Tag: அலுவலகம்
சீனாவில் இலங்கையின் புதிய கொன்சுலர் அலுவலகம்
சீனாவில் இலங்கையின் புதிய கொன்சுலர் அலுவலகம்
சீனாவில் இலங்கையின் புதிய கொன்சுலர் அலுவலகம் ,சீனாவின் Chengdu நகரில் இலங்கையின் கொன்சுலர் அலுவலகம் ஒன்றை நிறுவுவதற்கான பணிகளை மேற்கொண்டு வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் சீன விஜயத்தின் போது இந்த விடயம் குறித்து கலந்துரையாடப்பட்டதாக வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.
“அந்த மாநிலத் பிரதானி எங்களுக்குத் தேவையான இடத்தையும் வசதிகளையும் இலவசமாக வழங்க
ஒப்புக்கொண்டார். அதன்படி, எதிர்காலத்தில் Chengdu நகரில் வெளியுறவு அமைச்சாக ஒரு புதிய கொன்சுலர் அலுவலகத்தைத் திறக்க எங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.” என்றார்.
ஜனாதிபதியின் சீன விஜயம் குறித்து ஊடகங்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் இன்று (22) அரசாங்க தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியின் சீன விஜயத்தின் போது, இரு தரப்பினருக்கும் இடையே பொருளாதார, அரசியல் மற்றும் கலாச்சார
ஒத்துழைப்பை வளர்ப்பது குறித்து விரிவான கலந்துரையாடல்கள் இடம்பெற்றதாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
- தேசத்தின் குரலப்பா தேனிசை செல்லப்பா|710|தேனிசை செல்லப்பா ||Thenisai Chellappa

- செல்லப்பா செல்லப்பா நீங்க எங்கள் தாயகத்தின் செல்லப் பிள்ளை |தேனிசை செல்லப்பா |709|Thenisai Chellappa

- தேனிசை செல்லப்பா இறுதி நிகழ்வு காட்சிகள்

- செல்லப்பா உன்ன தேசம் மறக்குமா |709|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa

- பாணரே எங்க பாணரே |707|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa

மகிந்தா அலுவலகம் முற்றுகை – உக்கிரமாகும் மக்கள் போராட்டம்
மகிந்தா அலுவலகம் முற்றுகை – உக்கிரமாகும் மக்கள் போராட்டம்
மகிந்தா அலுவகம் தற்போது போராட்ட காரர்களினால் சுற்றிவளைக்க பட்டு
,உடனே பதவி விலகும் படி மக்கள் கோரிக்கை விடுத்தது கோசம் எழுப்பி வருகின்றனர்
எங்களை வாழ விடுங்கள் சுடு காட்டுக்கு அனுப்பாதீர்கள் என்ற கோசமும் அங்கே முழங்க படுகிறது
அழகான இலங்கையை சுரண்டி கொள்ளையடித்து ஏப்பம் விட்ட மகிந்தா
குடும்பத்தினால் இன்று இலங்கை இந்த சீரழிவை சந்தித்துள்ளது என்பது மக்கள் பேச்சாக உள்ளது
மக்கள் போராட்டங்களுக்கு தலை வணங்கி பதவி திறப்பதை ஆளும் இனவாத கொலைகாரர்கள் மறுத்து வருகின்றதால் ,
மக்கள் ஆத்திரம் உற்ற நிலையில், இந்த போர் உக்கிரம் பெற்றுள்ளது









