Tag: கொடூரம்
பெண்ணை தாக்கி தலை முடியை வெட்டிய கொடூரம்
பெண்ணை தாக்கி தலை முடியை வெட்டிய கொடூரம்
பெண்ணை தாக்கி தலை முடியை வெட்டிய கொடூரம் ,பெண் தாக்கப்பட்டார், தலைமுடி வலுக்கட்டாயமாக வெட்டப்பட்டது: ஐவர் கைது
ராகம பகுதியில் உள்ள ஒரு கடையில் பெண்
ராகம பகுதியில் உள்ள ஒரு கடையில் பெண் தாக்கப்பட்டதோடு, அவரது தலைமுடி வலுக்கட்டாயமாக வெட்டப்பட்ட சம்பவம் தொடர்பாக, முக்கிய
சந்தேக நபர் உட்பட ஐந்து சந்தேக நபர்களை ராகம பொலிசார் காவலில் எடுத்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தின் காணொளிக் காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவலாகப் பரவியதைத் தொடர்ந்து பொலிசார் விசாரணையைத் தொடங்கினர்.
அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வாக்குமூலம் பதிவு செய்து, மருத்துவப் பரிசோதனைக்காக அவரை ராகம போதனா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து, ராகமவைச் சேர்ந்த 27 வயதான முக்கிய சந்தேக நபர், 20, 21, 22 மற்றும் 23 வயதுடைய மேலும் நான்கு நபர்களுடன் கைது செய்யப்பட்டார்.
சந்தேக நபர்கள் ராஜங்கனை, கடவத்தை, ராகம, திருகோணமலை மற்றும் சின்னவர ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அனைத்து சந்தேக நபர்களும் 2026 ஏப்ரல் 18 அன்று வெலிசரா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.
- மே தினக் கொண்டாட்டங்களுக்காக சிறப்புப் பொலிஸ் பாதுகாப்பு

- 2 5 மில்லியன் டாலர் மோசடி நிதி அமைச்சக அதிகாரி படுகொலை

- அமெரிக்கா தாக்குதலை ஆரம்பித்தால் மோசமாக தாக்குவோம் ஈரான்

- மியான்மரின் முன்னாள் தலைவர் ஆங் சான் சூ கீ வீட்டுக் காவலுக்கு மாற்றப்படவுள்ளார்

- நாம் மக்களை காப்பாத்துவோம் ஊழல் அரசின் பிரதமர்

- இஸ்ரேலினால் தடுத்து வைக்கப்பட்ட காசா கப்பல் குழு

- இங்கிலாந்தின் பயங்கரவாத அச்சுறுத்தல் நிலை ‘கடுமையானது

- மடம்பிட்டியவில் ஐஸ் மற்றும் ஹெராயினுடன் 21 வயது இளைஞர் கைது

- போர் காரணமாக வாரத்திற்கு 10 பில்லியன் உணவுகள் ஆபத்தில்

- மே தினச் செய்தியில் உருட்டிய அனுரா

- ஈரான் மீதான புதிய வியூகம்

- காசாவுக்குச் சென்றுகொண்டிருந்த 400 ஆர்வலர்களை ஏற்றிச் சென்ற 50 படகுகளை இஸ்ரேலிய கடற்படை கைப்பற்றியது

பிறந்த குழந்தை வடிகாணில் வீசப்பட்ட கொடூரம்
பிறந்த குழந்தை வடிகாணில் வீசப்பட்ட கொடூரம்
பிறந்த குழந்தை வடிகாணில் வீசப்பட்ட கொடூரம் ,மாத்தளை, பிடகந்த தோட்டத்தில் உள்ள பழைய தேயிலைத் தொழிற்சாலைக்கு அருகிலுள்ள வடிகாணில், பிறந்த சிசு ஒன்று வீசப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு
கந்தேனுவர பொலிஸ் நிலைய அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சிசு மீட்கப்பட்டது.
சிசு, மாத்தளை பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சிசுவின் பெற்றோர்கள்
சிசுவின் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் குறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை.
கந்தேனுவர பொலிஸார் மேலதிக விசாரணைகளைத் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்
யாழில் சிறுமியை கட்டி வைத்து கொடூரம்
யாழில் சிறுமியை கட்டி வைத்து கொடூரம்
யாழில் சிறுமியை கட்டி வைத்து கொடூரம் ,வடமராட்சி கிழக்கு, குடத்தனை பொற்பதியில் 14 வயது சிறுமி ஒருவரை மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கிய சம்பவம் தொடர்பாக, தேவையான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு
பருத்தித்துறை சட்ட வைத்திய அதிகாரி, மருதங்கேணி பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
குறித்த பகுதியில் வசிக்கும் 14 வயது சிறுமி ஒருவர், நேற்று முன்தினம் (23) மாலை, அயலில் உள்ள வர்த்தக நிலையத்திற்கு பொருட்கள் வாங்கச் சென்றுள்ளார்.
இதன்போது, இனிப்பு வகையை கையாடியதாகக் கூறி, கடையின் உரிமையாளரான ஒரு பெண், சிறுமியை மின்கம்பத்தில் கட்டி வைத்து தாக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் உடல் காயங்களுக்கு உள்ளான சிறுமி, அன்று இரவே பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்ட பருத்தித்துறை சட்ட வைத்திய அதிகாரி, சிறுமியின் உடலில் காயங்கள் இருப்பதைக் கண்டறிந்து, தேவையான சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு, வைத்தியசாலையில் உள்ள பருத்தித்துறை பொலிஸார் மூலம் மருதங்கேணி பொலிஸாருக்கு அறிவுறுத்தியுள்ளார்.
மருதங்கேணி பொலிஸார் இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு, பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிறுமியிடம் வாக்குமூலம் பெற்றபோது, அவர் மின்கம்பத்தில் கட்டி வைக்கப்பட்டு தாக்கப்பட்டதாக உறுதிப்படுத்தியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, தாக்கியதாகக் கூறப்படும் பெண்ணின் வீட்டிற்கு பொலிஸார் சென்றபோது, வீடு பூட்டியிருந்ததால், தொலைபேசி மூலம் அவருக்கு அறிவித்தல் வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இச்சம்பவம் தொடர்பாக அப்பகுதியைச் சேர்ந்த பொது அமைப்பு ஒன்று, இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண அலுவலகத்தில் தொலைபேசி வழியாக முறையிட்டுள்ளது
போதைப்பொருளால் சிறுவனுக்கு நடந்துள்ள கொடூரம்
போதைப்பொருளால் சிறுவனுக்கு நடந்துள்ள கொடூரம்
போதைப்பொருளால் சிறுவனுக்கு நடந்துள்ள கொடூரம் ,குழந்தைகளுக்காக உயிரைத் தியாகம் செய்யும் உன்னத தந்தைகளுக்கு மத்தியில் அவர்களின் பெயரைக் கூட கேவலப்படுத்தும் சில தந்தைகளும் இருக்கிறார்கள்.
போதைப்பொருள் வாங்க பணம் கேட்டு மனைவியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஏழு வயது மகனை தரையில் அடித்து பலத்த காயம் ஏற்படுத்திய அத்தகைய தந்தை பற்றிய தகவல் ஒன்றே வௌியாகியுள்ளது.
சில நாட்களுக்கு முன்பு, தனது ஏழு வயது மகனை தனது கணவர் தரையில் அடித்ததாக பெண் ஒருவர் கிராண்ட்பாஸ் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.
கணவர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமை
தனது கணவர் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர் எனவும், போதைப்பொருள் வாங்க பணம் கேட்டு தன்னையும் பிள்ளையையும் தொடர்ந்து துன்புறுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சம்பவத்தன்று தனது கணவர் பணம் கேட்டு தன்னை கொடூரமாக தாக்கியதாகவும், அருகில் வந்த தனது 7 வயது மகனை தூக்கி தரையில் கொடூரமாக தாக்கியதாகவும் அந்த பெண் பொலிஸாரிடம் கூறியுள்ளார்.
பொலிஸ் கைது
சம்பவம் தொடர்பில் உடனடியாகச் செயற்பட்ட பொலிஸார், சந்தேக நபரைக் கைது செய்ததுடன், தரையில் விழுந்து படுகாயமடைந்த சிறுவன் கொழும்பு லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.
சந்தேக நபர் போதைப்பொருள் பாவனைக்காக பல சந்தர்ப்பங்களில் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட சந்தேக நபரை எதிர்வரும் 16ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
Featured
தாலிபான்களினால் அரங்கேறும் கொடூரம் கதறும் பெண்கள்
தாலிபான்களினால் அரங்கேறும் கொடூரம் கதறும் பெண்கள்
தலிபான்களின் ஆட்சியில் ஆப்கனிஸ்தான் மக்கள் பெரிதும் துன்பங்களை அனுபவிக்க ஆரம்பித்துள்ளனர் .
மதத்தின் பெயரால் பல இஸ்லாமிய தண்டனைகள் அமுலுக்கு உட்படுத்த பட்டுள்ளது .
பிரம்படி ,கல்லால் அடித்து கொலை செய்தல் என்பன மிக முக்கிய சட்டங்களாக அமூல் படுத்த பட்டுள்ளது .
அவ்விதம் டசினுக்கு மேற்பட்டவர்கள் மக்கள் ஒன்றாக கூடும் இடத்தில வைத்து பிரம்படி நடத்த பட்டுள்ளது .
தலிபான்களின் ஆட்சியில் ஆப்கனிஸ்தான் மக்கள் பெரிதும் துன்பங்களை அனுபவிக்க ஆரம்பித்துள்ளனர்
தலிபான்கள் ஆட்சியில் நீதி குழிதோண்டி புதைக்க பட்டுள்ளது .நீதிமன்றங்கள் தலையாட்டும் பொம்மைகளாக மாற்றம் பெற்றுள்ளன .
இஸ்லாமிய சட்டங்கள் கடுமையாக்க பட்டுள்ளன .
பெண்கள் முழுவதுதுமாக உடலை மறைத்து செல்ல வேண்டும் .பொது இடங்களில் ஒன்று கூட கூடாது என்கின்ற ,கடும் மதவாத சட்டங்களினால் பெண்கள் அந்த நாட்டில் வாழ்வதற்கே அஞ்சி வருகின்றனர் .
தலிபான்கள் எப்பொழுது அந்த நாட்டில் இருந்து விரட்டியயடிக்க படுவார்கள் என்கின்ற மனோ நிலையில், 18 மத காலத்திற்குள் மக்கள் தள்ள பட்டுள்ளனர் .
இலங்கையில் மகிந்தவின் அடக்குமுறைக்கு எதிராக , மக்கள் வெடித்து எழுந்தது போல ,தாலிபான்களும் மக்களினால் விரட்டியடிக்க படும் ,காலம் உருவாகலாம் என்பதே நிலவரமாக உள்ளது .
























