Posted in இலங்கை செய்திகள்

நெடுங்கேணியில் கிணற்றில் இருந்து வாலிபன் சடலமாக மீட்பு

நெடுங்கேணியில் கிணற்றில் இருந்து வாலிபன் சடலமாக மீட்பு

இலங்கை வவுனியா நெடு நெடுங்கேணி பகுதியில் ,கிணற்றில் இருந்து வாலிபர் ஒருவர் சடலமாக மீட்க பட்டுளளார் .

வீட்டு கிணற்றில் இருந்து ,மீட்க பட்ட வாலிபர் , சடலம் உடல் கூற்று ஆய்வுக்கு உட்படுத்த பட்டுள்ளது.

இருபத்தி ஆறு வயதுடைய வாலிபன், தற்கொலை செய்தாரா , அல்லது படுகொலை செய்ய பட்டாரா என்பது தொடர்பில் ,விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன.

இலங்கையில் சமீப காலங்களாக கிணறு ,நீர் நிலைகளில் இருந்து மனித சடலங்கள் ,மீட்க பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது.

    Posted in இலங்கை செய்திகள்

    சட்டவிரோத நடவடிக்கைகள் அனைத்தையும் கட்டுப்படுத்த அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை

    சட்டவிரோத நடவடிக்கைகள் அனைத்தையும் கட்டுப்படுத்த அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை

    கடற்றொழில்சார் சட்ட விரோத செயற்பாடுகள் அனைத்தையும் கட்டுப்படுத்தும் வகையிலான 24 மணித்தியாலங்களும் செயற்படும்

    பொறிமுறை ஒன்றினை கடற்படையினருடன் இணைந்து உருவாக்குமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

    அத்துடன், மண்ணெண்ணை விநியோகம் மீ்ண்டும் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நிலையில், நாடளாவிய ரீதியில் உள்ள கடற்றொழிலாளர்களுக்கும்

    மண்ணெண்ணை கிடைப்பதை உறுதிப்படுத்துவதுடன், அதுதொடர்பான அறிக்கையினை தனக்கு சமர்பிக்குமாறும் கடற்றொழில் அமைச்சர் அதிகாரிகளைக் கேட்டுக் கொண்டார்.

    சட்டவிரோத நடவடிக்கைகள் அனைத்தையும் கட்டுப்படுத்த அமைச்சர் டக்ளஸ் நடவடிக்கை

    அதேவேளை கடலட்டை வளர்ப்பு தொடர்பாக குறித்த கலந்துரையாடலில் பிரஸ்தாபிக்கப்பட்ட நிலையில், இந்தியா மற்றும் சீனா போன்ற நாடுகளை சேர்ந்த தனியார் முதலீட்டாளர்கள் ஆர்வம் செலுத்தி வருகின்றமையினால்,

    அவர்களைப் பயன்டுத்தி, உடனடித் தேவையாக எமக்கு இருக்கின்ற கடலட்டை குஞ்சு பொரிக்கும் நிலையங்களை நவீன தொழில்நுட்பத்துடன் உருவாக்க வேண்டும எனவும கற்றொழல் அமைச்சர் தெரிவித்தார்.

    கடற்றொழில் அமைச்சில் 24.08.2022 நடைபெற்ற இக்கலந்துரையாடலில், கடற்றொழில் அமைச்சின் செயலாளர்,


    கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் உட்பட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

      Posted in இலங்கை செய்திகள்

      பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுமாறு சுகாதார அமைச்சு வலியுறுத்தல்

      பூஸ்டர் தடுப்பூசியை பெற்றுக்கொள்ளுமாறு சுகாதார அமைச்சு வலியுறுத்தல்

      கொரோனா வைரசினால் ஏற்படக்கூடிய இறப்புக்களை குறைக்க, Covid-19 க்கு எதிரான பூஸ்டர் தடுப்பூசிகளை பெறுவதன் முக்கியத்துவத்தை சுகாதார அமைச்சு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.

      அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று காலை (25) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தலைமை தொற்றுநோயியல் நிபுணர் டொக்டர் சமித்த கினிகே

      தெரிவிக்கையில், கொவிட் -19 அபாயம் தற்போது அதிகரித்துள்ளதாகவும், பூஸ்டர் டோஸ்க்களை பெறாதவர்களை விரைவில் பெற்றுக் கொள்ளுமாறு பொதுமக்களை வலியுறுத்தியுள்ளார்.

      Covid-19 பரவலால் நாட்டில் பாரிய பாதிப்பு ஏற்படவில்லை எனவும் எதிர்காலத்தில் புதிய வைரஸ் தொற்றுகளில் இருந்து பாதுகாப்பாக இருப்பதற்கு பூஸ்டர்
      டோஸ் பெறுவது மிக அவசியமானது எனவும் டொக்டர் சமித்த கினிகே தெரிவித்தார்.

        Posted in இலங்கை செய்திகள்

        உலகின் மிகப் பெரிய பெஷன் சந்தையான மெஜிக் லாஸ் வேகாஸ் அமெரிக்காவில் இலங்கையின் ஆடை ஏற்றுமதியாளர்கள் வெற்றிகரமாக பங்கேற்பு

        உலகின் மிகப் பெரிய பெஷன் சந்தையான மெஜிக் லாஸ் வேகாஸ் அமெரிக்காவில் இலங்கையின் ஆடை ஏற்றுமதியாளர்கள் வெற்றிகரமாக பங்கேற்பு

        2022 ஆகஸ்ட் 7 முதல் 10 வரை அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் மாநாட்டு மையத்தில் நடைபெற்ற ‘மெஜிக் லொஸ் வேகாஸ்’ ஆடை விற்பனை வர்த்தகக் கண்காட்சியில் ஒன்பது இலங்கை ஆடை ஏற்றுமதி நிறுவனங்கள் பங்கேற்றன.

        அமெரிக்கா மற்றும் வடக்கு மற்றும் தென் அமெரிக்க சந்தைகளை அணுகும் நிகழ்வில் உருவாக்கப்பட்ட ஏராளமான வணிக வாய்ப்புகளை நிறுவனங்கள் வெற்றிகரமாக பயன்படுத்தின. இது பல மில்லியன் அமெரிக்க டொலர்கள்

        பெறுமதியான நேரடியான சந்தை வாய்ப்புக்களைப் பெறுவதற்கு வழிவகுத்ததுடன், அமெரிக்காவை தளமாகக் கொண்ட நிறுவனங்கள் மற்றும் அமெரிக்காவிற்கு வெளியில் உள்ள நிறுவனங்களுடன் பெருமளவிலான

        வர்த்தகத் தொடர்புகளை நிறுவி ஒருங்கிணைத்து, இலங்கையை முக்கிய ஆடை ஏற்றுமதி இடமாக மேம்படுத்துவதற்கான தீவிர முயற்சியை மேற்கொண்டது.

        லக்கி இண்டஸ்ட்ரீஸ், ஜே.கே. கார்மென்ட்ஸ், ஸ்க்ரீன்லைன், காஷ் கார்மென்ட்ஸ், கோல்மன்ஸ் கார்மென்ட்ஸ் இண்டஸ்ட்ரீஸ், சரசவி எக்ஸ்போர்ட்ஸ், குயின்ஸ் வேர்க் வெயார், ஜியா மொடா மற்றும் ஹவார்ட்

        உலகின் மிகப் பெரிய பெஷன் சந்தையான மெஜிக் லாஸ் வேகாஸ் அமெரிக்காவில் இலங்கையின் ஆடை ஏற்றுமதியாளர்கள் வெற்றிகரமாக பங்கேற்பு

        ஃபெஷன் ஆகிய இலங்கை ஆடை ஏற்றுமதி நிறுவனங்கள் பங்கேற்றன. இலங்கைக் கூடம் 90 சதுர மீட்டர் இடத்தை ஆக்கிரமித்திருந்ததுடன்,

        பெண்களுக்கான ஆடைகள், ஆண்களுக்கான ஆடைகள், குழந்தைகள் மற்றும் வேலை செய்யும் உடைகள் மற்றும் காலுறைகள், லேபிள் அச்சிடுதல் போன்றவற்றை ஊக்குவிக்கும் பத்து தனிப்பட்ட கண்காட்சி அரங்குகளைக் கொண்டிருந்தது.

        அமெரிக்காவின் லாஸ் வேகாஸ், நெவாடாவில் (பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட்) ஆண்டுக்கு இரண்டு முறை பெண்கள் மற்றும் ஆண்கள் ஆடைகள், பாதணிகள், அணிகலன்கள் மற்றும் உலகெங்கிலும் உள்ள ஆதார

        வளங்களைக் காண்பிக்கும் உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் விரிவான ஃபெஷன் சந்தையாக மெஜிக் லாஸ் வேகாஸ் கருதப்படுகிறது. சில்லறை வரவேற்பு, பொருத்தமான தெரிவுத் திட்டங்கள் மற்றும் உறவுகளை மேம்படுத்துதல் போன்ற சிறந்த சேவைகளுடன் வாங்குபவர்களுக்கும் தரநாமங்களுக்கும் இடையே இணைப்புக்களை எளிதாக்குவதன் மூலம் இது ஃபெஷன் வணிகத்தை எரிபொருளாக்குகின்றது.

        மேலும், சில்லறை விற்பனையாளர்கள் மற்றும் வாங்குபவர்கள் புதிய மற்றும் திரும்பும் கண்காட்சி தரநாமங்களுடன் கற்றுக் கொள்ளவும், வலையமைப்பு செய்யவும், வணிகத்தை நடத்தவும் வாய்ப்பு உள்ளது. இந்த நிகழ்வு கோவிட்-19

        பரவலில் இருந்து மீண்ட பிறகு வெற்றிகரமாக முடிவடைந்ததுடன், அமெரிக்காவிற்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள 13,500 க்கும் மேற்பட்ட

        வாங்குபவர்களின் பங்கேற்புடன் உலகெங்கிலும் உள்ள 65 க்கும் மேற்பட்ட மாவட்டங்களின் வாங்குபவர்கள் மற்றும் கண்காட்சியாளர்களால் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்டது.

        வொஷிங்டனில் உள்ள இலங்கைத் தூதரகம், வணிகச் சட்ட அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் அமெரிக்க வர்த்தகத் திணைக்களத்தால் நிதியளிக்கப்பட்ட திட்டத்தில் நெருக்கமாகச் செயற்பட்டு வருகின்றது. இலங்கையின்

        உலகளாவிய ஏற்றுமதியில் 25% க்கும் அதிகமான ஏற்றுமதியை உள்வாங்கும் இலங்கையின் முதன்மையான ஏற்றுமதி இலக்கான மற்றும் இலங்கையின் ஏனைய முக்கிய ஏற்றுமதி இடங்களிலும் உள்ள இந்தத் திட்டம், நாட்டின்

        வர்த்தகம் தொடர்பான சட்ட உட்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கும், அமெரிக்க சந்தையில் நாட்டின் வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலா

        வாய்ப்புகளை மேம்படுத்துவதற்கும் இலங்கை அரசாங்கத்திற்கு உதவிகளை வழங்குகிறது.

        இலங்கை துணைத் தூதரகத்தின் அமைச்சர் ஆலோசகர் (வணிகம்) லாஸ் ஏஞ்சல்ஸ் அனில் சிறிமான்னவின் உதவியால், வொஷிங்டனில் உள்ள அமெரிக்காவுக்கான இலங்கைத் தூதரகத்தின் அமைச்சர் (வணிகம்) சரித

        யத்தோகொட, இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபை, இலங்கை வர்த்தகத் திணைக்களம் மற்றும் கூட்டு ஆடைகள் சங்க மன்றத்துடன் இணைந்து

        அமெரிக்க சந்தையில் இலங்கையின் வர்த்தக நலன்களை ஊக்குவிக்கும் இந்தத் திட்டத்தின் மூலம் ‘மெஜிக் லாஸ் வேகாஸில் இணைதல்’ இல்

        இலங்கையின் பங்கேற்பை ஒழுங்கமைக்க முன்முயற்சிகளை மேற்கொண்டனர்.

        கண்காட்சியாளர் இடம், அரங்குகளின் கட்டுமானங்கள் மற்றும் தளபாடங்கள், காட்சி அடுக்குகள் போன்ற ஏனைய தனிப்பட்ட கண்காட்சியாளர்கள்

        தொடர்பான ஒட்டுமொத்த செலவுகளுக்கு அனுசரணை வழங்கிய சி.எல்.டி.பி. மூலம் அமெரிக்க வர்த்தகத் திணைக்களத்தின் உதவியுடன்


        ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு இந்த முக்கியமான வர்த்தகக் கண்காட்சியில் பங்கேற்க இலங்கையால் முடிந்தது.

          Posted in இலங்கை செய்திகள்

          ஒருவர் வெட்டி கொலை தொடரும் குழு மோதல்

          ஒருவர் வெட்டி கொலை தொடரும் குழு மோதல்

          இலங்கை மத்துகமவில் பகுதியில் இளம் வாலிபர் ஒருவர் வெட்டி கொலை செய்ய பட்டுள்ளார் .

          பாதாள உலக குழுக்களுக்கு இடையில், இடம்பெற்று வரும், குழு மோதல்களில், இந்த நபர் சரமாரியாக , இவ்வாறு வெட்டி கொலை செய்ய பட்டுள்ளார் ,

          இரத்த வெள்ளத்தில் மிதந்த சடலமாக மீட்க பட்டுள்ள்ளார் .

          குறித்த வெட்டி கொலை சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

            Posted in இலங்கை செய்திகள்

            ஒருவர் சுட்டு கொலை ஆயுததாரிகள் வெறியாட்டம்

            ஒருவர் சுட்டு கொலை ஆயுததாரிகள் வெறியாட்டம்

            இலங்கை கம்பஹா பகுதியில், ஊந்துருளியில் வந்த மர்ம நபர்களினால் ஒருவர் சுட்டு கொலை செய்ய பட்டுள்ளார் .

            குறித்த நபர் மீது சரமாரியாக சுட்டு விட்டு ,மர்ம கும்பல் தப்பி சென்றுள்ளது .

            பலத்த சூட்டு காயங்களுக்கு உள்ளான, நபர் அவ்விடத்திலேயே பலியானார்.

            இளநகையில் நாள் தோறும் இவ்விதமானதுப்பாக்கி சூட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிட தக்கது.

              Posted in இலங்கை செய்திகள்

              இலங்கை வந்தடைந்த டீசல் கப்பல்

              இலங்கை வந்தடைந்த டீசல் கப்பல்

              நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 30 ஆயிரம் மெற்றிக் தொன் சுப்பர் டீசல் இன்று தரையிறக்கப்படவுள்ளது.

              இதேபோன்று மசகு எண்ணெய்யுடனான மற்றுமொரு கப்பல் நேற்று (23) நாட்டை வந்தடைந்ததாக அமைச்சர் கஞ்சன விஜயசேகர தெரிவித்துள்ளார்.

              இலங்கை வந்தடைந்த டீசல் கப்பல்

              ஒட்டோ டீசலை ஏற்றிய மற்றுமொரு கப்பல் எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் இலங்கை வரவுள்ளது. ஒக்ரைன் 92 வகை பெற்றோலை ஏற்றிய கப்பல் எதிர்வரும் 27 ஆம் திகதி இலங்கை வரவிருப்பதாக அமைச்சர் கூறினார்.

              இதேவேளை,  மண்ணெண்ணெயின் விலை அதிகரிப்பினால் பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு நேரடியாக நிதி

              உதவியை வழங்கும் தீர்மானம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க முன்மொழிந்த யோசனையாகும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

              குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கோடு இந்தத் தீரு;மானம் எடுக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

              ஜனாதிபதியின் இந்தத் தீர்மானத்திற்கு அமைச்சர் மனோ கணேசன் நன்றி தெரிவித்துள்ளார்.

                Posted in இலங்கை செய்திகள்

                லங்கா சதொசவில் ,அத்தியாவசிய ஜந்து உணவுப் பொருட்களின் விலைகள் குறைப்பு

                லங்கா சதொசவில் ,அத்தியாவசிய ஜந்து உணவுப் பொருட்களின் விலைகள் குறைப்பு

                லங்கா சதொசவில் அத்தியாவசிய ஜந்து உணவுப் பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளன.

                நேற்று முதல் இந்த பொருட்களின் விலைகளை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லங்கா சதொசவின் தலைவர் திரு.பசந்த யாப்பா அபேவர்தன தெரிவித்தார்.

                இதற்கமைவாக விலை குறைக்கப்பட்ட பொருட்கள் பின்வருமாறு.
                இறக்குமதி செய்யப்படும் பொன்னி சம்பா ஒரு கிலோ 194 ரூபா.
                ஒரு கிலோ பருப்பு 460 ரூபா.
                ஒரு கிலோ சிவப்பு சீனி 310 ரூபா.
                இறக்குமதி செய்யப்படும் ஒரு கிலோ நாட்டரிசி 198 ரூபா.
                ஒரு கிலோ நெத்தலி 1,375 ரூபா

                இவ்வருடம் ஜூன் மாதம் முதல் 12 அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்த லங்கா சதொசவின் தலைவர் திரு.பசந்த யாப்பா அபேவர்தன, மக்களுக்கு அதிகபட்ச நிவாரணத்தை வழங்குவதற்கு

                சதொச நிறுவனம் செயற்படும் எனவும், பொருட்களின்
                விநியோகத்தை கருத்திற்கொண்டு ஏனைய உணவு பொருட்களின் விலைகள் குறைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

                  Posted in இலங்கை செய்திகள்

                  வெளிநாட்டு தொழிலுக்காக செல்வோருக்கு கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள விசேட கருமபீடம்

                  வெளிநாட்டு தொழிலுக்காக செல்வோருக்கு கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள விசேட கருமபீடம்

                  வெளிநாட்டு தொழிலுக்காக செல்வோர் விரைவில் தமது கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ள வசதியாக குடிவரவு திணைக்களத்தில் விசேட கருமபீடம் திறக்கப்பட்டுள்ளது.

                  இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளுடன் கடந்த வாரம் இடம்பெற்ற

                  கலந்துரையாடலை அடுத்து இந்த விசேட விசேட கருமபீடத்தை திறப்பதற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார அங்கீகாரம் அளித்திருந்தார்

                  முன்னேடி திட்ட நடவடிக்கைகளில் இருந்து பெறப்பட்ட தரவுகளின் அடிப்படையில், வேலைவாய்ப்புக்காக வெளிநாடு செல்ல விரும்பும் அனைத்து

                  இலங்கையர்களுக்கும் வசதியாக நேற்று (23) முதல் இந்த விசேட கருமபீடத்தை திறக்க முடிவு செய்யப்பட்டது.

                  இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் இருந்து தமது வெளிநாட்டு தொழில்வாய்ப்பு தொடர்பான கடிதத்தைப் பெற்றுக்கொண்ட விண்ணப்பதாரர்கள் அதற்கான தமது ஆரம்பச் செயற்பாடுகளை

                  நிறைவுசெய்த பின்னர் , இந்த விசேட கருமபீடத்தில்
                  ஆவணத்தை சமர்ப்பிப்பதன் மூலம் தமது கடவுச்சீட்டை விரைவில் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

                    Posted in இலங்கை செய்திகள்

                    கோட்டபாயவுக்கு பல மில்லியன் மக்கள் பணம் செலவு நெருக்கடியில் இலங்கை

                    கோட்டபாயவுக்கு பல மில்லியன் மக்கள் பணம் செலவு நெருக்கடியில் இலங்கை

                    இலங்கையில் மக்களினால் துரத்தியடிக்க பட்ட முன்னாள் ஜனாதிபதி கோட்டபாயாவுக்கு , பல மில்லியன் மக்கள் பணம் செலவு செய்திட பட்டுள்ளது .

                    இலங்கை வரவுள்ள கோட்டாவுக்கு ,மேலும் மூன்று அடுக்கு பாதுகாப்பு மற்றும் விசேட உலங்குவானூர்தி என்பன கோர பட்டுள்ளன .

                    தேவை ஏற்படும் பொழுது அவர் உலங்குவானூர்தி மூலம் ,தப்பி செல்ல இந்த விசேட ஏற்பாடுகள் கோரப்பட்டுள்ளன .

                    நாடு எதிர் நோக்கியுள்ள பெரும் பொருளாதார நெருக்கடியில் ,கோட்டபாயவுக்கு ,இதுவரை நூறு மில்லியன் டொலர்கள் வரை, செலவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது.

                    இலங்கை வரும் கோட்டாவுக்கு ,மேலும் மக்கள் எதிர்ப்பு வலுக்கும் எனவும் ,ராஜபக்ச குடும்பங்கள் மீளவும், இலங்கையில்
                    மக்களினால் ஒட்டுமொத்தமாக துரத்தியடிக்க ,படும் நெருக்கடி ஏற்படலாம் என எதிர் பார்க்க படுகிறது.

                      சிறுவர்கள் தப்பி ஓட்டம் தேடும் பொலிஸ்
                      Posted in இலங்கை செய்திகள்

                      சிறுவர்கள் தப்பி ஓட்டம் தேடும் பொலிஸ்

                      சிறுவர்கள் தப்பி ஓட்டம் தேடும் பொலிஸ்

                      இலங்கை காலி பகுதியில் உள்ள சிறுவர் ,மையத்தில் தங்கி இருந்த மூன்று சிறுவர்கள் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர் .

                      இவ்வாறு தப்பி ஓடியவர்களில் பத்து மற்றும், எட்டு வயதுடைய சிறுமிகள் மற்றும் 12 வயதுடைய சிறுவன் உள்ளடங்கும் என தெரிவிக்க பட்டுள்ளது.

                      இவ்வாறு தப்பி ஓடிய மூன்று சிறுவர்களையும் ,தேடி கண்டு பிடிக்கும் பணியில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.

                      இலங்கைக்கு 367 பொருட்கள் இறக்குமதி செய்திட தடை
                      Posted in இலங்கை செய்திகள்

                      இலங்கைக்கு 367 பொருட்கள் இறக்குமதி செய்திட தடை

                      இலங்கைக்கு 367 பொருட்கள் இறக்குமதி செய்திட தடை

                      இலங்கையில் இன்று முதல் 367 பொருட்கள் இறக்குமதி செய்திட அரசு தடை விதித்துள்ளது .

                      விசேட வர்த்தமானி மூலம் இந்த அதிரடி உத்தறவு பிறப்பிக்க பட்டுள்ளது .

                      இவ்வாறு தடை விதிக்க பட்டுள்ளவற்றில் சொக்கலைட் ,மற்றும் வாசனை திரவியங்கள் ,ஆடம்பர பொருட்கள் என்பன அடக்கப் பட்டுள்ளது .

                      இந்த பொருட்கள் யாவும் வெளிநாடுகளில் இருந்து ,இலங்கைக்கு இறக்குமதி செய்ய படுகின்றன .

                      அதனால் ,இதற்கு முக்கியத்துவம் இல்லை என கருதி ,இந்த தடை உத்தரவு பிறப்பிக்க பட்டுள்ளது .

                      மேற்படி பொருட்களை மைய படுத்தி இறக்குமதியில் ஈடுபட்ட ,மிக பெரும் கம்பெனிகள் ,பெரும் இழப்பை சந்திக்க கூடும் எனவும் ,எதிர் வரும் நாட்களில்
                      இலங்கையில் ,இவ்வாறான பொருட்கள் , அதிக விலைக்கு செல்ல கூடும் என எதிர் பார்க்க படுகிறது .

                        தமுகூ தலைவர் மனோ கணேசன் குழுவினர் - அமெரிக்க தூதுவர் ஜூலி சங் சந்திப்பு
                        Posted in இலங்கை செய்திகள்

                        தமுகூ தலைவர் மனோ கணேசன் குழுவினர் – அமெரிக்க தூதுவர் ஜூலி சங் சந்திப்பு

                        தமுகூ தலைவர் மனோ கணேசன் குழுவினர் – அமெரிக்க தூதுவர் ஜூலி சங் சந்திப்பு

                        தமிழ் முற்போக்கு கூட்டணிக்கும், அமெரிக்க தூதுவர் ஜூலி சங் மற்றும் தூதக அதிகாரிகளுக்கும் அவசர சந்திப்பு சற்றுமுன் இடம்பெற்றது. கூட்டணி சார்பில்

                        தலைவர் மனோ கணேசனுடன், அரசியல் குழு உறுப்பினர் எம். உதயகுமார் எம்பி, பொது செயலாளர் சந்திரா சாப்டர் ஆகியோர் இடம் பெற்றனர். அமெரிக்க தூதுவரின் இல்லத்தில் இந்த சந்திப்பு நிகழ்ந்தது.


                        “பயனுள்ள இந்த சந்திப்பில் இலங்கையில் ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி, பயங்கரவாத தடை சட்டம்,


                        தமிழர் தேசிய பிரச்சினைகள், தேசிய அரசாங்கம்,தேசிய பொருளாதார நெருக்கடி, புலம் பெயர்ந்த தமிழர்


                        விவகாரம் மற்றும் தமிழ் முற்போக்கு கூட்டணி பிரதிநிதித்துவம் செய்யும் பெருந்தோட்ட மக்கள் பிரச்சினைகள்


                        ஆகியவை தொடர்பில் தீர்க்கமாக கலந்துரையாடப்பட்டன” என மனோ கணேசன் எம்பியின் டுவீட்டர் தளத்தில் கூறப்பட்டுள்ளது

                          Posted in இலங்கை செய்திகள்

                          மாணவனின் சப்பாத்துக்கள் பாம்பு

                          மாணவனின் சப்பாத்துக்கள் பாம்பு

                          கொழும்பில் உயர் தரம் கற்கும் மாணவன் ,ஒருவரது சப்பாத்துக்குள் பாம்பு ,குட்டி ஒன்று இருந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

                          கொழும்பில் உள்ள தனது பாடசாலைக்கு வந்து ,அந்த சப்பாத்தை கழற்றி பார்த்த பொழுது ,அதற்குள் பாம்பு குட்டி ஒன்று உள்ளது கண்டு பிடிக்க்க பட்டுள்ளது.

                          எனினும் மாணவனுக்கு பாம்பின், விஷ பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவிக்க பட்டுள்ளது.

                          மாணவர்கள் மற்றும் மக்கள் சப்பாத்தை அணிவதற்கு ,முன்னர் அதனை சோதனை செய்த பின்னர் ,அணிந்து செல்லும் அப்டி அறிவிக்க பட்டுள்ளது.

                            Posted in இலங்கை செய்திகள்

                            இலங்கையிடம் பிரித்தானியா முக்கிய வேண்டுதல்

                            இலங்கையிடம் பிரித்தானியா முக்கிய வேண்டுதல்

                            பயங்கரவாதத் தடைச் சட்டம் பயன்படுத்தப்படும் விதம் குறித்து தாம் கவலையடைவதாக இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.

                            பயங்கரவாதத் தடைச் சட்டத்தைப் பயன்படுத்துவது மனித உரிமைகளுக்கு முரணானது எனவும் இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயம் தனது உத்தியோகபூர்வ ருவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

                            இந்த சட்டத்தை பயன்படுத்தப்படுவதை நிறுத்துவதற்கான உறுதிமொழிகளை அதிகாரிகள் மேற்கொள்ளவேண்டும் எனவும் பிரித்தானிய உயர்ஸ்தானிகரகம் கோரியுள்ளது.

                              ஆட்டோ தொழில்சாலைக்கு திடீரென பயணித்த போக்குவரத்து அமைச்சர்
                              Posted in இலங்கை செய்திகள்

                              தமிழர்களை அடக்கிட புதிய சட்டம்

                              தமிழர்களை அடக்கிட புதிய சட்டம்

                              எதிர்வரும் காலங்களில் பயங்கரவாத தடைச்சட்டம் இரத்து செய்யப்படவுள்ளது என அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான பந்துல குணவர்தன தெரிவித்தார்.

                              இன்று அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

                              பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு பதிலாக புதிய தேசிய பாதுகாப்பு சட்டம் ஒன்று உருவாக்கப்பட்டு வருவதாகவும் அச்சட்டம்
                              நிறைவேற்றப்பட்டதும் பயங்கரவாத தடைச்சட்டம் இரத்துச் செய்யப்படும் என்றார்.

                              Posted in இலங்கை செய்திகள்

                              ரணில் வீட்டில் சாராய போத்தல் திருடியவர் கைது

                              ரணில் வீட்டில் சாராய போத்தல் திருடியவர் கைது

                              இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வீட்டில், சாராய போத்தல் திருடிய குற்ற சாட்டில் ஒருவர் கைது செய்ய பட்டுள்ளார் .

                              ரணில் விக்கிரமசிங்க வீட்டை சுற்றிவளைத்து எரியூட்டிய பொழுது, அங்கிருந்த விலை உயர்வான மதுபான போத்தல்களை, திருடி சென்றனர்என்ற குற்ற சாட்டில் ,இந்த நபர் கைது செய்ய பட்டுள்ளார்.

                              போராட்டக்காரர்களை தொடராக கைது செய்து மிரட்டும் நகர்வை, ரணில் விக்கிரமசிங்க அரசு முடுக்கி விட்டுள்ளது .

                              இவை கோட்டபாய மீள நாடு வரும் பொழுது இவ்வாறான போராட்டங்கள் ,மீள் எழுச்சி கொள்ளாது இருக்க ,ரணில் விக்கிரமசிங்க அதனை புரிந்து வருகிறார்.

                              ஆனால் ரணில் அரசுக்கு எதிராக விரைவில் மக்கள் போராட்டம் ,நாடு முழுவதும் வெடிக்கும் என எதிர் பார்க்க படுகிறது.

                                Posted in இலங்கை செய்திகள்

                                திருட்டு முயற்சியில் ஈடுபட்ட சிறுவன் மடக்கி பிடிப்பு

                                திருட்டு முயற்சியில் ஈடுபட்ட சிறுவன் மடக்கி பிடிப்பு

                                பண்டாரகம, நாமலுவ பிரதேசத்தில் உள்ள கடை ஒன்றில் பணத்தை திருட முற்பட்ட 13 வயது சிறுவன் கைது செய்யப்பட்டுள்ளார்.

                                குறித்த கடை உரிமையாளர் அவரைத் தடுக்க முயற்சி செய்த போது சிறுவன் கடை உரிமையாளரை கத்தியால் தாக்கி, கடையில் கொள்ளையடிக்க முயன்றுள்ளார்.

                                சம்பவத்தைத் தொடர்ந்து, சந்தேக நபர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதுடன், மறைந்திருந்த நிலையில் பொலிஸார், அவரை கைது செய்துள்ளனர் .

                                33 வயதான கடை உரிமையாளரின் வயிறு மற்றும் வலது கையில் காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், சந்தேகத்திற்கிடமான குறித்த சிறுவன் இதற்கு முன்னர் பல தடவைகள்
                                கடைக்கு வந்து பணத்தை கொள்ளையடிக்க முயற்சித்துள்ளதாக கடை உரிமையாளர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

                                  Posted in இலங்கை செய்திகள்

                                  பாடசாலை மாணவிகளை துஸ்பிரயோகம் செய்தமை: சங்கீத ஆசிரியர் கைது

                                  பாடசாலை மாணவிகளை துஸ்பிரயோகம் செய்தமை: சங்கீத ஆசிரியர் கைது

                                  தரம் 10ல் கல்வி கற்கும் மூன்று பாடசாலை மாணவிகளை துன்புறுத்திய குற்றச்சாட்டில் டிக்வெல்ல பாடசாலை சங்கீத பாட ஆசிரியர் ஒருவரை சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

                                  சங்கீத வகுப்புக்கு சென்ற மூன்று சிறுமிகளிடம் தகாத முறையில் நடந்துகொண்டதின் பெயரில் கிடைத்த முறைப்பாடுகளின் விசாரணைகளின்

                                  அடிப்படையில், குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

                                  பாடசாலை மாணவிகளை துஸ்பிரயோகம் செய்தமை: சங்கீத ஆசிரியர் கைது

                                  குறித்த சிறுமிகளின் பெற்றோர்கள் குழந்தை பராமரிப்பு அதிகாரிகளிடம் புகார் அளித்ததையடுத்து, பொலிசார் விசாரணைகளை தொடங்கி

                                  உள்ளத்துடன், இதனுடன் தொடர்புடைய 14 மற்றும் 15 வயதுடைய மூன்று பள்ளி மாணவிகளையும் மருத்துவப் பரிசோதனைக்காக ஜே.எம்.ஓ.வுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.

                                  சந்தேக நபர் 38 வயதான நபர் எனவும், அவரை மாத்தறை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

                                    Posted in இலங்கை செய்திகள்

                                    இலங்கையில் பாண் விலை குறைக்க படும் எப்போது

                                    இலங்கையில் பாண் விலை குறைக்க படும் எப்போது

                                    பாண் ஒன்றுக்கான விலையை 50 ரூபாவாலும், பணிஸ் ஒன்றின் விலையை 25 ரூபாவாலும் குறைக்க முடியும் என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

                                    வெதுப்பக தொழிற்துறையை தற்போது கொண்டு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும், கோதுமை மா உள்ளிட்ட மூலப்பொருட்களின் பாரிய

                                    விலை அதிகரிப்பு காரணமாக வெதுப்பக உற்பத்திகளின் விலை பாரியளவில் அதிகரித்துள்ளது என இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் என்.கே ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

                                    அரசாங்கம் மற்றும் அதனுடைய நிறுவனங்கள் உதவி வழங்குமாயின் வெதுப்பக உற்பத்தி


                                    பொருட்களின் விலையினை குறைக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.