Tag: பெண்
சேற்றில் சிக்கிய பெண்ணின் சடலம்
சேற்றில் சிக்கிய பெண்ணின் சடலம்
சேற்றில் சிக்கிய பெண்ணின் சடலம் ,பேராதனையில் உள்ள புதிய கெட்டம்பே பாலத்திற்கு அருகிலுள்ள மகாவலி கங்கையில் ஒரு இளம் பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பெண் பாலத்தில் இருந்து குதித்திருக்கலாம்
அந்தப் பெண் பாலத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை (16) அதிகாலை குதித்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது, மேலும் அவர் கொண்டு
வந்ததாக சந்தேகிக்கப்படும் ஒரு பை பாலத்தின் மேலே இருந்து கண்டெடுக்கப்பட்டு, அது பொலிஸாரின் கட்டுப்பாட்டில் உள்ளது.
சேற்றில் புதைந்துள்ளதால், சடலம் நீரில் அடித்துச் செல்லப்படவில்லை என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பல் வலிக்கு மருத்துவமனை சென்ற பெண் படுகொலை
பல் வலிக்கு மருத்துவமனை சென்ற பெண் படுகொலை
பல் வலிக்கு மருத்துவமனை சென்ற பெண் படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Woman murdered after going to hospital for toothache.
இலங்கை மொனராகலை வைத்தியசாலை Sri Lanka Monaragala Hospital
இலங்கை மொனராகலை வைத்தியசாலைக்கு பல் வலிக்காக சென்ற ஒரு பிள்ளையின் தாயான 24 வயது பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சாதாரண பல்வலி ஒன்றுக்கு சிகிச்சை பெறச் சென்றவருக்கு நடத்தப்பட்ட சிகிச்சை பலனின்றி அவர் பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மருத்துவமனையில் இவ்வாறு சிகிச்சை பெறச் செல்கின்ற பல மக்கள் படுகொலை செய்யப்பட்டு வருகிற சம்பவம் அதிகரித்து காணப்படுகிறது.
பெண் மரணத்தில் பல்வேறுபட்ட சந்தேகங்கள் Various doubts raised over woman’s death
இந்தப் பெண் மரணத்தில் பல்வேறுபட்ட சந்தேகங்கள் உள்ளதாக பெண்ணினுடைய கணவர் உள்ளிட்ட உறவுகள் தெரிவித்துள்ளனர்.
இலங்கை மருத்துவமனையில் தொடராக இடம்பெறும் முறையற்ற சிகிச்சை மற்றும் மருத்துவர்கள் அலட்சியம் மற்றும் பரிசோதனை நடவடிக்கை ஊடாக இந்த மரணங்கள் ஏற்படுவதாக குற்றம் சுமத்தப்படுகிறது.
இலங்கையின் சுகாதார அமைச்சு மற்றும் மக்கள் எதிர்வாக விழிப்புடன் இருக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்தப் பெண் மரணத்தில் சந்தேகம் உள்ளதை எடுத்து இவரது சுடலத்தை வைத்துப் போராட்டம் நடத்தக்கூடும் என அஞ்சப்படுகிறது.
ஆலயத்தில் பணம் திருடியபெண் கைது
ஆலயத்தில் பணம் திருடியபெண் கைது
ஆலயத்தில் பணம் திருடியபெண் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். Woman arrested for stealing money from temple
திருவிழாவில் கொள்ளையடித்த பெண் கைது
மட்டக்களப்பு மண்டூர் முருகன ஆலயத்தில் இடம்பெற்ற திருவிழாவில் பெண் ஒருவர் 20000 பணத்தை கொள்ளையடித்துள்ளார்.
காவல்துறையில் வழங்கப்பட்ட முறைப்பாடு
பணப்பை திருடப்பட்டுள்ளதாக காவல்துறையில் வழங்கப்பட்ட முறைப்பாட்டை அடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் இந்த பணம் மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் இப்படி தெரிவிக்கின்றனர்.
குறித்த 39 வயது பெண்ணிடமிருந்து மேலதிகமாக 65 ரூபாய் பணமும் மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
காவல்துறையில் முறைப்பாடு செய்யப்பட்டு சொற்ப நேரத்திற்குள் குறித்த பெண் பணத்தோடு கைது செய்யப்படுகிறார் என்றால் ,இவை பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
இது திட்டமிடப்பட்ட காவல்துறையின் நாடகமா அல்லது உண்மையில் திருட்டில் ஈடுபட்ட பெண் விசாரணையின் மூலம் தான் கைது செய்ய பட்டாரா என பல கேள்விகளை எழுப்பி நிற்கிறது .
- பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது

- கெஹெலிய மருந்து வழக்குச் சான்றுகள் குறித்து கிடங்குத் தீ விபத்து

- கச்சா எண்ணெய் விலை 106 டாலராக உயர்வு

- அதிக விலையில் கீரி சம்பா அரிசி

- அமைதிக்கான நடைப்பயணம் அரச விழா நாளை கொழும்பில்

- தட்டம்மை நோய் பரவும் அபாயம் குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை

- ஷம்மி சில்வா இந்த வாரம் பதவி விலக உள்ளார்

- வாகன இறக்குமதியில் பல ஆயிரம் கோடிகளை அள்ளிய அனுரா

- இன்டர்போல் மாநாட்டில் உரையாற்றுகிறார் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர்

- நௌலாவில் பேருந்து மோதலில் 11 பேர் காயம்

- மாத்தளை விமான நிலையம் விற்பனை வாங்குவோர் வாங்கலாம்

- ரணில் மோசடி விசாணை ஆரம்பம் மனைவிக்கு வருத்தம்

இலஞ்சம் பெற்ற பெண் கிராம சேவகர் கைது
இலஞ்சம் பெற்ற பெண் கிராம சேவகர் கைது
இலஞ்சம் பெற்ற பெண் கிராம சேவகர் கைது கொவிதுபுர பகுதியைச் சேர்ந்த பெண் கிராம சேவகர் ஒருவர் இலஞ்சம் வாங்கியதற்காக இலஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் விசாரணை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டுள்ள பெண் கிராம சேவகர்
கைது செய்யப்பட்டுள்ள பெண் கிராம சேவகர் பரவாய கிராம சேவையாளர் பிரிவில் பணிபுரிபவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அலுமாரி வாங்குவதற்காக 23,500 ரூபாய்
அலுமாரி வாங்குவதற்காக 23,500 ரூபாய் பெறுமதியான பற்றுச்சீட்டை பெற்றுக் கொண்டிருந்தபோது, குறித்த கிராம சேவகர் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
கைது செய்யப்பட்ட பெண் கிராம சேவகர் சியம்பலாண்டுவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
யாழ் வைத்தியசாலையில் கொல்லப்பட்ட பெண்
யாழ் வைத்தியசாலையில் கொல்லப்பட்ட பெண்
யாழ் வைத்தியசாலையில் கொல்லப்பட்ட பெண் ,யாழ் பொது வைத்தியசாலையால் கொல்லப்பட்ட பெண் விடயம் தொடர்பாக பல்வேறுபட்ட கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளது.
வைத்தியசாலையில் சிகிச்சை பெற சென்ற பெண் பலி
காலில் ஏற்பட்ட வீக்கத்திற்கு யாழ்ப்பாணம் போதன வைத்தியசாலையில் சிகிச்சை பெற சென்ற பெண் ஒருவரை தற்பொழுது பலியாகி உள்ளார்.
24 வயதான இளம் தாயே இவ்வாறு நோய்க்கு குணப்படுத்த சென்ற வேளையில் , அதற்கு சிகிச்சை
பலனின்றி அவர் மரணமாகியுள்ளதாக ,யாழ்ப்பாண போதனை வைத்தியசாலை மீது குற்ற சாட்டுக்கள் முன் வைக்கப்படுகிறது .
எனினும் இவரது மரணம் தொடர்பில் பல்வேறுபட்ட சர்ச்சைகள் எழுப்பப்படுகிறது .
யாழ்ப்பாண மருத்துவர்கள் உரிய முறையில் சிகிச்சை வழங்காத நடவடிக்கை
யாழ்ப்பாண மருத்துவர்கள் உரிய முறையில் சிகிச்சை வழங்காத நடவடிக்கை காரணமாகவே இந்த இளம் தாய் மரணம் ஆகி உள்ளதாக தற்பொழுது புகார்கள் முன்வைக்கப்பட்டு வருகிறது.
இலங்கையில் உள்ள மருத்துவமனைகளில் பல்வேறுபட்ட குற்றச்சாட்டுகள் பயனாளிகள் நோயாளிகள் வைத்து வருகின்ற நிலையில் தற்போது இந்த பெண் மரணம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கிளிநொச்சியில் பெண் சடலமாகமீட்பு
கிளிநொச்சியில் பெண் சடலமாகமீட்பு
கிளிநொச்சியில் பெண் சடலமாகமீட்பு ,கிளிநொச்சி ஊற்றுப் புலப் பகுதியில் பெண் ஒருவர் கடந்த தினம் மர்மமான முறையில் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இவ்வாறு இறந்தவர் 68 வயதான பெண் எனவும் , வீட்டில் தனிமையில் வசித்து வந்த நிலையில் இவ்விதம் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலத்தை மீட்ட போலீசார்
சடலத்தை மீட்ட போலீசார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று உடல பரிசோதனையை மேற்கொண்டு வருகின்றனர் .
இவர் எவ்வாறு இறந்தார் என்பது தொடர்பான விசாரணைகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தமிழர் பகுதி எங்கும் மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்குப் பின்னர்
தமிழர் பகுதி எங்கும் மஹிந்த ராஜபக்சவின் ஆட்சிக்குப் பின்னர் நாள்தோறும் வீதிகள் பற்றை காடுகள் புதர்கள் நீர் ஏரிகள் பாழடைந்த வீடுகள்
என்பனவற்றிலிருந்து தமிழர்களுடைய சடலங்கள் தொடராக மீட்கப்பட்டு வருகிற அவலம் தொடர்கிறது .
இது 2009 ஆம் ஆண்டுக்கு பின்னர் இடம்பெற்ற இன அழிப்பு நடவடிக்கை ஒன்றாகவே இதனை பார்க்க முடிகிறது.
ஆகவே இந்த படுகொலைகள் யாவும் மர்மமாகவே தொடர்ந்து நிலை பெறுவதால் தமிழர்கள் மத்தியில் ஒரு வித பதட்டம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
பெண் கழுத்தறுத்துக் கொலை
பெண் கழுத்தறுத்துக் கொலை
பெண் கழுத்தறுத்துக் கொலை ,நாவலப்பிட்டி இம்புல்பிட்டி தோட்டத்தில் கைவிடப்பட்ட பங்களாவில் திருமணத்திற்கு மாறான மனைவியின் கழுத்தறுத்துக் கொலை செய்த நபர் பொலிஸாரிடம் சரணடைந்துள்ளார்.
சந்தேக நபர் கம்பளையில் சரணடைந்துள்ள நிலையில், பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக நாவலப்பிட்டி பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
நேற்று (22) மாலை இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதுடன், உயிரிழந்தவர், நாவலப்பிட்டி இம்புல்பிட்டி தோட்டத்தைச் சேர்ந்த 39 வயதான மூன்று பிள்ளைகளின் தாய் என தெரியவந்துள்ளது.
கொலை செய்யப்பட்ட பெண்
கொலை செய்யப்பட்ட பெண், சந்தேக நபருடன் கம்பளை புஸ்ஸல்லாவ பகுதியில் சுமார் 09 மாதங்கள் வசித்து வந்த பின்னர் தனது சட்டப்பூர்வ கணவரின் வீட்டிற்குத் திரும்பிச் சென்றுள்ளார்.
வீட்டில் இருந்த குறித்த பெண், அவ்வப்போது சந்தேக நபருக்கு தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்டு, வீட்டு வேலைக்காக வெளிநாடு செல்லத் தயாராகி வந்துள்ளார்.
பொலிஸார் நடத்திய விசாரணைகளில் சந்தேக நபர் வெளிநாடு செல்வதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தெரியவந்துள்ளது.
கொலை செய்யப்பட்ட பெண் வெளிநாடு செல்வதற்காக கிராம சேவகர் சான்றிதழ் பெறச் சென்றபோது, சந்தேக நபர் அவரை தொலைபேசியில்
பாழடைந்த வீட்டிற்கு வருமாறு அழைத்து கொலை
அழைத்து பாழடைந்த வீட்டிற்கு வருமாறு அழைத்த நிலையில், அங்கு சென்ற பெண்ணின் கழுத்தை அறுத்து சந்தேகநபர் கொலை செய்துள்ளார்.
இறந்த பெண்ணின் உடல், பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியிடம் அனுப்பப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
கனடா பெண் விமானநிலையத்தில் கைது
கனடா பெண் விமானநிலையத்தில் கைது
கனடா பெண் விமானநிலையத்தில் கைது ,கனடா நாட்டு பொன் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது .
போதை வஸ்து கடத்தி வந்த குற்றச்சாட்ட்டில்
போதை வஸ்து கடத்தி வந்த குற்றச்சாட்ட்டில் கனடிய வதிவிட உரிமையை கொண்ட பெண் ஒருவர் தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நூதனமான முறையில் தனது பயண போதிக்குள் போத வஸ்து கடத்தி வந்த பொழுது இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
181 மில்லியன் ரூபாய் மதிப்புடைய ஹரிஷ் போதவஸ்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மில்லியன் ரூபாய் பெருமதியென போத வஸ்து
இத்தகைய பல மில்லியன் ரூபாய் பெருமதியென போத வஸ்து இவர் அங்கிருந்து எப்படி நூதன முறையில் கடத்தி வந்தார் என்கின்ற விடயம் தான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்தக் கடத்தல் நடவடிக்கை மிகப்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கனடா நாட்டில் இருந்து இலங்கை வந்த கனடிய பெண் பயண பொதிக்குள் 181 மில்லியன் ரூபாய் பெறுமதியென போதை வஸ்து எப்படி சிக்கியது என்பது தொடர்பான விடயம் தான் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.
பெண் ஒருவரின் சடலம் மீட்பு
பெண் ஒருவரின் சடலம் மீட்பு
பெண் ஒருவரின் சடலம் மீட்பு ,மாத்தறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பரவி தீவுக்குச் செல்லும் பாலத்திற்கு கீழே கடலில் அடையாளம் தெரியாத பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மாத்தறை பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து சடலம் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இறந்த பெண் 40 முதல் 45 வயதுக்குட்பட்டவர் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
அவரது அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை, மேலும் அவர் கருப்பு, மஞ்சள் நிற உடை மற்றும் கருப்பு குட்டைப் பாவாடை அணிந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மரணித்தவர் சுமார் 5 அடி உயரம் கொண்டவர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
சம்பவம் குறித்து மாத்தறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
இஸ்ரேலிய பெண்போர் விமானி ஈரானில்கைது
இஸ்ரேலிய பெண்போர் விமானி ஈரானில்கைது
இஸ்ரேலிய பெண்போர் விமானி ஈரானில்கைது
இஸ்ரேலிய பெண் போர் விமானி ஈரானில் கைது செய்யப்பட்டார் என ஈரானிய செய்திகள் தெரிவிக்கின்றன .
ஈரான் மீது தாக்குதல் நடத்த பறந்து சென்ற இஸ்ரேல் விமானங்கள் இரண்டு சுட்டு வீழ்த்த பட்டன .
அவ்விதம் பறந்து சென்ற F-35 ரக போர் விமானங்கள் இரண்டு சுட்டு வீழ்த்த பட்ட நிலையில் ,தற்போது அந்த விமானத்தை ஓட்டி சென்ற விமானி பாராசூட் மூலம் குதித்து தப்பிய பொழுது ,ஈரான் இராணுவத்தால் கைது செய்ய பட்டுள்ளார் .
இஸ்ரேலின் பெண் விமானி ஈரானால் கைது செய்ய பட்டுள்ள சம்பவம் ,இஸ்ரேலுக்கு மிக பெரும் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது .
ஈரான் இராணுவத்தின் உளவியலை சிதைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்ட இஸ்ரேலுக்கு தற்போது மிக பெரும் நெத்தியடி வீழ்ந்துள்ளது .
இது மிக பெரும் இழப்பு என எதிர் பார்க்கலாம் ,அத்துடன் வரலாற்று மிக பெரும் சேதங்களை இஸ்ரேலுக்கு ஈரான் முதன் முதலாக ஏற்படுத்தியுள்ளதை ,ஈரான் ஏவுகணை தாக்குதல் காண்பித்துள்ளது .
ஈரான் இராணுவ பலத்தை சிதைத்து அதன் ஊடாக ,ஈரானை தனது கட்டு பாட்டில் கொண்டு வந்துவிட முடியும் என நினைத்த இஸ்ரேலுக்கு விழுந்த நெத்தியடியாக இது பார்க்க படுகிறது .
பலவெற்றிகர தாக்குதலை இந்த பெண்விமானி நடத்தியதாக பார்க்க படுகிறது .
அவ்வாறான பெண் விமணியே தற்போது ஈரானால கைது செய்ய பட்ட நிலையில் ,ஈரானுக்கு பல இரகசியங்கள் கடத்த பட்டு இருக்கும் என எதிர் பார்க்க படுகிறது .
இஸ்ரேலின் தாக்குதல் திட்டம் தொடர்பான பல விடயங்கள் ஈரான் கைவசம் சென்று இருக்க கூடும் என எதிர் பார்க்கலாம் .
வரும் மணித்தியாலங்கள் திக் திக் நிமிடங்களாக காணப்படும் என எதிர் பார்க்கலாம் .
பெண் ஒருவர் குத்திக் கொலை
பெண் ஒருவர் குத்திக் கொலை
பெண் ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ரம்புக்கல பகுதியில் காணி ஒன்றில் வைத்து கூரிய ஆயுதங்களால் பெண் ஒருவர் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கத்திக் குத்து தாக்குதலில்
இந்தக் கத்திக்குத்து தாக்குதலில் சிக்கி உயிரிழந்தவர் 48 வயதுடைய அதே பகுதியை சேர்ந்த பெண் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருமணம் முடித்த நிலையில் இருந்த பெண். வேறு ஒரு கள்ளத் தொடர்பில் இருந்ததாகவும், அதனால் ஆத்திரம் கொண்ட அவர்கள் இவரை குத்தி படுகொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாக்குதலை நடத்தியவர் அந்த பிரதேசத்தை விட்டு தப்பி சென்றுவிட்ட நிலையில், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.
கள்ளத்தொடர்பு காரணமாக கொலை
கள்ளத்தொடர்பு காரணமாகவே இந்த பெண் குத்தி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் சமீப காலங்களாக இவ்வாறான கத்திவிட்டு தாக்குதலும் குத்துச்சம்பவங்களும் கள்ளத்தொடர்புகளால் ஏற்பட்டு வருகிறது.
ஒருவர் வழி மாறி சென்று சென்று விட்டால் அதை விட்டு கடந்து செல்வதை தவிர்த்து அதற்கு மறுத்து ,அவர்களை படுகொலை செய்கின்ற நடவடிக்கையில் , இவ்வாறான கூலி குழுக்களை ஈடுபட்டுள்ளது வேதனையை பெறுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
அம்பாறையில் பெண் அடித்துக் கொலை
அம்பாறையில் பெண் அடித்துக் கொலை
அம்பாறையில் பெண் அடித்துக் கொலை ,பெண் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மட்டக்களப்பு அம்பாறை மாவட்டம் பெரிய நீலவனை காவல்துறை பகுதியில் விஷ்ணு கோயில் பகுதியில் பகுதியில் .அமைந்துள்ள வீடு ஒன்றில் 38 வயதுடைய 2 பிள்ளைகளின் தாயே .இவ்வாறு மிக கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.
அடித்து துன்புறுத்தி படுகொலை
வீட்டில் தனியாக இருந்தபோது .அங்கு நுழைந்த மார்பக நபர்கள் அவரை அடித்து துன்புறுத்தி படுகொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது கழுத்து மற்றும் தலைகளில் பலமான காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..
படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவ,ர் வேலை நிமித்தமாக வெளிநாட்டில் தங்கி உள்ள நிலையிலேயே இந்த படுகொலை இடம்பெற்றுள்ளது.
வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ,ஆய்வு செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்தப் படுகொலை சம்பந்தமாக கல்முனை பிராந்திய உதவி போலீஸ் அதிகாரி, உள்ளிட்டவர்கள் சம்பவ இடத்தில் சென்று நேரடி பார்வையிட்டனர்.
அடுத்த கொலையை மேற்கொண்டவர்கள் ,யார் என்ன என்பது தொடர்பாக மோப்ப நாய்களின் உதவியுடன் அங்கு தடையை சேகரிப்புகள் இடம்பெற்று வருகின்றன.
சம்பவ இடத்துக்கு சென்ற நீதிமன்ற நீதிபதி அவர்களும் சம்பவத்தை பார்வையிட்டு தரவுகளையும் சம்பவங்களையும் கேட்டு அறிந்து சென்றிருக்கின்றார்.
இந்தப் படுகொலை என்பது மிகப்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த பெண் கொலையின் பின்புலத்தில் உள்ளவர்கள் யார்
இதன் பின்புலத்தில் உள்ளவர்கள் யார்? ஏன் படுகொலை செய்யப்பட்டார் விசாரணை தொடர்கிறது மக்கள் அச்சத்தில்உறைந்துள்ளனர் .
சமையலறையில் எரிந்து பெண் பலி
சமையலறையில் எரிந்து பெண் பலி
சமையலறையில் எரிந்து பெண் பலி ,சமையலறையில் எரிந்து பெண் பலியான சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
யாழ்ப்பாணம் புலவர் வீதி நவாலி வடக்கு மாணிப்பாய் சேர்ந்த கயன் தனுஷா 23 வருட ஒரு வயது குழந்தையின் தாயே சமையலறையில் தீ பற்றி பிடித்ததால் உடல் கருகி பலியாகி உள்ளார்.
மண்ணெண்ணையை ஊற்றி அடுப்பை பற்ற வைக்க முற்பட்ட பொழுது தீ பற்றி எரிந்ததில் அவர் உடல் கருகி பலியாகி உள்ளார்.
குழந்தையுடன் தாய் இருந்த பொழுது அடுப்பு எரியாத காரணத்தால் அடுப்பை மூட்டை மண்ணெண்ணையை ஊற்றிய பொழுது பெண்ணின் உடலில் மன்னனை சிந்தியதன் காரணத்தால் ,
தீக்காயம் ஏற்பட்டு அவர் யாழ்ப்பாவதென்ன வைத்தீஸ்வரர் அனுபவிக்கப்பட்டு இருந்து நேத்து சிகிச்சை பெற வேண்டி பலியாகி உள்ளார்.
இந்த மரணம் தொடர்பில் மாவட்ட திடீர் வர்ண விசாரி அதிகாரிகள் ஆறுமுகம் ஜெயபால சிங்கம் விசாரணையை மேற்கொண்டுள்ளார்.
இளம் பெண் ஒருவர் தீயில் கருகி பலியான சம்பவம் நவாலி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அலட்சியப் போக்கின் காரணமாக நடந்த ஒரு உயிர் இழப்பு என இதனை மக்கள் பேசிக் கொள்கிறார்கள்
சம்பவங்கள் உங்களுக்கு இடம் பெற்று விடாது இருக்க மக்களை ஒழிப்பாக இருங்கள்.
ஓடிய காரில் குதித்த பெண்
ஓடிய காரில் குதித்த பெண்
ஓடிய காரில் குதித்த பெண் சம்பவத்தால் கொழும்பு நகரமே பரபரப்பில் உறைந்து இருக்கின்றது.
இலங்கை ராத்மலான பகுதியில் கார் ஒன்றுக்குள் நுழைந்த திருடன் அந்த காரை திருடி செல்ல முற்பட்டுள்ளார்.
அப்பொழுது அந்த காருக்குள் 76 வயதில் மனைவியை விட்டு 80 வயது கணவன் வங்கிக்கு பணம் எடுக்கச் சென்று இருக்கின்றார்.
காருக்குள் திருடர்கள் நுழைந்ததை அடுத்து ,சுதாரித்துக் கொண்ட பெண் காரில் இருந்து குதித்து தப்பித்துக் கொண்டார்.
ஓடுகிற காரில் இருந்து குதிக்க வேண்டாம் என திருடன் பெண்ணுக்கு தெரியப்படுத்திய பொழுதும் ,அவர் அதனை பொருட்படுத்தாது காரில் இருந்து குதித்துள்ளார்.
அவர் காரில் இருந்து குதித்து தப்பிய பொழுதும் ,காரை திருடிக் கொண்டு திருடன் ஓடி விட்டான்.
குறித்த கார், தெஹிவளை பகுதியில் தங்க சங்கிலி அபகரிப்பிலும் ஈடுபடுத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
தற்பொழுது திருடனை பிடிக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
லஞ்சம் ஊழல் கடத்தல் கொலைகள் .பாதுகாப்பு அச்சுறுத்தல் .இல்லாத ஒரு நாட்டை கட்டி காப்பார் என அனுரா அரசு கூறி இருந்தது.
ஆனால் வீதிக்கு வீதி மீட்டருக்கு மீட்டர் காவல்துறையினர் வீதியில் நிற்கின்ற பொழுதும் ,அது கடந்து ,அதை மறந்து, திருடர்கள் இவ்வாறு கைவரிசையை காட்டுவதே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆக ஆளுகின்ற அனுரா அரசினால் நாட்டில் வாழ்கின்ற அப்பாவி மக்களுக்கு பாதுகாப்பு இல்லை .
என்பதையே இந்த கார் திருட்டுச் சம்பவமும், ஓடிய காரிலிருந்து 76 வயது மூதாட்டி குறித்து தப்பிய சம்பவமும் கோடிட்டு காட்டுகிறது.
இந்தச் சம்பவங்கள் உள்ளூராட்சி தேர்தலில் அனுரா ஆட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்பதாக கூறப்படுகிறது.
- பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது

- கெஹெலிய மருந்து வழக்குச் சான்றுகள் குறித்து கிடங்குத் தீ விபத்து

- கச்சா எண்ணெய் விலை 106 டாலராக உயர்வு

- அதிக விலையில் கீரி சம்பா அரிசி

- அமைதிக்கான நடைப்பயணம் அரச விழா நாளை கொழும்பில்

- தட்டம்மை நோய் பரவும் அபாயம் குறித்து சுகாதார அமைச்சு எச்சரிக்கை

- ஷம்மி சில்வா இந்த வாரம் பதவி விலக உள்ளார்

- வாகன இறக்குமதியில் பல ஆயிரம் கோடிகளை அள்ளிய அனுரா

- இன்டர்போல் மாநாட்டில் உரையாற்றுகிறார் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர்

- நௌலாவில் பேருந்து மோதலில் 11 பேர் காயம்

நான் இந்தியாவின் மருமகள் பாக் பெண் சீமா
நான் இந்தியாவின் மருமகள் பாக் பெண் சீமா
நான் இந்தியாவின் மருமகள் பாக் பெண் சீமா ,மத்திய அரசின் சமீபத்திய நடவடிக்கைகளால் அச்சமடைந்துள்ள பாகிஸ்தான் பெண் சீமா ஹைதர், “நான் இந்தியாவின் மருமகள், என்னை இங்கேயே இருக்க அனுமதிக்க வேண்டும்” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கடந்த 2023, ஜூலையில் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்தவர் சீமா ஹைதர். பாகிஸ்தானின் சிந்து மாகாணம், கராச்சி நகரை சேர்ந்த இவர் தனது
இந்திய காதலர் சச்சின் மீனாவை திருமணம் செய்துகொள்வதற்காக பாகிஸ்தானை விட்டு வெளியேறினார். ஏற்கெனவே திருமணமான சீமா ஹைதர், 4 குழந்தைகளுக்கு தாய் ஆவார்.
இந்நிலையில் தனது 4 குழந்தைகளுடன் நேபாளம் வழியாக சட்டவிரோதாக இந்தியாவுக்குள் நுழைந்தார். உ.பி.யின் கவுதம புத்தர் நகர் மாவட்டம், ரபுபுரா பகுதியில் தனது காதலர் சச்சின் மீனாவுடன் வசித்து வந்தார்.
இந்நிலையில் அவரை கடந்த 2023 ஜூலையில் அதிகாரிகள் பிடித்தனர். தற்போது உ.பி.யின் கிரேட்டர் நொய்டாவில் சச்சினுடன் சீமா வசித்து வருகிறார்.
இந்நிலையில் பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தானியர்களுக்கு வழங்கப்பட்ட விசாக்களை ஏப்ரல் 27 முதல் மத்திய அரசு ரத்து செய்துள்ளது.
இந்தியாவில் இருக்கும் பாகிஸ்தானியர்கள் அனைவரும் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதனால் நாடு கடத்தப்படலாம் என சீமா அச்சம் அடைந்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவு ஒன்றில், “நான் பாகிஸ்தான் மகள்.
ஆனால் இப்போது இந்தியாவின் மருமகள். நான் பாகிஸ்தான் செல்ல விரும்பவில்லை. நான் இந்தியாவிலேயே இருக்க அனுமதிக்க வேண்டும் என
பிரதமர் மோடி மற்றும் உ.பி. முதல்வர் யோகியை வேண்டுகிறேன்” என்று கூறியுள்ளார். மீனாவை மணந்த பிறகு தான் இந்து மதத்தை ஏற்றுக்கொண்டதாக சீமா கூறுகிறார்.
இந்நிலையில் சீமா தொடர்ந்து இந்தியாவில் வசிக்க அனுமதிக்கப்படுவார் என அவரது வழக்கறிஞர் ஏ.பி.சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், “சீமா இனி பாகிஸ்தான் குடிமகள் அல்ல. அவர் கிரேட்டர் நொய்டாவில் வசிக்கும் சச்சின் மீனாவை மணந்தார்.
சமீபத்தில் அவர்களுக்கு பாரதி மீனா என்ற மகள் பிறந்தாள். சீமாவின் குடியுரிமை தற்போது அவரது இந்திய கணவருடன் இணைக்கப்பட்டுள்ளது.
எனவே மத்திய அரசின் உத்தரவை சீமா விவகாரத்துடன் பொருத்திப் பார்க்க கூடாது” என்றார்.
பாக்குநீரிணையை நீந்தி கடந்த கால் இல்லா பெண்
பாக்குநீரிணையை நீந்தி கடந்த கால் இலைல பெண்
பாக்குநீரிணையை நீந்தி கடந்த கால் இலைல பெண் ,இயலாமைக்கும் சாதனைக்கும் உள்ள தூரத்தை நீந்தி கடந்து சாதனை படைக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் மாற்றுத்திறனாளி நீச்சல் வீராங்கனை இலங்கை
தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரையிலான பாக். ஜலசந்தி கடலை 11 மணி 05 நிமிடத்தில் நீந்தி கடந்து சாதனை படைத்துள்ளார்.
பாக். ஜலசந்தி கடல் பகுதி தமிழகத்தையும் இலங்கையையும் பிரிக்கும் நீரிணை ஆகும். ராமேஸ்வரம் தீவும், அதை தொடர்ந்துள்ள 13 மணல் தீடைகளும், பாக் ஜலசந்தி கடற்பகுதியை மன்னார் வளைகுடாவில் இருந்து
பிரிக்கிறது. தமிழகத்திலேயே மிகவும் ஆழம் குறைந்த அதே சமயம் பாறைகளும் ஆபத்தான ஜெல்லி மீன்கள் நிறைந்த கடல் பகுதியாகும் .
இதுவரை 30 க்கும் மேற்பட்டோர் பாக். ஜலசந்தியை தனியாக நீந்தி கடந்து சாதனை புரிந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் இலங்கையின் தலைமன்னாரிலிருந்து இந்தியாவின் தனுஷ் கோடிக்கோ அல்லது
தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னாருக்கு நீந்திச் சென்றவர்கள். இது தவிர மேலும் சிலர் குழுவாக ரிலே மற்றும் மாரத்தான் முறையில் பாக் ஜலசந்தி கடலை நீந்தி கடந்துள்ளனர்.
இந்நிலையில் தலைமன்னார் இருந்து தனுஷ்கோடிக்கு நீந்தி கடப்பதற்காக கர்நாடகா, மகாராஷ்டிரா உள்ளிட்ட வட மாநிலத்தை சேர்ந்த 10 பேர் கொண்ட
நீச்சல் வீரர்கள் குழு இந்திய-இலங்கை இரு நாட்டு அரசிடமும் அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தார்.
அனுமதி கிடைத்த நிலையில், ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆழ்கடல் படகில் இலங்கை தலைமன்னார் நோக்கி, ஏப்ரல் 18ஆம் திகதியன்று சென்றனர்.
இந்த குழுவில் 8 பேர் ரிலே முறையில் நீந்தினர். இவர்கள் இலங்கை தலைமன்னாரில் இருந்து அதிகாலை 5.50க்கு கடலில் குதித்து நீந்த தொடங்கி மதியம் 2.20 மணி அளவில் தனுஷ்கோடி வந்தடைந்தனர்.இவர்கள் ரிலே
முறையில் தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரை 8 மணி நேரம் 30 நிமிடத்தில் நீந்தி கடந்தனர்.
மேலும் இருவர் தனியாக (SOLO) நீந்தி கடந்தனர். இவர்கள் இருவரும் மாற்றுத்திறனாளிகள். இதில் மகாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்த சஷ்ருதி நக்காது என்ற நீச்சல் வீராங்கனைக்கு வலது காலில் பிறவி குறைபாடு
காரணமாக மேல் மூட்டு துண்டிக்கப்பட்டு, செயற்கையாக வடிவமைக்கப்பட்ட காலை கொண்டு நடக்கும் மாற்றுத்திறனாளி.
பாரா நீச்சல் போட்டிகளில் கலந்து கொண்டு மூன்று பதக்கங்களை பெற்றுள்ள சஷ்ருதி நக்காது இயலாமைக்கும் சாதனைக்கும் உள்ள தூரத்தை நீந்தி கடந்து சாதனை படைக்க வேண்டும் என இலங்கையிலுள்ள தலைமன்னாரில் இருந்து
இந்தியாவில் உள்ள தனுஷ்கோடி வரையிலான பாக் ஜலசந்தி கடலை நீந்தி சாதனை புரிவதற்காக வெள்ளிக்கிழமை (18) அதிகாலை 5.50 மணி அளவில் தலைமன்னாரில் இருந்து கடலில் குதித்து நீந்த தொடங்கி மாலை 4.55
மணியளவில் தனுஷ்கோடி அரிச்சல்முனை கரையை அடைந்தார். இந்த சாதனைக்காக 11 மணி 05 நிமிடங்கள் சஷ்ருதி நக்காது எடுத்துக் கொண்டார்.
அரிச்சல்முனை வந்தடைந்த சஷ்ருதி நக்காதவை அவரது தாய் கண்ணீர் மல்ல முத்தமிட்டு வரவேற்றார். அதனை தொடர்ந்து சுங்கதுறை கண்காணிப்பாளர், மரைன் பொலிஸார் உள்ளிட்டோர் வரவேற்றனர்.
அதே போல மற்றொருவரான மாற்றுத்திறனாளி பல்கா கணேஷ், தலைமன்னார் முதல் தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை 10 மணி 30 நிமிடத்தில் நீந்தி கடந்தார்.
மாற்றுத்திறனாளியான பாரா நீச்சல் வீராங்கனை தலைமன்னாரில் இருந்து சனிக்கிழமை (19) அதிகாலை கடலில் குதித்து நீந்த தொடங்கிய போது ஜெல்லி மீன் மற்றும் கடல் நீரோட்டம் காரணமாக தொடர்ந்து நீந்துவதில் கடும் சிரமம் ஏற்பட்டது.
இருப்பினும் கடும் சிரமத்தை எதிர் கொண்டு தனுஷ்கோடி அரிச்சல்முனை கரையை அடைந்து சஷ்ருதி நக்காது சாதனை படைத்துள்ளார்.
ஒற்றைக் காலுடன் கடலில் நீந்திக் கடப்பது என்பது மிகவும் சவாலான விஷயம். முன்னதாக ஆட்டிசம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரை நீந்தி கடந்து சாதனை படைத்த நிலையில் தற்போது ஒரு
காலை இழந்த மாற்றுத்திறனாளி முதல் முறையாக தலைமன்னார் தனுஷ்கோடி பாக்நீரிணையை நீந்தி கடந்து சாதனை படைத்துள்ளதாக இந்திய நீச்சல் கழகத்தின் பார்வையாளர் விஜயகுமார் தெரிவித்துள்ளார்
கழுத்து அறுக்கப்பட்ட பெண் கொலை
கழுத்து அறுக்கப்பட்ட பெண் கொலை
கழுத்து அறுக்கப்பட்ட பெண் கொலை ,மத்துகம, தொலஹேன பகுதியில் நேற்று (18) பகல் 33 வயதுடைய பெண் ஒருவர் கழுத்து அறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
மர்வின் சமரநாயக்க மாவத்தை, அங்கலவத்தை பகுதியைச் சேர்ந்தவர் குறித்த பெண்ணின் உடலில் பல வெட்டுக் காயங்கள் காணப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
காதல் உறவு தொடர்பான தகராறு காரணமாக இந்தப் படுகொலை இடம்பெற்றுள்ளமை பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதன்படி, சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், அவர் அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றுள்ளார்.
மேலும் உயிரிழந்த பெண்ணின் சடலம் நீதவான் விசாரணையின் பின்னர் நாகொடை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
சந்தேக நபரை கைது செய்ய மத்துகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்
அர்ச்சுனா செய்த மோசடி அடித்து விட்ட பெண் வேட்பாளர்
அர்ச்சுனா செய்த மோசடி அடித்து விட்ட பெண் வேட்பாளர்
அர்ச்சுனா செய்த மோசடி அடித்து விட்ட பெண் வேட்பாளர் ,பல விடயங்களை வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தில் வருகை தந்து தெரிவித்தார் .
அர்ச்சுனா இராமநாதன் வழிநடத்தும் ஊசி கட்சியில் உள்ளுராட்சி தேர்தலில் போட்டியிட்ட வனேஸ்வரி தம்மிடம் பணம் வணங்கி விட்டு அர்ச்சுனா ஏமாற்றிய விடயங்கள் தொடர்பாக பகிரங்க படுத்தினார் .
தங்களை நம்ப வைத்து அர்ச்சுனா ஏமாற்றி விட்டார் என வனேஸ்வரி தெரிவித்தார் .
தேர்தலில் போட்டியிடும் நோக்கமே அர்ச்சுனா இராமநாதனுக்கு இல்லை எனவும் ,அவர் திட்டமிட்டு மக்களை அவதூறு செய்து ஏமாற்றி வருவதாக அவர் குற்றம் சுமத்தினார் .
பெண் சிறப்பு மருத்துவர் துஷ்பிரயோகம்
பெண் சிறப்பு மருத்துவர் துஷ்பிரயோகம்
பெண் சிறப்பு மருத்துவர் துஷ்பிரயோகம் ,அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பயிற்சி பெற்ற பெண் சிறப்பு மருத்துவரை துஷ்பிரயோகம் செய்த சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில்
வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவ வீரரை பரிசோதனைக்காக ஆஜர்படுத்தி, தொடர்புடைய மருத்துவ அறிக்கையை நீதிமன்றத்தில்
சமர்ப்பிக்குமாறு அனுராதபுரம் தலைமையக பொலிஸாருக்கு அனுராதபுரம் பிரதான நீதவான் நாலக சஞ்சீவ ஜெயசூரிய இன்று உத்தரவிட்டார்.
இந்த சம்பவம் தொடர்பான வழக்கு இன்று அனுராதபுரம் பிரதம நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே நீதவான் மேற்கண்ட உத்தரவை பிறப்பித்தார்.
பெண் மருத்துவர் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் குறித்து மேலும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாக பொலிஸார் நீதிமன்றத்திற்கு தெரிவித்தனர்.
எனவே, சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு பொலிஸார் நீதிமன்றத்தை கோரியுள்ளனர்.
இந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட பிரதான நீதவான் நாலக சஞ்சீவ ஜெயசூரிய, சந்தேகநபரான முன்னாள் இராணுவ வீரரை இம்மாதம் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்
பெண்ணை தாக்கும் கும்பல் அதிர்ச்சி வீடியோ
பெண்ணை தாக்கும் கும்பல் அதிர்ச்சி வீடியோ
பெண்ணை தாக்கும் கும்பல் அதிர்ச்சி வீடியோ ,ஒரு பெண்ணை நடு வீதியில் வைத்து தாக்குகின்றான் அவசரமாக பகிருங்கள் இவனுக்கு தண்டனை கிடைக்கும் வரை வேடிக்கை பார்க்க மட்டும் ஆட்கள்.
இவன் கைது செய்யப்படவண்டும். பொலிசாரின் கண்ணில் படும்வரை விரைவாகப் பகிருங்கள் 🙏
இது கண்ணிவெடி அகற்றும் பணியகம் போலுள்ளது.
இதில் அழுத்தி காணொளி பார்க்க அதிகம் பகிருங்கள் மக்களே
https://www.facebook.com/61553765198144/videos/999254965085625
















































