Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

300 மில்லியனுக்கு ஆயுதம் விற்பனை தப்புமா உக்கிரேன் ..?

300 மில்லியனுக்கு ஆயுதம் விற்பனை தப்புமா உக்கிரேன் ..?

உக்கிரேன் மீது ரசியா இராணுவம் அகோர தாக்குதலை அதி வேகமாக தொடுத்த வண்ணம் முன்னேறிய வண்ணம் உள்ளது

ரசியாவின் இந்த திடீர் வலிந்து தாக்கும் இராணுவ நடவடிக்கையால் உக்கிரேனின் பல முக்கிய நகர் பகுதிகள் வீழ்ந்த வண்ணம் உள்ளன

ரசியா மேற்கொள்ளும் இந்த இராணுவ முன் நகர்வினால் பல நூறு மக்கள் பலியாகி வருகின்றனர் ,ஆனால் ஆளும் உக்கிரேன் அதிபர் அடிபணிய மறுத்து ரசியாவை வென்று விடுவேன் என அடம் பிடித்து வருகிறார்

பரம எதிரியாக விளங்கும் ரசியாவை வென்று விட அமெரிக்கா பிரிட்டனிடம் உக்கிரேன் மில்லியன் டாலரில் ஆயுதத்தை வாங்கு குவிகிறது

அவசர உதவி என்ற போர்வையில் அமெரிக்கா பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளும் உக்கிரேனுக்கு அதி நாவீன ஆயுத தளபாடங்களை வழங்கி வருகின்றன

பிரிட்டன் அமெரிக்காவின் இந்த ஆயுத விற்பனை ஊடாக உக்கிரேன் பொருளாதாரம் மீள்சி கொள்ளுமா

இந்த பரம எதிரியான ரசியாவின் போரில் இருந்து முற்றாக விடுதலை பெறுமா என்ற கேள்விகள் வெடித்து பறக்கின்றன ,அவை பேசு பொருளாகவும் மாற்றம் பெற்றுள்ளன

இந்த நிலையில் தற்போது பிரிட்டன் முன்னூறு மில்லியன் பவுண்டுக்கு உடனடி ஆயுதங்களை உக்கிரேனுக்கு வழங்குகிறது ,

பிரிட்டன் முன்னூறு மில்லியனுக்கு விற்கும் ஆயுத தபாடங்கள் ஊடாக ரசியாவை உக்கிரேன் வீழ்த்தி விடுமா என்ற கேள்வி எழுந்துள்ளது

பிரித்தானிய அரசு விற்கும் இந்த ஆயுத வியாபாரத்தின் ஊடாக தனது பலத்தை பிரித்தானிய முதுகில் ஏறி நின்று உக்கிரேன் காண்பிப்பது போல் உள்ளது

பிரிட்டன் வழங்கும் இந்த ஆயுத விற்பனை பட்டியலில் அதி முக்கிய .
ஏவுகணைகள்,தாங்கி எதிர்ப்பு ஆயுதங்கள் ,மற்றும் இரவு நேர கருவிகள் என்பன உள்ளடங்குகின்றன

300 மில்லியனுக்கு ஆயுதம் விற்கும் பிரிட்டன் – தப்புமா உக்கிரேன் ..?

மேற்குலக நாடுகள் வழங்கும் ஆயுத உதவிகள் மூலம் ரசியாவின் போரை வென்றுவிடலாம் என உக்கிரேன் எதிர் பார்க்கிறது ,

ஆனால் அது தோல்வியில் முடிய போகிறது என்பதை வீழ்ந்தும் மீசையில் மண் ஒட்டாத கதையாக உக்கிரேன் வேற்று கோஷம் முழங்கி வருவதை காண்பிக்கிறது


இந்த கால விதியின் ,கள நிலவரத்தை உக்கிரேன் அதிபர் உணர மறுத்து வருகின்றமை துன்பியலின் விளைவாக பார்க்க படுகிறது,

இங்கிலாந்தினதும் மற்றும் மேற்குலக ஆயுதங்கள் ஊடாக தப்புமா உக்கிரேன் என்பதே கேள்வியாக வீழ்ந்து கிடக்கிறது .

  • வன்னி மைந்தன் –
Posted in Uncategorized

குண்டுகளினால் அதிரும் உக்கிரேன் -பலநூறு மக்கள் காயம்

குண்டுகளினால் அதிரும் உக்கிரேன் -பலநூறு மக்கள் காயம்

உக்கிரேன் கீவ் நகரை அண்மித்து ரசியா இராணுவம் ஏவுகணை தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது ,இந்த ஏவுகணைகள் மக்கள் வாழ்விடங்களை இலக்கு.

வைத்து நடத்தப்படுகிறது என பாதிக்க பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்

இந்த குண்டு தாக்குதல்களில் சிக்கி பல, நூறு மக்கள் பலியாகியும் காயமடைந்து வருகின்றனர்.

இவர்கள் உயிரை காப்பாற்ற ஐநா உடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர் ,அடிபணிய மறுக்கும் உக்கிரேன் .

அதிபரை சிறை பிடிக்கும் நடவடிக்கையில் ரஷியா ஈடுபட்டுள்ளது .


கிட்டத்தட்ட பெரும் முற்றுகையில் உக்கிரேன் சிக்கியுள்ளது ,தொடர்ந்து ரசியா படைகள் முன்னேறிய வண்ணம் உள்ளது.

    Posted in Uncategorized

    ரசியாவுக்குள் நுழைந்து உக்கிரேன் விமானங்கள் தாக்குதல்

    ரசியாவுக்குள் நுழைந்து உக்கிரேன் விமானங்கள் தாக்குதல்

    ரசியாவின் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த உக்கிரேன் விமானங்கள் அங்கு தாக்குதலை நடத்தி விட்டு தப்பி சென்றுள்ளன ,


    இந்த தாக்குதலின் பொழுது ரசியாவின் Bryansk பகுதியில் பலத்த சேதமடைந்துள்ளது

    ரசியா உக்கிரேன் பல பகுதிகளை ஆக்கிரமித்து தற்போது தலைநகர் கீவ் வீழ்ச்சியுற உள்ள நிலையில் இந்த


    அதிரடி தாக்குதலில் உக்கிரேன் ஈடுபட்டுள்ளது குறிப்பிட தக்கது

      Posted in உளவு செய்திகள்

      உக்கிரேன் அதிபரை சிறை பிடிக்க பரசூட்டில் குதித்த இராணுவம்

      உக்கிரேன் அதிபரை சிறை பிடிக்க பரசூட்டில் குதித்த ரசியா இராணுவம்

      ஐ.நா.பொதுச் செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் உக்ரைனுக்கு சென்ற போது தலைநகர் கிவ் அருகே ஏவுகணைகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

      அதிபர் மாளிகையை நெருங்கி வந்தனர்- ரஷிய படையிடம் சிக்காமல் தப்பிய ஜெலன்ஸ்கி
      உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

      உக்ரைன் மீதான ரஷியாவின் போர் தாக்குதல் 3வது மாதமாக நீடிக்கிறது. தற்போது கிழக்கு உக்ரைனில் தாக்குதலை தீவிரப்படுத்தி வரும் ரஷிய படைகள் தலைநகர் கிவ்வையும் குறிவைத்துள்ளனர்.

      இந்த நிலையில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை பிடிக்க ரஷிய படைகள் மிகவும் நெருங்கி வந்த தகவல் வெளியாகி இருக்கிறது.

      இது தொடர்பாக ஜெலன்ஸ்கி அளித்த பேட்டி யில் கூறியிருப்பதாவது:

      என்னையும், எனது குடும்பத்தினரையும் பிடிக்க ரஷிய துருப்புகள் மிக அருகில் வந்தன. போர் தொடங்கிய அன்று நான், மனைவி ஜலேன, 17 வயது மகள் மற்றும் 9 வயது மகன் குண்டு வெடிப்பு சத்தத்தை கேட்டு எழுந்தோம்.

      நான் ரஷியாவின் இலக்கு என்பதால் அதிபர் அலுவலகங்கள் பாதுகாப்பான இடம் அல்ல என்பது விரைவில் தெளிவாக தெரிந்தது. என்னையும், குடும்பத்தினரையும் கொல்ல

      உக்கிரேன் அதிபரை சிறை பிடிக்க பரசூட்டில் குதித்த இராணுவம்

      அல்லது பிடிப்பதற்காக ரஷிய தாக்குதல் படை வீரர்கள் தலைநகர் கிவ்வுக்குள் பாரா சூட் மூலம் நுழைந்ததாக எனக்கு தெரிவிக்கப்பட்டது. அவர்கள் எங்களை கைப்பற்ற மிக நெருங்கி வந்தனர்.

      இவ்வாறு ஜெலன்ஸ்கி கூறினார்.

      இதற்கிடையே ஐ.நா.பொதுச் செயலாளர் ஆண்டனியோ குட்டரெஸ் உக்ரைனுக்கு சென்ற போது தலைநகர் கிவ் அருகே ஏவுகணைகள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு உக்ரைன் கடும் கண்டனம் தெரிவித்தது.

      இந்த நிலையில் ஐ.நா. பொதுச் செயலாளர் வருகையின் போது தாக்குதல் நடத்தியதை ரஷியா உறுதிப்படுத்தி உள்ளது.

      உக்கிரேன் இராணுவத்தால் வெளியிட பட்டுள்ள இந்த விடயம் உலக அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது

      உக்கிரேன் அதிபரின் உருக்கமான இந்த பேச்சு உக்கிரேன் மகாகாளி மட்டும் அல்ல உலக மக்களையும் கண்கலங்க வைத்துள்ளது

        Posted in Uncategorized

        உக்கிரேன் தலைநகர் மீது அகோர குண்டு தாக்குதல்

        உக்கிரேன் தலைநகர் மீது அகோர குண்டு தாக்குதல்

        உக்கிரேன் தலைநகர் மீது ரசியா இராணுவம் அகோர குண்டு தாக்குதலை மேற்கொண்ட வண்ணம் உள்ளது.


        இந்த தாக்குதலில் உக்கிரேன் கீவ் நகரின் பல பகுதிகள் சுடுகாடாக காட்சியளிக்கின்றன.

        வாகனங்கள் என்பனவும் பலத்த சேதமடைந்துள்ளது.

        ரஷியா இராணுவத்தின் தொடர் ஏவுகணை ,மற்றும் ரொக்கட் தாக்குதலினால் குறித்த பகுதிகள் அதிர்ந்த வண்ணம் உள்ளது .


        சில நாட்களுக்குள் கீவ் நகர் ரசியா இராணுவத்திடம் வீழ்ந்து விடும் என எதிர் பார்க்க படுகிறது.

          Posted in உலக செய்திகள் குற்ற செய்திகள்

          உக்ரைன் பெண்களை கற்பழித்து கொன்ற ரஷிய இராணுவம்

          உக்ரைன் பெண்களை கற்பழித்து கொன்ற ரஷிய இராணுவம்

          பெண்களை கொலை செய்வதற்கு முன்பு, கொடூரமாக கற்பழித்து இருப்பது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக தடயவியல் டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.

          உக்ரைன் பெண்களை கற்பழித்து கொன்ற ரஷிய வீரர்கள்: பிரேத பரிசோதனையில் அதிர்ச்சி தகவல்

          உக்ரைனின் புச்சா, இர்பின் உள்ளிட்ட நகரங்களில் இருந்து ரஷிய படைகள் சமீபத்தில்

          வெளியேறிய பின்பு அங்கு ஆய்வு நடத்தியபோது அப்பாவி மக்கள் பலரை ரஷிய வீரர்கள் கொடூரமாக கொலை செய்தது தெரியவந்தது.

          தெருக்களில் இருந்து கொத்து கொத்தாக பிணங்கள் மீட்கப்பட்டன. அந்த உடல்களுக்கு

          தற்போது பிரேத பரிசோதனை நடந்து வருகிறது. இதில் ரஷிய வீரர்கள் போட்ட வெறியாட்டங்கள் அம்பலமாகி வருகிறது.

          அந்தவகையில் பெண்களை கொலை செய்வதற்கு முன்பு, கொடூரமாக கற்பழித்து இருப்பது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளதாக தடயவியல் டாக்டர்கள் தெரிவித்து உள்ளனர்.

          பல உடல்களை அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைத்து இருக்கின்றனர். சிலரின் தலையை துண்டித்து உள்ளனர். முகங்கள் சிதைக்கப்பட்டதால் பல உடல்கள் அடையாளம் காண முடியாமல் உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

          முன்னதாக ‘தி கார்டியன்’ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த இந்த நகரங்களை சேர்ந்த பெண்கள்,


          ரஷிய வீரர்களின் பிடியில் இருந்தபோது தாங்கள் சொல்லொணா துயரை அனுபவித்ததாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

            Posted in Uncategorized

            ரஷியா தாக்குதல் அச்சம் – பதட்டத்தில் ரொமேனியா

            ரஷியா தாக்குதல் அச்சம் – பதட்டத்தில் ரொமேனியா

            உக்கிரேன் நாட்டின் ஆளுகைக்குள் உள்ள முக்கிய நகர்கள் ரசியாவிடம் வீழ்ச்சியடைந்து வரும் நிலையில் ,உக்கிரேன் தலைநகர் கீவ் நகர் நோக்கி ரசிய இராணுவம் முன்னேறிய வண்ணம் உள்ளது ,

            உக்கிரேனின் இந்த தலை நகர் எதிரி இராணுவத்திடம் வீழ்ச்சியடைந்தால்
            ரோமானியா மீது எதிரியாக விளங்கும் ரசியா தாக்குதலை நடத்தலாம் என்ற பதட்டம் ஏற்பட்டுள்ளது

            உக்கிரேன் எல்லையோர நாடாக உள்ளது ரொமேனியா ,அதுபோலவே போலந்து,ரசியா ஐரோப்பா நாடுகள் மீது .

            எதிரி நாடாக விளங்கி வரும் ரஷியா போரினை தொடுக்கலாம் என்ற நிலையில் அமெரிக்கா இராணுவம் ,மற்றும் நேட்டோ படைகள் குறித்த நாடுகளில் குவிக்க பட்டுள்ளனர்

            எனினும் பரம எதிரியான ரசியாவின் ஆயுத பலத்தின் முன்னால் இந்த நாடுகள் தாக்கு பிடிக்குமா என்ற ஐயம் எழுந்துள்ளது

            ரஷியா தாக்குதல் அச்சம் – பதட்டத்தில் ரொமேனியா


            உக்கிரேன் மீது ரசியா தன் வசம் உள்ள அதி நவீன ஆயுதங்களை பயன்படுத்தவில்லை,அதனை அது பரம எதிரியாகவும் பார்க்கவில்லை

            இவ்வாறான நிலையில் அது தவிர்ந்த எதிரிகளாக விளங்கிவரும் நேட்டோ நாடுகள் மீது உக்கிரேன் மீது மேற்கொண்ட தாக்குதல் போன்று நடத்துமா என்ற அச்சம் எழுந்துள்ளது

            பொருளாதார நிலையில் தள்ளாடி வரும் ஐரோப்பா நாடுகள்மீது ,ரசியா பெரும் படையெடுப்பை மேற்கொண்டால் .அங்கு ஆட்சி கவிழ்ப்புக்கள் இடம்பெறலாம் என எதிர் பார்க்க படுகிறது

            ரசியாவின் போரினால் பல நாடுகள் பதட்டத்தில் உள்ளது ,எதிர் காலத்தில் எதிரிகள் முந்தி தாக்கிட முன் எதிர் தாக்குதலை நடத்திட இப்போதே திட்டங்கள் தீட்ட பட்டு வருகின்றன

            ரொமேனியா போலந்து ஜேர்மனி பகுதியில் அமெரிக்கா இராணுவம் குவிக்க பட்டு புதிய இராணுவ முகாம்கள் நிறுவ பட்டு வருகின்றன

            மேலும் இரு நாடுகளும் இணைந்து கூட்டு தாக்குதல் தொடர்பான பயிற்சிகளிலும் ஈடுபட்ட வண்ணம் உள்ளன

            ரசியாவிடம் உக்கிரேன் முற்றாக வீழ்ச்சியுற்றால் விரைந்து பெரும் இராணுவ படையெடுப்பை ரசியா நடத்தும் என ஐரோப்பியா மற்றும் பிரிட்டன் அமெரிக்கா எதிர் பார்க்கிறது குறிப்பிட தக்கது

            ரசியாவின் குறியில் இருந்து தப்புமா இந்த எதிரி நாடுகள் ..?

            -வன்னி மைந்தன் –

              Posted in உளவு செய்திகள்

              மூழ்கிய ரசிய கப்பல் 30 பேர் மாயம்

              மூழ்கிய ரசிய கப்பல் 30 பேர் மாயம்

              ரசியாவின் மோஸ்க்கோ என்றழைக்க படும் போர் கப்பல் மீது உக்கிரேன் ஏவுகணை தாக்குதல் நடத்தியது ,இதில் அந்த கப்பல் கரும் கடல் பகுதியில் மூழ்கியது

              இந்த கப்பல் மூழ்கும் பொழுது அதில் பணியாற்றிய 24 இராணுவத்தினர் பலியாகியுள்ளனர்,மேலும் முப்பது பேர் காணாமல் போயுள்ளனர்

              எதிரி நாட்டின் ஏவுகணையில் சிக்கிய இந்த மிதக்கும் போர் கப்பல் சேதமாக்க பட்டது ,அவ்விதம் எதிரிகளினால் சேதமாக்க பட்ட கப்பலானது கட்டி இழுத்து வரப்படும் பொழுது கடலில் மூழ்கியதாக ரசியா தெரிவித்துள்ளது

              மூழ்கிய ரசிய கப்பல் 30 பேர் மாயம்

              எதிரி ஏவுகணை தாக்குதலில் சிக்கி மூழ்கிய ரசியா கப்பலில் உள்ளே தங்கி இருந்த முப்பது ரசியாவினது இராணுவத்தினர் காணமல் போயுள்ளதாக ,முக்கிய உளவுத்துறை நிறுவனம் ஒன்று தகவல் வெளியிட்டு பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது

              உக்கிரேன் மீது ரசியா நடத்தி வரும் எதிர் தாக்குதல்களில் சிக்கி ,இதுவரை இருபதாயிரம் ரசியா எதிரி இராணுவம்
              பலியாகியுள்ளதாக எதிரி நாடான உக்கிரேன் தொடர்ந்து கூறி வருகிறது

              அதிவேக தாக்குதல் கலமாக விளங்கிய இந்த மிதக்கும் வீரமிகு சண்டை கப்பலானது உக்கிரேன் ஏவுகணையின் தாக்குதல் மூலம் மூழ்கடிக்க பட்டது ரசியாவின் இராணுவத்திற்கு பெரும் இழப்பாக கருத படுகிறது

              கடல் பலத்தை எந்த நாடு கொண்டுள்ளதோ அந்த நாடே உலகை ஆளும் என்கின்ற முதலாம் உலக போர் கோட்பாட்டு தத்துவ வரலாறு சான்றாக அமையப் பெற்றுள்ளது

              அவ்விதமான போரியல் விதிகளின் கீழே உலக வல்லாதிக்க நாடுகள் தமது கடற்படையை விஸ்தரித்து வருகின்றனர்

              அதற்கு என பல மில்லியன் டொலர்களை ஆண்டு தோறும் பாதுகாப்பு செலவீனத்திற்கு ஒதுக்கி புதிய மிதக்கும் போர் கலங்களை உருவாக்கி வருகின்றனர்

              இது நாடுகளுக்கு இடையில் பெரும் போட்டா போட்டி நிலையை உருவாக்க்கி வைத்துள்ளது

              தமது கப்பலானது மூழ்கடிக்கப் படவில்லை என அறிவித்த எதிரி நாட்டு இராணுவம் பின்னர் அது கட்டி இழுத்து வரும் பொழுது மூழ்கியது என்ற செய்தி உக்கிரேன் படைகள் கூறுகின்ற எதிரி படைகளின் இழப்பு விகிதத்தை ஏற்று கொள்ள வைக்கிறது

              உலகின் முதல் எதிரியாக விளங்கும் ரசியாவினது இராணுவ தாக்குதல்களில் தமக்கு ஏற்பட்ட முழு இழப்பு விபரங்களை உக்கிரேன் இராணுவம்

              மூடி மறைத்து எதிரியாக விளங்கும் ரசியாவின் இராணுவ இழப்பை ஊதி பெருக்கி கூறி வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது

                Posted in Uncategorized உலக செய்திகள்

                இஸ்ரேலுக்கு ரசியா எச்சரிக்கை – முறுகல் உச்சம்

                இஸ்ரேலுக்கு ரசியா எச்சரிக்கை – முறுகல் உச்சம்

                உக்கிரேனுக்கு இஸ்ரேல் அரசு ஆயுதங்களை வழங்கி வருகிறது ,இஸ்ரேலின் இந்த

                முடிவிற்கு ரசியா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது

                தொடர்ந்து இஸ்ரேல் இவ்விதம்ஸ் செயல்பட்டால் அது விளைவுகளை சந்திக்கும் என ரசியா எச்சரித்துள்ளது .


                உக்கிரேன் ரசியாவிடம் வீழ்ச்சியுறும் நிலையில் உள்ள போதும், சர்வதேச முக்கிய நாடுகள்


                ஆயுதங்களை அள்ளி வழங்கி வருகின்றமை குறிப்பிட தக்கது.

                  Posted in Uncategorized

                  உக்கிரேனுக்கு 800 மில்லியன் டாலரில் ஆயுதம் வழங்கும் அமெரிக்கா

                  உக்கிரேனுக்கு 800 மில்லியன் டாலரில் ஆயுதம் வழங்கும் அமெரிக்கா

                  உக்கிரேன் நாட்டின் மீது ரசியா இராணுவம் போர் தொடுத்து வருகிறது இவ்வேளை

                  உக்கிரேன் முக்கிய நகரானமரியாபோல் பகுதி ரசியா இராணுவத்திடம் வீழ்ச்சியடைந்துள்ளது

                  இந்த பகுதி வீழ்ச்சியடைந்த பின்னர் அவசர உதவியாக சுமார் 800 மில்லியன்

                  டொலருக்கு அமெரிக்கா உக்கிரேனுக்கு ஆயுதங்களை வழங்குகிறது

                  தமது ஆயுத பயன் பாட்டின் ஊடாக ரசியாவுக்கு எச்சரிக்கை விடுக்க அமெரிக்கா

                  முயல்வதும் ,இவ்வேளை ஆயுதங்களை விற்று தமது பொருளாதாரத்தை கட்டி எழுப்பும் கபட நகர்வில் அமெரிக்கா ஈடுபட்டு வருகிறது ,


                  உதவி என்ற போர்வையில் தனது வியாபாரத்தை அது செவ்வனே செய்து வருகிறது குறிப்பிட தக்கது

                    Posted in Uncategorized

                    ரசியா அணுமின் நிலையம் மீது உக்கிரேன் தாக்குதல் – பற்றி எரியும் காட்சிகள்

                    ரசியா அணுமின் நிலையம் மீது உக்கிரேன் தாக்குதல் – பற்றி எரியும் காட்சிகள்

                    ரசியாவின் முக்கிய அணுமின் உற்பத்தி நிலையமான Dmitrievsky Chemical Plant மீது

                    உக்கிரேன் இராணுவத்தினர் ஏவுகணை தாக்குதலை நடத்தினர் ,இதில் அந்த கூடம் பற்றி எரிந்த வண்ணம் உள்ளது

                    இந்த தாக்குதலில் அங்கு பணிபுரிந்த ஏழுபேர் பலியாகியும் பலர் படுகாயமடைந்துள்ளனர்

                    மரியபோல் நகரம் வீழ்ச்சியடைந்து சில மணிநேரத்தில் ரசியாவுக்குள் உக்கிரேன்

                    தாக்குதலை நடத்தியுள்ளது ,இதற்கு பதிலடியாக ரசியா கெமிக்கல் தாக்குதலை கீவ் நகர் மீது நடத்த கூடும் என எதிர் பார்க்க படுகிறது

                    வரும் மணித்தியாலங்கள் ரசியாவின் அகோர தாக்குதல்கள் உக்கிரேன் கட்டு பாட்டு

                    பகுதிகளில் தீவிரமாக இடம்பெறும் என எதிர் பார்க்க படுகிறது

                      Posted in உலக செய்திகள்

                      ரசியாவிடம் 1400 உக்கிரேன் இராணுவம் சரண்

                      ரசியாவிடம் 1400 உக்கிரேன் இராணுவம் சரண்

                      உக்கிரேன் மீது ரசியா இராணுவம் தொடராக போரை தொடுத்த வண்ணம் உள்ளது ,57 ழாவது நாளாக தொடரும் இந்த போராட்டத்தில் ரசியா இராணுவம் அகோர தாக்குதல்களை நடத்திய வண்ணம் முன்னேறிய வண்ணம் உள்ளது

                      இவ்வேளைஉக்கிரேனில் முக்கிய நகராகவும் அதிக மக்கள் தொகை கொண்ட நகரமாக விளங்கி வரும் மரியபோல் பகுதியில் 1400 க்கு மேற்பட்ட உக்கிரேனிய இராணுவத்தினர் எதிரி இராணுவமான ரசியாவிடம் சரண் அடைந்துள்ளனர்

                      எதிரி படைகள் ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு தம்மிடம் சரண் அடைந்துள்ளனர் என ரஷிய இராணுவம் தெரிவித்துள்ளது

                      இந்த சரணடைதலின் பொழுது எதிரிகள் பயன் படுத்திய கனரக டாங்கிகள் மற்றும் கவச வண்டிகளில் ,அதே எதிரிகளின் சீருடை அணிந்தவாறு ரஷியா இராணுவம்

                      முன்னேறிய வண்ணம் அந்த பகுதிகளில் உருமறைப்பு செய்தவாறு உலாவிய வண்ணம் வருகிறது

                      உருமறைப்பு செய்ய பட்ட நிலையில் அதே இராணுவத்தின் கவச வண்டிகள் அடங்கிகளில் வளம் வரும் ரசியாவினது இந்த சம்பவம் உக்கிரேன் இராணுவத்தின் உளவியல் உரனில் போராடும் செயல்திறனை செயல் இழக்க வைத்துள்ளது

                      கைது செய்யப் பட்ட எதிரி படைகள் உலக கைதிகள் பாதுகாப்பு சட்டதின் கீழ் ரசிய இராணுவதினால் நடத்துமா என்பதே இன்றுள்ள கேள்வியாக உள்ளது .

                      அடி பணிய மறுக்கும் உக்கிரன் இராணுவம் என பறை சாற்றி வந்த உக்கிரேனிய அரச படைகளிற்கும் அதன் தளபதிகளுக்கும்

                      ரசியாவிடம் 1400 உக்கிரேன் இராணுவம் சரண்

                      இவ்விதம் பெரும் தொகையில் தஞ்சம் புகுந்துள்ள எதிர் தரப்பின் இராணுவ காவலர்கள் தஞ்சம் உலக ரீதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

                      உக்கிரேன் இராணுவத்தின் சரணாகதி நடவடிக்கையும்

                      இதனால் அந்த இராணுவத்திற்குள் எழப் போகும் உலவியில் கலக்கமும் தொடர்ந்து ரசிய படைகளுடன் போரிடும் தாக்கு திறனை அதிகரிக்குமா என்ற கேள்வி எழுகிறது

                      போல் உளவியல் தளத்தில் பாதிப்பை எந்த படைகள் ஏற்படுத்துகிறோதோ அவர்களே அந்த போரில் வெற்றி பெறுவார்கள் ,

                      இதற்க்காக இராணுவம் மற்றும் அரச இயந்திரம் ஊடகங்களை பயன் படுத்தி வெற்றி பரப்புரைகளை ஆற்றி வரும்

                      இலங்கையில் இறுதி போரில் இடம்பெற்ற போரில் சிங்ளக தரப்பு நடத்திய ஊடக ஆதார பரப்புரை ஒன்றை எடுத்து கூறலாம்

                      அதுபோலவே ரசியாவிடம் சரண் அடைந்த உக்கிரேன் இராணுவத்தை வைத்து ரசியா படைகள் பரப்புரை புரிந்து வருகின்றனர் ,

                      இந்த செயல் பாடு ரசியா எதிர் பார்க்கும் உளவியல் வெற்றியை ஈட்டி தருமா என்பதே காலத்தின் முன் விரிந்து கிடக்கும் களமுனை சாட்சிகளாக மாற்றம் பெற்றுள்ளன

                      • வணனி மைந்தன் –
                        Posted in Uncategorized

                        உக்கிரேன் முக்கிய நகர் ரசியாவிடம் வீழ்ந்தது -வெற்றியில் ரஷியா

                        உக்கிரேன் முக்கிய நகர் ரசியாவிடம் வீழ்ந்தது -வெற்றியில் ரஷியா

                        உக்கிரேன் முக்கிய நகரான மரியபோல் மீளவும் ரஷியா படைகள் வசம் முற்று முழுதாக வீழ்ச்சியடைந்துள்ளது

                        இந்த நகர் வீழ்ச்சியடைந்த நிலையில் உக்கிரேன் பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளது

                        ,தாம் தொடர்ந்து ரசியாவுடன் பேசிட தயார் என்கிறது ,


                        வெற்றி வீரர்கள் தாம் என பறை சாற்றும் உக்கிரேன் இந்த அறிவிப்பு கேலியாகி வருகிறது

                          Posted in Uncategorized

                          உக்கிரேன் இராணுவம் சரண் அடைய வேண்டும் – ரஷியா மிரட்டல்

                          உக்கிரேன் இராணுவம் சரண் அடைய வேண்டும் – ரஷியா மிரட்டல்

                          உக்கிரேன் மாறியபோல் பகுதியில் மேலும் போர் வெடித்துள்ள நிலையில் அந்த

                          பகுதியை காவல் காக்கும் உக்கிரேன் இராணுவம் சரண் அடைய வேண்டும் என ரசியா

                          மிரட்டல் விடுத்தது வருகிறது

                          இதனை ஏற்க அந்த நாட்டு இராணுவம் மறுத்து போரிட்டு வருகிறது


                          சரண் அடைய மறுத்தால் பெரும் தாக்குதல்கள் நடத்த படும் என்பது ரசியாவின் வாதமாக உள்ளது

                          இங்கே ரசியா கெமிக்கல் ஆயுதங்களை பயன்படுத்தலாம் என எதிர் பார்க்க படுகிறது

                            Posted in Uncategorized

                            ரஷியா அணு ஆயுதங்களை பயன்படுத்தும்- பதட்டத்தில் உக்கிரேன்

                            ரஷியா அணு ஆயுதங்களை பயன்படுத்தும்- பதட்டத்தில் உக்கிரேன்

                            உக்ரைன் மீது ரஷியா தொடுத்துள்ள போர் 52-வது நாளாக நீடிக்கும் நிலையில்,உக்ரைனுக்கு ஆயுத உதவி அளிப்பதை உடனடியாக நிறுத்துமாறு, அமெரிக்கா மற்றும் நேட்டோ அமைப்பு நாடுகளை ரஷியா எச்சரித்துள்ளது.

                            லைவ் அப்டேட்ஸ் உக்ரைன்- ரஷியா அணு ஆயுதங்களை பயன்படுத்தும்: ஜெலன்ஸ்கி கவலை
                            ஜெலன்ஸ்கி, அணு ஆயுதம்
                            16.04.2022

                            03.20: உக்ரைனில் ரஷிய படைகள் பின்னடைவை சந்தித்தால், விரக்தியில் அணு ஆயுதங்களை அந்த நாடு பயன்படுத்தும் என்று, உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி

                            தெரிவித்துள்ளார். இது தொடர்பான அமெரிக்க சிஐஏ இயக்குநரின் கருத்தை எதிரொலித்துள்ள அவர், ரஷியாவை பயங்கரவாத ஆதரவு நாடு என பிரகடனபடுத்துமாறு அமெரிக்க அதிபர் பைடனை கேட்டுக் கொண்டுள்ளார்.

                            02.30: உக்ரைனுக்கு ஆயுத உதவி அளிப்பதை உடனடியாக நிறுத்துமாறு, அமெரிக்கா மற்றும் நேட்டோ அமைப்பு நாடுகளுக்கு ரஷியா வலியுறுத்தி உள்ளது. இது மோசமான

                            விளைவுகளை ஏற்படுத்தும் என்றும்
                            ரஷியா எச்சரித்துள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

                              Posted in Uncategorized

                              ரசியா இராணுவம் வசம் விழும் உக்கிரேன் முக்கிய நகரம்

                              ரசியா இராணுவம் வசம் விழும் உக்கிரேன் முக்கிய நகரம்

                              உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி 24-ந்தேதி தொடங்கிய போர் நீடித்தபடி இருக்கிறது. தொடக்கத்தில் உக்ரைனின் தலைநகர் கிவ் உள்பட அனைத்து நகரங்கள் மீது ரஷிய படைகள் ஏவுகணைகள் வான்வழி தாக்குதல்களை நடத்தின.

                              சில சிறிய நகரங்களை கைப்பற்றிய ரஷிய படையால் தலைநகர் கிவ் உள்ளிட்ட பெரிய

                              நகரங்களுக்குள் நுழைய முடியவில்லை. உக்ரைன் ராணுவ வீரர்கள் எதிர் தாக்குதல் நடத்தி தடுத்து நிறுத்தினார்கள்.

                              இதற்கிடையே கிழக்கு உக்ரைன் மற்றும் துறைமுக நகரமான மரியுபோல்

                              ஆகியவற்றின் மீது கவனம் செலுத்துவோம் என்று அறிவித்து ரஷியா அங்கு தனது தாக்குதல்களை தீவிரப்படுத்தியது.

                              ஏற்கனவே மரியுபோலுக்குள் நுழைந்த ரஷிய படைகள் அந்நகரத்தை கைப்பற்ற தங்களது தாக்குதல்களை அதிகரித்தனர். உக்ரைனில் ரஷிய படைகளின் தாக்குதலில்

                              மரியுபோல் நகரம் பெறும் சேதத்தை சந்தித்துள்ளது. அங்குள்ள 95 சதவீத கட்டிடங்கள் அழிக்கப்பட்டுள்ளன.

                              மேலும் அந்நகரில் அதிகமான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர் என்று அந்நகர மேயர் தெரிவித்தார்.

                              இந்த நிலையில் மரியுபோல் நகரை கடந்த 6 வாரங்களாக முற்றுகையிட்டு கடுமையான தாக்குதலை நடத்திய ரஷிய படைகள் அந்நகருக்குள் பெருமளவில்

                              முன்னேறியுள்ளது. இதனால் மரியுபோல் நகரை விரைவில் ரஷியா கைப்பற்றும் நிலை உள்ளது.

                              மரியுபோலை பாதுகாத்து வந்த உக்ரைன் வீரர்களுக்கு உணவு மற்றும் ஆயுதங்கள் சில நாட்களாக கிடைக்கவில்லை. அவர்களை ரஷிய படையினர் சுற்றி வளைத்து விட்டனர்.

                              இதனால் உக்ரைன் படையினர் எதிர்த்து போராட முடியாத நிலையில் உள்ளனர். மரியுபோலில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட உக்ரைன் வீரர்கள் சரண் அடைந்துள்ளதாக ரஷியா தெரிவித்துள்ளது.

                              மரியுபோல் நகரை கைப்பற்ற ரஷியா தீவிரம் காட்டி வருகிறது. கடந்த 2014-ம் ஆண்டு உக்ரைனின் கிரீமியா தீபகற்பத்தை ரஷியா தாக்குதல் நடத்தி கைப்பற்றியது. கிரீமியா

                              தீபகற்பத்தையும் ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள டான்பாஸ் பிராந்திய பகுதிகள் இடையே மரியுபோல் அமைந்துள்ளது.

                              அந்த நகரை கைப்பற்றினால் கிரீமியா மற்றும் டான்பாஸ் இடையே இணைப்பை ஏற்படுத்த முடியும் என்று ரஷியா நினைக்கிறது.


                              இதனால் அந்நகரை கைப்பற்ற ரஷியா முனைப்பு காட்டுகிறது.

                                Posted in Uncategorized

                                உக்ரைனுக்கு 800 மில்லியன் டாலர் ராணுவ உதவி- அமெரிக்கா அறிவிப்பு

                                உக்ரைனுக்கு 800 மில்லியன் டாலர் ராணுவ உதவி- அமெரிக்கா அறிவிப்பு

                                ரஷிய போரினால் பாதிப்பு அடைந்துள்ள உக்ரைனுக்கு 1.7 பில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ ஆயுதங்கள் உள்ளிட்ட உதவிகளை அமெரிக்கா ஏற்கனவே வழங்கியுள்ளது.

                                உக்ரைனுக்கு மேலும் 800 மில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ உதவி – அதிபர் ஜோ பைடன் ஒப்புதல்

                                ரஷியா – உக்ரைன் இடையே போர் நடந்து வரும் நிலையில் மறுபுறம் சமாதான பேச்சுவார்த்தையும் நடைபெற்று வருகிறது.

                                இந்தப் போரில் உக்ரைனுக்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் ராணுவ ஆயுதங்கள், தளவாடங்கள் உள்ளிட்ட பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது.

                                இந்நிலையில், உக்ரைனுக்கு மேலும் 800 மில்லியன் டாலர் மதிப்பிலான ராணுவ ஆயுதங்கள் உள்ளிட்ட உதவிகளை வழங்க அமெரிக்கா அதிபர் ஜோ பைடன் ஒப்புதல் அளித்துள்ளார்.

                                இதன்மூலம் உக்ரைனுக்கு ராணுவ உபகரணங்கள், வெடிபொருட்கள்,
                                ராக்கெட்டுகள், மருந்துப் பொருட்கள் உள்பட பல்வேறு ராணுவ ஆயுதங்களை அமெரிக்கா வழங்குகிறது

                                  Posted in Uncategorized

                                  உக்கிரேனில் மனித புதை குழியில் 1200 சடலங்கள் மீட்பு

                                  உக்கிரேனில் மனித புதை குழியில் 1200 சடலங்கள் மீட்பு

                                  உக்கிரேன் தலைநகர் கீவ் நகரம் அருகில் உள்ள நகரம் ஒன்றில் பெரும் குழிதோண்டி

                                  புதைக்க பட்ட நிலையில் 1200 மனித சடலங்கள் மீட்க பட்டுள்ளன

                                  ரசியா உக்கிரேனில் பெரும் மனித பேரழிவை நடத்தியுள்ளது எனவும் இவர்கள் புரிந்த

                                  போர்குற்றத்திற்கு தண்டனை
                                  வழங்க வேண்டும் என ஐநா தெரிவித்துள்ளது

                                    Posted in Uncategorized உலக செய்திகள்

                                    உக்கிரேனுக்கு 42 உளவு விமானங்களை விற்ற துருக்கி – ரசியா கண்டணம்

                                    உக்கிரேனுக்கு 42 உளவு விமானங்களை விற்ற துருக்கி – ரசியா கண்டணம்

                                    துருக்கி நட்டு உளவு விமானங்களே உக்கிரேனில் ரசியா நாட்டின் தாக்குதல்களை

                                    தடுத்து நிறுத்தவும் பேரழிவுகளை ஏற்படுத்தவும் துருக்கி உதவி புரிந்து வருவதாக உக்கிரேன் தெரிவித்துள்ளது

                                    இவை ரசியாவுக்கு பெரும் நெருக்கடியை தோற்றுவித்துள்ளது

                                    மார்ச் மாதம் அளவில் மட்டும் சுமார் 42 20 TB2 unmanned combat aerial vehicles (UCAV) விமானங்களை விற்பனை செய்துள்ளது


                                    இந்த விமான விற்பனைக்கு எதிராக துருக்கியை ரசியா கடிந்துள்ளது

                                    தமது இராணுவம் முடக்க பட துருக்கி காரணமாக அமைந்துள்ளதை எண்ணி ரசியா கொதிப்பில் உறைந்துள்ளது

                                      Posted in Uncategorized உலக செய்திகள்

                                      ரயில் நிலையம் மீது ஏவுகணைத் தாக்குதல் -சிதறிய 50 உடல்கள்

                                      ரயில் நிலையம் மீது ஏவுகணைத் தாக்குதல் -சிதறிய 50 உடல்கள்

                                      கிழக்கு உக்கிரேன் Kramatorsk பகுதி ரயில்வே நிலையம் மீது ரசிய இராணுவம்

                                      நடத்திய ஏவுகணை தாக்குதலில் சிக்கி ஐம்பது மக்கள் பலியாகினர்

                                      மேலும் பல டசின் பேர் படுகாயமடைந்துள்ளனர்

                                      ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவையில் இருந்து ரசியா நீக்க பட்ட 24

                                      மணித்தியாலத்தில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது குறிப்பிட தக்கது