ஒருநாள் அழுவாய் காத்திரு ..!

Spread the love

ஒருநாள் அழுவாய் காத்திரு ..!

சிறகை ஒடித்தேன்
சிறையில் அடைத்தாய்
ஏது செய்தேன்
என்று என்னை இழிந்தாய்

வலிகள் தாங்கி வாடி துடித்தேன்
விழியின் நீரில் உள்ளே குளித்தேன்
உணவு இன்றி ஒருநாள் தவித்தேன்
உறவை எண்ணி வெந்து தணிந்தேன்

உந்தன் திட்டம் இங்கு வென்றது
உள்ளம் இரண்டாய் இன்று ஆனது
காதல் ஒன்று முடிவு கண்டது
காலம் ஆறா காயம் தந்தது

நாளை சரிதம் வாழ்வு எழுதும் -உந்தன்
நக்கல் எல்லாம் இங்கே கிழியும்
உன்னை போல உன்னை வதைக்க
உள்ளம் என்னால் இன்று முடியும்

பழிகள் வாங்கும் நிலையில் இந்த
பாவி மனம் முனையவில்லை
செய்த வினையின் செயல்கள் பெறுவீர்
செவந்து விழிகள் நீரும் தவிப்பீர்

வாழ்வில் வசந்தம் இன்று இருண்டது
வழியை மாற்றும் நிகழ்வு நடந்தது
ஏதும் செய்தும் இன்று தோற்றாய்
எரியும் தணலில் ஒளியை காண்பாய் …!

வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 18-04-2022

வன்னி மைந்தன் கவிதைகள்

    Leave a Reply