Tag: srilanka
நான்கு சிங்கள குடியேற்ற கிராமங்கள் வவுனியா வடக்கு பிரதேச செயலகத்துடன் இணைக்க தீர்மானம்: செல்வம் எம்.பியும் பங்கேற்பு
நான்கு சிங்கள குடியேற்ற கிராமங்கள் வவுனியா வடக்கு பிரதேச செயலகத்துடன் இணைக்க தீர்மானம்: செல்வம் எம்.பியும் பங்கேற்பு
நான்கு சிங்கள குடியேற்ற கிராமங்களை வவுனியா வடக்கு பிரதேச செயலகத்துடன் இணைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வவுனியா மாவட்ட எல்லை மீள் நிர்ணயம் தொடர்பான கலந்துரையாடல் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று (16.06) மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் தி.திரேஸ்குமார் தலைமையில் இடம்பெற்றது. இதன்போதே குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.
இதன்போது, வவுனியா மாவட்டத்தில் உள்ள மக்கள் தொகையை அடிப்படையாக கொண்டு சில கிராம அலுவலர் பிரிவுகளை பிரிப்பதற்கும், சில பிரிவுகளை இணைப்பதற்கும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டிருந்தது.
வவுனியா மாவட்டத்தில் உள்ள மக்கள் நிர்வாக நடவடிக்கைகளை இலகுவாக மேற்கொள்ளும் பொருட்டு வவுனியா பிரதேச செயலக பிரிவில் பட்டாணிச்சூர், வேப்பங்குளம், பண்டாரிக்குளம், கூமாங்குளம், உக்குளாங்குளம், மகாறம்பைக்குளம் என்பனவும் செட்டிகுளம் பிரதேச செயலக பிரிவில் மெனிக்பாம், ஆண்டியாபுளியங்குளம் என்பனவும் தனி கிராம அலுவர் பிரிவுகளாக பிரிப்பதற்கும், கலாபோகஸ்வேவ உள்ளிட்ட 4 சிங்கள குடியேற்ற கிராமங்களின் நிர்வாக நடவடிக்கையை வவுனியா வடக்கு பிரதேச செயலகத்துடன் இணைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
நான்கு சிங்கள குடியேற்ற கிராமங்கள் வவுனியா வடக்கு பிரதேச செயலகத்துடன் இணைக்க தீர்மானம்: செல்வம் எம்.பியும் பங்கேற்பு
குறித்த கலந்துரையாடலில் மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன், பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், பிரதேச செயலாளர்கள், உள்ளுராட்சி மன்றங்களில் செயலாளர்கள், திணைக்கள தலைவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.
குடிவரவு – குடியகல்வு பிராந்திய காரியாலயம் முன்பாக 5 பேர் கைது: வவுனியா பொலிசார் அதிரடி முற்றுகை
குடிவரவு – குடியகல்வு பிராந்திய காரியாலயம் முன்பாக 5 பேர் கைது: வவுனியா பொலிசார் அதிரடி முற்றுகை
வவுனியாவில் அமைந்துள்ள குடிவரவு – குடியகல்வு பிராந்திய காரியாலயம் முன்பாக 05 பேர் வவுனியா பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று காலை குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
வவுனியா குடிவரவு மற்றும் குடியகல்வு பிராந்திய காரியாலயம் முன்பாக வரிசையில் பணிக்கு ஊழியர்களை அமர்த்தி, வரிசையினை பெற்றுக் கொடுப்பதற்கு 5000 ரூபாவும்,
வரிசையின்றி உரிய நடைமுறைகளுக்கு அப்பால் கடவுச்சீட்டைப் பெற்றுக்கொடுக்க 25000 ரூபாவும் இடைத் தரகர்களினால் பெறப்படுவதாக பொதுமக்களிடமிருந்து குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன.
குடிவரவு – குடியகல்வு பிராந்திய காரியாலயம் முன்பாக 5 பேர் கைது: வவுனியா பொலிசார் அதிரடி முற்றுகை
குறித்த செயற்பாடு தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்ற நிலையில் முன்னெடுக்கப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையில் 5
நபர்களை பொலிஸார் கைது செய்ததுடன், அவர்களிடம் முன்னெடுக்கப்படும் மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர்களை வவுனியா மாவட்ட நீதவான் முன்னிலையில் ஆயர்படுத்தவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
மாடுகள் கடத்தல் சம்பவத்திற்கு துணைபோகும் பொலிசார்: வவுனியா அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம்
மாடுகள் கடத்தல் சம்பவத்திற்கு துணைபோகும் பொலிசார்: வவுனியா அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம்
வவுனியா நெளுக்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் அதிகளவாக மாடுகள் கடத்திச் செல்லப்படுவதாகவும் இதற்கு நெளுக்குளம் பொலசம்பவம் தொடர்பாக வவுனியா மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் இன்று கலந்துரையாடப்பட்டதுடன் நெளுக்குளம் பொலிஸ் பொறுப்பதிகாரி மீதும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரும், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான கு.திலீபன்,
குறித்த பகுதியில் அதிகளவாக மாடுகள் கடத்திச் செல்லப்படுவதாக முறைப்பாடுகள் கிடைக்கின்றன. அத்துடன் நெளுக்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மீது பொதுமக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர். எனவே அவரை இடமாற்றி ஒழுக்காற்று நடவடிக்கையினை முன்னெடுக்குமாறு தெரிவித்திருந்தார்.
மாடுகள் கடத்தல் சம்பவத்திற்கு துணைபோகும் பொலிசார்: வவுனியா அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானம்
அதற்கு பதில் அளித்த மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர், மாடுகள் களவாடப்பட்டுள்ளமை தொடர்பாக நேற்றையதினம் (12.06) கைதுசெய்யப்பட்ட இருவரை நீதிமன்றில் ஆயர்படுத்தியுள்ளோம்.
அத்துடன், இச்சம்பங்கள் தொடர்பாக தொடர்ச்சியான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம்.

நெளுக்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி மக்களுக்கு விரோதமாக செயற்பட்டிருந்தால், அது தொடர்பாக மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தால் அடுத்த கட்ட நடவடிக்கைகள் தொடர்பாக பரிசீலிக்கலாம் எனத் தெரிவித்தார்.
வவுனியா – சமயபுரத்தில் இருவரை மடக்கிப் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்த மக்கள்
வவுனியா – சமயபுரத்தில் இருவரை மடக்கிப் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்த மக்கள்
வவுனியா – சமயபுரத்தில் இருவரை மடக்கிப் பிடித்து சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் ஒப்படைப்படைத்தனர்.
குறித்த பகுதியில் இன்று (12.06) காலை 6.00 மணியளவில் இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
வவுனியா, நெளுக்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சமயபுரம் கிராமத்தில் கடந்த சில மாதங்களாக கால்நடைகள் திருடப்படுகின்றமை அதிகரித்த வண்ணமே காணப்பட்டதுடன், கால்நடைகளை களவாடுபவர்கள் பொதுமக்களினால் கையும் களவுமாக பிடிபட்டு நெளுக்குளம் பொலிஸ் நிலையத்திலும் கையளித்துள்ளனர். எனினும் அப்பகுதியில் கால்நடைகள் களவாடப்படுகின்றமை தொடர்ந்த வண்ணமேயிருந்தது.

வவுனியா – சமயபுரத்தில் இருவரை மடக்கிப் பிடித்து பொலிசாரிடம் ஒப்படைத்த மக்கள்
இந்நிலையில் இன்று (12.06) காலை 6.00 மணியளவில் சமயபுரம் விநாயகர் வித்தியாலய வீதியில் மாட்டினை களவாட முயன்ற இரு நபர்களை பொதுமக்கள், பிடித்து நையப்புடைத்து வாகனம் ஒன்றில் கட்டி வைத்தமையுடன் அவர்களை நெளுக்குளம் பொலிஸ் நிலைய பொலிஸாரிடம் வழங்குவதற்கு பொதுமக்கள் மறுப்பு தெரிவித்ததுடன், மாட்டினை களவாட முயன்ற இரு நபர்களையும் வாகனத்தில் ஏற்றி வவுனியா சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் ஒப்படைத்தனர்.

இவ்விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாதிக்கப்பட்ட மக்கள்,
எமது கிராமத்தில் கால்நடைகள் களவாடப்படுகின்றமை தொடர்ந்த வண்ணமேயுள்ளது. இதனால் எமது வாழ்வாதாரம் பாதிப்படைந்துள்ளமையுடன் இரவில் நிம்மதியாக உறங்குவதற்கு கூட முடியவில்லை. பல தடவைகள் கால்நடைகளை களவாடுபவர்களை பிடித்துக்கொடுத்தும் நெளுக்குளம் பொலிஸார் எவ்வித நடவடிக்கையினையும் மேற்கொள்ளவில்லை என்பதினால் நாங்கள் தற்போது திருடர்களை சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் காரியாலயத்தில் ஒப்படைப்படைத்துள்ளோம் என தெரிவித்தனர்.
யாழில் பூசகர்களிடையே சண்டையால் தடைப்பட்ட ஆலய கொடியேற்றம்: பொலிசார் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்
யாழில் பூசகர்களிடையே சண்டையால் தடைப்பட்ட ஆலய கொடியேற்றம்: பொலிசார் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்
யாழ் வண்ணை ஶ்ரீ வீரமாகாளி அம்மன் ஆலய கொடியேற்றத்தின் போது பூசகர்களிடையே ஏற்பட்ட முரண்பாட்டால் கொடியேற்றம் தடைப்பட்டதுடன், பொலிசார் தலையீட்டு நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தனர்.
வீரமாகாளி அம்மன் தேவஸ்தானத்தில் பூசகர்களிடையே இடம்பெற்ற முரண்பாடு காரணமாக நேற்று(09) காலை 10 மணியளவில் ஆலயத்தின் மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாக இருந்த நிலையில் தடைப்பட்டிருந்தது.
குறித்த ஆலயத்தில் 3 குடும்பங்களைச் சேர்ந்த பூசகர்களிடையே நீண்டகாலமாக முரண்பாடு காணப்பட்ட நிலையில் இவ் வருடத்திற்கான மகோற்சவத்தினை யார் முன்நின்று நடத்துவதென இரண்டு பூசர்களிடையே முரண்பாடு ஏற்பட்டது.
யாழில் பூசகர்களிடையே சண்டையால் தடைப்பட்ட ஆலய கொடியேற்றம்: பொலிசார் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல்
இந்நிலையில் இவ் வருட மகோற்சவத்தினை சிவதர்சக் குருக்கள் தலைமையில் நடத்துமாறு கடந்த 6ஆம் திகதி யாழ் மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது.
எனினும் நேற்று முன்தினம்(08) மகோற்சவ முன்னேற்பாட்டினை மேற்கொள்ள முயன்றபோது மற்றைய பூசகர் ஆலயத் திறப்பினை கையளிக்காத்தால் முரண்பாடு நிலவியுள்ளது.
யாழ்ப்பாண பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பில் நீதவான் நீதிமன்றில் நேற்று(09) வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
நீண்டநேர வாதப்பிரதிவாதங்களின் பின் ஆலய மகோற்சவத்தினை சிவதர்சக் கருக்கள் தலைமையில் தடையின்றி நடத்துமாறும், உற்சவத்தினை குழப்புபவர்களை கைதுசெய்து நீதிமன்றில் முற்படும்துமாறும் நீதவானால் பொலிஸாருக்கு உத்தரவிடப்பட்டது.
இதனடிப்படையில் நேற்று மாலை 5 மணிக்கு ஆலயத்தின் தடைப்பட்ட மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி இடம்பெற்றது.
வைத்தியர் முகைதீன் சுட்டுப்படுகொலை: புளொட் அமைப்பைச் சேர்ந்தவருக்கு மரணதண்டனை வழங்கிய நீதிபதி இளஞ்செழியன்
வைத்தியர் முகைதீன் சுட்டுப்படுகொலை: புளொட் அமைப்பைச் சேர்ந்தவருக்கு மரணதண்டனை வழங்கிய நீதிபதி இளஞ்செழியன்
வவுனியாவில் வைத்தியர் முகைதீன் என்பவரை சுட்டுப்படுகொலை செய்த சம்பவத்துடன் தொர்புடைய புளொட் அமைப்பைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞசெழியன் மரணதண்டனை வழங்கி தீர்ப்பளித்துள்ளார்.
வவுனியாவில் கடந்த 2009 ஆம் ஆண்டு ஏப்ரல் ஆம் மாதம் 20 ஆம் திகதி கற்குழியில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையில் கடமையில் இருந்த முகைதீன் என்ற வைத்தியர் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
இது தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட எதிரிக்கு எதிராக வழக்கு விசாரணை இடம்பெற்று வந்த நிலையில் சட்டமா அதிபரினால் வவுனியா மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
வைத்தியர் முகைதீன் சுட்டுப்படுகொலை: புளொட் அமைப்பைச் சேர்ந்தவருக்கு மரணதண்டனை வழங்கிய நீதிபதி இளஞ்செழியன்
மேல்நீதிமன்றில் இது தொடர்பான வழக்கு விசாரணைகள் முடிவடைந்த நிலையில் இன்றையதினம் (08.06) தீர்ப்புக்காக தவணையிடப்பட்டிருந்தது.
இதன்போது, உயிரிழந்தவரின் உடலில் இருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட துப்பாக்கித் தோட்டாக்கள் எதிரியினால் பயன்படுத்தப்பட்டிருப்பதாக மன்று திருப்தியடைந்தது. அந்தவகையில் எதிரி குற்றவாளியாக இனங்காணப்படுவதாக மேல்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதற்கமைய அவருக்கு மரணதண்டை வழங்கப்பட்டிருந்தது.
வவுனியாவை சேர்ந்த புளொட் அமைப்பின் உறுப்பினரான நெடுமாறன் என்று அழைக்கப்படும் சிவநாதன் பிறேமநாத் என்ற நபருக்கே இவ்வாறு தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
சம்பவம் இடம்பெற்ற காலப்பகுதியில் குறித்த நபர் தமிழ் மக்கள் விடுதலை கழகத்தின் (புளொட்) வவுனியா வேப்பங்குளம் முகாமுக்கு பொறுப்பாக செயற்ப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அவர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த நிலையில் 14 வருடங்களாக வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வந்திருந்தது. தீர்ப்பின் பின்னர் அவர் மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கஜேந்திரகுமார் எம்.பி கொழும்பில் வைத்து கைது! (PHOTO)
கஜேந்திரகுமார் எம்.பி கொழும்பில் வைத்து கைது!
தமிழ் தேசிய மக்கள் முன்னனியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் எம்.பி கொழும்பில் வைத்து இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளார்.
வடமராட்சி, மருதங்கேணி விவகாரம் தொடர்பில் வாக்குமூலம் பெற நாளை பொலிஸ் நிலையம் வருமாறு அறிவித்தல் வழங்கப்பட்ட நிலையில் இன்று அதிகாலை கொழும்பில் உள்ள அவரது வீட்டை சுற்றிவளைத்த பொலிசார் அவரை கைது செய்துள்ளனர்.
கஜேந்திரகுமார் எம்.பி கொழும்பில் வைத்து கைது!

இன்று பாராளுமன்றத்தில் மருதங்கேணி விவகாரம் தொடர்பில் உரையாற்ற இருந்த நிலையில் இந்த கைது இடம்பெற்றுள்ளதுடன், கைது செய்யப்பட்ட எம்.பி கொள்ளுப்பிட்டி பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார். பின்னர் மருதங்கேணி அழைத்து வர நடவடிக்கைகள் இடம்பெறுவதாக அறிய முடிகிறது.

இதேவேளை, மருதங்கேணியில் கடந்த 2 ஆம் திகதி சிவில் உடையில் வந்த பொலிசார் அவர் மீது தாக்குதல் நடத்தியதுடன், பிஸ்ரல் காட்டி மிரட்டியதாக செய்திகள் வெளிவந்த நிலையில் பொலிசாரின் கடமைக்கு இடையூறை ஏற்படுத்தியதாக பொலிசார் தற்போது நடவடிக்கை எடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தில் தூக்கு காவடி எடுத்த பெண்கள்
வரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தில் தூக்கு காவடி எடுத்த பெண்கள்
வரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தில் தூக்கு காவடி எடுத்த பெண்கள் பலரும் கவனத்தையும் ஈர்த்துள்ளனர்.
சைவர்களுடைய வழிபாடுகளில் நேர்த்திக்கடன் முக்கியம் பெறுகின்றது. தங்களுக்கு நேரும் துன்பங்கள், ஆபத்துக்கள் இந்த நேர்த்திக்கடன் மூலம் நீங்கும் என்பது அவர்களது நம்பிக்கையும் கூட.
வரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலயத்தில் தூக்கு காவடி எடுத்த பெண்கள்

நேற்றைய தினம் வற்றாப்பளை கண்ணகைத்தாயின் பொங்கல் விழாவாகும். உப்பு நீரிலே விளக்கெரியும் புதுமைகள் நிறைந்த கண்ணகைத்தாய்க்கு தமிழர்களின் வீரம் செறிந்த போராட்ட அமைப்பு வானூர்தி மூலம் பூத்தூவிய வரலாற்று பெரு நிகழ்வின் பின் நேற்று இரண்டு பெண்கள் பறவைக்காவடி எடுத்து தமது நேர்த்திக்கடனை நேர்த்தியாக நிறைவேற்றினார்கள்.
வவுனியாவைச் சேர்ந்த முன்னாள் அரசியல் கைதி ஆனந்தவர்ணனை ரிஐடி விசாரணைக்கு அழைப்பு
வவுனியாவில் வசித்து வரும் முன்னாள் அரசியல் கைதி ஆனந்தவர்ணனை ரிஐடி விசாரணை பிரிவுக்கு வருமாறு இன்று (05.06) அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது.
வவுனியா, தோணிக்கல் பகுதியில் வசித்து வரும் முன்னாள் அரசியல் கைதியான செல்வநாயகம் ஆனந்தவர்ணனணையே நாளை 07 ஆம் திகதி காலை 9 மணிக்கு வவுனியாவில் அமைந்துள்ள பயங்கரவாத விசாரணை மற்றும் தடுப்பு பிரிவுக்கு சமூகமளிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவைச் சேர்ந்த முன்னாள் அரசியல் கைதி ஆனந்தவர்ணனை ரிஐடி விசாரணைக்கு அழைப்பு
அவருக்கு அனுப்பப்பட்டுள்ள அழைப்பாணையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவின் பிரிவு 01 இன் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைக்கு அமைய வாக்குமூலம் ஒன்றை தருவதற்கு, 2023 ஆம் ஆண்டு 6 ஆம் மாதம் 7 ஆம் திகதி காலை 9 மணிக்கு பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் வவுனியா கிளைக்கு சமூகமளிக்குமாறு அழைக்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவில் இருந்து கிளிநொச்சிக்கு தண்ணீர் கொடுக்க முடியாது பிரதேசவாதமாக செயற்படும் சாள்ஸ் எம்.பி பகிரங்க குற்றச்சாட்டு
முல்லைத்தீவில் இருந்து கிளிநொச்சிக்கு தண்ணீர் கொடுக்க முடியாது பிரதேசவாதமாக செயற்படும் சாள்ஸ் எம்.பி பகிரங்க குற்றச்சாட்டு
முல்லைத்தீவில் இருந்து கிளிநொச்சி மக்களுக்கு தண்ணீர் வழங்க கூடாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் பிரதேச வாதமாக செயற்படுவதாக குற்றம் சாட்டப்பட்டப்பட்டுள்ளது.
குறித்த குற்றச்சாட்டை வன்னி மாவட்ட ஈபிடிபி நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் முன்வைத்துள்ளார்.
முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் எல்லையோரமாகவுள்ள புளிக்குளம் நீண்டகாலமாக புனரமைக்கப்படாத நிலையில் காணப்பட்டது.
முல்லைத்தீவில் இருந்து கிளிநொச்சிக்கு தண்ணீர் கொடுக்க முடியாது பிரதேசவாதமாக செயற்படும் சாள்ஸ் எம்.பி பகிரங்க குற்றச்சாட்டு
கிளிநொச்சி மாவட்டத்தின் அறிவியல் நகர் மற்றும் பொன்நகர் மக்களின் நீர்தேவையை பூர்த்தி செய்யும் வகையில் குறித்த குளத்தை புனரமைப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு அதற்கான செயற்பாடுகளும் ஆரம்பமாகியுள்ளது.
தற்போது, குறித்த குளத்து நீரை கிளிநொச்சி மக்களுக்கு வழங்கக் கூடாது எனவும் அந்நீரை முல்லைத்தீவு மாவட்டத்திற்கே வழக்க வேண்டும் எனவும் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் குழப்பம் விளைவித்துள்ளார்.
குறித்த குளத்தை புனரமைத்து நீர் விநியோகிப்பதற்கான அனுமதிகள் அனைத்தும் பெற்று வேலைகள் ஆரம்பிக்கும் வரை அமைதியாக இருந்து விட்டு, தற்போது பிரதேச வாதம் பேசி செயற்படுவதை ஏற்க முடியாது.
முல்லைத்தீவு மாவட்டத்தைப் போன்று கிளிநொச்சி மாவட்டத்திலும் தமிழ் மக்கள் தான் வாழ்கிறார்கள் எனபதை தேசியம் பேசி பிரதேச வாதத்துடன்
செயற்படும் சாள்ஸ் எம்.பி புரிந்து கொள்ள வேண்டும் எனவும், கிளிநொச்சி மாவட்டத்தின் அறிவியல் நகர் மற்றும் பொன்னகர் மக்கள் நீர் பற்றாக்குறை காரணமாக பல்வேறு இடர்பாடுகளை சந்தித்துள்ளனர்.
அவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த மாவட்டத்தின் எல்லையோர குளமான குறித்த புளிக்குளத்தை புனரமைத்து அதில் இருந்து அந்த மக்களுக்கு நீர் கொடுப்பதில் என்ன தவறு இருக்கின்றது என்பதை சாள்ஸ் எம்.பி தெளிவுபடுத்த வேண்டும் எனவும் திலீபன் எம்.பி கோரியுள்ளார்.
குறித்த குளத்தின் கீழ் முல்லைத்தீவில் வயல் நிலங்கள் இல்லை என்பதுடன் இவ் நீரை முல்லைத்தீவு மக்கள் பயன்படுத்தக்கூடிய ஏது நிலையும் இல்லை.
இதனால் வீணாக போகும் நீரை கிளிநொச்சி மக்கள் பயன்படுத்துவதில் என்ன பிரச்சனை இருக்கின்றது.
அதை விடுத்து இனவாதம், பிரதேசவாதம் பேசி தமிழ் மக்களை கூறுபோட்டு சுயநல அரசியல் லாபங்களுக்காக செயற்பட்டு அபிவிருத்தியை குழப்பக் கூடாது எனவும் திலீபன் எம்.பி தெரிவித்துள்ளார்.
வலிந்து காணாமல் ஆக்கபட்ட அப்பாவி மக்களுக்கு நீதி வேண்டி லண்டனில் ஆர்ப்பாட்ட பேரணி
வலிந்து காணாமல் ஆக்கபட்ட அப்பாவி மக்களுக்கு நீதி வேண்டி லண்டனில் ஆர்ப்பாட்ட பேரணி
வலிந்து காணாமல் ஆக்கபட்ட அப்பாவி மக்களுக்கு நீதி வேண்டி லண்டனில் மிகபெரும் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று இடம்பெற்றுள்ளது .
சிங்கள இனவாத படைகளால் ,திட்டமிட்டு பல்லாயிரம் அப்பாவி தமிழ் மக்கள் சிறைகளில் அடைக்கப்பட்டும் , இளைஞர்கள் யுவதிகள் ,மற்றும் சிறுவர்கள் இலங்கை இனவாத இராணுவத்தால் கொல்லப்பட்டும் காணாமல் ஆக்க பட்டும் இருந்தனர் .
இதுவரை நீதி கிடைக்காமல் ,கைது செய்ய பட்டவர்கள் எங்கு என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை .
இந்த நெஞ்சு வலியோடு அவதிபட்டு கொண்டிருக்கும் எம்மின மக்களுக்கு நீதி வேண்டி இன்று செவ்வாய் கிழமை (30 .08 .2021)மதியம் 01 தொடக்கம் 03 மணிவரை லண்டனில் உள்ள இலங்கை தூதரத்துக்கு முன்னால் ஆர்ப்பாட்ட பேரணி இடம்பெற்றுள்ளது .
பிரித்தானியாவிலுள்ள தமிழர்களுக்கான சுதந்திர வேட்டைக்காரர்கள் என்ற அமைப்பினர் (Freedom Hunters For Tamils )மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றை
ஒழுங்கு செய்திருந்தனர் .
இந்த வலிந்து காணாமல் ஆக்கபட்ட அப்பாவி மக்களுக்கு நீதி வேண்டி பேரணிக்கு மக்கள் உணர்வு பூர்வமாக
கலந்து தங்கள் ஆதங்களை வெளிப்படுத்திஇருந்தனர்.
இலங்கையில் புதிய ஆட்சியாளர் ரணில் விக்கிரமசிங்க ஆள்கின்ற பொழுதும் ,ராஜபக்ச அரசாங்கம் நடத்திய தமிழ் இன பாடுகொலைகளுக்கு எவ்வித பொறுப்பு கூறல்களையும் செய்திடாது உள்ளமை தமிழர்களை பெரும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .
லண்டனில் இடம்பெற்ற போராட்டங்கள் யாவும் பார்க்க இதில் அழுத்துங்க

















போதை பொருள் அருந்திய பெண்கள் கைது என்று அழிக்க படும் இந்த போதை
போதை பொருள் அருந்திய பெண்கள் கைது என்று அழிக்க படும் இந்த போதை
இலங்கை யாழ்ப்பாணம் பொம்மை வெளிப்பகுதியில், பாழடைந்த வீட்டுக்குள் போதை பொருள், நுகர்ந்து கொண்டிருந்த இரு பெண்கள், காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர் .
கைதான பெண்கள், காவல்துறை விசாரணைகளின் பின்னர் ,நீதிமன்றில் பரப்படுத்தும் நகர்வுகள் முன்னெடுக்க பட்டுளள்ன .
இலங்கையில் சிங்கள ஆட்சியில் நாடு எங்கும் ,போதை பொருள் பாவனை அதிகரித்து காணப்படுகிறது .
அரசியல்வாதிகளின் பின்புலத்தில் நடத்த படுகிறது ,இந்த போதை பொருள் வியாபாரம் .
இதே அரசியல்வாதிகளின் தன்னலத்தால் இலங்கையில் வாலிபர்கள் போதை பொருளினால் சீரழிந்து போகின்றமை குறிப்பிட தக்கது.
இலங்கையில் போதையில் நம்மவர்கள் கூத்து ,இதில் அழுத்தி பாருங்கள்
வாலிபர் சுட்டு கொலை இலங்கையில் எகிறும் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள்
வாலிபர் சுட்டு கொலை இலங்கையில் எகிறும் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள்
இலங்கை மட்டக்குளிய பகுதியில், வாலிபர் ஒருவர், மர்ம நபர்களினால் சுட்டு கொலை செய்யப் பட்டுளளார் .
குறித்த வாலிபரை ஊந்துருளியில் பின் தொடர்ந்து வந்த ,மர்ம நபர்கள் ,திடீரென இந்த வாலிபர் மீது துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பி சென்றுள்ளனர் .
துப்பாக்கி சூட்டு காயங்களுக்கு உள்ளான வாலிபர் ,சம்பவ இடத்திலேயே துடி துடித்து பலியாகினர் ,.
இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பில் ,போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் .
இலங்கையில் சமீப காலங்களில் இவ்வாறான துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் , அதிகரித்து காணப்படுகின்றமை குறிப்பிட தக்கது .
பதற வைக்கும் இலங்கையில் நடந்த துப்பாக்கி கொலைகள் ,யாவும் இதில் அழுத்தி பாருங்கள்
எம்பிகளுக்கு சொகுசு வீடு எதற்கு சொகுசு வீட்டில் வாழும் சஜித் கேள்வி
எம்பிகளுக்கு சொகுசு வீடு எதற்கு சொகுசு வீட்டில் வாழும் சஜித் கேள்வி
இலங்கையில் சிறுவர்கள் போசாக்கு இன்றி காணப்படு பொழுது ,எம்பிக்கள் ஆடம்பர சொகுசு வீடுகளில் வாழ்வது ஏன் என்ற கேள்வியை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசா எழுப்பியுள்ளார்.
எதிர்வரும் தேர்தலில் இலங்கையின் ஜனாதிபதியாக. சஜித் வருவார் என எதிர் பார்க்க படும் வேளையில் ,
இவ்வாறான கேள்விகளை அவர் எழுப்பி வருகின்றமை இங்கே கவனிக்க தக்கது.
பேரூந்து லொறி நேரெதிர் மோதல் தப்பிய பேரூந்து பயணிகள்
பேரூந்து லொறி நேரெதிர் மோதல் தப்பிய பேரூந்து பயணிகள்
இலங்கை காலி சமுத்திர மாவத்தை பகுதியில் ,பேரூந்து மற்றும் லொறி என்பன நேரெதிர் மோதி சிதறின .
இந்த லொறி பேரூந்து மோதல்களினால் ,அந்த வழி சாலை போக்குவரத்து பாதிக்க பட்டது .
எனினும் பேரூந்தில் பயணித்த பயணிகள் ,உயிராபத்து இன்றி தப்பி கொண்டனர் .
இலங்கையில் நாள் தோறும் இவ்வாறான வாகன விபத்துக்கள் அதிகரித்து காணப்படுகின்றன .
இந்த வாகன விபத்துக்களை தடுக்க ,கடுமையான சட்டங்கள் அமூல் படுத்தப் பட்ட பொழுதும் ,இவ்வாறான விபத்துக்களை தடுக்க முடியவில்லை .
மக்களை பயமுறுத்தும் கோர பேரூந்து விபத்துக்கள் இதில் அழுத்தி பாருங்கள்
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டம் காணாமல் போவாரா ரணில்
காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் போராட்டம் காணாமல் போவாரா ரணில்
இலங்கை புதுக்குடியிருப்பு பகுதியில், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் ,போராட்டம் ஒன்றை நடத்துகின்றனர் .
இருந்த போராட்டத்தில் ,ராஜபக்ச ஆட்சியில் ,காணாமல் ஆக்கப்பட்டவர்கள் எங்கே ,என கேள்வியை இந்த மக்கள் எழுப்பியுள்ளனர் .
இலங்கையில் காணாமல் போனவர்களுக்கு, கோட்டா ஆட்சியில் மரண சான்றிதழ்கள் வழங்க பட்டு வந்தன .
தற்போது வரை காணாமல் ஆக்க பட்டவர்களில் ,தம்மால் படுகொலை செய்யப்பட்டனர் என்பதை ,.இலங்கை அரசு ஒரு பொழுதும் ஏற்றுக் கொள்ளவில்லை .
இவ்வாறான நிலையில் இனப் படுகொலை புரிந்த அரசை, ஐக்கிய நாடுகள் சபை இதுவரை தண்டிக்கவில்லை என்பது குறிப்பிட தக்கது.
இலங்கையில் மக்கள் எழுச்சி போராட்டங்கள் ,யாவும் இதில் அழுத்தி பாருங்கள்
கவிதை நூல் அறிமுக விழா
கவிதை நூல் அறிமுக விழா
பைஷல் இஸ்மாயில் –
வி.மைக்கல் கொலினின் “என் இனிய பட்டாம் பூச்சிக்கு” எனும் கவிதை நூல் அறிமுக விழா திருகோணமலை இலங்கை வங்கிக் கிளையின்
சந்தைப்படுத்தல் முகாமையாளர் ந.து.ரகுராம் தலைமையில் திருகோணமலை நேற்று (28) மாலை நகரசபை மண்டபத்தில் இடம்பெற்றது.
இவ்விழாவுக்கு கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள மாகாணப் பணிப்பாளர் திருமதி சரண்யா சுதர்சன் பிரதம
அதிதியாகவும், திருகோணமலை பட்டணமும், சூழலும் பிரதேச செயலாளர் பொ.தனேஸ்வரன் மற்றும் திருகோணமலை உதவி
தொழில் ஆணையாளர் செல்வி நவஜீவனா நவரத்னராஜா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களானவும்,
இலங்கை மத்திய வங்கி திருகோணமலை பிரதேச முகாமையாளர் க.பிரபாகரன் கௌரவ அதிதியாகவும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
நீரில் மூழ்கி மாணவி மரணம்
நீரில் மூழ்கி மாணவி மரணம்
இலங்கை மெதகம பகுதியில் உள்ள ஆற்றில் குளிக்க சென்ற ,மாணவி ,ஆந்த ஆற்று நீரில் மூழ்கிய பலியாகியுள்ளார் .
நீரிலே அடித்து செல்ல பட்ட பொழுது ,மக்களினால் காப்பாற்ற பட்டு ,மருத்துவ மனையில் அனுமதிக்க பட்ட பொழுதும் ,சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்.
சமீப காலங்களாக நீர் நிலைகளில் மனித சடலங்கள், மிதந்த வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது .
யாழ் மானிப்பாயில் மோட்டார் சைக்கிள் எரிப்பு
யாழ் மானிப்பாயில் மோட்டார் சைக்கிள் எரிப்பு
யாழ்ப்பாணம் – மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மானிப்பாய் இந்துக் கல்லூரி வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் மீது இன்று ஞாயிற்றுக்கிழமை (28) அதிகாலை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
யாழ் மானிப்பாயில் மோட்டார் சைக்கிள் எரிப்பு
வீட்டில் இருந்தோர் தூக்கத்தில் இருந்த அதிகாலை வேளை, வீட்டு வளாகத்தினுள் அத்துமீறி உள்நுழைந்த வன்முறை கும்பல், வீட்டின் ஜன்னல்கள்
மற்றும் கதவுகளை உடைத்து விட்டு, வீட்டின் முன் நின்ற மோட்டார் சைக்கிளுக்கு தீ வைத்துவிட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றது.
இதனால் மோட்டார் சைக்கிள் முற்றாகவே எரிந்து நாசமாகியுள்ளது.
சம்பவம் குறித்து மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கை மருத்துவ தாதியர்களுக்கு லண்டனில் வேலை வாய்ப்பு
இலங்கை மருத்துவ தாதியர்களுக்கு லண்டனில் வேலை வாய்ப்பு
இலங்கையில் மருத்துவமனைகளில் பணி புரிந்து வரும் ,இலங்கை மருத்துவ தாதியருக்கு ,லண்டன் பகுதியில் வேலைவாய்ப்பு வழங்க பட்டுள்ளது.
பிரிட்டனுக்கு மருத்துவ வேலைவாய்ப்பை தேடி வரும் இந்த இலங்கை தாதியர்கள் ,லண்டனில் தங்கி இருந்து தொழில் புரிவார்கள் .
இவர்கள் லண்டன் மருத்துவமனைகளில் பணிபுரியும் ,சான்றிதழ்கள் வழங்க பட்டு பூர்த்தியடைந்த நிலையில்
லண்டன் மருத்துவ மனைகளில் வேலை புரியும்சான்றிதழ்களை பெற்று இவர்கள் லண்டனுக்கு வருகை தருகின்றனர் .
லண்டன் மருத்துவ மனைகளில் பணிபுரிந்திட ஆங்கில முக்கிய மொழியாக உள்ளது .
ஆங்கிலத்தில் புலமை உள்ளவர்கள் மட்டுமே,
இந்த வேலை வாய்ப்புக்கு ஏற்றவர்களாக நியமிக்க படுகின்றமை குறிப்பிட தக்கது .
















