Category: இலங்கை செய்திகள்
இலங்கை செய்திகள்- Sri Lanka News – -Live Updated-இலங்கை செய்திகள் ,இன்றைய முக்கிய செய்திகள்,எதிரி நியூஸ் பதிவுகளாக பதிய பெறுகின்றன
சாலை விபத்துக்களில் 4பேர் பலி
சாலை விபத்துக்களில் 4பேர் பலி
சாலை விபத்துக்களில் 4பேர் பலி ,கடந்த 24 மணி நேரத்தில் நடந்த வீதி விபத்துகளில் இரண்டு பெண்கள் உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
நிட்டம்புவ, வலப்பனை, கிளிநொச்சி மற்றும் மத்தேகொட ஆகிய பொலிஸ் பிரிவுகளில் இந்த விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் நேற்று (06) தெரிவித்தனர்.
கல்பொத்தவில் இடம்பெற்ற விபத்து
வலப்பனை, நில்தண்டாஹின்ன, கலகன்னவத்தை, குறுகிய வளைவு மற்றும் செங்குத்தான வீதியில் மாளிகதென்ன கல்பொத்தவில் இடம்பெற்ற விபத்தில் 31 வயதுடைய நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
பெக்ஹோ இயந்திரம் ஒன்று அதன் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி சுமார் 09 மீற்றர் தூரத்தில் உள்ள பள்ளத்தில் வீழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதேவேளை கண்டி-யாழ்ப்பாணம் ஏ9 வீதியில் பரந்தன் பகுதியில் வீதியின் இடதுபுறத்தில் பயணித்த பஸ் ஒன்று பாதசாரிகள் மீது மோதியதில் விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த பாதசாரி
விபத்தில் படுகாயமடைந்த பாதசாரி கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
வவுனியா நெலும்குளம் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, மத்தேகொட, கிரிகம்பமுனுவ மற்றும் சல்கஸ் சந்திக்கு இடையிலான பிரதான வீதியில் மத்தேகொட நகரப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் 69 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பெண் மீது கார் மோதல்
வீதியில் நடந்து சென்ற பாதசாரி பெண் மீது கார் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, கொழும்பில் இருந்து கண்டி செல்லும் பிரதான வீதியில் நிட்டம்புவ நகரில் பாதசாரி கடவையை கடந்த பெண் மீது வேன் மோதியதில் விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த பெண் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
வெலிகடமுல்ல, அத்தனகல்ல பிரதேசத்தில் வசிக்கும் 70 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வவுனியாவில் டிக்டாக் ரசானை கைது செய்யக்கோரி போராட்டம்
வவுனியாவில் டிக்டாக் ரசானை கைது செய்யக்கோரி போராட்டம்
வவுனியாவில் டிக்டாக் ரசானை கைது செய்யக்கோரி போராட்டம் , இடம்பெற்றுள்ளது .டிக்டாக் மக்கள் சேவை ஆற்றி வரும் பிரான்ஸை சேர்ந்த ராசன் என்பவரையே கைது செய்யக்கோரி போராட்டம் இடம்பெற்றுள்ளது .
காவல்துறையினருக்கு லஞ்சம் வழங்கி அப்பாவி மக்களை மிரட்டி அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக பாதிக்க பட்டவர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர் .
எப்படி பிரச்னை ஆரம்பித்தது ..?
டிக்டாக் ஊடக மக்களுக்கு உதவி செய்து வருகிறார் ராசன் .பாதிக்க பட்ட மக்களுக்கு குடி நீர் கிணறுகள் அமைத்து கொடுத்து ,அதன் ஊடாக மக்களுக்கு அளப்பெரும் உதவி புரிந்து வருகிறார் பிரான்ஸ் டிக்டாக் ராசன் .
இவரது காணொளிகளை டிக்டாக் ஊடாக பார்வையிடும் மக்கள் ,வெளிநாடுகளில் இருந்து பணம் அனுப்பி வருகின்றனர் .

அவ்வாறு மக்கள் பணத்தை பெற்றுக்கொள்ளும் பிரான்ஸ் டிக்டாக் ராசன் ,மக்களுக்கு அளப்பரிய உதவிகளை செய்து வருகிறார் .
100 குழாய் கிணறுகளை பிரான்ஸ் டிக்டாக் ராசன் நிறுவி கொடுத்துள்ளார் .
இவ்வாறன கால பகுதியில் நூறாவது குழாய் கிணறு நிறுவ பட்ட நிகழ்வு பெரும் கோலாகலமாக நடத்த பட்டது .
வவுனியா பகுதியில் உள்ள பாடசாலை ஓன்றில் சிறப்பு விருந்தினராக இந்த பிரான்ஸ் டிக்டாக் ராசன் அழைக்க பட்டு கவுரவிக்க பட்டு இருந்தார் .
அந்த நிகழ்வுக்கு பிரான்ஸ் டிக்டாக் ராசன் எவ்வாறு அழைக்க படுவார் என்ற கேள்வியை சமுக நல ஆர்வளர்கள் எழுப்பினர் .
மதுபோதை அருந்தி காணொளி
தமிழர் கலாச்சார பொது பண்பியலுக்கு எதிராக ,மதுபோதை அருந்தி காணொளி பகிரும் பிரான்ஸ் டிக்டாக் ராசன் ,பொதுவெளியில் மக்கள் நலன் விரும்பி ,சீர்திருத்தவாதி என எவ்வாறு கூற முடியும் என மக்கள் கேள்வி எழுப்பினர் .
அவ்வாறு கேள்வி எழுப்பியவர்கள் மீதே பிரான்ஸ் டிக்டாக் ராசன் கோபம் கொண்டு தாக்குதல் நடத்தியதாகவும் ,அந்த தாக்குதலானது ,புளியம் குளம் காவல்துறை நிலையத்தில் வைத்து ,அதே காவல்துறை முன்பாக நடத்த பதட்டதாக பாதிக்க பட்டவர்கள் தெரிவித்துள்ளனர் .
இந்த தாக்குதல் ராசன் மற்றும் ,லண்டனில் இருந்து வருகை தந்துள்ள தமிழ் பெண் ஒருவரும் இணைந்தே கூட்டாக தாக்குதல் நடத்தியுள்ளதாக பாதிக்க பட்டவர்கள் தெரிவிக்கின்றனர் .

பிரான்ஸ் டிக்டாக் ராசனை உடனே கைது செய்
அதனை அடுத்தே தற்போது பிரான்ஸ் டிக்டாக் ராசன் உடனே கைது செய்யப்பட வேண்டும் என வவுனியாவில் இன்று போராட்டம் இடம்பெற்றுள்ளது .
மூன்று நாட்களுக்குள் ராசான் கைது செய்யப்படுவார் என போலீசாரால் தெரிவிக்க பட்டதை அடுத்து ,போராட்ட காரர்கள் அங்கிருந்து விலகி சென்றனர் .
யார் இந்த லண்டன் கடைக்கார பெண் ..?
லண்டனில் கடை நடத்தி வந்த பெண் ஒருவர் .அந்த கடையினை லண்டனில் விற்று விட்டு, வவுனியாவில் தங்கியுளளாரம் .வவுனியால் டிக்டாக் பிரான்ஸ் ராசனுடன் ஒன்று பட்டு நீள்வதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர் .
வவுனியாவில் கோடி ரூபாயில் காணிகளை வாங்கி விட்டுள்ளாராம் இந்த லண்டன் பெண் .இவருக்கு கோடி பணம் எவ்வாறு கிடைத்தது .? என்கிற கேள்வி எழுப்ப பட்டுள்ளது .
லண்டனில் கடை வைத்து நடத்தி இருந்தால் கம்பெனி கவுசில் இவரது வருமான விடயம் யாரும் பார்க்க முடியும் .அப்படி என்றால் இவர் அதிக இலாபத்தில் கடையை நடத்தி ,அதன் பின்னர் விற்று இருப்பார் .
பல கோடி பணம்
அதனால் பல கோடி பணம் இவர் இலாபமாகவே சேமித்து இருப்பார் .எனவே பிரிட்டன் வருமானவரி திணைக்களம் இவருக்கு எவ்வாறு இவ்விதமான பெரும்
பணம் கிடைக்க பெற்றது என விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்ற குற்ற சாட்டை பாதிக்க பட்டவர்கள் முன் வைக்கின்றனர் .
மேலும் இலங்கை இலண்டன் தூதரகத்தில் இந்த லண்டன் பெண்ணுக்கு எதிராக பெட்டிசம் வழங்குவதுடன் ,இலங்கைக்கான பிரான்ஸ் தூதரகத்தில்
ராசன் தொடர்பான இந்த குற்ற சாட்டு மனு வழங்க நடவடிக்கை மேற்கொள்ள போவதாக பாதிக்க பட்டவர்கள் தெரிவிக்கின்றனராம் .
இலங்கை போலீசாரை வைத்து ,அப்பாவி மக்களை தாக்கியமைக்காக ,லண்டன் மற்றும் பிரான்ஸ் அரசுகள் இவர்களுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையை மக்கள் முன் வைப்பார்கள் என எதிர் பார்க்க படுகிறது .
பச்சை மிளகாய் தாக்குகளின் பின்னர் சிக்கிய ராசன்
பச்சை மிளகாய் என்ற டிக்டாக் வாலிபன் ஒருவரை காரில் வைத்து , இதே பிரான்ஸ் டிக்டாக் ராசன் தாக்குகிறார் .
அந்த விடயம் வரவேற்பையும் ,எதிர்ப்பையும் பிரான்ஸ் டிக்டாக் ராசனுக்கு எதிராக ஏற்படுத்தியது .
குற்றம் புரிந்த பச்சை மிளகாயை கைது செய்த ராசன் ,அவரை காவல்துறையில் ஒப்படைத்து தண்டித்து இருந்தால் ,அவர் மீதான நன்மதிப்பு ,மக்கள் மத்தியில் மேலும் அதிகரித்து இருக்கும் .
சட்டத்தை தன் கையிலெடுத்து, பச்சை மிளகாய் என்ற டிக் டாக் பெயர் கொண்ட நபர் மீது, பிரான்ஸ் டிக்டாக் ராசன் வன்முறை தாக்குதல் நடத்தியது மிக பெரும் தவறு என்பதாக எதிர்தரப்பினர் குற்றம் சுமத்தி வருகின்றனர் .
காவல்துறையை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்து
அதனால் காவல்துறையை தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்து பிரான்ஸ் டிக்டாக் ராசன் தாக்குகிறார், என்ற கீழ் நிலை பார்வை ராசன் மேல் வீழ ஆரம்பித்தது .
அதன் பின்னர் வவுனியா பகுதி பாடசாலைக்கு சிறப்பு விருந்தினராக ராசன் அழைத்து கவுரவிக்க பட்ட செயலும் கண்டனங்களுக்கு உள்ளாகின .
இப்பொழுது புளியங்குளம் காவல்துறை நிலையத்தில் வைத்து ,ராசன் ,மற்றும் லண்டன் பெண் ஆகியோர் தாக்குதல் நடத்தியதால் இருவரும் கைது செய்யப்பட வேண்டும் என மக்கள் வேண்டுதல் விடுத்துள்ளனர் .
பிரான்ஸ் டிக்டாக் ராசனுக்கு உதவிய காவல்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்க பட்டுள்ளது .
மக்கள் சேவை ஆற்றிட மகத்துவம் தேடி சென்ற பிரான்ஸ் டிக்டாக் ராசனின் , சில சிந்திக்காத செயல்கள் ,தொலைதூர முற்போக்கு பார்வை அற்ற நிலையால் ,இன்று இவ்வாறு அவர் மீதான எதிர்ப்பும் போராட்டமும் வெடித்துள்ளது .
பொது தளத்தில் பணியாற்ற வரும் பொழுது எச்சரிக்கை
பொது தளத்தில் பணியாற்ற வரும் பொழுது ,இவ்வாறு எதிர்ப்புக்கள் கிளம்பும் ,அதனை முன்கூட்டி அனுமானித்து அவற்றை தவிர்த்து சென்றிருந்தால் இந்த நிலை பிரான்ஸ் டிக் டாக் ராசனுக்கு ஏற்பட்டு இருக்காது .
பிரான்ஸ் டிக்டாக் ராசன் மிக சிறந்த அன்பான மனிதர் எனவும் ,அவரை தவறான வழியில் அவரை சிக்க வைத்து ,சிக்கலில் மாட்டி விட்டது ,லண்டனில் இருந்து வருகை தந்துள்ள கடை நடத்திய பெண் என்ற குற்ற சாட்டு பாரதூரமாக முன் வைக்க படுகிறது .
ஆதலால் அந்த லண்டன் பெண்ணுக்கு பெரும் தொகையில் பணம் கிடைத்தது எப்படி என்பதை, பிரிட்டன் வருமான துறை விசாரணைகளை மேற்கொண்டால் ,விடயம் தெரியவரும் என மக்கள் கருத்துக்கள் காணப்படுகின்றன .
குற்றம் சுமத்த பட்டுள்ள ராசன் லண்டன் பெண் ஆகியோர் எம்மோடு உங்கள் பக்க விடயங்கள் தெரிவிக்க விரும்பினால் எம்மோடு தொடர்பு கொள்ளுங்கள் .
சேவை மைந்தன் பிரான்ஸ் டிக் டாக் ராசன்
சேவை மைந்தன் பிரான்ஸ் டிக் டாக் ராசன் மீது இவ்விதமான எதிர்ப்பு கிளம்பிட காரணம் என்ன என்பதை ,அவரது உற்ற நெருங்கிய விசிறிகள் ,விசிறி விடயத்தை கண்டறிக .
பொறிக்குள் ராசனை சிக்கவைத்து ,இன்று இந்த தலைகுனிவை அவருக்கு ஏற்படுத்தியது யார் என்பதை ,ராசனுடன் பயணிக்கும் ,விசிறிகள் ஆராய வேண்டும் என்பதே நமது அவா .
அதிகாரிகளை அடைத்த பட்டதாரிகள் கைது
அதிகாரிகளை அடைத்த பட்டதாரிகள் கைது
அதிகாரிகளை அடைத்த பட்டதாரிகள் கைது ,வடமத்திய மாகாண ஆளுநர் மஹிபால ஹேரத் உள்ளிட்ட மாகாண சபை அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை மாகாண சபை கட்டிட வளாகத்திற்குள் அடைத்து,
நுழைவு மற்றும் வெளியேறும் கதவுகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்ட 22 வேலையற்ற பட்டதாரிகள் திங்கட்கிழமை (6) கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வேலையற்ற பட்டதாரிகள்
கைது செய்யப்பட்டவர்களில் அகில இலங்கை ஐக்கிய வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் முன்னாள் அழைப்பாளர் தம்மிக்க முனசிங்க உட்பட 11 ஆண்களும் 11 பெண்களும் அடங்குவர்.
பொலன்னறுவை வெலிகந்த போன்ற தொலைதூர பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் சிறு குழந்தைகளுடன் இந்த இடத்திற்கு வந்துள்ளனர்,
மேலும் வடமத்திய மாகாணத்தில் உள்ள வெற்றிடங்களை விட மாகாணத்தில் வேலையற்ற பட்டதாரிகள் குறைவாக இருப்பதால் அவர்களுக்கு ஏன் வேலை வழங்கப்படவில்லை என இக்குழுவினர் கேள்வி எழுப்பினர்.
திங்கட்கிழமை (6) காலை பத்து மணியளவில் மாகாண சபையின் பிரதான வாயில் ஊடாக மாகாண சபை வளாகத்தினுள் நுழைந்த வேலையற்ற
பட்டதாரிகள் குழு வடமத்திய மாகாண சபையின் அனைத்து நுழைவாயில்கள் மற்றும் வெளியேறுகளை அடைத்து தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்
போதைப்பொருளால் சிறுவனுக்கு நடந்துள்ள கொடூரம்
போதைப்பொருளால் சிறுவனுக்கு நடந்துள்ள கொடூரம்
போதைப்பொருளால் சிறுவனுக்கு நடந்துள்ள கொடூரம் ,குழந்தைகளுக்காக உயிரைத் தியாகம் செய்யும் உன்னத தந்தைகளுக்கு மத்தியில் அவர்களின் பெயரைக் கூட கேவலப்படுத்தும் சில தந்தைகளும் இருக்கிறார்கள்.
போதைப்பொருள் வாங்க பணம் கேட்டு மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஏழு வயது மகனை தரையில் அடித்து பலத்த காயம் ஏற்படுத்திய அத்தகைய தந்தை பற்றிய தகவல் ஒன்றே வௌியாகியுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு, தனது ஏழு வயது மகனை தனது கணவர் தரையில் அடித்ததாக பெண் ஒருவர் கிராண்ட்பாஸ் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.
கணவர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமை
தனது கணவர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் எனவும், போதைப்பொருள் வாங்க பணம் கேட்டு தன்னையும் பிள்ளையையும் தொடர்ந்து துன்புறுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சம்பவத்தன்று தனது கணவர் பணம் கேட்டு தன்னை கொடூரமாக தாக்கியதாகவும், அருகில் வந்த தனது 7 வயது மகனை தூக்கி தரையில் கொடூரமாக தாக்கியதாகவும் அந்த பெண் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
பொலிஸ் கைது
சம்பவம் தொடர்பில் உடனடியாகச் செயற்பட்ட பொலிஸார், சந்தேக நபரைக் கைது செய்ததுடன், தரையில் விழுந்து படுகாயமடைந்த சிறுவன் கொழும்பு லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
சந்தேக நபர் போதைப்பொருள் பாவனைக்காக பல சந்தர்ப்பங்களில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டிருந்த குழந்தைகள் மீட்பு
பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டிருந்த குழந்தைகள் மீட்பு
பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டிருந்த குழந்தைகள் மீட்பு ,ஹங்வெல்ல பிரதேசத்தில் தனது இரண்டு பிள்ளைகளை பணயக்கைதிகளாக வைத்திருந்த
தந்தையொருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹங்வெல்ல – ஜல்தர அரச ஊழியர் வீட்டுத் தொகுதியைச் சேர்ந்த ஒருவர் நேற்று (05) தனது மனைவியைக் கொல்வதற்காக கைக்குண்டுடன் தனது வீட்டிற்கு வந்ததாகக் கூறப்படுகிறது.
எனினும் அந்த நேரத்தில் குறித்த பெண் வீட்டை விட்டு ஓடியதையடுத்து குறித்த நபர் தனது இரண்டு பிள்ளைகளையும் வீட்டின் அறையொன்றில் பணயக்கைதிகளாக வைத்திருந்துள்ளார்.
10 வயது சிறுமியும், இரண்டு வயது ஆண் குழந்தையமே பணயக்கைதிகளாக பிடிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
பொலிஸ் விசேட அதிரடிப்படை
இது தொடர்பில் கிடைத்த தகவலுக்கு அமைய உடனடியாக செயற்பட்ட ஹங்வெல்ல பொலிஸ் அதிகாரிகள் குழுவும் பொலிஸ் விசேட
அதிரடிப்படையின் வெடிகுண்டு செயலிழப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவும் சம்பவ இடத்திற்கு சென்று குழந்தைகளை மீட்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
ஒரு மணி நேர போராட்டம்
சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின்னர் பொலிஸ் அதிரடிப் படையினர் குழந்தைகளை பத்திரமாக மீட்டுள்ளனர்.
பின்னர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் குறித்த நபரையும் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர் மேலதிக விசாரணைகளுக்காக ஹங்வெல்ல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹங்வெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்
ஏப்ரலில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வீழ்ச்சி
ஏப்ரலில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வீழ்ச்சி
ஏப்ரலில் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை வீழ்ச்சி இந்த ஆண்டு முதல் தடவையாக சர்வதேச சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 200,000க்கு கீழ் வீழ்ச்சியடைந்ததன் மூலம் இலங்கை சுற்றுலாத்துறை ஏப்ரல் மாதத்தில் வேகமான வீழ்ச்சியைக் கண்டுள்ளது.
ஏப்ரல் மாதத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை மொத்தம் 148, 867 என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் (SLTDA) தற்காலிகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது முந்தைய ஆண்டின் இதே மாதத்தை விட 41 சதவீதம் அதிகமாக இருந்தாலும், கடந்த மாதத்தில் (மார்ச்) பதிவு செய்யப்பட்ட 209,181 சுற்றுலாப் பயணிகளின் வருகையை விட இது குறிப்பிடத்தக்க வீழ்ச்சியாகும்.
டிசம்பர் 2023 முதல், இலங்கை ஒவ்வொரு மாதமும் 200,000 சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதில் வெற்றிகரமாக உள்ளது, இது கொவிட் தொற்றுநோய் வெடித்ததில் இருந்து முதல் முறையாக மைல்கல்லை எட்டியது.
இந்த வேகம் நான்கு மாதங்கள் தொடர்ந்து பராமரிக்கப்பட்டது, ஆனால் ஏப்ரல் மாதத்தில் ஒரு சுருக்கம் காணப்பட்டது
எவ்வாறாயினும், ஒரு சுருக்கம் எதிர்பார்க்கப்பட்டாலும், சுற்றுலா அதிகாரிகள் கடந்த வாரம் வீழ்ச்சிக்கு பிற காரணிகளும் காரணம் என சுட்டிக்காட்டியுள்ளனர்.
ஏப்ரல் 17 முதல் நடைமுறைக்கு வந்த புதிய விசா முறையானது, இது மிகவும் விலை உயர்ந்ததுடன் முன்பு இருந்த ETA போல வசதியாக இல்லாததால், அது வெளியிடப்பட்டதிலிருந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், மாதாந்திர சுற்றுலா வருகை புதுப்பிப்பில், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய விசா
வகைகளின்படி வருகை எண்கள் “புதுப்பிக்கப்பட்டுள்ளன” என்று SLTDA குறிப்பிட்டது.
புதுப்பிப்பு வருகை எண்ணிக்கையில் அதிகரிப்பைக் காட்டுகிறது.
இது தொடர்பில் குடிவரவு அதிகாரிகளிடம் இருந்து தெளிவுபடுத்தப்பட்டதன்
பின்னர் இன்னும் தெளிவான யோசனையை இன்று பகிர்ந்து கொள்ள முடியும் என்று அதன் தலைவர் பிரியந்த பெர்னாடோ தெரிவித்தார்.
“வருகைத் தரவைப் பெறுவதற்கான ஆதாரம் குடியேற்றம். அவற்றை வகைப்படுத்தலில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
நண்பர்கள் மற்றும் உறவினர்களைப் பார்வையிடுதல், வணிகம், MICE போன்றவை” என்று அவர் கூறினார்.
ஏப்ரலில் இலங்கை சுற்றுலாவுக்கான சிறந்த மூல சந்தைகளாக இந்தியா, ரஷ்ய கூட்டமைப்பு மற்றும் இங்கிலாந்து ஆகியன இருந்தன,
அவை மொத்த சுற்றுலாப் பயணிகளின் வருகையில் முறையே 18 சதவீதம், 10 சதவீதம் மற்றும் 9 சதவீதம் என பங்களித்தன என்பது குறிப்பிடத்தக்கது.
நெடுஞ்சாலையில் உடைந்து விழுந்த கொங்ரீட் தளம்
நெடுஞ்சாலையில் உடைந்து விழுந்த கொங்ரீட் தளம்
நெடுஞ்சாலையில் உடைந்து விழுந்த கொங்ரீட் தளம் நிர்மாணிக்கப்பட்டு வரும் மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் பெரிய கொங்ரீட் தளம் ஒன்று உடைந்து வீழ்ந்துள்ளது.
பெம்முல்ல கந்தஒலுவாவ பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் பகுதியொன்றே இவ்வாறு உடைந்து வீழ்ந்துள்ளது.
நேற்று மதியம் இந்த கொங்ரீட் தளம் உடைந்து விழுந்ததாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
சரிகமபாவில் இலங்கை வத்தளை வாலிபன்
சரிகமபாவில் இலங்கை வத்தளை வாலிபன்
சரிகமபாவில் இலங்கை வத்தளை வாலிபன் ,ஜீ தமிழ் தொலைக்காட்சி நடத்தும் சரிகமபா நிகழ்வில் இலங்கை வத்தளையை சேர்ந்த விஜய் லோசன் பாடல் பாடி அசத்தியுள்ளார் .
விஜய் லோசன் முதல் பாடல்
விஜய் லோசன் முதல் பாடல் அவள் உலக அழகியே என்ற பாடலை பாடியிருக்கிறார் .அரங்கம் நிறைந்த கரகோஷத்துடன் தனது போட்டியை ஆரம்பித்துள்ளார் .
ஜீ தமிழ் தொலைக்காட்சி நடத்தும் சரிகமபா நிகழ்வில் ,இலங்கையில் இருந்து மூவர் கலந்து கொண்டுள்ளனர் .
பதுளையை சேர்ந்த இந்திரஜித்
அதில் மலையகம் பதுளையை சேர்ந்த இந்திரஜித் ,சுவிஸ் நாட்டை சேர்ந்த சாரங்கா ,ஆகிய மூவரும் கலந்து சிறப்பித்து வருகின்ற்னர் .
கில்மிசா ,அசானி கலந்து கொண்டு அசத்தி சாதனை நிலை நாட்டிய பின்னர் ,தற்போது இவர்கள் கலந்து கொண்டுள்ள இந்த நிகழ்வு மிக பெரும் வரவேற்பை பெற்றுள்ளது .
தமிழகம் ஜீ தமிழ் தொலைக்காட்சி சரிகமபா
எமது இலங்கையை சேர்ந்தவர்களுக்கு ஜீ தமிழ் தொலைக்காட்சி சரிகமபா அங்கிகாரம் வழங்கி கவுரவித்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
கனவுகளை சுமந்து இந்த சரிகமபா நிகழ்வில் கலந்து கொண்டு பாடும் இந்த பாடும் குயில்கள் வெற்றி பெறவேண்டும் .
முதலாவது இடத்தை தட்டி பறிக்க வேண்டும் என்பது நோக்கல்ல ,இந்த சரிகமபா மேடையில் ஏறிவிட்டாலே அதுவே பெருமை என்பதே இன்றைய நிலையாக உள்ளது .
ஈழ தமிழர்கள்
அதற்காக உலகம் தழுவிய ஈழ தமிழர்கள் ,தமிழக தொலைக்காட்சிகளை நோக்கி படையெடுத்து வருகின்றனர் .
அவ்விதம் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் சரிகமபா நிகழ்வில் விஜய் லோஷன் கலந்து கொண்டு அசத்தியுள்ளார் .
இலங்கை வத்தளை மக்களுக்கு சரிகமபா பாட்டு அரங்கின் ஊடக, விஜய் லோசன் பெருமை தேடி தருவார் என மக்கள் எதிர் பார்க்கின்றனர் .
மிகவும் இறுக்கமான இந்த போட்டி , இலங்கை வாலிபர்கள் நின்று தாக்கு பிடித்து வெல்வார்களா என்பதே கேள்வியாக உள்ளது .
இந்த சரிகமபா நிகழ்வில் ,போட்டி கொண்ட திறமை சாலிகள் மோதி கொள்ள போகின்றனர் என்பதே போட்டியாளர்களை பார்க்கும் பொழுது தெரிகிறது .
கோட்டாபய தொலைபேசி இரகசியம் உரையாடல் அம்பலம்
கோட்டாபய தொலைபேசி உரையாடல் அம்பலம்
கோட்டாபய தொலைபேசி இரகசியம் உரையாடல் அம்பலம் ,முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச 2021 ஆம் ஆண்டு என்னுடன்
தொலைபேசியில் உரையாடிய போது என்னிடம் கூறியதை மறுக்க முடியாது என கொழும்பு பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் இன்று தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அண்மைய அறிக்கையை குறிப்பிட்டு, கர்தினால், ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை
நடைமுறைப்படுத்த முடியாது, ஏனெனில் தனக்கு நெருக்கமானவர்கள் மற்றும் சங்கங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி கூறியதை மறுக்கிறார்.
ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்
“2021 பிப்ரவரி 2ஆம் திகதியன்று முன்னாள் ஜனாதிபதி என்னுடன் தொலைபேசியில் பேசியதை நானும் எனது செயலாளரும் உறுதிப்படுத்தி நிரூபிக்க முடியும். ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களை விசாரித்த
கோட்டாபய தொலைபேசி இரகசியம் உரையாடல் அம்பலம்
ஜனாதிபதி ஆணைக்குழு இஸ்லாமிய தீவிரவாத அமைப்புகளை தடை செய்ய மட்டுமே பரிந்துரைத்துள்ளது என்று சமீபத்தில் ராஜபக்சே கூறினார்.
இஸ்லாமியம் அல்லாத ஒரு அமைப்பையும் தடை செய்யுமாறு அறிக்கை தெளிவாக பரிந்துரைத்துள்ளது, இந்த உண்மைகளை முன்னாள் ஜனாதிபதி மறுக்க முடியாது” என்று கர்தினால் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை
ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை நடத்திய புலனாய்வு அதிகாரிகளை முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இடமாற்றம்
செய்துள்ளதாக கர்தினால் குற்றம் சுமத்தியுள்ளார். அத்துடன், ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதில் தற்போதைய அரசாங்கம் தவறிவிட்டதாக கர்தினால் குற்றம் சுமத்தியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஆணைக்குழு பரிந்துரை செய்த போதிலும், அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்காதது ஏன் என கர்தினால் கேள்வி எழுப்பியுள்ளார்.
“தற்போதைய அரசாங்கம் ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்களுடன் தொடர்புடைய அனைத்தையும் கம்பளத்தின் கீழ் தொடர்ந்து தள்ளுகிறது,” என்று அவர் மேலும் கூறினார்.
மாணவர்களை கோரமாக தாக்கிய பிக்கு
மாணவர்களை கோரமாக தாக்கிய பிக்கு
மாணவர்களை கோரமாக தாக்கிய பிக்கு மேலதிக வகுப்பு இடம்பெறாமையால் வெலிகம பிரதேசத்தில் உள்ள விகாரை ஒன்றுக்கு சென்ற பாடசாலை மாணவன் மற்றும் மாணவியையும் பிக்கு தாக்கியுள்ளார் .
அந்த விகாரையின் விகாராதிபதி, கொடூரமாக தாக்கியதாக குறித்த மாணவனின் பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
இதன் காரணமாக இந்த ஆண்டு சாதாரண தர பரீட்சையில் அந்த மாணவரால் தோற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
பிக்கு கைது
இதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடைய பிக்கு கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
இவ்வருடம் சாதாரண பரீட்சைக்குத் தோற்றவிருந்த வெலிகம பிரதேசத்தில் பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர், கடந்த 25 ஆம் திகதி பரீட்சை அனுமதி சீட்டில் கையொப்பமிடவுள்ளதாக கூறிவிட்டு வீட்டை விட்டுச் சென்றுள்ளார்.
பின்னர் மேலதிக வகுப்பிலும் பங்கேற்கவுள்ளதாகவும் அந்த மாணவன் கூறிச் சென்றுள்ளான்.
ஆனால் மேலதிக வகுப்பு நடைபெறாததால், தனது தோழியுடன் அப்பகுதியில் உள்ள விகாரைக்கு சென்றுள்ளார்.
அங்கு குறித்த விகாரையின் விகாராதிபதி மாணவனையும் அவருடன் சென்ற தோழியையும் ஈர்க்குமாறால் தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தாக்கப்பட்ட மாணவி கூறும் போது,
“இருவரும் விகாரைக்கு சென்றோம். அப்போது அங்கு வந்த தேரர் ஈர்க்குமாரை எடுத்து நண்பரை தாக்கினார். அவர் ஓடினார், நானும் ஓடினேன்.
ஏன் தாக்கினீர்கள் என்று கேட்டோம்
ஏன் தாக்கினீர்கள் என்று கேட்டோம். நாங்கள் தவறாக நடந்து கொள்ளவில்லை, பின்னர் என்னையும் அழைத்து தாக்கினார் என்றார்.
தாக்குதலுக்கு உள்ளான மாணவன் மாத்தறை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாக்கப்பட்ட மாணவனின் தந்தை கூறுகையில்,
“இந்த தாக்குதலால் மகனின் உடலின் உள்பகுதி சேதமடைந்துள்ளது. அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று வைத்தியர்கள் கூறினர்.
அறுவை சிகிச்சை
அறுவை சிகிச்சைக்காக தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். மகனுக்கு அடித்ததால் ஏற்பட்ட ரத்தக்காயம் இருப்பதாக மனைவி என்னிடம் கூறினார். இது வீழ்ந்ததால் ஏற்பட்ட காயம் அல்ல தாக்கியதால் ஏற்பட்ட காயம் என மருத்துவர்களும் கூறினர்.
பின்னர், இது குறித்து பொலிஸில் முறைப்பாடு செய்தேன்.
அதன் பிறகு வெலிகம பொலிஸாருடன் விகாரைக்கு சென்றோம் அங்கு தேரர் இல்லை.
மகனுக்கு இன்னும் சாப்பிடவும் குடிக்கவும் முடியவில்லை.. 6ம் திகதி பரீட்சை. அதுக்கு செல்லவும் தற்போது வழியில்லை. உடம்பு சரியில்லாம படுத்த
படுக்கையா இருக்கிறான். மகன் தோழியுடன் சென்றமை குறித்து எங்களுக்கு அறிவித்திருக்கலாம், அதனை விடுத்து இவ்வாறு கொடூரமாக தாக்குவது
முறையல்ல. எனது மகனுக்கு நீதி கிடைக்க வேண்டுமானால் தேரருக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும்” என்றார்.
யாழில் பொலிசார் சுற்றிவளைப்பு
யாழில் பொலிசார் சுற்றிவளைப்பு
யாழில் பொலிசார் சுற்றிவளைப்பு ,யாழ்ப்பாணம் ஒஸ்மானிய கல்லூரிக்கு அருகாமையில் பாழடைந்த கட்டிடம் ஒன்றில் சட்டவிரோதமாக மாடுகள் மற்றும் ஆடுகளின் இறைச்சியினை வெட்டி வந்த நிலையம் ஒன்றை பொலிஸார் சுற்றிவளைத்துள்ளனர்.
பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவல்
பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் நிசாந்தவின் கீழ் இயங்கும் பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய முன்னெடுக்கப்பட்டது .
இந்த சுற்றிவளைப்பில் நான்கு மாடுகள் தலை வெட்டப்பட்ட நிலையிலும், உயிருடன் 21 மாடுகளையும் 4 ஆடுகளையும் கைப்பற்றியுள்ளனர்.
இதனையடுத்து சந்தேகநபர் ஒருவரை பொலிசார் கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நீண்டகாலமாக குறித்த இடம் செயற்பட்டு வந்திருக்கலாம் என பொலிசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் நோக்கி பல இடங்களில் இருந்தும் குறித்த மாடுகள் கொண்டு வரப்பட்டிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன
இதேவேளை அந்த இடத்தில் இருந்து விலங்குகளை இறைச்சியாக்குவதற்காக பயன்படுத்தப்பட்டுள்ள ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
திருடப்படும் மாடுகள் இங்கே வைத்து வெட்டி இறைச்சி விற்பனைக்கு எடுத்து செல்ல பட்டதாக தெரிவிக்க படுகிறது .
இதனை அடுத்து யாழ்ப்பாண போலீசார் இந்த சுற்றிவளைப்பை மேற்கொண்டனர் .
காணாமல் போனவர் சடலமாக மீட்பு
காணாமல் போனவர் சடலமாக மீட்பு
இலங்கையில் காணாமல் போனவர் சடலமாக மீட்பு . அதிர்ச்சியில் உறைந்துள்ள குடும்பம் .
லுணுகலை கும்புக்கன் ஓயா பகுதியில் இறந்த நிலையில் மர்ம சடலம் ஒன்று மீட்க பட்டுள்ளது .இவ்வாறு சடலமாக மீட்க பட்டவர் காணமல் போனவரது என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது .
பொலிஸ் விசாரணைகள் ஆரம்பம்
இவர் எவ்வாறு மரணமானார் என்பது தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பித்துள்ளனர் .
கடந்த மூன்றாம் திகதி வீட்டை விட்டு சென்றவர் வீடு திரும்பாத நிலையில் ,காணமல் போயுள்ளதாக உறவினர்கள் காவல் துறையில் முறைப்பாடு செய்தனர் .
அதனை அடுத்து காணமல் போனவர் தொடர்பாக காவல்துறையினர் தேடுதலை நடத்திய பொழுது ,லுணுகலை கும்புக்கன் ஓயாவில் சடலமாக மீட்க பட்டுள்ளார் .
மர்மமான முறையில் உயிரிழந்தமை தொடர்பாக ,காவல் துறையினர் தீவிர விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர் .
மர்ம கொலை
சடலமாக மீட்க பட்டவர் கொலை செய்ய ப்பட்டு இருக்கிறார் என உறவினர்கள் தெரிவிக்கின்றனர் .
சடலம் மீட்க பட்ட பகுதியில் ,கொலைக்கான தடயங்களை தேடி சேகரிக்கும் நடவடிக்கையில் குற்ற பிரிவு காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர் .
இலங்கையில் தொடரும் இவ்வாறான கொலைகளும் ,சடலங்கள் மீட்க படுவதால் ,சீரியல் கில்லர் சிலர் இந்த கொலைகளை நடத்துவதாக சந்தேகம் வெளியிட பட்டுள்ளது .
அதிக விசா கட்டணம் அறவிடும் நாடாக மாறியுள்ளதா இலங்கை
அதிக விசா கட்டணம் அறவிடும் நாடாக மாறியுள்ளதா இலங்கை
அதிக விசா கட்டணம் அறவிடும் நாடாக மாறியுள்ளதா இலங்கை இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு விசா வசதிகளை வழங்க தனியார் நிறுவனத்திற்கு அனுமதி .
வழங்குவது இலங்கையின் சுற்றுலா வர்த்தகத்தை பாதிக்கும் என சுற்றுலா முகவர் நிறுவனங்களின் சம்மேளனம் ஜனாதிபதிக்கு அறிவித்துள்ளது.
புதிய முறைமையின் கீழ் விசா கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டதன் காரணமாக, ஆசியாவிலேயே அதிக விசா கட்டணம் அறவிடும் நாடாக இலங்கை தற்போது மாறியுள்ளதாக கடிதம் ஒன்றைக் அனுப்பி அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
1949 ஆம் ஆண்டு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் நிறுவப்பட்டதன் பின்னர் இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு வழமை போன்று ஆவணங்களை சரிபார்த்து விசா வசதிகள் வழங்கப்பட்டன.
1949 முதல் 2012 வரை, ஒரு சில நாடுகளைத் தவிர, சுற்றுலா பயணிகளிடம் இருந்து இலங்கை அரசு விசா கட்டணம் வசூலிக்கவில்லை.
விசா கட்டணம்
ஆனால் 2012ல் ETA என்ற Electronic Travel Authorization முறை அறிமுகப்படுத்தப்பட்டு விசா கட்டணம் வசூலிக்கப்பட்டது.
அதன்படி, அவ்வப்போது விசா கட்டணங்கள் உயர்த்தப்பட்டு, 2024 ஆம் ஆண்டு தொடக்கத்தில், இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணி ஒருவரிடமிருந்து அதிகபட்சமாக 60 அமெரிக்க டொலர்கள் வசூலிக்கப்பட்டது.
2012 முதல் 2024 ஏப்ரல் இறுதி வரை, விசா வழங்கும் செயல்முறை தடையின்றி நடந்தது.
எவ்வாறாயினும், இந்தச் செயற்பாட்டை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தில் இருந்து நீக்கி VFS GLOBAL என்ற தனியார் நிறுவனத்திற்கு அமைச்சரவையின் அங்கீகாரத்துடன் மாற்றுவதற்கு அரசாங்கம் அண்மையில் நடவடிக்கை எடுத்திருந்தது.
ஒன்லைன் வசதி மூலம் விசா
அதன்படி, முதலில் ஒன்லைன் வசதி மூலம் விசா வசதியும், பின்னர் ON ARRIVAL விசா வசதியும் அந்த தனியார் நிறுவனத்துக்கு மாற்றப்பட்டது.
அதனுடன் இதுவரையில் ON ARRIVAL விசா வசதியை வழங்கிய அரசாங்க இணையத்தளமான www.eta.gov.lk முடக்கப்பட்டு அதற்கு பதிலாக www.srilankaevisa.lk என்ற தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான புதிய இணையத்தளம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதன் கீழ் இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு 30 நாள் விசாவிற்கு இதுவரை அறவிடப்பட்ட 60 டொலர்கள் 100.5 டொலர்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அந்த 100.5 டொலர்களில் 75 டொலர்கள் அரசாங்கத்துக்கும், மீதி 25.5 டொலர்கள் தனியார் நிறுவனத்துக்கும் சொந்தமாகும்.
மேலும், 2012 முதல் 2024 க்கு இடைப்பட்ட காலப்பகுதியில் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் வகையில், இலங்கைக்கு வருகை தரும் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான விசா கட்டணத்தை அறவிடுவதில்லை என அரசாங்கம் கொள்கை முடிவு எடுத்திருந்தது.
எனினும், அந்த கொள்கை முடிவை மாற்றி, புதிய முறையின் மூலம் சிறுவர்களுக்கும் 100.5 டொலர் விசா கட்டணமாக வசூலிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, தாய், தந்தை மற்றும் இரண்டு பிள்ளைகள் அடங்கிய வெளிநாட்டுக் குடும்பம் இலங்கைக்கு வரும்போது விசா கட்டணமாக 400 டொலர்களுக்கு மேல் செலுத்த வேண்டியுள்ளது.
இங்குள்ள மற்றுமொரு பிரச்சனை
இங்குள்ள மற்றுமொரு பிரச்சனை என்னவென்றால், சுற்றுலாப் பயணி ஒருவர் ஒன்லைனில் விசா வசதியைப் பெறும்போது, அது குடிவரவு மற்றும்
குடியகல்வுத் திணைக்களத்திற்குத் அறியவந்தாலும் On Arrival முறை மூலம் வரும் சுற்றுலாப் பயணிக்கு வழங்கப்படும் விசா வசதி முதலாவது சந்தர்ப்பத்திலேயே திணைக்களத்திற்கு தெரியவராமை ஆகும்.
இந்நிலைமை 1949 ஆம் ஆண்டின் 18 ஆம் இலக்க சட்டத்திற்கு முரணானது எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறானதொரு பின்னணியில் சுற்றுலாத் துறையைச் சேர்ந்த பலரை உள்ளடக்கிய SLAITO என்ற பயண முகவர்களின் சம்மேளனம், ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
தாய்லாந்து, வியட்நாம் மற்றும் இலவச விசா வழங்கும் அல்லது குறைந்த கட்டணத்தை வசூலிக்கும் போட்டி இடங்களுடன் ஒப்பிடும்போது, சுற்றுலாப் பயணிகளுக்கு குறிப்பிடத்தக்க தடையை உருவாக்கி, ஆசியாவிலேயே அதிக விசா கட்டணங்களைக் கொண்ட நாடாக இலங்கை மாறியுள்ளது என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அருளினி பாட்டால் அழுத மக்கள்
அருளினி பாட்டால் அழுத மக்கள்
சரிகமபாவில் மலேசியா பெண், அருளினி பாட்டால் அழுத மக்கள்.
சீனியர் சரிகமபா பாட்டு மன்றத்தில் பாடி அசத்திய மலேசியா குயில் அருளினி .
சரிகமபா நடுவர்கள் அந்த அரங்கில் குழுமி இருந்த மக்கள் யாவரும் ,அருளினியின் சிரிப்பில் மயங்கினர் .அருளினியின் கொஞ்சு தமிழும் ,வெளிப்படை தன்மையான பேச்சும் யாவரையும் கவர்ந்துள்ளது .
ஜீ தமிழ் தொலைக்காட்சி நடத்தும் ,சரிகமபா நிகழ்வில் மலேசியாவில் இருந்து கலந்து கொண்ட ஒரே ஒரு தமிழ் பெண்ணாக அருளினி காணப்படுகிறார் .
ஆட்டிசத்தால் பாதிக்க பட்ட அருளினி
ஆட்டிசத்தால் அருளினி பாதிக்க பட்டுள்ளதாக அவர் தெரிவித்த பொழுது, அங்கிருந்த மக்கள் யாவரும் கலங்கி போயினர் .தன்னை வாழவைத்து வருவது இந்த இசை தான் ,என அவர் தெரிவித்தார் . .
இந்த மேடையில் முதன் முதலாக அலேக்கா அலேக்கா என்கின்ற பாடலை பாடினார் ,அப்பொழுது நடுவர்கள் மற்றும் அந்த அரங்கமே எழுந்து நின்று அவரை வாழ்த்தியது .
மதுர குரலை தன்னகத்தே வைத்துள்ளார் ,மேல் சுருதியில் அருளினி பாடலை பாடிய பொழுது நடுவர்களே வியந்து, தம்மை மறந்து கைகளை தட்டி வாழ்த்தினர் .
அவ்வாறான சிறப்பு தகமை கொண்ட அருளினியின், சரிகமபா பயணம் புதிய அனுபவத்தை கற்று கொடுக்கும் என எதிர் பார்க்க படுகிறது .
நான் வெற்றி பெறுவேனோ இல்லையோ என்பது முக்கியம் அல்ல . இறுதிவரை நிகழ்வில் பாட வேண்டும் என்பது எனது ஆசை என ,அவர் உண்மையை உரக்க கூறி இருந்தது ,அவரது வெளிப்படை தன்மையான பேச்சை காட்டியுள்ளது .
வெல்லுங்கள் அருளினி ,கலங்காது நடை போடுங்கள் ,உங்களோடு உலக தமிழர்கள் இருக்கிறோம் .
இவ்வாறானவர்களை இணைத்த ஜீ தமிழ் தொலைக்காட்சிக்கு எமது நன்றிகள் பாராட்டுக்கள் .
சுண்டிக்குளம் மக்களுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
சுண்டிக்குளம் மக்களுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
சுண்டிக்குளம் மக்களுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு என இன்று அறிவிக்க பட்டுள்ளது .
காணி அபகரிப்பு என தெரிவித்து சுண்டிக்குளம் மக்களுக்கு எதிராக வனஜீவராசிகள் அமைச்சினால் வழக்கு தொடுக்க பட்டது .
மக்களுக்கு எதிரான வழக்கு தற்போது ஒத்திவைப்பு என முன்னாள் வடமாகாணசபை சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ள்ளார் .
சிங்கள ஆக்கிரமிப்பு
திட்டமிடப்பட்டு மக்கள் விவசாய காணிகளை அபகரிக்கும் சிங்கள ஆக்கிரமிப்பு நோக்கத்துடன் நடத்த பட்டு வருவதாக ரவிகரன் குற்றம் சுமத்தியுள்ளார் .
உடையார் கட்டு குளத்தின் கீழ் ,நீர்ப்பாசன விடயத்தை பெற்று மக்கள் விவசாயம் செய்யும் 138 பேரது காணிகளை அபகரித்துள்ளது என பாதிக்க பட்ட மக்கள் குற்றம் சுமத்துகின்றனர் .
காரிய வயல் தொடர்பான வழக்கு, வனஜீவராசிகள் திணைக்களத்தால் இந்த குடும்பங்களுக்கு எதிராக தொடுக்க பட்டுள்ளது என ரவிகரன் சுட்டிகாட்டாடினார் .
காணி அபகரிப்பு
அந்த காணி அபகரிப்பு தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ள பட்ட நிலையில் ,தற்போது இந்த வழக்கு ஒத்திவைக்க பட்டுள்ளது .
அரச காணி சட்டத்தின் கீழ் காணிகளுக்கு உறுதி வழங்க பட்ட நிலையில் ,அந்த காணிகள் அரசுக்கு சொந்தமானது என தெரிவித்து ,வனஜீவராசிகள் திணைக்களம் அபகரிக்க முனைந்துள்ளதாக கண்ணீர் மல்க மக்கள் தெரிவித்துள்ளனர் .
சிங்கள காணி அபகரிப்பு
சமாதான தேவன் என தன்னை அறிமுக படுத்திய ரணில் விக்கிரமசிங்காவின் காலத்தில் ,சிங்கள இனவாத அடிப்படையில் தமிழர் மீது இவ்விதமான நடவடிக்கைகள் நடத்த பட்டு வருகின்றன .
ஆண்டுகளாக தமிழர்கள் அடக்க பட்டு ஒடுக்க பட்டு அவர்களது பூர்வீக குடியேற்றங்கள் சிங்கள இனவாத ஆக்கிரமிப்பு தொடர்ந்த வண்ணம் உள்ளது
பரம்பரை பரம்பரையாக தமிழர் வாழ்ந்த பூமி
பரம்பரை பரம்பரையாக தமிழர் வாழ்ந்த பூமி ,தமது உடமை என தெரிவித்து ,தமிழர்களை அடக்கி ஒடுக்கி வாழும் நிலைக்கு இலங்கை ஆட்சியாளர்கள் செல்கின்றனர் .
சமாதானத்தை ஏற்படுத்துவோம் எனவும் ,ஒன்றித்த இலங்கையில் வாழ்வோம் என தெரிவிக்கும் ஆளும் ஆட்சியாளர்கள் ,தொடராக தமிழ் மக்கள்மீது வன்முறை யை கட்டவிழ்த்து விட்டுள்ள செயல் , மீளவும் ஒரு பேரழிவை நோக்கி இலங்கை செல்ல போகிறது என்பதே காலநிலவரமாக உள்ளது .
பாழடைந்த வீட்டில் சடலம் கண்டுபிடிப்பு
பாழடைந்த வீட்டில் சடலம் கண்டுபிடிப்பு
மட்டக்களப்பு செங்கலடி பகுதியில் பாழடைந்த வீட்டில் சடலம் கண்டுபிடிப்பு சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
கைவிடப்பட்ட பாழடைந்த வீட்டில் சடலம் மீட்க பட்டது தொடர்பாக காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .
மர்மமான முறையில் பாழடைந்த வீட்டில் ஆணின் சடலம் கண்டுபிடிக்க பட்டுள்ள விடயம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
இந்த பாழடைந்த வீட்டுக்குள் இந்த வாலிபர் எவ்வாறு வந்தார் ,அவரை கொலை செய்தது யார் என்ற கேள்வி எழுப்ப பட்டுள்ளது
பொலிஸ் விசாரணைகள் ஆரம்பம்
கொலை தொடர்பான பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
நாள்தோறும் இவ்விதமான படுகொலைகள் அதிகரித்து காணப்படுகின்றன .
இந்த படுகொலைகளின் பின்புலத்தில் உள்ளது யார் என்பதை பொலிஸாரால் கண்டுபிடிக்க பட முடியாத நிலையில் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது .
போதை பாவனை அதிகரித்துள்ள நிலையில் ,வன்முறை ,ஆக்கிரமிப்பு ,விரோத ,பகைமைகள் அதிகரித்து காணப்படும் ,இக்கால கட்டத்தில் ,இவ்வாறாக சடலம் கண்டு பிடிக்க பட்டுள்ளது .
மக்கள் யாரும் அற்ற கைவிட பட்ட நிலையில் பாழடைந்து காணப்பட்ட வீட்டுக்குள் ,இந்த வாலிபர் எவ்வாறு இறந்தார் ..? இவரது சாவின் மர்மம் என்ன ..?கண்டு பிடிக்குமா இலங்கை பொலிஸ் ..?
ஜப்பான் வெளியுறவுஅமைச்சர் இலங்கை வந்தார்
ஜப்பான் வெளியுறவுஅமைச்சர் இலங்கை வந்தார்
ஜப்பான் வெளியுறவுஅமைச்சர் இலங்கை வந்தார் .இலங்கை வந்தடைந்த யோகோ கமிகாவா பிரதமருடன் பேசிட உள்ளார் .
இலங்கை சந்தித்துள்ள பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் நோக்குடன் , ஜப்பான் நடவடிக்கைகள் முன்னெடுக்க படவுள்ளதாக இலங்கை அரச வட்டாரங்கள் ஜப்பான் சந்திப்பு தொடர்பாக தெரிவிக்கின்றன .
பொருளாதாரத்தில் நலிவுற்ற இலங்கைக்கு உதவும் ஜப்பான்
பொருளாதாரத்தில் நலிவுற்று இருக்கும் இலங்கை மக்கள் வாழ்வாதாரத்தை முதன்மை படுத்த ,ஜப்பான் உதவிகளை செய்து வருகிறது .
அவ்விதமான நீண்ட புரிந்துணர்வின் அடைப்படையில் இலங்கை ஜப்பான் பல நடவடிக்கைகளை மேற் கொண்டு .வருகின்றனர் .
இலங்கையில் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் யப்பான் வெளியுறவு அமைச்சர் இலங்கை பயணித்துள்ளது பலவிடயங்களை பேச வைக்கிறது .
சீனாவுக்கு எதிரான ஜப்பான் இலங்கையில்
சீனாவுக்கு எதிரான நிலைப்பாட்டில் ஜப்பான் உள்ளது . சீனாவுடன் இலங்கை கூட்டுறவை வைத்துள்ளது .
இவ்வாறான முரண்பட்ட நிலையில் இலங்கையுடன் பல இணக்கப்பாடுகளை ஏற்படுத்தி ,ஜப்பான் சார்ப்பு நிலையை கட்டி பயணிப்பதை காணமுடிகிறது .
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கா ,பிரதமர் தினேஷ் குணவர்த்தன ,மற்றும் அமைச்சர்களையும் ஜப்பான் வெளியுறவுஅமைச்சர் சந்தித்து கலந்துரையாட உள்ளார் என தெரிவிக்க .பட்டுள்ளது .
அனுமதிப்பத்திரம் இல்லா ஓடும் பஸ்
அனுமதிப்பத்திரம் இல்லா ஓடும் பஸ்
அனுமதிப்பத்திரம் இல்லா ஓடும் பஸ், சட்டவிரோதமான முறையில் பயணிகளை ஏற்றிச் செல்லும் பஸ்களின் சாரதிகளைக் கைது செய்து உத்தரவு .
இவ்வாறான பஸ்களின் சாரதிகளை கைது செய்ய வழக்குத் தொடர தேசிய போக்குவரத்து ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
ஐந்து இலட்சம் ரூபா அபராதம்
இவ்வாறு கைது செய்யப்படும் பஸ் சாரதிகளுக்கு ஐந்து இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்படும் எனவும் அறிவிக்க பட்டுள்ளது .
, அதற்கான வரைவு திட்டம் போக்குவரத்து அமைச்சினால் சட்டவரைஞர் திணைக்களத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
பயணிகள் பெரும்பாலும் வீதி அனுமதிப்பத்திரம் இல்லாத பஸ்களில் ஏற்றிச் செல்லப்படுகிறனர்.
குறிப்பாக, வெள்ளவத்தை மற்றும் மருதானையை அண்மித்த பகுதிகளில் வீதி அனுமதிப்பத்திரம் இல்லாத பஸ்கள் நிறுத்தப்பட்டு சட்டவிரோதமான முறையில் பயணிகள் ஏற்றிச் செல்லப்படுகின்றனர்.
இதுபோன்ற பஸ்களின் சாரதிகள் உடனடியாக கைது செய்யப்படுவதோடு, அவர்கள் மீது வழக்குத் தொடரப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கடலில் வீசப்பட்ட தமிழர் சடலங்கள்
கடலில் வீசப்பட்ட தமிழர் சடலங்கள்
இறுதி போர் கால பகுதியில் கடலில் வீசப்பட்ட தமிழர் சடலங்கள் விடயம் உண்மை என முன்னாள் பாரளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார் .
கைது செய்யப்பட்ட தமிழர்கள் கண்கள் கட்டப்பட்டு கொலை செய்யப்பட்டு கடலில் சடலங்கள் வீசப்பட்டது மறைக்க முடியாத உண்மை என சிவாஜிலிங்கம் இடித்துரைத்துள்ளார் .
கற்கள் கட்ட பட்டு சடலங்கள் கடலில் வீசல்
சடலங்களின் உடல் பாகங்களில் கற்கள் கட்ட பட்டு அந்த தமிழர் சடலங்கள் கடலில் வீசப்பட்ட வரலாறுகள் ,ஆதாரபூர்வமாக வெளியீடு செய்ய பட்டு இருந்தது .
அவ்வாறான மிக பெரும் மனித படுகொலைகள் இடம்பெற்ற பின்னரும் ,இதுவரை ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவையால் தீர்வு காணப்படவில்லை .
இலங்கை புரிந்த மனித படுகொலைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபை நடவடிக்கை மேற்கொள்ளாதது ஏன் என்ற கேள்வி எழுப்ப பட்டுள்ளது .
33 புதை குழிகள் கண்டு பிடிப்பு
தமிழர் தாயாக பகுதிகளில் இதுவரை 33 க்கு மேற்பட்ட மனித புதைகுழிகள் கண்டு பிடிக்க பட்டுள்ளன .
அந்த மனித புதைகுழிகளுக்குள் கண்டு பிடிக்க பட்ட சடலங்கள் ,உடல் பாகங்கள் சிங்கள அரச படைகளினால் அழிக்க பட்டதாக சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார் .
ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவை
ஐக்கிய நாடுகள் மனித உரிமை அவையில் இலங்கை விசாரணைக்கு உள்ளாக்க படும் திடமான பொறி முறை உருவாக்க பட்டுள்ளதாக ,சிவாஜிலிங்கம் குறிப்பிடுகின்றார் .
சர்வதேச நீதிமன்றில் இலங்கை பாரப்படுத்த படலாம் என்பதால் ,மனித புதைகுழிகளும் ,அங்கிருந்த தமிழர் சடலங்களும் காணமால் ஆக்கப்பட்டுள்ளன என தெரிவித்து பரபரப்பை கிளப்பியுள்ளார் சிவாஜிலிங்கம் .
சிங்கள இராணுவத்தை காப்பாற்ற புதைகுழிகள் அழிப்பு
தமது மக்களையும் ,இராணுவத்தையும் காப்பாற்றி கொள்ளும் நோக்கில் இவை திட்டமிட பட்டு செயல்முறைவடிவம் கொடுக்க பட்டு நகர்த்த பட்டுள்ளது .
இறுதி போர் முடிவடைந்து 14 ஆண்டுகள் கடந்த பொழுதும் ,இதுவரை தமிழர்களுக்கான தீர்வு ஏதும் கிட்டவில்லை .
கடலில் ,வீதிகள்,கடல் கரைகளில் ,நீர் ஏரிகளில் குண்டு வீசி கொலை செய்ய பட்ட தமிழர்கள் ,காணாமல் போன பட்டியலில் உள்ளடக்க பட்டனர் .
மனித புதைகுழி தடயங்கள் அழிப்பு
அவர்கள் புதைக்க பட்ட ,அல்லது பலியான பகுதிகளில் சடலங்கள் தோண்டி எடுக்க பட்டு ,அந்த தடயங்கள் அழிக்க பட்டுள்ளன என்கின்ற விடயத்தை சிவாஜிலிங்கம் மிக தெளிவாக எடுத்துரைத்துள்ளார் .
இந்த விடயங்கள் ஐக்கிய நாடுகள் சபையில் மிக தெளிவாக பாரப்படுத்த பட்டுள்ளதாகவும் ,தீர்வு ஒன்று கிடைக்க பெறும் என்ற சிறு நம்பிக்கையை சிவாஜிலிங்கம் வெளியிட்டுள்ளார் .
சிங்ககொடியுடன் நடப்பவருக்கு பொலிஸ் பாதுகாப்பு
சிங்ககொடியுடன் நடப்பவருக்கு பொலிஸ் பாதுகாப்பு
சிங்ககொடியுடன் நடப்பவருக்கு பொலிஸ் பாதுகாப்பு.இலங்கையை சுற்றி நடக்கும் வாலிபருக்கு பொலிஸ் பாதுகாப்புடன் சாதனை நிகழ்வு .
சிங்கள சகோதர மொழி நண்பரான செல்டன் பெராரோ ஒருவர் ,சாதனையையும் ஒற்றுமையும் நிலை நாட்ட ,இலங்கை தேசிய கொடியை தாங்கி பிடித்தவாறு நடை பயில்கின்றார் .
இவரது இந்த சாதனை நல்லிணக்க நிகழ்வானது அம்பாறை மத்திய முகாமில் இருந்து ஆரம்பிக்க பட்டுள்ளது .
சாதனை படைக்க நடை பயணம்
52 நாட்கள் திட்டமிட்ட படி இவர் எங்கு தொடங்கியதோ அங்கு சென்றடைவார் .
இவ்வாறு இவரது நடைபயணமானது 12 நாட்கள் கழிந்து யாழ்ப்பாணம் வந்தடைந்தது . இவரை கண்ணுற்ற மக்கள் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர் .
இலங்கை தேசிய கொடியை பிடித்து செல்கின்ற பொழுது ,இவருக்கு ஏதும் நேர்ந்து விடலாம் என்பதால் போலீசார் பாதுகாப்பு வழங்க இவர் நடந்து செல்கின்றார் . .
இவரது இந்த நடவடிக்கையானது இலங்கை சிங்கள தேசம் என்பதை பறை சாற்ற இவர் தேசிய கொடியினை பிடித்து நடந்து செல்கிறார் .
சிங்கள மக்கள் மொழி இனம் என்கின்ற அடிப்படையில் ,அவர் தனது தாய் நாட்டு கொடியை தாங்கி பிடித்து நடந்து செல்கிறார் .
புலிக்கொடி பிடித்து தமிழர் நடந்திட அனுமதி உண்டா ..?
ஆனால் இதே போன்று புலிக்கொடியை பிடித்து எம் தமிழரை இலங்கை முழுவதும் கடந்து செல்ல இனவாத சிங்களவர்கள் அனுமதி அளிப்பார்களா..? ,அரசு பொலிஸ் அனுமதி அளிக்குமா என்பதே மக்கள் கேள்வியாக உள்ளது .
எனினும் இவர் தன்னை வருத்தி சாதனை நிலை நாட்ட நடக்கும் ,இந்த பயணத்தை ,இன பேதம் கடந்து வரவேற்று வாழ்த்தி அனுப்பி வையுங்கள் .
தமிழ் உரையாடி அசத்திய சிங்கள சகோதரர்
எம் தமிழை பேசி யூடுப்பர் ஒருவருக்கு இவர் வழங்கிய செவ்வி அளப்பெரியது .எம் மொழியை முயன்றவரை அவர் அதிலேயே உரையாடி, தனது நடை பயண நோக்கத்தை விளங்க படுத்தினார் .
அதற்கு தலை சாய்த்து நன்றிகள் தெரிவிப்போம் ,மனிதத்தோடு அணுகி சகோதர மொழி நண்பரை வாழ்த்தி அனுப்புங்கள் தமிழர்களே .
தமிழர்கள் அறம் நிறைந்தவர்கள் என்பதை இதன் பொழுது தெரிய படுத்துங்கள் மக்களே .

















































