Tag: மகிந்தா
மகிந்தா தலைமையில் ஆசிரியர்கள் அதிபர்கள் சம்பள போராட்டம் குறித்த பேச்சு
மகிந்தா தலைமையில் ஆசிரியர்கள் அதிபர்கள் சம்பள போராட்டம் குறித்த பேச்சு
ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் முன்னெடுத்துவரும் போராட்டம் தொடர்பில் பிரதமர் தலைமையில் இன்று நண்பகல் (12 மணிக்கு) இடம்பெறும் பேச்சுவார்த்தையில் சுமுகமான தீர்வு எட்டப்படும் என்று அமைச்சரவை பேச்சாளரும் வெகுஜன ஊடக அமைச்சருமான டலஸ் அழகப்பெரும சற்று முன்னர் நம்பிக்கை வெளியிட்டார்.
ஆசிரியர் மற்றும் அதிபர்களின் சம்பள முரண்பாடு தொடர்பாக கடந்த 90 நாட்களாக தொடர்ந்துவரும் தொழிற்சங்க போராட்டம் குறித்து இன்று (12)நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியராளர்களுடனான சந்திப்பின்போதே அமைச்சரவை பேச்சாளர் டலஸ் அழகப்பெரும இவ்வாறு நம்பிக்கை வெளியிட்டார்.
இன்று எட்டப்படும் சுமுகமான தீர்வை அடுத்து மீண்டும் பாடசாலைகளை ஆரம்பிப்பதில் எந்தவித தடையும் இருக்காது என்றும் அமைச்சர் கூறினார்.
யாழ்ப்பாணத்தின் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு- மகிந்தா முழக்கம்
யாழ்ப்பாணத்தின் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு- மகிந்தா முழக்கம்
நயினாதீவு நீர் சுத்திகரிப்பு நிலையத்தை மக்கள் பாவனைக்காக கையளித்த கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள், யாழ்ப்பாணத்தில் இதுவரை காணப்பட்ட குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் யாழ். நகர நீர் குழாய் அமைப்பு மற்றும் தாளையடி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் ஆகியவற்றின் நிர்மாணப் பணிகளை நேற்று (06) முற்பகல் ஆரம்பித்து வைத்தார்.
நயினாதீவில் இடம்பெற்ற நிகழ்வில் அலரி மாளிpகையில் இருந்து நேரடியாக கலந்து கொண்ட கௌரவ பிரதமர், மெய்நிகர் தொழில்நுட்பம் ஊடாக தாளையடி கடல்நீர் சுத்திகரிப்பு நிலைய நிர்மாணப் பணிகள் மற்றும் யாழ் நகர நீர் வழங்கலுக்கான நீர் குழாய் அமைக்கும் நடவடிக்கை என்பவற்றை ஆரம்பித்து வைத்தார்.
யாழ்ப்பாணம் – கிளிநொச்சி நீர் வழங்கல் திட்டத்தின் ஊடாக 186 கிராம அலுவலர் பிரிவுகளுக்கு பாதுகாப்பான குழாய் நீரை வழங்குவதற்கு எதிர்பார்ப்பதுடன் மத்திய அரசாங்கத்தின் நிதி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியின் கீழ் இத்திட்டங்கள் செயற்படுத்தப்படும்.
தாளையடி கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் ஊடாக உயர் தொழில்நுட்ப நீர் சுத்திகரிப்பு தொழில்நுட்பத்துடன் கடல் நீரை சுத்தமான குடிநீராக மாற்றுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அத்திட்டம் மற்றும் யாழ் நகர நீர் வழங்கல் திட்டத்தின் பாதுகாப்பான நீர் குழாய்களை பொருத்துவதன் மூலம் சுமார் மூன்று இலட்சம் மக்கள் நன்மையடைவதுடன் அத்திட்டங்களை 2023ஆம் ஆண்டளவில் நிறைவுசெய்யஎதிர்பார்க்கப்படுகிறது.1இப்புதிய வேலைத்திட்டத்தின் மூலம் யாழ்ப்பாணம் நகரம் மற்றும் அதனை அண்மித்து வாழும் சுமார் பன்னிரெண்டு இலட்சம் மக்களுக்கு குழாய் மூலமான பாதுகாப்பான நீரை பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும் என்பது விசேட அம்சமாகும்.
மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்ட நயினாதீவு கடல் நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் ஊடாக நயினாதீவு, அனலைதீவு, எழுவைதீவு பகுதிகளுக்கான நீர் விநியோகம் முறைப்படுத்தப்படுவதுடன் இதன்மூலம் சுமார் 5000 குடும்பங்கள் நேரடியாக நன்மையடைவர்.
ஆசிய அபிவிருத்தி வங்கியின் பணிப்பாளர் நாயகம் கென்ச்சி யொகுஹாமா அவர்கள் ஸூம் தொழில்நுட்பம் ஊடாக இந்நிகழ்வில் கலந்துக் கொண்டு இத்திட்டத்திற்கு வாழ்த்து தெரிவித்தார்.
நயினாதீவு விகாராதிபதி வணக்கத்திற்குரிய நவந்தகல பபுமகித்திதிஸ்ஸ தேரர், நயினாதீவு அம்மன் ஆலய பிரதான குருக்கள் சாமதேவ குருக்கள் உள்ளிட்ட சமய தலைவர்கள் மற்றும் யாழ். மக்கள் காணொளி தொழில்நுட்பம் ஊடாக அதிமேதகு ஜனாதிபதி, கௌரவ பிரதமர் உள்;ளிட்ட அரசாங்கத்திற்கு இத்திட்டம் ஊடாக கிடைக்கும் நன்மை குறித்து தங்களது நன்றிகளை தெரிவித்தனர்.
வடக்கு மாகாணத்தில் தற்போது காணப்படும் 9.6 சதவீதமான பாதுகாப்பான நீர் குழாய் அமைப்பை 2025ஆம் ஆண்டளவில் 56.9 சதவீதமாக உயர்த்துவதற்கு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை திட்டமிட்டுள்ளது.
நீர் வழங்கல் அமைச்சர் கௌரவ வாசுதேவ நாணாயக்கார அவர்கள்,
‘எவரையும் தோற்கடிப்பது அன்றி யுத்தத்தை நிறைவு செய்வதே கௌரவ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் அன்றைய எதிர்பார்ப்பாக காணப்பட்டது. எவ்வளவு செலவானாலும் யுத்தத்தினால் இழந்த தேவைகளை அவர்களுக்கு பெற்றுக்கொடுக்குமாறு கௌரவ பிரதமர் அவர்கள் எமக்கு தொடர்ந்து அறிவுறுத்தினார். அதிகம் செலவாகும் என அமைச்சரவையில் குறிப்பிட்ட போது எவ்வளவு செலவானாலும் இந்த நீர் வழங்கல் திட்டத்தை நாம் அமைக்க வேண்டும் என கௌரவ பிரதமர் அவர்கள் கூறினார். இவை அனைத்தும் வடக்கு மக்களுக்காகவே ஆகும். இந்த பாய்ந்தோடும் நீருடன் கௌரவ பிரதமரின் இதயத்தின் கருணையும், நல்லிணக்கமும் பாய்ந்தோடுகிறது என கூற வேண்டும்.
நீர் வழங்கல் அமைச்சர் கௌரவ வாசுதேவ நாணாயக்கார, கடற்றொழில் அமைச்சர் கௌரவ டக்ளஸ் தேவானந்தா, இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் எரிக் லவேர்து, பிரதமரின் செயலாளர் காமினி செனரத், நீர் வழங்கல் அமைச்சின் செயலாளர் கலாநிதி பிரியத் பந்து விக்ரம, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் தலைவர் திரு.நிசாந்த ரணதுங்க உள்ளிட்ட பிரதிநிதிகள் அலரி மாளிகையில் இருந்து காணொளி தொழில்நுட்பம் ஊடாக நிகழ்வில் கலந்து கொண்டனர்.
நயினாதீவு நீர் சுத்திகரிப்பு நிலைய திறப்பு விழாவில் கிராமிய மற்றும் பிரதேச குடிநீர் வழங்கல் கருத்திட்டங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சனத் நிசாந்த, யாழ். மாவட்ட அபிவிருத்தி குழுவின் இணை தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அங்கஜன் இராமநாதன், வட மாகாண ஆளுநர் பீ.எஸ்.எம்.சார்ள்ஸ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
மகிந்தா -இந்தியாவுக்கு இடையில் பேச்சு
மகிந்தா -இந்தியாவுக்கு இடையில் பேச்சு
இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ்வர்தன் ஷிரிங்லா நான்கு நாள் அரசுமுறை பயணமாக இலங்கை சென்றுள்ளார்.
இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சேவை சந்தித்தார் இந்திய வெளியுறவு செயலாளர்
பிரதமர் மகிந்த ராஜபக்சேவுடன் சந்திப்பு
இலங்கை சென்றுள்ள இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ்வர்தன், கொழும்பில் பிரதமர் மகிந்த ராஜபக்சேவை நேற்று சந்தித்துப் பேசினார்.
இதுதொடர்பாக ஹர்ஷ்வர்தன் கூறுகையில், இந்தியாவின் நெருங்கிய நண்பரான இலங்கை பிரதமர் ராஜபக்சேவை சந்தித்துப் பேசினேன்.
இந்த பேச்சு இருநாடுகளின் பரஸ்பர நல்லுறவுக்கு வலு சேர்க்கும் வகையில் பயனுள்ளதாக அமைந்தது. தொடர்ந்து, இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவையும் சந்திக்க உள்ளேன் என தெரிவித்தார்.
இதையடுத்து, தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு மாகாணம் பலாலிக்கு சென்ற ஹர்ஷ்வர்தன், அங்கு இந்தியாவின் உதவியுடன் கட்டப்பட்டு வரும் விமான நிலையப் பணிகளைப் பார்வையிட்டார்.
இத்தாலி செல்லும் மகிந்தா – போராட்டம் நடத்த தமிழர்கள் முடிவு
இத்தாலி செல்லும் மகிந்தா – போராட்டம் நடத்த தமிழர்கள் முடிவு
பிரதமர் ; மஹிந்த ராஜபக்ச மற்றும் வெளிநாட்டு உறவுகள் அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல்.பீரிஸ் ஆகியோர் இத்தாலிக்கு விஜயம் செய்யவிருப்பதாக அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான கலாநிதி ரமேஷ் பதிரண தெரிவித்தார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மகாநாட்டில், ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கையிலேயே பிரதமர் மற்றும் வெளிநாட்டு உறவுகள் அமைச்சரின் இந்த வியத்தை குறிப்பிட்டார்.
விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அலுகமகே ,அரசாங்க அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் மொஹான் சமரநாயக்க ஆகியோர் கலந்துகொண்ட இந்த மகாநாட்டில் ,இலங்கையில்
இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் குறித்த விசாரணைகள் தொடர்பாக புனித பரிசுத்த பாப்பரசரிடம் ,பிரதமரும் வெளிநாட்டு உறவுகள் அமைச்சரும் தெளிவுபடுத்த இருப்பதாக கூறப்படுவதாக ஊடகவியலாளர் கேட்ட கேள்விக்கு அமைச்சர் பதிலளிக்கையில்
,இருதரப்பினருக்கிகடையிலான நல்லுறவை வலுப்படுத்துவதற்காகவே இந்த விஜயம் இடம்பெறுகிறது இந்த விஜயத்தின் போது இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தினத்
தாக்குதல்கள் தொடர்பான தேவையான விடங்கள் அதன் தற்போதைய நிலைமைகள் குறித்து பரிசுத்த பாப்பரசரிடம் அவசியம் தெளிவுபடுத்துவார்கள் என்று தெரிவித்தார்.
மகிந்தாவுக்கு கொரனோ
மகிந்தாவுக்கு கொரனோ
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நோய் நிலமை காரணமாக சிகிச்சை பெற்று வருவதாக
சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ள புகைப்படம் மற்றும் தகவலில் எவ்வித உண்மையும் இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.
அவர் வழமை போன்று தனது கடமைகளை செய்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
100 நகரங்களை ஒரே தடவையில் அபிவிருத்தி – மகிந்தா உத்தரவு
100 நகரங்களை ஒரே தடவையில் அபிவிருத்தி – மகிந்தா உத்தரவு
இலங்கையில் இதுவரை அபிவிருத்தி செய்யப்படாத நூறு நகரங்களை ஒரே தடவையில் அபிவிருத்தி செய்யும் நோக்குடன் புதிய உத்தரவுகளை பிரதமர் மகிந்த பிறப்பித்துள்ளார்
இவ்வாறு செய்வதன் ஊடக பல மில்லியன் பணத்தை கொள்ளையடிக்கலாம் என்பது மகிந்த கூட்டத்தின் கனவு
எனினும் உரிய முறையில் இந்த நகரங்கள் அபிவிருத்தி செய்ய படுமா என்பதே இன்றைய கேள்வியாக உள்ளது
மகிந்தா,கோத்தபாயாவுக்கு கொரனோ பரப்பிய பாகிஸ்தான் அதிபர் இம்ரான்கான்
மகிந்தா,கோத்தபாயாவுக்கு கொரனோ பரப்பிய பாகிஸ்தான் அதிபர் இம்ரான்கான்
பாகிஸ்தான் நாட்டின் அதிபர் இம்ரான் கானுக்கு கொரனோ நோயானது தொற்றியுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது
இவர் இறுதியாக இலங்கை பயணித்து கோட்டபாய மற்றும் மகிந்தாவுடன் நேரடியாக சந்தித்து பேசிய இருந்தார்
இவருக்கு தற்போது இந்த நோயானது கண்டு பிடிக்க பட்டுள்ளது
இலங்கை அதிபர் கோட்டபாயத ,மாற்று மகிந்தாவுக்கும் கொரனோ நோயானது தொற்றி இருக்கலாம் என நம்ப படுகிறது
தமிழர்களை கொன்று குவித்த இரு சகோதர்களும், இந்த கொரானாவுடன் செத்து மடிவார்கள் என தமிழர் தேசம் நம்புகிறது
அரசன் அன்று அறுப்பான் -தெய்வம் நின்று கொல்லும் என்பது இது தான் போலும்
கோட்டா,மகிந்தா ,உள்ளிட்ட இராணுவ தளபதிகளுக்கு வெளிநாடு செல்ல தடை
கோட்டா,மகிந்தா ,உள்ளிட்ட இராணுவ தளபதிகளுக்கு வெளிநாடு செல்ல தடை
இலங்கையில் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டு மக்களை கொன்று குவித்த ,குற்ற சாட்டுக்களுடன்
தொடர்புடையவர்களை ஐரோப்பா மற்றும் பிரிட்டனுக்குள் நுழைவதற்கான பயண தடையினை விதிக்கும் நடவடிக்கையில் பிரிட்டன் தீவிரமாக ஈடுபட்டுள்ளது
அவ்வாறு எனின் ,கோட்டா,மகிந்தா,மற்றும் சவேந்திர சில்வா உள்ளிட்ட முக்கிய பத்து பேருக்கு எதிராக இந்த பயண தடைகள் விதிக்க படலாம் என எதிர் பார்க்க படுகிறது
அவ்வாறு விதிக்க பட்டால் இலங்கைக்கு பெரும் பின்னடைவை கொடுக்கும் என்பது திண்ணம்
வெளிநாடு பறக்கும் மகிந்தா
இந்திய விமானப் படைத் தளபதி -மகிந்தா சந்திப்பு
இந்திய விமானப் படைத் தளபதி -மகிந்தா சந்திப்பு
இந்திய விமானப் படைத் தளபதி எயார் ஷீவ் மார்ஷல் ராக்கேஸ் குமார்சிங்க பாதவுரியா பிரதம மந்திரி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்துள்ளார்.
இலங்கை விமானப் படையின் 70 ஆவது ஆண்டு நிறைவுக் கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக இந்திய விமானப் படைத் தளபதி இலங்கை வந்துள்ளார்.
இந்த விஜயத்தில் அவர் பிரதமரைச் சந்தித்திருக்கின்றார். இதன்போது இலங்கைக்கு தொடர்ந்து பாதுகாப்பு உதவிகளை
வழங்கப்போவதாக இந்திய விமானப் படைத் தளபதி உறுதியளித்துள்ளார்.
இலங்கையும் இந்தியாவும் நீண்ட கால பாதுகாப்பு ஒத்துழைப்பைப் பேணி வருகின்றன. இது சமுத்திரவியல் பாதுகாப்பு,
போதைப்பொருள் கடத்தலை முறியடித்தல் போன்ற பல்துறை சார்ந்ததாக விஸ்தாரம் பெற்றுள்ளது. இந்த ஒத்துழைப்பை மேலும்
விரிவுபடுத்தலாம் என இந்திய விமானப் படைத் தளபதி தெரிவித்துள்ளார்
அபிவிருத்தி திட்டங்கள் மீள ஆரம்பிப்பதற்கு மகிந்தா உத்தரவு
கடந்த அரசாங்க காலப்பகுதியில் கைவிடப்பட்ட நகர அபிவிருத்தி திட்டங்கள் பலவற்றை மீள ஆரம்பிப்பதற்கு நிதி மற்றும் நகர அபிவிருத்தி, வீடமைப்பு அமைச்சர் என்ற வகையில் கௌரவ
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் நேற்று (2021.03.01) முற்பகல் அறிவுறுத்தியுள்ளார்.
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் திட்டங்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்து நிதி அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே கௌரவ பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அதன்போது நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழ் செயற்படுத்தப்படவிருந்த மற்றும் இதுவரை ஆரம்பிக்கப்பட்டுள்ள அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்றம் குறித்து கௌரவ பிரதமர் மதிப்பாய்வு செய்தார்.
பல அபிவிருத்தி திட்டங்கள் கடந்த அரசாங்கத்தின் ஐந்து ஆண்டு காலப்பகுதியில் கைவிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கௌரவ பிரதமருக்கு சுட்டிக்காட்டினர்.
அவ்வாறு செயற்படுத்தப்படாது கைவிடப்பட்டுள்ள திட்டங்களை மீள ஆரம்பிக்குமாறு கௌரவ பிரதமர் அறிவுறுத்தினார்.
நகர அபிவிருத்தி, கரையோரப் பாதுகாப்பு, கழிவுப் பொருள் அகற்றுகை மற்றும் சமூக தூய்மைப்படுத்தல் நடவடிக்கைகள் தொடர்பிலும் இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.
அனைத்து திட்டங்களுக்கும் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈட்டும் வருமானத்திற்கு மேலதிகமாக பொது திரைசேறியிலிருந்து தேவையான நிதியை ஒதுக்குமாறும் கௌரவ பிரதமர் தெரிவித்தார்.
குறித்த கலந்துரையாடலில் நிதி, மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில்முயற்சி மறுசீரமைப்பு இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், பிரதமர் அலுவலக ஊழியர்களின் பிரதானி திரு.யோஷித
ராஜபக்ஷ, நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் செயலாளர் சிறிநிமல் பெரேரா, நகர அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர்
யூ.டீ.ஹர்ஷான் த சில்வா, இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் எம்.ஆர்.சொய்சா
மற்றும் கொழும்பு மாநகர சபை ஆணையாளர் ரொஷானி திசாநாயக்க உள்ளிட்ட அரச அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்
சீனாவின் ஆதிக்கத்தில் இலங்கை – சந்திரிக்கா குமுறல்
இலங்கையில் சீனாவின் அத்துமீறல் – சந்திரிக்கா குமுறல் – கொதிக்கும் இந்தியா ஆட்சி மாற்றம் ஏற்படலாம்
இலங்கையில் சீனா
இலங்கை தற்பொழுது சீனாவின் ஆதிக்கம் நிறைந்த காலனித்துவ நாடாக மாற்றம் பெற்றுள்ளது என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்க குமார தூங்க தெரிவித்துள்ளார்
மகிந்த ஆட்சி
மகிந்த ராஜபக்ச இலங்கையின் ஜனாதிபதியாக தெரிவானதன் பின்னர் சீனாவின் முழு ஆதிக்கத்தில் இலங்கை சென்றடைந்ததது
,புலிகள் அழிப்பின் ஊடாக தன்னை இலங்கையின் கீரோவாக காண்பித்த
அவர் இப்பொழுது இலங்கையை சீனாவுக்கு அடகுவைத்து வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்
பொதுஜன ஐக்கிய முன்னணி என்ற கட்சியே இலங்கையில்
இல்லாது அழித்தார் மகிந்தா ராஜபக்சே என்பதும் இவரது கவலையாக உள்ளது
மகிந்தா ,கோட்டா -55 இராணுவ தளபதிகளுக்கு எப்போது தூக்கு ..?
மகிந்தா ,கோட்டா -55 இராணுவ தளபதிகளுக்கு எப்போது தூக்கு ..?
இலங்கையில் இரண்டாயிரத்து ஒன்பதாம் ஆண்டு சிங்கள ஆளும் பயங்கரவாத அரசால் ஒருலட்சம் தமிழர்கள் கொன்று குவிக்க பட்டு
அவர்களின் பூர்வீக வாழ்விடங்கள் அபகரிக்க பட்டு ஒன்றுபட்ட இலங்கையின் சர்வாதிகார ஆட்சி நிறுவ பட்டது ,அதன் பின்னர்
தமிழர் நாய்களை விட மிக கேவலமாக அந்த மண்ணில் நடத்த பட்டு வருகின்றனர் ,சுதந்திரம் பறிக்க பட்டு வாழ்வதற்கு அரு
கதையற்ற வனவாசிகள் போல இன்று தமது வாழ்வை கழித்து வருகின்றன
உலகில் நீதிகள் பேசும் ஐநா சபையும் ,மனித உரிமை தொடர்பாக முழக்கமிடும் ஐநா மனித உரிமை பேரவையும் பன்னிரெண்டு
ஆண்டுகள் கழிந்த நிலையிலும் இலங்கையை ஆளும் சகோதர்களுக்கு எவ்வித மரண தண்டனையும் வழங்க படவில்லை
,இலங்கையில் நடத்த பட்ட தமிழ் இனப்படுகொலைக்கு எதுவித தீர்வும் வழங்க படவில்லை
அழிக்க பட்ட தமிழ் இனம் தனது வரலாற்று வடுக்களை மறந்து வாழும் நிலைக்கு போதைவஸ்து ,பாலியல் ,மாற்றும் உல்லாச
விடயங்களை தமிழர் தாய் மண்ணில் கட்டவிழ்த்து இளையவர்கள் சிந்தனையை திசை திருப்பி தாம் புனிதர்கள் போன்ற நிலையை சிங்கள இனவழிப்பு இனவாதிகள் காண்பித்து வருகின்றனர்
46 ஆவது மனித உரிமை கூட்ட தொடரில் இலங்கைக்கு எவ்வித காலக்கெடுவும் விதிக்காது சர்வதேச நீதி ,மன்றில் நிறுத்தி
தண்டித்து உலக சமாதானதாத்தையும் ,நீதியையும் நிலை நாட்ட முயல வேண்டும் என்பதே தமிழர்களின் எதிர்பார்ப்பாகும் ,ஆனால் அதனை இந்த மேற்குலகம் புரியுமா என்பதே கேள்வியாக உள்ளது
பிரிட்டன் ஆதிக்கத்தில் இலங்கை இருந்த பொழுது தமிழர்கள் அடக்க பட்டனர் ,அதன் பின்னர் இலங்கையை சிங்களவர்களிடம்
தாரைவார்த்து கொடுத்த பின்னர் அதே சிங்களவர்களினால் தமிழர்கள் அழிக்க படுகின்றனர் ,இதற்கு வழிவகுத்த பிரிட்டன் அரசு
தமிழர்களின் உரிமைக்கு தீர்வினை பெற்று தரவேண்டும் என்பதே பிரிட்டன் வாழ் தமிழர்கள் கோரிக்கையாக உள்ளது
தமிழர்களின் சுதந்திர வாழ்வை நிலைநாட்டடி அவர் தம் தேசத்தில் நின்மதியாக வாழும் வசதி வாய்ப்பை இந்த வல்லாதிக்க ,ஆண்ட
அரசுகள் செய்து தருமா ..? மகிந்த கோட்டா மற்றும் ஐம்பத்தி ஐந்து இராணுவ தளபதிகள் கூண்டில் ஏற்ற பட்டு மரண
தண்டனை வழங்க படுமா ..? இந்த கொலையாளிகள் சுதந்திரமாக உலவிட இந்த சர்வதே நீதிமன்றங்கள் விட்டது ஏன் ..?
இஸ்ரேல் சர்வதேச நீதிமன்றில் நிறுத்த படகு போல இலங்கையும் நிறுத்தப்படுமா ..?கேள்வியோடே தமிழர்கள் ஆயுளும் கடந்து செல்கிறது
இறந்த லட்சம் தமிழர்கள் கணீர் துளிகளுக்கு என்று தீர்வு ..?
- வன்னி மைந்தன் –
இந்தியா எங்கள் நண்பன் – மகிந்தா குத்துக்கரணம்
இந்தியா எங்கள் நண்பன் – மகிந்தா குத்துக்கரணம்
இந்தியா எங்கள் உற்ற நண்பன் என ஆளும் இலங்கை பிரதமர் மகிந்த
தெரிவித்துள்ளார் ,சீனாவுடன் மிக நெருக்கமாக உலாவி வரும் இலங்கையின்
இந்த அரசியல் பந்து வீச்சில் சிக்கி இந்தியா மண்டையை பிய்த்து கொண்டுள்ள
நிலையில் ,தற்போது மோடியின் நெஞ்சுக்கு பால்வாக்கும் நிலைக்கு மகிந்த
சென்றுள்ளது மிக பெரும் ஆப்பு இந்தியாவுக்கு வைக்க இவர்கள் திட்டமிட்டுள்ளதாக குசும்பர்கள் பேசி வருகின்றனர்
சர்வதேச நீதிமன்றில் கோட்டா ,மகிந்தா – செல்லும் அபாயம் நெருக்கம்
சர்வதேச நீதிமன்றில் கோட்டா ,மகிந்தா – செல்லும் அபாயம் நெருக்கம்
இலங்கையில் இறுதி போரின் பொழுது லட்ச கணக்கான தமிழர்களை கொன்று குவித்து பெரும் இன அழிப்பை நடத்தியது
ஆளும் இலங்கை அரசு ,ஆனால் பத்து ஆண்டுகள் கழிந்த
நிலையில் பாதிக்க பட்ட மக்களுக்கான எவ்வித விடியலும் கிடைக்க பெறவில்லை
உள்நாட்டு விசாரணை பொறிமுறை மூலம் இராணுவத்தினர் விசாரிக்க பட்டு தண்டிக்க படுவதுடன் பாதிக்க பட்ட தமிழ்
மக்களுக்கு உரிய தீர்வினை வழங்க வேண்டும் என ஐநா கேட்டு கொண்டது
ஆனால் ஆளும் சகோதர ஆட்சியில் எதுவும் செய்ய படவில்லை ,இதனை அடுத்து நெருங்கி வரும் மனித உரிமை பேரவையில் இந்த
விடயங்கள் மீள தூசி தட்ட பட்டு இலங்கை அரசு பெரும் நெருக்கடியில் சிக்க வைக்கும் நிலையை ஏற்படுத்த உள்ளது
எதிர்வரும் மனித உரிமை கூட்ட தொடரில் அமெரிக்கா மூலம் இலங்கைக்கு பெரும் நெருக்கடியை தருவித்து சர்வதேச
நீதிமன்றுக்கு இலங்கை அழைத்து செல்ல படும் அபாய விடயங்கள் நகர்த்த படும் என முக்கிய பகுதிகள் ஊடாக கசிவுகள் வெளியாகியுள்ளன
இலங்கை மக்களை ஏமாற்றுவது போன்று ஐநாவையும் ஏமாற்ற
நினைக்கும் இலங்கைக்கு சிறந்த உதாரணமாக தமிழ் இன அழிப்பு களம் அமைக்கும் என அடித்து கூறலாம்
கொரனோவால் இறந்தவர்களை எரிப்பதா ..? புதைப்பதா – றூம் போட்டு யோசிக்கும் மகிந்தா
கொரனோவால் இறந்தவர்களை எரிப்பதா ..? புதைப்பதா – றூம் போட்டு யோசிக்கும் மகிந்தா
இலங்கையில் பரவி வரும் கொரனோ வைரஸ் நோயின்தாக்குதலில் சிக்கி
பலியாகும் மக்களை எரிப்பதா அல்லது புதைப்பதா என்ற வாத பிரதிவாதங்கள் வலுப்பெற்றன
அதனை அடுத்து இன்று தமிழ் இன கொலையாளியும் ,ஆளும் இலங்கையின்
பிரதமருமான மகிந்தாவின் தலைமையில் மந்திரிகள் கூடி ஆலோசனை செய்கின்றனர்
இந்த கூட்ட தொடரில் முடிவு அறிவிக்க படும் என தெரிவிக்க பட்டுள்ளது
இளம் புத்திசாலி உறுப்பினர்கள் புதிதாக பாராளுமன்றத்திற்கு வரவேண்டும் – மகிந்தா
இளம் புத்திசாலி உறுப்பினர்கள் புதிதாக பாராளுமன்றத்திற்கு வரவேண்டும் – மகிந்தா
இளைய தலைமுறையினர் நாட்டை பொறுப்பேற்க வேண்டிய காலம் எழுந்துள்ளமையால், இளைய புத்திசாலித்தனம் மிகுந்த
உறுப்பினர்கள் புதிதாக பாராளுமன்றத்திற்கு வரவேண்டிய காலம் வந்துள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
நேற்று முன்தினம் (2020.08.01) பிற்பகல் காலி மாவட்டம் ஹபராதுவ பிரதேசத்தில் நடைபெற்ற சந்திப்பின்போது உரையாற்றிய பிரதமர்,
நாட்டை அபிவிருத்தி செய்து முன்னோக்கி கொண்டு செல்வதற்கு இளைய தலைமுறையினரின் ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானது என குறிப்பிட்டார்.
நாட்டின் எதிர்கால பயணத்திற்கு இளைஞர் சமுதாயத்தினர் இம்முறை பொதுத் தேர்தலில் சரியான தெரிவொன்றை
மேற்கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் இன்போது மேலும் தெரிவித்தார்.
இரண்டாக பிளவடைந்து சண்டையிட்டுக் கொண்டிருக்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கு பதிலாக நாட்டை கட்டியெழுப்பி அபிவிருத்தியை நோக்கிய திட்டமிட்டலுடன் கூடிய பயணத்தை
முன்னெடுத்திருக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் கைக்கோர்க்குமாறும் பிரதமர் இளைய சமுதாயத்தினரிடம் கேட்டுக்கொண்டார்.
1000 ரூபாய் சம்பள உயர்வு -பெருந்தோட்டக் கம்பனிகளின் உரிமையாளர்களுக்கு மகிந்தா கோரிக்கை
1000 ரூபாய் சம்பள உயர்வு -பெருந்தோட்டக் கம்பனிகளின் உரிமையாளர்களுக்கு மகிந்தா கோரிக்கை
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு குறித்து சாதகமாக சிந்தித்து அடுத்த சில வாரங்களில் தமது சிபாரிசுகளை
முன்வைக்குமாறு பிரதமர் மகிந்த ராஜபக்ஷ பெருந்தோட்டக் கம்பனிகளின் உரிமையாளர்களுக்கு கோரிக்கை விடுத்தார்.
தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு குறித்த இறுதி முடிவுகள் எடுக்கப்படும் பட்சத்தில் எதிர்வரும் வரவு – செலவுத்
திட்டத்தை தயாரிப்பதற்கு இலகுவாக அமையும் எனவும் பிரதமர் வலியுறுத்தினார்.
தோட்டத் தொழிலாளர்களின் அடிப்படை சம்பளமான 750 ரூபாவுக்கு மேலதிகமாக தேயிலை விலைக்கான கொடுப்பனவு (price share supplement) , உற்பத்தி (productivity incentive) மற்றும்
வரவுக்கான கொடுப்பனவுகள் (attendance incentive) அடங்களாக நாள் ஒன்றுக்கு 1000 ரூபா சம்பள உயர்வை தொழிலாளர்களுக்கு பெற்றுக்கொடுக்க வேண்டுமென இலங்கைத் தொழிலாளர்
காங்கிரஸ் விடுத்துள்ள கோரிக்கையின் பிரகாரம் கம்பனிகளுடன் நேற்று (25.) அலரிமாளிகையில் நடைபெற்ற சந்திப்பின் போதே பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு சுட்டிக்காட்டினார்.
கோவிட் – 19 தொற்று நோய் பரவல் காரணமாக உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் காரணமாக
தோட்டக் கம்பனிகள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகள் குறித்து இத்தருணத்தில் அவதானம் செலுத்த வேண்டுமென இலங்கை
ஊழியர் சங்கம் இந்தச் சந்திப்பில் பிரதமரின் கவனத்துக்கு கொண்டு வந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த பேச்சுவார்த்தையில் அமைச்சர் ரமேஷ் பதிரன, முன்னாள் இராஜாங்க அமைச்சர் சி.பி.ரத்நாயக்க, பிரதமரின் செயலாளர் காமினி சேனரத், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உபத்
தலைவர் செந்தில் தொண்டமான், பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான், பெருந்தோட்டக் கைத்தொழில் மற்றும் ஏற்றுமதி விவசாய அமைச்சின் செயலாளர் ரவீந்திர ஹேவாவிதாரன, சமூக
வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் செயலாளர் டி.பி.ஜி குமாரசிறி, பொது நிர்வாக திணைக்களத்தின்
பணிப்பாளர் ஜெனரல் அதுல குமார மற்றும் தோட்டக் கம்பனிகளின் உரிமையாளர்களும் கலந்துக்கொண்டனர்.
இந்தியாவுடன் மகிந்தா பேச்சு
இந்தியாவுடன் மகிந்தா பேச்சு
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பக்லேவிற்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்குமிடையில் சந்திப்பு
இடம்பெற்றுள்ளது.
இந்தச் சந்திப்பு அலரி மாளிகையில் கடந்த 17 ஆம் திகதி இடம்பெற்றது.
இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் தொடர்பில் பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டதாக பிரதமரின் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
அதிவேக நெடுஞ்சாலையில் கண்காணிப்பு நடவடிக்கையில் மகிந்தா
அதிவேக நெடுஞ்சாலையில் கண்காணிப்பு நடவடிக்கையில் மகிந்தா
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மீரிகம பகுதியில் மத்திய அதிவேக
நெடுஞ்சாலையில் கண்காணிப்பு நடவடிக்கையில்
ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது











