Posted in இலங்கை செய்திகள்

ஆயுதங்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது

ஆயுதங்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது

ஆயுதங்களுடன் சந்தேகநபர் ஒருவர் கைது
எம்பிலிபிட்டிய பிரதேசத்தில் இன்று (04) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் ஆயுதங்கள் சிலவற்றை வைத்திருந்த சந்தேக நபர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

விசேட பொலிஸ் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன்போது, சந்தேகநபரிடம் இருந்து AK 47 ரக துப்பாக்கி, 2 மெகசின்கள், தோட்டாக்கள், 9 mm கைத்துப்பாக்கி மற்றும் இரண்டு வாள்கள், கத்தி ஒன்று ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன.

படுகொலை தொடர்பில் பெண் உள்ளிட்ட எண்மர் கைது
Posted in இலங்கை செய்திகள்

படுகொலை தொடர்பில் பெண் உள்ளிட்ட எண்மர் கைது

படுகொலை தொடர்பில் பெண் உள்ளிட்ட எண்மர் கைது

படுகொலை தொடர்பில் பெண் உள்ளிட்ட எண்மர் கைது மிதிகமவில் துப்பாக்கிச் சூடு நடத்தி ஒருவரை கொலை செய்ததுடன் மேலும் இருவரை

படுகாயமடைய செய்த சம்பவத்துடன் தொடர்புடைய 8 சந்தேக நபர்களை மாத்தறை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

கடந்த செப்டெம்பர் மாதம் 19ஆம் திகதி மிதிகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொவியாபான பகுதியில் மோட்டார் சைக்கிளில் பிரவேசித்து இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டைநடத்திய சந்தேகநபர், குற்றத்தின் பின்னர் துப்பாக்கி மற்றும் 05 தோட்டாக்களை வைத்திருந்த சந்தேகநபர் மற்றும் குற்றத்திற்கு உதவிய மேலும் 05 சந்தேகநபர்களுடன், பெண் சந்தேகநபர் ஒருவரும்

மாத்தறை குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் நேற்று (03) வெல்லவாய, அஹங்கம மற்றும் மிதிகம பிரதேசங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பின்னர், அவர்கள் மாத்தறை பொலிஸ் நிலையத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதுடன், துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் பின்னர், துப்பாக்கியை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட முச்சக்கரவண்டியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் அஹங்கம, வெலிகம மற்றும் வெல்லவாய பிரதேசங்களைச் சேர்ந்த 20 முதல் 42 வயதிற்கு உட்பட்டவர்கள் எனவும், பெண்

சந்தேகநபர் அஹங்கம பகுதியைச் சேர்ந்த 41 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைத்துப்பாக்கி வைத்திருந்த சந்தேக நபரிடம் இருந்து ஹெரோயின் கடத்தல் மூலம் ஈட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 1,542,000/- ரூபாய் பணம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், இவர், வெளிநாட்டில் இருந்து இந்த

நாட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தலை மேற்கொள்ளும் ஒருவருடன் நெருங்கிய தொடர்பை பேணிவருவதாகவும் தெரியவந்துள்ளது.

மாத்தறை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

22 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்ட நபர் கைது
Posted in இலங்கை செய்திகள்

22 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்ட நபர் கைது

22 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்ட நபர் கைது

22 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்ட நபர் கைது கந்தானை-கந்தேவத்த பகுதியில் நேற்று (02) மாலை திருட்டுச் சம்பவமொன்று தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கந்தானை பொலிஸார் முன்னெடுத்திருந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேகநபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைதான நபர் மதுரங்குளிய பகுதியைச் சேர்ந்த 42 வயதுடையவர் என தெரியவருகிறது.

இதன்போது சந்தேகநபரிடம் முன்னெடுக்கப்பட்ட மேலதிக விசாரணைகளில், சந்தேகநபருக்கு எதிராக கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்றச் செயல்கள்

தொடர்பில் நீதிமன்றங்களில் வழக்குகள் நிலுவையில் உள்ளதோடு, புத்தளம் மற்றும் நீர்கொழும்பு நீதிமன்றங்கள் 22 திறந்த பிடியாணைகளை பிறப்பித்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கந்தானை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே கைது
Posted in இலங்கை செய்திகள்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே கைது

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே கைது

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே கைது ,முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே கண்டியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

நுகேகொடை மிரிஹானையில் உள்ள அவரது மனைவி வீட்டில் இலக்கத் தகடுகள் இல்லாத கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வததேவின் மனைவி ஷஷி பிரபா ரத்வத்தேவிற்கு சொந்தமான மிரிஹான எம்புல்தெனிய சாலாவ

வீதியில் அமைந்துள்ள மூன்று மாடி வீடொன்றில் இலக்கத் தகடுகள் இல்லாத சொகுசு கார் ஒன்று இருப்பதாக பொலிஸ் தலைமையகத்திற்கு தகவல் கிடைத்தது.

இதன்படி, மிரிஹான பொலிஸார் நுகேகொட நீதவான் நீதிமன்றில் சமர்ப்பணங்களை முன்வைத்து, குறித்த வீட்டிற்குச் சென்று வாகனத்தை சோதனையிட்டனர்.

இலக்கத் தகடு இல்லாத சம்பந்தப்பட்ட கார் கடந்த 26ம் திகதி கண்டறியப்பட்டது.

குறித்த வீட்டில், முன்னாள் அமைச்சரின் மனைவியின் தாயார் வசிப்பதாகவும், கடந்த சில நாட்களுக்கு முன்னர் கண்டி, கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த ரத்வத்தேவின் பிரத்தியேக செயலாளர், கடந்த

3 வாரங்களுக்கு முன்னர் அந்த காரை தமது வீட்டின் வாகன தரிப்பிடத்திற்கு கொண்டு வந்துள்ளதாக முன்னாள் இராஜாங்க அமைச்சரும் அவரது மனைவியும் பொலிஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

பதிவு செய்யப்பட்ட இலக்கத் தகடுகள் மற்றும் சாவி இல்லாத அந்த சொகுசு காரை மிரிஹான பொலிஸ் நிலையத்திற்கு கொண்டுச் செல்ல பெரும் முயற்சிகள் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலஞ்சம் பெற்ற பொலிஸ் கைது
Posted in இலங்கை செய்திகள்

இலஞ்சம் பெற்ற பொலிஸ் கைது

இலஞ்சம் பெற்ற பொலிஸ் கைது

இலஞ்சம் பெற்ற பொலிஸ் கைது ,20,000 ரூபாவை இலஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டின் பேரில், கம்பளை தலைமையகப் பொலிஸ் நிலையத்தின்

பிரதான பொலிஸ் பரிசோதகர் ஒருவர் இலஞ்சம் ஊழல் தொடர்பான ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கம்பளையில் வசிக்கும் ஒருவரின் முறைப்பாட்டின் அடிப்படையில், காருக்கான எரிபொருளை செலுத்துவதற்கும், 25.10.2024 அன்று இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவிற்குச் சென்று முறைப்பாடு செய்தவருக்கு எதிராக இருந்த

வழக்குத் தொடர்பில் விசாரணை செய்து அது தொடர்பான வாக்குமூலத்தை வழங்குவதற்கும் முறைப்பாட்டாளரிடம் குறித்த பரிசோதகர் 20,000 ரூபா இலஞ்சம் கேட்டதாகக் கூறப்படுகிறது.

இதன்படி, லஞ்சம் பெற்ற குற்றச்சாட்டின் பேரில், கம்பளையில் உள்ள உணவகம் ஒன்றில் வைத்து ஆணைக்குழுவினால் அதிகாரிகளால் குறித்த பொலிஸ் பரிசோதகர் கைது செய்யப்பட்டார்.

அவர் கம்பளை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

துப்பாக்கிப் பட்டறையை நடத்திய நபர் கைது
Posted in இலங்கை செய்திகள்

துப்பாக்கிப் பட்டறையை நடத்திய நபர் கைது

துப்பாக்கிப் பட்டறையை நடத்திய நபர் கைது

சூரியவெவ பிரதேசத்தில் சட்டவிரோத துப்பாக்கிப் பட்டறையை நடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்

ஹம்பாந்தோட்டை முகாமில் இருந்து விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சூரியவெவ, வாவேகம பிரதேசத்தில் சட்டவிரோத துப்பாக்கி உற்பத்தி பணிமனையை நடத்தி வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த நடவடிக்கையின் போது உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ‘டி-கடாஸ்’ ரக துப்பாக்கி, முடிக்கப்படாத துப்பாக்கியின் பாகங்கள் மற்றும் பிற ஆயுத பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர், 33 வயதுடைய பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர், மேலதிக விசாரணைகளுக்காக சூரியவெவ பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

இருவர் கைது துப்பாக்கிச் சூட்டு சம்பவம்
Posted in இலங்கை செய்திகள்

இருவர் கைது துப்பாக்கிச் சூட்டு சம்பவம்

இருவர் கைது துப்பாக்கிச் சூட்டு சம்பவம்

இருவர் கைது துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ,மாத்தறை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்

மாத்தறை நவிமன பிரதேசத்தில் நபர் ஒருவரை சுட்டுக் கொன்றதற்கு உதவிய இருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் தென் மாகாண செயற்பாட்டு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஒக்டோபர் 15ஆம் திகதி மாத்தறை நவிமன பகுதியில் காரில் வந்த இருவரால் 26 வயதுடைய நபர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

விசாரணைகளின் அடிப்படையில் காரின் சாரதி மாத்தறை தோட்டமுன பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் அம்பலாந்தோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட 29 வயதுடையவர் எனவும் STF தெரிவித்துள்ளது.

மேலும், கொலையை மேற்கொள்வதற்காக கண்காணிப்பாளராக செயற்பட்டதாக நம்பப்படும் 26 வயதுடைய நபர் ஒருவரும் கேகனதுர பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் ஆரம்ப விசாரணைகளின் பின்னர் மேலதிக விசாரணைகளுக்காக மாத்தறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டதாக பொலிஸ் விசேட அதிரடிப்படை தெரிவித்துள்ளது.

கொலைச் சம்பவம் பெண் கைது
Posted in இலங்கை செய்திகள்

கொலைச் சம்பவம் பெண் கைது

கொலைச் சம்பவம் பெண் கைது

கொலைச் சம்பவம் பெண் கைது ,வெலிவேரியவில் கொலைச் சம்பவம் தொடர்பில் 22 வயதுடைய பெண் கைது செய்யப்பட்டுள்ளார்

வெலிவேரிய, எம்பரலுவ தெற்கில் 58 வயதுடைய பெண்ணொருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

செப்டெம்பர் மாதம் இடம்பெற்ற இந்த கொலைச் சம்பவம் தொடர்பில் வெலிவேரிய பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை அடுத்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொலைச் சம்பவத்தின் இரண்டாவது சந்தேக நபரான கைது செய்யப்பட்ட பெண் சம்பவத்தின் பின்னர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றிருந்த போதிலும், நேற்று பாலும்மஹர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் கைது செய்யப்பட்ட போது, ​​அதிகாரிகள் அவளிடம் 5 கிராம் 600 மில்லிகிராம் ‘ஐஸ்’ (கிரிஸ்டல் மெத்தாம்பேட்டமைன்) இருப்பதையும் கண்டுபிடித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் களுபோவிட்டியனை பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடையவர் என வெலிவேரிய பொலிஸார் தெரிவித்தனர்.

16 பவுண் திருட்டு நகைகளுடன் 5 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

16 பவுண் திருட்டு நகைகளுடன் 5 பேர் கைது

16 பவுண் திருட்டு நகைகளுடன் 5 பேர் கைது

16 பவுண் திருட்டு நகைகளுடன் 5 பேர் கைது ,யாழ். தென்மராட்சியில் சாவகச்சேரிப் பொலிஸாரின் அதிரடி நடவடிக்கை மூலம் திருடப்பட்ட 25 லட்சம் ரூபா பெறுமதியான 16 பவுண் தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளதுடன் ஐந்து சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டனர்.

கடந்த 10 ஆம் திகதி சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கெருடாவில் பகுதியில் உள்ள வீடொன்றில் பகல் வேளையில் நுழைந்த கொள்ளையர்கள்

வீட்டில் இருந்த 16 பவுண் நகைகள் மற்றும் தொலைபேசி ஆகியவற்றைத் திருடிவிட்டு தப்பித்திருந்தனர்.

கணவன் – மனைவி இருவரும் பணிக்குச் சென்று வீடு திரும்பிய நிலையிலேயே வீட்டில் திருட்டு இடம்பெற்றிருப்பது கண்டறியப்பட்டு அது

தொடர்பில் பாதுகாப்புக் கமராவின் ஆதாரத்துடன் சாவகச்சேரிப் பொலிஸில் முறைப்பாடும் பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், பொலிஸார் நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை திருட்டுச் சந்தேகநபர்களான இரண்டு பெண்கள் மற்றும் நகைகளைப் பெற்றுக் கொண்ட வர்த்தகர்கள் இருவர் உட்பட ஐவரைக் கைது செய்துள்ளனர்.

கூரிய ஆயுதங்களுடன் நால்வர் கைது
Posted in இலங்கை செய்திகள்

கூரிய ஆயுதங்களுடன் நால்வர் கைது

கூரிய ஆயுதங்களுடன் நால்வர் கைது

கூரிய ஆயுதங்களுடன் நால்வர் கைது ரத்மலானை பெலக்கடை சந்தி பகுதியில் கூரிய ஆயுதங்களுடன் நபரொருவரை கொல்லச் சென்ற நால்வர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அந்த சந்தேக நபர்களுடன், வெவ்வேறு அளவுகளில் ஏழு வாள்கள் மற்றும் ஐஸ் போதைப்பொருள்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கல்கிசை நீதவான் நீதிமன்றத்திற்கு அருகில் நபர் ஒருவரை வெட்டிக் கொல்லத் தயாராக காரில் சிலர் வருவதாக கிடைத்த

இரகசியத் தகவலையடுத்து, உடனடியாகச் செயற்பட்ட இலஞ்ச ஒழிப்புப் பிரிவு அதிகாரிகள், சந்தேக நபர்களைக் கைது செய்தனர்.

சந்தேகநபர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இந்த சந்தேக நபர்களுக்கு எதிரான வழக்கில் பாதிக்கப்பட்டவர் சில மாதங்களுக்கு முன்பு இணையதள

அப்ளிகேஷன் மூலம் ஒருவருடன் நட்பாக பழகி அந்த நபரை மலையகத்துக்கு அழைத்து வந்த நபரை கொலை செய்ய இருப்பது தெரியவந்தது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இரத்மலானை சொய்சா புர மற்றும் பைவத்த பகுதியை சேர்ந்தவர்கள்.

துப்பாக்கியுடன் ஒருவர் கைது
Posted in இலங்கை செய்திகள்

துப்பாக்கியுடன் ஒருவர் கைது

துப்பாக்கியுடன் ஒருவர் கைது

துப்பாக்கியுடன் ஒருவர் கைது ,நாவுல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பம்பரகஹவத்த பகுதியில் நேற்று பிற்பகல் பொலிஸார் முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போது, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் பம்பரகஹவத்த பிரதேசத்தை சேர்ந்த 42 வயதானவர் என தெரியவந்துள்ளது.

கைதான சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

கைது 20 சீனர்கள்
Posted in இலங்கை செய்திகள்

கைது 20 சீனர்கள்

கைது 20 சீனர்கள்

கைது 20 சீனர்கள் ,மேல் மாகாண புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் பாணந்துறை, கோரக்கான பிரதேசத்தில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த 20 சீன பிரஜைகள் பாணந்துறை வடக்கு பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து 5 மடிக்கணினிகள், 437 கையடக்கத் தொலைபேசிகள், தராசுகள், 332 USB கேபிள்கள், 133 கையடக்க

தொலைபேசி சார்ஜர்கள், 21 USB வயர் கோட், 17 ரவுட்டர்கள், 2 ஐபோன்கள் உள்ளிட்ட பல சாதனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவர்கள் வௌியில் இருந்து உணவுகளை எடுத்து வந்ததாகவும், இலட்சம் மாத வாடகை அடிப்படையில் அந்த விடுதியில் தங்கியிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவர்கள் அனைவரும் இன்று (09) பாணந்துறை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

நிதிக்குற்றத்தை அவர்கள் செய்துள்ளார்களா? என்பது தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

1கோடி ​கொள்ளை தரகருடன் இருவர் கைது
Posted in இலங்கை செய்திகள்

1கோடி ​கொள்ளை தரகருடன் இருவர் கைது

1கோடி ​கொள்ளை தரகருடன் இருவர் கைது

1கோடி ​கொள்ளை தரகருடன் இருவர் கைது ,காணி தரகரின் வழிநடத்தலில் தான் ஒரு கோடி ரூபாய் பணம் வழிப்பறி செய்யப்பட்டுள்ளமை பொலிஸ் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

யாழ்ப்பாணம் , சங்குவேலி பகுதியை சேர்ந்த நபர் ஒருவர், தற்போது வெளிநாட்டில் வசித்து வரும் நிலையில், அண்மையில் யாழ்ப்பாணம் வந்திருந்தார்.

அவர் கடந்த புதன்கிழமை சேந்தான்குளம் பகுதியில் உள்ள தனது காணியை விற்ற பணத்துடன் வீடு திரும்பிக்கொண்டிருந்த வேளை, மோட்டார் சைக்கிள் ஒன்றில்

பின்தொடர்ந்து வந்த இருவர் அவரை வீதியில் வழிமறித்து அவரை தாக்கி விட்டு பணம் , கடவுச்சீட்டு , இலட்ச ரூபாய்க்கள் பெறுமதியான கையடக்க தொலைபேசி என்பவற்றை கொள்ளையடித்து, சென்றிருந்தனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்த நிலையில்,

காணியை விற்றவர் , காணியை வாங்கியவர் ஆகியோர், சட்டத்தரணி முன்பாக உறுதி எழுதிய பின்னர் பணத்தினை கைமாற்றிக்கொண்டனர். அதன் போது , அவர்களுடன் காணி விற்பனை தரகரும் இருந்துள்ளார்.

காணியை விற்றவர் , பணத்துடன் வீடு திரும்பும் போது, அவரிடம் பணம் கொள்ளையடிக்கப்பட்டமையால் , அவர் பணத்துடன் செல்லும் விடயம்

தெரிந்தவர்களின் தகவலின் அடிப்படையில் தான் கொள்ளை நடந்துள்ளதாக சந்தேகித்த பொலிஸார் , தரகர் மீது சந்தேகம் கொண்டு அவரை விசாரணை வலயத்திற்குள் கொண்டு வந்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

விசாரணைகளை தொடர்ந்து , ஊரெழு பகுதியில் உள்ள தரகரின் வீட்டினை பொலிஸார் சோதனையிட்ட போது , வீட்டில் இருந்து கொள்ளையடிக்கப்பட்ட பணம் , கையடக்க தொலைபேசி உள்ளிட்டவற்றை மீட்டுள்ளனர்.

அதனை தொடர்ந்து தரகரிடம் தீவிர விசாரணைகளை முன்னெடுத்த போது, காணி விற்ற பணத்துடன் செல்வதனை தனது மகனுக்கு கூறியதாக

தெரிவித்ததை அடுத்து, தரகரின் மகன் மற்றும் மகனின் நண்பன் ஆகியோரையும் பொலிஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் , அவர்கள் மூவரையும் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்திய வேளை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.

மீனவர்கள் 17பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

மீனவர்கள் 17பேர் கைது

மீனவர்கள் 17பேர் கைது

மீனவர்கள் 17பேர் கைது ,தமிழக மீனவர்கள் 17பேர் இலங்கை கடல் படையால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடல்பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டு கொண்டிருந்த மீனவர்கள் 17 பேரே தம்மால் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது .

இலங்கை நெடுந்தீவு கடல்பகுதியில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டு கொண்டிருந்த மீனவர்கள் இவ்விதம் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் பார படுத்தும் நடவடிக்கை இடம்பெற்று வருவதாக குறிப்பிட பட்டுள்ளது .

புலிகள் அழிக்க பட்டதன் பின்னர் தமிழக மீனவர்கள் தொடராக கைது செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது .

துப்பாக்கிகளுடன் மூவர் கைது
Posted in இலங்கை செய்திகள்

துப்பாக்கிகளுடன் மூவர் கைது

துப்பாக்கிகளுடன் மூவர் கைது

துப்பாக்கிகளுடன் மூவர் கைது ,டி-56 ரக துப்பாக்கி மற்றும் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு துப்பாக்கிகளை வைத்திருந்த மூவர் அந்த துப்பாக்கிகளுடன் நேற்று (26) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நுகங்முவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெல்கஹமடில்ல பகுதியில் உள்ள கடை ஒன்றின் மேல் மாடியில் நேற்று இரவு T56 ரக துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது இலக்கம் அழிக்கப்பட்ட டி-56 ரக துப்பாக்கி என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கும்பலொலுவ பிரதேசத்தில் வசிக்கும் 51 வயதுடைய ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் என தெரியவந்துள்ளது.

இதேவேளை, நாவுல, அம்பன, எரிஸ்டன் வீதி பகுதியில் நேற்று பிற்பகல் பொலிஸார் முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போது, ​​உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் கொங்கஹவெல பிரதேசத்தை சேர்ந்த 55 வயதானவர் என தெரியவந்துள்ளது.

அத்துடன் மற்றுமொரு உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஏத்திமலை, தோரதுபிட்டிய பிரதேசத்தில் மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று பிற்பகல் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட இந்த சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்டவர், ஏத்திமலை பகுதியில் வசிக்கும் 39 வயதுடையவராவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அர்ச்சுனா இராமநாதன் கைது மக்கள் அழுகை
Posted in அர்ச்சுனா இலங்கை செய்திகள்

அர்ச்சுனா இராமநாதன் கைது மக்கள் அழுகை

அர்ச்சுனா இராமநாதன் கைது மக்கள் அழுகை

அர்ச்சுனா இராமநாதன் கைது மக்கள் அழுகை ,வைத்திய கலாநிதி அர்ச்சுனா இராமநாதன் அவர்கள் நீதிமன்ற உத்தரவிற்கு அமைவாக தடுத்து வைக்க பட்டுள்ளார் .

இன்று நீதிமன்ற வழக்கிற்கு சென்ற இவர் கைது செய்யப்பட்டுள்ளார் .

அர்ச்சுனா இராமநாதனை நேசிக்கும் மக்களிற்கு இந்த கைது ,தடுத்து வைப்பானது மிக பெரும் நெருடலை ஏற்படுத்தியுள்ளது .

பல ஆண் பெண்கள் அழுகையோடு எமக்கு அழைத்து தமது கண்ணீர் மலர்ந்த குமுறலை தெரிவிப்பதில் இருந்து அர்ச்சுனா இராமநாதன் என்கின்ற இந்த மனிதன் மக்கள் மனதில் எவ்விதம் நீங்காத இடம் பிடித்து ஆட்சி செய்கின்றார் என்பதை உணர முடிகிறது .

தமிழ் இனத்தின் மக்கள் விடியலிற்கு வருகை தரும் ஒருவர் இவ்விதம் நசுக்க படுவது ,மிக பெரும் நெருடலை ஏற்படுத்தியுள்ளது .

நீதிமன்றில் நடந்த விடயம் என்ன என்பதை முழுமையாக இந்த காணொளியில் உள்ளது கேட்டு பாருங்கள் மக்களே .

தளராது அர்ச்சுனாவிற்கு ஆதரவாக நாம் பயணிப்போம் .

வீடியோ

சிசுவை கொன்ற தாய் கைது
Posted in இலங்கை செய்திகள்

சிசுவை கொன்ற தாய் கைது

சிசுவை கொன்ற தாய் கைது

சிசுவை கொன்ற தாய் கைது ,21 வயதுடைய தாய் ஒருவர் தனது குழந்தையை இரத்தம் தோய்ந்த நிலையில் மூச்சுத்திணறிக் கொன்றுள்ளார்.

காணொளி மற்றும் புகைப்படம் எடுத்து 3 மணித்தியாலங்களின் பின்னர் குழந்தையின் சடலம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் கலஹா பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கலஹா கஸ்தூரி லேண்ட் பிரதேசத்தில் வாடகை வீட்டில் வசித்து வந்த குலதுங்க முடியன்செலவை சேர்ந்த லிதுமி செஹன்சா என்ற தனது 18 மாத குழந்தையை தாய் இவ்வாறு கொன்றுள்ளார்.

குலதுங்க முடியசெலவை மணந்த இருபத்தொரு வயதுடைய வரதவீரன் லக்சிகா என்ற பெண், ஹொரணை பிரதேசத்தில் உள்ள ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் இசுரு இமேஷாக கடமையாற்றி வருவதாகவும், இருவருக்கும் இடையில் அவ்வப்போது சண்டைகள் ஏற்பட்டுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் கலஹா பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வருடம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வாக்களிப்பதற்காக ஹொரணையில் இருந்து இசுறு இம்ஸ் இல்லத்திற்கு வந்த தாம் நேற்று மீண்டும் வீட்டை விட்டு வெளியேறியதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்த தாய் எப்போதும் மொபைல் போனை பார்க்கும் பழக்கத்தில் இருந்ததாக கூறப்படுகிறது.

இரவு ஏழு மணியளவில் குழந்தையின் அழுகுரல் காரணமாக குழந்தையை தூக்கிச் சென்ற தாய் குழந்தையின் வாய் மற்றும் மூக்கை மூச்சுவிட முடியாமல் நீண்ட நேரம் அழுத்தி குழந்தையை தரையில் இறக்கியதாக பொலிஸாரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், குழந்தையை அடித்து தரையில் வீசியதாக முதலில் கூறியுள்ளார். ஆனால், கீழே விழுந்த குழந்தை மீண்டும் எழுந்து சில அடிகள் நடந்து அறையின் கதவு அருகே விழுந்து உயிரிழந்தது.

இந்த தாய் அந்தக் காட்சிகளை வீடியோக்களையும் புகைப்படங்களையும் எடுத்து சுமார் 3 மணித்தியாலங்களுக்குப் பிறகு, வாடகைக்கு வீடு வைத்திருக்கும் பக்கத்து குடியிருப்பாளர்கள் வந்து குழந்தையை இரவு 10:20 மணி அளவில் கலஹா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதால், இது குறித்து கலஹா பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்க மருத்துவமனை நடவடிக்கை எடுத்துள்ளது.

கலஹா வைத்தியசாலைக்கு பொறுப்பான வைத்திய அதிகாரி ருவன் ரவீந்திரநாத் உள்ளிட்ட வைத்திய குழுவினர் இந்த மரணம் தொடர்பான ஆரம்ப கட்ட பணிகளை மேற்கொண்டிருந்தனர்.

இன்று பிற்பகல் கண்டி பதில் நீதவான் மஹிந்த லியனகே இந்த இடத்திற்கு வந்து நீதவான் விசாரணைகளை மேற்கொண்டு சடலத்தை பிரேத பரிசோதனைக்காக பேராதனை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லுமாறு கூறினார்.

கலஹா பொலிஸார் தாயை கைது செய்து மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஒருவர் விமான நிலையத்தில் கைது
Posted in இலங்கை செய்திகள்

ஒருவர் விமான நிலையத்தில் கைது

ஒருவர் விமான நிலையத்தில் கைது

ஒருவர் விமான நிலையத்தில் கைது ,விசாரணைக்காக தேடப்பட்டு வந்த சந்தேகநபர் ஒருவர் டுபாயில் இருந்து நாடு திரும்பிய நிலையில் கட்டுநாயக்க விமான நிலைய வளாகத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

பண மோசடியில் ஈடுபட்ட சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.

தனியார் நிறுவனமொன்றின் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றி 108 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான பண மோசடி செய்ததாக சந்தேகநபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 32 வயதுடைய கண்டியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் திணைக்களம் மேற்கொண்டு வருகின்றது.

வெடிபொருட்களுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது
Posted in இலங்கை செய்திகள்

வெடிபொருட்களுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது

வெடிபொருட்களுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது

வெடிபொருட்களுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நாவுல பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் நேற்று (18) காலை நாவுல பிபில பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த சந்தேகநபர்கள் முச்சக்கரவண்டியில் பயணித்துக் கொண்டிருந்த போது கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதன்போது, சந்தேகநபர்களிடம் 05 டெட்டனேட்டர்கள், 03 வோட்டர் ஜெல் குச்சிகள் மற்றும் வயர் ரோல் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 38, 49, 50 மற்றும் 65 வயதுடைய கட்டுகஸ்தோட்டை, கம்பளை, எலஹெர மற்றும் உடலகவின்ன ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவராவர்.

நாவுல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

துப்பாக்கியுடன் நபர் கைது
Posted in இலங்கை செய்திகள்

துப்பாக்கியுடன் நபர் கைது

துப்பாக்கியுடன் நபர் கைது

துப்பாக்கியுடன் நபர் கைது ,மாங்குளம் பகுதியில் துப்பாக்கி வைகுத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர் .

உளநாட்டில் தயாரிக்க பட்ட துப்பாக்கியுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் ,கைதானவர் உரிய முறி விசாரணைக்கு உள்ளாகி வருவதாக தெரிவிக்க பட்டுள்ளது .

தேர்தல் இடம்பெறும் இந்த கால பகுதியில் இவ்வாறான விடயங்கள் வெளியாகி வருவது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது .