Posted in இலங்கை செய்திகள்

நேரெதிர் மோதிய பேரூந்து -23 பேர் காயம்

நேரெதிர் மோதிய பேரூந்து -23 பேர் காயம்

இடம்பெற்ற வாகன விபத்தில் 23 பேர் காயமடைந்த நிலையில் வட்டவளை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஹட்டன் – கண்டி பிரதான வீதியில் ஹட்டனில் இருந்து கண்டி நோக்கி சென்ற தனியார் பஸ்ஸும், கண்டியில் இருந்து ஹட்டன் நோக்கி சென்ற பஸ்ஸும் கினிகத்தேனை,

தியகல பகுதியில் வைத்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது என விசாரணைகளை

மேற்கொண்டு வரும் கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் பஸ்ஸில் பயணித்த 23 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

நேரெதிர் மோதிய பேரூந்து
நேரெதிர் மோதிய பேரூந்து
Posted in இலங்கை செய்திகள்

பொலிஸ் அதிகாரியை ஜீப்பினால் இடித்த நபர்

பொலிஸ் அதிகாரியை ஜீப்பினால் இடித்த நபர்

இலங்கை -குருநாகல் பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த காவல்துறை அதிகாரி ஒருவர் மீது வேகமாக ஜீப்பை ஒட்டி வந்த நபர் தனது கட்டு பாட்டை இழந்த நிலையில் அவர் மீது மோதியுள்ளார் .

இதில் பலத்த காயமடைந்த நிலையில் அவர் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றார் .

குற்றவாளி கைதுசெய்ய பட்டு விளக்க மறியலில் வைக்க பட்டுளளார் .

சாரதிகளின் அலட்சிய போக்கின் காரணமாக இலங்கையில் இவ்வாறு தொடர் விபத்துக்கள் ஏற்பட்டு நாள்தோறும் பலர் பலியாகியும் ,காயம் அடைந்தும் வருவது குறிப்பிட தக்கது

Posted in இலங்கை செய்திகள்

குழு சண்டை – ஒருவர் வெட்டிக் கொலை -இருவர் காயம்

குழு சண்டை – ஒருவர் வெட்டிக்கொலை -இருவர் காயம்

இலங்கை – இரதமலானை பகுதியில் கடந்த இரவு வீடொன்றில் இடம்பெற்ற தகராறில் சிக்கி ஒருவர் கோரமாக

கத்தியால் வெட்டியும் ,குத்தியும் படுகொலை செய்ய பட்டுள்ளார் ,

மேலும் இருவர் பலத்த வெட்டு காயங்களுக்கு உள்ளான நிலையில் கலுபோவாவில மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .

இது குறித்து காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .


எனினும் இந்த படுகொலைக்கான உடனடி காரணம் தெரியவரவில்லை .

இலங்கையில் இவ்வாறான காத்தி வெட்டு படுகொலைகள் நாள் தோறும் அதிகரித்து செல்வதுடன் இதனை தடுப்பதில்

இலங்கை பொலிசார் தவறி வருகின்றனர் என மக்கள் மத்தியில் பொதுவான குற்ற சாட்டு எழுந்துள்ளது .