்ற சாட்டில் தமிழக மீனவர்கள் ,ஆறு பேர் கைது செய்ய பட்டுள்ளனர்.
இலங்கை கடற்படையால் கைது செய்ய பட்ட தமிழக மீனவர்கள் யாவரும் ,விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளனர்.
இலங்கை பொருளாதார நெருக்கடியில் உள்ள காலத்தில், இந்தியா உதவி புரிந்து வரும் நிலையிலும் ,தமிழக மீனவர்களை
இலங்கை தொடராக கைது செய்து வருகின்றமை தொடர்கின்றமை குறிப்பிட தக்கது .
நீர் கட்டணத்தை செலுத்த தவறிய 60 எம்பிக்கள்
நீர் கட்டணத்தை செலுத்த தவறிய 60 எம்பிக்கள்
இலங்கையில் மக்களை வழி நல்வழி படுத்த அரசியலுக்கு வந்துள்ள இலங்கை எம்பிக்கள் ,அறுபது பேர் தாம் பெற்றுக்கொள்ளும், நீருக்கு அதன் கட்டணத்தை செலுத்த தவறியுள்ளதாக நீர் வடிகால் அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த அறுபது எம்பிகளினால், ஒருகொடியே முப்பது லட்சம் ரூபா நீருக்கு வழங்க படாமை உள்ளதாக , நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
இலங்கை எம்பிக்கள் இந்த முறைகேடான, நடவடிக்கை மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மக்களைவழிநடத்த வந்த எம்பிக்கள், வழிகெட்ட செயல், மக்களை கொதிப்பில் உறைய வைத்துள்ளது.
வீதியில் கவிழ்ந்த ஆட்டோ குதித்து ஓடிய பெண்
வீதியில் கவிழ்ந்த ஆட்டோ குதித்து ஓடிய பெண்
இலங்கை பன்னிபிட்டிய கலல்கொட பகுதியில் வேகமாக பயணித்த ஆட்டோ ஒன்று சாரதியின் கட்டு பாட்டை , இழந்தது கவிழ்ந்து நிமிர்ந்தது ,
அவ்வழியே அதில் பயணித்த பெண் ஒருவர் ,ஆட்டோவில் இருந்து குதித்து தப்பிக்கும் காட்சியும் ,அந்த ஆட்டோவை ஓடி சென்று மக்கள் தூக்கி நிமிர்த்தி காப்பாற்றும் காட்சிகளும் பார்ப்ப்வபர்களை வியக்க வைத்துள்ளது .
ஆட்டோ விபத்தின் பொழுது உதவிடும் நிலையில் ,மக்கள் மனம் உள்ளதை இந்த காட்சிகள் வெளிப்படுத்தியுள்ளன .
இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிட தக்கது.
பேரூந்தில் இருந்து வாலிபன் வீழ்ந்து மரணம்
பேரூந்தில் இருந்து வாலிபன் வீழ்ந்து மரணம்
இலங்கை பலாங்கொடைக்கு பேரூந்தில் பயணித்த வாலிபர் ஒருவர் பேரூந்தில் இருந்து தவறி வீழ்ந்து பலியாகியுள்ளார் .
பேரூந்தில் பயணித்த இவர் ,எச்சில் துப்பிட கீழ் இறங்கிய பொழுது தவறி வீழ்ந்துள்ளார்.
அதன் பின்னர் வீடு சென்ற அவர் அங்கு மயங்கி வீழ்ந்து மரணமாகியுள்ளார், .தலையில் உட் காயங்களுக்கு உள்ளாகிய நிலையில், இவர் மரணித்து இருக்க கூடும் என தெரிவிக்க படுகிறது.
இலங்கையில் இவ்விதம் பேரூந்து மிதி பலகையில் தவறி வீழ்ந்து, பலர் பலியாகியள்ளமை குறிப்பிட தக்கது.
பலாலியில் நல்லிணக்க மையம் இராணுவத்தில் திறந்து வைப்பு
பலாலியில் நல்லிணக்க மையம் இராணுவத்தில் திறந்து வைப்பு
இலங்கை யாழ்ப்பாணம் பலாலி சாந்தி பகுதியில் அமைக்க பட்டுள்ள நல்லிணக்க மையம் இராணுவ தளபதியால் திறந்து வைக்க பட்டுள்ளது.
இலங்கை வாழ் மக்களுக்கு இடையில் ஒற்றுமையை பேணி அதன் ஊடாக நல்லிணக்கத்தை ஏற்படுத்த இந்த புதிய பீடம் உதவும் என்கிறது இராணுவம்.
இராணுவத்தினரால் மக்கள் மத்தியில் நல்லிணக்கத்தை , எவ்வாறு ஏற்படுத்த முடியும் என்ற கேள்வி முதன்மையாக வைக்க படுகிறது .
தமிழர் பகுதிகளில் ஆக்கிரமிக்க பட்டுள்ள இராணுவம், எவ்வாறு அங்கிருந்து விலகும் ,அதன் பின்னரே இவர்கள் கூறும் நல்லிணக்கம் சாத்தியம் என்கிறது தமிழர் தேசம்.
வெறித்து காணப்படும் காலிமுக திடல் ரணில் செய்த வேலை
வெறித்து காணப்படும் காலிமுக திடல் ரணில் செய்த வேலை
இலங்கையில் முன்னாள் ஜனாதிபதி கோட்டபாய நாட்டை விட்டு தப்பி ஓட காலிமுக திடல் முக்கிய ஒன்றாக மாற்றம் பெற்றது.
தற்போது அதே காலிமுக திடல் மக்கள் இன்றி வெறித்து காண படுகிறது.
ரணில் விக்கிரமசிங்க ,ஆட்சிக்கு வந்ததன் பின்னர் காலிமுக திடல் போராட்டம் நசுக்க பட்டுள்ளது .
காலிமுக திடல் போராட்டத்தை தலைமை ஏற்று நடத்தியவர்கள் கைதும் ,அதனை தொடர்கள் ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் கைதை தொடர்ந்து போராட்டம் மவுனிக்க பட்டுள்ளது.
எனினும் கோட்டபாய இலங்கைக்கு மீள வந்தால் காலிமுக திடல் போராட்டம் மீளவும் வெடிக்கும் என்ற ஐயம் நிலவுகிறது.
தமிழக கடலில் தத்தளித்த இலங்கை அகதிகள் மீட்ட பொலிஸ்
தமிழக கடலில் தத்தளித்த இலங்கை அகதிகள் மீட்ட பொலிஸ்
இலங்கையில் இருந்து தமிழகம் தனுஷ் கோடி பகுதியில், உள்ள ஒன்றாம் மணல் திட்டில் ,குழந்தைகளுடன் தத்தளித்து கொண்டிருந்த ,எட்டு பேரை கடலோர காவல்படையினர் மீட்டு கரை சேர்த்தனர் .
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ,மக்கள் ,இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு கடல்வழியாக ,சென்ற வண்ணம் உள்ளனர்.
இவ்வாறு பயணித்த மக்கள், மணல் மேட்டில் தத்தளித்த நிலையில் ,மீட்க பட்டு அகதிமுகாமில் இணைக்க பட்டுள்ளனர்.
இலங்கையில் இருந்து கடல்வழியாக ,இந்தியாவுக்கு தமிழர்கள் அதிகளாக சென்ற வண்ணம் உள்ளமை அதிகரித்து வருகிறது குறிப்பிட தக்கது.
கங்கையில் குளிக்க சென்ற நால்வரை காணாவில்லை
கங்கையில் குளிக்க சென்ற நால்வரை காணாவில்லை
இலங்கை பிட்ட பெத்தர பகுதியில் உள்ள கங்கையில் நீராட சென்ற நால்வர் காணாமல் போயுள்ளனர்
நீரலையில் இழுத்து செல்ல பட்ட இவர்கள் நால்வரும் இறந்திருக்க கூடும் என் அஞ்ச படுகிறது .
காணமல் போன நால்வரையும் ,தேடும் பணியில் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.
சுழியோடிகள் வரவழைக்க பட்டு, தேடுதல்கள் முடுக்கி விட பட்டுள்ளன.
பெற்றோர்கள் கண்ணீரில் தத்தளித்தவண்ணம் உள்ளனர்.
இலங்கையில் ஆண்டு தோறும் இவ்வாறு நீர் நிலைகள் மூழ்கி நூற்றுக்கு மேற்பட்டவர்கள் இறந்த வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது.
இலங்கைக்கு உதவிட தயாராகும் அமெரிக்கா நிபந்தனையை இலங்கை ஏற்குமா
இலங்கைக்கு உதவிட தயாராகும் அமெரிக்கா நிபந்தனையை இலங்கை ஏற்குமா
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு ,தீர்வு காண அமெரிக்கா உதவிட முனைகிறது.
அமெரிக்கா முன் வைக்கும் இந்த உதவி திட்டத்தின் கீழ் ,முக்கிய நிபந்தனைகள் அடங்கிய வற்றுடன் ,இந்த பேரம் பேச்சு உதவி வழங்குதல் இடம் பெறுகிறது.
அமெரிக்காவுக்கு இலங்கை ஆளும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வழங்கும் உத்தரவாதத்தீன் அடிப்படையில் ,இரு நாடுகளுக்கு இடையிலான கொள்கை இணக்கப்பாட்டுடன் கூடிய செயல்,பாடு இலங்கையில் நிலை நிறுத்த படுமா என்ற கேள்வி இங்கே எழுகிறது .
இலங்கை வரும் கோட்டபாயா ஏற்படுத்த படவுள்ள சர்ச்சைகள் காரணமாக இலங்கையின் எதிர்காலம் மீளவும் கீழ் நோக்கி செல்லும் நிலைக்கு தள்ள படும் என எதிர் பார்க்க படுகிறது.
வெளிநாட்டு தமிழர்கள் இலங்கைக்கு பணம் அனுப்ப வேண்டும் நிதி அமைச்சு அறிவிப்பு
வெளிநாட்டு தமிழர்கள் இலங்கைக்கு பணம் அனுப்ப வேண்டும் நிதி அமைச்சு அறிவிப்பு
இலங்கையில் இருந்து வெளி நாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் ,இலங்கை வங்கிக்கு மாதம் தோறும் ,நூறுக்கு மேற்பட்ட டொலர்களை அனுப்பி வைக்க வேண்டும் என ,நிதி அமைச்சு வேண்டுதல் விடுத்துள்ளது.
வெளிநாடுகளில் வசிக்கும் பத்து லட்சத்திற்கு அதிகமான தமிழர்களில் அரைவாசி பேர் ,இலங்கைக்கு பணம் அனுப்புவதை நிறுத்தி விட்டனர் .
இதனால் இலங்கை பெற்றுக்கொண்ட அண்ணிய செலாவணி தீர்ந்துள்ளது .
இதனால் தமிழர்களுக்கு கட்டாய நெருக்கடியை ,வழங்கும் விதமாக இலங்கை அரசு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது .
தமிழர் தேசிய அரசியல் பிரச்சனைக்கு தீர்வு காண மறுக்கும் ,இலங்கை அரசு ,வெளி நாடுகளில் உள்ள தமிழர்களை குறிவைத்து, செயல் படுவது கேலிக்குரியது என தமிழர்கள் தெரிவிக்கின்றனர் .
இலங்கையின் பிரதமராக கோட்டபாய
இலங்கையின் பிரதமராக கோட்டபாய
இலங்கையின் பிரதமராக கோட்டபாய ராஜபக்ச நியமிக்க படவுள்ளார் .
எதிர்வரும் வாரம் இலங்கை வரும் கோட்டபாய ,பிரதமராக பதவி ஏற்க உள்ளார் என மொட்டு கட்சி தெரிவித்துள்ளது.
பசிலுடன் இடம்பெற்ற பேச்சுக்களின் பொழுது இந்த விடயமும் ,பேச பட்டு இருக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது.
கோட்டபாய இலங்கை வந்தடைந்தால் , மீளவும் மக்களினால் விரட்டியடிக்க படுவார் என எதிர் பார்க்க படுகிறது .
ரஞ்சன் ராமநாயக்க இன்று விடுதலை
ரஞ்சன் ராமநாயக்க இன்று விடுதலை
நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றம் சாட்டப்பட்டு தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு ஜனாதிபதி
பொது மன்னிப்பு வழங்கும் ஆவணத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (26) கையெழுத்திட்டார்.
வரும் காலத்தில், நீதித்துறையை விமர்சிக்கும் வகையில் எந்தவொரு கருத்தை தெரிவிக்கவோ செயற்படவோ கூடாது என்ற நிபந்தனையுடன் பொது மன்னிப்பு வழங்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்துள்ளார்.
ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்வதற்குத் தேவையான பணிகளை முன்னெடுக்கும் பொறுப்பு நீதி அமைச்சின் செயலாளரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
2017 ஆகஸ்ட் 21 ஆம் திகதி அலரிமாளிகைக்கு வெளியே நீதித்துறையை அவமதிக்கும் வகையில் ரஞ்சன் ராமநாயக்க கருத்து தெரிவித்தமைக்கு
எதிராக தொடரப்பட்ட வழக்கில் 2021 ஜனவரி 12 ஆம் திகதியன்று ரஞ்சன் ராமநாயக்கவிற்கு நான்கு ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
ரஞ்சன் ராமநாயக்க இன்று விடுதலை
இந்த நிலையில், நீதிமன்றத்தை அவமதித்தமைக்காக மன்னிப்பு கோரி, ரஞ்சன் ராமநாயக்க சத்தியக் கடதாசியொன்றை நேற்று (25) நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.
தான் தெரிவித்த கருத்துக்கள் முற்றிலும் பிழையானவை என்றும் அந்தக் கருத்துக்களினால் பிரதம நீதியரசர் உள்ளிட்ட நீதித்துறையினர்
அனைவருக்கும் அகௌரவம் ஏற்பட்டமைக்காக மன்னிப்புக் கோருவதாகவும் குறித்த சத்தியக் கடதாசி மூலம் தெரிவித்திருந்தார்.
தான் கூறிய கருத்துக்கள் முற்றிலும் பொய்யானவை என்றும் அவற்றை மீளப் பெறுவதாகவும் எதிர்காலத்தில் இவ்வாறான கருத்துக்களைத்
தெரிவிக்கமாட்டேன் என்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர்
ரஞ்சன் ராமநாயக்க நீதிமன்றத்திற்கு சமர்ப்பித்த சத்தியக்கடதாசியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
யாழில் பெண்கள் உள்ளிட்ட 4 பேர் கைது
யாழில் பெண்கள் உள்ளிட்ட 4 பேர் கைது
நல்லூர் உட்பட யாழ்ப்பாண நகர் பகுதிகளில் ஊதுபத்தி விற்பனையில் ஈடுபட்ட 3 பெண்கள், ஆண் ஒருவர் மற்றும் அவர்களை வேலைக்கு அமர்த்திய
விடுதி உரிமையாளர் ஆகிய ஐவரை எதிர்வரும் 9 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அதேவேளை இவர்களிடம் இருந்து கைக்குழந்தை ஒன்றும் ஆறு சிறுவர்களும் மீட்கப்பட்டுள்ளனர்.
அதில் கைக்குழந்தையை தாயுடன் இருக்க அனுமதித்த நீதவான் ஏனைய 6 சிறுவர்களையும் சிறுவர் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களிடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.
நல்லூர் ஆலய சூழல் மற்றும் யாழ்ப்பாண நகர் பகுதிகளில் கைக்குழந்தைகளுடன் பெண்கள் மற்றும் சிறுவர்கள் ஊதுபத்தி விற்பனையில் ஈடுபட்டு வந்தனர்.
யாழில் பெண்கள் உள்ளிட்ட 4 பேர் கைது
அதில் நல்லூர் பகுதியில் ஆலயத்திற்கு வருவோருக்கு ஊதுபத்தி விற்பனை என இடையூறு விளைவிக்கும் முகமாக சிலர் நடந்து கொண்டனர்.
இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்தனர்.
விசாரணைகளின் அடிப்படையில் இவர்கள் வெளிமாவட்டங்களில் இருந்து குழுக்களாக வரவழைக்கப்பட்டு யாழ்ப்பாணம் ஐந்து சந்திப் பகுதியில் உள்ள
விடுதி ஒன்றில் தங்க வைக்கப்பட்டு, ஊதுபத்தி விற்பனையில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர் என தெரியவந்துள்ளது.
அந்நிலையில் புதன்கிழமை இரவு யாழ்ப்பாண பொலிஸார் குறித்த விடுதியை சுற்றி வளைத்து தேடுதல் நடத்தினர்.
அதன் போது ஊதுபத்தி விற்பனைக்கு என அழைத்து வரப்பட்ட 3 பெண்கள், கைக்குழந்தை ஒன்று, 6 சிறுவர்கள், ஆண் ஒருவர் மற்றும் இவர்களை
வேலைக்கு அமர்த்திய விடுதி உரிமையாளர்
ஆகியோரை பொலிஸார் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து சென்றமை குறிப்பிடத்தக்கது.
விடுதலை போராட்டத்தின் தொழில்நுட்ப மூளையாக திகழ்ந்த சிறப்புத்தளபதி கேணல் ராஜு அண்ணாயின் 20 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
விடுதலை போராட்டத்தின் தொழில்நுட்ப மூளையாக திகழ்ந்த சிறப்புத்தளபதி கேணல் ராஜு அண்ணாயின் 20 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
( ராஜு அண்ணை பற்றி களமருந்துவ போராளி சுஐந்தன் அவர்கள் எழுதியது)
திரும்பிப்பார்க்கிறேன்,
ராஜு அண்ணை,அண்ணையின் விஞ்ஞான எதிர்பார்ப்புகளை செய்து முடிப்பவர் / முடிக்க சதா முயல்பவர் என்றால் அது மிகையாகாது என்று நினைக்கின்றேன்
.ராஜு அண்ணை நான் இயக்கத்தில சந்தித்தவர்களில் வித்தியாசமானவர்.
ஒரு அதிவேக மூளையின் சொந்தக்காரன்.
எதைப்பார்த்தாலும் ஆக்கிவிடுவேன் என்னும் செயல்வீரன்.இயக்க வளர்ச்சியில் இவர் பங்கு அளப்பரியது.
இவர் ராதா அண்ணை மீது தனி மதிப்பு வைத்திருந்தார்.ராதா அண்ணை என்றவுடன் பலருக்கு ஐ சே போட்டு கதைக்கிறதுதான் ஞாபகம் வரும் ,பாலா அண்ணையும் ஐ சே போட்டு கதைக்கிறவர்.
விடுதலை போராட்டத்தின் தொழில்நுட்ப மூளையாக திகழ்ந்த சிறப்புத்தளபதி கேணல் ராஜு அண்ணாயின் 20 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.
தொண்ணூற்றி நான்காம் ஆண்டு நானும் ராஜு அண்ணையும் ஒரு பணிக்காக இரண்டு கிழமைகள் வன்னியில் நின்றோம்.
அப்போது அநேகமாய் முத்தையன்கட்டு குளத்து மீன்தான் சாப்பிட்டோம்.யாழ்ப்பாணம் வந்து ஒரு கிழமையால எனக்கு நெருப்புக்காய்ச்சல் தொடங்கிற்றுது.
பதினொரு நாள் அவசரசிகிச்சைப் பிரிவில் இருந்து மீண்டுவந்தேன்.ராஜு அண்ணைக்கு ஒரு பிரச்சனையும் இல்லை.என்னை இருதடவைகள் மருத்துவமனைக்கு வந்து பார்த்துப்போனார்.
ராஜு அண்ணைக்கு புற்று நோய் என்றவுடன் நம்பமுடியாமல் இருந்தது.ராஜு அண்ணையின் நிறை எப்பவுமே அறுபத்தி எட்டு கிலோதான் ( புற்றுநோய் அடையாளப்படுத்தப்படும்வரை ).
ராஜு அண்ணை ஒரு சாம்பல்நிற ஸ்கூட்டர் வைச்சிருந்தவர்.அதில அவர் ஓடுறதில்லை பறக்கிறது கண்ணுக்கு முன்னால தெரியுது.
ராஜு அண்ணை கல்யாணம் கட்டின பிறகும் வீட்டில நிற்கிறதில்லை. ராஜு அண்ணையின் மனைவியும் ஒரு போராளி, இறுதி யுத்தத்தில் கடல் சண்டையில் ஒரு கொமாண்டராய் வீரச்சாவு அடைந்தார்.
ராஜு அண்ணை தாங்கள் வீட்டை நிற்போம் வாங்கோ என்று கல்யாணம் கட்டின புதிதில் ஒருநாள் சொன்னார்.
அப்போது அவர்கள் ஒட்டிசுட்டான் புதுக்குடியிருப்பு பாதையில் ஒட்டிசுட்டானுக்கு அருகாமையில் இருந்தார்கள்.
நான் போனவுடன் பிளேன்ரி தந்தார்கள்.வீட்டில் ஆட்கள் வசிக்கக்கூடிய சாமான்கள் இருக்கவில்லை.பிளேன்ரியை நான் கதைத்து கதைத்து ஆறுதலாய் குடித்துக்கொண்டிருந்தேன்.
ராஜு அண்ணை சொன்னார் விரைவாய் குடிச்சிட்டு தேத்தனிக்கோப்பையை தாங்கோ, கங்கா (அவரது மனைவி) சோற்றுக்கு அரிசி போட இந்தக்கோப்பையைத்தான் பார்த்துக்கொண்டிருக்கு.
நான் சோலை, வன்னேரிக்குளம் என்ற கிராமத்தில் தங்கியிருந்தேன்.
ஒரு நாள் அதிகாலை ஆறு மணிக்கு ராஜு அண்ணை பிக்கப்பில் வந்தார்.
எல்லோருக்கும் பிளேன்ரி கொடுத்தோம்.எங்கட முகாமில் ஒரு புது மேசைப்பந்து
மேசை போட்டிருந்தோம்.வாங்கோ கொஞ்ச நேரம் விளையாடுவோம் என்று கூப்பிட்டார்.
விளையாட்டு தொடங்க எனக்கு இப்படி ஒன்று வாங்கித்தருவீங்களா?என்று கேட்டார்.
நான் முயற்சி செய்கிறேன் என்றேன். சிறிது நேரத்தில் இந்த மேசை வேண்டாம் இதை நான் செய்வேன்.
நீங்கள் மிகுதியை வாங்கித்தாங்கோ என்றார். பிறகு கொஞ்ச நேரம் செல்ல உந்த நெற்றும்(net) தேவையில்லை என்றார்.
கொஞ்ச நேரத்தால ரக்கட்டும் தேவையில்லை பந்துமட்டும் வாங்கித்தந்தால் சரியென்றார்.
மிச்ச மெல்லாம் நான் செய்திடுவன் என்றார்.விளையாடிமுடிய சொன்னார் பந்து தாங்கள் செய்வம் ஒன்றும் தேவையில்லை என்றார்.
அவரது மூளை எதைப்பார்த்தாலும் இதை எங்களால் செய்யமுடியுமா?
என்றே சிந்திக்கும்.
தள்ளாடும் ரூபவாஹினி ஊழியர்கள் சம்பளம் வழங்க கோரி போராட்டம்
தள்ளாடும் ரூபவாஹினி ஊழியர்கள் சம்பளம் வழங்க கோரி போராட்டம்
இலங்கையில் அரச தொலைக்காட்சியான ரூபவாஹினி ஊழியர்கள் போராட்டத்தில் குத்தித்துள்ளனர் .
அரசு பணம் இன்றி தள்ளாடி வரும் நிலையில் , ரூபவாஹினி ஊழியர்க்ளுக்கு சம்பளம் வழங்குவதில் ,நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளது .
இதனால் ரூபவாஹினி ஊழியர்கள் ,சம்பளம் வழங்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் .
இந்த போராட்டம் அரசுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது .மேலும்
இதே நிலை நீடித்தால் ரூபவாஹினி, அடித்து பூட்டும் நிலை ஏற்படலாம் என எதிர் பார்க்க படுகிறது .
இலங்கையில் வசிக்கும் இந்தியர்களுக்கு இந்தியா எச்சரிக்கை
இலங்கையில் வசிக்கும் இந்தியர்களுக்கு இந்தியா எச்சரிக்கை
இலங்கையில் வசிக்கும் இந்தியா மக்களை மிக விழிப்பாக இருக்கும் படி கடும் எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது.
இலங்கையில் கோட்டபாய மீள நாடு செல்ல உள்ள ,நிலையில் அங்கு போராட்டம் வெடிக்கும் என எதிர் பார்க்கும் ,இந்திய இவ்வேளை இந்தியர்கள் குறிவைத்து தாக்க பாடலாம் என எதிர் பார்க்கிறது.
அதனால் இலங்கை வாழ் இந்தியா மக்கள் மிக எச்சரிக்கையாக இருக்கும் படி எச்சரிக்கை பட்டுள்ளனர் .
இந்தியாவின் இந்த அதிரடி அறிவிப்பின் பின்னால் ஏதோ இலங்கையில் நடக்க போவதை காண்பிக்கிறது .
யாழில் உருவான சிறுநீரக மாற்று அறுவைச்சிகிச்சை மையம்
சத்தியத்திற்கு வந்த சவால்
சத்தியத்திற்கு வந்த சவால்
யாழில் உருவான சிறுநீரக மாற்று அறுவைச்சிகிச்சை மையம்
சத்தியத்திற்கு வந்த சவால்
யாழ் ஆஸ்பத்திரி பணிப்பாளர் நாட்டை விட்டு வெளியேறிய காலங்களில்
அரசமருத்துவ சங்கம் என்னும் மருத்துவர்கள் அமைப்பு பல அதிரடியான திறன்
மிகு திட்டங்களை மாஸ்டர் பிளானுடன் நகர்த்திவந்தது குறித்த காலத்தில் கடமையாற்றி ய
பதில் பணிப்பாளரின் நேர்மை யும் மக்களிற்காக அற்பணிப்புடன் பணியாற்றும் மருத்துவர்களின்

சிந்தனையும் ஒருமித்த செயல் வடிவமே இதுவாகும் குறித்த காலப் பகுதியில் நிகழ்ந்த அபிவிருத்திகள்
யாவுமே முன்னுதாரணமானவை என்றே கூறவேண்டும் இங்கு கட்டிடங்களை இடிப்பதும் விற்பதும் பின் புதிய
கட்டிடம் கட்டுவதும் என்று ஒரு கட்டமைக்கப்பட்ட நிதித்திருட்டை ஒரு வழிப்பண்ணுமுகமாகவும் மக்களின் தேவைக்கான
அபிவிருத்தி என்னும் புதிய தொணிப்பொருளுடன் சத்தியத்திற்கு வந்த சவால் என்று மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்க விடயமேயாகும்
உணவகத்தில் ஒருவர் அடித்து கொலை
உணவகத்தில் ஒருவர் அடித்து கொலை
இலங்கை கந்தனை பகுதியில் பெண் ஒருவர், நடத்தி வரும் கொட்டலுக்கு ,வருகை தந்த நபர் ஒருவர் அங்கு பணி புரிந்த நபர் ,ஒருவரை அடித்து கொலை செய்துள்ளார் .
உணவை வாங்கி விட்டு, பணத்தினை கொடுக்க தகராறு செய்த பொழுதே, மேற்படி வாக்குவாதம் முற்றியதில் ,அங்கு பணி புரிந்த உணவகத்தின் ,தந்தையை தலைக்கவசத்தால் அடித்து கொலை செய்துள்ளார்.
அடி காயங்களுக்கு உள்ளான, அவர் மயங்கி வீழ்ந்து மருத்துவமனையில் அனுமதிக்க பட்ட பொழுதும், சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.
மேற்படி சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.











