ஓடிய காரில் குதித்த பெண்
ஓடிய காரில் குதித்த பெண் சம்பவத்தால் கொழும்பு நகரமே பரபரப்பில் உறைந்து இருக்கின்றது.
இலங்கை ராத்மலான பகுதியில் கார் ஒன்றுக்குள் நுழைந்த திருடன் அந்த காரை திருடி செல்ல முற்பட்டுள்ளார்.
அப்பொழுது அந்த காருக்குள் 76 வயதில் மனைவியை விட்டு 80 வயது கணவன் வங்கிக்கு பணம் எடுக்கச் சென்று இருக்கின்றார்.
காருக்குள் திருடர்கள் நுழைந்ததை அடுத்து ,சுதாரித்துக் கொண்ட பெண் காரில் இருந்து குதித்து தப்பித்துக் கொண்டார்.
ஓடுகிற காரில் இருந்து குதிக்க வேண்டாம் என திருடன் பெண்ணுக்கு தெரியப்படுத்திய பொழுதும் ,அவர் அதனை பொருட்படுத்தாது காரில் இருந்து குதித்துள்ளார்.
அவர் காரில் இருந்து குதித்து தப்பிய பொழுதும் ,காரை திருடிக் கொண்டு திருடன் ஓடி விட்டான்.
குறித்த கார், தெஹிவளை பகுதியில் தங்க சங்கிலி அபகரிப்பிலும் ஈடுபடுத்தப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
தற்பொழுது திருடனை பிடிக்கும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.
லஞ்சம் ஊழல் கடத்தல் கொலைகள் .பாதுகாப்பு அச்சுறுத்தல் .இல்லாத ஒரு நாட்டை கட்டி காப்பார் என அனுரா அரசு கூறி இருந்தது.
ஆனால் வீதிக்கு வீதி மீட்டருக்கு மீட்டர் காவல்துறையினர் வீதியில் நிற்கின்ற பொழுதும் ,அது கடந்து ,அதை மறந்து, திருடர்கள் இவ்வாறு கைவரிசையை காட்டுவதே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆக ஆளுகின்ற அனுரா அரசினால் நாட்டில் வாழ்கின்ற அப்பாவி மக்களுக்கு பாதுகாப்பு இல்லை .
என்பதையே இந்த கார் திருட்டுச் சம்பவமும், ஓடிய காரிலிருந்து 76 வயது மூதாட்டி குறித்து தப்பிய சம்பவமும் கோடிட்டு காட்டுகிறது.
இந்தச் சம்பவங்கள் உள்ளூராட்சி தேர்தலில் அனுரா ஆட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்பதாக கூறப்படுகிறது.
- ஏமனில் நடந்த சண்டையில் கிட்டத்தட்ட 900 பேர் உயிரிழந்தனர்

- சமல் ராஜபக்ஷ இலஞ்ச ஆணைக்குழுவில்

- சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஓய்வு

- இந்த ஆண்டு பல அதிவேக நெடுஞ்சாலைத் திட்டங்கள் தொடங்கப்படவுள்ளன

- இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இலங்கை வந்தடைந்தார்

- வணக்கத்துக்குரிய அம்பிட்டியே சுமனரத்ன தேரர் மேலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார்

- பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நாளை ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர் – FUTA

- இந்த மண் மறக்காது: செம்மணி புதைகுழி பற்றிய விழிப்புணர்விற்காக பிரித்தானியத் தமிழர்கள் அணிதிரள்வு

- திணறும் இலங்கை அநுர அரசு

- ஹிங்குரகொடவில் தொல்பொருட்கள் சட்டவிரோதமாக அகழ்வாராய்ச்சி செய்ததற்காக ஐவர் கைது










