Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
தேவாலய காணிக்கையில் துப்பாக்கி தோட்டாக்கள்
தேவாலய காணிக்கையில் துப்பாக்கி தோட்டாக்கள்
புத்தளம் பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றுக்கு, பக்தர்களினால் வழங்க பட்ட காணிக்கை பெட்டிகளை பிரித்து பார்த்த பொழுது ,அந்த பொதி ஒன்றுக்குள் இருந்து துப்பாக்கி தோட்டாக்கள் மீட்க பட்டன .
இதனை கண்ணுற்ற தேவாலய நிர்வாகம் ,காவல்துறைக்கு தெரியப் படுத்திய நிலையில், அவை மீட்டு செல்ல பட்டுள்ளன .
இந்த பொதியினை வழங்கியவரை கைது செய்யும் நடவடிக்கையில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர் .
தேடுறு ஓயா வான் கதவுகள் திறப்பு வெள்ளத்தில் கிரமங்கள்
தேடுறு ஓயா வான் கதவுகள் திறப்பு வெள்ளத்தில் கிராமங்கள்
தேடுறு ஓயா வான் கதவுகள் திறந்து விடப் பட்டுள்ளது .
அதிக மழை வீழ்ச்சி காரணமாக இந்த வான் கதவுகள் திறந்து விடப் பட்டுள்ளன .
பள்ள தாக்கு கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதால் ,தற்காலிக கூடாரங்களில் மக்கள் தங்க வைக்க பட்டுள்ளனர் .
நாடெங்கும் கனத்த மழை பொழிவு இடம்பெற்று வருகின்றமை குறிப்பிட தக்கது .
புலிகளை மீள உருவாக்க பாகிஸ்தான் முயற்சி இந்தியா அலறல்
புலிகளை மீள உருவாக்க பாகிஸ்தான் முயற்சி இந்தியா அலறல்
தமிழீழ விடுதலை புலிகளை மீளவும் உருவாக்கிட பாகிஸ்தான் உளவுத்துறையினர் ,முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக இந்தியா மத்திய புலனாய்வு அமைப்பான ரா குற்றம் சுமத்தியுள்ளது .
தமிழகத்தை மையப்படுத்தி புலிகளை உருவாக்கி, அவர்களை இந்தியாவுக்கு எதிராக திசை திருப்பும்நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் என, இந்தியா ரோ தனது கறபனையை கட்டவிழ்த்து விட்டுள்ளது .
புலிகளை மீள உருவாக்க பாகிஸ்தான் முயற்சி இந்தியா அலறல்
போதைவஸ்து கடத்தலுடன் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டனர் .
அவ்வாறு கடத்தியவர்கள் புலிகளை சேர்ந்த உறுப்பினர்கள் என இந்தியா ரா உளறியுள்ளது .
புலம் பெயர் மக்கள் பணத்தினை புலிகளுக்கு அள்ளி வழங்கி வந்தனர் ,அவ்வாறான நிலையில் தற்போது மீளவும் மக்கள் வழங்குவார்கள்
நிலவரம் இவ்வாறு இருக்கும் பொழுது, புலிகள் மீது தனது வன்ம வசை பாடலை நடத்திட இந்தியா ரா இப்படி உளறி வருகிறது .
மண் சரிந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் மரணம்
மண் சரிந்து ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் மரணம்
கண்டி பகுதியில் வீடொன்று மண்சரிவில் சிக்கியதால் அவ்வேளை அதற்குள் இருந்த இருவர் பலியாகியுள்ளனர் .
சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 18 மற்றும் 19 வயதை சேந்த இருவர் பலியாகியுள்ளனர் .
மேலும் ஒருவர் காயமடைந்துள்ளனர் .
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஐயன்குளம் குளம் காட்டு பகுதியில் சிசு ஒன்றின் சடலம் மீட்க பட்டுள்ளது .
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஐயன்குளம் குளம் காட்டு பகுதியில் சிசு ஒன்றின் சடலம் மீட்க பட்டுள்ளது .
மாடு மேய்க்க சென்ற ஒருவர் துணியால் சுற்ற பட்டு கிடந்த, சிசு சடலம் ஒன்றை கண்டு காவல்துறையினருக்கு வழங்கிய தகவலை அடுத்து ,உருக்குலைந்த நிலையில் காணப்பட்ட சிசு சடலம் மீட்க பட்டுள்ளது .
கள்ள தொடர்பு கிரணமாக பிறந்த சிசுவை, இங்கு பெற்று போட்டு தாய் தப்பித்து ஓடி இருக்கலாம் என சந்தேகிக்க படுகிறது .
இந்த சிசுவின் தாயை கண்டு பிடிக்கும் பணியில் ,காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .
மின்னல் தாக்கி 27 கால் நடைகள் மரணம்
மின்னல் தாக்கி 27 கால் நடைகள் மரணம்
இலங்கை ஏறாவூர் பகுதியில் மின்னல் தாக்கி 27 கால்நடைகள் பலியாகியுள்ளன .
கடந்த இரவு இடம்பெற்ற மின்னல் தாக்குதலில் சிக்கியே 9 ஆடுகள், 11 கோழிகள், 4 சேவல்கள், 3 வாத்துக்கள் என்பன பலியாகியுள்ளன .
இந்த விலங்குகள் முஸ்லீம் பண்ணை வளர்ப்பு நபராது வீட்டில் இடம்பெற்றுள்ளது .
தனது வளர்ப்பு பிராணிகள் இறந்த நிலையில் ,உரிமையாளர் பெரும் சோகத்தில் உறைந்துள்ளார் .
4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
4 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை
இலங்கையின் நான்கு மாவாட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .
இவ்வாறு அபாய எச்சரிக்கை கண்டி, நுவரெலியா குருநாகல், மாத்தளை, ஆகிய பகுதிகளுக்கு விடுக்க பட்டுள்ளது .
இங்கு வசிக்கும் மக்கள் மிக எச்சரிக்கையாக இருக்கும்படி வேண்ட பட்டுள்ளது ..
தேர்தல் தை மாதம் இடம்பெறும் என அறிவிப்பு
தேர்தல் தை மாதம் இடம்பெறும் என அறிவிப்பு
இலங்கையில் உள்ளுராட்சி மன்ற தேர்தல்கள் தைமாதம் நடத்த திகதிகள் அறிவிக்க படும் என தேர்தல் மையம் அறிவித்துள்ளது .
இந்த தேர்தலை மையப்படுத்தியே தமிழர்களுடன் ,தீர்வு தொடர்பாக ரணில் பேசி இருந்தார் .
அவ்வாறான அரசியல் நாடக்கத்தை ,நடத்திமுடித்த சில வாரத்தில் இந்த தேர்தல் திகதி அறிவிக்க பட்டுள்ளமை குறிப்பிட தக்கது .
இலங்கைக்கு படையெடுக்கும் உல்லாச பயணிகள்
இலங்கைக்கு படையெடுக்கும் உல்லாச பயணிகள்
இலங்கை இந்த மாதத்தின் கடந்த இருபது நாட்களில் மட்டும் ,ஐம்பதாயிரம் உல்லாச பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை அறிவித்துள்ளது .
இலங்கை உல்லாச பயணிகளின் வருகையாலேயே அதிக வருமானத்தை பெற்று வந்தது .
தற்போது ஏற்பட்ட கொரனோ தாக்குதலை அடுத்து ,உல்லாச பயணிகள் வரவு வீழ்ச்சியடைந்த நிலையிழும் ,ராஜபக்ச குடும்பத்தின் லஞ்ச ஊழல் மூலம் நாடு மிக பெரும் வறுமைக்கு தள்ள பட்டது .
இதனால் இலங்கை வாழ் மக்கள் ,சொல்லெண்ணா துயரை சந்தித்த வண்ணம் உள்ளனர் .
உலக பணக்காரன் Bill Gates இலங்கை வர ரணில் அழைப்பு
உலக பணக்காரன் Bill Gates இலங்கை வர ரணில் அழைப்பு
உலகில் பத்துமுறை பணக்காரனாக விளங்கிய Bill Gates அவர்களை இலங்கை வரும்படி ,இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமைசிங்கா அழைப்பு விடுத்துள்ளார் .
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்காவின் அழைப்பினை ஏற்று ,Bill Gates இலங்கை செல்லவுள்ளார் என கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன .
இவரது வருகையின் பின்னர், இலங்கையின் பொருளாதாரம் கட்டி எழுப்ப படுமா என்றால் அது கேள்வி எனப்படுகிறது .
நத்தார் பாண்டியை முன்னிட்டு 300 கைதிகள் விடுதலை
நத்தார் பாண்டியை முன்னிட்டு 300 கைதிகள் விடுதலை
இலங்கையில் இடம்பெறவுள்ள நத்தார் பண்டிகையை முன்னிட்டு ,ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் 300 கைதிகள் விடுதலை செய்ய பட்டுள்ளனர் .
நீண்டகாலமாக சிறைகளில் அடைக்க பட்டிருந்த கைதிகள் நன்னடத்தை அடிப்படையில் இவ்வாறு விடுவிக்க படுகின்றனர் .
இலங்கை முக்கிய பரபரப்பு செய்திகள் வீடியோ
இலங்கை முக்கிய பரபரப்பு செய்திகள் வீடியோ
கடந்த 24 மணித்தியால இலங்கையின் முக்கிய பர பரப்பு செய்திகள் ,நேரடி குரல் காணொளி வடிவில் கேட்டும் பார்க்க காணொளியை பாருங்கள் .
தொட்டில் புடவை சிக்கி சிறுமி மரணம்
தொட்டில் புடவை சிக்கி சிறுமி மரணம்
இலங்கை கப்புத்தளை பகுதியில் தொட்டில் புடவை கழுத்தில் சிக்கியதில் 12 வயது சிறுமி ஒருத்தி பலியாகியுள்ளார் .
தங்கை ஒருவரை தூங்க வைக்க தொட்டிலை தயார் செய்ய முயன்ற வேளை இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது .
சிறுமியின் மரணம், அந்த கிராம மக்கள் மத்தியில் ,பெரும் துயரை ஏற்படுத்தியுள்ளது .
வாலிபனை கொன்று தின்ற முதலை
வாலிபனை கொன்று தின்ற முதலை
அம்பாறை பகுதியில் மாடுகளை மேய்க்க வாவி ஒன்றுக்குள் இறங்கி கடந்த வாலிபனை ,அங்கு பதுங்கி இருந்த முதலை கொன்று தின்றுள்ளது .
காணாமல் போன வாலிபனை தேடிய பொழுது, முதலையின் வேட்டைக்கு இரையான மனித உடல் மீட்க பட்டுள்ளது .
இந்த வாவிக்குள் முதலைகள் நடமாட்டம் , அதிகரித்து காணப்படுவதால் ,மக்கள் மத்தியில் பீதி ஏற்பட்டுள்ளது .
காணாமல் போன சிறுமி மீட்பு
காணாமல் போன சிறுமி மீட்பு
இலங்கை எப்பாவல பகுதியில் காணமல் போன சிறுமி ஒருத்தி காவல் துறையால் கண்டு பிடிக்க பட்டுள்ளார் .
மின்சார திருத்தும் உறவினர் வீடொன்றில் தங்கி இருந்த பொழுது, சிறுமி மீட்க பட்டுள்ளார் .
இந்த சிறுமி இவர்கள் வீட்டுக்கு எவ்வாறு சென்றார் என்பது தொடர்பில் ,விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
மகளை காணவில்லை என தயார் செய்த முறைப்பாட்டின் அடிப் படையில் ,இடம்பெற்று வந்த காவல்துறை விசாரணைகளின் பின்னர், இந்த மீட்பு நடவடிக்கை இடம்பெற்றுள்ளது .
ஆயுள்வேத பரம்பரை வைத்தியர்களுக்கான ஒருநாள் செயலமர்வு
ஆயுள்வேத பரம்பரை வைத்தியர்களுக்கான ஒருநாள் செயலமர்வு
திருகோணமலை மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத ஆயுள்வேத பரம்பரை வைத்தியர்களுக்கான ஒருநாள்
செயலமர்வு (22) திருகோணமலை முதலமைச்சின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்கள மாகாண ஆணையாளர் வைத்திய கலாநிதி (திருமதி) இ.ஸ்ரீதர் அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இச்செயலமர்வுக்கு சுகாதார அமைச்சின் சுதேச மருத்துவ அபிவிருத்திப்
பிரிவின் பணிப்பாளர் பி.தயானந்தன் அவர்களும், கொழும்பு ஆயுள்வேத வைத்தியசாலையின் வைத்தியர்களான ரீ.சிவகுமார், லலித் அலவத்கொட
அவர்களும், கிழக்கு மாகாண சுதேச மருத்துவத் திணைக்கள திட்டமிடல் பிரிவின் வைத்தியர்களான எஸ்.சிவச்செல்வன், எஸ்.சதீஸ் உள்ளிட்ட வைத்தியர்கள் பலர் கலந்துகொண்டனர்.
இச்செலமர்வில் பரம்பரை வைத்தியர்கள் தொடர்பான சட்டதிட்டங்கள் மற்றும் ஒழுக்க நெறிமுறைகள் பற்றி இடம்பெற்றது. குறிப்பாக, நோயாளர்கள் தொடர்பாக கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள், தொழில்
ஆயுள்வேத பரம்பரை வைத்தியர்களுக்கான ஒருநாள் செயலமர்வு
தொடர்பாகவும் அதே தொழிலில் ஈடுபட்டுள்ள சக வைத்தியர்கள் தொடர்பாக கடைப்பிடிக்க வேண்டிய நெறிமுறைகள், சமூகம் தொடர்பாக கடைப்பிடிக்க
வேண்டிய நெறிமுறைகள், சட்டம் மற்றும் நீதி தொடர்பான நெறிமுறைகள் பற்றியே இச்செலமர்வு இடம்பெற்றது.
பரம்பரை வைத்தியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் பதிவு செய்யும் நடைமுறைகள் பற்றி பரம்பரை வைத்தியர்களினால்
கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மிக விரிவான விளக்கங்களும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டதுடன் கொழும்பு
ஆயுள்வேத திணைக்களத்தினால் வெளியீடு செய்யப்பட்ட சித்த மருந்து முறையியல் பதார்த்த விஞ்ஞானம் பகுதி –
1 என்ற நூலை சுகாதார அமைச்சின் சுதேச மருத்துவ அபிவிருத்திப் பிரிவின் பணிப்பாளர் பி.தயானந்தன் அவர்களினால் மாகாண ஆணையாளர்,
வைத்தியர்கள் மற்றும் பரம்பரை வைத்தியர்கள் ஆகியோர்களுக்கு வழங்கி வைத்தமையும் குறிப்பிடத்தக்கது.
அலா சிபாக் –
காப்போம் நிறுவனத்தினால் ஊடகவிலயாளர்களின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு
காப்போம் நிறுவனத்தினால் ஊடகவிலயாளர்களின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட ஊடகவிலயாளர்களின் பிள்ளைகளுக்கு இலங்கை காப்போம் நிறுவனத்தினால் கற்றல்
உபகரணங்கள், புத்தகப்பை மற்றும் பாதணிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (23) மட்டு. ஊடக அமையத்தில் இடம்பெற்றது.
மட்டு. ஊடக அமையத்தின் தலைவர் சிரேஷ்ட ஊடகவியலாளர் வா.கிருஷ்ணகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு பிரதம
காப்போம் நிறுவனத்தினால் ஊடகவிலயாளர்களின் பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு
அதிதியாக இலங்கை காப்போம் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கு.பிரதிப்கரன் (திலிப்) கலந்துகொண்டு கற்றல் உபகரணங்கள், புத்தகப்பை மற்றும் பாதணிகளை வழங்கி வைத்தார்.
இலங்கை பத்திரிகை பேரவையின் 22வது ஆண்டின் மருத்துவக் கட்டுரைக்கான உயர் ஊடகவியல் தேசிய விருதைப்பெற்ற ஊடகவியலாளர் மட்டு.துஷாரா மற்றும் சமூக விழிப்புணர்வு, கலை கலாசார மருத்துவ
ஆக்கங்களை பத்திரிகை வாயிலாக வெளிப்படுத்தி வருகின்ற சிரேஷ்ட ஊடகவியலாளர் பைஷல் இஸ்மாயில் ஆகியோர்களை இந்நிகழ்வின்போது
காப்போம் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கு.பிரதிப்கரனால் பாராட்டி ஞாபகச்சின்னம் வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில், காப்போம் நிறுவனத்தின் செயலாளர், பொருளாளர் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
அபு அலா –
நாயை கற்பழித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆலோசகர்
நாயை கற்பழித்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆலோசகர்
இலங்கையில் ஆளும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்காவின் முன்னாள் பேராசிரியர் ஆஷு மாரசிங்க , நாய் ஒன்றை கற்பழித்த சம்பவம் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .
இவர் நாய் ஒன்றை துஸ்பிரயோகம் செய்திடும் காட்சியை, சஜித் அணியை சேர்ந்த கருணீக ஊடகங்களுக்கு வெளியிட்டு பர பரப்பை ஏற்படுத்தினார் .
இந்த காட்சிகள் இப்பொழுது செம வைரலாகி வருவதுடன் ,இவை ஆளும் ரணில் விக்கிரமசிங்காவிற்கு பெரும் அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளது .
காருணிகாவை சிறையில் அடைப்பதற்கு ,இவர் முக்கிய காரணமாக விளங்கிய நிலையில் ,அதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக இது பார்க்க படுகிறது .
ஒருவர் சுட்டு கொலை கொழும்பில் பதட்டம்
ஒருவர் சுட்டு கொலை கொழும்பில் பதட்டம்
இலங்கை சேதுவை பகுதியில் ஒருவர் சுட்டு கொலை செய்யப் பட்டுள்ளார் .
பலியானவர் 39 வயதுடைய நபர் என அடையாளம் காண பட்டுள்ளார் .
காலை வேளை மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் ,திறந்தவெளி துப்பாக்கி சூட்டை நடத்தினர் .
இதில் படுகாயமடைந்த இருவர் வைத்திய சாலைக்கு எடுத்து செல்ல பட்டனர் .
அதில் 39 வயதுடைய ஆண் பலியானார் .பலத்த காயமடைந்த நிலையில் பெண் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளார் .
ஆயுத தாரிகள் 11 தடவை துப்பாக்கி சூட்டை மேற்கொண்டதாக நேரில் கண்ட சாட்சிகள் தெரிவித்துள்ளன .
பொலிஸ் விசாரணைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன .
ஐரோப்பாவுக்குள் நுழைய முயன்ற இலங்கை அகதிகள் உள்ளிட்ட 27 பேர் கைது
ஐரோப்பாவுக்குள் நுழைய முயன்ற இலங்கை அகதிகள் உள்ளிட்ட 27 பேர் கைது
ஐரோப்பாவுக்குள் நுழையும் முகமாக ,இரண்டு லொறிகளுக்குள் மறைந்திருந்து கங்கேரிக்குள் நுழைய முயன்ற 27 அகதிகள் மடக்கி பிடிக்க பட்டனர் .
இவ்விதம் அகதிகளாக நுழைய முயன்ற பங்காளதேஸ் ,இலங்கை மற்றும் எரித்திரியாவை சேர்ந்த அகதிகள் கங்கேரிய காவல்துறையினரால் கைது செய்யப் பட்டுள்ளனர் .
இதில் இலங்கையை சேர்ந்த 11 பேர் சிக்கியுள்ளனர் அவர்கள் தமிழர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது .
கைதானவர்கள் தடுத்து வைக்க பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளனர் .
சட்டவிரோத குடியேற்றவாசிகளை கடத்தி செல்ல முற்பட்ட இரண்டு லாரிகளும் தடுத்து வைக்க பட்டுள்ளன .
கம்பிகள் மற்றும் உலோகோங்கள் ஏற்றப்பட்ட லொறிக்குள் மறைந்திருந்து பயணிக்க முயன்ற பொழுதே மடக்கி பிடிக்க பட்டுள்ளனர் .




































