அடைக்கலநாதனுக்கு கொலை மிரட்டல் ,நாடாளுமன்ற உறுப்பினர் அடைக்கலநாதனுக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
Posted in இலங்கை செய்திகள்

தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டுதல்

தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டுதல்

தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டுதல் ,இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களை விடுவிப்பதை உறுதி செய்யுமாறு தமிழக முதல்வர் ஜெய்சங்கரை வலியுறுத்துகிறார்.

தமிழ்நாடு முதலமைச்சர் எம்.கே. ஸ்டாலின்

தமிழ்நாடு முதலமைச்சர் எம்.கே. ஸ்டாலின் வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதி, தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள்

அனைவரையும் அவர்களது மீன்பிடி படகுகளுடன் விடுவிக்க இலங்கை அரசுடன் உடனடியாக ராஜதந்திர முயற்சிகளைத் தொடங்குமாறு வலியுறுத்தினார்.

தமிழக கடற்படையினரால் சமீபத்தில் கைது செய்யப்பட்ட தமிழகத்தைச் சேர்ந்த 31 இந்திய மீனவர்கள் மற்றும் அவர்களது மீன்பிடி படகுகள் குறித்து ஸ்டாலின் தனது கடிதத்தில் அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு வந்தார்.

இன்று அதிகாலை, இலங்கை கடற்படை நாகப்பட்டினத்தைச் சேர்ந்த 31 மீனவர்களையும், பதிவு எண்கள். IND-TN-06-MM-1086, IND-TN-06-MM-875 மற்றும் IND-TN-06-MM-7506 ஆகியவற்றைக் கொண்ட மூன்று இயந்திரமயமாக்கப்பட்ட மீன்பிடி

படகுகளையும் கைது செய்தது. அதே நாளில், ஒரு தனி சம்பவத்தில், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு மீனவர்களும், பதிவு எண். IND-TN-09-MO-4878 கொண்ட அவர்களது நாட்டு படகுகளும் கைது செய்யப்பட்டன.

“இந்த தொடர்ச்சியான சம்பவங்கள் தமிழ்நாட்டின் மீனவ சமூகங்களிடையே ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளன, ஏனெனில் அவர்களின் வாழ்க்கையும் வாழ்வாதாரமும் கடலுடன் பிரிக்கமுடியாத வகையில் இணைக்கப்பட்டுள்ளன.

ஒவ்வொரு கைதும் குடும்பங்களின் முதன்மை வாழ்வாதாரத்தை இழப்பது

ஒவ்வொரு கைதும் குடும்பங்களின் முதன்மை வாழ்வாதாரத்தை இழப்பது மட்டுமல்லாமல், ஆழ்ந்த பயத்தையும் பாதுகாப்பின்மையையும் ஏற்படுத்துகிறது.

தற்போது, ​​114 மீனவர்களும் 247 படகுகளும் இலங்கை அதிகாரிகளின் காவலில் உள்ளன,” என்று ஸ்டாலின் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

தடுத்து வைக்கப்பட்டுள்ள மீனவர்களையும் அவர்களது படகுகளையும் உடனடியாக விடுவிப்பதை உறுதி செய்ய மத்திய அரசு விரைவான இராஜதந்திர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் கேட்டுக் கொண்டார்.

சர்வதேச கடல் எல்லைக் கோட்டை (IMBL) தாண்டி இலங்கை கடல் பகுதியில் மீன்பிடித்ததாகக் கூறி தமிழ்நாடு மற்றும் காரைக்காலைச் சேர்ந்த 35 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது.

கைது செய்யப்பட்டவர்களில் ஒரு நாட்டுப் படகில் இருந்த நான்கு மீனவர்களும், நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் இருந்து புறப்பட்ட மூன்று இயந்திரமயமாக்கப்பட்ட படகுகளில் இருந்த 31 மீனவர்களும் அடங்குவர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் விசாரணைக்காக காங்கேசன்துறை கடற்படைத் தளத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவதற்கு முன்பு

யாழ்ப்பாண மீன்வளத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட மீனவர்கள் நாகப்பட்டினம் மற்றும்

காரைக்கால் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று யாழ்ப்பாண அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மற்றொரு சம்பவத்தில், கஞ்சா கடத்திய குற்றச்சாட்டில் நான்கு மீனவர்களை இலங்கை அதிகாரிகள் கைது செய்து, ஒரு நாட்டுப் படகை பறிமுதல் செய்து, மேலதிக விசாரணைக்காக இலங்கை காவல்துறையிடம் ஒப்படைத்தனர்.

தமிழக மீனவர்களை திட்டமிட்டு கைது செய்யவில்லை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன்
Posted in இலங்கை செய்திகள்

தமிழக மீனவர்களை திட்டமிட்டு கைது செய்யவில்லை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன்

தமிழக மீனவர்களை திட்டமிட்டு கைது செய்யவில்லை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன்

தமிழக மீனவர்களை திட்டமிட்டு கைது செய்யவில்லை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் ,இந்திய கடற்பரப்பிற்குள் யாரும் அத்துமீறினால் நீங்கள் என்ன செய்வீர்களோ அதனையே நாங்களும் செய்கிறோம்.

தொப்புள் கொடி ஊறவுகளாக இருக்கிற தமிழக மீனவர்களை நாங்கள் திட்டமிட்டு கைது செய்யவில்லை என இலங்கை கடற்தொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் ,

“ இலங்கை கடற்பரப்பில் இலங்கை மீனவர்களுக்கு பெரிய சவாலாக இருப்பது இந்திய மீனவர்கள் தான். அதாவது இந்திய மீனவர்களின் தொடரும் அத்துமீறல்களினால் தான் எமது மீனவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

உண்மையான நிலைமைகள் இவ்வாறிருக்கின்ற போது இந்தியாவில் எமக்கு எதிராக கண்டனப் பேரணி நடத்துகின்றனர்.அந்தப் பேரணியில் தமிழகத்தின் கனிமொழி உள்ளிட்ட அரசியல் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர்.

ஆகையால் கனிமொழி உள்ளிட்டவர்களிடம் நாங்கள் வினயமாக கேட்டுக் கொள்வது, உங்களுடைய நாட்டு படகுகள் உங்கள் எல்லையை மீற வேண்டாம் என்று முதலில் சொல்லுங்கள்.

மேலும் கனிமொழிக்கும் அமைச்சருக்கும் நாங்கள் சொல்ல வேண்டியது வேறேதுமில்லை. நாங்கள் தொப்புள் கொடி உறவுகள் தான். எனினும் தொப்புள் கொடியாக இருந்தாலும் எங்கள் கடலுக்கு வந்து எங்கள் மீன்களை பிடிக்க வேண்டாம். எங்கள் வளத்தை அழிக்க வேண்டாம் என்று தான் நாங்கள் கேட்கிறோம்.

அதே நேரத்தில் இந்திய மீனவர்கள் யாரும் இங்கு வெறுமனே கைது செய்யப்படவில்லை. உங்கள் கடல் எல்லையை தாண்டி எமது கடல் எல்லைக்கு வருகிற போதே நாங்கள் நடவடிக்கை எடுக்கின்றோம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

உங்கள் கடல் எல்லைக்குள் யாரும் வருகின்ற போது நீங்கள் எத்தகைய கடுமையான நடவடிக்கை எடுக்குறீர்களோ அதேபோல் எங்கள் கடல் எல்லைக்குள் அத்துமீறி வருகிற போது நாங்களும் நடவடிக்கை எடுக்கிறோம்.

அதாவது எமது கடல் எல்லைக்குள் யாரும் நுழைகிற போது கடற்படையினர் கைது செய்கின்றனர். இவ்வாறு கைது செய்பவர்களை நீதிமன்றத்தில் கடற்தொழில் திணைக்களத்திடம் ஒப்படைத்து நீதிமன்றில் பாரப்படுத்துகிற போது நீதி மன்றமே தீர்ப்பை வழங்குகிறது.

குறிப்பாக யுத்தத்திற்கு முகங்கொடுத்த மக்கள் இப்போது தான் ஓரளவிற்கு தலைதூக்கி கொண்டு வருகின்றனர்.

ஆனால் அந்த மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் உங்களது ஆயிரக்கணக்கான படகுகள் எமது கடல் எல்லைக்குள் அத்துமீறி எமது கடல்வளத்தை நாசமாக்கி செல்கின்றனர்.

இதனால் எமது மீனவர்கள் பல்வேறு பாதிப்புகளை எதிர் கொள்ள வேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்படுகிறது. எனவே எமது கடல் பரப்பிற்குள் அத்துமீற வேண்டாம் ” என தெரிவித்துள்ளதுடன் இந்திய மீனவர்களுக்கு முதலில் கூறி அத்துமீறுவதை தடுத்து நிறுத்துங்கள் எனவும் இந்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழக மீனவர் இலங்கை கடலில் பலி
Posted in இலங்கை செய்திகள்

தமிழக மீனவர் இலங்கை கடலில் பலி

தமிழக மீனவர் இலங்கை கடலில் பலி

தமிழக மீனவர் இலங்கை கடலில் பலி ,யாழ்ப்பாணம் நெடுந்திய பகுதியில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இந்திய மீனவர்கள் படகு ஒன்று திடீரென கடலில் மூழ்கியதில், அதில் பயணித்த மீனவர்கள் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படகு மூழ்கி நிலையில் அதில் ஒருவர் காணாமல் போய் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இலங்கை கடற்படையினர் அந்த படகினைஇடித்து மூழ்கடித்து சந்தேகம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

கைதான இரண்டு மீனவர்களும் தற்பொழுது இலங்கை கடற்படை செய்யப்பட்டு போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டு அவை நீதிமன்றத்தில் பாரப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படை நாள் தோறும் திட்டமிடப்பட்டு கைது செய்யப்பட்டு வரும் இந்திய மீனவ தொடர்பாக தமிழக அரசு தமது கவலையை வெளியிட்டுள்ளது.

அந்த மீனவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்கின்ற கோரிக்கையை முன்வைக்கப்பட்டுள்ளது.

புலிகள் அழிக்கப்பட்டதன் பின்னர் தற்பொழுது இலங்கை கடற்படை தமிழக மீனவர்கள் குறிவைத்து நாள்தோறும் கைது செய்யப்பட்ட வருகின்றனர்.

இந்த மீனவர்களை கைது செய்யும் நடவடிக்கையின் பின்புறத்தில் டாக்டர் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது அவரே தற்போது இலங்கையின் மீனவ அமைச்சராக காணப்படுகின்றார்.

அவரே ராணுவ போலீசருக்கு வழங்கிய தகவலை எடுத்து இந்த கைது நடவடிக்கை இடம்பெற்று வருவதான தகவல்களும் வெளியாகி வருகின்றமை இங்கே குறிப்பிடத்தக்கது.

Posted in இலங்கை செய்திகள்

தமிழக மீனவர்கள் ஆறு பேர் கைது

தமிழக மீனவர்கள் ஆறு பேர் கைது

இலங்கை தலைமன்னார் கடல்பரப்பில், அத்து மீறி மீன் பிடியில் ஈடுபட்டனர் என்ற ,குற்ற சாட்டில் தமிழக மீனவர்கள் ,ஆறு பேர் கைது செய்ய பட்டுள்ளனர்.

இலங்கை கடற்படையால் கைது செய்ய பட்ட தமிழக மீனவர்கள் யாவரும் ,விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளனர்.

இலங்கை பொருளாதார நெருக்கடியில் உள்ள காலத்தில், இந்தியா உதவி புரிந்து வரும் நிலையிலும் ,தமிழக மீனவர்களை
இலங்கை தொடராக கைது செய்து வருகின்றமை தொடர்கின்றமை குறிப்பிட தக்கது .