விடுதலை போராட்டத்தின் தொழில்நுட்ப மூளையாக திகழ்ந்த சிறப்புத்தளபதி கேணல் ராஜு அண்ணாயின் 20 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

Spread the love

விடுதலை போராட்டத்தின் தொழில்நுட்ப மூளையாக திகழ்ந்த சிறப்புத்தளபதி கேணல் ராஜு அண்ணாயின் 20 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

( ராஜு அண்ணை பற்றி களமருந்துவ போராளி சுஐந்தன் அவர்கள் எழுதியது)

திரும்பிப்பார்க்கிறேன்,
ராஜு அண்ணை,அண்ணையின் விஞ்ஞான எதிர்பார்ப்புகளை செய்து முடிப்பவர் / முடிக்க சதா முயல்பவர் என்றால் அது மிகையாகாது என்று நினைக்கின்றேன்

.ராஜு அண்ணை நான் இயக்கத்தில சந்தித்தவர்களில் வித்தியாசமானவர்.
ஒரு அதிவேக மூளையின் சொந்தக்காரன்.

எதைப்பார்த்தாலும் ஆக்கிவிடுவேன் என்னும் செயல்வீரன்.இயக்க வளர்ச்சியில் இவர் பங்கு அளப்பரியது.

இவர் ராதா அண்ணை மீது தனி மதிப்பு வைத்திருந்தார்.ராதா அண்ணை என்றவுடன் பலருக்கு ஐ சே போட்டு கதைக்கிறதுதான் ஞாபகம் வரும் ,பாலா அண்ணையும் ஐ சே போட்டு கதைக்கிறவர்.

விடுதலை போராட்டத்தின் தொழில்நுட்ப மூளையாக திகழ்ந்த சிறப்புத்தளபதி கேணல் ராஜு அண்ணாயின் 20 ஆம் ஆண்டு வீரவணக்க நாள் இன்றாகும்.

தொண்ணூற்றி நான்காம் ஆண்டு நானும் ராஜு அண்ணையும் ஒரு பணிக்காக இரண்டு கிழமைகள் வன்னியில் நின்றோம்.

அப்போது அநேகமாய் முத்தையன்கட்டு குளத்து மீன்தான் சாப்பிட்டோம்.யாழ்ப்பாணம் வந்து ஒரு கிழமையால எனக்கு நெருப்புக்காய்ச்சல் தொடங்கிற்றுது.

பதினொரு நாள் அவசரசிகிச்சைப் பிரிவில் இருந்து மீண்டுவந்தேன்.ராஜு அண்ணைக்கு ஒரு பிரச்சனையும் இல்லை.என்னை இருதடவைகள் மருத்துவமனைக்கு வந்து பார்த்துப்போனார்.


ராஜு அண்ணைக்கு புற்று நோய் என்றவுடன் நம்பமுடியாமல் இருந்தது.ராஜு அண்ணையின் நிறை எப்பவுமே அறுபத்தி எட்டு கிலோதான் ( புற்றுநோய் அடையாளப்படுத்தப்படும்வரை ).

ராஜு அண்ணை ஒரு சாம்பல்நிற ஸ்கூட்டர் வைச்சிருந்தவர்.அதில அவர் ஓடுறதில்லை பறக்கிறது கண்ணுக்கு முன்னால தெரியுது.


ராஜு அண்ணை கல்யாணம் கட்டின பிறகும் வீட்டில நிற்கிறதில்லை. ராஜு அண்ணையின் மனைவியும் ஒரு போராளி, இறுதி யுத்தத்தில் கடல் சண்டையில் ஒரு கொமாண்டராய் வீரச்சாவு அடைந்தார்.

ராஜு அண்ணை தாங்கள் வீட்டை நிற்போம் வாங்கோ என்று கல்யாணம் கட்டின புதிதில் ஒருநாள் சொன்னார்.

அப்போது அவர்கள் ஒட்டிசுட்டான் புதுக்குடியிருப்பு பாதையில் ஒட்டிசுட்டானுக்கு அருகாமையில் இருந்தார்கள்.

நான் போனவுடன் பிளேன்ரி தந்தார்கள்.வீட்டில் ஆட்கள் வசிக்கக்கூடிய சாமான்கள் இருக்கவில்லை.பிளேன்ரியை நான் கதைத்து கதைத்து ஆறுதலாய் குடித்துக்கொண்டிருந்தேன்.

ராஜு அண்ணை சொன்னார் விரைவாய் குடிச்சிட்டு தேத்தனிக்கோப்பையை தாங்கோ, கங்கா (அவரது மனைவி) சோற்றுக்கு அரிசி போட இந்தக்கோப்பையைத்தான் பார்த்துக்கொண்டிருக்கு.


நான் சோலை, வன்னேரிக்குளம் என்ற கிராமத்தில் தங்கியிருந்தேன்.
ஒரு நாள் அதிகாலை ஆறு மணிக்கு ராஜு அண்ணை பிக்கப்பில் வந்தார்.


எல்லோருக்கும் பிளேன்ரி கொடுத்தோம்.எங்கட முகாமில் ஒரு புது மேசைப்பந்து


மேசை போட்டிருந்தோம்.வாங்கோ கொஞ்ச நேரம் விளையாடுவோம் என்று கூப்பிட்டார்.


விளையாட்டு தொடங்க எனக்கு இப்படி ஒன்று வாங்கித்தருவீங்களா?என்று கேட்டார்.


நான் முயற்சி செய்கிறேன் என்றேன். சிறிது நேரத்தில் இந்த மேசை வேண்டாம் இதை நான் செய்வேன்.


நீங்கள் மிகுதியை வாங்கித்தாங்கோ என்றார். பிறகு கொஞ்ச நேரம் செல்ல உந்த நெற்றும்(net) தேவையில்லை என்றார்.


கொஞ்ச நேரத்தால ரக்கட்டும் தேவையில்லை பந்துமட்டும் வாங்கித்தந்தால் சரியென்றார்.


மிச்ச மெல்லாம் நான் செய்திடுவன் என்றார்.விளையாடிமுடிய சொன்னார் பந்து தாங்கள் செய்வம் ஒன்றும் தேவையில்லை என்றார்.

அவரது மூளை எதைப்பார்த்தாலும் இதை எங்களால் செய்யமுடியுமா?
என்றே சிந்திக்கும்.

    Leave a Reply