Tag: மாயம்
யாழில் படகு கவிழ்ந்து 15பேர் மாயம்
யாழில் படகு கவிழ்ந்து 15பேர் மாயம்
யாழில் படகு கவிழ்ந்து 15பேர் மாயம் ,யாழ்ப்பாணம் குருநகர் படகுத்துறையில் படகு கவிழ்ந்ததில் இருவர் உயிரிழந்தனர், 15 பேர் காணாமல் போயினர்
யாழ்ப்பாணம் குருநகர் படகுத்துறை
யாழ்ப்பாணம் குருநகர் படகுத்துறையில் இன்று (6) படகு கவிழ்ந்ததில் இருவர் உயிரிழந்தனர், மேலும் 5 பேர் மீட்கப்பட்டனர்.
விபத்துக்குப் பிறகு மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மூன்று பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் உறுதிப்படுத்தின.
அந்தக் கப்பலில் 25 யாத்ரீகர்கள் இருந்தனர், மேலும் காணாமல் போன 15 பேரைத் தேடும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
யாழ்ப்பாணம் பாலைதீவில் உள்ள குருநகர் படகுத்துறையில் இருந்து புறப்பட்ட படகு ஒன்று இவ்வாறு கவிழ்ந்துள்ளது.
யாழ்ப்பாணம் குருநகர் படகுத்துறை
யாழ்ப்பாணம் குருநகர் படகுத்துறையில் இன்று (6) ஒரு படகு கவிழ்ந்ததாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.
சம்பவம் நடந்த நேரத்தில் பாலைத்தீவு திருவிழாவிற்குச் சென்ற யாத்ரீகர்கள் குழுவை ஏற்றிச் சென்ற படகு இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
பலர் நீரில் மூழ்கி இறந்ததாகக் கூறப்படுகிறது, மேலும் மீட்புப் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.
நீராட சென்ற 2மாணவர்கள் மாயம்
நீராட சென்ற 2மாணவர்கள் மாயம்
நீராட சென்ற 2மாணவர்கள் மாயம் பயாகல கடற்பகுதியில் நீராட சென்ற 2 மாணவர்கள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.
பயாகல பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாடு
இந்த விடயம் தொடர்பில் பயாகல பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாடுக்கு அமைய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
காணாமல் போன 2 மாணவர்களும் கல்பான மற்றும் பாணந்துறை ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 15 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.
காணாமல் போயுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த இருவரும் மேலதிக வகுப்புக்கு செல்வதாக பெற்றோரிடம் கூறி விட்டு, அந்த கடற்பகுதிக்கு நீராட சென்ற நிலையில் காணாமல் போயுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் பயாகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்
நீரில்மூழ்கி இரு இளைஞர்கள் மாயம்
நீரில்மூழ்கி இரு இளைஞர்கள் மாயம்
நீரில்மூழ்கி இரு இளைஞர்கள் மாயம் நாட்டின் இருவேறு பகுதிகளில் நீரில் மூழ்கி இரு இளைஞர்கள் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நாவுல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட போவதென்ன
நாவுல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட போவதென்ன நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற பிபில, வனமெதகம பகுதியைச் சேர்ந்த 27 வயதான இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
நாவுல பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், நேற்று (20) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
குறித்த இளைஞர் மேலும் இருவருடன் போவதென்ன நீர்த்தேக்கத்தில் நீராடிக் கொண்டிருந்த போது அந்த அனர்த்தம் இடம்பெற்றதாக நாவுல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கடற்கரையில் நேற்று
இதற்கிடையில், அஹங்கம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அஹங்கம கடற்கரையில் நேற்று (20) நீராடச் சென்ற இளைஞர் ஒருவரும் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார்.
காணாமல் போனவர் வத்தளையைச் சேர்ந்த 24 வயதான இளைஞர் என தெரியவந்துள்ளது.
கடற்படை அதிகாரிகளின் உதவியுடன் நாவுல பொலிஸாரும் அஹங்கம பொலிஸாரும் காணாமல் போன இளைஞர்களைத் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
நைஜீரியாவில் படகு கவிழ்ந்ததில் 40பேர் மாயம்
நைஜீரியாவில் படகு கவிழ்ந்ததில் 40பேர் மாயம்
நைஜீரியாவில் படகு கவிழ்ந்ததில் 40பேர் மாயம் நைஜீரியாவில் படகு கவிழ்ந்ததில் 40க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.
50 பயணிகளை ஏற்றிச் சென்ற படகு
நைஜீரியாவின் வடமேற்கு சோகோட்டோ மாநிலத்தில் குறைந்தது 50 பயணிகளை ஏற்றிச் சென்ற படகு கவிழ்ந்ததில் 40க்கும் மேற்பட்டோர்
காணாமல் போயுள்ளதாக அந்நாட்டின் அவசரகால நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
“சுமார் 10 பேர் மீட்கப்பட்டுள்ளனர், அதே நேரத்தில் 40க்கும் மேற்பட்ட பயணிகள் இன்னும் காணவில்லை” என்று தேசிய அவசரகால மேலாண்மை நிறுவனம் (NEMA) ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
படகு கோரோனியோ சந்தைக்குச் சென்று கொண்டிருந்தபோது கவிழ்ந்ததாகக் கூறப்படுகிறது.
சம்பவம் குறித்த ஆரம்ப அறிக்கை
சம்பவம் குறித்த ஆரம்ப அறிக்கைகளைப் பெற்றவுடன், நிறுவனம் உடனடி நடவடிக்கையைத் தொடங்கியதாக NEMA இயக்குநர் ஜெனரல் ஜுபைடா உமர் தெரிவித்தார்.
சோகோட்டோவில் உள்ள NEMAவின் செயல்பாட்டு அலுவலகம், உள்ளூர் அதிகாரிகள் மற்றும் அவசர சேவைகளுடன் ஒருங்கிணைந்து, காணாமல்
போன பயணிகளைக் கண்டுபிடிக்க தேடல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
“உயிர்களைக் காப்பாற்றுவதற்கும், சரியான நேரத்தில் புதுப்பிப்புகளை வழங்குவதற்கும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்குத் தேவையான அனைத்து
ஆதரவையும் ஒருங்கிணைப்பதற்கும் நிறுவனம் அதன் உறுதிப்பாட்டை பொதுமக்களுக்கு உறுதியளிக்கிறது,” என்று அந்த அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் 20 குழந்தைகள் மாயம்
அமெரிக்காவில் 20 குழந்தைகள் மாயம்
அமெரிக்காவில் 20 குழந்தைகள் மாயம் ,டெக்சாஸ் வெள்ளத்தில் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 20 குழந்தைகள் காணாமல் போயுள்ளனர்
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள கெர் கவுண்டியில், கடுமையான வானிலை மற்றும் வெள்ளத்தால் மாநிலத்தின் சில பகுதிகள்
பாதிக்கப்பட்ட பின்னர், பதின்மூன்று பேர் இறந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
டெக்சாஸ் லெப்டினன்ட் கவர்னர் டான் பேட்ரிக் சுமார் 20 குழந்தைகள் காணாமல் போயுள்ளதாக உறுதிப்படுத்திய கோடைக்கால முகாமில் உட்பட, மேலும் பலரைக் காணவில்லை.
“45 நிமிடங்களுக்குள், குவாடலூப் நதி 26 அடி உயர்ந்து, அது ஒரு அழிவுகரமான வெள்ளம், சொத்துக்களையும் துரதிர்ஷ்டவசமாக உயிர்களையும் பறித்தது,” என்று அவர் வெள்ளிக்கிழமை ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
சுமார் 750 குழந்தைகள் கலந்து கொண்ட அனைத்து பெண்கள் முகாம் மிஸ்டிக்கின் அறிக்கையை அவர் வாசித்தார். வெள்ளம் “பேரழிவு நிலை” இருந்ததாக அவர் கூறினார்.
பெற்றோரைத் தொடர்பு கொள்ளாவிட்டால், அவர்களின் குழந்தை கணக்கிடப்படும் என்றும் பேட்ரிக் தெரிவித்தார்.
“[காணாமல் போன குழந்தைகள்] தொலைந்து போயிருக்கிறார்கள் என்று அர்த்தமல்ல. அவர்கள் தொடர்பு கொள்ளாமல் இருக்கலாம்,” என்று ஆளுநர் கிரெக் அபோட்
விடுமுறையில் இருக்கும்போது பொறுப்பு ஆளுநராக இருக்கும் லெப்டினன்ட் கவர்னர் மேலும் கூறினார்.
மீட்பு முயற்சிகளுக்கு உதவ கூடுதல் உபகரணங்கள் எதுவும் தேவையில்லை என்று கூறி, பொதுமக்களிடமிருந்து தனிப்பட்ட ஹெலிகாப்டர்கள் மற்றும் ட்ரோன்கள் வழங்கப்பட்டதை பேட்ரிக் ஒப்புக்கொண்டார்.
மீட்பு நிறுவனங்களில் 14 ஹெலிகாப்டர்கள், 12 ட்ரோன்கள், ஒன்பது மீட்புக் குழுக்கள் மற்றும் நீரில் நீச்சல் வீரர்கள் உள்ளனர் – மொத்தம் 400-500 பேர் தரையில் உள்ளனர் என்று அவர் கூறினார்.
இரவு முழுவதும் தேடுதல் தொடரும் என்று மற்றொரு அதிகாரி உறுதிப்படுத்தினார்.
கடலுக்கு நீராடச் சென்ற கனேடிய பிரஜை மாயம்
கடலுக்கு நீராடச் சென்ற கனேடிய பிரஜை மாயம்
கடலுக்கு நீராடச் சென்ற கனேடிய பிரஜை மாயம் ,ஹிக்கடுவ கடலில் நீஶாடச் சென்ற வௌிநாட்டு பிரஜை ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளதாக ஹிக்கடுவ பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் 19 வயதுடைய கனேடிய பிரஜை ஒருவரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக தெரியவருகிறது.
குறித்த நபர் நீராடச் சென்ற இடமானது ‘ஆபத்தான பகுதி’ என்ற எச்சரிக்கை பலகை பொறிக்கப்பட்டிருந்ததாகவும், ஆனால் குறித்த நபர் அது குறித்து பொருட்படுத்தாமல்
அவ்விடத்தில் நீராடச் சென்றுள்ளதாகவும் விசாரணைகளின் ஊடாக தெரியவந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்நிலையில், பொலிஸ் உயிர் காப்புப் பிரிவினர், இலங்கை கடற்படை அதிகாரிகள் இணைந்து காணாமல் போன நபரை கண்டறியும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹிக்கடுவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ஆட்டிறைச்சி மாயம் 4பொலிசார் பணிநீக்கம்
ஆட்டிறைச்சி மாயம் 4பொலிசார் பணிநீக்கம்
ஆட்டிறைச்சி மாயம் 4பொலிசார் பணிநீக்கம் ,பொலிஸ் நிலைய குளிரூட்டியில் பாதுகாப்பாக களஞ்சியப்படுத்தப்பட்டிருந்த ஆட்டிறைச்சிகள் காணாமல் போன சம்பத்தினை அடுத்து 4 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு தண்டனை இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்கு அட்டாளைச்சேனை பகுதி வீடு ஒன்றில் அறுக்கப்பட்ட ஆடுகள் தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸாருக்கு முறைப்பாடு கடந்த வெள்ளிக்கிழமை(26) அன்று வழங்கப்பட்டிருந்தது.
இதற்கமைய விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் விலங்குகள் அறுக்கும் தொழுவத்தில் அறுக்கப்படாமல் அட்டாளைச்சேனை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வைத்து 4 ஆடுகளை அறுத்த கடை உரிமையாளரை பொலிஸார் கைது செய்திருந்தனர்.
பின்னர் குறித்த சந்தேக நபர் அக்கரைப்பற்று நீதிமன்றில் ஆஜர் படுத்தப்பட்டிருந்தார்.
அவரது சார்பில் ஆஜராகியிருந்த சட்டத்தரணி தனது குறித்த ஆட்டினை தனது வீட்டு நிகழ்வு ஒன்றிக்கு அறுத்திருந்தாகவும் குற்றத்தினை ஏற்றுக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார்.
குறித்த வழக்கின் சான்றுப் பொருளான ஆட்டிறைச்சி பொலிஸ் நிலையத்தில் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் நீதிமன்றிடம் தெரிவித்துள்ளனர்.
பொலிஸ் நிலையத்தில் மாயமான இறைச்சி
அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்துக்கு குறித்த சான்றுப் பொருளை பார்வையிட நீதிவான் சென்ற வேளையில் ஆட்டிறைச்சி மூட்டையில் கட்டி பெக்கோ இயந்திரத்தில் புதைப்பதற்க தயாராக வைத்திருந்ததை அவதானித்துள்ளார்.
குறித்த சான்றுப் பொருள் குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்டிருப்பதாக ஏற்கனவே கூறிய பொலிஸார் திடீரென பெக்கோ இயந்திரத்தில் வைத்திருப்பது பாரிய சந்தேகத்தை நீதிவானுக்கு ஏற்படுத்தி இருந்தது.
யாரும் எதிர்பாராத வண்ணம் நீதவான் பெக்கோவில் இருந்த ஆட்டிறைச்சி மூட்டையைப் பிரிக்குமாறு பணித்திருந்தார். அதன்போது குறித்த ஆட்டின் பின்னங்கால் மற்றும் சதைகள் யாவும் மாயமாக மறைந்திருந்தன.
குறித்த ஆட்டிறைச்சியின் பின்னங்கால்கள் கூட தொலைந்து போயிருந்தன. இது பற்றி வினவியபோது ஆட்டிறைச்சியை சில பகுதிகளை தேடுதலுக்குச் சென்ற பொலிஸார் எடுத்துச் சென்றது தெரியவந்துள்ளது.
இதனை அடுத்து அக்கரைப்பற்று நீதிமன்ற நீதவான் ஏ.சி.றிஸ்வான் அக்கரைப்பற்று உதவிப் பொலிஸ் அத்தியட்சகருக்கு கடந்த வெள்ளிக் கிழமையன்று விசாரணை நடத்துமாறு உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இதன் அடிப்படையில் இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய ஆட்டிறைச்சியைக் கொண்டு சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் 4 பேருக்கு எதிராக அக்கரைப்பற்று உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் விசாரணை
மேற்கொண்டு அதனடிப்படையில் குறித்த ஆட்டிறைச்சியை கொண்டு சென்ற பொலிஸ் அதிகாரிகளுக்கும் உடனடி இடமாற்றம் வழங்கபட்டுள்ளது.
இதன் போது இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு அம்பாறை மாவட்டத்தில் உள்ள இறக்காமம் பொலிஸ் நிலையத்திற்கும் ஏனைய இரண்டு
பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு நிந்தவூருக்கும் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
- இலங்கையில் ஜனவரி முதல் மே வரை 128 காட்டு யானைகள் உயிரிழந்தன

- கொள்ளை வழக்கில் நபர் கைது

- அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாய் புதிய சரிவை எட்டியது

- ஐக்கிய ராச்சியத்தின் வெளியுறவுச் செயலாளருடன் பிரதமர் ஹரினி பேச்சுவார்த்தை

- கலைக்கூடத்தில் காணாமல் போன ஓவியங்கள் குறித்து விசாரணை

- வாகனங்கள் மீதான வரி உயர்வு

- 30000 பேர் டெங்கு நோயால் பாதிப்பு

- போதையில் பேருந்தை ஒட்டிய 8 சாரதிகள் கைது

- 87 கைபேசிகளுடன் மூன்று சீன நாட்டினர் கைது

- லாரி மீது போலீசார் துப்பாக்கிச் சூடு

வவுனியாவில் தாய்இரண்டு பிள்ளைகள் மாயம்
வவுனியாவில் தாய்இரண்டு பிள்ளைகள் மாயம்
வவுனியாவில் தாய்இரண்டு பிள்ளைகள் மாயம் .வவுனியாவில் தாய் மற்றும் இரண்டு பிள்ளைகள் காணாமல் போயுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர் .
பாடசாலைக்கு சென்ற மாணவர்களை அழைத்துச் சென்ற இளம் தாய் ஒருவர் தற்பொழுது பிள்ளைகளுடன் காணாமல் போய் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
32 வயதுடைய இளம் தாயும் அவரது 11 மற்றும் 8 வயது உடைய பிள்ளைகள் பாடசாலைக்கு சென்று வீடு திரும்பவில்லை என அவர்கள் குடும்பத்தினால் காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது .
கோவிலா புதுக்குளம் பகுதி குடும்பம் மாயம்
கோவிலா புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த மேற்படி குடும்ப உறவுகளே காணாமல் போயிருந்தார் .
இவர்கள் கடத்தப்பட்டார்களா, அல்லது கடத்தி படுகொலை செய்யப்பட்டார்களா ,அல்லது வேறு இடங்களுக்கு ஏதும் சென்றார்களா என்பது தொடர்பாக தெரியவரவில்லை .
தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன .
இலங்கையில் காணாமல் போகின்ற இவ்வாறான பல நபர்கள் இறுதியில் சடலங்கலாக மீட்க கப்படுகின்ற சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன.
கடத்திச் செயல்படுவது மற்றும் ,வாகனங்கள் ஊடாக அவர்களை அடித்து விபத்தில் இறந்ததாக தோற்றப்பட்ட ஏற்படுத்தி, படுகொலை செய்வதற்கான நடவடிக்கைகள் அங்கு அதிகமாக காணப்படுகின்றன.
அவ்வாறன நிலையில் இந்த இரண்டு சிறுவர்களும் தாயும் காணாமல் போயுள்ளதே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இளம் தாயும் அவரது இரண்டு சிறுவர்களையம் வவுனியாவில் காணவில்லை
32 வயதுடைய இளம் தாயும் அவரது இரண்டு சிறுவர்களுமே காணாமல் போய் உள்ளனர்.
காணாமல் போன இவர்கள் சம்பவம் அந்த பாவனையா பகுதி மக்கள் மத்தியில் வேகமாக பரவியது .
அடுத்து மக்கள் மத்தியில் ஒரு வித பதட்டம் காணப்படுகின்றது .
காணாமல் போனவர்களை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் இலங்கையின் போலீசார் மற்றும்குற்றவியல் தடுப்பு பிரிவு ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனால் இவர்கள் பாடசாலை சென்று வந்த பகுதியில் கடைகளில் பொருத்தப்பட்டுள்ள கமராக்கள் சோதனை செய்யப்பட்டு அதிலிருந்து தடயங்கள் கிடைக்கிறதா என்பது தொடர்பாக ஆராயப்பட்டு வருவதாக புதிய செய்திகள் தெரிவிக்கின்றன .
இலங்கையில் தொடராக இவ்வாறு காணாமல் போன சம்பவங்கள் அதிகரித்து வருவதும்,
வீதி ஓரங்களில் மற்றும் நீர்நிலைகள் உள்ளிட்டவர்களில் இருந்து நாள்தோறும் சடலங்களும் எடுக்கப்பட்டு வருகின்ற சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன.
இலங்கை செல்லும் மக்கள் மத்தியில் ஒரு அச்ச உணர்வை ஏற்படுத்தியுள்ளது .
காணாமல் போன இவர்கள் பத்திரமாக கண்டுபிடிப்பார்களா ,அல்லது அவர்கள் சுடலங்களாக மீட்கப்படுவார்களா என்பது மக்கள் மத்தியில் பேசிப் பொருளாக காணப்படுகின்றது.
- இலங்கையில் ஜனவரி முதல் மே வரை 128 காட்டு யானைகள் உயிரிழந்தன

- கொள்ளை வழக்கில் நபர் கைது

- அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாய் புதிய சரிவை எட்டியது

- ஐக்கிய ராச்சியத்தின் வெளியுறவுச் செயலாளருடன் பிரதமர் ஹரினி பேச்சுவார்த்தை

- கலைக்கூடத்தில் காணாமல் போன ஓவியங்கள் குறித்து விசாரணை

- வாகனங்கள் மீதான வரி உயர்வு

- 30000 பேர் டெங்கு நோயால் பாதிப்பு

- போதையில் பேருந்தை ஒட்டிய 8 சாரதிகள் கைது

- 87 கைபேசிகளுடன் மூன்று சீன நாட்டினர் கைது

- லாரி மீது போலீசார் துப்பாக்கிச் சூடு

ஜனாதிபதி பயணித்த விமானம் மாயம்
ஜனாதிபதி விமானம் மாயம்
ஜனாதிபதி பயணித்த விமானம் மாயம் ,துணை ஜனாதிபதி பயணித்த விமானம் மாயம் தேடும் இராணுவம்.
மாலாவின் துணைஜனாதிபதி பயணித்த விமானம் காணாமல் போய்விடதாக அந்த நாட்டு ராணுவம் தெரிவித்துள்ளது .
ஈரானுடைய ஜனாதிபதி மாயமானதை போன்று இந்த விமானமும் தற்பொழுது மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
இந்த விமானத்தில் பயணித்த துணை ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர்கள் விமானம் விழுந்து நொறுங்கி அவர்கள் இறந்திருக்க கூடும் என்கின்ற தகவல்கள் வழியாக உள்ளது .
தொடராக இடம் பெற்று வருகின்ற இவ்வாறான மிக முக்கியமானவர்கள் பயணிக்கும் விமான விபத்துக்கள் பெரும் அதிர்வலைகள் ஏற்படுத்தியுள்ளது .
ஈரானுடைய ஜனாதிபதியும் மிக முக்கிய சகாக்களும் அந்த விபத்தில் பலியானதை அடுத்து தற்பொழுது துணை ஜனாதிபதி ஒருவர் பயணித்த விமானமும் காணாமல் போயுள்ளது சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
இது மிக முக்கியமான உளவுத்துறைகளின் திட்டமிடப்பட்ட நகர்வு ஒன்றாகவே கருதப்படுகிறது .
தமது கொள்கைக்கு அடங்க மறுக்கும் நாடுகளின் அதிபர்களை சத்தம் இல்லாமல் ஓசை என்று போட்டுத் தள்ளுகின்ற ஒரு விடயமாகவே இந்த விமான விபத்துக்கள் பார்க்கப்படுகிறது .
இந்த விமான விபத்தில் காணாமல் போனவர்கள் உயிருடன் உள்ளார்கள் இல்லையா என்பது தொடர்பாக இதுவரை தெரியவரவில்லை .
காணாமல் போன விமானத்தை தேடி கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் ,அந்த நாட்டு இராணுவ விமானங்கள் மீட்பு குழுக்கள் செயலாற்றி வருகின்றனர்.
- போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரானுடனான பேச்சுவார்த்தை ‘இறுதிக் கட்டத்தில்

- இருவருக்கு ஈரான் மரணதண்டனை நிறைவேற்றியது

- அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் மத்தியஸ்தம்

- இஸ்ரேலிய காவலில் உள்ள நாற்பத்தி நான்கு ஸ்பானிய ஆர்வலர்கள்

- எபோலா நோய் மரணம் அதிகரிப்பு

- ஈரான் பெண்கள் பாடசாலை தாக்குதல் அமெரிக்காவில் வெடித்த சர்ச்சை

- ஈரான் மோதல் முடிவற்ற போராக மாறாது அமெரிக்க துணை ஜனாதிபதி

- தென் கொரியக் கொடியுடன் கூடிய எண்ணெய்க் கப்பல் ஹோர்முஸ் ஜலசந்தியைக் கடக்க முயற்சி

- காசா கப்பல் குழுவை இஸ்ரேல் இடைமறித்ததை அடுத்து ஏதென்ஸில் போராட்டக்காரர்கள் பேரணி

- சர்வதேச கடல் பகுதியில் இஸ்ரேல் செய்யும் கடத்தல்

பிரசவித்த குழந்தை மாயம்
பிரசவித்த குழந்தை மாயம்
பிரசவித்த குழந்தை மாயம் ,பிரசவத்தின் போது உயிரிழந்தாக கூறப்படும் குழந்தையின் சடலத்தை தமக்கு காட்டுவதற்கு மாத்தறை புதிய மாவட்ட
வைத்தியசாலையின் பணிக்குழாமினர் நடவடிக்கை எடுக்கவில்லை எனஅந்த குழந்தையின் உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
சடலம் தொடர்பில் வைத்தியசாலை பணிக்குழாமினர் மூன்று தடவைகள் முன்னுக்கு பின் முரணான கருத்துக்களை வெளியிட்டமை தொடர்பில் பலத்த சந்தேகம் நிலவுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
மாத்தறை வெலிகம பகுதி
மாத்தறை வெலிகம பகுதியைச் சேர்ந்த 24 வயதான காவிந்த்யா மதுஷானி தனது முதல் குழந்தையைப் பிரசவிப்பதற்காக மாத்தறை புதிய மாவட்ட பொது வைத்தியசாலையில் கடந்த 22ஆம் திகதி அனுமதிக்கப்பட்டார்.
மதுஷானி அந்த மருத்துவமனையில் சேவையாற்றும் மகப்பேற்று மருத்துவர் ஒருவரிடம் தனியார் மருத்துவ மையத்தில் மருத்துவ பரிசோதனை செய்துள்ள நிலையில் பிரசவத்திற்காக அந்த மருத்துவமனை தேர்வு செய்யப்பட்டது.
பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அன்று நடத்தப்பட்ட ஸ்கேன் மற்றும் அதற்கு முன்னர் தனியார் சிகிச்சை மையத்தில் நடத்தப்பட்ட
மருத்துவப் பரிசோதனையிலும் வயிற்றில் குழந்தை ஆரோக்கியமாக இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
அண்மையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மதுஷானி தனது முதல் குழந்தையைப் பெற்றெடுத்துள்ள போதும், பின்னர் குழந்தை இறந்ததாக மருத்துவமனை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
இதற்கமைய வைத்தியசாலையின் பிரேத அறையில் உள்ள சடலத்தை அடக்கம் செய்ததற்காக மாத்தறை மாநகர சபைக்கு 2500 ரூபாய் பணம்
செலுத்தி பற்றுச்சீட்டை கொண்டு வருமாறு வைத்தியசாலை பணிக்குழாமினர் உறவினர்களிடம் தெரிவித்துள்ளனர்.
மாநகர சபைக்கு செலுத்த நடவடிக்கை
அதன்படி, உரிய தொகையை மாநகர சபைக்கு செலுத்த நடவடிக்கை எடுத்திருந்தனர்.
எனினும் குழந்தையின் சடலத்தை தந்தையிடம் காட்டாமல் புதைத்தமை தொடர்பில் வைத்தியசாலை ஊழியர்களிடம் உறவினர்கள் வினவிய போது சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக தெரிவித்தனர்.
உயிரிழந்த குழந்தையின் சடலத்தை பெற்றுக்கொள்ளும் நோக்கில் உறவினர்கள் நேற்று முன்தினம் (25) இரவு வரை வைத்தியசாலையில்
காத்திருந்த போதிலும் வைத்தியசாலை பணிக்குழாமினர் எவரும் சடலம் தொடர்பில் உறுதியான அறிவிப்பை வெளியிடவில்லை.
இவ்வாறானதொரு பின்னணியில் இச்சம்பவம் தொடர்பில் வைத்தியசாலை அதிகாரிகளை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வினவ முற்பட்ட போதும் எவரும் அதுற்கு பதில் அளிக்கவில்லை
Featured
கொழும்பில் சுவாமி விவேகானந்தர் சிலை மாயம்
கொழும்பில் சுவாமி விவேகானந்தர் சிலை மாயம்
கொழும்பு, கொச்சிக்கடை பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலய வளாகத்தில் நிறுவப் பட்டிருந்த சுவாமி விவேகானந்தரின் சிலை அங்கிருந்து அகற்றப்பட்டுள்ளது.
கடந்த ஒரு தசாப்த காலமாக அங்கிருந்த சுவாமி விவேகானந்தர் சிலை இவ்வாறு திடீரென அகற்றப்பட்டுள்ளது.
உலகம் போற்றும் வகையில் இந்து மதத்தை அமெரிக்காவில் முழங்கிய பின் 1897 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15 ஆம் தேதி சுவாமி விவேகானந்தர் கொழும்பில் வந்து இறங்கினார்.
அப்பொழுது அங்கிருந்த பெரிய தனவான்களும் இன்னும் பலரும் பொன்னம்பலம் ராமநாதனின் தலைமையில் தம்பையாவின் உதவிகளுடன் சுவாமி விவேகானந்தரின் வருகையை இலங்கை முழுவதும் மாபெரும் வகையில் கொண்டாடினர்.
சுவாமி விவேகானந்தருடைய வருகையை ஒட்டி பல இடங்களில் வரவேற்கும் தோரணங்களும் பூரண கும்பங்களும் வைக்கப்பட்டு சகல மரியாதைகளுடன் அருள்மிகு பொன்னம்பலவானேஸ்வரர் திருக்கோவிலுக்கு அழைத்துச் சென்றனர்.
கொழும்பில் சுவாமி விவேகானந்தர் சிலை மாயம்
சுவாமி விவேகானந்தரை, இந்த உலகத்திற்கு வழிகாட்டுவதற்காக வந்த திருஞானசம்பந்தரின் அவதாரமாகவே இலங்கை மக்கள் கருதியதாக அன்றைய செய்தித்தாள்கள் செய்தியை வெளியிட்டிருந்தன.
இத்தகைய மாபெரும் சிறப்பு வாய்ந்த சுவாமி விவேகானந்தரின் வருகை பொன்னம்பல வாணேஸ்வரர் திருக்கோவிலில் கல்வெட்டாக பொறிக்கப்பட்டிருந்தது.
2013 ஆம் ஆண்டில் அந்த கல்வெட்டு கோவிலில் இருந்து அகற்றப்பட்டது. இது தொடர்பாக கோவில் நிர்வாகத்தை இந்து அமைப்புகளும் பொதுமக்களும் ராமகிருஷ்ண மிஷன் உட்பட செயல் அலுவலர்களும் தொடர்பு கொண்ட போது
கல்வெட்டுக்கு பதிலாக சுவாமி விவேகானந்தரின் திருவுருவச் சிலையை வைப்பதாக அன்றைய நிர்வாக உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
அதற்கமைய கடந்த 2014 மேமாதம் முதலாம் திகதி வீரத்துறவி சுவாமி விவேகானந்தரின் 150 ஆவது ஜனன தினத்தை முன்னிட்டு இந்த சிலை ஆலய நிர்வாகம் கேட்டுக் கொண்டதற்கமைய கொழும்பு ராமகிருஷ்ண மிஷனால் வழங்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டது.
சிலை அகற்றப்பட்டமை தொடர்பாக ராமகிருஷ்ண மிஷன் மற்றும் இந்திய அரசு சார்ந்த உயர்மட்டக் குழுக்கள், இந்து ஸ்வயம் சேவக அமைப்பு இன்னும் பல இந்து அமைப்புகள் கோயில் நிர்வாகத்திடம் கவலையையும் அதிருப்தியையும் தெரிவித்துள்ளன.
கொழும்பில் சுவாமி விவேகானந்தர் சிலை மாயம்
அதற்கு ‘மனிதர்களின் சிலையை நாம் ஆலயத்தில் வைப்பதில்லை’ என்று ஆலய நிர்வாகம் எழுத்து மூலம் பதிலளித்திருப்பதாக கூறப்படுகிறது.
எவ்வாறாயினும், இந்தியா காசி வாரணாசி ராமகிருஷ்ண மிஷன் கிளையில் இருந்து முன்னாள் கொழும்பு ராமகிருஷ்ண மிஷன் தலைவர் அவர்கள் சிலை அகற்றியமையை ஒட்டி இரண்டு பக்க கடிதத்தை நிர்வாகிக்கு
அனுப்பியிருந்தார். அவருக்கும் அதே பதில் வழங்கப்பட்டிருக்கின்றது . இது தொடர்பாக இந்து அமைப்புகள் கவலை தெரிவித்து இருக்கின்றன.
ஆலயத்திற்கு வெளியே வளாகத்தில் உள்ள சுவாமி விவேகானந்தர் ஒரு மனிதர் என்றால் ஆலயத்திற்கு உள்ளே உள்ள 64 நாயன்மார்களும் மனிதர்கள் தானே. அப்படியானால் அவர்களது சிலைகளும் அங்கிருந்து அகற்றப்படுமா? என்ற கேள்விகளும் எழுப்பப்பட்டுள்ளன.
இதனை சுமுகமாக தீர்த்து வைப்பதற்கு பலரும் முயற்சி எடுத்து வருகின்ற பொழுதும் ஆலய நிர்வாகம் விடாப்படியாக இருப்பதாக கூறப்படுகிறது.
- இலங்கையில் ஜனவரி முதல் மே வரை 128 காட்டு யானைகள் உயிரிழந்தன
- கொள்ளை வழக்கில் நபர் கைது
- அமெரிக்க டாலருக்கு எதிராக ரூபாய் புதிய சரிவை எட்டியது
- ஐக்கிய ராச்சியத்தின் வெளியுறவுச் செயலாளருடன் பிரதமர் ஹரினி பேச்சுவார்த்தை
- கலைக்கூடத்தில் காணாமல் போன ஓவியங்கள் குறித்து விசாரணை
- வாகனங்கள் மீதான வரி உயர்வு
- 30000 பேர் டெங்கு நோயால் பாதிப்பு
- போதையில் பேருந்தை ஒட்டிய 8 சாரதிகள் கைது
- 87 கைபேசிகளுடன் மூன்று சீன நாட்டினர் கைது
- லாரி மீது போலீசார் துப்பாக்கிச் சூடு
- மத்திய கிழக்கு நெருக்கடி உலகளாவிய வளர்ச்சி குறைத்தது
- 2026-ல் இலங்கையின் சுற்றுலாப் பயணிகளின் வருகை 950,000-ஐத் தாண்டியது
மண்சரிவின் பின்னர் ஒரே கும்பத்தை சேர்ந்த நால்வர் மாயம்
மண்சரிவின் பின்னர் ஒரே கும்பத்தை சேர்ந்த நால்வர் மாயம்
பலாங்கொடை கவரங்கேன, வெஹிந்தென்ன, பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவினால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நேற்று (12) இரவு பெய்த மழையுடன் கூடிய இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் அங்கு 3 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
வீடு ஒன்றில் இருந்த தாய், தந்தை மற்றும் இரண்டு மகள்கள் தற்போது காணாமல் போயுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், இவர்கள் மண் மேட்டின் கீழ் புதையுண்டுள்ளார்களா அல்லது மண்சரிவுடன் வேறு இடத்திற்கு சென்றுவிட்டார்களா என பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
மண்சரிவின் பின்னர் ஒரே கும்பத்தை சேர்ந்த நால்வர் மாயம்
இச்சம்பவம் நேற்று இரவு பதிவாகியுள்ளதாகவும், கடும் மழை காரணமாக அப்பகுதிக்கு செல்வது சிரமமாக இருந்ததால், அவர்கள் குறிப்பிட்ட தகவல்கள் எதுவும் தெரியவரவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும், மண்சரிவினால் பாதிக்கப்பட்ட பகுதி மிகவும் செங்குத்தான பிரதேசம் என்பதுடன் மேலும் பல வீடுகளில் உள்ள மக்களை வெளியேற்ற பாதுகாப்பு படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இதேவேளை, அம்பாந்தோட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்ட விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, ஆபத்தான மழை நிலைமை தொடர்பில் சர்வதேச வானிலை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்தார்
ஏலம் பறிக்க காட்டுக்கு சென்ற பெண் மாயம்
ஏலம் பறிக்க காட்டுக்கு சென்ற பெண் மாயம்
இலங்கை- ஏலம் பறிக்க காட்டுக்கு சென்ற பெண் மாயம் தேடி அலையும் போலீஸ் இராணுவம் ,இதுவரை அவரை மீட்க முடியவில்லை.
கணவன் மகனுடன் காட்டுக்கு ஏலம் பறிக்க சென்ற பொழுது பெண் காணாமல் போயுள்ளார் .பெண்ணை தேடிய கணவன் மகன் அவரை காணாது வீடு திரும்பியுள்ளனர்.
வீடு வந்த இவர்கள்; காவல்துறையில் முறைப்பாடு வழங்கிய நிலையில் போலீசார் இராணுவம் தேடி வருகின்றனர் .எனினும் இதுவரை அவர் சிக்கவில்லை.
இந்த பெண் காட்டுக்குசென்று காணாமல் போயுள்ள விடய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பெண்ணுக்கு காட்டுக்குள் நடந்தது என்ன என்பது தொடர்பில் இதுவரை ஏதும் தெரியவில்லை.
வவுனியா வாலிபனை காணவில்லை
வவுனியா வாலிபனை காணவில்லை
வவுனியா குருமன்காடு பகுதியில் இருபது வயதுடைய வாலிபன் ஒருவர் காணாமல் போயுள்ளார்
இவர் கடந்த 31 ஆம் திகதி வீட்டில் இருந்து புறப்பட்டார் , இதுவரை வீடு திரும்பவில்லை இவ்வாறு காணாமல் போன வாலிபனை
தேடி கண்டு பிடிக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்
மாயமான வாலிபன் உயிருடன் உள்ளாரா அல்லது கடத்தப் பட்டாரா என்பது தொடர்பில் தெரியவரவில்லை
இலங்கையில் தொடராக காணாமல் போகும் நிகழ்வுகள் அதிகரித்த வண்ணம் உள்ளது
குறிப்பிட தக்கது
லண்டன் லூசியம் பகுதியில் இளம் பெண் மாயம் – தேடும் போலீஸ்
லண்டன் லூசியம் பகுதியில் இளம் பெண் மாயம் – தேடும் போலீஸ்
லண்டன் லூசியம் பகுதியில் கடந்த இருபத்தி இரண்டாம் திகதி முதல் பதினேழு வயதுடைய இளம்பெண் ஒருவர் காணாமல் போயுள்ளார்
இவரை கண்ணுற்றால் தமக்கு தெரிவிக்கும் படி போலீசார் தெரிவித்துள்ளனர்
குறித்த மாவட்டத்தில் தற்போது குற்ற செயல்கள் அதிகரித்து செல்வதால் போலீசார் சிவில்
உடையில் கண்காணிப்பை தீவிர படுத்தியுள்ளனர்.
நீட் தேர்வு எழுதிய மாணவி திடீர் மாயம்
நீட் தேர்வு எழுதிய மாணவி திடீர் மாயம்
கடந்த வாரம் திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நீட் தேர்வு எழுதிவிட்டு வந்ததில் இருந்தே மாணவி சோகமாக காணப்பட்டார் என்றும் வீட்டில் உள்ளவர்கள் அவர்களை சமாதானம் செய்ததாகவும் கூறப்படுகிறது.
ராசிபுரம் அருகே நீட் தேர்வு எழுதிய மாணவி திடீர் மாயம்
நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டையை அடுத்த சின்ன அரியாக்கவுண்டம்பட்டியை சேர்ந்தவர் செந்தில் பாண்டியன். இவர் பேட்டையில் உள்ள டாஸ்மாக் கடைகளில் விற்பனையாளராக உள்ளார். இவரது மனைவி தங்கம். இவர்களுக்கு சுவேதா (வயது 19) என்ற மகளும், ஒரு மகனும் உள்ளனர்.
சுவேதா ராசிபுரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ்-2 முடித்துவிட்டு கடந்த ஆண்டு நாமக்கல்லில் உள்ள தனியார் பள்ளி நீட் தேர்வு மையத்தில் ஓராண்டு நீட் தேர்வு பயிற்சி பெற்றார்.
நீட் தேர்வு
கடந்த வாரம் திருச்செங்கோட்டில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் அவர் நீட் தேர்வு எழுதினார். தேர்வு எழுதிவிட்டு வந்ததில் இருந்தே சுவேதா சோகமாக காணப்பட்டார். வீட்டில் உள்ளவர்கள் சுவேதாவை சமாதானம் செய்தனர்.
இந்த நிலையில் நேற்று காலை 11 மணியளவில் அதே பகுதியில் உள்ள தோழியின் வீட்டுக்கு செல்வதாக கூறி சென்றவர் மீண்டும் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த பெற்றோர்
சுவேதாவின் தோழியின் வீட்டிற்கு சென்று பார்த்தபோது சுவேதா அங்கு வரவில்லை என அவர் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் இரவு வரை சுவேதாவை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதுகுறித்து சுவேதாவின் பெற்றோர் நேற்று இரவு நாமகிரிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
லண்டனில் – ஒன்பது வயது சிறுமியை காணவில்லை தேடும் பொலிஸ்
லண்டனில் – ஒன்பது வயது சிறுமியை காணவில்லை தேடும் பொலிஸ்
மேற்கு லண்டன் பகுதியில்கடந்த தினம் முதல் ஒன்பதுவயது ஆசிய நாட்டை சேர்ந்த சிறுமி ஒருவர் காணாமல் போயுள்ளார் ,
இவரை தெரிந்தால் தமக்கு உடனடியாக தெரிவிக்கும்படி காவல்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்
இவர் கடத்த பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது
சிறுமி இறுதியாக நின்ற பகுதியில் உள்ள கமராக்கள் பகுப்பாய்வுக்கு உட்படுத்த பட்டு வருகின்றன
இவரை யாரவது கண்ணுற்ற்றால் தமக்கு உடனடியாக தெரிவிக்கும் படி போலீசார்
வேண்டியுள்ளதுடன் ,இந்த செய்தியினை அதிகமாக சேர் ,பகிர்ந்து உதவும் படி மன்றாடி
வேண்டியுள்ளனர் ,மக்களே முடிந்தவரை இதனை பகிருங்கள் ,சிறுமியை மீட்க இது உதவியாக அமையலாம்
பளை மத்திய கல்லூரி மாணவன் மாயம் -தேடும் பொலிஸ்
பளை மத்திய கல்லூரி மாணவன் மாயம் -தேடும் பொலிஸ்
கிளிநொச்சி பளை மத்திய கல்லூரியில் கல்வி கற்று வந்த முள்ளியாடியை சேர்ந்த
அனோச் எனும் மாணவன் கடந்த நான்கு நாட்களாக காணாமல் போயுள்ளார்
2109 ஆண்டு கா ,பொ ,சா ,பரீட்சை முடிவுகள் வெளிவந்துள்ள நிலையில்
திடீரென இவர் காணாமல் போயுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
உறவினர்கள் வீடுகளிலும் இவரை காணவில்லை என குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர் .
மகனை காணாத துயரில் குடும்பத்தினர் கண்ணீரில் தவிக்கின்றனர் .
இவரை யாரவது கண்ணுற்றால் அவர்களது குடும்பத்தினருக்கோ ,அல்லது அருகில் உள்ள காவல்துறையினருக்கோ ,
அல்லது ஊடகங்களுக்கோ தெரிவிக்குமாறு மன்றாடி வேண்ட படுகிறது



































