சிங்ககொடியுடன் நடப்பவருக்கு பொலிஸ் பாதுகாப்பு
சிங்ககொடியுடன் நடப்பவருக்கு பொலிஸ் பாதுகாப்பு.இலங்கையை சுற்றி நடக்கும் வாலிபருக்கு பொலிஸ் பாதுகாப்புடன் சாதனை நிகழ்வு .
சிங்கள சகோதர மொழி நண்பரான செல்டன் பெராரோ ஒருவர் ,சாதனையையும் ஒற்றுமையும் நிலை நாட்ட ,இலங்கை தேசிய கொடியை தாங்கி பிடித்தவாறு நடை பயில்கின்றார் .
இவரது இந்த சாதனை நல்லிணக்க நிகழ்வானது அம்பாறை மத்திய முகாமில் இருந்து ஆரம்பிக்க பட்டுள்ளது .
சாதனை படைக்க நடை பயணம்
52 நாட்கள் திட்டமிட்ட படி இவர் எங்கு தொடங்கியதோ அங்கு சென்றடைவார் .
இவ்வாறு இவரது நடைபயணமானது 12 நாட்கள் கழிந்து யாழ்ப்பாணம் வந்தடைந்தது . இவரை கண்ணுற்ற மக்கள் இவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர் .
இலங்கை தேசிய கொடியை பிடித்து செல்கின்ற பொழுது ,இவருக்கு ஏதும் நேர்ந்து விடலாம் என்பதால் போலீசார் பாதுகாப்பு வழங்க இவர் நடந்து செல்கின்றார் . .
இவரது இந்த நடவடிக்கையானது இலங்கை சிங்கள தேசம் என்பதை பறை சாற்ற இவர் தேசிய கொடியினை பிடித்து நடந்து செல்கிறார் .
சிங்கள மக்கள் மொழி இனம் என்கின்ற அடிப்படையில் ,அவர் தனது தாய் நாட்டு கொடியை தாங்கி பிடித்து நடந்து செல்கிறார் .
புலிக்கொடி பிடித்து தமிழர் நடந்திட அனுமதி உண்டா ..?
ஆனால் இதே போன்று புலிக்கொடியை பிடித்து எம் தமிழரை இலங்கை முழுவதும் கடந்து செல்ல இனவாத சிங்களவர்கள் அனுமதி அளிப்பார்களா..? ,அரசு பொலிஸ் அனுமதி அளிக்குமா என்பதே மக்கள் கேள்வியாக உள்ளது .
எனினும் இவர் தன்னை வருத்தி சாதனை நிலை நாட்ட நடக்கும் ,இந்த பயணத்தை ,இன பேதம் கடந்து வரவேற்று வாழ்த்தி அனுப்பி வையுங்கள் .
தமிழ் உரையாடி அசத்திய சிங்கள சகோதரர்
எம் தமிழை பேசி யூடுப்பர் ஒருவருக்கு இவர் வழங்கிய செவ்வி அளப்பெரியது .எம் மொழியை முயன்றவரை அவர் அதிலேயே உரையாடி, தனது நடை பயண நோக்கத்தை விளங்க படுத்தினார் .
அதற்கு தலை சாய்த்து நன்றிகள் தெரிவிப்போம் ,மனிதத்தோடு அணுகி சகோதர மொழி நண்பரை வாழ்த்தி அனுப்புங்கள் தமிழர்களே .
தமிழர்கள் அறம் நிறைந்தவர்கள் என்பதை இதன் பொழுது தெரிய படுத்துங்கள் மக்களே .















