Category: Uncategorized
Uncategorized, hate Uncategorized
28 பேருடன் கடலுக்குள் வீழ்ந்து நொறுங்கிய விமானம்
28 பேருடன் கடலுக்குள் பிவீழ்ந்து நொறுங்கிய விமானம்
ரசியாவின் 28 பேருடன் பயணித்து கொண்டிருந்த அண்டனோவ் ரகத்தை சேர்ந்த விமானம் ஒன்று வீழ்ந்து மூழ்கியுள்ளது
இவ்வேளை இதில் பயணித்த அனைவரும் பலியாகியுள்ளனர் என தெரிவிக்க பட்டுள்ளது
குறித்த விபத்து சம்பவிக்கும் பொழுது அந்த பகுதியில் அதிக குளிரும் காணப்பட்டதாக தெரிவிக்க பட்டுள்ளது
குறித்த விமானத்தை தேடும் பணிகள் தீவிர படுத்த பட்டுள்ளன
ஒரு வாரத்தில் நடந்தேறிய இரண்டவது விமான விபத்தாக இது பதிய பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது
பெண்களை விற்கும் வலைத்தளங்களுக்கு வலைவீச்சு
பெண்களை விற்கும் வலைத்தளங்களுக்கு வலைவீச்சு
பெண்கள் மற்றும் சிறுவர்களை இணையத்தின் ஊடாக பாலியல் நடவடிக்கைகளுக்கு விற்பனை செய்யும் இணையத்தளங்களில் உரிமையாளர்களை கைது செய்ய நடவடிக்கை
மேற்கொள்ளப்பட்டு வருவதாக பெண்கள் மற்றும் குழந்தைகள் பணியகத்தின் பொறுப்பதிகாரி மனோஜ் சமரசேகர தெரிவித்துள்ளார்.
15 வயது சிறுமி இணையத்தில் பாலியல் நடவடிக்கைக்கு விற்பனை செய்தமை தெரியவந்ததைத்
தொடர்ந்து இதுபோன்ற வலைத்தளங்களைத் தேடுமாறு நீதிமன்ற உத்தரவை குறித்த பணியகம் பெற்றுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
குற்றப் புலனாய்வு துறையின் டிஜிட்டல் பிரிவின் உதவியுடன் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வவுனியா வீதியில் வெட்டுக்காயங்களுடன் சிறுவன் சடலமாக மீட்பு
வவுனியா வீதியில் வெட்டுக்காயங்களுடன் சிறுவன் சடலமாக மீட்பு
வவுனியா லக்சபான வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் பின்பகுதியில் இருந்து இன்று (06) காலை 8.00 மணியளவில் வெட்டுக்காயங்களுடன் 14 வயதுடைய சிறுவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சிறுவன் அவரின் வீட்டின் பின்பகுதியில் தலையில் அடிப்பட்ட காயத்துடனும் கழுத்தில் வெட்டுக்காயத்துடனும் சடலமாக காணப்பட்டுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் அயலவர்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த வவுனியா பொலிஸார் சிறுவனின் மரணம் தொடர்பிலான விசாரணைகனை முன்னெடுத்து வருகின்றனர்.
வவுனியா பண்டாரிக்குளம் விபுலானந்த கல்லூரியில் தரம் 9 இல் கல்வி பயிலும் 14 வயதுடைய உதயச்சந்திரன் சஜ்ஜிவன் என்ற சிறுவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சிறுவனின் மரணம் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் காணப்படுவதுடன் தடவியல் பொலிஸாரின் உதவியுடன் விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணம் மாவட்டம் உள்ளிட்ட சில பகுதிகளுக்கான தனிமைப்படுத்தல் அறிவிப்பு
யாழ்ப்பாணம் மாவட்டம் உள்ளிட்ட சில பகுதிகளுக்கான தனிமைப்படுத்தல் அறிவிப்பு

சிறுமி துஷ்பிரயோகம் – விசேட வைத்தியர் கைது
சிறுமி துஷ்பிரயோகம் – விசேட வைத்தியர் கைது
15 வயது சிறுமி ஒருவரை இணையத்தினூடாக பாலியல் நடவடிக்கைகளுக்காக விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
33 வயதுடைய நபர் ஒருவரும் விசேட வைத்தியர் ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பிற்கு அருகில் உள்ள வைத்தியசாலை ஒன்றில் கடமையாற்றும் குறித்த வைத்தியர் பண்டாரகம பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இணையத்தின் ஊடாக குறித்த சிறுமியை பெற்று பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக குறித்த நபருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது
குறித்த இருவருடன் இதுவரையில் இந்த சம்பவம் தொடர்பில் 34 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்
பாடசாலைக்குள் புகுந்து 140 மாணவர்களை கடத்தி சென்ற ஆயுத குழு
பாடசாலைக்குள் புகுந்து 140 மாணவர்களை கடத்தி சென்ற ஆயுத குழு
வடமேற்கு நையீரியாவில் போடிங் ஒன்றுக்குள் புகுந்த ஆயுத தாரிகள் அங்கு தங்கி இருந்த சுமார் 140 மாணவர்களை ஆயுத முனையில் கடத்தி சென்றுள்ளனர்
ஆயுத குழுவின் இந்த தொடர் கடத்தலினால் அங்கு மக்கள் மத்தியில் பெரும் பதட்டம் இடம்பெற்ற
வண்னம் உள்ளது ,மேலும் நகரங்களுக்கும் புகும் ஆயுத குழுவினர் மக்களின் ஆடு ,மாடுகளை கடத்தி சென்றுள்ளனர்
இவ்வாறு கடத்த பட்ட விலங்குகள் கொன்று உணவாக்க பட்டுள்ள சம்பவங்கள் அதிகரித்துள்ளது
எரிந்த நிலையில் காருக்குள் இருந்து மனித சடலம் மீட்பு
எரிந்த நிலையில் காருக்குள் இருந்து மனித சடலம் மீட்பு
தென்கிழக்கு அவுஸ்ரேலிய பகுதியில் எரிந்த கார் ஒன்றுக்குள் கருகிய நிலையில் மனித சடலம் ஒன்று மீட்க பட்டுள்ளது
மேற்படி நபர் படுகொலை செய்ய பட்டாரா அல்லது விபத்தில் சிக்கி இறந்தாரா என்பது
தொட்ரபில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்ட வண்ணம் உள்ளனர்
பிலிப்பைன்ஸ் விமான விபத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை 50 ஆக அதிகரிப்பு
பிலிப்பைன்ஸ் விமான விபத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை 50 ஆக அதிகரிப்பு
பிலிப்பைன்ஸ் அரச இராணுவ விமானம் ஒன்று வீழ்ந்து நொறுங்கியது ,இதன் பொழுது அந்த
விபத்தில் சிக்கி இறந்தவர்கள் எண்ணிக்கை தற்பொழுது ஐம்பதாக அதிகரித்துள்ளது
17 பேர் உயிரிழந்த நிலையில் தற்பொழுது ஐம்பதாக அதிகரித்துள்ளது குறிப்பிட தக்கது
ரஷியாவில் ஐஸ் தீவிரவாத தாக்குதல் ,முறியடிப்பு – 6 பேர் சுட்டுக்கொலை
ரஷியாவில் ஐஸ் தீவிரவாத தாக்குதல் ,முறியடிப்பு – 6 பேர் சுட்டுக்கொலை
ரசியா தலைநகர் மொஸ் கோவில் ஐஸ் தீவிரவாத அமைப்பினர் நடத்த முற்பட்ட மிக பெரும்
தீவிரவாத தாக்குதல் அந்த நாட்டு உளவுத்துறையால முறியடிக்க பட்டுள்ளது
ஆறு பேர் சுட்டு படுகொலை செய்ய பட்டுள்ளனர் ,மேலும் இருவர் கைது செய்ய பட்டுள்ளனர் ,
மேற்படி குழுவுடன் தொடர்பில் உள்ளவர்களை கைது செய்யும் வேட்டையில் உளவுத்துறை அவசர நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது
ஜப்பானில் பாரிய அனர்த்தம் – 3 பேர் மரணம் – 113 பேரை காணவில்லை
ஜப்பானில் பாரிய அனர்த்தம் – 3 பேர் மரணம் – 113 பேரை காணவில்லை
ஜப்பானில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை மூவர் மரணமாகியுள்ளனர் ,மேலும் 113 பேரை காணவில்லை என அரசு தெரிவித்துள்ளது
காணாமல் போனவர்களை தேடி கண்டு பிடிக்கும் மீட்பு பணிகள் துரிதமாக இடம்பெற்ற வண்ணம் உள்ளது
தொடர் மழை அதனால் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக இந்த இழப்பு ஏற்பட்டுளள்து
அமெரிக்கா இராணுவ ஒயில் கூதம் மீது வீழ்ந்து வெடித்த 9 ஏவுகணை
அமெரிக்கா இராணுவ ஒயில் கூதம் மீது வீழ்ந்து வெடித்த 9 ஏவுகணை
சிரியாவில் உள்ள அமெரிக்காவின் al-Omar இராணுவ நிலைய ஒயில் கூதங்கள் மீதும் ,அதன்
இராணுவ நிலைகள் மீதும் ஒன்பது ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன
உஷாரான நிலையில் குறித்த இராணுவ மையம் வைக்க பட்ட பொழுதும் இந்த ஏவுகணைகள்
வீழ்ந்து வெடித்துள்ளது அமெரிக்கா படைகளிற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது
அமெரிக்கா இராணுவ முகாமிற்குள் வீழ்ந்து வெடித்த ஏவுகணை
அமெரிக்கா இராணுவ முகாமிற்குள் வீழ்ந்து வெடித்த ஏவுகணை
ஈராக்கில் உள்ள அமெரிக்கா Ain al-Assad base இராணுவ தளத்திற்குள் இன்று ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன
இதனால் ஏற்பட்ட சேத விபரங்கள் உடனடியாக தெரியவரவில்லை
குறித்த முகமானது தொடராக ரொக்கட் தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்ற பொழுதும் அங்குள்ள
அமெரிக்கா மற்றும் பல் நாட்டு படைகள் வெளியேறும் நிலையில் இல்லை என்பதே கள நிலவரமாக உள்ளது
பிரிட்டனுக்குள் கடல்வழியாக நுழைந்த இலங்கையர் உள்ளிட்ட 238 அகதிகள்
பிரிட்டனுக்குள் கடல்வழியாக நுழைந்த இலங்கையர் உள்ளிட்ட 238 அகதிகள்
பிரிட்டனுக்கும் பிரான்ஸ் கலை கடல் வழியை பயன்படுத்தி படகுகள் மூலம் 238 அகதிகள்
நுழைந்துள்ளார் இவ்வாறு நுழைந்த அகதிகளில் இலங்கையர் உள்ளிட்டவர்கள் உள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது
இவ்வாறான அகதிகள் நுழைவை தடுக்க கடலோர பாதுகாப்பு இறுக்க பட்ட நிலையில் இந்த
அகதிகள் நுழைவது பிரிட்டனுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது
அமெரிக்காவில் மக்கள் மீது துப்பாக்கி சூடு – 8 பேர் காயம்
அமெரிக்காவில் மக்கள் மீது துப்பாக்கி சூடு – 8 பேர் காயம்
அமெரிக்கா Fort Worth பகுதியில் கார் கழுவும் நிலையம் அருகில் வைத்து மர்ம அயுதாரி திடீர்
துப்பாக்கி சூட்டு தாக்குதலை நடத்தினார் ,இதில் எட்டு பேர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் மீட்க பட்டுள்ளனர்
சமீப காலங்களாக இவ்விதமான சூட்டு சம்பவங்கள் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது
15 வயது சிறுவனை தின்ற முதலை – கண்ணீரில் குடும்பம்
உலக
15 வயது சிறுவனை தின்ற முதலை – கண்ணீரில் குடும்பம்
இந்தியாவில் பதின் ஐந்து வயது சிறுவன் ஒருவன் நீர் நிலைக்கு அருகில் சென்ற பொழுது அவனை
பதுங்கி வந்த முதலை அடித்து கொன்று தின்றுள்ளது
மேற்படி சம்பவம் அந்த மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
முல்லைதீவுக்கு புதிய இராணுவ படை தளபதி நியமனம்
முல்லைதீவுக்கு புதிய இராணுவ படை தளபதி நியமனம்
விஜயபாகு காலாட்படை படையணியின் (வி.ஐ.ஆர்) மேஜர் ஜெனரல் சிசிர பிலபிட்டி புதன்கிழமை (23) முல்லைத்தீவு பாதுகாப்புப் படை தலைமையக புதிய தளபதியாக கடமை ஏற்றுக்கொண்டார்.
புதிதாக நியமிக்கப்பட்ட முல்லைத்தீவு தளபதியை தலைமையக வளாகத்திற்கு 18 வது விஜயபாகு காலாட்படை படையினர் பாதுகாவலர் அறிக்ைகயிடல் மரியாதை வழங்கி வரவேற்றனர்.
சுகாதார நிலைமையை கருத்திற் கொண்டு பதவி ஏற்பு விழாவுடன் தொடர்புடைய வழக்கமான இராணுவ நடைமுறைகள் குறைந்த அளவில் நடத்தப்பட்டன.
பின்னர், மேஜர் ஜெனரல் சிசிர பிலபிட்டி தனது புதிய அலுவலகத்தில் அனைத்து மதங்களின் மத அனுசரிப்புகளுக்கு மத்தியில் பதவி ஏற்பிற்கான உத்தியோகபூர்வ ஆவணத்தில்
கையெழுத்திடுவதன் மூலம் தனது புதிய அலுவலகத்தை ஏற்றுக்கொள்வதை அடையாளப்படுத்தினார். பின்னர் அன்றைய நிகழ்வைக் குறிக்கும் வகையில் வளாகத்தில் ஒரு மா மரக்கன்று நடவு செய்ய அழைக்கப்பட்டார்.
பின்னர் தலைமையகத்தின் கட்டளையின் கீழ் உள்ள அனைத்து படைப்பிரிவுகள், பிரிகேட்கள் மற்றும் பயிற்சி நிலையங்களை பிரதிநிதித்துவப்படுத்தி பங்கு கொண்ட அனைத்து
நிலையினருக்கும் இடத்தில் உரையாற்றினார், மேலும் முல்லைத்தீவு பகுதியில் விவகாரங்களை சீராக நடத்துவதற்கான தனது எதிர்கால உத்திகளையும் விவரித்தார்.
இந்த நியமனத்திற்கு முன்னர் மேஜர் ஜெனரல் சிசிர பிலபிட்டி யாழ்ப்பாண குடாநாட்டில் 55 வது படைப்பிரிவின் தளபதியாக பணியாற்றினார். அவர் இராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்ற
கமாண்டோ ரெஜிமென்ட்டின் மேஜர் ஜெனரல் உபாலி ராஜபக்ஷவுக்குப் பதிலாக இந்நியமனதிற்கு நியமிக்கப்பட்டார்.
முல்லைத்தீவு முன்னரங்கு பராமரிப்பு பிரதேச தளபதி, படைப்பிரிவுகளின் தளபதிகள்,
பிரிகேட்களின் தளபதிகள் மற்றும் அனைத்து கட்டளை அலகுகளின் கட்டளை அதிகாரிகள் இந்த பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டனர்.
ஒட்டுசுட்டான் விவசாய பண்ணையில் அதிக இலாபம் தரும் கறிமிளகாய் செய்கை
ஒட்டுசுட்டான் விவசாய பண்ணையில் அதிக இலாபம் தரும் கறிமிளகாய் செய்கை
நாட்டில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வருகின்ற நிலையில் விவசாயிகள் பல்வேறு விவசாய செய்கையில் ஈடுபட்டு வருவதோடு, காலத்திற்கு ஏற்ற வகையிலும் அதிக விலைக்கு
விற்பனை செய்யக்கூடிய வகையில் சிறந்த விவசாய செய்கையினை முன்னெடுப்பது தொடர்பில் விவசாயத் திணைக்களம் பல்வேறு செயற்றிட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.
அந்த வகையிலே காலத்திற்கு காலம் புதிய வகையிலும் நவீன தொழில்நுட்பங்களுடனான விவசாய செய்கைகளை விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தி வருகின்ற விவசாய
திணைக்களத்தின் மற்றுமொரு அங்கமாக முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் விவசாய பண்ணையில் பாதுகாக்கப்பட்ட பச்சை இல்லத்தில் உண்டான கறிமிளகாய் செய்கையை
மேற்கொண்டு விவசாயிகளுக்கு அதனை கற்பிக்கும் முகமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு அதனுடைய அறுவடையும் நேற்று (04) நடைபெற்றுள்ளது.
எனவே இவ்வாறான நடவடிக்கைகள் ஊடக பயிர்களை சிறந்த முறையில் விலை கூடிய நேரங்களில் செய்கை பண்ணக்கூடிய விதத்தினை விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது.
இக் காலப்பகுதி கறிமிளகாய் செய்கைக்கு உகந்த காலப்பகுதியாக இல்லாத போதும் அதனை சிறந்த முறையில் எவ்வாறு செய்வது என்பது தொடர்பாகவும், கிருமி நாசினிகளை
பயன்படுத்தாது இயற்கை உரத்தினை பாவித்து அதிக வருமானம் ஈட்டக்கூடிய இச் செய்கை முறையை விவசாயிகள் பார்வையிட்டு பயன்பெற முன்னுதாரணமாக செயற்படுத்தப்பட்டு அதனுடைய அறுபடை வைபவமும் இடம்பெற்றிருக்கின்றது.
இவ் அறுவடை வைபவத்தில் வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர், மாகாண விவசாய பணிப்பாளர், உதவி விவசாய பணிப்பாளர், முல்லைத்தீவு பிரதி மாகாண விவசாய பணிப்பாளர் மற்றும் ஊழியர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
மேலும் நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய சிறந்த முயற்சிகளின் ஊடாக விவசாயிகள் முன்னுதாரணமாக செயற்படுவதற்கான
விளக்கங்களையும் இந்த கறிமிளகாய் செய்கை தொடர்பாக பண்ணை முகாமையாளர் இதன்போது தெளிவுபடுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது..
15 வயதான சிறுமி விற்பனை; 300 பேருக்கு வலை
15 வயதான சிறுமி விற்பனை; 300 பேருக்கு வலை
கல்கிஸை பகுதியிலிருந்து 15 வயதான சிறுமியை இணையத்தளம் மூலம் பாலியல் நடவடிக்கைகளுக்கு விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் மேலும் 4 பேர் கைது
செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
சிறுமியை இணையத்தளம் மூலமாக பெற்றுக்கொண்ட மாலைத்தீவு பிரஜை ஒருவரும் இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார் என அவர் கூறினார்.
அத்துடன், அந்த சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்துவதற்காக அறை ஒன்றை வழங்கியிருந்த ஹோட்டல் ஒன்றின் முகாமையாளரும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் தற்போதுவரை கைதுசெய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 32 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், மேலும் 300 பேர் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன என
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவரான பேராசிரியர் முதித்த வித்தியாப்பத்திரண தெரிவித்துள்ளார்.
அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து 43 பேர் பலி
அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து 43 பேர் பலி
துனிசியாவில் அகதிகள் படகு கவிழ்ந்து கடலில் தத்தளித்த 84 பேரை மீட்புக்குழுவினர் பத்திரமாக மீட்டனர்.
துனிசியாவில் சோகம் – அகதிகள் படகு கடலில் கவிழ்ந்து 43 பேர் பலி
மீட்புப் பணியில் வீரர்கள்
துனிசியா நாட்டின் எல்லையையொட்டி அமைந்துள்ள ஸ்வாரா நகரிலிருந்து பெண்கள், சிறுவர்கள் உள்பட சுமார் 130 அகதிகள் படகு ஒன்றில் ஐரோப்பா நோக்கி புறப்பட்டனர்.
இந்த படகு துனிசியாவின் தென்கிழக்குப் பகுதியிலுள்ள ஷார்ஷிஸ் நகருக்கு அருகே சென்று கொண்டிருந்தபோது சற்றும் எதிர்பாராத வகையில் கடலில் கவிழ்ந்தது. இதில் படகில் இருந்த அனைவரும் நீரில் மூழ்கி தத்தளித்தனர்.
அப்போது அங்கு படகுகளில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் உடனடியாக மீட்பு பணியில் இறங்கினர். மேலும் இதுபற்றி துனிசியா கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் கடலோர காவல் படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து மீட்புப் பணியில் இறங்கினர். அதற்குள் பெண்கள், சிறுவர்கள் உள்பட 43 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
சைக்கிளிங் சென்ற முதல்வருடன் செல்பி எடுத்த பிரபல நடிகை
சைக்கிளிங் சென்ற முதல்வருடன் செல்பி எடுத்த பிரபல நடிகை
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் தனது நண்பர்களுடன் சைக்கிளிங் சென்றார்.
சைக்கிளிங் சென்ற முதல்வருடன் செல்பி எடுத்த பிரபல நடிகை – வைரலாகும் புகைப்படம்
முதல்வர் மு.க.ஸ்டாலின் சைக்கிளிங் சென்றபோது எடுத்த புகைப்படம்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பொதுவாக சென்னை கடற்கரை சாலை, ஈசிஆர் சாலையில் சைக்கிளிங் மேற்கொள்வதை விடாமல் செய்து வருகிறார்.
தற்போது முதல்வர் ஆன பிறகும், பல்வேறு பணிகளுக்கு மத்தியிலும் சைக்கிளிங் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
அந்த வகையில் ஞாயிற்றுகிழமையான இன்று கிழக்கு கடற்கரை சாலையில் சைக்கிளிங் சென்றார் மு.க.ஸ்டாலின். வழிநெடுக போலீசார் அவருக்கு பாதுகாப்பு அளித்தனர். கோவளம்
முதல் மாமல்லபுரம் வரையிலான இந்த சைக்கிள் பயணத்தில் அவரது நண்பர்கள் சிலரும் பங்கேற்றனர்.
இந்நிலையில் சைக்கிளிங் சென்ற முதல்வருடன், நடிகை யாஷிகா ஆனந்த் செல்பி எடுத்துள்ளார். அந்த புகைப்படத்தை டுவிட்டரில் பகிர்ந்துள்ள அவர், முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
வைரலாகி வரும் இந்த புகைப்படத்திற்கு சமூக வலைதளங்களில் லைக்குகளும் குவிந்து வருகிறது.






