மாணவனை தாக்கிய பொலிஸ்
மாணவனை தாக்கிய பொலிஸ் ,பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவினால் தாக்கப்பட்ட 13 வயது பாடசாலை மாணவர் அண்மையில் குருநாகல் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
ஏர் ரைபிள் மற்றும் கையடக்கத் தொலைபேசியைத் திருடிச் சென்றதாகக் கூறி பொலிசார் தம்மை தாக்கியதாக மாணவர் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மாணவன் கூறுகையில்,
“முச்சக்கர வண்டி ஓட்டியவர் அடிக்கவில்லை. மற்றவர்களே என்னை தாக்கினர். தற்போது அதற்காக சிகிச்சை பெறுகிறேன்” என்றார்.
பாடசாலை மாணவர்கள் மீது போலீசார் தாக்குதல் நாடத்திய சம்பம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது .
நாட்டின் சட்டத்தை தமது கையிலெடுத்து ,தமது அதிகார வரைமுறையை மீறி ,அப்பாவி மாணவர்களை போலீசாரை தாக்கிய சம்பவம் மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது .
மக்கள் மீது துப்பாக்கி சூட்டு சம்பவங்களை நடத்தி படுகொலை புரிதல் ,மற்றும் ,சிறையில் கைதிகளை கொலை செய்தல் என்ற குற்ற சாட்டுக்கள் போலீசார் மீது வைக்க பட்டுள்ள நிலையில் ,இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
















