Posted in இலங்கை செய்திகள்

மகிந்தா இன்று பதவி விலகல் – ..?

மகிந்தா இன்று பதவி விலகல் – ..?

இலங்கை ஆளும் பிரதமர் மகிந்தா ராஜபக்ச இன்று பதவி விலகுவார் என எதிர் பார்க்க படுகிறது.

,
பாராளுமன்ற கூட்டம் இன்று ஆரம்பமாகியுள்ள நிலையில் ,மகிந்த ராஜபக்ச இவர் தனது பதவி விலகலை அறிவிக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது.

ஒரு அறிவித்தல் அதன் பின்னர் பதவி விளக்க கூடும் என எதிர் பார்க்க படுகிறது .

    Posted in இலங்கை செய்திகள்

    என்னை பதவி விலகும்படி கோட்டா கோரவில்லை – மகிந்தா

    என்னை பதவி விலகும்படி கோட்டா கோரவில்லை – மகிந்தா

    இலங்கையின் பிரதமர் மகிந்த ஜனாதிபதி லோட்டா பாயா தன்னை பதவி விலகும் படி கோரவில்லை
    என தெரிவித்துளளார்

    அவ்விதம் அவர் கோரினால் அதற்கு தான் தலை வணங்க தயராக உள்ளதாக தெரிவித்துள்ளார்

    இரு சகோதர்களையும் பதவி விலகும்படி கோரி மக்கள் போராட்டம் தொடர்ந்த வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது

      Posted in Uncategorized

      10 பில்லியன் அமெரிக்கா டாலரில் உகாண்டாவில் உள்ள மகிந்தாவின் கம்பெனி(100 ஆயிரம் கோடி )

      10 பில்லியன் அமெரிக்கா டாலரில் உகாண்டாவில் உள்ள மகிந்தாவின் கம்பெனி

      இலங்கை முன்னாள் ஜனாதிபதியும் இன்னாள் பிரதமராக விளங்கி வரும் மகிந்தாவின்

      பத்து மில்லியன் அமெரிக்காடொலர் பணத்தில் உகாண்டாவில் பெரிய நிறுவனம் ஒன்றை மகிந்தா அநடத்தி வருகிறார்

      இங்கு பெருமளவில் மக்கள் வேலை வாய்ப்பை பெற்று வருவதுடன் அதிக இலாபத்தை ஈட்டி செல்கிறது ,


      நாட்டை கொள்ளையடித்து பணத்தை சுருட்டி அதில் ராஜபக்ஸா குடும்பம் பெரும் சுகபோகத்தை அனுபவித்து வருகிறது

      தற்போது மகிந்தவின் பணத்தில் அந்த நிறுவனம் உள்ளது அம்பலமாகியுள்ள நிலையில் ,பெரும் நெருக்கடியில் மகிந்த குடும்பம் சிக்கியுள்ளது

      ஆட்சி கவிழ்க்க பட்டு இவர்கள் நீதிமன்றில் விசாரணைக்கு நிறுத்த பட்டு ,ஊழல் மோசடிகள் அம்பல
      படுத்த படும் என எதிர் பார்க்க படுகிறது

        Posted in Uncategorized

        நான் பதவி விலக மாட்டேன் மகிந்தா -தயாராகும் ஆப்பு

        நான் பதவி விலக மாட்டேன் மகிந்தா -தயாராகும் ஆப்பு

        இலங்கையில் பிரதமர் நானே தான் ஒருபோதும் பதவி விலக போவதில்லை என
        மகிந்தா தெரிவித்துள்ளார்

        மக்களோ இவர்கள் பதவி விலக வேண்டும் என கோரி 19 தவாது நாளாக போராட்டம் நடத்தியவண்ணம் உள்ளனர்

        ஆனால் அதனை செவி சாய்ப்பதாக இவர்கள் இல்லை

        தமது சொத்துக்களை காப்பாற்றிட இவர்கள் பதவி விலக மறுத்து வருகின்றமை குறிப்பிட தக்கது

        இதனை அடுத்து இவர்கள் ஆட்சியை கவிழ்க்க அணைத்து காட்சிகள் இரகசிய பேச்சில் ஈடுபட்டுள்ளனர்

          Posted in Uncategorized

          மகிந்தா கொள்ளையர்கள் ஒன்றா கூடி இரகசிய பேச்சு

          மகிந்தா கொள்ளையர்கள் ஒன்றா கூடி இரகசிய பேச்சு

          இலங்கையில் ஆளும் மகிந்த குடும்ப உறுப்பினர்கள் ஒன்றாகா கூடி முக்கிய

          பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளனர்

          அலரி மாளிகையில் இந்த பேச்சு இடம்பெற்றுள்ளது

          இதன் பொழுது பிரதமர் மகிந்தா,பசில்,நாமல் உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டனர்

          Posted in Uncategorized

          மகிந்த வீடு முற்றுகை – உக்கிரம் பெறும் போராட்டம்

          இலங்கை பிரதமர் மகிந்தா தங்காலை கால்டன் சுற்றுவட்டப் பகுதியில் போராட்ட

          காரர்கள் குவிந்து பெரும் பேரணியை நடத்திய வண்ணம் உள்ளனர்

          இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட மக்கள் மகிந்த உடனே பதவி விலக வேண்டும் என கோரி வருகின்றனர்

          இந்த கோஷங்கள் அங்கு வானை பிளந்த வண்ணம் உள்ளன

            Posted in இலங்கை செய்திகள்

            மகிந்தவுக்கு சுமந்திரன் ஆலோசனையாம் – நம்பிட்டம் போங்க

            நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிக்க அரசாங்கமே முன்வர வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அவர்களுக்கு ஆலோசனை கூறியுள்ளதாக தமிழ்

            தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

            வவுனியாவில் நேற்று (12) இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் அரசியல் குழு கூட்டத்தின் பின் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

            அவர் மேலும் தெரிவிக்கையில்,

            ஒரு கொந்தளிப்பான அரசியல் நிலமை காணப்படுகின்றது. இந்த நிலை தொடர்பில் ஆராய்வதற்காக எமது கட்சியின் அரசியல் உயர் மட்ட குழு கூடியது. இந்த அரசியல் கொந்தளிப்புக்கு அடிப்படைக் காரணம் பொருளாதார வீழ்ச்சி. எப்படியாக

            இலங்கையினுடைய பொருளாதாரம் வீழ்ச்சியடைந்தது. இதற்கான காரணிகள் என்ன? இனி என்ன மாதிரியாக இந்த நிலமை மாறப் போகிறது என்பன குறித்து நீண்ட நேரமாக கருத்து பரிமாற்றம் செய்தோம்.

            சரித்திரத்தில் இல்லாத அளவுக்கு மோசமான பொருளாதார வீழ்ச்சி ஒன்று நாட்டில் ஏற்பட்டுள்ளது. இதனால் பாரிய பக்க விளைவுகளை எமது மக்கள் எதிர் நோக்க வேண்டிய நிலையும் வந்திருக்கிறது. இந்த நிலையில் வடக்கு – கிழக்கில் வாழும் தமிழ்

            மக்களுடைய பிரதான அரசியல் கட்சியாக நாங்கள் எனன விதமான தலைமைத்துவத்தை கொடுக்க வேண்டும். மக்களுக்கு என்ன மாதிரியான

            ஆலோசனைகளை கொடுக்க வேண்டும். பொருளாதார வீழ்ச்சியினால் ஏற்பட்டுள்ள அரசியல் கொந்தளிப்பு நிலையில் என்ன மாதிரியாக நடந்து கொள்ள வேண்டும் என்பது பற்றி மிகவும் ஆழமாக பேசியிருந்தோம்.

            இந்த பொருளாதார நிலை காரணமாக இன்னும் மோசமான நிலைக்கு நாடு தள்ளப்படுவதற்கான நிலமை தான் காணப்படுகின்றது. அது எமது மக்களின் இயல்பு வாழ்க்கையை வெகுவாக பாதிக்கப் போகிறது. அவர்களது பொருளாதார நிலமையும்

            பாதிக்கப் போகிறது. அதற்கு மாற்று வழிகளாக பல யோசனைகள் முன் வைக்கப்பட்டுள்ளன. வீட்டுத் தோட்டம் தொடர்பில் மக்களுக்கு தெளிவு படுத்த வேண்டியுள்ளது. இது எங்களது மக்களுக்கு புதிதான விடயமல்ல. இருப்பினும் மக்கள் தயாராக இருக்க வேண்டும். அரசியல் தலைவர்கள் என்ற வகையில் அவர்களுக்கான

            வழிகாட்டுதல்களை நாங்கள் கொடுப்போம். எங்கள் பொருளாதார நிபுணர்கள் ஊடாக அது தொடர்பில் கலந்துரையாடுவதுடன், எமது அடுத்த மட்ட பிரதிநிதிகள்,

            செயற்பாட்டாளர்கள் ஆகியோருக்கும் இது தொடர்பில் தெளிவுபடுத்துவது எனவும் தீர்மானித்துள்ளோம்.

            இம்முறை மே தினம் வடக்கில் கிளிநொச்சியிலும், கிழக்கில் மட்டக்களப்பிலும் கொண்டாடப்படும். அது தமிழ் தேசிய மே தினமாக நடத்தப்படும். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளும் அதில் கலந்து கொள்வார்கள் என நாங்கள் எதிர் பார்க்கின்றோம்.

            இன்று அரசாங்கம் ஒன்று இல்லாத நிலமை காணப்படுகின்றது. அமைச்சரவை என நான்கு பேர் புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார்கள். அதில் ஒருவர் உடனடியாக இராஜினாமா செய்தார். நிதி அமைச்சர் இல்லாத நாடு என நாங்கள் நினைத்துக்

            கொண்டிருந்த போது அவர் பாராளுமன்றத்தில் பேச எழுந்தார். அப்போது நீங்கள் தானா தற்போது நிதி அமைச்சர் என அவரிடம் நான் கேள்வி கேட்டேன். ராஜினாமா செய்து விட்டு, தான் நிதி அமைச்சர் என அவர் சொன்னார். அவ்வாறு அவர் சொன்ன போது அவருடன் கூட இருந்தவர்கள் எல்லாம் வியப்பாக அவரை திரும்பி பார்த்தார்கள். ஏனெனில் இப்பொழுது அவர் தான் நிதி அமைச்சர் என்பது அவர்களுக்கே தெரியாது. இப்படியாக நாடு தத்தளித்துக் கொண்டிருக்கின்றது.

            சர்வதேச நாணய நிதியத்துடன் உடனடியாக சென்று பேச வேண்டும். கடன் கொடுத்த நாடுகள், அமைப்புக்களுடன் பேச வேண்டும். அமைச்சரா, இல்லையா என்று புரியாத நிலையில் உள்ளவர் தான் போய் பேச போகிறார். சர்வதேச நாணய நிதியமும்,

            மற்றைய நாடுகள், அமைப்புக்களும் உதவிக்கு முன் வருவதாக இருந்தால் கூட நாட்டில் ஒரு அரசியல் ஸ்திர தன்மை இல்லாமல் அவர்கள் அந்த செயற்பாட்டுக்குள் வர மாட்டடார்கள். ஆகவே அரசியல் ஸ்திரதன்மையை உருவாக்குவது அத்தியாவசியமான செயற்பாடு. அதற்கு உகந்த வகையில் ஜனாதிபதியோ, பிரதமரோ செயற்படுவதாக தெரியவில்லை.

            கடந்த சில நாட்களாக நான் கொழும்பில் இருந்த காரணத்தினால் பல்வேறு தலைவர்களுடன் பல கலந்துரையாடல்களில் பங்குபற்றியிருக்கிறேன். எதிர்வரும் நாட்களில் பிரதான எதிர்கட்சி சில முன்னெடுப்புக்களை செய்ய உள்ளார்கள்.

            அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை, ஜனாதிபதிபக்கு எதிரான குற்றப் பத்திரிகை, நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிப்பதற்கான சட்டப் பிரேரணை உட்பட பல விடயங்களை முன்னெடுக்கவுள்ளார்கள். இது தொடர்பில் ஆராய்ந்தோம்.

            நாட்டில் இளைஞர்களாக சேர்ந்து தன்னெழுச்சியாக நடத்தப்படும் போராட்டங்களில் அரசியல்வாதிகள் இல்லாமலேயே நடத்தப்படுகின்றது. எமது பகுதிகளிலும் சில போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஆகவே மக்கள் ஆர்வமாக உள்ளார்கள்.

            இந்த மூன்று பிரேரணைகள் தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பாக ஒரு தீர்மானத்தை எடுக்க வேண்டி வரும். அந்த தீர்மானம் பங்காளிக் கட்சிகளுடன் சேர்ந்து கலந்துரையாடி உத்தியோக பூர்வமான தீர்மானமாக எடுப்போம். எமது மக்கள் மத்தியிலும் இந்த அரசாங்கத்திற்கு எதிர்ப்பு ஏற்பட்டு வருகிறது. இன்று எமது கூட்டத்தில் பேசப்பட்ட விடயங்களை எமது கட்சி தலைவர் பங்காளிக் கட்சி தலைவர்களுக்கு தெரியப்படுத்துவார்.

            தேசிய அரசாங்கம் வந்தால் நாங்கள் அமைச்சுப் பதவியை ஏற்பதற்கான சந்தர்ப்பங்கள் இல்லை. அவ்வாறான ஒரு தேவையை இப்போது நாங்கள் கருதவில்லை. இந்த பொருளாதார வீழ்ச்சிக்கு மாறி மாறி வந்த அரசாங்கங்களே காரணம். மிகவும் முக்கிய காரணம் 30 வருடத்திற்கு மேலாக ஒரு போரை நடத்தியது. அதற்காக

            கண்மூடித்தனமாக எல்லா நாடுகளிடமும் கடன் வாங்கினார்கள். அதற்கு மாறி மாறி வந்த அரசாங்கங்கள் பொறுப்பு. இறுதியாக தவறு ஏற்பட்டது இந்த ஜனாதிபதியின் காலத்தில் தான். இதனை சீர் செய்ய வேண்டிய பொறுப்பு அவர்களிடத்தில் உள்ளது.

            இதில் நாம் பொறுப்பில்லாதவர்களாக செய்யற்பட முடியாது. இதனுடைய தாக்கம் எங்களது மக்களுக்கும் மோசமாக அமையப் போகிறது. அவ்வாறு எமது மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் நாம் செயற்பட வேண்டும். அதற்கு தேவையான

            ஆதரவை இடைக்கால அரசாங்கதற்கு கொடுக்க வேண்டுமாக இருந்தால் அப்போது அதற்கான முடிவை எடுப்போம். ஆனால், அமைச்சரவையில் நாங்கள் சேர்ந்து இயங்க வேண்டிய தேவை ஏற்பட வில்லை.

            பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ அவர்களை தமிழ் தேசியக் கூட்டமைப்பாக நான் சந்திக்கவில்லை. அவர் என்னை சந்திக்க கேட்டிருந்தார். அதனடிப்படையில் இரவு அவரை தனியாக சந்தித்து பேசியிருந்தேன். அரசியலமைப்பு தொடர்பாக பல

            பிரச்சனைகள் எழுந்துள்ளன. ஜனாதிபதிக்கு எதிரான குற்றப் பிரேரணை, நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறை ஒழிப்பு என பல விடயங்கள் பேசப்படுகின்றன. பல கட்சித் தலைவர்கள் என்னுடன் பேசுகிறார்கள். இலவசமாக சட்ட ஆலோசனை பெறுகிறார்கள்

            என நான் யோசிகின்றேன். முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொலைபேசியில் என்னுடன் பேசினார். முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா அம்மையாரும் தொலைபேசியில் காலையில பேசியிருந்தார். வேறு தலைவர்கள் பலர்

            பேசுகிறார்கள். சட்ட நிலைப்பாடு தொடர்பாகவும் அறிகிறார்கள். அரசியல் நிலையை ஸத்திரதன்மைக்கு கொண்டு வருதல் தொடர்பாக நடைபெறும் பேச்சுக்களிலும் நான்

            கலந்து கொண்டு வருகின்றேன். பிரதமர் மஹிந்த அவர்களுக்கு நான் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கான யோசனையை அரசாங்கமே கொண்டு

            வந்தால் சில விடயங்களில்
            முன்னேற முடியும் என ஆலோசனை வழங்கியுள்ளேன் எனத் தெரிவித்தார்.

              Posted in இலங்கை செய்திகள்

              பதவி விலக இருந்தார் மகிந்தாவாம் – அடித்து விடும் ஆளும் அடிமைகள்

              பதவி விலக இருந்தார் மகிந்தாவாம் – அடித்து விடும் ஆளும் அடிமைகள்

              இலங்கையில் ஆளும் அமைச்சர்கள் ஒரே நாளில் பதவிவிலகினர் ,அவ்வேளை பிரதமர்

              மகிந்தாவும் விலகிட தயராக இருந்தாராம்

              ஆனால் அவரது அந்த பதவி விலகலை இரு அமைச்சர்கள் தடுத்து விட்டதாக அவரது

              ஆளும் விசுவாச அடிமைகள்
              புது கதை ஒன்றை கட்டவிழ்த்து விட்டுள்ளனர்

              மக்களின் கோரிக்கைக்கு மதிப்புளிக்காது பதவி விலக மறுத்து, ஜனாதிபதியாக

              விளங்கிய ஒருவர் பிரதமர் ஆசனத்தில் அமர்ந்து சுகபோக வாழ்கை அனுபவித்து வரும்

              நிலையில் ,கடும் பாடு பட்டு உட்க்கார்ந்த ஆசனத்தை விட்டு போகவா போகிறார்

              என்பதை கூட புரியாது அவரது விசுவாச அடிமைகளும் ,அதன் சார்பு ஊடகங்களும் செய்திகளை கக்கிய வண்ணம் உள்ளன

              ஏதோ ஒண்ணு நடக்குது நடக்கட்டும் என சீமான் பாணியில் சொல்லிட்டு போகவேண்டியது ,தான் போங்க

                Posted in இலங்கை செய்திகள்

                மகிந்தா அலுவலகம் முற்றுகை – உக்கிரமாகும் மக்கள் போராட்டம்

                மகிந்தா அலுவலகம் முற்றுகை – உக்கிரமாகும் மக்கள் போராட்டம்

                மகிந்தா அலுவகம் தற்போது போராட்ட காரர்களினால் சுற்றிவளைக்க பட்டு

                ,உடனே பதவி விலகும் படி மக்கள் கோரிக்கை விடுத்தது கோசம் எழுப்பி வருகின்றனர்

                எங்களை வாழ விடுங்கள் சுடு காட்டுக்கு அனுப்பாதீர்கள் என்ற கோசமும் அங்கே முழங்க படுகிறது

                அழகான இலங்கையை சுரண்டி கொள்ளையடித்து ஏப்பம் விட்ட மகிந்தா

                குடும்பத்தினால் இன்று இலங்கை இந்த சீரழிவை சந்தித்துள்ளது என்பது மக்கள் பேச்சாக உள்ளது

                மக்கள் போராட்டங்களுக்கு தலை வணங்கி பதவி திறப்பதை ஆளும் இனவாத கொலைகாரர்கள் மறுத்து வருகின்றதால் ,


                மக்கள் ஆத்திரம் உற்ற நிலையில், இந்த போர் உக்கிரம் பெற்றுள்ளது

                  Posted in இலங்கை செய்திகள்

                  கோட்டாவை பதவி விலகும்படி பவுத்த பீட முக்கியஸ்தர் கோரிக்கை

                  கோட்டாவை பதவி விலகும்படி பவுத்த பீட முக்கியஸ்தர் கோரிக்கை

                  இலங்கையில் ஆளும் அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்து பறக்கும்

                  நிலையில் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து உடனே மகிந்தா ,கோட்டா பதவி விலக வேண்டும் என


                  பவுத்த பீடாதிபதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்

                  பதவி விலக மறுத்து மகிந்த கோட்டா அடம் பிடித்து வரும் நிலையில்


                  வரும் நாட்களில் மக்களின் போராட்டம் அதிகமாக இடம் பெறுமென


                  ஏதிர்பார்க்க படுவதுடன் ,மகிந்த குடும்பத்தினர் வீடுகள் சுற்றிவளைக்க படலாம் என எதிர் பார்க்க படுகிறது

                    Posted in உளவு செய்திகள்

                    புலிகளை அழித்தவர்கள்- புலிகளை தேடும் பரிதாபம்

                    புலிகளை அழித்தவர்கள்- புலிகளை தேடும் பரிதாபம்

                    இலங்கையில் தமிழ் தேசிய விடுதலைக்கு போராடிய தமிழீழ விடுதலை புலிகளைஅழித்தவர்கள் இன்று அதே எதிரியாக விளங்கிய புலிகளை தேடும் கால மாற்றம் நிகழ்ந்துள்ளது

                    அவர் தம் ஆட்சியும் ,அதிகாரமும் இலங்கையில் மீள நிலை நிறுத்த முடியா நிலைக்கு சென்றுள்ள இந்த கால கட்டத்தில் , எதிரி என பறையடித்து இனவாதம் பேசிய இதே வாய்கள் இன்று அதே எதிரிகளை தேடும் பரிதாபம் நிகழ்கிறது

                    புலிகளின் பீதியிலும் ,அரசுகள் கக்கிய இனவாதத்தில் உறைந்து கிடந்த சிங்களவர்கள் இப்பொழுதும் நாட்டில் எதிரிகளின் அச்சம் இல்லை என்ற நிலையில் உலாவி வந்தனர்


                    இது தலைகீழ் மாற்றத்தை உருவாக்கியதுடன் ஆட்சிகளை தூக்கி எறியும் நிலைக்கு வித்திட்டுள்ளது

                    சிங்கள இனவெறியுடன் அதே மக்கள் தம்மை காப்பார்கள் என எண்ணிய மகிந்த குடும்பம் ,இன்று அதே மக்களினால் எதிரியாக பார்க்க பட்டு தூக்கி வீச படும் நிலையில்

                    இப்பொழுது புலிகள் ஆயுத போரட்டத்தை உச்சரிக்க வேண்டிய தேவையும் .,சிங்கள மக்களை பயமுறுத்த வேண்டிய அவசியமும் ஆட்சியாளர்களுக்கு ஏற்பட்டுள்ளது

                    அதற்கு ஆயுத குழுக்கள் தேவை படுகிறது ,எதிர் பாரத இடத்தில எதிர் பாராத தாக்குதல்களை எதிரியின் பெயரினால் நடத்திட வேண்டிய நிலையில் கோட்டா அரசு உள்ளது

                    அதனை இப்பொழுது செய்திட முடியா நிலையில் தவிக்கிறது ,அது அவர்கள் ஆட்சிக்கு மேலும் களங்கத்தை விளைவிக்கும் ,அதனால் புதிதாக ஆட்சியில் இருப்பவர்களுக்கு பெரும் நெருக்கடியை தோற்றுவிக்க

                    குண்டு வெடிப்புக்கள்,முஸ்லீம் தீவிரவாதத்தை மீளவும் நாட்டுக்குள் திணிக்க கோட்டா விளைவார்

                    புலிகளை அழித்தவர்கள்- புலிகளை தேடும் பரிதாபம்


                    அதற்காக தனது ஆயுத வளங்களையும், கூலி குழுக்களையும் உருவாக்குவார்,நாடு மீளவும் குண்டு சத்தங்களினால் அதிரும் காலம் உருவாகும் ,

                    அதனை உருவாக்கும் என்பதே புத்தி கெட்டவர்களில் சக்தியில் இருந்து தெரிகிறது,எதிர் வரும் ஆட்சி குண்டுகளினாலும் ,பட்டினியாலும் தவிக்கும் நிலை உருவாக்கம் பெற போகிறது ,

                    இங்கு எதிர் எதிர் அரசியல் படுகொலைகள் மீள அரங்கேற போகிறது,பின்புலத்தில் ராஜபக்ஸ முகங்கள் ஒளிந்து கிடக்கும் ,புலிகளை அழித்து வீர் வசனம் பேசியவர்கள்

                    இன்று அதுவே கோழைத்தனம் என்பதை பட்டுணர்ந்து தெரிந்து கொண்டதன் பின்னர்,பாவிகளாக அழுகின்றனர்

                    புலிகள் பெயரில் புதிய தாக்குதல்களை தாமே நடத்தி ,அதனை எதிரிகளான புலிகள் தலையில் சுமத்தி விடும் நிலைக்கு கோட்டா ,ராஜபக்ஸா குடும்பம் செல்ல போகிறது

                    போரை முடித்தவர்கள் போரை ஆரம்பித்து வைக்கும் புதிய காலம் ஒன்று உருவாக்கம் பெற போகிறது

                    காத்திருந்து பாருங்கள் காட்சிகளின் அகோரத்தை .எழுதி வைத்து கொள்ளுங்கள் எரிய போகிறது இலங்கை .


                    இது பர பரப்பு அல்ல பயன் பாடுகளின் பயணங்கள் …..அரசியல் என்பது தலைக்கீழ் மாற்றங்களின் சுழற்சி !

                    எதிரி எப்பொழுதும் எதிரி தான் என்பதற்கு எதிர் காலம் எழுத போகிறது ,எதிர்த்தவர்களின் வரலாற்றை .

                    • வன்னி மைந்தன் –
                    Posted in Uncategorized

                    நாட்டை விட்டு மகிந்த சகோதரி நிருபமா தப்பி ஓட்டம்

                    நாட்டை விட்டு மகிந்த சகோதரி நிருபமா தப்பி ஓட்டம்

                    இலங்கை ஆளும் சகோதர்கள், சகோதரியான நிருபமா கடந்த இரவு பத்து

                    முப்பது மணியளவில் இலங்கையை விட்டு தப்பி ஓடியுள்ளார்,இவர் டுபாய்

                    நாட்டுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது


                    இது போலவே நாமல் மனைவி ,மற்றும் அவர் குடும்பமும் தப்பித்து சென்றது

                    இவர் ஊழல் சர்ச்சையில் சிக்கியவர் என்பது இங்கே குறிப்பிட தக்கது

                      Posted in இலங்கை செய்திகள்

                      மகிந்தா வீடு முற்றுகை -போலீஸ் இராணுவம் குவிப்பு

                      மகிந்தா வீடு முற்றுகை -போலீஸ் இராணுவம் குவிப்பு

                      இலங்கை ஆளும் பிரதமர் மகிந்த வசிக்கும் Wijerama Mawatha.வீடு மக்களினால்

                      சுற்றி வளைக்க பட்டுள்ளது


                      மகிந்தா உடனே பதவி விலக வேண்டும் என கோரி மக்கள் தொடர்

                      முழக்கத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

                      நாளுக்கு நாள் அதிகரிக்கும் மக்கள் போராட்டத்தினால் ஆளும் அரசு பெரும்

                      நெருக்கடியில் சிக்கியுள்ளது
                      மக்களுக்கு மதிப்பளித்து பதவி விலகும் நிலை விரைவில் ஏற்படும் என எதிர் பார்க்க படுகிறது

                        மேலும் 25 இலங்கை செய்திகள் படிக்க இதில் அழுத்துங்கள்

                        Posted in Uncategorized

                        போர் குற்றவாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துக ! சிங்கள மக்களிடத்தில் எழுந்துள்ள கோரிக்கை

                        போர் குற்றவாளிகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துக ! சிங்கள மக்களிடத்தில் எழுந்துள்ள கோரிக்கை

                        சிறிலங்காவின் தற்போதைய ஆட்சியாளர்களுக்கு எதிரான தென்னிலங்கை

                        மக்களின் போராட்டங்களில் ‘போர்குற்றவாளிகளை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துக’ என்ற முழக்கம் பலரது கவனத்தினை பெற்றுள்ளது.

                        தமிழினஅழிப்புக்கு பொறுப்புக்கூற சிறிலங்காவை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்த வேண்டும் என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

                        வலுவாக கூறிவருவதோடு, 2015ம் ஆண்டு 1.8 மில்லியனுக்கு மேற்பட்ட பொதுமக்கள் இதற்கான கோரிக்கையில் ஒப்பமிட்டிருந்தனர். ஐ.நா மனித

                        உரிமைச்சபை ஆணையாளர் உட்பட பல சர்வதேச வளஅறிஞர்களும் இந்நிலைப்பாட்டை எடுத்துள்ளனர்.

                        இந்நிலையில், ‘ராஜபக்ச குடும்பத்தினை சர்வதேச நீதிமன்றில் நிறுத்துக’ என்பதோடு ‘போர்குற்றவாளிகள்’ என சிறிலங்காவின் தற்போதைய

                        ஆட்சியாளர்களுக்கு எதிரான தென்னிலங்கை மக்கள் போராட்ட முழக்கமொன்று பலரது கவனத்தினை பெற்றுள்ளது.

                        ‘தமிழர்களுக்கு எதிராக சிறிலங்கா அரச கட்டமைப்பு நிகழ்த்திய இனப்படுகொலைக்கான பொறுப்புக்கூறலும், அதற்கான பரிகாரநீதியிலான

                        அரசியல் தீர்வுமே இலங்கைத்தீவுக்கான முழுமையான நிலையான அமைதியினை தரும்’ என இவ்விடயம் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின்

                        அரசியல் விவகாரங்களுக்கான அமைச்சு கருத்து வெளியிட்டுள்ளது.

                        சிறிலங்காவின் தற்போதைய அதிபராக இருக்கின்ற கோத்தபாய இராஜபக்ச, பிரதமர் மகிதந்த ராஜபக்ச உட்பட 12 அரசியல், இராணுவ தலைவர்களை

                        ‘இனப்படுகொலையாளிகளாக’ (DIRTY DOZEN – Genocidaires and War Criminals on

                        Tamils in Sri Lanka) நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னராக பட்டியலிட்டிருந்தமை இங்கு குறிப்பிடதக்கது.

                          Posted in இலங்கை செய்திகள்

                          மகிந்தா,கோட்டா பதவி விலகு உக்கிரம் பெறும் போர் – பிரதமர் இல்லாம முன்பாக இராணுவம் குவிப்பு

                          மகிந்தா,கோட்டா பதவி விலகு உக்கிரம் பெறும் போர் – பிரதமர் இல்லாம முன்பாக இராணுவம் குவிப்பு

                          இலங்கையில் ஆளும் சகோதரர்களான மகிந்தா ,கோட்டா உடனே தமது

                          அதிகாரத்தில் இருந்து விலக வேண்டும் என மக்கள் மூன்றாவது நாளாக

                          தொடர்ந்து போராட்டம் நடத்திய வண்ணம் உள்ளனர்

                          நாள் தோறும் அதிகரித்து செல்லும் இந்த போராட்டம் உச்சம் பெற்றுள்ள

                          நிலையில் தற்போது மகிந்த அதிகார காரியாலய இல்லம் முன்பாக

                          இராணுவம் குவிக்க பட்டு மூன்று அடுக்கு பாதுகாப்பு போட பட்டுள்ளது

                          கூட்டாட்சி அரசாங்கம் ஒன்றை அமைக்க வருமாறு அழைப்பு விடுத்த போதும்

                          அது பயனளிக்காத நிலையில் தற்போது


                          ஆட்சி கவிழும் நிலையில் உள்ளதால் நாட்டில் பெரும் பர பரப்பு ஏற்பட்டுள்ளது

                            Posted in இலங்கை செய்திகள்

                            தள்ளாடும் இலங்கை – தரை மட்டமான பொருளாதரம்

                            தள்ளாடும் இலங்கை – தரை மட்டமான பொருளாதரம்

                            இலங்கையில் போரைவென்று தனி சிங்கள மக்களின் வாக்குக்கள் மூலம் நாட்டை

                            ஆட்சி புரிய அரியணையில் ஏறிய மகிந்த,குடும்பத்திற்கு தற்போது பெரும் நெருக்கடி நிலை தோன்றியுள்ளது

                            உல்லாச பயணிகளின் வருகையை மைய படுத்தி நாட்டை ஒட்டி சென்றவர்களுக்கு கொரோனா நோயின் காரணமாக அந்த மக்கள் வருகை வீழ்ச்சியடைந்தது

                            அதனை மையப்படுத்தி ஆரம்பிக்க்க பட்ட பல வேலைத்திட்டங்களும் கைவிட பட்டன ,

                            மிருகக்காட்சி சாலைகள் முதல் உணவகங்கள் ,கொட்டல்கள் என்பன மக்கள் இன்றி வெறித்து காணப்பட்டன

                            இதனால் நாடு பெரும் பின்னடவை சந்தித்தது ,பணத்தட்டுப்பாட்டை நிவர்தி செய்திட முடியாத நிலையில் இலங்கை திணறி வருகிறது

                            இவ்வேளை இதனை சீர் செய்திட விலைவாசிகள் அதிகரிக்க பட்டன ,அன்றாட கூலி மக்கள் முதல் செல்வந்தர்கள் வரை கதி கலங்கி போயுள்ளனர்

                            கோட்டாவுக்கு ஏன் வாக்கு போட்டோம் என்கின்ற நிலைக்கு மக்கள் தற்போது சிந்திக்க ஆரம்பித்து போராட்டங்களை நடத்த முனைகின்றனர்

                            இதுவே நாளடைவில் பெரும் ரணகளமாக ஆளும் ஆட்சிக்கு மக்கள் எதிர்ப்பு வலுக்கும் என அடித்து கூறலாம்

                            இலங்கையில் தலைகீழ் மாற்றம் ஒன்று விரைவில் ஏற்பட போகிறது

                            • வன்னி மைந்தன் –
                            Posted in இலங்கை செய்திகள்

                            இலங்கைப் பெண்கள் சமூகப் பொறுப்புடன் முன்னேறி வருகின்றனர்

                            இலங்கைப் பெண்கள் சமூகப் பொறுப்புடன் முன்னேறி வருகின்றனர்

                            வீரப் பெண் தலைமுறையின் வரலாற்றை பின்பற்றி இலங்கைப் பெண்கள் இன்று சமூகப் பொறுப்புடன் தொடர்ந்து முன்னேறி வருகின்றனர் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார்.

                            மகளிர் தினத்தை முன்னிட்டு பிரதமர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி பின்வருமாறு:

                            வாழ்த்துச் செய்தி – 2022 மார்ச் 08

                            ஒரு தாயாக, மகளாக, சகோதரியாக மற்றும் பாட்டியாக ஒட்டுமொத்த சமுதாயத்தையும் வழிநடத்தும் துணிச்சலான பெண்களின் அர்ப்பணிப்பை

                            நினைவுகூரும் சர்வதேச மகளிர் தினத்தில் உங்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை பகிர்ந்துக் கொள்வதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

                            ஒரு நிலையான சமுதாயத்திற்காக தன் வாழ்நாள் முழுவதும் கருணை, ஆளுமை ஆகியவற்றைப் பகிரும் ஒரு பெண்ணின் பெருமையை ஒரு நாளுக்கு மட்டும் வரையறுக்க முடியாது.

                            மனித இனத்தை மாற்றிய அனைத்து தீர்க்கதரிசிகளின் பிறப்பு முதல், மனித இருப்பை அடையும் வரை அனைத்திற்கும் பெண்தான் காரணம் என்பது இரகசியமல்ல.

                            இதனால்தான், பிரபல ரஷ்ய எழுத்தாளர் மாக்சிம் கோர்க்கி அவர்கள், சூரிய ஒளி மற்றும் தாய்ப்பாலில் இருந்தே உலகம் படைக்கப்பட்டது என்று குறிப்பிட்டிருக்கிறார்.

                            வீரப் பெண் தலைமுறையின் வரலாற்றை பின்பற்றி இலங்கைப் பெண்கள் இன்று சமூகப் பொறுப்புடன் தொடர்ந்து முன்னேறி வருகின்றனர்.

                            இந்த தைரியமான பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காக நமது அரசாங்கம் தொடர்ந்து பணியாற்றும் என்று நான் நம்பிக்கையுடன் தெரிவிக்கிறேன்.

                            “நிலையான எதிர்காலத்திற்கு இன்று பாலின சமத்துவம்” என்ற சர்வதேச எண்ணக்கருவின் கீழ் கொண்டாடப்படும் இம்முறை சர்வதேச மகளிர் தினத்தில்

                            உங்களுக்கு எதிரான வன்முறைகளும் பாகுபாடுகளும் இலங்கை சமூகத்திலிருந்து துடைத்தழிக்கப்படும் தினத்தை உருவாக்குவதே எமது எதிர்பார்ப்பாகும்.

                            “அவள் ஒரு நாடு, ஒரு தேசம், ஒரு உலகம்” என்ற தொனிப்பொருளில் கொண்டாடப்படும் சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டத்தின் ஊடாக நாட்டின் உயிர்நாடியாக விளங்கும் பெண்களின் பங்கு சரியான முறையில் பாராட்டப்படும் என நம்புகிறேன்.

                            கொவிட் தொற்றுநோய் நிலைமைக்கு மத்தியில் ஏற்பட்ட பல்வேறு சிரமங்களை சமாளிப்பதற்கு தொலைநோக்கு சிந்தனையுடன், சிக்கனமாகவும் பொறுமையாகவும்

                            செயற்படும் பெண்கள் நாட்டில் காணப்படும் சவால்களை வெற்றி கொள்வதற்கு பெற்றுக் கொடுக்கும் சிறந்த பங்களிப்பு நம் அனைவருக்குமான தைரியமாகும்.

                            நீங்கள் “அவளுக்கு” பெருமை சேர்ப்பதற்கு இருமுறை சிந்திக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

                            மஹிந்த ராஜபக்க்ஷ

                            Posted in இலங்கை செய்திகள்

                            டுபாய் பறக்கும் மகிந்தா

                            டுபாய் பறக்கும் மகிந்தா

                            எதிர்வரும் இரண்டாம் திகதி இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்ஸ்சா டுபாய் செல்லவுள்ளார் ,


                            அங்கு செல்லும் இவர் இருநாடுகளின் பொருளாதார அபிவிருத்தி தொடர்பில் பேசுவார்

                            எனதெரிவிக்க படுகிறது ,கொள்ளையடித்த பணத்தில் பல முதலீடுகள் டுபாயில் மகிந்த

                            வைத்திருப்பதாக முன்னர் செய்திகள் வெளியாகி இருந்தமை இங்கே குறிப்பிட தக்கது

                            Posted in இலங்கை செய்திகள்

                            ஹிட்லரை போல மகிந்தாவும் சாவார் – ரஜனி

                            ஹிட்லரை போல மகிந்தாவும் சாவார் – ரஜனி

                            தீபாவளி தினத்தன்று ரஜனி நடித்த அண்ணாத்த திரைப்படம் வெளியாகியுள்ளது
                            இதில் ரஜனி அரசியல் தலைவர்களை இலக்கு வைத்து பேசுவது வழமை


                            அதில் ஹிட்லர் ,முசோலின் ,இடிஅமீன் போல நீயும் சாவாய் என்கிறார் ,அது இலங்கையில் பெரும் தமிழ் இனப்படுகொலைகளை நடத்திய மகிந்தாவுக்கு தெரிவிக்க பட்ட சொல்லாக உள்ளது

                            இதே ரஜனி இலங்கை சென்று மகிந்தாவுடன் குலாவி வந்தமை இங்கே குறிப்பிட தக்கது

                              Posted in இலங்கை செய்திகள்

                              ஆசிரியர் சம்பளத்தை அதிகரிக்க மகிந்தா இணக்கம்

                              ஆசிரியர் சம்பளத்தை அதிகரிக்க மகிந்தா இணக்கம்

                              ஆசிரியர் தொழிற்சங்கங்கள் மேற்கொண்டுவரும் போராட்டத்திற்கு தீர்வாக இரண்டு கட்டங்களில் கீழ் சம்பளத்தை அதிகரிக்க பிரதமர் மஹிந்த ராஜபக்ச இணக்கம் தெரிவித்துள்ளார்.

                              சம்பள முரண்பாட்டை நீக்குமாறு கோரி ஆசிரியர் மற்றும் அதிபர்களின் தொழிற்சங்கங்கள் 93 நாட்களாக தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூலம் முதலாம் கட்ட சம்பளத்தை அதிகரிக்க முடியும். அடுத்த இரண்டு

                              பகுதிகளை 2023 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தின் மூலம் வழங்க பிரதமர் இணக்கம் தெரிவித்துள்ளார். ஆசிரியர் மற்றும் அதிபர்கள் சங்கங்களுக்கும் பிரதமருக்கும் இடையிலான ஒரு

                              சந்திப்பு நேற்று (12) அலரி மாளிகையில் இடம்பெற்றது. ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் சம்பள பிரச்சினை தொடர்பில் அரசாங்கம் உணர்வுபூர்வமாக செயல்படுவதாக பிரதமர் அங்கு குறிப்பிட்டார்.

                              பிள்ளைகளின் கல்வி நடவடிக்கைகளை தடையின்றி முன்னெடுத்துச் செல்ல வேண்டிய தேவையின் அடிப்படையில் அரசாங்கம் இந்த தீர்வை வழங்கி இருப்பதாக அமைச்சர் தினேஷ் குணவர்தன அங்கு குறிப்பிட்டார்.

                              இதேவேளை முன்னெடுக்கப்பட்டுள்ள பணிப்பகிஷ்கரிப்பு மற்றும் தொழிற்சங்க நடவடிக்கைகளின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் இன்றைய (13) தினம் இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படும் என இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் தெரிவித்துள்ளது.