Tag: பொலிஸ்
லண்டனில் பொலிசாரை வெட்டிய நபர்
லண்டனில் பொலிசாரை வெட்டிய நபர்
லண்டனில் பொலிசாரை வெட்டிய நபர் செயல் ,லண்டனில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
இன்று காலை உள்ளூர் நேரம் 7 மணியளவில் வடகிழக்கு லண்டனில் உள்ள ரயில்வே நியலையத்தின் அருகில் இந்த நபர் திடீர் வாள்வெட்டு தாக்குதலை நடத்தினர் .
இதில் இரு போலீசார் உள்ளிட்ட மக்கள் காயமடைந்துள்ளனர்
மேலும் கார் ஒன்றில் பயணித்த இவர் அதனை வீட்டுடன் மோதியுள்ளார் ., பின்னர் அங்கிருத்தவர்கள் மீது கத்தி வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளார் .
இந்த வாள்வெட்டு தாக்குதலுக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை .வாள்வெட்டு தாக்குதலை நடத்தியவர் தீவிர விசாரணைகளிற்கு உள்ளாக்க பட்டுள்ளார் .
உலங்குவானூர்தி சுட்டு வீழ்த்தல்
கொலம்பியாவில் இராணுவ உலங்குவானூர்தி சுட்டு வீழ்த்தல் .இவ்வேளை இந்த உலங்குவானூர்தியில் பயணித்த ஒன்பது முக்கிய அதிகாரிகள்
உள்ளிட்டவர்கள் உயிரிழந்துள்ளனர் .
போதைவஸ்து கடத்தல் காரர்களுக்கும் அரச இராணுவத்தினருக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் ,இந்த உலங்குவானூர்தி சுட்டு வீழ்த்த தெரிவிக்க படுகிறது .
பொறியில் சிக்கிய நெதன்யாகு.
சர்வதேச நீதிமன்றம் கைது செய்திட நடவடிக்கை .
விரைவில் நெதன்யாகுவை கைது செய்திட உத்தரவு வழங்க படுமாம் .
இன்றைய எதிரியின் உலக செய்திகள் ,
யூதரிடம் மன்னிப்பு கேட்ட பொலிஸ்
யூதரிடம் மன்னிப்பு கேட்ட பொலிஸ்
லண்டனில் இஸ்ரேலிய யூதரிடம் மன்னிப்பு கேட்ட லண்டன் பொலிஸ் செயல்பாடு, சர்சையையும் பர பரப்பையும் ஏற்படுத்தியுளளது .
பிரிட்டன் தலைநகர் லண்டனில் பாலஸ்தீன மக்கள் ,காசா மீது இஸ்ரேல் நடத்தும் இனபடுகளையை தடுத்த நிறுத்த கோரி மிக பெரும் போராட்டம் நடத்தினர் .
இதன் பொழுது அங்கு வருகை தந்த இஸ்ரேலிய யூதர் எனப்படும் நபர் ,அந்த கூட்டம் இடம் பெறும் பகுதிக்குள் நுழைந்து, இனங்களுக்கு இடையில் பதட்டத்தை அதிகரிக்க முனைந்தார் என போலீசாரால் கூற பட்டதாம் .
லண்டன் பொலிசுக்கு சாவல் விட்ட யூதர்கள்
ஆனால் அதுவே மிரட்டல் என தெரிவித்து ,லண்டன் பொலிஸாருக்கு எதிராக அந்த நபர் கருத்தை வெளியிட்டார் .
இதனை அடுத்து தற்போது லண்டன் காவல்துறையினர் ,அந்த யூத மகனிடம் மன்னிப்பு கோரியுள்ளனர் .
மேலும் அவரிடம் நேரடியாக தனிப்பட்ட முறையிலும் மன்னிப்பு கோர தயாராக உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
லண்டன் வாழ் யூத மக்களுக்கு பாதுகாப்பும் உத்தரவாதம் வழங்க வேண்டியது தமது கடமை எனவும் ,லண்டன் போலீசார் தெரிவித்துள்ளனர் .
ஆதிக்கம் நிறைந்த இஸ்ரேலியர்கள் அரசாட்சி
உலகளாவிய ரீதியில் வர்த்தகத்தில் கொடி கட்டி பறக்கும் யூதர்கள் ,இன்று உலக நாடுகளின் ஆட்சியையும் ,அதிகாரங்களையும் அடக்கி ஆளும் ,வல்லமை பொருந்தியவர்களாக காணப்படுகின்றனர் .
அதனால் தான் இஸ்ரேல் இராணுவம் பாலஸ்தீனம் மீது மேற்கொள்ளும் தொடர் படுகொலைகள் மற்றும் ,அடக்குமுறை அத்து மீறல்களை கண்டு கொள்ளாது உள்ளது .
இது பல பாதிக்கப்பட்ட இன மக்கள் என்று உலகில் ,உலகை ஆட்கொள்ளும் செல்வந்தர்களாக மாறுகின்றனரோ, அன்றுதான் அவர்களினால் ,தமது இழந்த அதிகாரத்தை நிலை நாட்ட முடியும் என்பதை ,இந்த நிகழ்வுகள் எடுத்து காட்டுகின்றன.
ஈரான் பிரான்ஸ் தூதரகதில் குண்டுதாரி
ஈரான் பிரான்ஸ் தூதரகதில் குண்டுதாரி
ஈரான் பிரான்ஸ் தூதரகம் முன்பாக குண்டுதாரி ஒருவர் வெடித்து சிதற போவதாக தெரிவித்து மிரட்டி வருவதால், ஆயுத பொலிஸ் குவிக்க பட்டு ஈரான் தூதரகம் சுற்றிவளைக்க பட்டுள்ளது .
ஈரானுக்குள் இஸ்ரேல் தாக்குதல்
இஸ்ரேல் ஈரானுக்குள் அதன் விமான தளம் மீது இன்று தாக்குதலை நடத்தியதை அடுத்து ,தற்போது இந்த நபர் வெடித்து சிதற போவதாக தெரிவித்துள்ள நிலையில் போலீஸ் குவிக்க பட்டுள்ளது .
ஈரான் பிரான்ஸ் தூதரகம் முன்பாக குண்டுதாரி பொலிஸ் குவிப்பு
உண்மையில் இவர் குண்டுதாரியா அல்லது மிரட்டலுக்கு செய்கிறாரா என்பது தொடர்பில் தெரியவரவில்லை .
மிரட்டல் விடுத்த நபர் எந்த நாட்டவர் அவரது கோரிக்கை என்ன என்பது தொடர்பாக உடனடியாக தெரியவரவில்லை .
குண்டு செயல் இழக்கும் போலீசார் குவிப்பு
குண்டு செயல் இழக்கும் போலீசார் குவிக்க பட்டு ,பிரான்ஸ் ஈரான் தூதரகம் பொலிஸாரினால் சுற்றிவளைக்க பட்டுள்ளது .
ஈரான் பிரான்ஸ் தூதரகதில் குண்டுதாரி
பெரும் தொகையில் காவல்துறையினர் குவிக்க பட்ட நிலையில் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார் .
இது இஸ்ரேல் திட்டமிடலில் ஒன்றா என்கின்ற சந்தேகம் வெளியிட பட்டுகிறது .
பிரான்ஸ் டிக்டாக் ராசனுடன் இணைந்து வாலிபனை தாக்கிய பொலிஸ்
பிரான்ஸ் டிக்டாக் ராசனுடன் இணைந்து வாலிபனை தாக்கிய பொலிஸ்
பிரான்ஸ் டிக்டாக் ராசனுடன் இணைந்து வாலிபனை தாக்கிய பொலிஸ்வெளிநாட்டில் இருந்து வருகைதந்துள்ள டிக்டாக் ராசனுடன் சேர்ந்து புளியங்குளம் பொலிஸார் தன்னை தாக்கியதாக தெரிவித்து வவுனியா வைத்தியசாலையில் குடும்பஸ்தர் ஒருவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் நேற்றய தினம் மாலை இடம்பெற்றது. வவுனியா சின்னப்பூவரசங்குளத்தை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு டிக்டாக் ராசனால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
குறித்த விடயம் தொடர்பாக பாதிக்கப்பட்ட நபர் ஊடகங்களுக்கு கருத்துதெரிவித்த போது,
நேற்றயதினம் ஒரு விசாரணை ஒன்று இருப்பதாக புளியங்குளம் பொலிஸார் என்னை அழைத்தனர்.
நான் அங்கு சென்றநிலையில் எனது தொலைபேசி கைப்பை என்பன பறிக்கப்பட்டு இரு கைகளிலும் விலங்கு போடப்பட்டது.
பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரி உட்பட ஏனைய பொலிஸாரும் என்னை பிடித்துவைத்திருக்க, வெளிநாட்டில் இருந்து வருகைதந்திருந்த நபர் ஒருவர் பொலிஸ் நிலையத்திற்குள் வைத்து என்னை தாக்கியிருந்தார்.
பின்னர் நாய்போல என்னை இழுத்துச்சென்ற அவர்கள் அந்த நபரின் வாகனத்தில் ஏற்ற முற்பபட்டனர். இதன்போது நான் போதுமக்களின் உதவியினை நாடி பிரதான வீதியை மறித்திருந்தேன்.
பிரான்ஸ் டிக்டாக் ராசனுடன் இணைந்து வாலிபனை தாக்கிய பொலிஸ்
பின்னர் மீண்டும் என்னை பொலிஸ் நிலையத்திற்குள் இழுத்துச்சென்றனர். அங்கு பதில் பொலிஸ் பொறுப்பதிகாரி அவரது சப்பாத்து கால்களால் எனது நெஞ்சில் தாக்கினார்.
பின்னர் அங்கு வந்த பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் என்னிடம் வாக்குமூலம் பெற்றுவிட்டு பொலிஸ் நிலையத்தில் இருந்து என்னையும் எனது மனைவி பிள்ளைகளையும் வீட்டிற்கு அனுப்பியிருந்தார்.
பொலிஸார் தாக்கியதால் எனது உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டேன் என்றார்.
இதேவேளை குறித்த விடயம் தொடர்பாக தாக்கப்பட்டவரின் மனைவி வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு பதிவு செய்துள்ளதுடன் வைத்தியசாலை பொலிஸாரிடமும் முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.
மக்களிடம் உதவி செய்திடபணத்தை பெற்று அது தானே தனது பணத்தினை வழங்குவது போன்ற நிலையில் ,தனனை ஒரு நீதிபதி போல இவர் செயல் படுவதாக தற்போது பலர் மக்கள்குற்றம் சுமத்தியுள்ளனர் .
இவரை ஆதரித்து பேசிய மக்கள் பலர் இவரது இவ்வாறான இவ்விதமான தொடர் இழிவான செயலினால் மக்கள் இவரை வெறுத்து இவருக்கு எதிராக திரும்பியுள்ளனர் .
இவ்வாறான உதவி செய்யும் யுடுப்பர் மற்றும் டிக்டாக் வாதிகளுக்கு வெளிநாட்டு மக்கள்பணம் வழங்கிட கூடாது என்பதே மக்கள் கருத்தாக உள்ளது .
இவர் மீது பல குற்ற சாட்டுக்கள்முன் வைக்க பட்டுள்ளன அவை தொடராக வெளி வரும் என எதிர் பார்க்க படுகிறது .
Featured
விசேட பொலிஸ் குழுக்களினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு 13 பேர் கைது
விசேட பொலிஸ் குழுக்களினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு 13 பேர் கைது
20 விசேட பொலிஸ் குழுக்களினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது, ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த மேலும் 13 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவர்களுடன் பல்வேறு தொடர்புகளை வைத்து குற்றச் செயல்களுக்கு உதவி செய்த சந்தேகிக்கப்படும் 10 பேரும் பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் நேற்று (07) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, கடந்த 19ஆம் திகதி முதல் நேற்று (07) வரையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களை சேர்ந்த 327 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
Featured
மாத்தளை வில்கமுவ பொலிஸ் நிலைய பொலிஸ் T-56 துப்பாக்கி மாயம்
மாத்தளை வில்கமுவ பொலிஸ் நிலைய பொலிஸ் T-56 துப்பாக்கி மாயம்
மாத்தளை வில்கமுவ பொலிஸ் நிலைய பிரதான வாயிலில் பாதுகாப்பான இடத்தில் பயன்படுத்தப்பட்ட T-56 துப்பாக்கி காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
துப்பாக்கி காணாமல் போனது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பெண் பொலிஸ் உத்தியோகத்தர் விபத்தில் பலி
பெண் பொலிஸ் உத்தியோகத்தர் விபத்தில் பலி
ட்ரக் வாகனமொன்றில் மோதுண்டு பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மத்துகம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
களுத்துறை பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் கடமையாற்றும், தொடங்கொட புஹாம்புகொட பிரதேசத்தில் வசித்து வந்த சார்ஜன்ட் தமயந்தி வீரசூரிய என்ற பெண் பொலிஸ் உத்தியோகத்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
பணி முடிந்து மலபடா சந்தியில் பேருந்தில் இருந்து இறங்கி, பாதசாரி கடவையில் வீதியை கடக்கும்போது இந்த விபத்தை எதிர்கொண்டுள்ளார்.
இதன்போது, அவர் மத்துகமவில் இருந்து களுத்துறை நோக்கி பயணித்த ட்ரக் வாகனத்தில் மோதுண்டுள்ளார்.
பலத்த காயமடைந்த அவர் களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்து தொடர்பில் ட்ரக் வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதுடன் சந்தேக நபர் மத்துகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
பாதாள உலக செயற்பாடுகளை ஒடுக்க 20 குழுக்கள்
பாதாள உலக செயற்பாடுகளை ஒடுக்க 20 குழுக்கள்
நாடளாவிய ரீதியில் நடைபெற்று வரும் யுக்திய நடவடிக்கைகளுக்கு சமாந்தரமாக இன்று (19) முதல் பாதாள உலக செயற்பாடுகளை ஒடுக்குவதற்காக 20 விசேட பொலிஸ் குழுக்களை நிறுவுவதற்கு பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் நடவடிக்கை எடுத்துள்ளார்.
புதிதாக நிறுவப்பட்ட இந்த 20 குழுக்கள் தற்போது செயற்படும் ஒவ்வொரு பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படவுள்ளதுடன், ஒவ்வொரு குழுவிலும் குற்றப்பிரிவு நிலைய பொறுப்பதிகாரி ஒருவரும், 04 புலனாய்வு அதிகாரிகள், 02 விசேட அதிரடிப்படை அதிகாரிகள் உட்பட 09 அதிகாரிகள் அடங்குகின்றனர்.
கடந்த சில வாரங்களாக மேல் மற்றும் தென் மாகாணங்களில் இடம்பெற்று வரும் பாதாள உலக செயற்பாடுகளை கருத்திற் கொண்டு பொலிஸ் மா அதிபர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.
தமிழ் பேசும் மக்களுக்காக பொலிஸ் அவசர தொலைபேசி
தமிழ் பேசும் மக்களுக்காக பொலிஸ் அவசர தொலைபேசி
தமிழ் பேசும் மக்களுக்காக பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, 107 என்ற அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.
ஜனாதிபதியின் அறிவுறுத்தலின் பேரில் பொது பாதுகாப்பு அமைச்சர் திரான் அலஸ் மற்றும் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஆகியோரால் இந்த அவசர தொலைப்பேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
குறிப்பாக வடக்கு, கிழக்கு மக்கள் அதன் மூலம் தமிழ் மொழியில் பொலிஸ் உதவிகளைப் பெற முடியும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
பொலிஸ் உயரதிகாரிகள் பலருக்கு இடமாற்றம்
பொலிஸ் உயரதிகாரிகள் பலருக்கு இடமாற்றம்
08 சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள் உட்பட பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, 08 சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர்கள், ஒரு பிரதி பொலிஸ் மா அதிபர், 08 சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள் மற்றும் ஒரு பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி
துப்பாக்கிச் சூடு ஒருவர் பலி
இன்று (21) காலை 7.15 மணி அளவில் மஹாபாகே பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அலப்பிட்டிவல சந்திக்கு அருகில் மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஹெட்டியாராச்சிகே டொன் சுஜித் என்ற நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவர் வெல்லே சாரங்க என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியின் உறவினர் என தெரியவந்துள்ளது
சுட்டுக் கொல்லப்பட்ட பொலிஸ் சார்ஜென்ட் சந்தேகநபர் கைது
சுட்டுக் கொல்லப்பட்ட பொலிஸ் சார்ஜென்ட் சந்தேகநபர் கைது
மல்வத்துஹிரிபிட்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பட்டேபொல பிரதேசத்தில் சந்தேக நபர் ஒருவரை கைது செய்ய சென்ற போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த பொலிஸ் சார்ஜன்ட் உயிரிழந்துள்ளார்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த இந்த பொலிஸ் உத்தியோகத்தர் நேற்று (11) உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த சனிக்கிழமை காலை, மல்வத்துஹிரிபிட்டிய பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் குழு ஒன்று சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்யச் சென்ற போது ஏற்பட்ட மோதல் காரணமாக பொலிஸ் உத்தியோகத்தரின் துப்பாக்கியைப் பறிக்க முயற்சித்துள்ளனர்.
துப்பாக்கிப் பிரயோகத்தினால் பொலிஸ் உத்தியோகத்தர் சுடப்பட்டதாகவும், சந்தேக நபர் உத்தியோகபூர்வ துப்பாக்கியுடன் தப்பிச் சென்றதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
சுட்டுக் கொல்லப்பட்ட பொலிஸ் சார்ஜென்ட் சந்தேகநபர் கைது
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர் சிகிச்சைக்காக கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் குறித்த பொலிஸ் சார்ஜன்ட் உயிரிழந்துள்ளதாகவும் அவர் லுனுகம பிரதேசத்தை சேர்ந்த 51 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, சம்பவம் தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிங்கிரிய, பொலவத்த பிரதேசத்தில் வீடு ஒன்றில் பதுங்கியிருந்த வேளையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாகவும், பொலிஸ் சார்ஜன்டிற்கு சொந்தமான துப்பாக்கி, ரவைகள் மற்றும் சந்தேக நபர் வந்த முச்சக்கரவண்டி என்பனவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அத்துடன், சந்தேகநபரை மறைத்து வைப்பதற்கு உதவிய பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
சந்தேகநபர் 42 வயதுடைய வதுரகம பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் சந்தேகநபர் உடுபத்தாவ பிரதேசத்தை சேர்ந்த 35 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் கம்பஹா மற்றும் மல்வத்துஹிரிபிட்டிய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கோப்பாய் பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் உத்தியோகத்தர் சடலமாக மீட்பு
கோப்பாய் பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் உத்தியோகத்தர் சடலமாக மீட்பு
யாழ்ப்பாணம் – கோப்பாய் பொலிஸ் நிலையத்தின் அறையொன்றிலிருந்து ஞாயிற்றுக்கிழமை (11) அதிகாலை பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு செங்கலடியைச் சேர்ந்த உதயராஜ் என்ற பொலிஸ் உத்தியோகத்தரின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது .
மேலும் குறித்த நபர் தவறான முடிவெடுத்து தனது உயிரை மாய்த்துள்ளார் எனவும், உயிரிழப்புக்கான காரணம் தெரியவரவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யுக்திய பொலிஸ் நடவடிக்கையில் மேலும் பலர் கைது
யுக்திய பொலிஸ் நடவடிக்கையில் மேலும் பலர் கைது
யுக்திய நடவடிக்கையின் கீழ் கடந்த 24 மணித்தியாலங்களில் நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்புக்களில் 728 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 558 சந்தேக நபர்களும் குற்றவியல் பிரியவிற்கு பரிந்துரைக்கப்பட்ட பட்டியலில் இருந்த 170 சந்தேக நபர்களும் இதில் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.
குற்றங்களுக்காக தேடப்பட்டு வந்த மூன்று சந்தேக நபர்களும் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து 122 கிராம் ஹெரோயின், 101 கிராம் ஐஸ், 5 கிலோ 217 கிராம் கஞ்சா மற்றும் 1,852 மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
யுக்திய பொலிஸ் சுற்றிவளைப்பில் 770 பேர் கைது
யுக்திய பொலிஸ் சுற்றிவளைப்பில் 770 பேர் கைது
கடந்த 24 மணித்தியாலயங்கில் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட யுக்திய நடவடிக்கைகளில் போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 567 சந்தேகநபர்கள் மற்றும் குற்றப் பிரிவுக்கு குறிப்பிடப்பட்ட பட்டியலில் இருந்த 203 சந்தேக நபர்கள் உட்பட மொத்தம் 770 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களிடம் இருந்து 132 கிராம் ஹெராயின், 121 கிராம் ஐஸ், 15 கிலோ 900 கிராம் கஞ்சா, 5,416 கஞ்சா செடிகள்,16 கிராம் ஹேஷ்,
209 கிராம் மாவா, 128 கிராம் மதனமோதகம் மற்றும் 45 கிராம் தூள் ஆகிய போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட 567 சந்தேக நபர்களில் 06 சந்தேகநபர்கள் தொடர்பில் தடுப்புக் காவல் உத்தரவின் அடிப்படையில் மேலதிக விசாரணைகள் மேற்கொண்டு வருவதுடன் போதைக்கு அடிமையான 02 பேர் புனர்வாழ்விற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு மற்றும் பொலிஸ் விசேட பணியகம் ஆகியவற்றின் பட்டியலில் இருந்த 05 சந்தேக நபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
யுக்திய பொலிஸ் சுற்றிவளைப்பில் 770 பேர் கைது
மேலும், கைது செய்யப்பட்ட 203 சந்தேக நபர்களில், குற்றப் பிரிவினருக்கு பரிந்துரைக்கப்பட்ட பட்டியலில், போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பான திறந்த பிடியாணைகளை பெற்ற 21 சந்தேக நபர்களும் மற்றும் போதைப்பொருள் அல்லாத குற்றங்கள் தொடர்பான திறந்த பிடியாணைகளை பெற்ற 160 பேரும் உள்ளனர்.
கைரேகை மூலம் அடையாளம் காணப்பட்டு கைது செய்யப்பட்ட 11 சந்தேக நபர்களும், பல்வேறு குற்றங்களுக்காக தேடப்பட்டு வந்த 11 சந்தேக நபர்களும் இந்த நடவடிக்கைகளின் போது கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
யுக்திய பொலிஸ் நடவடிக்கை 702 குற்றவாளிகள் கைது
யுக்திய பொலிஸ் நடவடிக்கை 702 குற்றவாளிகள் கைது
யுக்திய பொலிஸ் விசேட நடவடிக்கை மூலமாக 702 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாஹ்க யுக்திய நடவடிக்கை பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார் .
கடந்த 24 மணித்தியாலத்தில் நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற யுக்திய பொலிஸ் விசேட நடவடிக்கை மூலம் இந்த குற்றவாளிகள் கைது செய்ய பட்டுள்ளனர் .
கைதானவர்கள் நீதிமன்றினால் தேடப்பட்டு வந்த குற்றவாளிகளும் உள்ளடங்கும் என தெரிவிக்க பட்டுள்ளது .
பொலிஸ் விசேட யுக்திய நடவடிக்கையில் 729 பேர் கைது
பொலிஸ் விசேட யுக்திய நடவடிக்கையில் 729 பேர் கைது
பொலிஸ் விசேட யுக்திய நடவடிக்கையில் 729 பேர் கைது இன்று (31) நள்ளிரவு 12.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் யுக்திய நடவடிக்கையின் கீழ் மேலும் 729 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் குற்றங்களுடன் தொடர்புடைய 499 சந்தேகநபர்களும் குற்றத்தடுப்பு பிரிவிற்கு அனுப்பப்பட்டிருந்த பட்டியலில் இருந்த 230 சந்தேக நபர்களும் இதன்போது கைது செய்யப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
பொலிஸ் விசேட யுக்திய நடவடிக்கையில் 729 பேர் கைது
இந்த நடவடிக்கையின் போது 146 கிராம் ஹெரோயின் மற்றும் 119 கிராம் ஐஸ் உள்ளிட்ட போதைப்பொருட்களை பாதுகாப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
மூன்று சந்தேக நபர்களிடம் தடுப்புக் காவல் உத்தரவின் பேரில் மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும், போதைக்கு அடிமையான 04 பேர் புனர்வாழ்விற்காக பரிந்துரைக்கப்பட்டுள்ளதாகவும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
குற்றத் தடுப்பு பிரிவுக்கு பரிந்துரைக்கப்பட்ட 230 சந்தேக நபர்களில், போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பான திறந்த பிடியாணை பெற்ற 19 சந்தேக நபர்களும், போதைப்பொருள் அல்லாத குற்றங்கள் தொடர்பான திறந்த பிடியாணை பெற்ற 204 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரதிப் பொலிஸ்மா அதிபர் பதவியேற்பு
பிரதிப் பொலிஸ்மா அதிபர் பதவியேற்பு
யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக காளிங்க ஜெயசிங்க இன்று (29) பதவியேற்றார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தில் கடமைகளை பொறுப்பேற்பார்.
இதன்போது சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள் கலந்து கொண்டனர்.
இதுவரை காலமும் கடமையாற்றிய மஞ்சள செனரத் பதவிஉயர்வு பெற்று சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது
இலங்கை பொலிசாரால் 955 பேர் கைது தொடரும் பொலிஸ் வேட்டை
இலங்கை பொலிசாரால் 955 பேர் கைது தொடரும் பொலிஸ் வேட்டை
இலங்கையில் நாடளாவிய ரீதியில் இடும்பெற்ற யுக்திய நடவடிக்கையில் பொலிசாரால் 955 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் ,தொடரும் பொலிஸ் வேட்டையால் குற்றவாளிகள் பீதியில் உறைந்துள்ளனர் .
போதைவஸ்து குழுவினர் மற்றும் நீதிமன்றினால் தேட படும் குற்றவாளிகளை கைது செய்து வருவதாக யுக்திய நடவடிக்கை தலமை பொலிஸ் அதிகாரி தெரிவித்துள்ளார் .
பொலிசாரால் கைது செய்ய பட்ட குற்றவாளிகள் யாவரும் நீதிமன்றின் முன்னிலை படுத்த பட்டுள்ளனர் .
இலங்கையில் பெருகி வரும் போதைவஸ்து வர்த்தகத்தை தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ள பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர் .
பொலிசாருக்கு பயந்து ஆற்றில் பாய்ந்த மோட்டர் சைக்கிள்
பொலிசாருக்கு பயந்து ஆற்றில் பாய்ந்த மோட்டர் சைக்கிள்
பொலிசாருக்கு பயந்து வாழைசேனை ஓட்டமாவடி பகுதி வழியாக வேகமாக தலைக்கவசம் இன்றி மோட்டர் சைக்கிள் ஓடி வந்த நபர் ,பொலிசாருக்கு ஆற்றில் மோட்டர் சைக்கிளுடன் பாய்ந்தார் .
பொலிசாருக்கு பயந்து வேகமாக மோட்டார் சைக்கிளை செலுத்தியதால் சாரதியின் கட்டு பாட்டை இழந்து மோட்டார் சைக்கிளுடன் ஆற்றுக்குள் பாய்ந்தார் .
உடனே விபத்தை கண்ணுற்ற பொலிசார் அவரை கைப்பற்றி மருத்துவமனையில் அனுமதித்தனர் .
அலட்சியமும் ,வீதி விதிமுறைகளை மீறி செயல் பட்ட காரணத்தால் ,இவ்விதம் மோட்டர் சைக்க்கிள் மற்றும் விபத்துக்கள் இடம்பெற்று வருகின்ற்றமை குறிப்பிட தக்கது .

















































