Posted in Uncategorized

நடிகைக்கு ஆபாச மெசேஜ் அனுப்பி தொல்லை கொடுத்த மர்ம நபர்

நடிகைக்கு ஆபாச மெசேஜ் அனுப்பி தொல்லை கொடுத்த மர்ம நபர்

நடிகை சனம் ஷெட்டிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பி தொல்லை கொடுத்த நபர் யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆபாச மெசேஜ் அனுப்பி தொல்லை கொடுத்த மர்ம நபர் – சைபர் கிரைமில் நடிகை சனம் ஷெட்டி புகார்
சனம் ஷெட்டி


தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் 20க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள நடிகை சனம் ஷெட்டி, பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் கலந்து கொண்டு பிரபலமானார்.

சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் சனம் ஷெட்டி, அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி, அதன் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.

சனம் ஷெட்டி

இந்நிலையில் இவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒருவர் தொடர்ந்து ஆபாச மெசேஜ் அனுப்பி வந்துள்ளார். இதுகுறித்து நடிகை சனம் ஷெட்டி திருவான்மியூர் காவல் நிலையத்தில், ‘தனக்கு வந்த

ஆபாச மெசேஜ் அடங்கிய ஆதாரங்களுடன் புகார் அளித்தார். அதன்பேரில் ‘சைபர் கிரைம்’ போலீசார் வழக்குப்பதிவு செய்து, நடிகை சனம் ஷெட்டிக்கு ஆபாச மெசேஜ் அனுப்பி தொல்லை கொடுத்த நபர் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Posted in Uncategorized

    50 நகரங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள தாலிபான்கள் – வீழ்ந்தது இராணுவ முகாம்

    50 நகரங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள தாலிபான்கள் – வீழ்ந்தது இராணுவ முகாம்

    ஆப்காணில் அமெரிக்கா இராணுவம் வெளியேறிய நிலையில் தற்பொழுது தாலிபான்கள் தமது கட்டுப்பாட்டுக்குள் ஐம்பது கிராமங்களை கொண்டு வந்துள்ளனர்

    இந்த கிராமங்களில் தமது பாதுகாப்பை பலப்படுத்தியவாறு தலிபான் போராளிகள் முன்னேறிய வண்ணம் உள்ளனர்

    தற்போது இராணுவத்தின் மிக முக்கியமுகாம் ஒன்று இவர்கள் வசம் வீழ்ந்துள்ளது ,கடந்த

    மூன்றுநாட்கள் தாக்குதலில் மட்டும் 90 தாலிபான்கள் படுகொலை செய்ய பட்டுள்ளதாக அரசு அறிவித்துள்ளமை குறிப்பிட தக்கது

      Posted in Uncategorized

      இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிராக லண்டனில் ஆர்ப்பாட்டம்

      இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிராக லண்டனில் ஆர்ப்பாட்டம்

      இலங்கை கிரிக்கெட் அணிக்கு எதிராக லண்டனில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

      லண்டன் ஓவல் மைதானத்திற்கு முன்பாக புலம்பெயர் தமிழ் மக்களின் ‘சுதந்திரத்திற்கான பறைக் குரல்’ அமைப்பின் ஏற்பாட்டில் கடந்த வியாழக்கிழமை குறித்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.

      குறித்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் இனப்படுகொலையை மறைக்க சிறிலங்காவை அனுமதிக்க வேண்டாம், இலங்கை கிரிக்கெட் அணியை புறக்கணிப்போம் என கோசம் எழுப்பியதுடன்,

      சுலோக அட்டைகளையும் ஏந்தியிருந்தனர். குறித்த ஆர்ப்பாட்டத்தில் புலம்பெயர் அமைப்புக்களின் செயற்பாட்டளர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

      நிருபர் – அரசன்

        Posted in Uncategorized

        இலங்கையில் மரங்களில் தொங்கும் மனித சடலங்கள் – நடப்பது என்ன ..?

        இலங்கையில் மரங்களில் தொங்கும் மனித சடலங்கள் – நடப்பது என்ன ..?

        இலங்கையில் மரங்களில் தொங்கும் மனித சடலங்கள் – நடப்பது என்ன ..?


        வவுனியா, செட்டிகுளம், கணேசபுரம் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் இளம் குடும்ப தலைவர் ஒருவர் நேற்று (03) மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

        வவுனியா, செட்டிகுளம், கணேசபுரம் பகுதியில் வசித்து வந்த 20 வயது இளம் குடும்பஸ்தர் ஒருவர் வீட்டில் எவரும் இல்லாத நிலையில் வீட்டில் தொங்கிய நிலையில் காணப்பட்டுள்ளார்.

        வீட்டிற்கு வந்த தாயார் குறித்த இளைஞன் தூக்கில் தொங்குவதை அவதானித்து, அயலவர்களின் உதவியுடன் குறித்த இளம் குடும்ப தலைவரை மீடடு நோயாளர் காவு வண்டியின் உதவியுடன்

        செட்டிகுளம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்த போதும் குறித்த நபர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு முன்னரே மரணமடைந்துள்ளார்.

        குறித்த சம்பவம் தொடர்பில் பறயனாலங்குளம் பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

          Posted in Uncategorized

          வீழ்ந்து நொறுங்கிய இராணுவ விமானம் -17 பேர் மரணம்

          வீழ்ந்து நொறுங்கிய இராணுவ விமானம் -17 பேர் மரணம்

          பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு சொந்தமான துருப்பி காவி சரக்கு விமானம் ஒன்று திடீரென வீழ்ந்து நொறுங்கியது ,இதன்போது அந்த விமானத்தில் 93 இராணுவத்தினர் இருந்துள்ளனர்

          மூன்று விமானிகளுடன் புறப்பட்டு சென்ற இந்த விமானம் திடீரென வீழ்ந்து நொறுங்கியதில் பதினேழு பேர் மரணமாகியுள்ளனர்

          ஏனையவர்கள் காப்பாற்ற பட்டுள்ளனர்

          இதில்; மூன்று இராணுவ வண்டிகள் ,ஐந்து சிப்பந்திகள் உள்ளிட்டவர்கள் பயணித்துள்ளனர்

          மேற்படி விபத்து தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

            Posted in Uncategorized உலக செய்திகள்

            திமிங்கலம் அருகில் மனிதர் – வைரலாகும் காணொளி

            திமிங்கலம் அருகில் மனிதர் – வைரலாகும் காணொளி

            அவுஸ்ரேலியாவின் கடல் பகுதியில் மனிதர் ஒருவர் நீச்சலில் ஈடுபட்டார் ,அப்பொழுது அவரது

            அருகில் திமிங்கலம் ஒன்று தன் குட்டியுடன் நெருங்கியது ,மேற்படி காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

            அச்சம் இன்றி மிக அருகில் மனிதர் நடமாடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

              Posted in Uncategorized

              எதிரி கப்பல்கள் மீது ரசியா போர் விமானங்கள் அகோர தாக்குதல்

              எதிரி கப்பல்கள் மீது ரசியா போர் விமானங்கள் அகோர தாக்குதல்

              கருங் கடல் பகுதியில் ரசியாவின் முதல் தர பத்து வகையான சண்டை விமானங்கள் எதிரியின் கப்பல்கள் மீது எவ்விதம் தாக்குதல் நடத்த வேண்டும் என்கின்ற போர் ஒத்திகையில் ஈடுபட்டன

              அமெரிக்கா நடத்திய போர் ஒத்திகைக்கு பதிலடியாக ரஷியாவும் இதனை நடத்தி காண் பித்துள்ளதுடன் ,புதுவகையான ஆயுதங்களையும் இதில் பயன் படுத்தியுள்ளது ,

              இரண்டாம் உலக போரில் ஜெர்மனிக்குள் நுழைந்தது ,ரசியாவின் செம்படைகள் ,அத்துடன் ஹிட்லர் கதை முடிவுக்கு வந்தது

              அவ்வேளை பிரிட்டன் ,அமெரிக்காவினால் கூட ரசியாவை போல ஹிட்லரின் கோட்டைக்குள் புகுந்திட முயவில்லை என்பது வரலாற்று சான்றுகளாக உள்ள நிலையில்

              இந்த போர ஒத்திகை இடம்பெருகின்றமை குறிப்பிட தக்கது

                Posted in Uncategorized

                இந்திய கடலில் வைத்து இஸ்ரேல் சரக்கு கப்பல் மீது ஈரான் தாக்குதல்

                இந்திய கடலில் வைத்து இஸ்ரேல் சரக்கு கப்பல் மீது ஈரான் தாக்குதல்

                வட இந்திய கடல் பகுதியில் பயணித்து கொண்டிருந்த இஸ்ரேல் நாட்டுக்கு சொந்தமான சரக்கு

                கப்பல் ஒன்றின் மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளது ,இந்த தாக்குதலில் அந்த கப்பல் பற்றி எரிந்த வண்ணம் உள்ளது


                ஈரானின் திட்டமிடப்பட்ட தாக்குதலாக இது பார்க்க படுகிறது ,

                ஈரானை தொடர்ந்து வலிந்து தகத்தலுக்கு இஸ்ரேல் உருவாக்கி வரும் நிலையில் ,தொடர் கடல் வழி தாக்குதலை ஈரான் தொடுத்துள்ளது

                இதற்கு பதிலடியாக இஸ்ரேலும் ஈரான் கப்பல்கள் மீது தாக்குதல் தொடுக்கலாம் என் ஏதிர் பார்க்க

                படுகிறது ,ஈரானின் புதிய அதிபர் தெரிவு செய்ய பட்ட முதலாவது கப்பல் தாக்குதல் இதுவாக பார்க்க படுகிறது

                  Posted in Uncategorized இலங்கை செய்திகள்

                  ஆடம்பர பொருட்களுக்கு இலங்கையில் தடை

                  ஆடம்பர பொருட்களுக்கு இலங்கையில் தடை

                  இலங்கையில் ஆடம்பர பொருட்களுக்கு ஆளும் கோட்டா அரசு தடை விதிக்க உள்ளதாக தெரிவிக்க படுகிறது ,.


                  இலங்கையின் வெளிநாட்டு நாணயத்தை நிலை நிறுத்தும் முகமாகவும் ,இலங்கையின்

                  பொருளாதாரத்தை முன் நிறுத்தவும் இந்த தடை ,அல்லது கட்டுப்பாடு விதிக்க படவுள்ளதாக மத்தியவங்கி தெரிவித்துள்ளது

                    Posted in Uncategorized

                    சுட்டெரிக்கும் வெயில் -கனடாவில் 719 பேர் மரணம்

                    சுட்டெரிக்கும் வெயில் -கனடாவில் 719 பேர் மரணம்

                    கனடாவில் என்றும் இல்லாதவாறு தற்போது அதிக வெப்பம் நிலவி வருகிறது ,இந்த வெப்பத்தின்

                    அகோரத்தில் சிக்கி ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 719 பேர் பலியாகியுள்ளனர்


                    இந்த வெப்பம் 49 டிகிரிக்கு மேலாக உறைந்துள்ளமை குறிப்பிட தக்கது

                      Posted in Uncategorized

                      ஆபத்தான நிலையில் நடிகை சரண்யா சசி

                      ஆபத்தான நிலையில் நடிகை சரண்யா சசி

                      தமிழ் மற்றும் மலையாள படங்களில் நடித்து வந்த நடிகை சரண்யா சசி கொரோனா தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

                      கவலைக்கிடமான நிலையில் நடிகை சரண்யா சசி
                      சரண்யா சசி


                      தமிழில் பச்சை என்கிற காத்து படத்தில் நடித்தவர் சரண்யா சசி. இவர் மலையாளத்தில் மோகன்லாலின் சோட்டா மும்பை, தலப்பாவு, பாம்பே மார்ச் 12, மரியா காலிப்பினலு உள்பட பல

                      படங்களில் நடித்து இருக்கிறார். தமிழ், மலையாளத்தில் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

                      சரண்யா சசிக்கு சில வருடங்களுக்கு முன்பு மூளையில் கட்டி ஏற்பட்டது. இதற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதுவரை 11 அறுவை சிகிச்சை செய்துள்ள சரண்யா சசிக்கு மலையாள நடிகர், நடிகைகள் பண உதவி செய்து வருகிறார்கள்.

                      சரண்யா சசி

                      இந்தநிலையில் சரண்யா சசிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து திருவனந்தபுரத்தில் உள்ள தனியார்

                      ஆஸ்பத்திரியில் கடந்த மே மாதம் 23-ந்தேதி அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

                      இந்தநிலையில் சரண்யா சசியின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது என்றும் செயற்கை சுவாச கருவி பொருத்தப்பட்டு உள்ளது என்றும் அவரது தோழியும் மலையாள நடிகையுமான சீமா

                      ஜி.நாயர் தெரிவித்து உள்ளார். சரண்யா சசிக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என்றும் அவர் கூறியுள்ளார்

                        Posted in Uncategorized

                        ஆயுத தாரி – மக்கள் மீது துப்பாக்கி சூடு – 7 பேர் காயம்

                        ஆயுத தாரி – மக்கள் மீது துப்பாக்கி சூடு – 7 பேர் காயம்

                        அமெரிக்கா சிக்காக்கோ பகுதியில் மர்ம ஆயுத தாரி ஒருவர் மக்கள் மீது திடீர் துப்பாக்கி சூட்டு தாக்குதலை நடத்தினார்

                        இதில் ஒருவயது மற்றும் ஒன்பது வயது சிறுவர்கள் தலையில் சூடு நடத்த பட்டுள்ளது ,இவர்கள் இருவரும் மிக ஆபத்தான நிலையில் உயிருக்கு போராடிய வண்ணம் உள்ளனர் .

                        அது தவிர மேலும் ஏழுபேர் காயங்களுக்கு உள்ளான நிலையில் நலமுடன் உள்ளதாக போலீசார்

                        தெரிவித்துள்ளனர் ,மேற்படி சூட்டு சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

                          Posted in Uncategorized

                          கடலுக்குள் தரை இறங்கிய சரக்கு விமானம்


                          கடலுக்குள் தரை இறங்கிய சரக்கு விமானம்

                          வானில் பறந்து கொண்டிருந்த சரக்கு விமானம் ஒன்று திடீரென இயந்திரத்தில் ஏற்பட்ட கோளாறை அடுத்து


                          Oahu, Hawaii கடல் பகுதியில் தரை இறக்க பட்டது ,இதில் விமானி ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் மீட்க பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்

                          மேற்படிசி விமானத்தை மீட்கும் பணியில் கடலோர காவல் படையினர் விரைந்து செயல் பட்டு வருகின்றனர்

                          மேற்படி விபத்து தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

                            Posted in Uncategorized

                            எரியும் கடல் – நடந்தது என்ன ..? VIDEO

                            எரியும் கடல் – நடந்தது என்ன ..?

                            Gulf of Mexico நாடுகளுக்கு இடையில் கடலுக்கு அடியால் எடுத்து செல்ல படும் எரிவாயு குழாய்

                            வெடித்து தீ பற்றியதில் அந்த கடல் பகுதி எரிந்த வண்ணம் உள்ளது ,அதாவது நீருக்கு மேல் தீ பற்றி பிடித்த படி எரியும் கட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது

                            மேற்படி தீயினை கட்டு படுத்தும் முயற்சியில் மீட்பு படைகள் ஈடுபட்டுள்ளன

                            CLICK HERE FULL VIDEO

                            https://www.youtube.com/watch?v=ab2IwZe3O8c
                              Posted in Uncategorized

                              இந்தியாவுக்கு 36 விமான விற்பனை – மோசடி – விசாரணை ஆரம்பம்

                              இந்தியாவுக்கு 36 விமான விற்பனை – மோசடி – விசாரணை ஆரம்பம்

                              பிரான்ஸ் நாட்டில் தயாரிக்க படும் அதி சண்டை விமானங்களான Rafale fighter jets விற்பனை 2006 ஆம் ஆண்டு இடம்பெற்றது

                              ,இதன் பொழுது பல மில்லியன் மோசடி இடம்பெற்றுள்ளதாக கூறி தற்போது நீதிமன்ற விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளது

                              இந்த கால பகுதியில் இந்தியா முப்பத்தி ஆறு விமானங்களை வாங்கி குவித்தது ,அந்த விமான விற்பனை தொடர்பில் இந்த விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

                                Posted in Uncategorized

                                அமெரிக்காவில் 200 பிரபல நிறுவனங்கள் மீது சைபர் தாக்குதல்

                                உலக

                                அமெரிக்காவில் 200 பிரபல நிறுவனங்கள் மீது சைபர் தாக்குதல்

                                அமெரிக்காவின் முக முக்கிய இருநூறு நிறுவனங்கள் மீது சபைர் தாக்குதல் நடத்த பட்டுள்ளது

                                இணைய கைக்கர்கள் அவர்களின் கணணிக்குள் புகுந்து இந்த திடீர் தாக்குதலை நடத்தியுள்ளனர்


                                இதனால் பல மில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது

                                IT and security management services to small- and medium-sized businesses

                                  Posted in Uncategorized

                                  யப்பானில் மண்சரிவு – 19 பேர் மாயம் – இடிந்த வீடுகள்

                                  யப்பானில் மண்சரிவு – 19 பேர் மாயம் – இடிந்த வீடுகள்

                                  யப்பானில் மண்சரிவு – 19 பேர் மாயம் – இடிந்த வீடுகள்

                                  ஜப்பான் தலைநகர் மேற்கு டக்கியோ பகுதியில் ஏற்பட்ட திடீர் நில நடுக்கம் காரணமாக வீடுகள் இடிந்து வீழ்ந்தன

                                  இதன் பொழுது பத்தொன்பது பேர் இதுவரை காணாமல் போயுள்ளனர் , .இவாறு காணாமல்

                                  போனவர்களை தேடும் பணி தொடர்ந்து இடம்பெற்று வருகிறது

                                    Posted in Uncategorized

                                    யூரோ கோப்பை – ஸ்பெயின், இத்தாலி அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின

                                    யூரோ கோப்பை – ஸ்பெயின், இத்தாலி அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின

                                    சுவிட்சர்லாந்துடனான ஆட்டத்தில் பெனால்டி ஷூட் முறையில் 3 – 1 என்ற கணக்கில் ஸ்பெயின் அணி அபார வெற்றி பெற்று அரையிறுதியில் நுழைந்தது.

                                    யூரோ கோப்பை – ஸ்பெயின், இத்தாலி அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின
                                    கோல் அடித்த மகிழ்ச்சியில் இத்தாலி வீரர் இன்சைன்

                                    ஐரோப்பிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டியில் ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்ட்கில் நேற்று நடந்த முதலாவது கால்இறுதி ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் ஸ்பெயின் அணி, சுவிட்சர்லாந்தை எதிர்கொண்டது.

                                    தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய ஸ்பெயின் அணிக்கு 8-வது நிமிடத்தில் கோல் வந்தது. கார்னரில் இருந்து வந்த பந்தை ஸ்பெயின் அணி வீரர் ஜார்டி ஆல்பா கோல் வலையை நோக்கி

                                    அடித்தார். அந்த பந்து சுவிட்சர்லாந்து நடுகள வீரர் டெனிஸ் ஜகாரியா காலில் பட்டு கோல் வலைக்குள் புகுந்து சுய கோலானது.

                                    68-வது நிமிடத்தில் சுவிட்சர்லாந்து அணி பதில் கோல் திருப்பியது. அந்த அணி கேப்டன் ஹெர்டான் ஷாகிரி இந்த கோலை அடித்தார். இதனால் சமநிலை (1-1) ஏற்பட்டது. 77-வது நிமிடத்தில் எதிரணி

                                    வீரரின் காலில் பலமாக மிதித்த சுவிட்சர்லாந்து வீரர் ரெமோ புருலெர் நடுவரால் சிவப்பு அட்டை காட்டி வெளியேற்றப்பட்டதால் அதன் பிறகு அந்த அணி 10 வீரர்களுடன் விளையாட வேண்டியதானது.

                                    வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் ஸ்பெயின் வீரர்கள்

                                    வழக்கமான 90 நிமிடம் முடிவில் சமநிலை நீடித்ததால் கூடுதலாக 30 நிமிடம் ஒதுக்கப்பட்டது. அதிலும் முடிவு கிடைக்கவில்லை. இதனை அடுத்து வெற்றி, தோல்வியை நிர்ணயிக்க பெனால்டி ‘ஷூட்-அவுட்’ முறை கடைபிடிக்கப்பட்டது.

                                    பரபரப்பான பெனால்டி ஷூட்-அவுட்டில் ஸ்பெயின் அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.

                                    இன்று அதிகாலை நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் இத்தாலி, பெல்ஜியம் அணிகள் மோதின.

                                    முதல் பாதியில் இத்தாலி அணி 2 கோல்களை அடித்தது. பெல்ஜியம் சார்பில் 47-வது நிமிடத்தில் ஒரு கோல் அடிக்கப்பட்டது. அதன் பின் எந்த அணியும் கோல் அடிக்கவில்லை.

                                    இறுதியில், இத்தாலி அணி 2-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியது.

                                    Posted in Uncategorized

                                    ஒருவர் சுட்டுக்கொலை – விசாரணைகள் ஆரம்பம்

                                    ஒருவர் சுட்டுக்கொலை – விசாரணைகள் ஆரம்பம்

                                    இலங்கை காலி பகுதியில் கடந்த தினம் இரவு ஒருவர் சுட்டுக்கொலை செய்ய பட்டுள்ளார் ,இறந்தவரது சடலம் மீட்க பட்டு மரண பரிசோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளது

                                    இந்த படு கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை

                                    விசாரணைகள் தொடந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது

                                    Posted in Uncategorized

                                    இம்மாதம் முதல் மீண்டும் கல்வி நடவடிக்கை

                                    இம்மாதம் முதல் மீண்டும் கல்வி நடவடிக்கை

                                    100 மாணவர்களுக்கும் குறைந்த 2962 பாடசாலைகளில் இம் மாதத்திற்குள் (ஜூலை) கல்வி நடவடிக்கைகளை முழுமையான

                                    சுகாதார சிபார்சுகளுக்கு அமைவாக ஆரம்பிப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் தெரிவித்தார்.

                                    மாணவர்கள் எண்ணிக்கை 50 ஐ விடக் குறைந்த சுமார் ஆயிரத்து 439 பாடசாலைககள் மற்றும் 51-100 வரையான எண்ணிக்கையைக்

                                    கொண்ட ஆயிரத்து 523 பாடசாலைகளுமாக மொத்தமாக 2 ஆயிரத்து 962 பாடசாலைகள் இவ்வாறு இருப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

                                    பாடசாலைகளை ஆரம்பித்த பின் வருகை தரும் ஆசிரியர்களுக்கு தடுப்பூசி கட்டாயமானது என்பதை ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார் என்றும் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் கூறினார்.

                                    முதற்கட்டமாக இந்த பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்ட பின்னர் ஏனைய பாடசாலைகளை உரிய திட்டத்திற்கு அமைய திறப்பதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ. எல். பீரிஸ் மேலும் தெரிவித்தார்