Tag: வெளிநாட்டு தமிழர்
சாட்டி மாவீரர் மைதானத்தில் கொட்டல் கட்டும் வெளிநாட்டு தமிழர்
சாட்டி மாவீரர் மைதானத்தில் கொட்டல் கட்டும் வெளிநாட்டு தமிழர்
சாட்டி மாவீரர் துயிலும் இல்லம் அமைந்துள்ள பகுதியை ஆக்கிரமித்துள்ள வெளிநாட்டு தமிழர் ஒருவர் கொட்டல் ஒன்றை அமைக்கும் நகர்வில் ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன .
தமிழீழ விடுதலை புலிகள் அழிக்க பட்ட பின்னர், மாவீரர் மயானங்கள் சிங்கள இராணுவத்தால் சிதைத்து அழிக்க பட்டது .
அதன் பின்னர் சிங்கள அரசின் ஆதரவாக செயல் படும், கூலிக் குழுக்கள் அல்லது ஆதரவு நபர்கள் ,தமிழர் விரோத செயல்களில் ஈடுபட்ட வண்னம் உள்ளனர் .
இந்த சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் கொட்டல் அமைத்திட சென்றுள்ள தமிழர் யார், அவர் எந்த நாட்டில் இருந்து சென்றுள்ளார் என்ற தகவலை ,போர் குற்ற தகவல் திரட்டும் பிரிவினர் திரட்டி வருகின்றனர் .
மக்கள் வழிபடும் மாவீரர்கள் கல்லறைகள் உடைக்க பட்டு ,அந்த புனிதர்கள் அவமதிக்க படும் செயல், மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது .
மக்கள் எழுச்சி இலங்கையை ஆக்கிரமித்துள்ள நிலையில் ,மாவீரர் வித்துடல்கள் விதைக்க பட்ட பகுதியில் கொட்டல் அமைக்க முனைவது எவ்வாறு சாத்தியம்..?
என்பதும் ,அவ்வாறு தொடர்ந்து அவர்களினால்
அந்த கொட்டலை நடாத்தி செல்ல முடியுமா என்ற கேள்வியை எழுப்பி நிற்கிறது .
தகவல் மறவன்

வெளிநாட்டு தமிழர்கள் இலங்கைக்கு பணம் அனுப்ப வேண்டும் நிதி அமைச்சு அறிவிப்பு
வெளிநாட்டு தமிழர்கள் இலங்கைக்கு பணம் அனுப்ப வேண்டும் நிதி அமைச்சு அறிவிப்பு
இலங்கையில் இருந்து வெளி நாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள் ,இலங்கை வங்கிக்கு மாதம் தோறும் ,நூறுக்கு மேற்பட்ட டொலர்களை அனுப்பி வைக்க வேண்டும் என ,நிதி அமைச்சு வேண்டுதல் விடுத்துள்ளது.
வெளிநாடுகளில் வசிக்கும் பத்து லட்சத்திற்கு அதிகமான தமிழர்களில் அரைவாசி பேர் ,இலங்கைக்கு பணம் அனுப்புவதை நிறுத்தி விட்டனர் .
இதனால் இலங்கை பெற்றுக்கொண்ட அண்ணிய செலாவணி தீர்ந்துள்ளது .
இதனால் தமிழர்களுக்கு கட்டாய நெருக்கடியை ,வழங்கும் விதமாக இலங்கை அரசு உத்தரவுகளை பிறப்பித்துள்ளது .
தமிழர் தேசிய அரசியல் பிரச்சனைக்கு தீர்வு காண மறுக்கும் ,இலங்கை அரசு ,வெளி நாடுகளில் உள்ள தமிழர்களை குறிவைத்து, செயல் படுவது கேலிக்குரியது என தமிழர்கள் தெரிவிக்கின்றனர் .
















