மீனவர்கள் 17பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

மீனவர்கள் 17பேர் கைது

மீனவர்கள் 17பேர் கைது

மீனவர்கள் 17பேர் கைது ,தமிழக மீனவர்கள் 17பேர் இலங்கை கடல் படையால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடல்பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டு கொண்டிருந்த மீனவர்கள் 17 பேரே தம்மால் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது .

இலங்கை நெடுந்தீவு கடல்பகுதியில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டு கொண்டிருந்த மீனவர்கள் இவ்விதம் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் பார படுத்தும் நடவடிக்கை இடம்பெற்று வருவதாக குறிப்பிட பட்டுள்ளது .

புலிகள் அழிக்க பட்டதன் பின்னர் தமிழக மீனவர்கள் தொடராக கைது செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது .

துப்பாக்கிகளுடன் மூவர் கைது
Posted in இலங்கை செய்திகள்

துப்பாக்கிகளுடன் மூவர் கைது

துப்பாக்கிகளுடன் மூவர் கைது

துப்பாக்கிகளுடன் மூவர் கைது ,டி-56 ரக துப்பாக்கி மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு துப்பாக்கிகளை வைத்திருந்த மூவர் அந்த துப்பாக்கிகளுடன் நேற்று (26) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நுகங்முவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெல்கஹமடில்ல பகுதியில் உள்ள கடை ஒன்றின் மேல் மாடியில் நேற்று இரவு T56 ரக துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது இலக்கம் அழிக்கப்பட்ட டி-56 ரக துப்பாக்கி என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கும்பலொலுவ பிரதேசத்தில் வசிக்கும் 51 வயதுடைய ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் என தெரியவந்துள்ளது.

இதேவேளை, நாவுல, அம்பன, எரிஸ்டன் வீதி பகுதியில் நேற்று பிற்பகல் பொலிஸார் முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போது, ​​உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் கொங்கஹவெல பிரதேசத்தை சேர்ந்த 55 வயதானவர் என தெரியவந்துள்ளது.

அத்துடன் மற்றுமொரு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஏத்திமலை, தோரதுபிட்டிய பிரதேசத்தில் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று பிற்பகல் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட இந்த சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்டவர், ஏத்திமலை பகுதியில் வசிக்கும் 39 வயதுடையவராவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அர்ச்சுனா இராமநாதன் கைது மக்கள் அழுகை
Posted in அர்ச்சுனா இலங்கை செய்திகள்

அர்ச்சுனா இராமநாதன் கைது மக்கள் அழுகை

அர்ச்சுனா இராமநாதன் கைது மக்கள் அழுகை

அர்ச்சுனா இராமநாதன் கைது மக்கள் அழுகை ,வைத்திய கலாநிதி அர்ச்சுனா இராமநாதன் அவர்கள் நீதிமன்ற உத்தரவிற்கு அமைவாக தடுத்து வைக்க பட்டுள்ளார் .

இன்று நீதிமன்ற வழக்கிற்கு சென்ற இவர் கைது செய்யப்பட்டுள்ளார் .

அர்ச்சுனா இராமநாதனை நேசிக்கும் மக்களிற்கு இந்த கைது ,தடுத்து வைப்பானது மிக பெரும் நெருடலை ஏற்படுத்தியுள்ளது .

பல ஆண் பெண்கள் அழுகையோடு எமக்கு அழைத்து தமது கண்ணீர் மலர்ந்த குமுறலை தெரிவிப்பதில் இருந்து அர்ச்சுனா இராமநாதன் என்கின்ற இந்த மனிதன் மக்கள் மனதில் எவ்விதம் நீங்காத இடம் பிடித்து ஆட்சி செய்கின்றார் என்பதை உணர முடிகிறது .

தமிழ் இனத்தின் மக்கள் விடியலிற்கு வருகை தரும் ஒருவர் இவ்விதம் நசுக்க படுவது ,மிக பெரும் நெருடலை ஏற்படுத்தியுள்ளது .

நீதிமன்றில் நடந்த விடயம் என்ன என்பதை முழுமையாக இந்த காணொளியில் உள்ளது கேட்டு பாருங்கள் மக்களே .

தளராது அர்ச்சுனாவிற்கு ஆதரவாக நாம் பயணிப்போம் .

வீடியோ

சிசுவை கொன்ற தாய் கைது
Posted in இலங்கை செய்திகள்

சிசுவை கொன்ற தாய் கைது

சிசுவை கொன்ற தாய் கைது

சிசுவை கொன்ற தாய் கைது ,21 வயதுடைய தாய் ஒருவர் தனது குழந்தையை இரத்தம் தோய்ந்த நிலையில் மூச்சுத்திணறிக் கொன்றுள்ளார்.

காணொளி மற்றும் புகைப்படம் எடுத்து 3 மணித்தியாலங்களின் பின்னர் குழந்தையின் சடலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கலஹா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கலஹா கஸ்தூரி லேண்ட் பிரதேசத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்த குலதுங்க முடியன்செலவை சேர்ந்த லிதுமி செஹன்சா என்ற தனது 18 மாத குழந்தையை தாய் இவ்வாறு கொன்றுள்ளார்.

குலதுங்க முடியசெலவை மணந்த இருபத்தொரு வயதுடைய வரதவீரன் லக்சிகா என்ற பெண், ஹொரணை பிரதேசத்தில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் இசுரு இமேஷாக கடமையாற்றி வருவதாகவும், இருவருக்கும் இடையில் அவ்வப்போது சண்டைகள் ஏற்பட்டுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் கலஹா பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வருடம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்காக ஹொரணையில் இருந்து இசுறு இம்ஸ் இல்லத்திற்கு வந்த தாம் நேற்று மீண்டும் வீட்டை விட்டு வெளியேறியதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த தாய் எப்போதும் மொபைல் போனை பார்க்கும் பழக்கத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

இரவு ஏழு மணியளவில் குழந்தையின் அழுகுரல் காரணமாக குழந்தையை தூக்கிச் சென்ற தாய் குழந்தையின் வாய் மற்றும் மூக்கை மூச்சுவிட முடியாமல் நீண்ட நேரம் அழுத்தி குழந்தையை தரையில் இறக்கியதாக பொலிஸாரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குழந்தையை அடித்து தரையில் வீசியதாக முதலில் கூறியுள்ளார். ஆனால், கீழே விழுந்த குழந்தை மீண்டும் எழுந்து சில அடிகள் நடந்து அறையின் கதவு அருகே விழுந்து உயிரிழந்தது.

இந்த தாய் அந்தக் காட்சிகளை வீடியோக்களையும் புகைப்படங்களையும் எடுத்து சுமார் 3 மணித்தியாலங்களுக்குப் பிறகு, வாடகைக்கு வீடு வைத்திருக்கும் பக்கத்து குடியிருப்பாளர்கள் வந்து குழந்தையை இரவு 10:20 மணி அளவில் கலஹா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதால், இது குறித்து கலஹா பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்க மருத்துவமனை நடவடிக்கை எடுத்துள்ளது.

கலஹா வைத்தியசாலைக்கு பொறுப்பான வைத்திய அதிகாரி ருவன் ரவீந்திரநாத் உள்ளிட்ட வைத்திய குழுவினர் இந்த மரணம் தொடர்பான ஆரம்ப கட்ட பணிகளை மேற்கொண்டிருந்தனர்.

இன்று பிற்பகல் கண்டி பதில் நீதவான் மஹிந்த லியனகே இந்த இடத்திற்கு வந்து நீதவான் விசாரணைகளை மேற்கொண்டு சடலத்தை பிரேத பரிசோதனைக்காக பேராதனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு கூறினார்.

கலஹா பொலிஸார் தாயை கைது செய்து மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒருவர் விமான நிலையத்தில் கைது
Posted in இலங்கை செய்திகள்

ஒருவர் விமான நிலையத்தில் கைது

ஒருவர் விமான நிலையத்தில் கைது

ஒருவர் விமான நிலையத்தில் கைது ,விசாரணைக்காக தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் டுபாயில் இருந்து நாடு திரும்பிய நிலையில் கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

பண மோசடியில் ஈடுபட்ட சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

தனியார் நிறுவனமொன்றின் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி 108 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பண மோசடி செய்ததாக சந்தேகநபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 32 வயதுடைய கண்டியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் திணைக்களம் மேற்கொண்டு வருகின்றது.

வெடிபொருட்களுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது
Posted in இலங்கை செய்திகள்

வெடிபொருட்களுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது

வெடிபொருட்களுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது

வெடிபொருட்களுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாவுல பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (18) காலை நாவுல பிபில பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த சந்தேகநபர்கள் முச்சக்கரவண்டியில் பயணித்துக் கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது, சந்தேகநபர்களிடம் 05 டெட்டனேட்டர்கள், 03 வோட்டர் ஜெல் குச்சிகள் மற்றும் வயர் ரோல் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 38, 49, 50 மற்றும் 65 வயதுடைய கட்டுகஸ்தோட்டை, கம்பளை, எலஹெர மற்றும் உடலகவின்ன ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவராவர்.

நாவுல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

துப்பாக்கியுடன் நபர் கைது
Posted in இலங்கை செய்திகள்

துப்பாக்கியுடன் நபர் கைது

துப்பாக்கியுடன் நபர் கைது

துப்பாக்கியுடன் நபர் கைது ,மாங்குளம் பகுதியில் துப்பாக்கி வைகுத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர் .

உளநாட்டில் தயாரிக்க பட்ட துப்பாக்கியுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ,கைதானவர் உரிய முறி விசாரணைக்கு உள்ளாகி வருவதாக தெரிவிக்க பட்டுள்ளது .

தேர்தல் இடம்பெறும் இந்த கால பகுதியில் இவ்வாறான விடயங்கள் வெளியாகி வருவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது .

ரணிலின் கூட்டத்தில் ரவையுடன் இளைஞன் கைது
Posted in இலங்கை செய்திகள்

ரணிலின் கூட்டத்தில் ரவையுடன் இளைஞன் கைது

ரணிலின் கூட்டத்தில் ரவையுடன் இளைஞன் கைது

ரணிலின் கூட்டத்தில் ரவையுடன் இளைஞன் கைது ,மட்டக்களப்பில், ஜனாதிபதி ரணில் கலந்து கொண்ட தேர்தல் பிரச்சார கூட்டத்தில் ரி 56 ரக துப்பாக்கி ரவை உடன் சென்ற இளைஞன் ஒருவரை ஜனாதிபதி பாதுகாப்பு படையினர் ஞாயிற்றுக்கிழமை (08) கைது செய்துள்ளதாக சந்திவெளி பொலிஸார் தெரிவித்தனர்.

சந்திவெளி பொலிஸ் பிரிவிலுள்ள கிரான் கோரகளிமடு பிரதேசத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தேர்தல் பிரச்சார கூட்டத்திற்கு வருகை தருபவர்களை ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினர் சோதனையிட்டு அனுப்பிக் கொண்டிருந்தனர்.

இதன் போது கூட்டத்திற்கு சென்ற இளைஞன் ஒருவரை சோதனையிடும் போது அவரின் உடமையிலிருந்து ரி 56 ரக துப்பாக்கி ரவை ஒன்றை கண்டுபிடித்து மீட்டதையடுத்து அவரை கைது செய்தனர்

இதில் கைது செய்யப்பட்டவர் வாகரை வம்மிவெட்டுவான் வீதியைச் சேர்ந்த 24 வயதுடைய கடற்தொழில் ஈடுபட்டு வருபவர் எனவும் இவரை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை சந்திவெளி போலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

இலஞ்சம் பெற்ற பரிசோதகர்கள் கைது
Posted in இலங்கை செய்திகள்

இலஞ்சம் பெற்ற பரிசோதகர்கள் கைது

இலஞ்சம் பெற்ற பரிசோதகர்கள் கைது

இலஞ்சம் பெற்ற பரிசோதகர்கள் கைது
,60,000 ரூபா இலஞ்சம் பெற்ற இரண்டு வருவான வரி பரிசோதகர்ளை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

பிரதேச சபையின் அனுமதியின்றி காணியொன்றில் கட்டிடமொன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு சட்ட நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்காகவும் அதனை உடைத்து அகற்றாமல் இருப்பதற்கும் இந்த தொகை கோரப்பட்டுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இதற்காக முதலில் 350,000 ரூபா பணம் கோரப்பட்டதாகவும், பின்னர் அது 1 இலட்சமாக குறைக்கப்பட்டு, பின்னர் மீண்டும் 60,000 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கிளிநொச்சி பிரதேசத்தில் பெண் ஒருவர் செய்த முறைப்பாட்டின் படி, கரைச்சி பிரதேச சபையின் இரண்டு வருவான வரி பரிசோதகர்கள் குறித்த பெண்ணின் வீட்டிற்கு முன்பாக பணத்தை பெற்றுக்கொண்ட போது இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த உள்ளதாக இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டு விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பேஸ்புக் மூலம் போதை பார்ட்டி 43 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

பேஸ்புக் மூலம் போதை பார்ட்டி 43 பேர் கைது

பேஸ்புக் மூலம் போதை பார்ட்டி 43 பேர் கைது

பேஸ்புக் மூலம் போதை பார்ட்டி 43 பேர் கைது ,நீர்கொழும்பு கடற்கரையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் ஹெரோயின், கஞ்சா மற்றும் சட்டவிரோத சிகரெட்களுடன் வெவ்வேறு பகுதிகளில் வசிக்கும் 43 பேர் கைது

செய்யப்பட்டுள்ளதாக கலால் திணைக்களத்தின் மேல் மாகாண உதவி ஆணையாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

கலால் திணைக்களத்தினால் அமுல்படுத்தப்படும் நூறு நாள் வேலைத்திட்டத்தின் கீழ் குறித்த சுற்றிவளைப்பு செய்யப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர்கள் 19 முதல் 35 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்றும் அவர்களில் தனியார் பல்கலைக்கழக மாணவர்கள், வர்த்தகர்கள் மற்றும் பல்வேறு தொழில் செய்பவர்களும் அடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தக் குழுவில் 10 இளம் பெண்களும் 33 இளைஞர்களும் இருந்துள்ளனர்.

முகநூல் ஊடாக தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு வந்துள்ள இவர்கள் தங்காலை, மாரவில, கிரிந்திவெல, ஹிகுராக்கொட, பூகொட, நீர்கொழும்பு, ஜாஎல, திகன, ஹொரண ஆகிய பிரதேசங்களில் வசிப்பவர்கள் என தெரியவந்துள்ளது

11 இந்திய மீனவர்கள் கைது
Posted in இலங்கை செய்திகள்

11 இந்திய மீனவர்கள் கைது

11 இந்திய மீனவர்கள் கைது

11 இந்திய மீனவர்கள் கைது ,இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 11 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வடக்கு கடற்பரப்பில் வைத்து குறித்த மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கடற்படைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அந்தபடம் காட்டிய அதிபர் கைது
Posted in இலங்கை செய்திகள்

அந்தபடம் காட்டிய அதிபர் கைது

அந்தபடம் காட்டிய அதிபர் கைது

அந்தபடம் காட்டிய அதிபர் கைது ,தரம் 5 இல் கல்வி கற்கும் மாணவிகள் மற்றும் மாணவர்களுக்கு, தன்னுடைய கையடக்க தொலைபேசியின் ஊடாக ஆபாச படங்களை காண்பித்த பாடசாலை அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மட்டக்களப்பு, ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள பாடசாலையைச் சேர்ந்த 57 வயதுடைய பாடசாலை அதிபர் ஒருவரை புதன்கிழமை (21) இரவு கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பொலிஸ் பிரிவிலுள்ள ஆரம்ப பாடசாலை ஒன்றில் தரம் 5ம் ஆண்டில் 3 சிறுமிகள் 3 சிறுவர்கள் உட்பட 6 பேர் கல்வி கற்று வருகின்றனர்.

இந்த நிலையில்; குறித்த மாணவர்கள் 5ம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவுள்ள நிலையில் அந்த மாணவர்களுக்கு பாடசாலை முடிவுற்ற பின்னர் மேலதிகமாக மாலையில் அதிபர் கற்பித்து வந்துள்ளார்

இதன் போது குறித்த அதிபர் மாணவர்களுக்கு தனது கையடக்க தொலைபேசியில் இருந்து ஆபாச படங்களை காட்டி வந்துள்ள நிலையில் ஒரு மாணவி மாலை நேர வகுப்புக்கு போக முடியாது என பெற்றோரிடம்

தெரிவித்த நிலையில் அதற்கான காரணத்தை கேட்ட போது சிறுமி அதிபரின் இந்த ஈனச் செயல் தொடர்பாக தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து சம்பவ தினம் பெற்றோர் 119 ம் பொலிஸ் அவசர இலக்கத்திற்கு அறிவித்ததையடுத்து பாதிக்கப்பட்ட 3 மாணவிகளான

சிறுமிகளிடம் இருந்து வாக்கு மூலத்தை பதிவு செய்ததுடன் 57 வயதுடைய அதிபரை பொலிஸார் கைது செய்தனர்

இதில் கைது செய்யப்பட்ட அதிபரை விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பெண்கள் சிறுவர்கள் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற் கொண்டுவருகின்றனர்.

பாலியல் துஸ்பிரயோகம் 3பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

பாலியல் துஸ்பிரயோகம் 3பேர் கைது

பாலியல் துஸ்பிரயோகம் 3பேர் கைது

பாலியல் துஸ்பிரயோகம் 3பேர் கைது ,மட்டக்களப்பு, களுவாஞ்சிக்குடி, ஏறாவூர், காத்தான்குடி, ஆகிய பொலிஸ் பிரிவுகளில் கடந்த இரு வாரங்களில் பாடசாலை சிறுமி ஒருவர் பாலியல் துஸ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம்

தொடர்பாக ஆசிரியர் ஒருவரையும், இரு சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் இரு இளைஞர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில், 4 வயது சிறுவனை சித்திரவதை செய்த பாடசாலை ஆசிரியர் ஒருவருக்கு எதிராக முறைபாடு செய்துள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மாவட்டதிலுள்ள பிரதேச பாடசாலை ஒன்றில் கல்விகற்றுவரும் 16 வயதுடைய மாணவியை கடந்த 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை ஆலயம் ஒன்றில் தரிசனத்தில்

ஈடுபட்டுக் கொண்டிருந்த சிறுமியை அதே பாடசாலையில் கல்வி கற்பித்துவரும் 44 வயதுடைய ஆசிரியர் சிறுமியை தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிக் கொண்டு அங்கிருந்து மட்டுநகர் பகுதிக்கு பிராயாணித்துள்ளார்

இதனை கண்டுகொண்ட இளைஞர்கள் அவர்களை பின் தொடர்ந்து வந்து நகர்பகுதியில் வைத்து பிடித்து நைப்புடைப்பு செய்த நிலையில் அவர் அந்த அங்கிருந்து

சிறுமியுடன் தப்பி ஓடியுள்ளார். இது தொடர்பாக சிறுவர் நன்னடத்தை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் குறித்த ஆசிரியருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்தனர்.

இதனையடுத்து குறித்த ஆசிரியரை கவியாழக்கிழமை (15)) திகதி ஏறாவூர் பொலிஸார் கைது ஏறாவூர் நீதவான் நீதிமன்ற நீதவான் முன்னிலைப்படுத்தினர். அவரை 23 ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

அதேவேளை, காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசம் ஒன்றில் 15 வயது சிறுமியை 19 வயதுடை இளைஞன் காதலித்து வந்துள்ளார். அச்சிறுமியை கூட்டிச் சென்று ஆயித்தியமலை பிரதேசத்தில் வீடொன்றில் வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்து மறைத்து வைத்திருந்த நிலையில் அவரை கைது செய்து நீதின்றில் ஆஜராக்கிய நிலையில் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவ்வாறே கஞவாஞ்சிக்குடி பிரதேசத்தில் 15 சிறுமியை காதலித்து வந்த 19 வயது இளைஞன் ஒருவர் குறித்த சிறுமியின் வீட்டிற்கு இரவில் மோட்டார் சைக்கிளில் சென்று அதனை மறைவிடம் ஒன்றில் மறைத்து வைத்துவிட்டு மதிலால் ஏறி வீட்டிற்கு சென்று

சிறுமியுடன் காதலில் ஈடுபட்டுபிட்டு திரும்பி வந்து சென்றுவரும் நிலையில் அதனை அவதானித்த இனம் தெரியாதோர் அவர் வழமைபோல மோட்டார் சைக்கிளை விட்டுவிட்டு காதலியிடம் மதிலால் சென்ற திரும்பிவரும் போது மோட்டார் சைக்கிள் தீக்கிரையாக்கியுள்ளனர்.

இந்த மோட்டார் சைக்கிள் தீக்கிரை தொடர்பான விசாணையில் குறித்த இளைஞன் காதலியான 15 வயது சிறுமியின் வீட்டிற்கு இரவில் களவாக சென்றுவருவதாக அறிந்ததையடுத்து 15 வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் கைது செய்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளர்.

இந்நிலையில், ஆங்கில மொழி மூலமான தனியார் பாடசாலை ஒன்றில் ஆரம்ப பிரிவில் ல்வி கற்றுவரும் 4 வயது சிறுவன் ஒருவன் வாயில் ஏற்பட்ட காயம் காரணமாக பாடசாலைக்கு செல்லமுடியாத மருத்துவ விடுமுறையில் வீட்டில் இருந்துள்ளார்.

இதன் பின்னர் கடந்த வாரம் பாடசாலைக்கு சென்ற நிலையில் அந்த மாணவனுக்கு அங்கு கற்பித்துவரும் ஆசிரியர் ஒருவர் குறித்த நேர பகுதியில் அந்த தவனைக்கான பாடதிட்டத்தை முடிக்கவேண்டும் என தெரிவித்து மாணவனை குறித்த சில நேரத்தில் அந்த பாடங்களை எழுதவைத்துள்ளார்

மாணவன் கை நோகின்றது என தெரிவித்த போதும் அவனை வற்புறுத்திய நிலையில் இருகைகளும் வேதனைக்கு மத்தியில் அதனை எழுதி வீட்டிற்கு சென்று தனக்கு நடந்த

கொடூரமான செயலை தெரிவித்ததையடுத்து அந்த ஆசிரியருக்கு எதிராக பாதிக்கப்பட்ட சிறுவனின் பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

பள்ளி மாணவிக்கு பாலியல் துஷ்பிரயோகம்: இலங்கையில் 17 பள்ளி மாணவர்கள் கைது
Posted in இலங்கை செய்திகள்

பள்ளி மாணவிக்கு பாலியல் துஷ்பிரயோகம்: இலங்கையில் 17 பள்ளி மாணவர்கள் கைது

பள்ளி மாணவிக்கு பாலியல் துஷ்பிரயோகம்: இலங்கையில் 17 பள்ளி மாணவர்கள் கைது

பள்ளி மாணவிக்கு பாலியல் துஷ்பிரயோகம்: இலங்கையில் 17 பள்ளி மாணவர்கள் கைது ,கடந்த ஒரு வருட காலப்பகுதியில் தனமல்வில பிரதேசத்தில் 11 ஆம் வகுப்பு மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்து

கூட்டு வன்புணர்வு செய்த குற்றச்சாட்டின் பேரில் 17 பாடசாலை மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பாடசாலை மாணவர்களுடன் பெண்ணொருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக அட தெரண தெரிவித்துள்ளது.

ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் குழந்தைக்கு பயத்தை ஏற்படுத்தியதன் விளைவாகவே அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக பாடசாலை மாணவியின் தாயார் குற்றஞ்சாட்டியுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமி தனது பள்ளியைச் சேர்ந்த ஒரு பையனுடன் காதல் வயப்பட்டிருந்ததாக காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. சிறுவன் அவளை ஏமாற்றி நண்பனின் வீட்டிற்கு அழைத்துச் சென்றதாகவும், அங்கு முதல் முறையாக பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து வீட்டில் இருந்த பாடசாலை மாணவர்கள் குழுவொன்று அவரை வலுக்கட்டாயமாக மதுபானம் அருந்த வைத்து பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாகவும், அதேவேளை இந்த சம்பவத்தை வீடியோவாக எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த ஆண்டு (2023) பள்ளிச் சிறுவர்கள் பாதிக்கப்பட்ட பெண்ணை வீடியோ மூலம் மிரட்டி ஏழு முறை கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய 17 பள்ளிச் சிறுவர்களுக்கு தொடர்பு இருப்பதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

மாணவியை வலுக்கட்டாயமாக மது அருந்த வைத்து, முதலில் பள்ளி மாணவர்கள் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தது தெரியவந்தது. அதன்பிறகு பல சந்தர்ப்பங்களில், குழுவைச் சேர்ந்த பள்ளி மாணவர்கள் மற்ற பள்ளிகளில் விளையாட்டுப் போட்டிகளுக்குச் சென்றபோது கழிவறைகள் மற்றும் விளையாட்டு ஓய்வறைகளில் சிறுமியை துஷ்பிரயோகம் செய்து கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். மற்ற மாணவர்களின் வீடுகளிலும் சிறுமி துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்தை மறைத்த பாடசாலை அதிபரிடம் வாக்குமூலங்களைப் பெற்றுக்கொண்ட பொலிஸார், 17 பாடசாலை மாணவர்களையும் அவர்களுக்கு உதவிய பெண் ஒருவரையும் கைதுசெய்துள்ளனர். சந்தேகநபர்கள் வெல்லவாய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

இதேவேளை, ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் வைத்திய பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் குழந்தைக்கு அச்சத்தை ஏற்படுத்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாக குழந்தையின் தாய் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய் ஹம்பாந்தோட்டை பொலிஸ் மற்றும் பொலிஸ் சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

ஏழு பேர் துப்பாக்கிகளுடன் கைது
Posted in இலங்கை செய்திகள்

ஏழு பேர் துப்பாக்கிகளுடன் கைது

ஏழு பேர் துப்பாக்கியுடன் கைது

 ஏழு பேர் துப்பாக்கிகளுடன் கைது ,கொழும்பு ராஜகிரிய பகுதியில் துப்பாக்கிகளுடன் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறையினர் தெரிவித்திருக்கின்றனர்.

 பி 56 ரக துப்பாக்கிகளுடன் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகும் கைது செய்யப்பட்ட ஏழு பெரும் தற்பொழுது நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

 போதை வஸ்து குழுக்களுடன் தொடர்பு கொள்வதாக கருதப்படும் இந்த ஏழு பேரும் பல்வேறுபட்ட  சமூக விரோத செயல்பாடுகளில் ஈடுபட்டு வந்ததாக போலீசார் குற்றம் சுமத்துகின்றனர்

 தேர்தல் நெருங்கும் வேளையில் மிகப் பெரும் ஆயுதங்களுடன் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது மக்கள் மத்தியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது

 இலங்கையில் ஆயுத வைத்திருப்பது தடை செய்யப்பட்டுள்ள நிலையில் அவ்வாறு அத்துமறி இந்த அதிநவீன ஆயுதங்களுடன் இவர்கள் எவ்வாறு உலாவி வருகின்ற கேள்வி எழுப்பப்பட்டுள்ளது

 உரிய முறை விசாரணைகளின் பின்னர் நீதிமன்றம் பாரப்படுத்தப்பட்ட பொழுதும் அவருடன் புறப்பட்ட விசாரிகளில் கிடைக்கப்பெற்ற தகவலை எடுத்து போலீசார் தொடர்ந்து பலரை தேடி வருவதாக தெரிவிக்கப்படுகிறது

 எந்த சம்பவங்கள் இலங்கையில் மிகப்பெரும் துப்பாக்கி கலாச்சாரம் அல்லது படுகொலைகள் இடம்பெறப் போவதை இவை எடுத்துக்காட்டுகிறது என்பதை இப்போது ஊகித்துக் கொள்ள முடிகிறது

மீனவர்கள் 22பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

மீனவர்கள் 22பேர் கைது

மீனவர்கள் 22பேர் கைது

 மீனவர்கள் 22பேர் கைது ,இலங்கை கடற்படையினரால் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் ,இலங்கை கடற்படையால் 22 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 தமிழகம் தூத்துக்குடி பகுதியில் இருந்து வந்த மீனவர்களை இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர் .

தெற்கு கடல் பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த பொழுதே 22 பேரும் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது..

 இலங்கையில் மீனவ அமைச்சராக டக்கிளஸ் என்கின்ற தமிழர் அமைச்சராக அங்க வகிக்கின்ற இந்த காலப்பகுதியில் ,இலங்கை கடற்படையினால் மீனவர்கள் அதிகமாக கைது செய்யப்பட்ட வருகின்ற சம்பவம் இடம்பெற்று வருகின்றது.

 இந்தியாவில் தேடப்படும் நபராக இலங்கை மீன்பிடி அமைச்சர் காணப்படுகின்ற இந்த வேளையிலேயே ,இந்தியா மீனவர்கள் இலக்கு வைத்து இவரால் கைது செய்யப்படுகின்றன சந்தேகத்தை எழுப்பி நிற்கின்றது.

 அமைச்சர்களாக பதவி ஏற்கின்ற பொழுதும் மக்களுக்குரிய நீதியியினை இவர்கள் நிலை நாட்டினர்களா என்ற கேள்வியை மக்கள் மன்றம் இப்பொழுது கேள்வி எழுப்பி கொள்கிறது.

 விடுதலையின் கனவை சுமந்து விடுதலைக்கப் போராடுகின்ற தமிழ் மக்கள் மத்தியில் அந்த அடக்குமுறை ஆட்சியில் இருந்து விடுதலை பெறுவதற்கும் ,இந்த மக்கள் துடித்துக் கொண்டிருக்கின்ற இந்த காலப்பகுதியில் ,

இந்த மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் சலசலப்பையும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

மக்கள் கொதிப்பு அர்ச்சுனா கைதால்
Posted in இலங்கை செய்திகள்

மக்கள் கொதிப்பு அர்ச்சுனா கைதால்

மக்கள் கொதிப்பு அர்ச்சுனா கைதால்

மக்கள் கொதிப்பு அர்ச்சுனா கைதால் ,அர்ச்சுனா ராமநாதன் காவல்துறையால் கைது செய்யப்பட்டதை அடுத்து உலகளாவிய தமிழர்கள் மத்தியில் தற்பொழுது பெரும் கொந்தளிப்பு காணப்படுகின்றது.

சாவகச்சேரி மருத்துவமனையின் முன்னாள் பொறுப்பதிகாரியாக பணியாற்றிய பின்னர் அங்கே இடம்பெற்ற ஊழல்கள் ஒற்றுமையின்மை காரணமாக தற்பொழுது இடமாற்றம் செய்யப்பட்டார் அர்ச்சனா ராமநாதன் அவர்கள்.

கடந்த தினம் மன்னர் மாவட்ட மருத்துவமனைக்கு சென்று இருந்தார் .அங்கு சென்றிருந்த பொழுது அவர் அத்துமறி நுழைந்து கலவரத்தில் ஈடுபட்டதாக தெரிவித்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இவ்வாறு கைது செய்யப்பட்டு செல்லப்பட்ட எவர் தற்பொழுது நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்பட்ட நிலையில் அவர் திங்கட்கிழமை அல்லது ஏழாம் திகதி விடுதலை செய்யப்படலாம் என்ற நிலையில் நிலையில் தற்போது மக்கள் மத்தியில் ஒருவித கொந்தளிப்பு காணப்படுகின்றது.

திட்டமிட்ட சாதி நடவடிக்கையின் ஒரு அங்கமாகவே தற்பொழுது அர்ச்சனா ராமநாதன் அவர்கள் காவல்துறையினர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னார் மாவட்டத்தினுடைய வைத்தியசாலையில் இடம் பெற்ற பெண் ஒருவரது மரணம் தொடர்பாக நீதி கேட்டுச் சென்ற பொழுது அர்ச்சுனா இராமநாதன் இவ்வாறு நயவஞ்சகமாக திட்டமிடப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.

மருத்துவர் அர்ச்சுனா இராமநாதன் இந்த கைது நடவடிக்கை சற்றும் எதிர்பாராத ஒன்றாகவும்,

மக்கள் மத்தியில் அர்ச்சுனா இராமநாதன் கைது கோபத்தை தூண்டுகின்ற ஒரு நடவடிக்கையாக காணப்படுவதால் தற்பொழுது மக்கள் வீதி இறங்கி போராட்டத்தை நடத்த வேண்டிய தேவை காணப்படுகிறது .

அதனால அவ்வாறு செய்கின்ற பொழுதுதான் எங்களது அர்ச்சுனா இராமநாதன் விடுதலை செய்ய முடியும் என்கின்ற கருத்து தமிழ் மக்கள் மத்தியில் பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழக மீனவர்கள் நால்வர் கைது
Posted in இலங்கை செய்திகள்

தமிழக மீனவர்கள் நால்வர் கைது

தமிழக மீனவர்கள் நால்வர் கைது

தமிழக மீனவர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படையினர் இப்படி தெரிவிக்கின்றனர்.

யாழ்ப்பாணம் நெடுந்தேவு கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த 4 தமிழக மீனவர்களை நேற்று மாலை தாங்கள் கைது செய்துள்ளதாக இலங்கை கடற்படையினர் இப்படி தெரிவிக்கின்றனர்.

தமிழ்நாடு ஜெகதா பட்டினத்தைச் சேர்ந்த நாளும் மீனவர்களை இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக இவளை அவர்களது படகு மற்றும் படகில் பிடித்து செல்லப்பட்ட மீன்கள் வகைகள் உள்ளிட்டவையும் இலங்கை கடப்பினர் அவரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

கைது செய்யப்பட்ட நான்கு மீனவர்களும் ஜால் மாவட்ட களத்தொழில் ரீதியில் வளத்திணக்கில் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது மீன்பிடி அமைச்சராக டாக்டர் உலகிலேயே அவரது உத்தரவின் பேரிலேயே இந்த மீனவர்கள் கைது செய்யப்பட்டு வருவதற்கான தகவல் வெளியாகி வருகின்றது

விடுதலை புலிகள் அந்த மண்ணில் முற்றாக அளிக்கப்பட்டதன் பின்னர் தற்பொழுது அந்த யுத்தம் முடிந்த 2009 ஆம் ஆண்டுக்குப் பின்னர் கடல் வழியில் பயணிக்கின்ற அத்தனை தமிழகம் மீனவர்களையும் இளங்க கடுப்பிடித்து செல்வதும் சுட்டு படுகொலை செய்கின்ற நடவடிக்கையும் அதிகரித்து காணப்படுகின்றது

தமது மீனவர்களை விடுதலை செய்யும்படி தமிழக அரசு இலங்கையரசன் பொழுதும் இதுவரை இலங்கை அரசு அந்த மீனவர்களை விடுவிக்கவில்லை என்பது இங்கே கவனிக்கத்தக்கது

மருத்துவர் அர்ச்சுனா கைது
Posted in இலங்கை செய்திகள்

மருத்துவர் அர்ச்சுனா கைது

அர்ச்சுனா கைது

மருத்துவர் அர்ச்சுனா கைது செய்யப்பட்டுள்ளதாக மன்னர் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .

மன்னர் மருத்துவமனையில் இடம்பெற்ற இளம் பெண் ஒருவரது மரணம் தொடர்பில் அங்கு பயணம் செய்த மருத்துவர் ,அந்த பெண் மரணத்திற்கான விடயத்தை கேள்வி எழுப்பினார் .

பாதிக்க பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு நீதி வேண்டி தரவேண்டும் என்ற நோக்கத்துடன் ,முறைப்பாட்டு கடிதங்களை ஆங்கிலத்தில் எழுதி வழங்கினார் .

மருத்துவமனையில் ரகளை செய்தார் என நிலையில் கைது செய்யப்பட்டுளளார் .

அதனை அடுத்தே தற்போது அர்ச்சுனா இராமநாதன் அவர்கள் மன்னர் காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார் .

மக்கள் அர்ப்பணிப்புக்கு தயாராகிவிட்ட அர்ச்சுனா மருத்துவர் கைது செய்யப்பட்ட விடயம் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

தேர்தல் வரும் காலா பகுதியில் இவர் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ள விடயம் மக்கள் மத்தியில் பெரும் பதட்டம் ஏற்படுத்த பட்டுள்ளது .

கைது செய்யப்பட்ட மருத்துவர் அர்ச்சனா இராமன்தான் எட்டிகிறவரும் ஏழாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க போட்டுள்ளார் .

பிணையில் விடுதலை செய்யும் நிலை ஏற்படலாம் என்ற தகவல் வெளியிட பட்டுள்ளது ,

சீனா நாட்டவர்கள் இலங்கையில் கைது
Posted in இலங்கை செய்திகள்

      சீனா நாட்டவர்கள் இலங்கையில் கைது

 சீனா நாட்டவர்கள் இலங்கையில் கைது

 சீனா நாட்டவர்கள் இலங்கையில் கைது ,இலங்கையில் இணையதள மூடாக மாறிய மோசடியில் ஈடுபட்டு வந்த சீன நாட்டைச் சேர்ந்த எட்டு பேரை தாம் கைது செய்துள்ளதாக காலில் காவல்துறையில் தெரிவித்து வருகின்றனர்.

 உல்லாச பயணத்துறை விசாவில் இலங்கை வந்தடைந்த சீன நாட்டவர்கள் ஊடாக மக்களை ஏமாற்றி பண மோசடி செய்து வந்துள்ளது அம்பலமாகி இருக்கின்றது.

 இலங்கையில் சமீப சில வாரங்களாக நூற்றுக்கு மேற்பட்ட வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர் .

இவர்கள் சூதாட்டம் மற்றும் இணைய வழி மோசடியில் ஈடுபட்டதாக இலங்கையினுடைய காவல்துறையினர் குற்றம் சுமத்தி இருந்தனர்.

 அவ்வாற நிலையில் தற்போது 8 பேர்காலி பகுதியில் வைத்து காலி போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர் .

இவர்கள் வைத்திருந்த தொலைபேசிகள் மற்றும் கணனிகள் என்பனவும் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 சில வாரங்களுக்கு முன்னதாக கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டவர்கள் ஊடாக கிடைக்கப்பெற்ற அல்லது பெறப்பட்ட தகவலை அடுத்து, இடம்பெற்று வந்த விசாரணையின் பின்னரே இந்த குழுவும் காலில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளது.

 மிக பாதுகாப்பான இரகசிய வரைபடம் ஒன்றிலிருந்து இந்த நூதன இணையவழிக் கொள்ளையில் இவர்கள் ஈடுபட்டு வந்துள்ள செயல் தற்பொழுது அம்பலமாகியுள்ளது .

இவர்களது கைதின் ஊடாக மேலும் பல சிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது