Tag: அழுகை
அழுகை தரும் அம்மா பாடல்
அழுகை தரும் அம்மா பாடல்
அழுகை தரும் அம்மா பாடல் புதிய பாடல் |இளங்கோ செல்லப்பா |பாவேந்தன் | சங்கர் லண்டன் |new tamil songs
பாடியவர் – பாவேந்தன் இளங்கோவன்
இசை – இளங்கோ செல்லப்பா
-தயாரிப்பு – சந்தன் லண்டன்
வெளியீடு – எதிரி இணையம்
வன்னிமைந்தன் டிக்டாக் தளத்தின் ஊடாக அறிமுக படுத்தும் எட்டாவது பாடலாசிரியர் ,இவரை அறிமுக ப்படுத்திய இளங்கோ செல்லப்பா அவர்களுக்கு மிக்க நன்றிகள்.
தாயின் உடைய வலிகளை சேவையை பிரதி படுத்தும் பாடலாக உள்ளது . |இளங்கோ செல்லப்பாசிறந்த இசையில் |மதுக்குரோலன் பாவேந்தன் பாடி அசத்தியுள்ளார் .
|வன்னி மைந்தனின் எதிரி இணையம் வெளியீடு செய்துள்ளது . srilanka tamil song
- கறுத்த அம்மா வாரா கலர் கலரா பேசுறா | KARUTHTHA AMMA VAARAA kALAR KALARA PESURAA|604|

- கண்ணால கண்ணால பாக்கிற காதலின் வலி சுமந்த பாடல் வன்னி மைந்தன் எழுதியுள்ளார் |603

- நான் போறது தனி பாத |naan porathu Thani Paatha |602| computer G | VANNI MAINTHAN SongS

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா |601

- பொதுவா பொதுவா நீ என்ன பொதுவா

பெண்கள் அழுகை என்ன செய்யலாம்
பெண்கள் அழுகை என்ன செய்யலாம்
பெண்கள் அழுகை என்ன செய்யலாம் ,சமீப சில நாட்களாக தங்களால் சமையலில் உப்பு, புளி ருசி பார்க்க முடியவில்லை என்று இல்லத்தரசிகள் முகம் சுழிக்கின்றனர். உப்புப் புளி தட்டுப்பாட்டால் அடுக்களைச் சமையல் கசந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.
நாட்டில் தற்போது உப்பு, புளியம்பழம் ஆகிய சுவையூட்டிகளுக்கு கடும் தட்டுப்பாடும் கிராக்கியும் காணப்படுவதால் இல்லத்தரசிகளால் சமையலில்
உப்பு, புளி ருசி பார்க்க முடியவில்லை. இவ்விரண்டு சுவையூட்டிகக்கான விலையும் எகிறியுள்ளது.
50 கிராம் புளியம்பழம் 100 ரூபாவுக்கு இரகசியமாக விற்கப்படுகிறது. அதேபோல கடைகளில் கல் உப்பு பெற முடியாத நிலை உள்ளது. கைவசம்
இருக்கும் தூள் உப்பை கடைக்காரர்கள் அதன் வழமையான வாடிக்கையாளர்களுக்கு மாத்திரம் இரகசியமாக விற்பனை செய்கிறார்கள்.
தூள் உப்பை இரகசியமாக வழங்கும்போது இந்த உப்பை மருந்து போல பயன்படுத்துங்கள் என்று கடைக்கார்கள் வாடிக்கையாளர்களுக்கு அறிவுரை
வழங்குவதையும் காணக்கூடியதாகவுள்ளது. சதோச விற்பனை நிலையங்களிலும் உப்பு, புளியம்பழம் என்பன விற்பனைக்கு இல்லை.
இதேவேளை, சித்திரைப் புத்தாண்டு காலத்தில் சுமார் ஏழு இலட்சத்திற்கு மேற்பட்ட அஸ்வெசும பயனாளிகளுக்கு சதோச விற்பனை நிலையங்களினூடாக 5000 ரூபாய் பெறுமதியான உலருணவுப் பொதியை
சலுகை விலையில் 2500 ரூபாவுக்குப் பெற்றுக் கொள்ளலாம் என்று அரசாங்கம் அறிவித்திருந்த போதிலும் அத்தகைய பொதிகள் எதுவும் இதுவரை விற்பனை செய்யப்படவில்லை.
கடந்த ஏழாம் திகதி தொடக்கம் நாட்டிலுள்ள அனைத்து சதோச நிலையங்களிலும் இந்த 5000 ரூபாய் பெறுமதியான சலுகை உலருணவுப்
பொதிகளை 2500 ரூபாவுக்குப் பெற்றுக் கொள்ளலாம் என்று அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டிருந்தது. அரச ஊடகங்களும் இந்தச் செய்தியை திரும்பத் திரும்ப அறிவித்து வந்தன.
ஆனால், உள்ளுரதிகாரசபை தேர்தல் தொடர்பான பிரகடனத்தால் இத்தகைய புத்தாண்டு சலுகை உலருணவுப் பொதி விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஏற்கனவே, விநியோகிப்பதற்காக நாடெங்கிலுமுள்ள சதோச விற்பனை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட பொதிகள் மீளப் பெறப்பட்டதாக தெரிய வந்துள்ளது.
இவர்கள் சொல்வதை கேட்டால் அழுகை வரும்
இவர்கள் சொல்வதை கேட்டால் அழுகை வரும்
இவர்கள் சொல்வதை கேட்டால் அழுகை வரும் .வவுனியாவை சேர்ந்த வறுமையில் வாடிய குடும்பம் ஒன்றுக்கு 16 ஆம் இலக்கத்தை சேர்ந்த மலச கூடம் அமைத்து வழங்க பட்டுள்ளது .
இந்த கழிப்பறை அமைக்க சுப்பிரமணியம் பெயரில் நோர்வையை சேர்ந்த அக்கா ஒருவர் அமைத்து கொடுத்துள்ளார் .அவருக்கு எமது நெஞ்சார்ந்த நன்றிகள் .
இதில் அழுத்தி காணொளி பார்க்கவும்
அழுகை சரத் பொன்சேகா
அழுகை சரத் பொன்சேகா
அழுகை சரத் பொன்சேகா ,தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திசாநாயக்க மற்றும் முன்னாள் பிரதமர் தினேஸ் குணவர்தன ஆகியோர் பொதுத் தேர்தலில் தமது கட்சிகளில் போட்டியிட வாய்ப்பு வழங்க முடியாது
என தெரிவித்ததாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா கூறியுள்ளார்.
இதன் காரணமாகவே இம்முறை பொதுத்தேர்தலில் தான் போட்டியிடுவதில்லை என முடிவு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வருட பொதுத் தேர்தலில் திசைகாட்டி மற்றும் எரிவாயு சிலிண்டர் சின்னத்தில் போட்டியிடுவதற்கான பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததன்
காரணமாக இந்த தீர்மானத்தை எடுத்ததாக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா மேலும் கூறியுள்ளார்.
அர்ச்சுனா இராமநாதன் கைது மக்கள் அழுகை
அர்ச்சுனா இராமநாதன் கைது மக்கள் அழுகை
அர்ச்சுனா இராமநாதன் கைது மக்கள் அழுகை ,வைத்திய கலாநிதி அர்ச்சுனா இராமநாதன் அவர்கள் நீதிமன்ற உத்தரவிற்கு அமைவாக தடுத்து வைக்க பட்டுள்ளார் .
இன்று நீதிமன்ற வழக்கிற்கு சென்ற இவர் கைது செய்யப்பட்டுள்ளார் .
அர்ச்சுனா இராமநாதனை நேசிக்கும் மக்களிற்கு இந்த கைது ,தடுத்து வைப்பானது மிக பெரும் நெருடலை ஏற்படுத்தியுள்ளது .
பல ஆண் பெண்கள் அழுகையோடு எமக்கு அழைத்து தமது கண்ணீர் மலர்ந்த குமுறலை தெரிவிப்பதில் இருந்து அர்ச்சுனா இராமநாதன் என்கின்ற இந்த மனிதன் மக்கள் மனதில் எவ்விதம் நீங்காத இடம் பிடித்து ஆட்சி செய்கின்றார் என்பதை உணர முடிகிறது .
தமிழ் இனத்தின் மக்கள் விடியலிற்கு வருகை தரும் ஒருவர் இவ்விதம் நசுக்க படுவது ,மிக பெரும் நெருடலை ஏற்படுத்தியுள்ளது .
நீதிமன்றில் நடந்த விடயம் என்ன என்பதை முழுமையாக இந்த காணொளியில் உள்ளது கேட்டு பாருங்கள் மக்களே .
தளராது அர்ச்சுனாவிற்கு ஆதரவாக நாம் பயணிப்போம் .
- ரஷ்ய சுகாதார அமைச்சரின் இலங்கை விஜயம் நிறைவு

- உரம் கொள்வனவில் அனுரா அரசு மோசடி

- நடிகர் ஜீவா தந்தை சவுத்திரி மரணம்

- 200 000 இலஞ்சம் பெற்ற காவலர் கைது

- மாகாண சபை தேர்தல் நடக்கும் அனுரா

- விஜய்க்கு வாழ்த்து தெரிவித்த நாமல்

- இலங்கை மின்சார சபை முக்கிய அறிவிப்பு

- ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி கபில சந்திரசேனவுக்குப் பிணை

- தேர்தல் தோல்வி கண்ணீருடன் சீமான் வெளியிட்ட வீடியோ | Seeman Video about Election results 2026

- எரிபொருள் விலை உயர்வு பேரூந்துகள் திண்டாட்டம்

உன்னை நினைத்தால் அழுகை வரும் ..!
உன்னை நினைத்தால் அழுகை வரும் ..!
இன்றைய பொழுதில் எம் நிகழ்வு
இதயமே உனக்கு தெரிகிறதா
இன்றைய நாளில் இணைந்தோம்
இன்றந்த நாள் புரிகிறதா
ஆண்டுகள் நூறு கழிந்தாலும்
அதுபோல் சுகமொன்று மீள்வருமா
அத்தனை ஆனந்தம் அதிலிருக்கு
அன்பே உனக்கு தெரிகிறதா
துளியாய் கழிந்த நிமிடங்களை
தூசி தட்டி பார்த்திடுவாய் – கண்
தூரிகையால் எனை வரைந்த
துடிப்பை நீயும் புரிந்திடுவாய்
கொட்டிய கண்ணீர் துளிகளையே – ஒரு
கொள்கலன் கொண்டு நிரப்பிடலாம்
கொண்டை கலைந்த நிமிடங்களை
கொட்டி சேதி சொல்லிடலாம்
பக்கத்தில் நீ இருந்த நிமிடங்களோ – ஒரு
பட்டி பொங்கல் போலிருக்கும் – இன்று
பக்கங்கள் திறந்து பார்க்கையிலே
பார்விழி இரண்டில் நீர் இருக்கும் …!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 02-06-2022
























